Normal view

Received before yesterday

20. தேன் மல்லி

20. தேன் மல்லி

வார இறுதியில் தேனியில் அமைந்த ஒரு ரிசார்டில் மித்ரன் தேன்மல்லி வரவேற்பு, நண்பன் கண்ணன் மேற்பார்வையில், சொக்கநாதனின் அலப்பறையோடு வெகு விமர்சையாக நடந்தது. பூவரசன் குடும்பத்தைத் தவிர, அறிந்தவர், தெரிந்தவர், நட்பு, உறவு தொழில்துறை நண்பர்கள், தொழிலாளர்கள் என அனைவரையும் அழைத்திருந்தனர்.

தேன்மல்லி, அழகுநிலையப் பெண்களின் கைங்கரியத்தில், ப்ரீ ஸ்டைலில் சிகை அலங்காரம் செய்து, நீல வண்ண லஹங்காவில் பொருத்தமான அணிகலன்களோடு, கோட் சூட்டில் மிடுக்காக நின்ற மித்ரன்...


Read more

18.தேன் மல்லி

18.தேன் மல்லி

அரசுவுக்கு இந்திரன் குடில் முன்பு நிற்பதே பெரும் அவஸ்தையாக இருந்தது. அவரின் அம்மாவும், மகனும் வெற்றிகரமாகச் சீரைக் கொடுத்துவிட்டு வர, சென்றவர்களுக்கு மனதார நன்றி தெரிவித்து, மகளோடு டெலிபதியில் பேசியபடிக் கிளம்பி இருந்தார்.

மயிலாடும் பாறை தேன்மல்லி இல்லத்தில் முல்லைப் பதட்டத்தோடு கூடத்தை நடையால் அளந்து கொண்டிருந்தார். மாமியார் பேத்தியாளுக்குச் சீரை சேர்த்துவிட்டோம் எனவும் நிம்மதி.

“பாப்பா எப்படி இருக்கா அத்தை?” என வினவ,

“என் பேத்திக்கு...


Read more

17.தேன் மல்லி

17.தேன் மல்லி


புகழேந்திக்கு இரவே உறவினர் ஒருவர் மூலம் மித்ரன், தேன்மல்லி திருமண புகைப்படம் சென்றிருக்க, காலையில் தான் பார்த்தார். மித்ரன் பேண்ட் சட்டையில் இருக்க, அருகில் தேன் மல்லி மணப்பெண் அலங்காரத்திலிருந்தாள். மருமகனைத் தெரிந்தவருக்கு, அருகிலிருக்கும் பெண் யாரெனத் தெரியவில்லை. ஆனாலும் அதிர்ச்சி. யாரும் வேண்டுமென்று விளையாடுகிறார்களோ என நினைத்தவர் தங்கையிடம் கேட்காமல் சுரேந்திரனுக்கு அனுப்பி விவரம் கேட்டார்.

“ஆமாம் அத்தான். பொண்ணு அரசு அத்தான் மகள்”...


Read more

14.தேன் மல்லி

14.தேன் மல்லி

இந்திரன் குடில் முதலில் அதிர்ந்தாலும், பின் சுதாரித்து, கமலத்தின் ஆணைப்படி பாரதி ஆலம் சுற்றித் தேன் மல்லியை மருமகளாக உள்ளே அழைத்துக் கொண்டார். சொக்கனும், மீனாட்சியும் மணமக்களோடு மூத்த ஜோடியாக வந்து வீட்டின் கடினமானச் சூழலை இலகுவாக்க முயன்றனர்.

“பெரியம்மா, தேனு விளக்கேத்தனுமுல்ல, உங்கப் பூஜை ரூம் எங்க இருக்கு.” என அழைத்துச் சென்று, சேகரன் இல்லத்தில் தன் அத்தைமார் சொல்லச் சொல்லத் தான் செய்த முறைகளைத் தேன்மல்லியையும் செய்ய வைத்தாள்.

தேன் மல்லி...


Read more

13.தேன்மல்லி

முல்லை, நாகேந்திரன், சுரேந்திரன், பவளமல்லி ஆகியோரின் ஒன்றுவிட்ட சின்னம்மா மகள். சிற்றன்னைக் கொடுமையால் அவதிப் பட்டவளை பூங்காவனம் அழைத்து வந்து தன் மகள் போல் வளர்த்தார். பூவரசன், புகழேந்தி இருவருமே நாகேந்திரனின் நண்பர்கள்.

புகழேந்தி கொஞ்சம் பந்தாவாக இருப்பார், பூவரசன் இயல்பாகப் பழக, பெண் பிள்ளைகள் இருவருக்குமே பூவரசன் மீது நாட்டம்.

மல்லியும், அரசும் ஒருவரை ஒருவர் விரும்ப, வீட்டினர் சம்மதமும் இருந்தது. அரசுப் பொருளாதார ரீதியாகத் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளப் போராடிக் கொண்டிருக்க...


Read more

11. தேன் மல்லி

11. தேன் மல்லி


தேன் மல்லிக்கு நடந்ததுக் கனவா, நினைவா எனப் பிரித்து அறிய முடியாத நிலை. ‘ரெஸ்ட் ரூம் தேடிப் போனேன், வழி மாறிப் போனேன். அவன் இருந்தான், அதட்டினான், அணைத்தான், அய்யோ சாமி என்ன பார்வை, பெரியக் காதல் மன்னன். சிடுமூஞ்சிக்கு அது ஒன்னு தான் குறைச்சல். கிஸ் பண்ணானோ அப்புறம் என்ன என்னமோச் சொன்னானே…’ வழி நெடுக யோசித்தும், நடந்தது மெய்யா, பொய்யா வகைப் பிரித்து அறிய முடியாமல், அவள் கண் விழிக்கும் போது, “மேடம் மயங்கிட்டிங்க” என பெண்கள் ஸ்பா பக்கம் படுக்க...

Read more

7.தேன்மல்லி

7.தேன்மல்லி


மயிலாடும் பாறை ஊரின் ஆரம்பத்திலேயே தோட்டத்துக்கு நடுவே பழமையும், புதுமையும் கலந்து கம்பீரமாக நின்றது தேனம்மாவின் பிறந்த வீடு. நூறு வருடம் வாழ்ந்தாரும் இல்லை, தாழ்ந்தாரும் இல்லை என்ற மொழி மனிதர்களுக்கு மட்டுமின்றி வீட்டுக்கும் பொருந்தும்.

தேனம்மாவின் முன்னோர், ஜமீனுக்கு கணக்குப்பிள்ளையாக வேலைப் பார்த்துச் சீரும் சிறப்புமாக இருந்தவர்கள். தலைமுறை கடந்து குந்தி திண்ண குன்றும் மாளும் என மிஞ்சியது இந்த வீடு மட்டுமே. அவர் கணவர் வீட்டோடு மாப்பிள்ளையாக வந்தவர்...


Read more

8.தேன்மல்லி

8.தேன்மல்லி

தேன் மல்லி பண்ணையில் ஆட்கள் ரோட்டிலிருந்து ஒரு கிலோமீட்டர், உள்ளடங்கி வேலை பார்த்ததால் யாருக்கும் கார் கீச்சிட்டு நின்ற சத்தம் கேட்கவில்லை, அதிக வண்டி போக்குவரத்து இல்லாத சாலை, வேறு யாருக்கும் இதைப் பற்றித் தெரியவும் இல்லை.

மதிய இடைவேளையில் வீட்டுக்கு வந்த அரசு, மகள் இன்னும் வரவில்லை என்று சொல்லவும், தோட்டத்துக்கு விரைந்தார். மகளின் வண்டி ரோட்டில் சமத்தாக நிற்க, பண்ணைக்குள் சென்றுப் பார்த்தார்.

“பாப்பா, அப்பவே கிளம்பிடுச்சுங்களே” ஆட்கள்...


Read more

6.தேன் மல்லி

6.தேன் மல்லி

மதிய உணவு இடைவேளை, பெற்றவர் இருவரும் சாப்பிடாமல் இருக்க, தம்பியை அழைத்துக் கொண்டு எதிரே இருக்கும் கடைக்குச் சென்றாள் தேன்மல்லி. இரண்டு பார்சல்கள், பழரசம் நான்கு ஆர்டர் செய்ய, இந்தர் ஒரு ஐஸ் ஸ்டிக் தூக்கினான். அது உருகும் முன் சாப்பிடும் ஆர்வத்தில், ”பில் பே பண்ணிட்டு வா அக்கா, நான் முன்னாடிப் போறேன்” பார்சல்களை தூக்கிக் கொண்டு உள்ளே ஓடி இருக்க, இரண்டு பழரசத்தையும், சில்லறையை வாங்கிக் கொண்டு தேன் மல்லி உள்ளே வந்தாள்.

மருத்துவப் பணியாட்களும்...


Read more

5.தேன்மல்லி

5.தேன்மல்லி


தேனியில் இருபத்தைந்து வருடங்களைக் கடந்து மக்கள் நம்பிக்கையைப் பெற்று, வெற்றிகரமாக இயங்கி வரும் புவனேஸ்வரிப் பல்நோக்குச் சிறப்பு மருத்துவமனை. முன்பு மகப்பேறு மருத்துவமனையாக இருந்ததை, தரம் உயர்த்தி, எல்லா நோய்களுக்குமான உயர் சிகிச்சை அழைக்கின்றனர்.

அகவை அறுபதைக் கடந்த மூத்த மருத்துவர் அறையில், கமலமும், பாரதியும் காத்திருந்தனர். மித்ரன் அவர்களை மருத்துவமனையில் இறக்கி பணம் கட்டி, ஓரிரு செக்கப்புக்கும் உடன் வந்தான். அதற்குள் பலமுறை அலைபேசி அழைத்து...


Read more

4.தேன் மல்லி

4.


தேனி அரண்மனை புதூரில் உள்ள இந்திரன் குடில். பெயரில் தான் குடில் உள்ளதே தவிர, மலைப்பாங்கானப் பகுதியில் முல்லையாற்றின் கரையில் அமைந்த தனிப் பங்களா வீடு. மூன்று தலைமுறையாக வசிக்கின்றனர்.

தாத்தா தெய்வேந்திரன் கட்டிய வீடு. அந்தக் காலத்திலேயே, ஏலம், மிளகு வணிகத்தில் கொடி கட்டிப் பறந்தவர். அப்பத்தா பூங்காவனம், பூவம்மாள் என்று அழைப்பார்கள், சின்னமனூரை பூர்வீகமாகக் கொண்டவர். கணவர் சம்பாதித்தப் பணத்தைக் கட்டிக் காத்துப் பெருக்கத் தெரிந்த இல்லத்தரசி. இரண்டு மகன்...


Read more

3.தேன் மல்லி

471391272_27845410698438191_2679268903711484531_n.jpg

“மித்ரன் மகிழேந்தி, இளம் தொழிலதிபர். தேனி மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்….

படிக்கும் காலத்திலிருந்தே, ஷேர்ஸ், கமாடிட்டி, ப்யூச்சர்ஸ் அண்ட் ஆப்சன்ஸ், பிட் காயின் எனப் பங்குச் சந்தையை அனுமானிப்பதில் வல்லுநரான இவர், தான் மண்ணின் மைந்தர் என்பதை நிரூபிக்கும் வகையில் ஆர்கானிக் பொருட்களைக் கொண்டு மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களைத் தயாரித்து, உலகெங்கும் வியாபாரம் செய்து வருகிறார். “மல்லி நேச்சுரல் ப்ராடெக்ட்ஸ்” ன் வெற்றி ரகசியத்தைப் பற்றி நம்மோடு பகிர்ந்து கொள்ள அழைக்கிறோம்...


Read more

2. தேன் மல்லி

2. தேன் மல்லி

471391272_27845410698438191_2679268903711484531_n.jpg
கோவையில் உள்ளப் புகழ் பெற்ற பொறியியல் கல்லூரி, மேலாண்மை பட்ட மேற்படிப்பு துறையில் மூன்று நாள் கருத்தரங்கு நடந்து கொண்டிருந்தது. எம் பி ஏ இரண்டாம் ஆண்டு மாணவியான தேன்மல்லி மற்றும் சில தோழிகள் ஆசிரியர்களோடு சேர்ந்து நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு வேலையைப் பார்த்தனர்.

இரண்டு நாள் நிகழ்ச்சி நல்லபடியாக முடிந்திருந்தது, மூன்றாம் நாள், இன்றைய கருத்தரங்கில் “மல்லிகை நேச்சுரல் ப்ரொடெக்ட்ஸ்” ன், நிர்வாக இயக்குநர் மித்ரன்...


Read more

1.தேன்மல்லி

471391272_27845410698438191_2679268903711484531_n.jpg

தேன்மல்லி பூவே… தேன்மல்லி பூவே பூந்தென்றல் காற்றே

என் கண்ணே என் ராணி நீயின்றி நானில்லையே…”


அவரைக் கடந்து சென்ற மினி பஸ்சிலிருந்து பாடல் தவழ்ந்து வந்தது.

எப்போதும் அவர் நெஞ்சில் ரீங்காரமிட்டுக் கொண்டே இருந்த கானம்.

பண்பலைகளில் மட்டுமே ஒலிபரப்பிக் கொண்டிருந்த காலத்திலேயே, சிறுக சிறுகச் சேமித்து டேப்ரெகார்டரும், கேசட்டும் அவள் நினைவில் இந்தப் பாடலை இடைவிடாது கேட்பதற்காகவே வாங்கியவர். அவள் சென்றப் பிறகு...


Read more
❌