Normal view

Received before yesterday

உதிரிகள்- ஏப்ரல் 2025 சிறுகதைகள்:

இருண்மை – ரம்யா அருண்ராயன்:

வெகுகாலம் சிறுகதைகள் எழுதிக் கொண்டிருப்பது போன்ற Flow ரம்யாவிற்கு வாய்த்திருக்கிறது.  விபச்சாரி இருந்த வீட்டில் இருப்பதன் சிரமங்களைத் தாண்டி, அவளுடன் ஜோதி மனதால் Connect செய்துகொள்வது அழகாக வந்துள்ளது.  நடந்ததெற்கெல்லாம் காரணம் கடைசிவரியில் ஒளிந்திருக்கிறது. நல்ல கதை.

பாதி நிலவு ஒளிரும் வளைவு –  நந்தாகுமாரன்:

பெண்கள் இளகும் நேரமென்று ஒன்று உண்டு.  அதை ஒருமுறை தவற விட்டால் திரும்பக்கிடைக்கும் வாய்ப்பு அரிது.  அந்நிய நிலத்தில்,  ஒருபாலின உறவு கொள்ளும் அந்நியப் பெண்ணுடனான Fragile relationship இந்தக்கதையில் நன்றாக வெளிப்பட்டிருக்கிறது.  நந்தாகுமாரன் இக்கதைக்காக மொழிநடையில் மாற்றம் செய்துள்ளார்.

மதியம் 1லிருந்து 2.30 வரை – சுபி:

சுபியின் கதை இரண்டாவது ஆண் பூனை போல அரவமின்றி நுழையும் சந்தர்ப்பம் குறித்த கதை.  அறுபதை நெருங்கும் ஆண் என்றாலும் பெண் ஏன் சம்மதம் தெரிவிக்க வேண்டும்!  அருகிருப்பது எட்டியேயானாலும் அல்லிக்கொடி படர்ந்தே தீரும். கதை கடந்தகாலமும் நிகழ்காலமுமாக மாறிமாறி வந்து பின் ஒன்று கலக்கிறது.  சுபிக்கு எழுத்தில் தயக்கமில்லை, அது பாராட்டப்பட வேண்டிய விஷயம். அப்பு மறையும் வரை பிரேமா காத்திருக்க வேண்டுமா என்ன?.  முதல் சிறுகதைத் தொகுப்பு வெளியீட்டுக்கு Advance congratulations.

நானென்ன வேற வயித்துலயா பிறந்தேன்?-வா.மு.கோமு:

அவரவர் குடும்பம் என்றான பின் அகப்பட்டதைச் சுருட்டும் கதை.  பழைய கரு,  ஏராளமான சென்டிமென்ட்ஸ்.

ஏதிலன்- ப்ரிம்யா கிராஸ்வின்:

ப்ரிம்யாவின் கதைகளில் வழக்கமாக இருக்கும் ஆழமும், அழுத்தமும் இந்தக்கதையில் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை.  கதை கடைசி டிவிஸ்டை நம்பி விரைகிறது.  ப்ரிம்யாவின் Benchmark என்று நான் நம்புவது இன்னும் உயரத்தில்.

ஞாபகார்த்தம்-  அரவிந்தன் பெருமாள்:

வாரமலருக்குக் கனகச்சிதமாகப் பொருந்தும் கதை.

அலங்கோலம் – சௌம்யா:

இன்றும் பெற்றோர் முன் தங்களுக்குள் முகத்தைப் பார்த்துப் பேசிக்கொள்ளாத தம்பதியர் இருக்கின்றார்கள்.  இருந்தாலும் நெருங்கி இருந்ததைப் பையன் பார்த்ததற்கு இவர்கள் இருவரும் Overreact செய்வது போல் தோன்றுகிறது.

திசை- சுஜாதா செல்வராஜ்:

சுஜாதாவின் கதை சாதிமாற்று மணத்தைத் தடுத்து அவசரமாக சுயசாதியில் செய்ததன் விளைவைச் சொல்கிறது.  சுஜாதாவால் இது போன்ற சீரியல் கதைகளைத் தவிர்த்து அழுத்தமான கதைகளை எழுத முடியும்.

தருக்கு- இராஜலட்சுமி:

படித்தால் மட்டும் போதுமா கதை.   இராஜலட்சுமி அழுத்தமான கதைகளை எழுத முயற்சிக்க வேண்டும்.

விசுவாசி- ராணி கணேஷ்:

ராணி அயல்நாடுகளில் வசிப்பவர்.  இந்தக்கதையின் protagonist

அந்நியதேசத்தவன்.  அவனது கலாச்சாரமும் சிந்தனைகளும் கதையில் வெளிப்படுகின்றன.  ராணி அயல் கலாச்சாரத்தை மையம் கொண்ட கதைகளைத் தொடர்ந்து எழுதலாம்.

கருப்பு வெள்ளை-மனோஜ்:

மனோஜின் கதையில் அனுபவமும், யதார்த்தமும் இணைந்து களைகட்டுகின்றன.  ஆமாம். மதுரையை இப்போது பார்த்தால் அந்நியமாகத் தான் தோன்றுகிறது, அவ்வளவு மாறிவிட்டது.  வேலவன் மட்டுமில்லை, மாறுதலை யார் ஏற்றுக் கொள்ளவில்லை என்றாலும் காலம் கரையோரம் ஒதுக்கிப் போய்விடும். Beautifully presented story.

பரிசுத்தம் – ராஜேஷ் வைரபாண்டியன்:

பரிசுத்தத்திற்கு எஸ்தரை விட நல்ல மனைவி கிடைத்திருக்கப் போவதில்லை, எஸ்தருக்கும் அப்படித்தான்.  எல்லாமிருந்தும் எதுவுமில்லாதொரு வாழ்வு.

உதிரிகள்- ஏப்ரல் 2025 சிறுகதைகள்:

இருண்மை – ரம்யா அருண்ராயன்:

வெகுகாலம் சிறுகதைகள் எழுதிக் கொண்டிருப்பது போன்ற Flow ரம்யாவிற்கு வாய்த்திருக்கிறது.  விபச்சாரி இருந்த வீட்டில் இருப்பதன் சிரமங்களைத் தாண்டி, அவளுடன் ஜோதி மனதால் Connect செய்துகொள்வது அழகாக வந்துள்ளது.  நடந்ததெற்கெல்லாம் காரணம் கடைசிவரியில் ஒளிந்திருக்கிறது. நல்ல கதை.

பாதி நிலவு ஒளிரும் வளைவு –  நந்தாகுமாரன்:

பெண்கள் இளகும் நேரமென்று ஒன்று உண்டு.  அதை ஒருமுறை தவற விட்டால் திரும்பக்கிடைக்கும் வாய்ப்பு அரிது.  அந்நிய நிலத்தில்,  ஒருபாலின உறவு கொள்ளும் அந்நியப் பெண்ணுடனான Fragile relationship இந்தக்கதையில் நன்றாக வெளிப்பட்டிருக்கிறது.  நந்தாகுமாரன் இக்கதைக்காக மொழிநடையில் மாற்றம் செய்துள்ளார்.

மதியம் 1லிருந்து 2.30 வரை – சுபி:

சுபியின் கதை இரண்டாவது ஆண் பூனை போல அரவமின்றி நுழையும் சந்தர்ப்பம் குறித்த கதை.  அறுபதை நெருங்கும் ஆண் என்றாலும் பெண் ஏன் சம்மதம் தெரிவிக்க வேண்டும்!  அருகிருப்பது எட்டியேயானாலும் அல்லிக்கொடி படர்ந்தே தீரும். கதை கடந்தகாலமும் நிகழ்காலமுமாக மாறிமாறி வந்து பின் ஒன்று கலக்கிறது.  சுபிக்கு எழுத்தில் தயக்கமில்லை, அது பாராட்டப்பட வேண்டிய விஷயம். அப்பு மறையும் வரை பிரேமா காத்திருக்க வேண்டுமா என்ன?.  முதல் சிறுகதைத் தொகுப்பு வெளியீட்டுக்கு Advance congratulations.

நானென்ன வேற வயித்துலயா பிறந்தேன்?-வா.மு.கோமு:

அவரவர் குடும்பம் என்றான பின் அகப்பட்டதைச் சுருட்டும் கதை.  பழைய கரு,  ஏராளமான சென்டிமென்ட்ஸ்.

ஏதிலன்- ப்ரிம்யா கிராஸ்வின்:

ப்ரிம்யாவின் கதைகளில் வழக்கமாக இருக்கும் ஆழமும், அழுத்தமும் இந்தக்கதையில் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை.  கதை கடைசி டிவிஸ்டை நம்பி விரைகிறது.  ப்ரிம்யாவின் Benchmark என்று நான் நம்புவது இன்னும் உயரத்தில்.

ஞாபகார்த்தம்-  அரவிந்தன் பெருமாள்:

வாரமலருக்குக் கனகச்சிதமாகப் பொருந்தும் கதை.

அலங்கோலம் – சௌம்யா:

இன்றும் பெற்றோர் முன் தங்களுக்குள் முகத்தைப் பார்த்துப் பேசிக்கொள்ளாத தம்பதியர் இருக்கின்றார்கள்.  இருந்தாலும் நெருங்கி இருந்ததைப் பையன் பார்த்ததற்கு இவர்கள் இருவரும் Overreact செய்வது போல் தோன்றுகிறது.

திசை- சுஜாதா செல்வராஜ்:

சுஜாதாவின் கதை சாதிமாற்று மணத்தைத் தடுத்து அவசரமாக சுயசாதியில் செய்ததன் விளைவைச் சொல்கிறது.  சுஜாதாவால் இது போன்ற சீரியல் கதைகளைத் தவிர்த்து அழுத்தமான கதைகளை எழுத முடியும்.

தருக்கு- இராஜலட்சுமி:

படித்தால் மட்டும் போதுமா கதை.   இராஜலட்சுமி அழுத்தமான கதைகளை எழுத முயற்சிக்க வேண்டும்.

விசுவாசி- ராணி கணேஷ்:

ராணி அயல்நாடுகளில் வசிப்பவர்.  இந்தக்கதையின் protagonist

அந்நியதேசத்தவன்.  அவனது கலாச்சாரமும் சிந்தனைகளும் கதையில் வெளிப்படுகின்றன.  ராணி அயல் கலாச்சாரத்தை மையம் கொண்ட கதைகளைத் தொடர்ந்து எழுதலாம்.

கருப்பு வெள்ளை-மனோஜ்:

மனோஜின் கதையில் அனுபவமும், யதார்த்தமும் இணைந்து களைகட்டுகின்றன.  ஆமாம். மதுரையை இப்போது பார்த்தால் அந்நியமாகத் தான் தோன்றுகிறது, அவ்வளவு மாறிவிட்டது.  வேலவன் மட்டுமில்லை, மாறுதலை யார் ஏற்றுக் கொள்ளவில்லை என்றாலும் காலம் கரையோரம் ஒதுக்கிப் போய்விடும். Beautifully presented story.

பரிசுத்தம் – ராஜேஷ் வைரபாண்டியன்:

பரிசுத்தத்திற்கு எஸ்தரை விட நல்ல மனைவி கிடைத்திருக்கப் போவதில்லை, எஸ்தருக்கும் அப்படித்தான்.  எல்லாமிருந்தும் எதுவுமில்லாதொரு வாழ்வு.

❌