Normal view

Received before yesterday

உலகப் புத்தக நாள்: ஏப்ரல்-23 – புத்தாக்கக் கூடங்கள்

அடப்பாவிகளா? சேர்த்துப்படிங்க கடி புரியும்!

“அது ஒரு சிகப்புக் கலர் புத்தகம் சார்!
பெயரை மறந்துட்டேன்!’னு எத்தனை தடவை நூலகரை தொந்தரவு பண்ணிருப்போம்.

Over Booking இங்க பிரச்சினையே இல்லை!

Pleasure your Shelf
என்றால் உங்களை நீங்கள் மகிழ்ச்சிப்படுத்திக் கொள்ளுங்கள் என்று பொருள்.
இங்கே இருப்பது
Pleasure your (Book) Shelf!

Dino‘Saurs’ இல்லாட்டி என்ன?
The‘Saurus’ இருக்கே!
(Thesaurus ஒரு சொல்லுக்குத் தொடர்புடைய பல சொற்களைத் தரும் ஏடு. ‘‘இணைப் பொருள் சொற் களஞ்சியம்’’ என்று பொருள்)

‘‘ரசனைல்ல!’’ இருந்தாலும் இவ்வளவு உயரம் too much!

Mystery — மர்மக்கதை புத்தகங்கள்தான் — சரி! அதுக்காக என்ன புத்தகம்னு கூடவா தெரிஞ்சுக்க முடியாம திருப்பி வைப்பீங்க?

எலக்ட்ரானிக் கருவிகளைத் தவிரவும் உரிய பொழுதுபோக்குக் கருவிகள் இருக்கு…. உள்ளே வாங்க!

புத்தக வாசிப்பு என்பது அறிவுக்கும், அமைதிக்கும், புரிதலுக்கும் வழிவகுக்கக்கூடியது. புத்தக வாசிப்பாளர்கள் அதற்குள்ளேயே அமிழ்ந்து போகக்கூடியவர்கள் அல்ல! ரசனைக்குரியவர்களும்கூட!
நூலகங்களை தலைப்பு வாரியாக அடுக்கி வைத்திருக்கும் கூடங்களாக இல்லாமல், இங்கே எவ்வளவு ரசனையாக நூலக வளாகங்களை வைத்திருக்கிறார்கள் பாருங்கள்!

The post உலகப் புத்தக நாள்: ஏப்ரல்-23 – புத்தாக்கக் கூடங்கள் appeared first on Periyar Pinju - Children magazine in Tamil.

நூலகத்திற்குள் ஓர் ஆந்தை

28 April 2025 at 10:35

உலகப் புத்தக தினத்தை முன்னிட்டு எல்லா ஆண்டும் கன்னிமரா நூலகத்தின் தொல் பகுதி திறக்கப்படும். ஒருவாரம் மட்டும் திறந்திருக்கும். இந்த ஆண்டு 23 -26ஆம் தேதி நூலகத்தின் பழைய பகுதி திறக்கப்பட்டு இருந்தது. 24.04.2025...

The post நூலகத்திற்குள் ஓர் ஆந்தை first appeared on Her Stories.

உலகப் புத்தக நாள் வாழ்த்து – 23-04-2025

எல்லோருக்கும் இனிய உலகப் புத்தக நாள் வாழ்த்துகள்

ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 23 ஆம் தேதி, யுனெஸ்கோ உலகப் புத்தக நாளாகக் கொண்டாடுகின்றது. புத்தக வாசிப்பை ஊக்குவிப்பதும்  பதிப்புரிமை, காப்புரிமை ஆகியவற்றை ஊக்குவிப்பதும் இந்நாளின் முக்கிய நோக்கங்கள்.

ஏழைமை, பசி, பட்டினி, சமத்துவமின்மை போன்று உலகளவில் நிலவும் பிரச்சினைகளுக்கு எதிராக விழிப்புணர்வு ஊட்டவும், அவற்றைக் களைய நடவடிக்கை எடுக்கவும் இலக்கியம் சிறந்த பங்காற்ற முடியும் என்பதை வலியுறுத்தும் விதமாக, “The role of literature in achieving the Sustainable Development Goals (SDGs)” என்பதை இந்த 2025ஆம் ஆண்டுக்கான கருப்பொருளாகத் (Theme) தேர்ந்தெடுத்துள்ளனர். இப்பிரச்சினைகளுக்கு நிலையான தீர்வு காண்பதிலும், குறிக்கோள்களை அடைவதிலும் இலக்கியம் சிறப்பான பங்காற்ற முடியும் என்பதை இந்தக் கருப்பொருள் உறுதி செய்கிறது.    

ஸ்பெயினின் கட்டலோனியாவில், ஏப்ரல் 23 ஆம் தேதி கொண்டாடப்படும் செயிண்ட் ஜார்ஜ் தினத்தில், காதலர்களும், நண்பர்களும், காதலர் தினத்தைப் போல ரோஜா மலர்களையும், புத்தகங்களையும் ஒருவருக்கொருவர் பரிசளித்துக் கொள்ளும் வழக்கம் இருந்தது.

துவக்கத்தில் ஆண்கள் பெண்களுக்கு ரோஜா பூக்களையும், பெண்கள் ஆண்களுக்குப் புத்தகங்களையும் பரிசளித்தனர். நாளடைவில் பெண்களுக்கு ரோஜா பூக்களுடன், புத்தகங்களையும் பரிசளிக்கும் பழக்கம் ஏற்பட்டு, தற்காலத்திலும் அது தொடர்கிறது.

1923 ஆம் ஆண்டு புத்தக விற்பனையை அதிகரிக்கும் நோக்கத்துடன், புத்தக விற்பனையாளர் ஒருவர், இந்நாளைப் புத்தக தினமாகக் கொண்டாடத் துவங்கினார். டான் குயிக்ஸாட்(Don Quixote)நாவலை எழுதிய, ஸ்பானிஷ் எழுத்தாளர், செர்வாந்தே (Cervantes)இறந்த நாளும், ஷேக்ஸ்பியர் இறந்த நாளும் ஏப்ரல் 23. இந்நாளைப் புத்தக நாளாகத் தேர்ந்தெடுக்க, இதுவும் ஒரு காரணம். புத்தக விற்பனையையும், வாசிப்பையும் ஊக்குவிக்க, காட்டலோனியாவில் துவங்கப்பட்ட இந்தப் புத்தக நாளை, 1965 ஆம் ஆண்டு, யுனெஸ்கோ உலகப் புத்தக நாளாக ஏற்றுக் கொண்டது.

“அறிவைப் பரப்பவும், உலகெங்கும் உள்ள பல்வேறு கலாச்சாரங்கள் பற்றிய விழிப்புணர்வைப் பெறவும், புரிதல், சகிப்புத்தன்மை போன்றவற்றின் மூலம், மனிதர்களின் ஒழுக்கத்தை மேம்படுத்தவும், புத்தகம் ஒரு சிறந்த கருவியாக உள்ளதால், ஏப்ரல் 23 உலக புத்தக தினமாகக் கொண்டாடப்படும்,” என்று யுனெஸ்கோ இயற்றிய தீர்மானம் கூறுகின்றது.

உலகப் புத்தக நாளைக் கொண்டாட இன்று பதிப்பகங்கள் புத்தக விலையில் சிறப்புத் தள்ளுபடி அறிவித்துள்ளன. இந்த உலகப் புத்தக நாளில் புத்தகங்கள் வாங்கி வாசிப்போம்;அறிவைப் பெருக்குவோம்; செல்போன்களில் மூழ்கியுள்ள குழந்தைகளுக்குக் கதைப் புத்தகங்கள் வாங்கிக் கொடுத்து, வாசிப்புச் சுவையை அறிமுகப் படுத்துவோம்! வாசிப்பை நேசிப்போம்! வாசிப்பைச் சுவாசிப்போம்!

இனிய வாழ்த்துகளுடன்,

ஆசிரியர்.

The post உலகப் புத்தக நாள் வாழ்த்து – 23-04-2025 first appeared on சுட்டி உலகம்.

அனைத்துலகக் குழந்தைகள் புத்தக நாள்-2025

அனைத்துலகக் குழந்தைகள் புத்தக நாள் ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 2ஆம் தேதி உலகமுழுதும் கொண்டாடப்படுகின்றது. 1967 ஆம் ஆண்டு முதல் டென்மார்க்கைச் சேர்ந்த சிறுவர் எழுத்தாளர் ஹான் கிறிஸ்டியன் ஆண்டர்சன் (Hans Christian Andersen 1805-1875) பிறந்த நாளான ஏப்ரல் 2 ஆம் தேதி இந்த நாள் கொண்டாடப்படுகின்றது.

ஹான் கிறிஸ்டியன் ஆண்டர்சன் எழுதிய தேவதை கதைகள் உலகப்புகழ் பெற்றவை. இவரது கதைகள் 120 மொழிகளில் மொழியாக்கம் பெற்றுள்ளன. இவர் கதைகளில் ‘த அக்ளி டக்ளிங்’ (The Ugly Duckling) என்ற வாத்துக்குஞ்சு கதையை நாமெல்லாருமே படித்திருப்போம். இவருடைய நூல்களில் லிட்டில் மெர்மெய்டு (Little Mermaid) என்று சொல்லப்படும் குட்டிக் கடற்கன்னி கதை மிகவும் பிரபலமானது. இது தமிழில் எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் மொழிபெயர்த்து வானம் பதிப்பகம் மூலம் வெளிவந்துள்ளது.

இதன் கதைச் சுருக்கம்:- கடற்கன்னி ஒருத்தி இளவரசன் மீது காதல் கொள்கிறாள். கடலில் இருந்தால் அவளுக்கு 300 ஆண்டுகள் மரணமில்லை. ஆனால் அவள் தனது களங்கமில்லாத அன்புக்காக மரணமில்லா வாழ்வைத் துறந்து கரையேறத் துணிகிறாள். அவள் மீன் உடலில் இருக்கும் வாலுக்குப் பதிலாக. கரையில் நடக்க அவளுக்குக் கால்கள்  தேவைப்படுகின்றன. மந்திரவாதியிடம் தன் இனிமையான குரலைப் பறிகொடுத்து அதற்குப் பதிலாகக் கால்களைப் பெறுகின்றாள். எனவே அவளால் பேசவோ பாடவோ முடியாது. இளவரசன் அவள் காதலை ஏற்றுக் கொண்டானா? அவளைத் திருமணம் செய்தானா? என்பது மீதிக் கதை. மிகவும் நெகிழ்ச்சியான கதையிது.

இந்தக் குட்டி கடற்கன்னிக்காக டென்மார்க் கோபன்ஹேக் துறைமுகத்தில் ஒரு பாறையின் மீது கடற்கன்னி உட்கார்ந்திருப்பது போல் சிலை செய்து வைத்திருக்கிறார்கள். இதிலிருந்து இந்தக் கதாபாத்திரத்தின் மீது அந்நாட்டு மக்களுக்கு இருக்கும் அன்பை நாம் புரிந்து கொள்ளலாம்.

‘சிறார் புத்தகங்களுக்கான அனைத்துலக போர்டு’ (International Board on Books for Young people) (IBBY) என்ற தன்னார்வல அமைப்பு, லாப நோக்கமின்றி  அனைத்துலகக் குழந்தைகள் புத்தக நாளைக்  கொண்டாடுவதில், முக்கிய பங்கு வகிக்கிறது. பல்வேறு நாடுகளில், இதன் கிளைகள் பரவியுள்ளன. ஒவ்வோர் ஆண்டும் ஒவ்வொரு நாட்டுக் கிளை, இந்த நாளைக் கொண்டாடுவதற்கான பொறுப்பை ஏற்கின்றது. அந்த நாட்டின் முக்கிய  எழுத்தாளர் ஒருவர், குழந்தைகளுக்கான செய்தியை எழுதி வெளியிடுகின்றார்.

இந்நாளைக் கொண்டாடுவதற்கான முக்கிய நோக்கங்கள்:

குழந்தைகள் நூல்கள் மூலமாக, உலகளாவிய புரிந்துணர்வை ஏற்படுத்துதல்;

உலகின் அனைத்துப் பகுதியிலுமுள்ள எல்லாக் குழந்தைகளுக்கும் தரமான புத்தகங்கள் கிடைப்பதை உறுதி செய்தல்;

தரமான சிறார் நூல்களை வெளியிடுவதற்கும், அவற்றைக் குழந்தைகளிடம் கொண்டு செல்வதற்கும், ஊக்கப்படுத்துதல்; (குறிப்பாக வளரும் நாடுகளில் இதைச் செயல்படுத்துதல்);

குழந்தைகளிடம் புழங்குபவர்களுக்கும், சிறார் இலக்கியத்தில் ஈடுபடுபவர்களுக்கும் ஆதரவும், பயிற்சியும் அளித்தல்;

சிறார் இலக்கியத்தில் ஆய்வை மேம்படுத்துதல்; ஐநா மன்ற விதிகளின் படி குழந்தைகளின் உரிமையை உறுதி செய்தல் ஆகியன.     

இந்த ஆண்டு நெதர்லாந்து இந்நாளைக் கொண்டாடுவதற்குப் பொறுப்பேற்று உள்ளது. கற்பனையின் சுதந்திரம் அதாவது The freedom of imagination”. என்பதை இந்தாண்டுக்கான கருப்பொருளாக (theme) தேர்வு செய்துள்ளார்கள்.

நெதர்லாந்து நாட்டின் சிறார் எழுத்தாளர் ரயன் விஸர் (Rian Visser)  என்பவர் எழுதிய கவிதையின் கடைசி வரியை மேற்கோளாகத் (Motto) தேர்ந்தெடுத்துள்ளனர்.

“Make pictures for my poem; and please feel free; these words belong to you even though they came from me.”

“என்னிடம் இருந்து இந்த வார்த்தைகள் வந்திருந்தாலும் அவை உன்னுடையவை தாம்”

இந்த நாளை எப்படி கொண்டாட வேண்டும் என்று சொல்லியுள்ளார்கள்?

குழந்தைகள் அவர்களுக்குப் பிடித்த கதாபாத்திரம் போல வேடம் அணிந்து பள்ளிக்கு வருதல்; ஒருவருக்கொருவர் புத்தகங்களை மாற்றிக் கொண்டு புது வகை புத்தகங்கள் வாசிப்பது; புதிய எழுத்தாளர்களை வாசிப்பது;

வகுப்பில் பிடித்த புத்தகத்தைக் குறித்து விநாடி வினா நடத்துவது; சிறந்த புத்தகங்களை வகுப்பு சுவரில் பரிந்துரை செய்வது;

கதை மூலம் கிடைக்கும் வெவ்வேறு செய்திகளைக் குழந்தைகளைக் கண்டுபிடிக்கச் சொல்லுதல்; குழந்தகளுக்குப் பிடித்த புத்தகங்கள், அவற்றின் வகை, எழுத்தாளர்கள், அதன் கருப்பொருள் ஆகியவை குறித்துக் கலந்துரையாடுவது;

இது வரை வாசிக்காத நாடுகளில் உள்ள எழுத்தாளர்கள் குறித்தும், வெவ்வேறு கலாச்சாரப் பின்னணி கொண்ட மக்கள் குறித்தும் தெரிந்து கொள்ளுதல்;

இப்படிப் பல்வேறு விதமாக இந்தக் கொண்டாட்டம் அமையலாம். குழந்தைகளுக்குப் புத்தகத்தை அறிமுகப்படுத்துவதாகவும், வாசிப்பின் அருமையை உணர்த்துவதாகவும் இந்நாள் அமைய வேண்டும் என்பதே அடிப்படை நோக்கம்.

குழந்தைகள் அனைவருக்கும் இனிய குழந்தைகள் புத்தக நாள் வாழ்த்துகள்!

அன்புடன்,

ஆசிரியர்,

சுட்டி உலகம்.

The post அனைத்துலகக் குழந்தைகள் புத்தக நாள்-2025 first appeared on சுட்டி உலகம்.

❌