சொல்வனம் கவிதைகள் சிறப்பிதழ்
30 April 2025 at 16:57
நுண்ணுணர்வும் கற்பனை விரிவும் உள்ள இலக்கியவாசகர்கள் எப்போதுமே பற்றிக்கொள்ளக் காத்திருக்கும் சருகு போன்றவர்கள். அப்படி சிலரையேனும் இந்த இதழின் கவிதைகள் ஈர்த்தால், அதன் வாயிலாக கவிதைகளுடனும் கவிஞர்களுடனும் அவர்கள் தொடர்ந்து பயணிக்கும் வாய்ப்பு அமைந்தால் சொல்வனத்தின் இந்த முயற்சி சிறு பலனை எட்டியது என்று கொள்ளலாம். இது இரு இதழ்களால் மட்டுமே சாத்தியமாகக்கூடுவதல்ல, தொடர் முயற்சிகள் வாயிலாகவே அடையக்கூடுவது.