Normal view

Received before yesterday

தெருக்கூத்தும், ஊதுவத்தி வாழ்க்கையும் – ம. பரிமளா தேவி

28 May 2025 at 04:30
வட தமிழகம்தான் தெருக்கூத்துக் கலையின் பிறப்பிடமாக இருந்திருக்கின்றது. ஆனால், சில தெருக்கூத்துக் குழுக்களும் கூத்துக் கலைப் பயிற்சி மன்றங்களும் மட்டுமே இன்று இயங்கி வருகின்றன. தெருக்கூத்துக் கலையின் மீது மக்களுக்கு இருந்துவந்த பற்று இன்று குறைந்துவிட்டது. தெருக்கூத்தின் இடத்தை ஆடல் பாடல் நிகழ்ச்சி பிடித்துவிட்டது. சினிமாவுக்கான அடித்தளமாக இருந்ததுவும் தெருக்கூத்துதான் என்பதை நினைவில் கொள்ளுங்கள். தொண்டை மண்டலத்தின் பல கூத்துக் கலைஞர்களும் மேடை நாடகக் கலைஞர்களும் மண்ணோடு மண்ணாக மக்கிப்போன பிறகு, அவர்களின் நினைவுகளைப் புனைவாக்கி நாவலில் […]

Source

பொற்பாதை

ரோமானியர்களுடன் நம் வர்த்தகம் செழிப்பாக இருந்த காலம். அவர்கள், நம் மிளகை, மசாலாப் பொருட்களை, தந்தங்களை, பருத்தியை, நவரத்தினங்களை, தேக்கை, சந்தனக் கட்டைகளை பெருமளவில் தங்கம் கொடுத்து வாங்கினார்கள். நமது வணிகம் பொருள் மிகுதி நிலையை நமக்குத் தந்தது. ரோமில், ப்ளினி,மூத்தவர்  கோபத்துடன் புலம்பினார் “ இந்தியாவுடனான நம் வர்த்தகத்தில், ஒவ்வொரு ஆண்டும் நம் அரசு 55 மில்லியன் செஸ்டர்கள் இழந்து வருகிறது.”

தமிழ் நாவல்கள் 2025

ஆசிரியர் வஹிதாவை வர்ணித்த எந்தப் பதத்தால் நான் அப்படியொரு முகத்தைக் கற்பனை செய்தேன் என்று தெரியவில்லை. திரானே அலிதோஸ்தியின் புன்னகை முகத்தை ஒட்டிய சாயல் கொண்டவளாக வஹிதாவின் பிம்பம் என்னுள் எழும்பியது. கண்ணீரைக் கட்டுப்படுத்தும் சிவந்த கண்கள், புன்னகையைத் தேக்கி வைத்தபடியே இருக்கும் முகத்தில் அழகின் விளைவும் புரிதலின்மையும் ஒருங்கே கிளர்த்திய துயரத்தின் தடைச்சாவடி.

நீங்களும் ஐன்ஸ்டீன்தான் – ஆதி. கமலேஷ் பிரகாஷ்

14 April 2025 at 04:30
நவீன காலத்தில் உலகில் எவரிடமும் நவீன உலக மாமேதை யார்? என்று கேட்டால் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் மனதில் தோன்றும் உருவம் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் தான். 20 ஆம் நூற்றாண்டின் நவீன கண்டுபிடிப்புகளோடு அனைவராலும் ஒப்பிட்டுப் போற்றப்படுபவர் ஐன்ஸ்டீன். ஒற்றை மனிதனின் மாற்று சிந்தனை யுக்தி எப்படி (Thought Experiment) இந்த உலகத்தின் போக்கை மாற்றி அமைக்கும் என்பதற்கு உதாரணம் ஐன்ஸ்டீன். நவீன அறிவியல்-சமூக வரலாற்றில் ஐன்ஸ்டீனுடைய இடத்தை நாம் கோப்பர்நிக்கஸ், கலீலியோ, நியூட்டன் […]

Source

பனி நிலமும், தனித்த பறவைகளும் – வேணு தயாநிதி கவிதைகள்

வேணு கவிதைகளை அகம் புறம் என இரண்டு வகைமைகளிலும் எழுதியிருக்கிறார். புறம் நோக்கிய கவிதைகள் இயற்கை, மனிதர்கள், நகரம், கோவில்கள் என்றும் அகம் சார்ந்த கவிதைகள் வாழ்வின் பொருள், தனிமை, பிரிவு, மரணம் ஆகியவற்றை சுட்டியும் அமைந்துள்ளன. ஒப்புநோக்க புறம் சார்ந்த கவிதைகளே தொகுப்பில் மிகுதியாக உள்ளன. வேணு காட்சிகளையும் நுண் தருணங்களையும் கவிதைகளில் மிக விரிவாகவே பதிவு செய்திருக்கிறார்.

சிவக்குமாரின் துதிக்கைத் துழாவல் கவிதை நூல் குறித்து

குறைந்தபட்சம் ஒரு முத்தத்தையாவது எதிர்பார்த்து ஏமாந்த கவிதை, உங்கள் அவசரத்தைக் கண்டு, தன்னை அடியாழத்தில் புதைத்துக் கொண்டதை அறிவீர்களா என்று நேரடியாகவே குற்றம் காட்டுகிறார். இந்தப் பொருண்மைக்கு அவர் கொடுத்திருக்கும் முக்கியத்துவம் பின்னட்டையில் போட்டிருப்பதிலேயே தெரிகிறது.

அதிகாரத்தைக் கண்டும் விலக மறுக்கும் உண்மைகள் – இ.பா.சிந்தன்

12 April 2025 at 13:27
1895 ஆம் ஆண்டில் முதன் முதலாக பிரான்சில் லூமியர் சகோதரர்கள் தயாரித்து இயக்கிய திரைப்படங்கள் ஒளிபரப்பப்பட்டன. அதில் ஒரு காட்சியில் இரயில் வருவதைப் பார்த்து, பார்வையாளர்கள் அஞ்சி நடுங்கியதாக சொல்லப்படுகிறது. மற்றொரு காட்சியில் ஒரு தொழிற்சாலையிலிருந்து தொழிலாளர்கள் வெளியே வருவதைக் காட்டியபோது, அவர்கள் திரையைத் தாண்டி வந்துவிடுவார்களோ என்று ஒருவிதக் குழப்பத்துடனே பார்த்தார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். அதே காலகட்டத்தில் மார்கோனி வானொலியைக் கண்டுபிடித்து ஒலிபரப்பத் தொடங்கியபோது, யாரோ நேரடியாகக் காற்று வழியாகத் தங்களுடன் பேசுவதாக மக்கள் நினைத்தனர். […]

Source

உறுதி நாயகர்கள் யார்? – என்.சிவகுரு

7 April 2025 at 04:30
வரலாறு இன்று வெவ்வேறு விதமாக மாற்றப்படும் அபாய சூழலில் இருக்கிறோம். காரணம், இந்திய வரலாற்றை முழுவதுமாக இந்துத்துவமயமாக்க ஆட்சியாளர்கள் பல வேலைகளை நம் கண்முன்னே செய்துகொண்டிருக்கிறார்கள். அதன் இருளை விலக்க, வரலாற்று ஆய்வுத் தரவுகளோடு கொடுக்கப்பட வேண்டியதுள்ளது. உண்மையான வரலாற்றைக் களத்தில் தரவுகளைத் தேடி நேர்மையாக வெளிக்கொண்டுவரும் ஆய்வாளர்கள் ஒரு விதம். ஒரு சதம் கூட மிகைப்படுத்தப்பட்ட பதிவுகள் இருக்கக்கூடாது எனக் கருதும் ஆய்வாளர்கள் மிகக் குறைவு. அதேபோல, ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் எடுத்துக்கொள்வது என்பதும் […]

Source

’கலையும் காலமும்’ வழங்கிய விட்டல் ராவ்  

கேரளத்தின் மரச்சிற்ப அறிவுக்குச் சான்றாக நிற்பது இந்த பைரவ சிற்பமாகும். பைரவரின் சித்தரிப்பு அச்சம் தரக்கூடியதாகஇருக்கிறது. பைரவரின் விழி பிதுங்கிப் பற்கள் தெரிகிறது.கடைவாய் இரண்டிலும் கோரப்பற்கள் வளைந்து காணப்படுகிறது. காது குண்டலங்கள் யானைத்தலைகளாய்த் துதிக்கைகள் மேலோங்கிய சித்தரிப்பு, கழுத்தை அலங்கரிக்கும் ஆபரணங்களுக்குக் கீழாக இரு நாகங்கள் பின்னிப்பிணைந்து  பக்கத்திற்கு ஒன்றாக படமெடுத்து ஆடுகின்றன

துகள் வாழ்வுக்குள் மாய உச்சி

மிகப் பெரிய எழுத்தாளர்கள் கூட, பல சமயம் இசையைக் களமாகக் கொண்டு எழுதும் போது அடிப்படை புரிதல் கூட இல்லாமல், தங்கள் கற்பனைகளை மட்டுமே முதலாகக் கொண்டு கதைகள் புனைவதை நிறையவே பார்க்கலாம். அந்தக் கற்பனைகளை இசை தெரிந்தவர்கள் படித்தால் நகைப்பே மிஞ்சும். இன்னும் சில கதைகளில் எதற்கு வம்பென்று இசை நுணுக்கங்கள் பக்கமே செல்லாமல் கதை நகரும். சுரேஷின் ஆழ்ந்த இசை ஈடுபாட்டால், இத்தகு குறைகள் இல்லாமல் நாவலொன்றைப் படிப்பதே பெரும் ஆசுவாசத்தைக் கொடுத்தது.
❌