Normal view

Received before yesterday

டுடன்காமுன் கல்லறை 3: கல்லறை முன்னறைப் பொக்கிஷங்கள் - பொன். மகாலிங்கம்

27 May 2025 at 09:21

டுடன்காமுன் கல்லறைச் சுவரைத் துளையிட்டுப் பார்த்த முதல் காட்சியில், பசுவின் தலையைப் போன்ற தோற்றத்தோடு கூடிய, உயரமான ஈமச்சடங்குப் படுக்கையும், ஏராளமான பெட்டிகளும் சின்னச் சின்ன நாற்காலிகளும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்களைக் கொண்ட பெட்டிகளும் தெரிந்தன கார்ட்டருக்கு. டுடன்காமுன் கல்லறையின் இரண்டாவது நுழைவாயில் தடுப்புச் சுவர் முழுமையாக உடைக்கப்பட்டது 1922ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26ஆம் தேதி. பெங்குவின் பதிப்பகம் வெளியிட்ட ஒரு புத்தகம், இந்தத் தேதி நவம்பர் 29 என்கிறது. இருந்துவிட்டுப் போகட்டும். இரண்டாவது தடுப்புச் சுவரை உடைத்து உள்ளே போனதும், கட்டுக்கடங்காத ஆர்வத்தில் எதையும் எடுத்துப் பார்த்து இடம் மாற்றிவிடவில்லை கார்ட்டர். முதலில், கல்லறைக்கு உள்ளே மின்விளக்கு வசதிக்கு ஏற்பாடு செய்து, ஒவ்வொன்றாகப் படம் எடுத்துப் பதிவு செய்தார். 

டுடன்காமுன் சிலையுடன் கட்டுரையாசிரியர்

ஒவ்வொரு பொருளுக்கும் இலக்கமிட்டு அந்த எண்ணோடு சேர்த்துப் படங்களைப் பதிவு செய்தார். எந்தப் பொருள், எந்தத் திசையில், என்ன நிலையில் இருந்தது என்பது, கார்ட்டருக்கு மிகவும் முக்கியம். அது, பல தகவல்களைச் சொல்லாமல் சொல்லும். கல்லறையில் இருந்த பெரிய பொருள்கள் அனைத்திலுமே டுடன்காமுனின் பெயர் பொறிக்கப்பட்டிருந்ததாகக் கூறுகிறார் கார்ட்டர். பெரும்பாலான சிறிய பொருள்களிலும்கூட பெயர் பொறிக்கப்பட்டிருந்தது.

டுடன்காமுன் கல்லறை 2 : அகழ்ந்தெடுக்கப்பட்ட அதிசயம்- பொன். மகாலிங்கம்

5 April 2025 at 07:42

டுடன்காமுன் கல்லறையைத் தேடிக் கண்டுபிடிக்கும் பணிக்குத் தன்னை ஒப்புக்கொடுத்துவிட்ட கார்ட்டருக்கு, முதலில் தோன்றியது மலைப்பு. எங்கிருந்து தோண்டத் தொடங்குவது என்பதைத் தீர்மானிக்க முடியாமல் திண்டாடினார் அவர். குப்பையாகக் கிடக்கும் ஒரு வீட்டைச் சுத்தம் செய்யக் கிளம்பினால், எங்கிருந்து தொடங்குவது என்று திணறுவோமே! அதுபோல இருந்தது, கார்ட்டரின் நிலை அன்று. மலைத்துப்போய் நின்றுவிட முடியுமா ? செய்யவேண்டிய வேலை, மலையாய்க் குவிந்து கிடக்கிறதே. ஏற்கெனவே மன்னர்களின் பள்ளத்தாக்கில், தோண்டித் துருவி ஆய்வு நடத்தியவர்கள் அள்ளிக்கொட்டிய குப்பையே, மலைபோல் குவிந்து கிடந்தது.

பிரமிடைப் போன்ற தோற்றமுள்ள குன்றும் மன்னர்களின் பள்ளத்தாக்கும்

டுடன்காமுன் கல்லறை 1 - கார்ட்டர் அறிமுகம், பொன். மகாலிங்கம்

12 January 2025 at 10:49
டுடன்காமுன் (இளவயது)

வரலாறு விசித்திரமானது. யாரை வரலாற்றிலிருந்து துடைத்தொழிக்க வேண்டுமெனச் சிலர் விரும்பினார்களோ அதற்கு நேர்மாறாக நடப்பதுண்டு. தனக்குப் பிடிக்காதவர்களை இருந்த இடம் தெரியாமல் நசுக்கி அழித்து ஒழிக்க வேண்டுமெனக் கங்கணம் கட்டிக்கொண்டு செயல்பட்ட ஆட்சியாளர்கள் உண்டு. ஆனால், யாரை மறைக்க விரும்பினார்களோ அவர்கள் ஒன்றுமே செய்யாமல் புதுவரலாறு படைப்பதுண்டு. சில ஆயிரம் ஆண்டுகள் கழித்து!... ஆசான் ஜெமோவின் வார்த்தைகளில் சொன்னால், “வீழ்வதனூடாக எழுந்தவர்கள் வரலாற்றில் எப்போதுமுண்டு”.

எகிப்திய வரலாற்றில் அப்படிப்பட்ட அடையாள அழிப்புக்கு ஆளான மாமன்னர்களில் ஒருவர் டுடன்காமுன். அவரது அப்பாவுக்கும் அதே கதிதான். ஆனால், மற்ற எல்லாரைக் காட்டிலும் அவர்களே இன்று ஆக அதிகமாகப் பேசப்படுகின்றனர். டுடன்காமுனின் தந்தை அக்கினாட்டன், பல நூற்றாண்டுகளாகப் புழக்கத்திலிருந்த பழைய சமயத்தைக் கைவிட்டு ஆதவனைக் கடவுளாக்கித் திடீரென ஒரு புதிய சமயத்தைத் தோற்றுவித்தார். எண்ணற்ற கடவுள்களை வணங்கும் எகிப்தின் பாரம்பரியப் பழக்கத்தைக் கைவிட்டு, ஆட்டன் என்னும் ஒற்றைச் சூரியக் கடவுளை வணங்கும் புதிய சமயத்தை உருவாக்கினார்.

❌