Normal view

Received before yesterday

வற்றா இருப்பு : சபரிநாதன்

May 07, 2025 மாறாக,தமிழின் முதல் இலக்கியங்கள் முன்மாதிரியற்றவை. சமஸ்கிருதத்தில் அதற்கான மூலப்படிவங்கள் இல்லை.அவை இம்மண்ணின் சுதந்திர விளைச்சல்கள் எனலாம்.ஆரிய வருகைக்கு முற்பட்ட மூலத்திராவிட இலக்கிய மரபுகளின் தடயங்கள் வேறெந்த மொழியிலும் இப்படி பதிவாகவில்லை என்கின்றனர்.எல்லா மொழிகளிலும் வாய்மொழி இலக்கியங்கள் இருந்திருக்கும் எனினும், அது தமிழில் போல செவ்வியலாக்கம் பெற்று படைப்பிலக்கியமாக உருப்பெறவில்லை. சமஸ்கிருதமயத்திற்கு பின்னரே அவற்றில் எழுத்திலக்கிய நிகழ்வு நடந்துள்ளது.யோசித்துப்பாருங்கள், கம்பராமாயணத்தில் இருந்து தமிழ் இலக்கியம் தொடங்கியிருந்தால் எப்படி இருந்திருக்கும்.அப்படி தொடங்கவில்லை என்பது தமிழிலக்கியத்தின் உச்சமாக கருதப்படும் கம்பராமயணத்தின் மேன்மைக்கும், அது எழுதப்பட்ட மொழிக்கு ஆயிரம் வருட இலக்கிய மரபும் கொள்கைகளும் உண்டென்பதற்கான சான்றும் ஆகும்.

கவிதையில் சொல்லாட்சிகள் - மதார்

சொல் - உரைநடையில் வைக்கப்படுவதற்கும் கவிதைக்குள் வைக்கப்படுவதற்கும் மலையளவு வேறுபாடு உண்டு. சொல்லே கவிஞனின் கருவி, அதுவே அவனது சொத்து. கவிஞனின் பெரிய தொந்தரவும் கூட சொல்தான். சொல் கவிதையில் எப்படி எப்படியெல்லாம் இயங்குகிறது என்பதையும், புதிய சொல்லாட்சிகள் பிறக்க என்னென்ன காரணிகள் துணை நின்று உதவுகின்றன என்பதையும் ஆராய்வதே இந்த அமர்வின் நோக்கம். முதலில் ஒரு கவிதையில் புதிய சொல்லாட்சி எவ்விதம்

❌