Normal view

Received before yesterday

சுத்தம் அறியா மேற்குலகு

குளித்தல், துவைத்த உடை உடுத்துதல் ஆகிய இரண்டும் உலகெங்கும் மனிதர்கள் காலம் காலமாகச் செய்துவருவது, அது அவர்களது கலாச்சாரத்தின் பிரிக்க முடியாத ஒரு அம்சம் என்று தான் நான் போன மாதம் வரை நினைத்திருந்தேன்.  ஆனால் வரலாற்றைப் படிக்கப் படிக்கத் தான் நாம் பல விஷயங்கள் பற்றி எதுவும் தெரியாமல், நாமாக ஒன்றைக் கற்பிதம் செய்து கொண்டு திரிகிறோம் என்பது தெரிகிறது.     Katherina Ashenburg  எழுதியிருக்கும் Clean – An Unsanitised History of Washing   ( சுத்தத்தின் அசுத்தமான வரலாறு) என்ற நூலைப் படித்த போது தான் குளித்தல், சுத்தமாக இருத்தல் பற்றிய எனது கற்பிதம் எவ்வளவு தவறு என்று தெரிந்தது.  கேதரினா கனடா நாட்டைச் சேர்ந்தவர்.  சிபிசி வானொலி நிகழ்ச்சித் தயாரிப்பாளர். தி குளோப் அண்ட் மெயில் பத்திரிகையின் ஆசிரியர். கல்லூரிப் பேராசிரியர். நிறைய அபுனைவுகளை எழுதிய பின் தனது 73வது வயதில் போனால் போகட்டும் என்று ஒரு நாவலும் எழுதி இருப்பவர்.  பொதுவாக சமூக வரலாறு தொடர்பான ஆங்கிலப் புத்தகங்களைப் படித்தால் நம் நாட்டில் இப்படி இல்லையே என்ற துக்கம் எனக்கு ஏற்படும். ஒரு மாறுதலுக்கு தமிழர்களாகிய நாம் எவ்வளவோ பரவாயில்லை என்ற பெருமித உணர்வைத் தந்த புத்தகம் இது.

19ம் நூற்றாண்டின் இறுதி வரை மிக நாகரீகமானவர்கள் என்று நாம் கருதும் ஐரோப்பியர்கள் குளிப்பது, சுத்தமான ஆடைகளை அணிவது ஆகியவற்றிற்கு எந்த முக்கியத்துவமும் தரவில்லை என்ற அதிர்ச்சியான செய்தியைச் சொல்லும் புத்தகம் இது.  பொதுவாக சமூகத்தில் ஒரு வழக்கம் இருந்தால், அது மக்களது வாழ்க்கைத் தரம் உயர உயர மேம்படத் தான் செய்யும். காணாமல் போகாது. ஆனால் குளியல் விஷயத்தில் இது தலைகீழ். ஒரு காலத்தில் பொதுக் குளியலறை என்றெல்லாம்  ஏற்பாடுகள் வைத்திருந்த ஐரோப்பியர்கள் திடீரென அழுக்கு மூட்டைகளாக மாறிவிட்டார்கள்.  இருண்ட காலம் மாறி மறுமலர்ச்சிக் காலம் வந்த போதும், குளிப்பதில் எந்த மறுமலர்ச்சியும் ஏற்படவில்லை. பைசா கோபுரத்தையும், மோனோலிசாவையும், ஈஃபிள் டவரையும், வெள்ளை மாளிகையையும்  குளிக்காமல் கொள்ளாமல்தான் உருவாக்கி இருக்கிறார்கள்.

ஒரு காலத்தில் கிரேக்கர்கள், ரோமானியர்கள் எல்லாம் குளித்து சுத்த பத்தமாக இருந்தவர்கள் தான் என்கிறார் கேதரினா.  அங்கெல்லாம் கட்டணக் குளியலறை இருந்திருக்கிறது. ஷவர் கூட உண்டு. என்ன, பாத்ரூம் சுவருக்கு அந்தப் பக்கமாக அடிமை ஒருவர் நின்று கொண்டு மாவு ஜல்லடை வழியாக தண்ணீரை ஊற்றிக் கொண்டே இருப்பார் !  ஜிம்னேஷியங்களில் கிரேக்கர்கள் நிர்வாணமாகத் தான் உடற்பயிற்சி  செய்வார்களாம். ஜிம்னேஷயம் என்ற சொல்லுக்கு நிர்வாண இடம் என்பதுதான் நேரடிப் பொருள் என்கிறார் கேதரினா.  உடற்பயிற்சி முடித்தவர்கள் குளித்து உடை மாற்ற அங்கு நல்ல வசதியான பாத்ரூம்கள் இருந்திருக்கின்றன.  அக்கால ஜெர்மனியில் கட்டணக் குளியலறையில் குளிப்பதற்காக சம்பளத்தில் ஒரு குளியல் அலவன்ஸ் ( பாடகெல்ட் – badegeld ) சேர்த்துத் தந்த காலமும் இருந்திருக்கிறது. ஆனால் யார் கண் பட்டதோ, திடீரென ஐரோப்பியர்கள் குளிக்காமல் , அழுக்கு ஆடைகளைப் போட்டுத் திரிபவர்களாக மாறிவிட்டார்கள்.  குளித்தல் என்பது மதரீதியான சடங்குகளில் ஒன்றாக மாறிப் போய்விட்டது.  சர்ச்சிற்கு சாமி கும்பிடப் போகும் போது குளிப்பது என்றானது. அதுவும் குறைந்து போய்,  சர்ச் வாசலில் ஒரு அண்டா நீரில் கையை மட்டும் நனைத்து குளித்ததாக பாவனை செய்து கொண்டு உள்ளே செல்லும் வழக்கம் வந்து விட்டது.

குளித்தல், சுத்தம் செய்து கொள்ளுதல் என்பது புறஉடல் சார்ந்ததாக இல்லாமல் அகம் சார்ந்ததாக மாறிவிட்டது.  குற்ற உணர்வைப் போக்கிக் கொள்ள குளிப்பது, கை கழுவிக் கொள்ளுதல் என்றானது. ஏசுவிற்கு தண்டனை வழங்கியதும், பாண்டியஸ் பைலேட்  கைகழுவிக் கொண்டாராம். கைகழுவி விடுதல் என்ற சொல்லாடல் நம்மிடம் இருப்பதற்கு இது போன்ற காரணம் ஏதேனும் இருக்குமோ? என்று  தமிழறிஞர்கள் விளக்க வேண்டும்.  லேடி மேக்பத் டங்கனை கொலை செய்யுமாறு கணவனைத் தூண்டும் போது, கொஞ்சம் தண்ணீர் இருந்தால் போதும், இந்தப் பாவத்தைத் தொலைத்து விடலாம் என்கிறாள் – A little water clears us of this deed என்பது அவளது வசனம்.  இறந்து போனவர்களின் இறுதிச் சடங்கில் குளிப்பாட்டுதல் கிட்டத்தட்ட உலகெங்கும் இருக்கக் கூடிய ஒரு வழக்கம். அதற்கு நடைமுறை சார்ந்து எந்தக் காரணமும் இல்லாது போனாலும், இறுதி மரியாதையில் முக்கியமான ஒன்றாக இன்றளவும் இருக்கிறது.

ஆனாலும் கிறிஸ்தவ உலகம் குளிக்காமல், சுத்தமான உடைகள் அணியாமல் இருக்க ஆரம்பித்தது. கிறிஸ்துமஸுக்கு முதல் நாளும், ஈஸ்டருக்கு முதல் நாளும் மட்டும்தான் நாங்கள் குளிப்போம் என்று கிபி 1075ல் உல்ரிச்சில் ஒரு கிறிஸ்துவத் துறவி எழுதி வைத்திருப்பதை ஆய்வாளர்கள் இப்போது கண்டெடுத்திருக்கிறார்கள். ஆனால் மறுபுறம் இஸ்லாமிய உலகம் சுத்தத்திற்கு மிக மிக முக்கியத்துவம் தந்ததாக இருந்திருக்கிறது.  துருக்கியின் பொதுக் குளியலறையில் பல்வேறு வாசனைத் திரவியங்களைத் தடவிக் கொண்டு, ஆவி பறக்கும் வென்னீரில் குளிப்பது வழக்கமாக இருந்தது. இந்த பொதுக் குளியலறையின் பெயரைக் கேதரினா சொன்னதும் நான் அசந்து போனேன். அதற்கு ஹமாம் என்று பெயர். இன்று ஒரு பிரபலமான சோப் . இதைப் படிக்கும் சங்கிகள் இனி ஹமாம் சோப் வாங்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன் !  பண்டைக்கால குளியல் பற்றிய மற்றொரு  வியப்பான விஷயம், யூத ஆண்கள் குளிக்காதவர்கள் தான் என்றாலும், மாதவிலக்கான பெண்கள் மாதவிலக்கு வந்த ஏழாம் நாள்  மிக்வெ எனப்படும் குளியல் சடங்கை நிறைவேற்றிய பின்தான் கணவனோடு இணைய முடியும். மாதவிலக்கு, தீட்டு என்ற கருத்தாக்கங்கள்  உலகின் மற்றொரு  மூலையில், ஒரு யூத சமூகத்திலும் இருந்தது விந்தைதான்.

ஆனால், பதினேழாம் நூற்றாண்டு வரை யாரும் தினமும் குளிக்கவில்லை. ஒரு ஆடையை அணிந்தால் அது கந்தல் கந்தலாக கிழியும் வரை அதை அப்படியே போட்டுக் கொண்டு திரிவார்கள். மிகவும் மோசமானதும் அதை கழற்றித் தூக்கி எறிந்து விட்டு அடுத்த கந்தை. இப்போதும் நாம் வெப் சீரிஸ்களின் வரலாற்றுத் தொடர்களில் கதாபாத்திரங்களின் உடையலங்காரத்தில் இதைப் பார்க்க முடியும்.   அன்றைய வழக்கத்திற்கு மாறாக நெப்போலியனும் அவரது மனைவி ஜோசஃபினும்  தினமும் குளிக்கும் வழக்கமுள்ள சுத்தமானவர்கள். எனினும், நெப்போலியன்  “நாளை மாலை நான் பாரீஸ் வந்து விடுவேன். அதனால் நீ குளிக்க வேண்டாம்,“  என்று ஜோசஃபினுக்கு எழுதிய கடிதம் இன்றும் இருக்கிறது !

தொழிற் புரட்சி வந்தது. நிலக்கரி சுரங்கங்கள். நிலக்கரி இஞ்சின்கள் என்று ஐரோப்பாவே கரிப் புகையால் சூழப்பட்டதாக மாறியது. குளித்துத் தான் ஆகவேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டது. தொழிற் புரட்சி ஒரு புறம் ஐரோப்பியர்களை செல்வந்தர்களாக ஆக்கியதோடு இல்லாமல், சுத்தமானவர்களாகவும் ஆக்கியது. அப்போதுதான் கிறிஸ்துவத்தில் மெதாடிஸம் என்ற பிரிவை உருவாக்கியவரான வெஸ்லி என்ற பாதிரியார் 1791ல் இன்று பள்ளி ஆசிரியைகளால் அடிக்கடி சொல்லப்படும் Clinliness is next to Godliness  என்ற புகழ்பெற்ற வாசகத்தைக் கூறினார். மக்கள் தினமும் குளிக்க வேண்டும், துவைத்த ஆடைகளை அணிய வேண்டும் என்றெல்லாம் பிரச்சாரம் செய்ய வேண்டிய நிலையில்தான் அன்று ஐரோப்பா இருந்தது.   சமுதாய ஒப்பந்தம் எழுதிய ரூஸோ சுத்தம், சுகாதாரம் என்பதை அறிவியல் கருத்தாகப் பார்க்காது, தனிநபர் ஒழுக்கப் பண்பாகப் பார்க்க வேண்டும் என்று எழுதினார்.

விலங்குகளின் கொழுப்பையும், எண்ணெயையும் கலந்து சோப் தயாரிக்கப்பட்டது.  பல்வேறு வகையான எண்ணெய்களைக் கலந்து புதுப்புது சோப் தயாரிக்கும் முயற்சிகள் பரவலாக நடந்தன. அப்படியான ஆராய்ச்சியில் பாமாயிலையும், ஆலிவ் எண்ணெயையும் கலந்து தயாரிக்கப்பட்ட சோப் விற்பனையில் பெரும் சாதனை படைத்தது.  அதன் மூலப்பொருட்களான பாம் மற்றும் ஆலிவ்வை சோ்த்து அதற்கு Palmolive என்று பெயரிட்டார்கள்.  இன்று அந்த நிறுவனத்தின் தயாரிப்பை வாழ்வில் ஒரு முறையேனும் பயன்படுத்தாத மனிதர் எவருமே உலகில் இல்லை எனலாம். 19ம் நூற்றாண்டில் திருமணத்திற்கான விளம்பரங்களில் நான் தினமும் குளிப்பவள் என்பதை தனது கூடுதல் தகுதியாக பெண்கள் குறிப்பிட ஆரம்பித்தார்களாம்.

கிருமிகள் பற்றிய அறிவியல் கண்டுபிடிப்புகளால் சுத்தம் பேணுதல் அதிகரித்தது. குளிப்பது, துணி துவைப்பதைத் தாண்டி கை கழுவுதல் மிக முக்கியமானதாயிற்று. மருந்துப் பொருளான லிஸ்டரின் வாய்துர்நாற்றம் போக்கும்  முக்கியமான திரவமாயிற்று.

சுத்தமாக இருப்பதன் முக்கியத்துவத்தை ஐரோப்பியர்கள் உணர ஆரம்பித்ததும் வேறு பல மாற்றங்களும் ஏற்பட்டன. வீட்டிற்குள்ளேயே கழிப்பறை, குளியலறை வந்தன.  அமெரிக்காவில் வீட்டின் கூடம் அளவிற்கு பாத்ரூம் கட்டுவது முக்கியமான நாகரீகமாயிற்று.  இன்று நம் நாட்டிலும் கூட சொந்த வீடு கட்டுவோர் பலர்  ஆளுக்கு ஒரு கழிப்பறை என்ற கணக்கில் கட்டுவதைப் பார்க்கிறோம்.  இன்று ஒரு சராசரி அமெரிக்கர் வீட்டு பாத்ரூம் நம் நாட்டின் சிறந்த மருத்துவமனையின் அறுவை சிகிச்சை கூடத்தை விட படுசுத்தமாக கிருமிகள் இல்லாது இருக்குமாம்.

மின்சாரம், தொழிற்சாலைகளில் நவீனமயம், குதிரைகளுக்குப் பதில் மோட்டார் வாகனங்கள், மண் சாலைகளுக்குப் பதில் தூசிதும்பு இல்லாத தார் சாலைகள், வீடுகளில்,  விறகு, கரி அடுப்பிற்கு பதிலாக மண்ணெண்ணெய் ஸ்டவ் என்று மாற்றங்கள் நிகழ ஆரம்பித்த போது, மீண்டும் தினமும் குளிக்க வேண்டிய அவசியம் இல்லாத ஒரு நிலை உருவானது. நாம் நினைப்பதற்கு மாறாக 1920களில் ஐரோப்பா முழுவதும் சோப் விற்பனை குறைந்தது என்கிறார் கேதரினா. அப்போதுதான் சோப் விற்பனையை அதிகரிக்க விளம்பரம் என்ற ஒரு புது வியாபார யுக்தி உருவானது. ரேடியோ நாடகங்களுக்கு ஸ்பான்சராக சோப் கம்பெனிகள் விளம்பரம் செய்தன. அதனால், இந்த நாடகங்களுக்கே சோப் என்ற பெயர் வந்தது.  கண்மை, பௌடர், லிப்ஸ்டிக் என அழகுப் பொருட்கள் ஆயிரம் இருந்தாலும் கூட,  குறிப்பிட்ட சோப்பைப் பயன்படுத்தினால் அழகாகி விடலாம் என்ற விளம்பரங்கள் வர ஆரம்பித்தன.   பத்து சோப் உறையைக் கொடுத்தால் பரிசு என்பது போன்ற திட்டங்கள். விளம்பரம் என்ற தொழில் பாய்ச்சல் வேகத்தில் வளர சோப் என்ற ஒற்றைப் பொருள் காரணமாக அமைந்தது. இன்றைய காலகட்டத்தில் மனிதர்களின் இயற்கையான உடலின் வாசனை எது என்பதே தெரியாமல் போய் எல்லோரும் மாம்பழம், செர்ரி, அன்னாசி என்று பழ வாசனையில்தான் இருக்கிறார்கள் என்கிறார் கேதரின். எனக்கு சிறுவயதில் அவள் பழவாசனையோடு இருந்தாள் என்று சுஜாதா எழுதியதைப் புரியாமல் படித்தது நினைவுக்கு வந்தது,

இத்தனை மாற்றங்கள் நடந்ததை எல்லாம் மிக்சர் சாப்பிட்டுக் கொண்டு பார்த்துக் கொண்டிருந்த ஆக்ஸ்ஃபோர்ட் அகராதி 1972ல் தான்   முதன்முறையாக bathroom என்பதை தன் அகராதியில் சேர்த்துக் கொண்டதாம். கல்வியாளர்கள் எல்லா நாட்டிலும் இப்படித்தான் மந்தமாக இருக்கிறார்கள்.

இன்று கொரானா காலத்தில், அதற்குப் பிறகான காலத்தில் சுத்தத்திற்கான முக்கியத்துவம் எவ்வளவு அதிகரித்து விட்டது என்று யாரும் யாருக்கும் சொல்ல வேண்டியதே இல்லை.  பெட்ரோலிய நிறுவனமான ஷெல் எந்தப் போக்குவரத்தும் அற்ற அந்த ஊரடங்குக் காலத்தில் சும்மா இருக்காமல் ஹேண்ட்வாஷ் தயாரித்து விற்றது என என் உறவினரான அதன் உயரதிகாரி ஒருவர் என்னிடம் சொன்னது நினைவுக்கு வருகிறது.

புத்தகத்தைப் படித்து முடித்த போது, வழக்கத்துக்கு மாறாக நம் முன்னோர்களை நினைத்து மிகவும் பெருமையாக இருந்தது.  போப் ஆண்டவர்களும், எடின்பரோ கோமகன்களும், விக்டோரியா மகாராணிகளும் மாதக் கணக்கில் குளிக்காமல், அழுக்கு உடைகளோடு திரிந்த காலத்தில் நம் முன்னோர்கள் கந்தையானாலும் கசக்கிக் கட்டினார்கள். அப்படிக் கசக்கும் போது அது கிழிந்து போனாலும், இக்கலிங்கம் போனாலென்ன, ஏகலிங்க மாமதுரைச் சொக்கலிங்கம் உண்டே துணை என்று கவி பாடினான் எங்கள் ஊர்க்காரன் ஒருவன்.  இந்த ஒரு விஷயத்தில் நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்களல்ல !

ஆர்வமுள்ளோர் வாசிக்க – Clean – An Unsanitised History Of Washing  by Katherina Ashenburg.

நன்றி – உயிர்மை ஏப்ரல் 2025 இதழ்

சுத்தம் அறியா மேற்குலகு

குளித்தல், துவைத்த உடை உடுத்துதல் ஆகிய இரண்டும் உலகெங்கும் மனிதர்கள் காலம் காலமாகச் செய்துவருவது, அது அவர்களது கலாச்சாரத்தின் பிரிக்க முடியாத ஒரு அம்சம் என்று தான் நான் போன மாதம் வரை நினைத்திருந்தேன்.  ஆனால் வரலாற்றைப் படிக்கப் படிக்கத் தான் நாம் பல விஷயங்கள் பற்றி எதுவும் தெரியாமல், நாமாக ஒன்றைக் கற்பிதம் செய்து கொண்டு திரிகிறோம் என்பது தெரிகிறது.     Katherina Ashenburg  எழுதியிருக்கும் Clean – An Unsanitised History of Washing   ( சுத்தத்தின் அசுத்தமான வரலாறு) என்ற நூலைப் படித்த போது தான் குளித்தல், சுத்தமாக இருத்தல் பற்றிய எனது கற்பிதம் எவ்வளவு தவறு என்று தெரிந்தது.  கேதரினா கனடா நாட்டைச் சேர்ந்தவர்.  சிபிசி வானொலி நிகழ்ச்சித் தயாரிப்பாளர். தி குளோப் அண்ட் மெயில் பத்திரிகையின் ஆசிரியர். கல்லூரிப் பேராசிரியர். நிறைய அபுனைவுகளை எழுதிய பின் தனது 73வது வயதில் போனால் போகட்டும் என்று ஒரு நாவலும் எழுதி இருப்பவர்.  பொதுவாக சமூக வரலாறு தொடர்பான ஆங்கிலப் புத்தகங்களைப் படித்தால் நம் நாட்டில் இப்படி இல்லையே என்ற துக்கம் எனக்கு ஏற்படும். ஒரு மாறுதலுக்கு தமிழர்களாகிய நாம் எவ்வளவோ பரவாயில்லை என்ற பெருமித உணர்வைத் தந்த புத்தகம் இது.

19ம் நூற்றாண்டின் இறுதி வரை மிக நாகரீகமானவர்கள் என்று நாம் கருதும் ஐரோப்பியர்கள் குளிப்பது, சுத்தமான ஆடைகளை அணிவது ஆகியவற்றிற்கு எந்த முக்கியத்துவமும் தரவில்லை என்ற அதிர்ச்சியான செய்தியைச் சொல்லும் புத்தகம் இது.  பொதுவாக சமூகத்தில் ஒரு வழக்கம் இருந்தால், அது மக்களது வாழ்க்கைத் தரம் உயர உயர மேம்படத் தான் செய்யும். காணாமல் போகாது. ஆனால் குளியல் விஷயத்தில் இது தலைகீழ். ஒரு காலத்தில் பொதுக் குளியலறை என்றெல்லாம்  ஏற்பாடுகள் வைத்திருந்த ஐரோப்பியர்கள் திடீரென அழுக்கு மூட்டைகளாக மாறிவிட்டார்கள்.  இருண்ட காலம் மாறி மறுமலர்ச்சிக் காலம் வந்த போதும், குளிப்பதில் எந்த மறுமலர்ச்சியும் ஏற்படவில்லை. பைசா கோபுரத்தையும், மோனோலிசாவையும், ஈஃபிள் டவரையும், வெள்ளை மாளிகையையும்  குளிக்காமல் கொள்ளாமல்தான் உருவாக்கி இருக்கிறார்கள்.

ஒரு காலத்தில் கிரேக்கர்கள், ரோமானியர்கள் எல்லாம் குளித்து சுத்த பத்தமாக இருந்தவர்கள் தான் என்கிறார் கேதரினா.  அங்கெல்லாம் கட்டணக் குளியலறை இருந்திருக்கிறது. ஷவர் கூட உண்டு. என்ன, பாத்ரூம் சுவருக்கு அந்தப் பக்கமாக அடிமை ஒருவர் நின்று கொண்டு மாவு ஜல்லடை வழியாக தண்ணீரை ஊற்றிக் கொண்டே இருப்பார் !  ஜிம்னேஷியங்களில் கிரேக்கர்கள் நிர்வாணமாகத் தான் உடற்பயிற்சி  செய்வார்களாம். ஜிம்னேஷயம் என்ற சொல்லுக்கு நிர்வாண இடம் என்பதுதான் நேரடிப் பொருள் என்கிறார் கேதரினா.  உடற்பயிற்சி முடித்தவர்கள் குளித்து உடை மாற்ற அங்கு நல்ல வசதியான பாத்ரூம்கள் இருந்திருக்கின்றன.  அக்கால ஜெர்மனியில் கட்டணக் குளியலறையில் குளிப்பதற்காக சம்பளத்தில் ஒரு குளியல் அலவன்ஸ் ( பாடகெல்ட் – badegeld ) சேர்த்துத் தந்த காலமும் இருந்திருக்கிறது. ஆனால் யார் கண் பட்டதோ, திடீரென ஐரோப்பியர்கள் குளிக்காமல் , அழுக்கு ஆடைகளைப் போட்டுத் திரிபவர்களாக மாறிவிட்டார்கள்.  குளித்தல் என்பது மதரீதியான சடங்குகளில் ஒன்றாக மாறிப் போய்விட்டது.  சர்ச்சிற்கு சாமி கும்பிடப் போகும் போது குளிப்பது என்றானது. அதுவும் குறைந்து போய்,  சர்ச் வாசலில் ஒரு அண்டா நீரில் கையை மட்டும் நனைத்து குளித்ததாக பாவனை செய்து கொண்டு உள்ளே செல்லும் வழக்கம் வந்து விட்டது.

குளித்தல், சுத்தம் செய்து கொள்ளுதல் என்பது புறஉடல் சார்ந்ததாக இல்லாமல் அகம் சார்ந்ததாக மாறிவிட்டது.  குற்ற உணர்வைப் போக்கிக் கொள்ள குளிப்பது, கை கழுவிக் கொள்ளுதல் என்றானது. ஏசுவிற்கு தண்டனை வழங்கியதும், பாண்டியஸ் பைலேட்  கைகழுவிக் கொண்டாராம். கைகழுவி விடுதல் என்ற சொல்லாடல் நம்மிடம் இருப்பதற்கு இது போன்ற காரணம் ஏதேனும் இருக்குமோ? என்று  தமிழறிஞர்கள் விளக்க வேண்டும்.  லேடி மேக்பத் டங்கனை கொலை செய்யுமாறு கணவனைத் தூண்டும் போது, கொஞ்சம் தண்ணீர் இருந்தால் போதும், இந்தப் பாவத்தைத் தொலைத்து விடலாம் என்கிறாள் – A little water clears us of this deed என்பது அவளது வசனம்.  இறந்து போனவர்களின் இறுதிச் சடங்கில் குளிப்பாட்டுதல் கிட்டத்தட்ட உலகெங்கும் இருக்கக் கூடிய ஒரு வழக்கம். அதற்கு நடைமுறை சார்ந்து எந்தக் காரணமும் இல்லாது போனாலும், இறுதி மரியாதையில் முக்கியமான ஒன்றாக இன்றளவும் இருக்கிறது.

ஆனாலும் கிறிஸ்தவ உலகம் குளிக்காமல், சுத்தமான உடைகள் அணியாமல் இருக்க ஆரம்பித்தது. கிறிஸ்துமஸுக்கு முதல் நாளும், ஈஸ்டருக்கு முதல் நாளும் மட்டும்தான் நாங்கள் குளிப்போம் என்று கிபி 1075ல் உல்ரிச்சில் ஒரு கிறிஸ்துவத் துறவி எழுதி வைத்திருப்பதை ஆய்வாளர்கள் இப்போது கண்டெடுத்திருக்கிறார்கள். ஆனால் மறுபுறம் இஸ்லாமிய உலகம் சுத்தத்திற்கு மிக மிக முக்கியத்துவம் தந்ததாக இருந்திருக்கிறது.  துருக்கியின் பொதுக் குளியலறையில் பல்வேறு வாசனைத் திரவியங்களைத் தடவிக் கொண்டு, ஆவி பறக்கும் வென்னீரில் குளிப்பது வழக்கமாக இருந்தது. இந்த பொதுக் குளியலறையின் பெயரைக் கேதரினா சொன்னதும் நான் அசந்து போனேன். அதற்கு ஹமாம் என்று பெயர். இன்று ஒரு பிரபலமான சோப் . இதைப் படிக்கும் சங்கிகள் இனி ஹமாம் சோப் வாங்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன் !  பண்டைக்கால குளியல் பற்றிய மற்றொரு  வியப்பான விஷயம், யூத ஆண்கள் குளிக்காதவர்கள் தான் என்றாலும், மாதவிலக்கான பெண்கள் மாதவிலக்கு வந்த ஏழாம் நாள்  மிக்வெ எனப்படும் குளியல் சடங்கை நிறைவேற்றிய பின்தான் கணவனோடு இணைய முடியும். மாதவிலக்கு, தீட்டு என்ற கருத்தாக்கங்கள்  உலகின் மற்றொரு  மூலையில், ஒரு யூத சமூகத்திலும் இருந்தது விந்தைதான்.

ஆனால், பதினேழாம் நூற்றாண்டு வரை யாரும் தினமும் குளிக்கவில்லை. ஒரு ஆடையை அணிந்தால் அது கந்தல் கந்தலாக கிழியும் வரை அதை அப்படியே போட்டுக் கொண்டு திரிவார்கள். மிகவும் மோசமானதும் அதை கழற்றித் தூக்கி எறிந்து விட்டு அடுத்த கந்தை. இப்போதும் நாம் வெப் சீரிஸ்களின் வரலாற்றுத் தொடர்களில் கதாபாத்திரங்களின் உடையலங்காரத்தில் இதைப் பார்க்க முடியும்.   அன்றைய வழக்கத்திற்கு மாறாக நெப்போலியனும் அவரது மனைவி ஜோசஃபினும்  தினமும் குளிக்கும் வழக்கமுள்ள சுத்தமானவர்கள். எனினும், நெப்போலியன்  “நாளை மாலை நான் பாரீஸ் வந்து விடுவேன். அதனால் நீ குளிக்க வேண்டாம்,“  என்று ஜோசஃபினுக்கு எழுதிய கடிதம் இன்றும் இருக்கிறது !

தொழிற் புரட்சி வந்தது. நிலக்கரி சுரங்கங்கள். நிலக்கரி இஞ்சின்கள் என்று ஐரோப்பாவே கரிப் புகையால் சூழப்பட்டதாக மாறியது. குளித்துத் தான் ஆகவேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டது. தொழிற் புரட்சி ஒரு புறம் ஐரோப்பியர்களை செல்வந்தர்களாக ஆக்கியதோடு இல்லாமல், சுத்தமானவர்களாகவும் ஆக்கியது. அப்போதுதான் கிறிஸ்துவத்தில் மெதாடிஸம் என்ற பிரிவை உருவாக்கியவரான வெஸ்லி என்ற பாதிரியார் 1791ல் இன்று பள்ளி ஆசிரியைகளால் அடிக்கடி சொல்லப்படும் Clinliness is next to Godliness  என்ற புகழ்பெற்ற வாசகத்தைக் கூறினார். மக்கள் தினமும் குளிக்க வேண்டும், துவைத்த ஆடைகளை அணிய வேண்டும் என்றெல்லாம் பிரச்சாரம் செய்ய வேண்டிய நிலையில்தான் அன்று ஐரோப்பா இருந்தது.   சமுதாய ஒப்பந்தம் எழுதிய ரூஸோ சுத்தம், சுகாதாரம் என்பதை அறிவியல் கருத்தாகப் பார்க்காது, தனிநபர் ஒழுக்கப் பண்பாகப் பார்க்க வேண்டும் என்று எழுதினார்.

விலங்குகளின் கொழுப்பையும், எண்ணெயையும் கலந்து சோப் தயாரிக்கப்பட்டது.  பல்வேறு வகையான எண்ணெய்களைக் கலந்து புதுப்புது சோப் தயாரிக்கும் முயற்சிகள் பரவலாக நடந்தன. அப்படியான ஆராய்ச்சியில் பாமாயிலையும், ஆலிவ் எண்ணெயையும் கலந்து தயாரிக்கப்பட்ட சோப் விற்பனையில் பெரும் சாதனை படைத்தது.  அதன் மூலப்பொருட்களான பாம் மற்றும் ஆலிவ்வை சோ்த்து அதற்கு Palmolive என்று பெயரிட்டார்கள்.  இன்று அந்த நிறுவனத்தின் தயாரிப்பை வாழ்வில் ஒரு முறையேனும் பயன்படுத்தாத மனிதர் எவருமே உலகில் இல்லை எனலாம். 19ம் நூற்றாண்டில் திருமணத்திற்கான விளம்பரங்களில் நான் தினமும் குளிப்பவள் என்பதை தனது கூடுதல் தகுதியாக பெண்கள் குறிப்பிட ஆரம்பித்தார்களாம்.

கிருமிகள் பற்றிய அறிவியல் கண்டுபிடிப்புகளால் சுத்தம் பேணுதல் அதிகரித்தது. குளிப்பது, துணி துவைப்பதைத் தாண்டி கை கழுவுதல் மிக முக்கியமானதாயிற்று. மருந்துப் பொருளான லிஸ்டரின் வாய்துர்நாற்றம் போக்கும்  முக்கியமான திரவமாயிற்று.

சுத்தமாக இருப்பதன் முக்கியத்துவத்தை ஐரோப்பியர்கள் உணர ஆரம்பித்ததும் வேறு பல மாற்றங்களும் ஏற்பட்டன. வீட்டிற்குள்ளேயே கழிப்பறை, குளியலறை வந்தன.  அமெரிக்காவில் வீட்டின் கூடம் அளவிற்கு பாத்ரூம் கட்டுவது முக்கியமான நாகரீகமாயிற்று.  இன்று நம் நாட்டிலும் கூட சொந்த வீடு கட்டுவோர் பலர்  ஆளுக்கு ஒரு கழிப்பறை என்ற கணக்கில் கட்டுவதைப் பார்க்கிறோம்.  இன்று ஒரு சராசரி அமெரிக்கர் வீட்டு பாத்ரூம் நம் நாட்டின் சிறந்த மருத்துவமனையின் அறுவை சிகிச்சை கூடத்தை விட படுசுத்தமாக கிருமிகள் இல்லாது இருக்குமாம்.

மின்சாரம், தொழிற்சாலைகளில் நவீனமயம், குதிரைகளுக்குப் பதில் மோட்டார் வாகனங்கள், மண் சாலைகளுக்குப் பதில் தூசிதும்பு இல்லாத தார் சாலைகள், வீடுகளில்,  விறகு, கரி அடுப்பிற்கு பதிலாக மண்ணெண்ணெய் ஸ்டவ் என்று மாற்றங்கள் நிகழ ஆரம்பித்த போது, மீண்டும் தினமும் குளிக்க வேண்டிய அவசியம் இல்லாத ஒரு நிலை உருவானது. நாம் நினைப்பதற்கு மாறாக 1920களில் ஐரோப்பா முழுவதும் சோப் விற்பனை குறைந்தது என்கிறார் கேதரினா. அப்போதுதான் சோப் விற்பனையை அதிகரிக்க விளம்பரம் என்ற ஒரு புது வியாபார யுக்தி உருவானது. ரேடியோ நாடகங்களுக்கு ஸ்பான்சராக சோப் கம்பெனிகள் விளம்பரம் செய்தன. அதனால், இந்த நாடகங்களுக்கே சோப் என்ற பெயர் வந்தது.  கண்மை, பௌடர், லிப்ஸ்டிக் என அழகுப் பொருட்கள் ஆயிரம் இருந்தாலும் கூட,  குறிப்பிட்ட சோப்பைப் பயன்படுத்தினால் அழகாகி விடலாம் என்ற விளம்பரங்கள் வர ஆரம்பித்தன.   பத்து சோப் உறையைக் கொடுத்தால் பரிசு என்பது போன்ற திட்டங்கள். விளம்பரம் என்ற தொழில் பாய்ச்சல் வேகத்தில் வளர சோப் என்ற ஒற்றைப் பொருள் காரணமாக அமைந்தது. இன்றைய காலகட்டத்தில் மனிதர்களின் இயற்கையான உடலின் வாசனை எது என்பதே தெரியாமல் போய் எல்லோரும் மாம்பழம், செர்ரி, அன்னாசி என்று பழ வாசனையில்தான் இருக்கிறார்கள் என்கிறார் கேதரின். எனக்கு சிறுவயதில் அவள் பழவாசனையோடு இருந்தாள் என்று சுஜாதா எழுதியதைப் புரியாமல் படித்தது நினைவுக்கு வந்தது,

இத்தனை மாற்றங்கள் நடந்ததை எல்லாம் மிக்சர் சாப்பிட்டுக் கொண்டு பார்த்துக் கொண்டிருந்த ஆக்ஸ்ஃபோர்ட் அகராதி 1972ல் தான்   முதன்முறையாக bathroom என்பதை தன் அகராதியில் சேர்த்துக் கொண்டதாம். கல்வியாளர்கள் எல்லா நாட்டிலும் இப்படித்தான் மந்தமாக இருக்கிறார்கள்.

இன்று கொரானா காலத்தில், அதற்குப் பிறகான காலத்தில் சுத்தத்திற்கான முக்கியத்துவம் எவ்வளவு அதிகரித்து விட்டது என்று யாரும் யாருக்கும் சொல்ல வேண்டியதே இல்லை.  பெட்ரோலிய நிறுவனமான ஷெல் எந்தப் போக்குவரத்தும் அற்ற அந்த ஊரடங்குக் காலத்தில் சும்மா இருக்காமல் ஹேண்ட்வாஷ் தயாரித்து விற்றது என என் உறவினரான அதன் உயரதிகாரி ஒருவர் என்னிடம் சொன்னது நினைவுக்கு வருகிறது.

புத்தகத்தைப் படித்து முடித்த போது, வழக்கத்துக்கு மாறாக நம் முன்னோர்களை நினைத்து மிகவும் பெருமையாக இருந்தது.  போப் ஆண்டவர்களும், எடின்பரோ கோமகன்களும், விக்டோரியா மகாராணிகளும் மாதக் கணக்கில் குளிக்காமல், அழுக்கு உடைகளோடு திரிந்த காலத்தில் நம் முன்னோர்கள் கந்தையானாலும் கசக்கிக் கட்டினார்கள். அப்படிக் கசக்கும் போது அது கிழிந்து போனாலும், இக்கலிங்கம் போனாலென்ன, ஏகலிங்க மாமதுரைச் சொக்கலிங்கம் உண்டே துணை என்று கவி பாடினான் எங்கள் ஊர்க்காரன் ஒருவன்.  இந்த ஒரு விஷயத்தில் நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்களல்ல !

ஆர்வமுள்ளோர் வாசிக்க – Clean – An Unsanitised History Of Washing  by Katherina Ashenburg.

நன்றி – உயிர்மை ஏப்ரல் 2025 இதழ்

சமைக்கக் கற்ற குரங்குகள்

18 April 2025 at 07:48

ஆண்கள் சமையல் செய்ய வேண்டும் என்று தோழர் ச.தமிழ்ச்செல்வன் எப்போதும் வலியுறுத்திச் சொல்வாரே, இந்தக் கட்டுரை அது பற்றியது அல்ல என்ற மறுப்புரையோடு இதை ஆரம்பிக்கிறேன்.

தீ எரிக. அதனிடத்தே தசை பொழின்றோம். தீ எரிக. அதனிடத்தே செந்நீர் பொழிகின்றோம். தீ எரிக. அதற்கு வேள்வி செய்கின்றோம். தீ எரிக. தீயே நீ எது உயிரின் தோழன். உ்னனை வாழ்த்துகின்றோம்… என்று  பாரதி பாடியது நமக்குத் தெரியும். ஆனால் அதில் தசை பொழியவும், செந்நீர் பொழியவும் மனித சமூகம் எப்போது கற்றது? மனித குல வரலாற்றில் மிகப் பெரிய மாற்றமான உணவை சமைத்து உண்பது எப்போது ஆரம்பித்தது? அது ஏற்படுத்திய மாற்றங்கள் என்ன? என்றெல்லாம் நாம் யோசித்ததில்லை.  ரிச்சர்ட் வ்ராங்கம் எழுதிய Catching Fire – How Cooking Made Us Human என்ற புத்தகத்தைப் படித்த போது, பாரதி போல் தீயை வணங்குவதோடு சமைக்கப்பட்ட உணவையும் சேர்த்து வணங்க வேண்டும் என்று தெரிந்தது.  சமைத்த உணவு என்ற மாபெரும் மாற்றம் மட்டும் ஏற்படாவிட்டால், நாம் இப்போதும் குரங்குகளாகத் தான் இருந்திருப்போம் என்று சொல்லும் வ்ராங்கம் புகழ்பெற்ற மானுடவியலாளர். சிம்பன்ஸி போன்ற மனிதக் குரங்குகளிடம் காணப்படும் மனிதன் போன்ற குணாம்சங்களை ஆராய்ந்து ஏராளமான நூல்கள் எழுதியவர்.  மனிதக் குரங்குகள் இனத்தை அழிவிலிருந்து காக்க பாடுபட்டு வருபவர்.

மனிதன் தான் உண்ணும் உணவினால் வாழவில்லை. தான் செரிமானம் செய்யும் உணவால் தான் வாழ்கிறான் என்பது அறிவியலாளர்களிடையே புழங்கும் பழமொழி. உயிரினங்களிடையே உள்ள வேறுபாடுகள் அவற்றின் மூளைத் திறனைப் பொறுத்தது. அந்த மூளையின் திறன் அவை உண்ணும் உணவின் தன்மையைப் பொறுத்தது.  பொதுவாக உயிரினங்களுக்கு உணவு, நீர், உறைவிடம் வேண்டும்.  அதோடு நின்றுவிடாமல் தீயைக் கண்டுபிடித்து, பயன்படுத்தி, உணவின் தன்மையை மாற்றி, அது இன்றி வாழ  முடியாது என்ற நிலையை ஆதிமனிதன் அடைந்த போது இன்றைய நவீன் மனிதன் தோன்றினான். மனிதனுக்கும், விலங்குக்கும் எத்தனையோ வேறுபாடுகளைக் கூற முடியும் என்றாலும், சமைத்த உணவைச் சாப்பிடுவது தான் மிகப் பெரிய வேறுபாடு. மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய வேறுபாடு என்கிறார் அவர்.

19ம் நூற்றாண்டில் இது போன்ற கருத்து அறிவியலாளர்களிடம் நிலவியது. 1825ல் புகழ்பெற்ற பிரெஞ்சு உணவியல் அறிவியலாளரான சாவரின்  தீயின் மூலம் தான் மனிதன் இயற்கையை வென்றான் என்றார். தீயின் மூலமாகத் தான் மனிதன் இறைச்சியை எளிதாக உண்ண முடிந்தது.  மனிதன் சமைக்க ஆரம்பித்த பிறகு தான் இறைச்சி விரும்பிச் சாப்பிடக் கூடியதாக ஆனது. இதனால் தான் வேட்டைக்கு அதிக முக்கியத்துவம் ஏற்பட்டது. வேட்டை பொதுவாக ஆண்கள் மட்டுமே செய்யக் கூடியதாக இருந்தது. பெண்கள் சமைக்கப் போனார்கள். இன்றைய குடும்பம் என்ற அமைப்பு, பால்ரீதியான வீட்டு வேலைப் பிரிவினைகள் எல்லாவற்றிற்கும் சமையல் தான் ஆரம்பப் புள்ளி என்றார் அவர். அவரது கருத்துகள் தொடர்பாக, விரிவான அய்வுகள் பெரிய அளவில் நடக்கவில்லை. சாவரின் இந்தக் கருத்தைச் சொன்ன காலத்தில் டார்வின் பள்ளிச் சிறுவன். டார்வின் தனது பரிணாமக் கொள்கையைக் கூறிய போதும் கூட, மொழிக்கு அடுத்தபடியாக மனிதன் கண்டுபிடித்த மாபெரும் விஷயம் சமையல் என்று சொல்வதோடு நிறுததிக் கொண்டார். சமூகப் போட்டியில், வாழ்க்கைப் போராட்டத்தில்,  அறிவாற்றல் மனிதனுக்கு ஒரு கூடுதல் சாதகச் சூழலைத் தந்திருக்கலாம் என்று சொன்னதோடு அவர் நிறுத்திக் கொண்டார். மற்ற உயிரினங்களை விட அதிக அறிவாற்றல் மனித இனத்திற்கு மட்டும் வந்ததற்கான காரணம் என்ன, எது அதை சாத்தியமாக்கியது என்பது பற்றி அவருக்குத் தெளிவு பிறக்கவில்லை.  சமைத்த உணவுதான் அந்த கூடுதல் அறிவாற்றலை மனித இனம் பெறுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தது என்கிறார் வ்ராங்கம்.

சமைத்த உணவை உண்பது தான் மனித இனத்தை இன்றைய மனித இனமாக மாற்றியது என்பதை மானுடவியலாளா்கள் ஏற்றுக் கொண்டாலும் கூட, அது எப்போது, ஏன், எப்படி நடந்தது என்று அவர்களால் விளக்க முடியவில்லை.

சமையலின் தோற்றம் பற்றியே அறிவியலாளர்கள் மத்தியில் கருத்து வேறுபாடுகள் நிலவின. பழைய கற்காலத்தின் இறுதிக் கட்டம் வரை, அதாவது சுமார் 40000 ஆண்டுகளுக்கு முன்பு வரை சமையலுக்காக தீயைப் பயன்படுத்துவது அன்றாட நிகழ்வாக இல்லை என்று சிலர் கருதினார்கள்.  ஆனால் அந்தக் காலத்தில் குகை ஓவியங்கள் வரையும்அளவிற்கு மனிதன் நாகரீகம் அடைந்திருந்தான். மற்றொரு சாரார், 2 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே மனிதன் நெருப்பை பயன்படுத்த ஆரம்பித்து விட்டான். உணவை சமைத்துச் சாப்பிடுவதும் ஏறக்குறைய அதே சமயத்தில் ஆரம்பித்து விட்டது என்று கருதினார்கள்.  வ்ராங்கம் தொல்லியல் எச்சங்களை ஆராயாமல் உயிரியல் சான்றுகளை ஆராய ஆரம்பித்தார்.  நமது மூதாதையரின் பற்கள், எலும்புகளின் அமைப்பு அவர்கள் எவ்வகையான உணவை உட்கொண்டார்கள், அது எவ்விதமாக பதப்படுத்தப்பட்டிருந்தது என்பதைக் காட்டின. ஹோமோ செப்பியன்கள் காலத்திலேயே மனிதன் நெருப்பை பயன்படுத்த ஆரம்பித்து விட்டான் என்பதை அந்த ஆதாரங்கள் காட்டின. அது சுமார் 2 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு. அப்போதெல்லாம் மனிதன் கதகதப்பிற்காக, வெளிச்சத்திற்காக,  மற்ற கொடிய விலங்குகளிடமிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்வதற்காக அந்த நெருப்பைப் பயன்படுத்தி வந்திருக்க வேண்டும்.

சரி, அறத்தீ, உயிர்த்தீ, வேள்வித்தீ, தீயே நீ எமது உயிரின் தோழன் என்றெல்லாம் பாரதி உணர்ச்சிவசப்படும் அளவு தீ என்ன செய்தது?  அவர் உணர்ச்சிவசப்பட்டது சரிதானா? என்றால் வ்ராங்கம் சரிதான் என்கிறார்.  சமையல் உணவின் மதிப்பைக் கூட்டியது. அது நமது உடலமைப்பை, மூளையை, நமது நேர நிர்வாகத்தை, நமது சமூக உறவுகளை மாற்றியது என்கிறார். மிக முக்கியமாக, ஒரு வெளிப்புற சக்தியை நுகர்வோராக நம்மை மாற்றியது,  எரிசக்தியை நம்பி இருத்தல் என்ற இயற்கையுடனான ஒரு புதிய சமூக உறவை அது ஏற்படுத்தியது என்கிறார்.

இறைச்சி உணவு உட்கொள்ள ஆரம்பித்தது நீண்ட தூரம் பயணிக்கும் பலம், வலுவான உடல், அதிகரித்து வந்த அறிவாற்றல், அதிகரித்து வந்த ஒத்துழைப்பு ஆகியவற்றை ஏற்கனவே உருவாக்கியிருந்தது. நெருப்பு கண்டுபிடிக்கப்பட்டவுடன் மனிதனிடம் பல்வேறு மாறுதல்கள் உருவாகின. ஏனைய விலங்குளிடமிருந்து தப்பிக் கொள்ள மரத்தில் ஏறி உறங்க வேண்டிய அவசியம் இன்றி, மனிதன் தைரியமாக தரையில் தூங்க ஆரம்பித்தான். தீயை வைத்து பிற விலங்குகளை அச்சுறுத்தி விரட்டினான். மெல்ல மெல்ல மரமேறும் திறனை இழந்தான் என்பது வேறு விஷயம்.

சமைக்கக் கற்றுக் கொண்ட குரங்காக அவன் மாறியதும், இன்னும் இன்னும் அவனிடம் மாற்றங்கள்.  சமைத்த, பக்குவப்படுத்தப்பட்ட உணவை எளிதாக செரிமானம் செய்ய முடிந்தது.  அதுவரை உடலின் சக்தி முழுவதும் செரிமானத்திற்கே பெரிதும் பயன்படுத்தப்பட்டு வந்தன. இப்போது பற்களின் அமைப்பு மாறியது. செரிமான உறுப்புகளின் அளவு குறைந்தது. உடல் அவற்றிற்காக செலவிட்ட சக்தி இப்போது மூளைக்குச் சென்றது. மனிதனின் மூளை மேலும் மேலும் வளர்ச்சி பெற்றது. அளவிலும், சிந்தனைத் திறத்திலும்.  மற்றொரு முக்கிய மாற்றம் நேரம். கிட்டத்தட்ட மனிதனைப் போன்ற உடல் அமைப்பு உள்ள சிம்பன்ஸிகள்  தம் உணவைக் கடித்து, மென்று தின்பதற்கு தினமும் கிட்டத்தட்ட ஆறு மணி நேரங்களுக்கு மேல் செலவிட்டன. ஒரு பகல் பொழுதின் 42 சதவிகித நேரம்.  அதாவது இன்று நாம் டீ, காப்பி, சிகரெட், அரட்டை, கடலை போடும் நேரம் போக, அலுவலகத்தில் வேலை பார்க்கும் நேரம். வேறுவிதமாகச் சொன்னால், ஒரு வேலை நாள்.  சமைக்கப்பட்ட உணவு இந்த நேரத்தை மிச்சப்படுத்தின.  தீயினால் பக்குவப்பட்ட உணவு எளிதில் செரிமானமானது. உடலின் சக்தி மிச்சப்பட்டது. இப்போதும் கூட உடல் எடை குறைய பலரும் முயல் போல் கேரட், முட்டைக்கோஸ் என்று பச்சையாகச் சாப்பிடுவது,  பேலியோ டயட் போன்றவற்றிற்கெல்லாம்  இதுதான் காரணம்.  தெரு நாய், பூனைகளை விட வீட்டில் வளர்க்கப்படும் நாய், பூனைகள் குண்டாக இருக்கவும் இதுவே காரணம். கோவில் யானைகளுக்கு முகாம் நடத்தவும் இதுதான் காரணம்.  நாம் அவற்றிற்கு பக்குவப்படுத்தப்பட்ட, சமைத்த உணவைத்தானே தருகிறோம்.

உணவிற்கு ருசி கூடியது ஒரு கூடுதல் சாதகம். அந்தக் காலத்துக் காக்கை பாட்டியின் வடை திருடியதற்கும், இந்தக் கால காக்கைகள் காலையில் டீக்கடைக்காரர்கள் கடை வாசலில் சிதறிவிடும் மிக்சரைச் சாப்பிடுவதற்கும் இதுதான் காரணம். நிற்க,  சாப்பிடும் நேரம் கணிசமாகக் குறைந்ததால், மனிதன் வேறு பல உபயோகமான வேலைகளைச் செய்தான். குகை ஓவியம் தீட்டுவது, கவிதை எழுதுவது என்ற உபயோகமற்ற வேலைகளையும் செய்ய ஆரம்பித்து சந்தோஷமாகவும் இருக்க ஆரம்பித்தான்.  ஆனாலும் கூட, தீயினால் சுட்ட புண் உள்ளாறும் என்று எழுதுவதற்கு எத்தனையோ யுகங்கள் ஆகியிருக்கிறது ! உணவை நேரடியாக தீயில் போட்டு வாட்டியவன் தீயை வைத்து பானை சுட அறிந்தான். சமையல்கலை மேலும் முன்னேறியது. சமைத்த உணவில் சத்துகள் அதிகரித்தன. கிருமிகள் அழிந்தன. உணவை எளிதாக கடித்துத் தின்ன முடிந்தது. உணவை அடுத்த வேளைக்கு மிச்சம் வைத்துக் கொள்ள முடிந்தது. உப்புக்கண்டம், கருவாடு எல்லாம் கண்டுபிடிக்க முடிந்தது. புதிய சுவையான சமைக்கப்பட்ட உணவின் காரணமாக மனிதனின்  அறிவாற்றல் வளர்ந்ததோடு மட்டுமன்றி, அவனால் அதிக நேரம் ஓட முடிந்தது. அதிக நேரம் வேட்டையாட முடிந்தது.  ஆயுள் அதிகரித்தது.  உடல் முழுவதுமிருந்த ரோமம் உதிர்ந்து அழகாகவும் ஆனான். சமூக உறவுகள், குறிப்பாக ஆண், பெண் இடையிலான பந்தம் எல்லாம் அதிகரித்தன. அவன் வேட்டையாடிக் கொண்டு வந்ததை, அவள் சமைத்து வைக்க குடும்பம் என்ற அமைப்பும் மெல்ல மெல்லத் தோன்றியது. வெறும் மாமிசப் பட்சிணியாக இல்லாமல் மனிதன் சமைத்துச் சாப்பிடும் உயிரினமாக பரிணமித்தான்.  தீயின் குழந்தையான அவன் சமைக்கக் கற்றுக் கொண்ட குரங்கினமாக இருந்து மெல்ல, மெல்ல இன்றைய நவீன மனிதனானான்.

267 பக்க புத்தகம். அதில் 38 பக்கங்களுக்கு உதவிய நூல்களின் பட்டியல் அகர வரிசைப்படி தரப்பட்டுள்ளன என்பதைப் பார்க்க பிரமிப்பாக இருக்கிறது.  இந்தப் புத்தகத்தைப் படித்து முடித்த போது, உணவில் மாற்றம் ஏற்படுத்திய தீ மனிதனின் வழிபாட்டு முறைகளில் எப்படியோ முக்கிய இடம் பிடித்தது நம் நாட்டிற்கே உரிய ஒரு தனித்துவம். அது குறித்த ஆய்வுகள் ஏதேனும் உண்டா என்று தேடி வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். உயிர்த்தீ என்று சொன்ன பாரதியை அறிவுத் தீ என்றும் சொல்ல வைத்தது என்று யோசித்துக் கொண்டே இருந்தேன்.

ஆர்வமுள்ளோர் வாசிக்க – Catching Fire – How Cooking Made Us Human by Richard Wrangham

நன்றி – உயிர்மை மார்ச் 2025

சமைக்கக் கற்ற குரங்குகள்

18 April 2025 at 07:48

ஆண்கள் சமையல் செய்ய வேண்டும் என்று தோழர் ச.தமிழ்ச்செல்வன் எப்போதும் வலியுறுத்திச் சொல்வாரே, இந்தக் கட்டுரை அது பற்றியது அல்ல என்ற மறுப்புரையோடு இதை ஆரம்பிக்கிறேன்.

தீ எரிக. அதனிடத்தே தசை பொழின்றோம். தீ எரிக. அதனிடத்தே செந்நீர் பொழிகின்றோம். தீ எரிக. அதற்கு வேள்வி செய்கின்றோம். தீ எரிக. தீயே நீ எது உயிரின் தோழன். உ்னனை வாழ்த்துகின்றோம்… என்று  பாரதி பாடியது நமக்குத் தெரியும். ஆனால் அதில் தசை பொழியவும், செந்நீர் பொழியவும் மனித சமூகம் எப்போது கற்றது? மனித குல வரலாற்றில் மிகப் பெரிய மாற்றமான உணவை சமைத்து உண்பது எப்போது ஆரம்பித்தது? அது ஏற்படுத்திய மாற்றங்கள் என்ன? என்றெல்லாம் நாம் யோசித்ததில்லை.  ரிச்சர்ட் வ்ராங்கம் எழுதிய Catching Fire – How Cooking Made Us Human என்ற புத்தகத்தைப் படித்த போது, பாரதி போல் தீயை வணங்குவதோடு சமைக்கப்பட்ட உணவையும் சேர்த்து வணங்க வேண்டும் என்று தெரிந்தது.  சமைத்த உணவு என்ற மாபெரும் மாற்றம் மட்டும் ஏற்படாவிட்டால், நாம் இப்போதும் குரங்குகளாகத் தான் இருந்திருப்போம் என்று சொல்லும் வ்ராங்கம் புகழ்பெற்ற மானுடவியலாளர். சிம்பன்ஸி போன்ற மனிதக் குரங்குகளிடம் காணப்படும் மனிதன் போன்ற குணாம்சங்களை ஆராய்ந்து ஏராளமான நூல்கள் எழுதியவர்.  மனிதக் குரங்குகள் இனத்தை அழிவிலிருந்து காக்க பாடுபட்டு வருபவர்.

மனிதன் தான் உண்ணும் உணவினால் வாழவில்லை. தான் செரிமானம் செய்யும் உணவால் தான் வாழ்கிறான் என்பது அறிவியலாளர்களிடையே புழங்கும் பழமொழி. உயிரினங்களிடையே உள்ள வேறுபாடுகள் அவற்றின் மூளைத் திறனைப் பொறுத்தது. அந்த மூளையின் திறன் அவை உண்ணும் உணவின் தன்மையைப் பொறுத்தது.  பொதுவாக உயிரினங்களுக்கு உணவு, நீர், உறைவிடம் வேண்டும்.  அதோடு நின்றுவிடாமல் தீயைக் கண்டுபிடித்து, பயன்படுத்தி, உணவின் தன்மையை மாற்றி, அது இன்றி வாழ  முடியாது என்ற நிலையை ஆதிமனிதன் அடைந்த போது இன்றைய நவீன் மனிதன் தோன்றினான். மனிதனுக்கும், விலங்குக்கும் எத்தனையோ வேறுபாடுகளைக் கூற முடியும் என்றாலும், சமைத்த உணவைச் சாப்பிடுவது தான் மிகப் பெரிய வேறுபாடு. மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய வேறுபாடு என்கிறார் அவர்.

19ம் நூற்றாண்டில் இது போன்ற கருத்து அறிவியலாளர்களிடம் நிலவியது. 1825ல் புகழ்பெற்ற பிரெஞ்சு உணவியல் அறிவியலாளரான சாவரின்  தீயின் மூலம் தான் மனிதன் இயற்கையை வென்றான் என்றார். தீயின் மூலமாகத் தான் மனிதன் இறைச்சியை எளிதாக உண்ண முடிந்தது.  மனிதன் சமைக்க ஆரம்பித்த பிறகு தான் இறைச்சி விரும்பிச் சாப்பிடக் கூடியதாக ஆனது. இதனால் தான் வேட்டைக்கு அதிக முக்கியத்துவம் ஏற்பட்டது. வேட்டை பொதுவாக ஆண்கள் மட்டுமே செய்யக் கூடியதாக இருந்தது. பெண்கள் சமைக்கப் போனார்கள். இன்றைய குடும்பம் என்ற அமைப்பு, பால்ரீதியான வீட்டு வேலைப் பிரிவினைகள் எல்லாவற்றிற்கும் சமையல் தான் ஆரம்பப் புள்ளி என்றார் அவர். அவரது கருத்துகள் தொடர்பாக, விரிவான அய்வுகள் பெரிய அளவில் நடக்கவில்லை. சாவரின் இந்தக் கருத்தைச் சொன்ன காலத்தில் டார்வின் பள்ளிச் சிறுவன். டார்வின் தனது பரிணாமக் கொள்கையைக் கூறிய போதும் கூட, மொழிக்கு அடுத்தபடியாக மனிதன் கண்டுபிடித்த மாபெரும் விஷயம் சமையல் என்று சொல்வதோடு நிறுததிக் கொண்டார். சமூகப் போட்டியில், வாழ்க்கைப் போராட்டத்தில்,  அறிவாற்றல் மனிதனுக்கு ஒரு கூடுதல் சாதகச் சூழலைத் தந்திருக்கலாம் என்று சொன்னதோடு அவர் நிறுத்திக் கொண்டார். மற்ற உயிரினங்களை விட அதிக அறிவாற்றல் மனித இனத்திற்கு மட்டும் வந்ததற்கான காரணம் என்ன, எது அதை சாத்தியமாக்கியது என்பது பற்றி அவருக்குத் தெளிவு பிறக்கவில்லை.  சமைத்த உணவுதான் அந்த கூடுதல் அறிவாற்றலை மனித இனம் பெறுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தது என்கிறார் வ்ராங்கம்.

சமைத்த உணவை உண்பது தான் மனித இனத்தை இன்றைய மனித இனமாக மாற்றியது என்பதை மானுடவியலாளா்கள் ஏற்றுக் கொண்டாலும் கூட, அது எப்போது, ஏன், எப்படி நடந்தது என்று அவர்களால் விளக்க முடியவில்லை.

சமையலின் தோற்றம் பற்றியே அறிவியலாளர்கள் மத்தியில் கருத்து வேறுபாடுகள் நிலவின. பழைய கற்காலத்தின் இறுதிக் கட்டம் வரை, அதாவது சுமார் 40000 ஆண்டுகளுக்கு முன்பு வரை சமையலுக்காக தீயைப் பயன்படுத்துவது அன்றாட நிகழ்வாக இல்லை என்று சிலர் கருதினார்கள்.  ஆனால் அந்தக் காலத்தில் குகை ஓவியங்கள் வரையும்அளவிற்கு மனிதன் நாகரீகம் அடைந்திருந்தான். மற்றொரு சாரார், 2 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே மனிதன் நெருப்பை பயன்படுத்த ஆரம்பித்து விட்டான். உணவை சமைத்துச் சாப்பிடுவதும் ஏறக்குறைய அதே சமயத்தில் ஆரம்பித்து விட்டது என்று கருதினார்கள்.  வ்ராங்கம் தொல்லியல் எச்சங்களை ஆராயாமல் உயிரியல் சான்றுகளை ஆராய ஆரம்பித்தார்.  நமது மூதாதையரின் பற்கள், எலும்புகளின் அமைப்பு அவர்கள் எவ்வகையான உணவை உட்கொண்டார்கள், அது எவ்விதமாக பதப்படுத்தப்பட்டிருந்தது என்பதைக் காட்டின. ஹோமோ செப்பியன்கள் காலத்திலேயே மனிதன் நெருப்பை பயன்படுத்த ஆரம்பித்து விட்டான் என்பதை அந்த ஆதாரங்கள் காட்டின. அது சுமார் 2 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு. அப்போதெல்லாம் மனிதன் கதகதப்பிற்காக, வெளிச்சத்திற்காக,  மற்ற கொடிய விலங்குகளிடமிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்வதற்காக அந்த நெருப்பைப் பயன்படுத்தி வந்திருக்க வேண்டும்.

சரி, அறத்தீ, உயிர்த்தீ, வேள்வித்தீ, தீயே நீ எமது உயிரின் தோழன் என்றெல்லாம் பாரதி உணர்ச்சிவசப்படும் அளவு தீ என்ன செய்தது?  அவர் உணர்ச்சிவசப்பட்டது சரிதானா? என்றால் வ்ராங்கம் சரிதான் என்கிறார்.  சமையல் உணவின் மதிப்பைக் கூட்டியது. அது நமது உடலமைப்பை, மூளையை, நமது நேர நிர்வாகத்தை, நமது சமூக உறவுகளை மாற்றியது என்கிறார். மிக முக்கியமாக, ஒரு வெளிப்புற சக்தியை நுகர்வோராக நம்மை மாற்றியது,  எரிசக்தியை நம்பி இருத்தல் என்ற இயற்கையுடனான ஒரு புதிய சமூக உறவை அது ஏற்படுத்தியது என்கிறார்.

இறைச்சி உணவு உட்கொள்ள ஆரம்பித்தது நீண்ட தூரம் பயணிக்கும் பலம், வலுவான உடல், அதிகரித்து வந்த அறிவாற்றல், அதிகரித்து வந்த ஒத்துழைப்பு ஆகியவற்றை ஏற்கனவே உருவாக்கியிருந்தது. நெருப்பு கண்டுபிடிக்கப்பட்டவுடன் மனிதனிடம் பல்வேறு மாறுதல்கள் உருவாகின. ஏனைய விலங்குளிடமிருந்து தப்பிக் கொள்ள மரத்தில் ஏறி உறங்க வேண்டிய அவசியம் இன்றி, மனிதன் தைரியமாக தரையில் தூங்க ஆரம்பித்தான். தீயை வைத்து பிற விலங்குகளை அச்சுறுத்தி விரட்டினான். மெல்ல மெல்ல மரமேறும் திறனை இழந்தான் என்பது வேறு விஷயம்.

சமைக்கக் கற்றுக் கொண்ட குரங்காக அவன் மாறியதும், இன்னும் இன்னும் அவனிடம் மாற்றங்கள்.  சமைத்த, பக்குவப்படுத்தப்பட்ட உணவை எளிதாக செரிமானம் செய்ய முடிந்தது.  அதுவரை உடலின் சக்தி முழுவதும் செரிமானத்திற்கே பெரிதும் பயன்படுத்தப்பட்டு வந்தன. இப்போது பற்களின் அமைப்பு மாறியது. செரிமான உறுப்புகளின் அளவு குறைந்தது. உடல் அவற்றிற்காக செலவிட்ட சக்தி இப்போது மூளைக்குச் சென்றது. மனிதனின் மூளை மேலும் மேலும் வளர்ச்சி பெற்றது. அளவிலும், சிந்தனைத் திறத்திலும்.  மற்றொரு முக்கிய மாற்றம் நேரம். கிட்டத்தட்ட மனிதனைப் போன்ற உடல் அமைப்பு உள்ள சிம்பன்ஸிகள்  தம் உணவைக் கடித்து, மென்று தின்பதற்கு தினமும் கிட்டத்தட்ட ஆறு மணி நேரங்களுக்கு மேல் செலவிட்டன. ஒரு பகல் பொழுதின் 42 சதவிகித நேரம்.  அதாவது இன்று நாம் டீ, காப்பி, சிகரெட், அரட்டை, கடலை போடும் நேரம் போக, அலுவலகத்தில் வேலை பார்க்கும் நேரம். வேறுவிதமாகச் சொன்னால், ஒரு வேலை நாள்.  சமைக்கப்பட்ட உணவு இந்த நேரத்தை மிச்சப்படுத்தின.  தீயினால் பக்குவப்பட்ட உணவு எளிதில் செரிமானமானது. உடலின் சக்தி மிச்சப்பட்டது. இப்போதும் கூட உடல் எடை குறைய பலரும் முயல் போல் கேரட், முட்டைக்கோஸ் என்று பச்சையாகச் சாப்பிடுவது,  பேலியோ டயட் போன்றவற்றிற்கெல்லாம்  இதுதான் காரணம்.  தெரு நாய், பூனைகளை விட வீட்டில் வளர்க்கப்படும் நாய், பூனைகள் குண்டாக இருக்கவும் இதுவே காரணம். கோவில் யானைகளுக்கு முகாம் நடத்தவும் இதுதான் காரணம்.  நாம் அவற்றிற்கு பக்குவப்படுத்தப்பட்ட, சமைத்த உணவைத்தானே தருகிறோம்.

உணவிற்கு ருசி கூடியது ஒரு கூடுதல் சாதகம். அந்தக் காலத்துக் காக்கை பாட்டியின் வடை திருடியதற்கும், இந்தக் கால காக்கைகள் காலையில் டீக்கடைக்காரர்கள் கடை வாசலில் சிதறிவிடும் மிக்சரைச் சாப்பிடுவதற்கும் இதுதான் காரணம். நிற்க,  சாப்பிடும் நேரம் கணிசமாகக் குறைந்ததால், மனிதன் வேறு பல உபயோகமான வேலைகளைச் செய்தான். குகை ஓவியம் தீட்டுவது, கவிதை எழுதுவது என்ற உபயோகமற்ற வேலைகளையும் செய்ய ஆரம்பித்து சந்தோஷமாகவும் இருக்க ஆரம்பித்தான்.  ஆனாலும் கூட, தீயினால் சுட்ட புண் உள்ளாறும் என்று எழுதுவதற்கு எத்தனையோ யுகங்கள் ஆகியிருக்கிறது ! உணவை நேரடியாக தீயில் போட்டு வாட்டியவன் தீயை வைத்து பானை சுட அறிந்தான். சமையல்கலை மேலும் முன்னேறியது. சமைத்த உணவில் சத்துகள் அதிகரித்தன. கிருமிகள் அழிந்தன. உணவை எளிதாக கடித்துத் தின்ன முடிந்தது. உணவை அடுத்த வேளைக்கு மிச்சம் வைத்துக் கொள்ள முடிந்தது. உப்புக்கண்டம், கருவாடு எல்லாம் கண்டுபிடிக்க முடிந்தது. புதிய சுவையான சமைக்கப்பட்ட உணவின் காரணமாக மனிதனின்  அறிவாற்றல் வளர்ந்ததோடு மட்டுமன்றி, அவனால் அதிக நேரம் ஓட முடிந்தது. அதிக நேரம் வேட்டையாட முடிந்தது.  ஆயுள் அதிகரித்தது.  உடல் முழுவதுமிருந்த ரோமம் உதிர்ந்து அழகாகவும் ஆனான். சமூக உறவுகள், குறிப்பாக ஆண், பெண் இடையிலான பந்தம் எல்லாம் அதிகரித்தன. அவன் வேட்டையாடிக் கொண்டு வந்ததை, அவள் சமைத்து வைக்க குடும்பம் என்ற அமைப்பும் மெல்ல மெல்லத் தோன்றியது. வெறும் மாமிசப் பட்சிணியாக இல்லாமல் மனிதன் சமைத்துச் சாப்பிடும் உயிரினமாக பரிணமித்தான்.  தீயின் குழந்தையான அவன் சமைக்கக் கற்றுக் கொண்ட குரங்கினமாக இருந்து மெல்ல, மெல்ல இன்றைய நவீன மனிதனானான்.

267 பக்க புத்தகம். அதில் 38 பக்கங்களுக்கு உதவிய நூல்களின் பட்டியல் அகர வரிசைப்படி தரப்பட்டுள்ளன என்பதைப் பார்க்க பிரமிப்பாக இருக்கிறது.  இந்தப் புத்தகத்தைப் படித்து முடித்த போது, உணவில் மாற்றம் ஏற்படுத்திய தீ மனிதனின் வழிபாட்டு முறைகளில் எப்படியோ முக்கிய இடம் பிடித்தது நம் நாட்டிற்கே உரிய ஒரு தனித்துவம். அது குறித்த ஆய்வுகள் ஏதேனும் உண்டா என்று தேடி வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். உயிர்த்தீ என்று சொன்ன பாரதியை அறிவுத் தீ என்றும் சொல்ல வைத்தது என்று யோசித்துக் கொண்டே இருந்தேன்.

ஆர்வமுள்ளோர் வாசிக்க – Catching Fire – How Cooking Made Us Human by Richard Wrangham

நன்றி – உயிர்மை மார்ச் 2025

❌