Normal view

Received before yesterday

கண்டெடுத்த வரிகள்

By:Para
13 April 2025 at 17:35

Pa Raghavan

ஒரு நாவலை எழுதியவன் எதிர்கொள்ளும் வினாக்களுள் ஆகக் கொடூரமானது, இந்நாவல் எதைப்பற்றிப் பேசுகிறது? சுருக்கம் என்ன?

எல்லா நாவல்களுக்கும் இது வரத்தான் செய்கிறது. தவிர்க்க முடியாது. வாசிப்பு என்னும் செயல்பாடு ஒரு கிரகத்திலும் மக்கள் இன்னொரு கிரகத்திலும் வசிக்கும் வினோதமான தீபகற்பத்தில் நாம் வாழ்வதில் உள்ள சிக்கல் இது.

கீழே உள்ள வரிகள், சலம் நாவலில் இருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை என் பதிப்பாளர் ராம்ஜி அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் தினமும் ஒன்றிரண்டாகப் பிரசுரித்து வந்தார். இந்த வரிகள் இந்நாவலின் தன்மையை ஓரளவு உங்களுக்குச் சுட்டிக்காட்டலாம். ஓரளவுக்குத்தான். நாவல் ஏப்ரல் 21 ஆம் தேதி வெளியாகிறது. முன்பதிவு செய்தோர் அனைவருக்கும் அன்றே அனுப்பிவைக்கப்பட்டுவிடும். படித்தவர்கள் பேசத் தொடங்கும்போது சர்சுதி மீண்டும் ஊற்றெடுத்துப் பாயத் தொடங்கும்.

Share

All rights reserved. © Pa Raghavan - 2022

யார் எழுதியதோ

29 June 2014 at 04:28

 

நீர்க்கரைகளிலே
தனிமையிலே திரிந்திருந்தேன்

மீன் வருமளவும்
முழுவதுமாய்ச் சலித்திருந்தேன்

நதிமேல் விழும் வானிலே
மிதந்தே வரும் தாரகை
அடையா உளவை உணர்ந்தேன் உணர்ந்தேன்

வான் தரையிறங்கும்
இரவுகளில்
உனை தொடர்வேன்

நான்
நடைபழகும் கவிதைகளின்
பொருள் பெறுவேன்

நிலவே விளக்கானவன்
அடியேன் தெருவாசகன்
மெதுவாய் நடந்தேன் தொடர்ந்தேன் தொடர்ந்தேன்

எதிரில் இருந்தும் கதவைத் திறவேன்
விடையை துறந்தேன் புதிரில் சுழன்றேன்

ஆண்
அறையினிலே
விடிவதில்லை சில பகல்கள்

பெண்
வரும் வரையில்
திறப்பதில்லை அதன் திரைகள்

விழியோ ஒரு சாளரம்
மனமோ சிறு தாவரம்
ஒளியாய் வளர்ந்தாய் கடந்தாய் கடந்தாய்

பின் குறிப்பு  #1 –  இதை எழுதிக் கொண்டிருக்கையில் தோன்றியது – சாதாரணமாகவே தமிழ் திரைப்பட நாயகர்களுக்கு வேலை spying தானோ?

பின் குறிப்பு #2 – பதிவின் தலைப்பை கேள்வியாகவே பாவித்தால் – பதில் – நானே தான்.

❌