Normal view

Received before yesterday

தனித்துவமான எழுத்தும் தளராத உழைப்பும்

‘மனைமாட்சி’ அவருடைய மற்றொரு பெரிய நாவல். அதன் முதல் வரைவில்  ஆயிரத்து நானூறு பக்கத்திற்கும் மேல் இருந்தது. அதை எனக்குத் தெரிந்து மூன்று நான்கு தடவை திரும்பத் திரும்ப மாற்றி எழுதினார். கணினியில்தான் என்றாலும்  இதுவெல்லாம் என்னால் கற்பனை கூட செய்ய முடியாத உழைப்பு. சமீபத்திய காணொளி வாயிலான நேர்காணல் ஒன்றில் தனது அலுவலகப் பணி நெருக்கடிகளுக்கப்பாலும் தன்னால் எப்படி இவ்வளவு அதிகமாகவும் தீவிரமாகவும் எழுத முடிகிறது என்பதைப் பற்றி விரிவாக விளக்கினார்.

ஐவர் – தமிழின் நம்பிக்கைக்குரிய எழுத்தாளர்கள்

நாவலில் அல்புனைவுத் தன்மைகள் அதிகம் உள்ளன.  டிவிட்டர் நாவல் வந்து விட்டது.  சென்ற வருட புக்கர் பரிசை வென்றது முழு உருவக நாவல். யுத்திகளில் பல மாறுதல்கள் செய்து நூல்கள் வருகின்றன.  போரா சுங் அபத்தவியலை மையமாகக் கொண்ட சிறுகதைத் தொகுப்பைச் சமீபத்தில் வெளியிட்டார்.  ரெபெக்கா யாரோஸ்  காதல்கதையையும் பான்டஸியையும் இணைத்து Romantasy என்ற புதுவகைமையை வெற்றிகரமாக அறிமுகப்படுத்தியுள்ளார்.  நம்மைச் சுற்றி ஏராளமான மாறுதல்கள் நடந்து கொண்டிருக்கின்றன.  

முண்டியடித்து முன்னிறுத்த விரும்பாத தலைமுறையின் அடையாள சக்தி

எங்கும் தம்மை முண்டியடித்து முன்னிறுத்த விரும்பாத தலைமுறையின் இன்னொரு அடையாள சக்தியென குறிப்பிடப்படும் எம்.கோபாலகிருஷ்ணன் தமிழிலக்கியச் சூழலில் முப்பதாண்டுகளாக செயல்பட்டு வருபவர். அம்மன் நெசவு , மணல்கடிகை, மனைமாட்சி, தீர்த்தயாத்திரை, வேங்கைவனம் எனத் தொடரும் நாவல் வரிசைகளால் தமிழின் முக்கிய நாவலாசிரியர்களில் ஒருவராகக் கொண்டாடப்படும் எம்.கோபாலகிருஷ்ணன், கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், மொழிபெயர்ப்பு என இலக்கியத்தின் சாத்தியமான அனைத்து வடிவங்களிலும் தன்னைத் தொடர்ந்து வெளிப்படுத்திக் கொண்டேயிருக்கிறார். 

விழியங்கள் – புனைவு வனம் + வினா வனம்

புனைவு வனம் எழுத்தாளர் கணேஷ் ராம் உடன் ‘தெப்பம்’ குறுநாவல் குறித்த உரையாடல்: சொல்வனம்.காம்: ஆசிரியரை சந்திப்போம் சொல்வனம்.காம்: புனைவு வனம்: எழுத்தாளர் ஷங்கர் பிரதாப் உடன் சந்திப்பு: ‘உயிர்வளி’ குறித்த உரையாடல் எழுத்தாளர் பாலாஜி ராஜு – Writer Balaji Raju Short Stories: Review and "விழியங்கள் – புனைவு வனம் + வினா வனம்"
❌