Normal view

Received before yesterday

மனதில் மலர்ந்த மல்லிகை - 8

அத்தியாயம் 08​


அவர்களது ஊரான மங்களாபுரத்தில் பத்தாவது பரீட்சைக்கு அரசாங்கம் அனுமதி அளித்ததில் அனைவரும் மிகவும் மகிழ்ந்தனர். அதில் மிகவும் மகிழ்ந்தது மணிவண்ணன் தான். இந்த அனுமதி கிடைத்ததற்கு முழு காரணமும் மணிவண்ணன் தான்.

வெறும் தொடக்கப்பள்ளிகள் மட்டும் உள்ள அக்கம் பக்கம் உள்ள சிறிய ஊருக்கெல்லாம் சென்று, தங்கள் பள்ளியில் பிள்ளைகளை சேர்க்கும்படி பார்த்துக் கொண்டான். வெறுமனே சேர்ப்பதில் மட்டும் கவனத்தை செலுத்தாமல், அவர்கள் தொடர்ந்து பள்ளிக்கு வருவதற்கும் சரியான ஏற்பாடு செய்தான்.
சில...


Read more

மனதில் மலர்ந்த மல்லிகை - 5

அத்தியாம் - 05​



மணிமேகலையின் குழந்தைக்கு மல்லிகா என்று பெயர் சூட்டி மகிழ்ந்தனர் குடும்பத்தினர். அதில் மிகவும் மகிழ்ந்தது மாறன் தான். அவன் வைத்த செடியிலிருந்து மலர்ந்த மல்லிகைப்பூவை எடுத்துக் கொண்டு வந்து குழந்தையின் காதில் சொருகி விட்ட மாறன் "மல்லிப்பூ மாதிரியே இருக்கால்ல அத்தை" என்று அவள் கன்னத்தில் முத்தம் கொடுத்து அத்தையின் முகம் பார்த்தான்.​

அவன் செயலில் கூடியிருந்த மக்கள் அனைவரும் புன்னகைக்க, அங்கு இருந்த ஒரு வயசான பாட்டி "இப்பவே அவன் பொண்டாட்டிக்கு முத்தம்...​


Read more

மனதில் மலர்ந்த மல்லிகை - 4

அத்தியாயம் - 4​


இப்படியே நாட்கள் கடக்க ஏழாம் மாதத்தில் வளைகாப்பு செய்து மணிமேகலையை தங்கள் வீட்டிற்கு அழைத்துச் செல்லலாம் என்று பேசுவதற்காக மணிவண்ணன் மனைவியையும் குழந்தையும் அழைத்துக் கொண்டு கதிர்வேலுவின் வீட்டிற்கு வந்தான்.​

இரண்டு வயதான மாறன் வீட்டில் அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருக்க, தங்கள் வீட்டின் பெரியவரான சாமிகண்ணு முன் "மாமா, தங்கச்சிக்கு வளைகாப்பு செய்யலாம்னு நினைச்சு இருக்கேன். அடுத்த வாரம் ஏழாம் மாதம் முடியுது. அதுக்குள்ள ஒரு நல்ல நாளில் வளைகாப்பு...​


Read more

மனதில் மலர்ந்த மல்லிகை - 3

அத்தியாயம் 03

மணிமேகலை தன்னை மணப்பதாக கூறியதும், முதலில் அதிர்ந்தாலும் அவனுக்குள் மகிழ்ச்சி வெல்லம் பெருகியதை உணர்ந்தான் கதிர்வேல்.​

இருந்தாலும் "அவள் ஒரு டிகிரியாவது படிக்கட்டுமே அப்பா" என்று தந்தையை பார்த்தான்.​

சற்றென்று மணிமேகலை "அதெல்லாம் முடியாது, என்னால் படிக்க முடியாது" என்று பிடிவாதமாக மறுத்துவிட்டாள்.​

இதற்கு மேலும் அவளை வற்புறுத்த விரும்பாத பெரியவர்கள், "அவள் சொல்லுவது போல் முதலில் கல்யாணம் செய்து...​


Read more

மனதில் மலர்ந்த மல்லிகை - 1

அத்தியாயம் 01

கார்த்திகை மாத காலை நேரம், தூரத்தில் எங்கோ பலத்த மழை பெய்ய, வீடும், வாசலும் குளுமையாக இருந்தது. நேற்று இரவு மலர்ந்த மல்லிகையும் ஜாதி மல்லியும், தன் வாசனையை வீட்டிற்குள்ளும் பரப்பிக் கொண்டிருந்தது. இதை எதையும் உணராமல், எங்கோ தூரத்தில் உள்ள பாறையை வெறித்துப் பார்த்தபடி கண்களில் கண்ணீர் வழிய அமர்ந்திருந்தார் மணிமேகலை.

பக்க வாயிலில் அமர்ந்து இருந்த மணிமேகலையின் நிலையில் சற்றும் குறையாத அதே நிலையில், முன் பக்க வாயிலில் அமர்ந்திருந்தனர் அவரது கணவன் கதிர்வேலும்...


Read more
❌