Normal view

Received before yesterday

சிக்கிக் கொண்ட இராஜகுமாரன்

சத்ர சாமரங்கள் இன்றி, இந்த அறிவிப்பு முடியும் முன்னேயே தனியாக உள்ளே வந்து விட்ட சகோதரனைக் கண்ட ஹர்ஷன் திகைத்தான்.  பல நாட்களாக பராமரிப்பின்றி விட்ட கேசமும்,  நீளமான உடையும்,  எந்த விதமான அலங்காரமோ, ஆசமனம் என்பதை விட்டவனாக,(தினசரி செயல்கள் எதுவுமே செய்யாமல் இருந்தான் என்பது சொல்லப் படுகிறது.) பல நாட்களாக நீராடலோ, சரியான உணவோ, நல்ல தூக்கமோ இல்லாமல் சிவந்த கண்களும், தன் அந்தரங்க சேவகர்கள் மட்டுமே உடன் இருக்க சாதாரண பிரஜை போல உடல் முழுவதும் பிரயாண களைப்பும் தூசி படிந்த உடலுமாக, வசுந்தரா- பூமி, ராஜ்யம்,  அதற்கு பொறுப்பான மூத்தவன், ஹூணர்களை வெற்றி கொண்டு வந்திருக்கிறான்.

தந்தையின் மறைவும் தமையனை தேடுதலும்

ஒரு நாள் காட்டுத் தீ ஜுவாலையாக பரவி வருவதைக் கண்டு திடுக்கிட்டான்.  உண்மையா கனவா?  ஒரு பெரிய சிங்கமே அந்த ஜுவாலையில் மாட்டிக் கொண்டு தவிப்பதைக் கண்டான்.  அதே சமயம் குட்டியை காக்க பெண் சிங்கம் வேகமாக வந்து அதனுள் குதித்து குட்டியை தூக்கி வெளியில் போட்டது.  குட்டி பிழைத்து எழுந்து நின்றது.  ஆனால் தாயான பெண் சிங்கம் தன்னை காத்துக் கொள்ள இயலாமல் தீயின் ஜுவாலையில் மடிந்தது.   ஹர்ஷன் திகைத்தான்

தேவ லோகப் பெண்களும் அந்தப்புரமும்

மிருக ராஜனின் மகன் போல- சிங்கத்தின்  குட்டி – கூட்டில் அடைத்து இருப்பது போல எங்கும் ஆயுதம் தரித்த  காவல் வீரர்கள் சுற்றி நின்றனர்.   ஹர்ஷன், தாத்ரியின் கை விரலைப் பற்றிக் கொண்டு ஐந்தடி வைத்தான்.  அந்த சமயம் மூத்தவன் ராஜ வர்தனன் ஆறாவது வயதை அடைந்தான். மகாராணி ராஜ்யத்தின் செல்வத்தை மேலும் கூட்டுவது போல அடுத்து கருத் தரித்தாள். பகவான்  ஸ்ரீமன் நாராயணன் பூ தேவியை தாங்கியது போல என்று வர்ணிக்கிறார் கவி.  பின்னால் ராஜஸ்ரீ என்றே அழைக்கப்பட இருக்கும்  பெண் மகவை கருவுற்றாள். 
❌