Normal view

Received before yesterday

Death Row by Freida McFadden –

Freida ஒரு அமெரிக்கத் திரில்லர் எழுத்தாளரும்,  மூளைக்காயச்சிகிச்சை நிபுணரும் ஆவார்.  Freida, plagiarismல் இருந்து தப்பித்துக் கொள்ள புகழ்பெற்ற நூல்களின் கருக்களை எடுத்து வேறுவிதமாக develop செய்கிறார் என ஒரு சாராரும்,  Freida தற்போது அமெரிக்காவின் சிறந்த திரில்லர் எழுத்தாளர்களில் ஒருவர் என்று மற்றொரு சாராரும் கூறி வருகின்றனர்.  இந்த நூல் ஜூன் 1, 2025 அன்று வெளியாகியது.

Talia மரணத்தண்டனையை எதிர்நோக்கி இருக்கிறாள்.  குற்றம்? கணவனைக் கொலை செய்தது.  Prologueலேயே நான் கொலைசெய்யவில்லை, அப்பாவி என்கிறாள் அவள்.  ஆனால் கடைசி Appealம் மறுக்கப்பட்ட நிலையில் மரணம் நிச்சயம்.  இப்போதெல்லாம் மின்சார நாற்காலியில் உட்கார வைத்துக் கொல்வது மனிதத்தன்மை இல்லாதது என்று Lethal injectionஆல் கொல்கிறார்கள்.

Freidaவின் strongest area, human anatomy.

மரணஊசி போடுகையில் உடலில் என்னவெல்லாம் நிகழும் என்பதை இவரால் Authoritative ஆகச் சொல்ல முடிகிறது.  அது போலவே பெரும்பாலான Freidaவின் கதைகளில் பிரதான கதாபாத்திரம் பெண் என்பதால் அவர்களின் Crush, பயம், பொறாமை போன்ற உணர்வுகளோடு பெண்களின் உடற்கூறு குறித்த விஷயங்களும் தெளிவாக இடம்பெறும்.

Freidaவின் வழக்கமான விரைந்தோடும் மொழிநடை.  உணர்வுகள் ததும்பும் எழுத்து.  அத்துடன் வழமை போலவே நூலின் இறுதியில் டிவிஸ்ட். சிறிய நூலில் இரண்டு முடிவுகளை Freida கொடுத்திருப்பதால் பலருக்குக் குழப்பம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.  இரண்டாவது முடிவு குறித்துப் பேசினால் Spoiler ஆகிவிடும் என்பதால் தவிர்க்கப்படுகிறது.  முடிவு குறித்து விவாதிக்க விரும்புவோர் தாராளமாகத் தொடர்பு கொள்ளலாம்.

You Killed Me First by John Marrs:

John ஆங்கிலேய எழுத்தாளர்.  முன்னாள் பத்திரிகையாளர்.  தொலைக்காட்சிக்காக, பத்திரிகைகளுக்காக எண்ணற்ற Celebrityகளை பேட்டி கண்ட இவர் இப்போது முழுநேர எழுத்தாளர்.

திரில்லர் Genreல் Freidaவிற்கு அடுத்து உலகெங்கும் Quote செய்யும் பெயர் இவருடையது.  Ruthware, Lisa Jewell, Paula Hakins, Alice Feeney, Alex Michaelides,

S J Watson ஆகியோர் இப்போது எழுதிக் கொண்டிருக்கும் ஆங்கிலேயத் திரில்லர் எழுத்தாளர்களில் முக்கியமானவர்கள்.  

மூன்று பெண்கள்,  மூவரிடமும் வெளியில் தெரிந்தால் சிறையில் வெகுகாலம் இருக்க வேண்டிய இரகசியங்கள்.  நாவலின் ஆரம்பத்தில் ஒருபெண்ணுக்கு Big Bonfire நெருப்புக்கு இடையில் நினைவு திரும்புகிறது.  என்ன காரணத்திற்காக, யார் அவளை நெருப்புக்குள் சிக்க வைத்திருப்பார்கள் என்பதும் புரிகிறது.  ஆனால் மூவருமே உயிர்கொல்லும் இரகசியத்தை மறைத்து வைத்திருப்பதால் மூவரில் யார் மாட்டிக் கொண்டது?

மூவருமே கதைசொல்லிகள், எனவே மூன்று Perspectivesல் கதை நகர்கிறது. 

இடையே வேறு சிலர் அவர்கள் கோணத்தில் கதையை நகர்த்துகிறார்கள்.  கடைசியில் அவர்கள் யார் என்பது தெரிய வரும்.

Margotவை அதிக வாசகர்கள் விரும்புவதற்கான வாய்ப்பதிகம்.  அவளுடைய மனவோட்டம் நம்மை எப்போதும் புன்னகைக்க வைக்கும்.

மூன்று கதாபாத்திரங்களுக்கேற்ப மொழிநடையிலும் சிறிய மாறுதலைக் கொண்டு வந்திருக்கிறார் John.  ஆரம்பத்தில் இருந்து Epilogue வரை பல டிவிஸ்டுகள் நிறைந்த நூலிது.  திரில்லர் நாவலை நான்கு நாட்கள் இடைவெளிவிட்டு வாசித்தாலும் எல்லாமே நினைவிலிருக்கும்.  ஆனால் இந்த நாவலுக்கு அப்படி சொல்வதற்கில்லை.  மார்ச் 2025ல் வெளியாகியது இந்த நாவல்.

Death Row by Freida McFadden –

Freida ஒரு அமெரிக்கத் திரில்லர் எழுத்தாளரும்,  மூளைக்காயச்சிகிச்சை நிபுணரும் ஆவார்.  Freida, plagiarismல் இருந்து தப்பித்துக் கொள்ள புகழ்பெற்ற நூல்களின் கருக்களை எடுத்து வேறுவிதமாக develop செய்கிறார் என ஒரு சாராரும்,  Freida தற்போது அமெரிக்காவின் சிறந்த திரில்லர் எழுத்தாளர்களில் ஒருவர் என்று மற்றொரு சாராரும் கூறி வருகின்றனர்.  இந்த நூல் ஜூன் 1, 2025 அன்று வெளியாகியது.

Talia மரணத்தண்டனையை எதிர்நோக்கி இருக்கிறாள்.  குற்றம்? கணவனைக் கொலை செய்தது.  Prologueலேயே நான் கொலைசெய்யவில்லை, அப்பாவி என்கிறாள் அவள்.  ஆனால் கடைசி Appealம் மறுக்கப்பட்ட நிலையில் மரணம் நிச்சயம்.  இப்போதெல்லாம் மின்சார நாற்காலியில் உட்கார வைத்துக் கொல்வது மனிதத்தன்மை இல்லாதது என்று Lethal injectionஆல் கொல்கிறார்கள்.

Freidaவின் strongest area, human anatomy.

மரணஊசி போடுகையில் உடலில் என்னவெல்லாம் நிகழும் என்பதை இவரால் Authoritative ஆகச் சொல்ல முடிகிறது.  அது போலவே பெரும்பாலான Freidaவின் கதைகளில் பிரதான கதாபாத்திரம் பெண் என்பதால் அவர்களின் Crush, பயம், பொறாமை போன்ற உணர்வுகளோடு பெண்களின் உடற்கூறு குறித்த விஷயங்களும் தெளிவாக இடம்பெறும்.

Freidaவின் வழக்கமான விரைந்தோடும் மொழிநடை.  உணர்வுகள் ததும்பும் எழுத்து.  அத்துடன் வழமை போலவே நூலின் இறுதியில் டிவிஸ்ட். சிறிய நூலில் இரண்டு முடிவுகளை Freida கொடுத்திருப்பதால் பலருக்குக் குழப்பம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.  இரண்டாவது முடிவு குறித்துப் பேசினால் Spoiler ஆகிவிடும் என்பதால் தவிர்க்கப்படுகிறது.  முடிவு குறித்து விவாதிக்க விரும்புவோர் தாராளமாகத் தொடர்பு கொள்ளலாம்.

You Killed Me First by John Marrs:

John ஆங்கிலேய எழுத்தாளர்.  முன்னாள் பத்திரிகையாளர்.  தொலைக்காட்சிக்காக, பத்திரிகைகளுக்காக எண்ணற்ற Celebrityகளை பேட்டி கண்ட இவர் இப்போது முழுநேர எழுத்தாளர்.

திரில்லர் Genreல் Freidaவிற்கு அடுத்து உலகெங்கும் Quote செய்யும் பெயர் இவருடையது.  Ruthware, Lisa Jewell, Paula Hakins, Alice Feeney, Alex Michaelides,

S J Watson ஆகியோர் இப்போது எழுதிக் கொண்டிருக்கும் ஆங்கிலேயத் திரில்லர் எழுத்தாளர்களில் முக்கியமானவர்கள்.  

மூன்று பெண்கள்,  மூவரிடமும் வெளியில் தெரிந்தால் சிறையில் வெகுகாலம் இருக்க வேண்டிய இரகசியங்கள்.  நாவலின் ஆரம்பத்தில் ஒருபெண்ணுக்கு Big Bonfire நெருப்புக்கு இடையில் நினைவு திரும்புகிறது.  என்ன காரணத்திற்காக, யார் அவளை நெருப்புக்குள் சிக்க வைத்திருப்பார்கள் என்பதும் புரிகிறது.  ஆனால் மூவருமே உயிர்கொல்லும் இரகசியத்தை மறைத்து வைத்திருப்பதால் மூவரில் யார் மாட்டிக் கொண்டது?

மூவருமே கதைசொல்லிகள், எனவே மூன்று Perspectivesல் கதை நகர்கிறது. 

இடையே வேறு சிலர் அவர்கள் கோணத்தில் கதையை நகர்த்துகிறார்கள்.  கடைசியில் அவர்கள் யார் என்பது தெரிய வரும்.

Margotவை அதிக வாசகர்கள் விரும்புவதற்கான வாய்ப்பதிகம்.  அவளுடைய மனவோட்டம் நம்மை எப்போதும் புன்னகைக்க வைக்கும்.

மூன்று கதாபாத்திரங்களுக்கேற்ப மொழிநடையிலும் சிறிய மாறுதலைக் கொண்டு வந்திருக்கிறார் John.  ஆரம்பத்தில் இருந்து Epilogue வரை பல டிவிஸ்டுகள் நிறைந்த நூலிது.  திரில்லர் நாவலை நான்கு நாட்கள் இடைவெளிவிட்டு வாசித்தாலும் எல்லாமே நினைவிலிருக்கும்.  ஆனால் இந்த நாவலுக்கு அப்படி சொல்வதற்கில்லை.  மார்ச் 2025ல் வெளியாகியது இந்த நாவல்.

The Culture Map: Decoding How People Think, Lead, and Get Things Done Across Cultures – Erin Meyer:

எரின் ஒரு அமெரிக்க எழுத்தாளர்.   பிரான்ஸ், சிங்கப்பூர்,  அபுதாபி உள்ளிட்ட நாடுகளில் Management studies குறித்துக் கற்பிக்கும் வருகைப் பேராசிரியர்.   Netflix cofounderஉடன் இணைந்து ஒரு நூலை எழுதியுள்ளார்.  இந்த நூல் மிகவும் புகழ் பெற்ற நூல்.

Second degree message என்பது Implied message.  உதாரணத்திற்குத் தமிழ்நாட்டில் “எங்க அம்மா சமையல் அருமையாக இருக்கும்”.   Implied message ” உன் சமையல் சரியில்லை”.  கலாச்சாரம் தெரியாமல் Implied messageஐ அறிவதற்கில்லை.

சீனாவில் முகவரி எழுதுகையில் தமிழ்நாடு, சென்னை, மயிலாப்பூர் என்று ஆரம்பித்துக் கடைசியாக வீட்டு எண் வருகின்றது.  அங்கு Surname என்பது First name.  

டச்சுக்காரர்கள் எதையும் வெளிப்படையாகப் பேசுபவர்கள்.   ஒரு டச்சுக்காரர் மற்றொரு டச்சுக்காரரின் குறைகளை வரிசையாக அடுக்குகையில் அருகிலிருந்த அமெரிக்கர்கள் எப்படி எதிர்வினை செய்வது என்பது தெரியாமல் கால்விரல்களை உற்றுப்பார்த்ததாகக் குறிப்பிடுவது கலாச்சார வேறுபாடுகளுக்கு நல்லதொரு எடுத்துக்காட்டு.

அமெரிக்கர்களுக்கு ஜோக்கை சொல்வதுடன் நிறுத்தாமல் Just kidding என்பதைப் பலநேரங்களில் சேர்த்துச் சொல்ல வேண்டியதாகிறது.   ஆங்கிலேயர்களும், இந்தியர்களும் அவர்களுக்குத் தெரியாத விஷயத்தைத் தெரியாது என்று பலர் முன்னிலையில் ஒத்துக்கொள்ள விரும்பாது பூசிமெழுக முனைவார்கள்.

ஒரு மீட்டிங் இடையில் உணவை order செய்து சாப்பிடுதல் அநேக நாடுகளில் Speakerஐ அவமரியாதை செய்வதாக அர்த்தம். ஆனால் நார்வேயில் அதை Time management என்று எடுத்துக் கொள்வார்கள்.

எரின் ஏராளமான நிகழ்வுகளை இடையிடையே அவர் சொல்லும் கருத்தை வலியுறுத்த இந்த நூலில் கொண்டு வந்திருக்கிறார்.  வெவ்வேறு கலாச்சாரங்களை அறிய விரும்புபவருக்கு முக்கியமான நூலிது. Negotiation என்பது அடுத்தவரின் கலாச்சாரத்தைக் குறித்து அறிந்தபின் செய்வது.  அமெரிக்கரிடம் வெகுகாலம் தொடர்பிலில்லா விட்டாலும் ஆரம்ப நலம் விசாரித்தலுக்குப்பின் நாம் அழைத்த காரணத்திற்கு வரலாம்.  சவுதியில் முதலில் நலம் விசாரித்து மூன்று நான்கு நாட்களுக்குப்பின் மீண்டும் அழைக்க வேண்டும். சில கேள்விகள் கலாச்சார இடைவெளிகளால் எப்படி Offensiveஆக முடியும் என்பதற்கு நூலில் ஏராளமான உதாரணங்கள். ஆனால் நம்மூர் பாட்டிகளின் கேள்விக்கெல்லாம் எந்த நாட்டினரிடமும் விடையிருக்காது.

The Culture Map: Decoding How People Think, Lead, and Get Things Done Across Cultures – Erin Meyer:

எரின் ஒரு அமெரிக்க எழுத்தாளர்.   பிரான்ஸ், சிங்கப்பூர்,  அபுதாபி உள்ளிட்ட நாடுகளில் Management studies குறித்துக் கற்பிக்கும் வருகைப் பேராசிரியர்.   Netflix cofounderஉடன் இணைந்து ஒரு நூலை எழுதியுள்ளார்.  இந்த நூல் மிகவும் புகழ் பெற்ற நூல்.

Second degree message என்பது Implied message.  உதாரணத்திற்குத் தமிழ்நாட்டில் “எங்க அம்மா சமையல் அருமையாக இருக்கும்”.   Implied message ” உன் சமையல் சரியில்லை”.  கலாச்சாரம் தெரியாமல் Implied messageஐ அறிவதற்கில்லை.

சீனாவில் முகவரி எழுதுகையில் தமிழ்நாடு, சென்னை, மயிலாப்பூர் என்று ஆரம்பித்துக் கடைசியாக வீட்டு எண் வருகின்றது.  அங்கு Surname என்பது First name.  

டச்சுக்காரர்கள் எதையும் வெளிப்படையாகப் பேசுபவர்கள்.   ஒரு டச்சுக்காரர் மற்றொரு டச்சுக்காரரின் குறைகளை வரிசையாக அடுக்குகையில் அருகிலிருந்த அமெரிக்கர்கள் எப்படி எதிர்வினை செய்வது என்பது தெரியாமல் கால்விரல்களை உற்றுப்பார்த்ததாகக் குறிப்பிடுவது கலாச்சார வேறுபாடுகளுக்கு நல்லதொரு எடுத்துக்காட்டு.

அமெரிக்கர்களுக்கு ஜோக்கை சொல்வதுடன் நிறுத்தாமல் Just kidding என்பதைப் பலநேரங்களில் சேர்த்துச் சொல்ல வேண்டியதாகிறது.   ஆங்கிலேயர்களும், இந்தியர்களும் அவர்களுக்குத் தெரியாத விஷயத்தைத் தெரியாது என்று பலர் முன்னிலையில் ஒத்துக்கொள்ள விரும்பாது பூசிமெழுக முனைவார்கள்.

ஒரு மீட்டிங் இடையில் உணவை order செய்து சாப்பிடுதல் அநேக நாடுகளில் Speakerஐ அவமரியாதை செய்வதாக அர்த்தம். ஆனால் நார்வேயில் அதை Time management என்று எடுத்துக் கொள்வார்கள்.

எரின் ஏராளமான நிகழ்வுகளை இடையிடையே அவர் சொல்லும் கருத்தை வலியுறுத்த இந்த நூலில் கொண்டு வந்திருக்கிறார்.  வெவ்வேறு கலாச்சாரங்களை அறிய விரும்புபவருக்கு முக்கியமான நூலிது. Negotiation என்பது அடுத்தவரின் கலாச்சாரத்தைக் குறித்து அறிந்தபின் செய்வது.  அமெரிக்கரிடம் வெகுகாலம் தொடர்பிலில்லா விட்டாலும் ஆரம்ப நலம் விசாரித்தலுக்குப்பின் நாம் அழைத்த காரணத்திற்கு வரலாம்.  சவுதியில் முதலில் நலம் விசாரித்து மூன்று நான்கு நாட்களுக்குப்பின் மீண்டும் அழைக்க வேண்டும். சில கேள்விகள் கலாச்சார இடைவெளிகளால் எப்படி Offensiveஆக முடியும் என்பதற்கு நூலில் ஏராளமான உதாரணங்கள். ஆனால் நம்மூர் பாட்டிகளின் கேள்விக்கெல்லாம் எந்த நாட்டினரிடமும் விடையிருக்காது.

As Long as the Lemon Trees Grow

by Zoulfa Katouh:

Zoulfa கனடாவில் பிறந்து, துபாய், சுவிஸ் போன்ற நாடுகளில் வளர்ந்தவர்.

சிரியா தம்பதிகளுக்குப் பிறந்தவர். மருந்தியலில் முதுகலைக் கல்வி கற்றவர்.  இவருடைய முதல் நாவலான இது 2022ல் வெளியாகியது.

சிரியா Ottoman வீழ்ச்சிக்குப்பிறகான பிரஞ்சுக் காலனியாதிக்கத்திற்குப்பின் சுதந்திரமடைந்ததும் பலவித மாறுதல்களை எதிர்கொண்டது.  எகிப்துடன் இணைக்கப்பட்டு சரிவராது பிரிந்தது.  இஸ்ரேலுடன் இணைந்து போரிட்டிருக்கிறது.  ஐம்பது வருடங்களுக்கு மேலாக தந்தை&மகனின் சர்வாதிகாரத்திலிருந்த சிரியா, ஆஸாத்தின் ஆட்சி டிசம்பர் 2024ல் விழுந்து, மார்ச் 2025ல் புதிய அரசு பொறுப்பேற்றிருக்கின்றது.  சிரியாவில் அமைதி திரும்புவதற்கான அறிகுறி தென்படுகிறது.

2011ல் தொடங்கிய உள்நாட்டுப் போரை மையமாகக் கொண்ட நாவலிது.  சிரியா ராணுவம் தன் சொந்த மக்களை எவ்வாறு சித்திரவதை செய்தது என்பதைப் புனைவின் மூலம் சொல்கிறார் Zoulfa.  Salama என்ற பதினெட்டு வயதுப்பெண் கதைசொல்லி.  Pharmacy படிப்பை முடிக்குமுன்பே, கலவரத்தால் பாதிக்கப்பட்டு படிப்பை நிறுத்திய சலாமா,  மருத்துவமனையில் போதுமான மருத்துவர் இல்லாததால் உயிர்காக்க ஆயிரக்கணக்கில் அறுவைசிகிச்சை செய்கிறாள்.  பலரைக் காப்பாற்றுகிறாள்.  பலர் இறக்கின்றனர்.  நோயாளிகளுக்குக் குறைவின்றி ராணுவம் அனுப்பிக் கொண்டே இருக்கின்றது.

மருத்துவமனையில் குண்டு போடுதல்,  கர்ப்பிணிப் பெண்ணை Sniper தலைக்கு ஒரு புல்லட், கர்ப்பப்பைக்கு ஒரு புல்லட் கொண்டு கொல்வது, சொந்த நாட்டினர் மீது Chemical attack செய்வது, பெண்களிடம் ராணுவத்தின் அத்துமீறல்கள் என்று வரலாற்றில் நடந்த பலவும் பதிவாகியிருக்கின்றன.

இங்கே உயிருக்குப் பாதுகாப்பில்லை,  அது மட்டுமல்ல எந்தவித முகாந்திரமுமின்றி சித்திரவதைக்கு உள்ளாக நேரிடும் என்பது தெரிந்த பின் தாய்நாட்டை விட்டு வெளியேறுதல் எப்படி Cowardice thing ஆகும்?  வெளியேறுபவர்களின் தேசபக்தி, தங்கியவர்களுக்கு எந்த வகையிலும் குறைவானதல்ல.  முக்கியமான சிலவற்றை அள்ளிக் கொண்டு,  கையில் இருக்கும் பெரும்பகுதிப் பணத்தைப் புரோக்கர்களுக்கு அளித்து, 

பாதுகாப்பில்லாத மீன்பிடிப்படகில் செல்ல நேரும் போதும் சலாமாவிற்கு, தாய் நாட்டையும், சிகிச்சை வேண்டுபவருக்குச் செய்யாமல் தான் மட்டும் தப்பிக்க நினைப்பதாகக் குற்றஉணர்வு.

முதல்நாவல் என்பது தெரியாத வகையில் Zoulfaவின் Flow சரளமாக உள்ளது.  நாவலின் இறுதிப்பகுதிக்கு முன்னால் ஒரு டிவிஸ்டை வைத்திருக்கிறார்.  யாரும் எதிர்பாராதது அது.  நாட்டை விட்டு வெளியேறிய குற்றஉணர்வு கொண்ட எல்லோருக்குமான Love letter இந்த நாவல்.

One Half from the East by Nadia Hashimi:

நாடியா ஆப்கானிய தம்பதிகளுக்கு அமெரிக்காவில் பிறந்தவர். குழந்தைகள் மருத்துவராக பணியாற்றிப்பின் எழுத வந்தவர்.  இவர் 

கதைகள் ஆப்கன் பெண்கள் வாழ்வை மையம் கொண்டன.  நாடியா அமெரிக்கத் தேர்தலில் நின்ற ஒரே ஒரு ஆப்கானியப்பெண் ஆவார்.

மேல்நிலைப்பள்ளி, உயர்கல்விக்கு அனுமதியில்லை,  உடலின் எந்த சிறுபாகமும் தெரியாத உடை, ஆண் துணை இன்றிப் பயணம் செய்ய அனுமதியில்லை,  வெளியே சத்தமாகப் பேசக்கூடாது, பெண் மருத்துவர்கள், பத்திரிகையாளர்கள் உட்பட பலரும் காரணமின்றி பணிவிலக்கு செய்யப்பட்டனர், Ministry of Women affairs என்பதே இல்லாது போனது and so on.  இவையெல்லாம் போன நூற்றாண்டில் இல்லை இன்றைய ஆப்கானில் நடப்பது.  பெண்களை அடிமைகளாக ஒரு கூட்டம் வைத்திருப்பதை உலகம் உள்நாட்டுப்பிரச்சனை என்று வாளாவிருக்கிறது.

Obayda பத்துவயதுப் பெண்  ஆண்பிள்ளைகள் இல்லாத வீட்டில் கடைக்குட்டி.  காவல்துறை அதிகாரியான அவளது அப்பா வெடிமருந்து விபத்தில் ஒரு காலை இழந்ததும் குடும்பம் வறுமை வாய்ப்படுகிறது.  அவளது அக்காக்கள் மூவருமே பருவம் அடைந்தவர்கள்.  அதனால் Obaydaவை ஆப்கான் வழக்கப்படி உடையை மாற்றி, முடியைக் கத்தரித்துப் பையனாகப் பணம் சம்பாதிக்க அனுப்புகிறார்கள்.

Bacha posh என்பது ஆண்குழந்தைகள் இல்லாத வீட்டில் பருவமெய்தாத பெண்குழந்தையை ஆணைப்போல் உடை உடுத்தி வேலைக்கு அனுப்பி வைப்பது.  ஆப்கானில் கட்டுப்பாட்டால் பெண்கள் வேலைக்குச் செல்வதோ, சுதந்திரமாக இருப்பதோ தடை செய்யப்பட்டது.  பொதுவாக அந்தப்பெண் பருவமடைந்ததும் பையனாக நடிப்பது முடிவுக்கு வந்து விடும்.

பெண்ணுக்குரிய கட்டுப்பாடுகளில் இருந்து ஆணாக மாறுவதிலிருக்கும் அளப்பரிய சுதந்திரங்களுடன்,  மீண்டும் அவள் பெண்ணாக மாறுகையில் ஏற்படும் கட்டுப்பாடுகளால்,  மற்ற பெண்களை விட உளவியல் ரீதியாக அவள் அவதிக்குள்ளாவதையும் நாவல் மையஇழையாய் கொண்டிருக்கிறது.  நாடியாவால் சமகால சரித்திரத்தின் வெறும் தகவல்களை அடுக்காமல்,  உணர்வுகளை, குறிப்பாக Oppressed Women, ஆழமாகக் கதைகளில் கொண்டு வர முடிகிறது.  அதுவே அவரை முன்வரிசைக்குக் கொண்டுவரப் போகிறது.

As Long as the Lemon Trees Grow

by Zoulfa Katouh:

Zoulfa கனடாவில் பிறந்து, துபாய், சுவிஸ் போன்ற நாடுகளில் வளர்ந்தவர்.

சிரியா தம்பதிகளுக்குப் பிறந்தவர். மருந்தியலில் முதுகலைக் கல்வி கற்றவர்.  இவருடைய முதல் நாவலான இது 2022ல் வெளியாகியது.

சிரியா Ottoman வீழ்ச்சிக்குப்பிறகான பிரஞ்சுக் காலனியாதிக்கத்திற்குப்பின் சுதந்திரமடைந்ததும் பலவித மாறுதல்களை எதிர்கொண்டது.  எகிப்துடன் இணைக்கப்பட்டு சரிவராது பிரிந்தது.  இஸ்ரேலுடன் இணைந்து போரிட்டிருக்கிறது.  ஐம்பது வருடங்களுக்கு மேலாக தந்தை&மகனின் சர்வாதிகாரத்திலிருந்த சிரியா, ஆஸாத்தின் ஆட்சி டிசம்பர் 2024ல் விழுந்து, மார்ச் 2025ல் புதிய அரசு பொறுப்பேற்றிருக்கின்றது.  சிரியாவில் அமைதி திரும்புவதற்கான அறிகுறி தென்படுகிறது.

2011ல் தொடங்கிய உள்நாட்டுப் போரை மையமாகக் கொண்ட நாவலிது.  சிரியா ராணுவம் தன் சொந்த மக்களை எவ்வாறு சித்திரவதை செய்தது என்பதைப் புனைவின் மூலம் சொல்கிறார் Zoulfa.  Salama என்ற பதினெட்டு வயதுப்பெண் கதைசொல்லி.  Pharmacy படிப்பை முடிக்குமுன்பே, கலவரத்தால் பாதிக்கப்பட்டு படிப்பை நிறுத்திய சலாமா,  மருத்துவமனையில் போதுமான மருத்துவர் இல்லாததால் உயிர்காக்க ஆயிரக்கணக்கில் அறுவைசிகிச்சை செய்கிறாள்.  பலரைக் காப்பாற்றுகிறாள்.  பலர் இறக்கின்றனர்.  நோயாளிகளுக்குக் குறைவின்றி ராணுவம் அனுப்பிக் கொண்டே இருக்கின்றது.

மருத்துவமனையில் குண்டு போடுதல்,  கர்ப்பிணிப் பெண்ணை Sniper தலைக்கு ஒரு புல்லட், கர்ப்பப்பைக்கு ஒரு புல்லட் கொண்டு கொல்வது, சொந்த நாட்டினர் மீது Chemical attack செய்வது, பெண்களிடம் ராணுவத்தின் அத்துமீறல்கள் என்று வரலாற்றில் நடந்த பலவும் பதிவாகியிருக்கின்றன.

இங்கே உயிருக்குப் பாதுகாப்பில்லை,  அது மட்டுமல்ல எந்தவித முகாந்திரமுமின்றி சித்திரவதைக்கு உள்ளாக நேரிடும் என்பது தெரிந்த பின் தாய்நாட்டை விட்டு வெளியேறுதல் எப்படி Cowardice thing ஆகும்?  வெளியேறுபவர்களின் தேசபக்தி, தங்கியவர்களுக்கு எந்த வகையிலும் குறைவானதல்ல.  முக்கியமான சிலவற்றை அள்ளிக் கொண்டு,  கையில் இருக்கும் பெரும்பகுதிப் பணத்தைப் புரோக்கர்களுக்கு அளித்து, 

பாதுகாப்பில்லாத மீன்பிடிப்படகில் செல்ல நேரும் போதும் சலாமாவிற்கு, தாய் நாட்டையும், சிகிச்சை வேண்டுபவருக்குச் செய்யாமல் தான் மட்டும் தப்பிக்க நினைப்பதாகக் குற்றஉணர்வு.

முதல்நாவல் என்பது தெரியாத வகையில் Zoulfaவின் Flow சரளமாக உள்ளது.  நாவலின் இறுதிப்பகுதிக்கு முன்னால் ஒரு டிவிஸ்டை வைத்திருக்கிறார்.  யாரும் எதிர்பாராதது அது.  நாட்டை விட்டு வெளியேறிய குற்றஉணர்வு கொண்ட எல்லோருக்குமான Love letter இந்த நாவல்.

One Half from the East by Nadia Hashimi:

நாடியா ஆப்கானிய தம்பதிகளுக்கு அமெரிக்காவில் பிறந்தவர். குழந்தைகள் மருத்துவராக பணியாற்றிப்பின் எழுத வந்தவர்.  இவர் 

கதைகள் ஆப்கன் பெண்கள் வாழ்வை மையம் கொண்டன.  நாடியா அமெரிக்கத் தேர்தலில் நின்ற ஒரே ஒரு ஆப்கானியப்பெண் ஆவார்.

மேல்நிலைப்பள்ளி, உயர்கல்விக்கு அனுமதியில்லை,  உடலின் எந்த சிறுபாகமும் தெரியாத உடை, ஆண் துணை இன்றிப் பயணம் செய்ய அனுமதியில்லை,  வெளியே சத்தமாகப் பேசக்கூடாது, பெண் மருத்துவர்கள், பத்திரிகையாளர்கள் உட்பட பலரும் காரணமின்றி பணிவிலக்கு செய்யப்பட்டனர், Ministry of Women affairs என்பதே இல்லாது போனது and so on.  இவையெல்லாம் போன நூற்றாண்டில் இல்லை இன்றைய ஆப்கானில் நடப்பது.  பெண்களை அடிமைகளாக ஒரு கூட்டம் வைத்திருப்பதை உலகம் உள்நாட்டுப்பிரச்சனை என்று வாளாவிருக்கிறது.

Obayda பத்துவயதுப் பெண்  ஆண்பிள்ளைகள் இல்லாத வீட்டில் கடைக்குட்டி.  காவல்துறை அதிகாரியான அவளது அப்பா வெடிமருந்து விபத்தில் ஒரு காலை இழந்ததும் குடும்பம் வறுமை வாய்ப்படுகிறது.  அவளது அக்காக்கள் மூவருமே பருவம் அடைந்தவர்கள்.  அதனால் Obaydaவை ஆப்கான் வழக்கப்படி உடையை மாற்றி, முடியைக் கத்தரித்துப் பையனாகப் பணம் சம்பாதிக்க அனுப்புகிறார்கள்.

Bacha posh என்பது ஆண்குழந்தைகள் இல்லாத வீட்டில் பருவமெய்தாத பெண்குழந்தையை ஆணைப்போல் உடை உடுத்தி வேலைக்கு அனுப்பி வைப்பது.  ஆப்கானில் கட்டுப்பாட்டால் பெண்கள் வேலைக்குச் செல்வதோ, சுதந்திரமாக இருப்பதோ தடை செய்யப்பட்டது.  பொதுவாக அந்தப்பெண் பருவமடைந்ததும் பையனாக நடிப்பது முடிவுக்கு வந்து விடும்.

பெண்ணுக்குரிய கட்டுப்பாடுகளில் இருந்து ஆணாக மாறுவதிலிருக்கும் அளப்பரிய சுதந்திரங்களுடன்,  மீண்டும் அவள் பெண்ணாக மாறுகையில் ஏற்படும் கட்டுப்பாடுகளால்,  மற்ற பெண்களை விட உளவியல் ரீதியாக அவள் அவதிக்குள்ளாவதையும் நாவல் மையஇழையாய் கொண்டிருக்கிறது.  நாடியாவால் சமகால சரித்திரத்தின் வெறும் தகவல்களை அடுக்காமல்,  உணர்வுகளை, குறிப்பாக Oppressed Women, ஆழமாகக் கதைகளில் கொண்டு வர முடிகிறது.  அதுவே அவரை முன்வரிசைக்குக் கொண்டுவரப் போகிறது.

Dream Count by Chimamanda Ngozi Adichie:

சிமாமந்த நைஜீரிய/அமெரிக்க எழுத்தாளர்.  இவரது நூல்கள் முப்பது மொழிகளுக்கு மேல் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளன. இவர் நடத்தும் நைஜீரியாவின் வருடாந்திர எழுத்துப் பட்டறைக்கு உலகமெங்கிருந்தும் புதிதாக எழுத வரும் எழுத்தாளர்கள் கலந்து கொள்கிறார்கள். இவரது சமீபத்திய We Should All Be Feminists உலகமெங்கும் பேசப்பட்ட நூல். இவருடைய Purple Hibiscus மற்றும் Half of the Yellow Sun, Americanah முதலிய நூல்கள் இவருக்குப் பெரும்புகழை ஈட்டித் தந்தன.  இது இவரது மூன்றாவது நாவல்,  4th March 2025ல் வெளியாகியது.

2025 என் பிரியத்துக்குரிய எழுத்தாளர்களின் நூல்கள் வரும் ஆண்டு.  கிரண் தேசாயின் இரண்டாவது நாவல்இவ்வருடம், முதல் நாவலுக்கு இருபத்தேழு வருட இடைவெளிக்குப்பின் வருகின்றது.  Joyce Carol Oatesன் Fox நாவல் ஜூனில் வெளியாகிறது. இஸபெல்லா அலண்டே, ஹான் காங்,  அடிச்சி ஆகியோரின் நாவல்கள் வெளியாகியுள்ளன.  இவர்கள் மூவரின் நாவல்களுமே முந்தைய நாவலுக்கு ஒருபடியேனும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்க விஷயம்.  அடிச்சி அவருடைய Literary Superstar என்ற பட்டத்திற்கு மறுபடியும் நியாயம் கற்பித்திருக்கிறார்.

நான்கு பெண்களின் கதைகளின் தொகுப்பு இந்த நாவல்.  ஒருவருக்கொருவர் ஏதோ ஒரு வகையில் தொடர்புள்ளவர்கள், ஆனால் குணாதிசயத்தால் முற்றிலும் வேறுபட்டவர்கள்.  நால்வருமே ஆப்பிரிக்கப் பெண்கள், அமெரிக்காவிற்குப் புலம்பெயர்ந்தவர்கள் என்பது அவர்களுக்குள் இருக்கும் ஒற்றுமை.

கதாபாத்திரங்களின் குணாதிசயங்கள்:

1.  Chia ஒரு பாரம்பரியக் கதாநாயகி இல்லை.  அவள் குறைகளுள்ள, உணர்வு பூர்வமான, தனிமையும் தைரியமும் கொண்ட பெண்.  Chia ஒரு பெண்ணுக்கு சமூகம் வரைந்த வட்டத்திற்குள் தன்னை நிறுத்திக் கொள்ள விரும்பாத நவீனப்பெண்.  அவளுடைய கடந்தகால நான்குக்கும் மேற்பட்ட ஆணுறவுகளின் தோல்விக்கு அவளது நவீன சிந்தனைகளும் ஒரு காரணம்.

2.  Zikora காதலினினால் பாதிக்கப்பட்டவள்.  தாய்மையால் பலம் வாய்ந்தவளனாவள்.  காதலில் தோல்வி அவளை எதிர்காலச் சிந்தனைகளை பலப்படுத்தியது.  31 வயதாகியும் தகுந்த ஆண்துணை இல்லை என்று தோழியிடம் அழுத Zikora வேகமாக அந்தப்புள்ளியை விட்டு நகர்ந்து Corporate Lawyer என்ற பிம்பத்திற்குள் தன்னைச் செருகிக் கொண்டாள்.

3.  Omelogor இந்த நால்வரில் சிடுக்குகளுள்ள குணாதிசயம்.  மிகவும் வெற்றிகரமான Banker தொழிலையும், அபரிதமான செல்வத்தையும் விட்டு Pornography research, அமெரிக்காவில் MBA, Columnist என்று தனிப்பட்ட வாழ்க்கை போலவே அவளது தொழில்முறையிலும் பல மாறுதல்கள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றன.

4.  Kadiatou நால்வரில் உங்களை அதிகம் கவரப்போகும் பாத்திரம்.  அவளது வெகுளித்தனம் மட்டும் அதற்குக் காரணமல்ல.  அவளது கதாபாத்திரம் அமெரிக்காவில் உண்மையில் மற்றொரு ஆப்பிரிக்கப் பெண்ணுக்கு நடந்த நிகழ்வை வைத்துச் சித்தரிக்கப்பட்டது.  மற்றவர்களை விட அவளே அதிகம் இரத்தமும் சதையுமாக நம்முன் நடக்கிறாள்.

நாவலின் கருப்பொருட்கள்:

1.  காதல்:

நால்வருமே காதல் வசப்படுகிறார்கள்.  சிலருக்குக் காதல் மறக்கமுடியாத பாடத்தைக் கற்பிக்கிறது, சிலரைப் பண்படுத்துகிறது,  சிலருக்கு தனிமையில் அசைபோட உதவியாய் இருக்கிறது.

2.  துயரம்:

Kadiatouவின் துயரமே எல்லோரையும் விடத் தீவிரமானது என்பது போல் மேற்பார்வைக்குத் தோன்றினாலும் எல்லாப் பெண்களுமே துயருகிறார்கள். துயரங்களை அவர்கள் எவ்வாறுஎதிர்கொள்கிறார்கள் என்பதில் மாறுபடுகிறார்கள்.

3.  தாய்மை:

அடிச்சியின் தாய் இறந்த பிறகு அவர் எழுதிய முதல்நாவல் இது.  தாய்மை நான்கு பெண்களின் அம்மாக்களின் உறவுகளிலுமே வருகின்றது. Zikora அவள் தாயானதும் விலக்கி வைத்த அம்மாவுடன் நெருக்கமாகிறாள். Kadiatouவிற்கு அவளது பதின்வயது மகள் அல்லல் போக்கும் தாயாகிறாள்.

4.  ஆப்பிரிக்க/முஸ்லீம் பெண்ணின் மாறும் அடையாளம்:

Chiaவே அவளது ஆப்பிரிக்க அடையாளத்தை முற்றிலும் துறந்து முழு அமெரிக்கனானவள்.  அல்லது அப்படி நம்புகிறவள்.  Kadiatou ஆப்பிரிக்க அடையாளத்தை மனதிலிறுத்தி எப்போது தன்னையும், பெண்ணையும் Deport செய்வார்களோ என்று அஞ்சுபவள்.  சொந்த ஊரில் படிப்பதற்கே குடும்பத்தார், அக்கம்பக்கத்தினர் அனுமதி வேண்டி நிற்கும் பெண் அமெரிக்காவில் பாரில் தனியாக நுழைந்ததும் புதுவகை பீர் அறிமுகமாகி இருக்கிறது என்று பணியாள் சொல்வதைக் கேட்பதைக் கலாச்சாரத்தாவல் எனும் சொல் நீதி செய்யுமா?

5.  Female bonding:

நால்வரையும் கண்ணுக்குத்தெரியாத கயிறு அன்பாகப் பிணைத்திருக்கிறது.  முதல் இருவரும் தோழிகள்.  மூன்றாமவள் கஸின்.  நான்காவது பெண் மற்ற மூவருக்கும் அறிமுகமானவளில்லை.  அவளது துயரம் மற்ற மூவருடன் ஒன்றாகச் சேர்க்கிறது.  Sisterhood.

6.  அமெரிக்க நீதி:

இதுவே நாவலில் மிகவும் முக்கியமான தீம்.  அமெரிக்கா தன்னை Nation for Free and Brave என்று விளம்பரப்படுத்திக் கொள்கிறது.  அமெரிக்கர்கள் கோழைகள்.  இந்த நாவலுக்கு சம்பந்தமில்லாததால் அதை விட்டு விடலாம். வேறெந்த நாட்டிலும் இல்லாத வகையில், அமெரிக்காவில் நீதி என்பது இழப்பீட்டுத் தொகையின் மதிப்பில் கணக்கிடப்படுவது.   எப்போது அப்பாவிப் பெண்ணுக்கு பலம்பொருந்திய ஆணை எதிர்த்து Free Justice வழங்கப்படுகிறதோ அப்போதே ஒரு நாடு தன்னைப் பெருமிதமாகச் சொல்லிக் கொள்ள முடியும்.  இல்லையெனில் நாட்டை நம்பிய பெண்ணை நாடு கைவிட்டதாகவே அர்த்தம்.

7. Feminism:

தங்கள் கதைகளில் Feminism கலந்திருக்கிறது என்பதை வெளித் தெரியாது இலக்கியத்தை முன்னிறுத்தி எழுதுபவர்களில் குறிப்பிடத் தக்கவர்கள் அடிச்சியும், அலண்டேயும்.  இந்த நாவலும் அதற்கு விதிவிலக்கல்ல.

விமர்சனப்பகுப்பு:

பன்னிரண்டு வருடங்கள் காத்திருப்பிற்குப்பின் வெளிவரும் நாவல் இது.  இலக்கிய ரசிகர்கள் எல்லோருக்குமான Literary treat இந்த நாவல்.

1. நாவலின் கட்டமைப்பை, நான்கு பெண்களின் கதைகளை, வேறுபடும் உணர்வுகளை, அகச்சிக்கல்களை வெளிப்படுத்த தன்மை, படர்க்கை இரண்டு வகை கதைசொல்லலையும் கையாண்டிருக்கிறார்.  Chia ஒரு Strong Lady.  அவளது கதை கடந்தகால நினைவுகளை நினைவுகூர்வது மூலம் சொல்லப்படுகிறது.  அதற்கு தன்மை கதைசொல்லி வாசகருடன் ஒரு அன்னியோன்யத்தை ஏற்படுத்த முடியும்.  Kadiatou தன்மையில் கதை சொன்னால் empathy ஏற்படுத்துதல் கடினம்.  அவளைக் கைக்கெட்டும் தூரத்தில் வைத்து நெருக்கமாக உணர Thirdperson narrative தேவைப்படுகிறது.

2.  அடிச்சியின் மொழி அவரது மற்ற நாவல்களை விட கவிதைத் தன்மை கலந்ததாக இதில் அமைந்திருக்கிறது.  குறிப்பாகத் துயரம், தனிமை போன்ற உணர்வுகள் வெளிப்படும் கட்டங்கள்.  அடிச்சி வழமை போலவே நைஜீரிய Idiomsஐ இந்த நாவலிலும் கலந்திருக்கிறார்.  மொழியின் மூலம் கதாபாத்திரங்களின் உணர்வுகளை வாசகர்களுக்குக் கடத்தும் தேர்ந்த எழுத்தாளர்களில் ஒருவர் அடிச்சி.

3.  Zikora கதாபாத்திரம் அதே பெயர் கொண்ட amazon original storiesல் வெளியான சிறுகதையில் வந்தவள். 

அதே கதாபாத்திரத்தின் குணாதிசயம் மாறாது நாவலில் இணைத்திருக்கிறார் அடிச்சி.

4.  Symbolism-  கனவு என்பது ஒத்திவைக்கப்பட்ட எதிர்பார்ப்பு,  ஒடுக்கப்பட்ட ஆசை, எதிர்காலத்தில் நிகழக்கூடும் என்ற நம்பிக்கை.  நாவலின் இடையில் அடிக்கடி வரும் Mask கோவிட்காலத்தை விட பெண்மை பேசமுடியாது வாய்மூடப்படுவதைக் குறிக்கிறது.

5.  நாவலில் அவர்கள் விருப்பமின்றி உடல்ரீதியாகவோ,  உளரீதியாகவோ பெண்கள் புலம்பெயர்ந்துகொண்டே இருக்கிறார்கள்.  அலைக்கழிப்பின் அழகியல் இந்த நாவல்.

6.  இந்த நாவலை எழுத முக்கியமான நோக்கமாக நான் கருதுவது பெண்களின் உணர்வுகள்,ஆசைகள், அபிலாஷைகள் முதலியவற்றை வெளிப்படுத்துவதுடன் ஆண்களின் கண்ணோட்டத்தில் அவர்கள் வெறும் கேளிக்கைப் பொருட்களாக மாறுவதும், அமெரிக்க நீதி என்பது கடிவாளம் போட்ட குதிரையாக நடந்து கொள்வதையும்,  ஆப்பிரிக்க மனம் அமெரிக்கக் கலாச்சாரத்தில் பதியமிடப்படுவதையும் கலந்து ஒரு இலக்கியவடிவமாகக் கொடுக்க அடிச்சி நினைத்திருக்க வேண்டும்.

Dream Count by Chimamanda Ngozi Adichie:

சிமாமந்த நைஜீரிய/அமெரிக்க எழுத்தாளர்.  இவரது நூல்கள் முப்பது மொழிகளுக்கு மேல் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளன. இவர் நடத்தும் நைஜீரியாவின் வருடாந்திர எழுத்துப் பட்டறைக்கு உலகமெங்கிருந்தும் புதிதாக எழுத வரும் எழுத்தாளர்கள் கலந்து கொள்கிறார்கள். இவரது சமீபத்திய We Should All Be Feminists உலகமெங்கும் பேசப்பட்ட நூல். இவருடைய Purple Hibiscus மற்றும் Half of the Yellow Sun, Americanah முதலிய நூல்கள் இவருக்குப் பெரும்புகழை ஈட்டித் தந்தன.  இது இவரது மூன்றாவது நாவல்,  4th March 2025ல் வெளியாகியது.

2025 என் பிரியத்துக்குரிய எழுத்தாளர்களின் நூல்கள் வரும் ஆண்டு.  கிரண் தேசாயின் இரண்டாவது நாவல்இவ்வருடம், முதல் நாவலுக்கு இருபத்தேழு வருட இடைவெளிக்குப்பின் வருகின்றது.  Joyce Carol Oatesன் Fox நாவல் ஜூனில் வெளியாகிறது. இஸபெல்லா அலண்டே, ஹான் காங்,  அடிச்சி ஆகியோரின் நாவல்கள் வெளியாகியுள்ளன.  இவர்கள் மூவரின் நாவல்களுமே முந்தைய நாவலுக்கு ஒருபடியேனும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்க விஷயம்.  அடிச்சி அவருடைய Literary Superstar என்ற பட்டத்திற்கு மறுபடியும் நியாயம் கற்பித்திருக்கிறார்.

நான்கு பெண்களின் கதைகளின் தொகுப்பு இந்த நாவல்.  ஒருவருக்கொருவர் ஏதோ ஒரு வகையில் தொடர்புள்ளவர்கள், ஆனால் குணாதிசயத்தால் முற்றிலும் வேறுபட்டவர்கள்.  நால்வருமே ஆப்பிரிக்கப் பெண்கள், அமெரிக்காவிற்குப் புலம்பெயர்ந்தவர்கள் என்பது அவர்களுக்குள் இருக்கும் ஒற்றுமை.

கதாபாத்திரங்களின் குணாதிசயங்கள்:

1.  Chia ஒரு பாரம்பரியக் கதாநாயகி இல்லை.  அவள் குறைகளுள்ள, உணர்வு பூர்வமான, தனிமையும் தைரியமும் கொண்ட பெண்.  Chia ஒரு பெண்ணுக்கு சமூகம் வரைந்த வட்டத்திற்குள் தன்னை நிறுத்திக் கொள்ள விரும்பாத நவீனப்பெண்.  அவளுடைய கடந்தகால நான்குக்கும் மேற்பட்ட ஆணுறவுகளின் தோல்விக்கு அவளது நவீன சிந்தனைகளும் ஒரு காரணம்.

2.  Zikora காதலினினால் பாதிக்கப்பட்டவள்.  தாய்மையால் பலம் வாய்ந்தவளனாவள்.  காதலில் தோல்வி அவளை எதிர்காலச் சிந்தனைகளை பலப்படுத்தியது.  31 வயதாகியும் தகுந்த ஆண்துணை இல்லை என்று தோழியிடம் அழுத Zikora வேகமாக அந்தப்புள்ளியை விட்டு நகர்ந்து Corporate Lawyer என்ற பிம்பத்திற்குள் தன்னைச் செருகிக் கொண்டாள்.

3.  Omelogor இந்த நால்வரில் சிடுக்குகளுள்ள குணாதிசயம்.  மிகவும் வெற்றிகரமான Banker தொழிலையும், அபரிதமான செல்வத்தையும் விட்டு Pornography research, அமெரிக்காவில் MBA, Columnist என்று தனிப்பட்ட வாழ்க்கை போலவே அவளது தொழில்முறையிலும் பல மாறுதல்கள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றன.

4.  Kadiatou நால்வரில் உங்களை அதிகம் கவரப்போகும் பாத்திரம்.  அவளது வெகுளித்தனம் மட்டும் அதற்குக் காரணமல்ல.  அவளது கதாபாத்திரம் அமெரிக்காவில் உண்மையில் மற்றொரு ஆப்பிரிக்கப் பெண்ணுக்கு நடந்த நிகழ்வை வைத்துச் சித்தரிக்கப்பட்டது.  மற்றவர்களை விட அவளே அதிகம் இரத்தமும் சதையுமாக நம்முன் நடக்கிறாள்.

நாவலின் கருப்பொருட்கள்:

1.  காதல்:

நால்வருமே காதல் வசப்படுகிறார்கள்.  சிலருக்குக் காதல் மறக்கமுடியாத பாடத்தைக் கற்பிக்கிறது, சிலரைப் பண்படுத்துகிறது,  சிலருக்கு தனிமையில் அசைபோட உதவியாய் இருக்கிறது.

2.  துயரம்:

Kadiatouவின் துயரமே எல்லோரையும் விடத் தீவிரமானது என்பது போல் மேற்பார்வைக்குத் தோன்றினாலும் எல்லாப் பெண்களுமே துயருகிறார்கள். துயரங்களை அவர்கள் எவ்வாறுஎதிர்கொள்கிறார்கள் என்பதில் மாறுபடுகிறார்கள்.

3.  தாய்மை:

அடிச்சியின் தாய் இறந்த பிறகு அவர் எழுதிய முதல்நாவல் இது.  தாய்மை நான்கு பெண்களின் அம்மாக்களின் உறவுகளிலுமே வருகின்றது. Zikora அவள் தாயானதும் விலக்கி வைத்த அம்மாவுடன் நெருக்கமாகிறாள். Kadiatouவிற்கு அவளது பதின்வயது மகள் அல்லல் போக்கும் தாயாகிறாள்.

4.  ஆப்பிரிக்க/முஸ்லீம் பெண்ணின் மாறும் அடையாளம்:

Chiaவே அவளது ஆப்பிரிக்க அடையாளத்தை முற்றிலும் துறந்து முழு அமெரிக்கனானவள்.  அல்லது அப்படி நம்புகிறவள்.  Kadiatou ஆப்பிரிக்க அடையாளத்தை மனதிலிறுத்தி எப்போது தன்னையும், பெண்ணையும் Deport செய்வார்களோ என்று அஞ்சுபவள்.  சொந்த ஊரில் படிப்பதற்கே குடும்பத்தார், அக்கம்பக்கத்தினர் அனுமதி வேண்டி நிற்கும் பெண் அமெரிக்காவில் பாரில் தனியாக நுழைந்ததும் புதுவகை பீர் அறிமுகமாகி இருக்கிறது என்று பணியாள் சொல்வதைக் கேட்பதைக் கலாச்சாரத்தாவல் எனும் சொல் நீதி செய்யுமா?

5.  Female bonding:

நால்வரையும் கண்ணுக்குத்தெரியாத கயிறு அன்பாகப் பிணைத்திருக்கிறது.  முதல் இருவரும் தோழிகள்.  மூன்றாமவள் கஸின்.  நான்காவது பெண் மற்ற மூவருக்கும் அறிமுகமானவளில்லை.  அவளது துயரம் மற்ற மூவருடன் ஒன்றாகச் சேர்க்கிறது.  Sisterhood.

6.  அமெரிக்க நீதி:

இதுவே நாவலில் மிகவும் முக்கியமான தீம்.  அமெரிக்கா தன்னை Nation for Free and Brave என்று விளம்பரப்படுத்திக் கொள்கிறது.  அமெரிக்கர்கள் கோழைகள்.  இந்த நாவலுக்கு சம்பந்தமில்லாததால் அதை விட்டு விடலாம். வேறெந்த நாட்டிலும் இல்லாத வகையில், அமெரிக்காவில் நீதி என்பது இழப்பீட்டுத் தொகையின் மதிப்பில் கணக்கிடப்படுவது.   எப்போது அப்பாவிப் பெண்ணுக்கு பலம்பொருந்திய ஆணை எதிர்த்து Free Justice வழங்கப்படுகிறதோ அப்போதே ஒரு நாடு தன்னைப் பெருமிதமாகச் சொல்லிக் கொள்ள முடியும்.  இல்லையெனில் நாட்டை நம்பிய பெண்ணை நாடு கைவிட்டதாகவே அர்த்தம்.

7. Feminism:

தங்கள் கதைகளில் Feminism கலந்திருக்கிறது என்பதை வெளித் தெரியாது இலக்கியத்தை முன்னிறுத்தி எழுதுபவர்களில் குறிப்பிடத் தக்கவர்கள் அடிச்சியும், அலண்டேயும்.  இந்த நாவலும் அதற்கு விதிவிலக்கல்ல.

விமர்சனப்பகுப்பு:

பன்னிரண்டு வருடங்கள் காத்திருப்பிற்குப்பின் வெளிவரும் நாவல் இது.  இலக்கிய ரசிகர்கள் எல்லோருக்குமான Literary treat இந்த நாவல்.

1. நாவலின் கட்டமைப்பை, நான்கு பெண்களின் கதைகளை, வேறுபடும் உணர்வுகளை, அகச்சிக்கல்களை வெளிப்படுத்த தன்மை, படர்க்கை இரண்டு வகை கதைசொல்லலையும் கையாண்டிருக்கிறார்.  Chia ஒரு Strong Lady.  அவளது கதை கடந்தகால நினைவுகளை நினைவுகூர்வது மூலம் சொல்லப்படுகிறது.  அதற்கு தன்மை கதைசொல்லி வாசகருடன் ஒரு அன்னியோன்யத்தை ஏற்படுத்த முடியும்.  Kadiatou தன்மையில் கதை சொன்னால் empathy ஏற்படுத்துதல் கடினம்.  அவளைக் கைக்கெட்டும் தூரத்தில் வைத்து நெருக்கமாக உணர Thirdperson narrative தேவைப்படுகிறது.

2.  அடிச்சியின் மொழி அவரது மற்ற நாவல்களை விட கவிதைத் தன்மை கலந்ததாக இதில் அமைந்திருக்கிறது.  குறிப்பாகத் துயரம், தனிமை போன்ற உணர்வுகள் வெளிப்படும் கட்டங்கள்.  அடிச்சி வழமை போலவே நைஜீரிய Idiomsஐ இந்த நாவலிலும் கலந்திருக்கிறார்.  மொழியின் மூலம் கதாபாத்திரங்களின் உணர்வுகளை வாசகர்களுக்குக் கடத்தும் தேர்ந்த எழுத்தாளர்களில் ஒருவர் அடிச்சி.

3.  Zikora கதாபாத்திரம் அதே பெயர் கொண்ட amazon original storiesல் வெளியான சிறுகதையில் வந்தவள். 

அதே கதாபாத்திரத்தின் குணாதிசயம் மாறாது நாவலில் இணைத்திருக்கிறார் அடிச்சி.

4.  Symbolism-  கனவு என்பது ஒத்திவைக்கப்பட்ட எதிர்பார்ப்பு,  ஒடுக்கப்பட்ட ஆசை, எதிர்காலத்தில் நிகழக்கூடும் என்ற நம்பிக்கை.  நாவலின் இடையில் அடிக்கடி வரும் Mask கோவிட்காலத்தை விட பெண்மை பேசமுடியாது வாய்மூடப்படுவதைக் குறிக்கிறது.

5.  நாவலில் அவர்கள் விருப்பமின்றி உடல்ரீதியாகவோ,  உளரீதியாகவோ பெண்கள் புலம்பெயர்ந்துகொண்டே இருக்கிறார்கள்.  அலைக்கழிப்பின் அழகியல் இந்த நாவல்.

6.  இந்த நாவலை எழுத முக்கியமான நோக்கமாக நான் கருதுவது பெண்களின் உணர்வுகள்,ஆசைகள், அபிலாஷைகள் முதலியவற்றை வெளிப்படுத்துவதுடன் ஆண்களின் கண்ணோட்டத்தில் அவர்கள் வெறும் கேளிக்கைப் பொருட்களாக மாறுவதும், அமெரிக்க நீதி என்பது கடிவாளம் போட்ட குதிரையாக நடந்து கொள்வதையும்,  ஆப்பிரிக்க மனம் அமெரிக்கக் கலாச்சாரத்தில் பதியமிடப்படுவதையும் கலந்து ஒரு இலக்கியவடிவமாகக் கொடுக்க அடிச்சி நினைத்திருக்க வேண்டும்.

My Name is Emilia Del Valle by Isabel Allende- translated from the Spanish by

Frances Riddle:

பெருவில் பிறந்து சிலியில் வளர்ந்தவர்.1981ல் அவருடைய மாமா சிலியின் ஜனாதிபதி Salvador Allendeன் படுகொலைக்குப்பின் அங்கிருந்து தப்பி வெனிசுலா சென்றார்.

அவருடைய தாத்தாவிற்கு எழுதிய கடிதங்களின் தூண்டுதலில் இருந்து இவருடைய முதல் நாவல் The House of Spirits எழுதப்படுகிறது. மாயயதார்த்தத்தை லத்தீன் அமெரிக்காவில் திறம்பட உபயோகித்த வெகுசில எழுத்தாளர்களில் இவரும் ஒருவர். இவருடைய எல்லா நூல்களிலுமே இவரது அனுபவங்கள் கலந்திருப்பதால் அவை லத்தீன் அமெரிக்க வாழ்வைப் பிரதிபலிப்பவை. இந்த நூல் 6th May 2025 அன்று வெளியாகியது.

இஸபெல் வெளிநாடுகளில் வாழ்ந்ததே அதிகம், இருந்தும் சிலியை அவரிடத்தில் இருந்து பிரிக்கவே முடியாது.  இந்த நாவலில் 1891ல் நடந்த சிலியன் உள்நாட்டுப் போர் பெரும்பங்கு வகிக்கிறது.  இஸபெல் எழுபத்தி நான்கு வயதில் காதல்வயப்பட்டு மூன்றாவது மணம் செய்து கொண்டவர். திருமணங்களுக்கு இடையில் ஏராளமான காதலர்கள். அதனால் Romance மிக அழுத்தமாக இவரது நாவல்களில் பதிவாகும்.

Molly அவளது தகப்பனால் கத்தோலிக்க மடத்தில் சேர்க்கப்பட்டு, கன்னியாஸ்திரியாகவே வளர்க்கப்பட்டவள்.  ஐரிஸ் பெண்ணான அவள் சிலியைச் சேர்ந்த பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவனைக் காதலித்து, கர்ப்பமானதும் அவனால் கைவிடப்பட்டுப் பிறந்தவளே எமிலியா.

எமிலியா அவளது சிலியன் ஜீன்களைக் கண்டுபிடிக்கும் பயணமே இந்த நாவல்.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் பெண்கள் தனியாக வெளிவரத் தயங்கும் காலத்தில்,  எமிலியா கிரைம் நாவல்களைப் புனைப்பெயரில் எழுதிப் பிரபலமாகிறாள்.  அந்தப் பிராபல்யம் அவளை War reporter ஆகப் பணிபுரிய உதவுகிறது. சிலியன் உள்நாட்டுப்போரைத் தொகுத்து வழங்குவதும், தந்தையைக் கண்டு அவரது சட்டபூர்வமான வாரிசாகத் தன்னை ஒப்புக்கொள்ளச் செய்வதும் அவளது பயணத்தின் நோக்கம். 

இஸபெல் இப்போது எழுதிக் கொண்டிருக்கும் மிகச்சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர்.  இஸபெல் கூட்டிச்செல்லும் உலகம் எப்போதும் நம்மால் மறக்க இயலாதது.  இம்முறை போரின் கொடுமைகள் ஒரு பெண் நிருபரின் பார்வையில் சொல்லப்படுகிறது.  சகோதரர்களுக்கிடையேயான போர் அவர்களைக் கொடூரமான எதிரிகளாக மாற்றுகிறது.  இடையில் ஒரு காதல் அரும்பி மலராகிறது.  மார்க்கரெட் மூலமாக இஸபெல்லின் மொழியின் வலிமையை பலமுறை நாம் அறிந்திருக்கிறோம்.  பிரான்செஸ் முதல்முறை என்பது தெரியாத அளவில் மொழிபெயர்ப்புக்கு நீதி செய்திருக்கிறார்.

My Name is Emilia Del Valle by Isabel Allende- translated from the Spanish by

Frances Riddle:

பெருவில் பிறந்து சிலியில் வளர்ந்தவர்.1981ல் அவருடைய மாமா சிலியின் ஜனாதிபதி Salvador Allendeன் படுகொலைக்குப்பின் அங்கிருந்து தப்பி வெனிசுலா சென்றார்.

அவருடைய தாத்தாவிற்கு எழுதிய கடிதங்களின் தூண்டுதலில் இருந்து இவருடைய முதல் நாவல் The House of Spirits எழுதப்படுகிறது. மாயயதார்த்தத்தை லத்தீன் அமெரிக்காவில் திறம்பட உபயோகித்த வெகுசில எழுத்தாளர்களில் இவரும் ஒருவர். இவருடைய எல்லா நூல்களிலுமே இவரது அனுபவங்கள் கலந்திருப்பதால் அவை லத்தீன் அமெரிக்க வாழ்வைப் பிரதிபலிப்பவை. இந்த நூல் 6th May 2025 அன்று வெளியாகியது.

இஸபெல் வெளிநாடுகளில் வாழ்ந்ததே அதிகம், இருந்தும் சிலியை அவரிடத்தில் இருந்து பிரிக்கவே முடியாது.  இந்த நாவலில் 1891ல் நடந்த சிலியன் உள்நாட்டுப் போர் பெரும்பங்கு வகிக்கிறது.  இஸபெல் எழுபத்தி நான்கு வயதில் காதல்வயப்பட்டு மூன்றாவது மணம் செய்து கொண்டவர். திருமணங்களுக்கு இடையில் ஏராளமான காதலர்கள். அதனால் Romance மிக அழுத்தமாக இவரது நாவல்களில் பதிவாகும்.

Molly அவளது தகப்பனால் கத்தோலிக்க மடத்தில் சேர்க்கப்பட்டு, கன்னியாஸ்திரியாகவே வளர்க்கப்பட்டவள்.  ஐரிஸ் பெண்ணான அவள் சிலியைச் சேர்ந்த பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவனைக் காதலித்து, கர்ப்பமானதும் அவனால் கைவிடப்பட்டுப் பிறந்தவளே எமிலியா.

எமிலியா அவளது சிலியன் ஜீன்களைக் கண்டுபிடிக்கும் பயணமே இந்த நாவல்.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் பெண்கள் தனியாக வெளிவரத் தயங்கும் காலத்தில்,  எமிலியா கிரைம் நாவல்களைப் புனைப்பெயரில் எழுதிப் பிரபலமாகிறாள்.  அந்தப் பிராபல்யம் அவளை War reporter ஆகப் பணிபுரிய உதவுகிறது. சிலியன் உள்நாட்டுப்போரைத் தொகுத்து வழங்குவதும், தந்தையைக் கண்டு அவரது சட்டபூர்வமான வாரிசாகத் தன்னை ஒப்புக்கொள்ளச் செய்வதும் அவளது பயணத்தின் நோக்கம். 

இஸபெல் இப்போது எழுதிக் கொண்டிருக்கும் மிகச்சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர்.  இஸபெல் கூட்டிச்செல்லும் உலகம் எப்போதும் நம்மால் மறக்க இயலாதது.  இம்முறை போரின் கொடுமைகள் ஒரு பெண் நிருபரின் பார்வையில் சொல்லப்படுகிறது.  சகோதரர்களுக்கிடையேயான போர் அவர்களைக் கொடூரமான எதிரிகளாக மாற்றுகிறது.  இடையில் ஒரு காதல் அரும்பி மலராகிறது.  மார்க்கரெட் மூலமாக இஸபெல்லின் மொழியின் வலிமையை பலமுறை நாம் அறிந்திருக்கிறோம்.  பிரான்செஸ் முதல்முறை என்பது தெரியாத அளவில் மொழிபெயர்ப்புக்கு நீதி செய்திருக்கிறார்.

The Tenant by Freida McFadden

Freida ஒரு அமெரிக்கத் திரில்லர் எழுத்தாளரும்,  மூளைக்காயச்சிகிச்சை நிபுணரும் ஆவார்.  Freida, plagiarismல் இருந்து தப்பித்துக் கொள்ள புகழ்பெற்ற நூல்களின் கருக்களை எடுத்து வேறுவிதமாக develop செய்கிறார் என ஒரு சாராரும்,  Freida தற்போது அமெரிக்காவின் சிறந்த திரில்லர் எழுத்தாளர்களில் ஒருவர் என்று மற்றொரு சாராரும் கூறி வருகின்றனர்.  இந்த நாவல் 6 May 2025 அன்று உலகெங்கும் வெளியாகியது.

Misery loves company.  Blakeஐப் பொறுத்தவரை அது Too much companyஐத் தேடிவிட்டது.  V P ஆக வெற்றிகரமான வேலை, விரும்பிய அழகிய பெண்ணுடன் திருமணநிச்சயம் என வாழ்க்கை மகிழ்வாக நகர்கையில் முதல் அடியாக வேலை பறிபோகிறது.  அடுத்து வேலை கிடைப்பதாக இல்லை.  உடனடி செலவுகளுக்கு வருங்கால மனைவிக்கு நிச்சயத்தின் போது அளித்த மோதிரத்தை விற்பதா அல்லது வீட்டின் ஒரு அறையை வாடகைக்கு விடுவதா என்பதில் இரண்டாவதைத் தேர்ந்தெடுத்த உடன் Blakeஐத் துயரங்கள் வரிசையில் நின்று சந்திக்கத் துடிக்கின்றன.

Trap Set செய்வது என்பது Freidaவின் பல நாவல்களில் வருகின்றது.  Trap set செய்பவர்கள் அதில் மாட்டிக்கொள்வதும் நேர்கிறது.  மருத்துவம் குறித்த பகுதியே இல்லாது வரும் மற்றுமொரு நாவல் இது.  Hallucination முக்கிய பங்கு வகிக்கிறது.  ஒரு டிவிஸ்ட் போதாதென்று மற்றுமொன்றைச் சேர்த்திருக்கிறார் Freida.  திரில்லர் நாவலில் ஆழமான காதல் ஒன்றும் ஒளிந்திருக்கிறது.  

The Tenant by Freida McFadden

Freida ஒரு அமெரிக்கத் திரில்லர் எழுத்தாளரும்,  மூளைக்காயச்சிகிச்சை நிபுணரும் ஆவார்.  Freida, plagiarismல் இருந்து தப்பித்துக் கொள்ள புகழ்பெற்ற நூல்களின் கருக்களை எடுத்து வேறுவிதமாக develop செய்கிறார் என ஒரு சாராரும்,  Freida தற்போது அமெரிக்காவின் சிறந்த திரில்லர் எழுத்தாளர்களில் ஒருவர் என்று மற்றொரு சாராரும் கூறி வருகின்றனர்.  இந்த நாவல் 6 May 2025 அன்று உலகெங்கும் வெளியாகியது.

Misery loves company.  Blakeஐப் பொறுத்தவரை அது Too much companyஐத் தேடிவிட்டது.  V P ஆக வெற்றிகரமான வேலை, விரும்பிய அழகிய பெண்ணுடன் திருமணநிச்சயம் என வாழ்க்கை மகிழ்வாக நகர்கையில் முதல் அடியாக வேலை பறிபோகிறது.  அடுத்து வேலை கிடைப்பதாக இல்லை.  உடனடி செலவுகளுக்கு வருங்கால மனைவிக்கு நிச்சயத்தின் போது அளித்த மோதிரத்தை விற்பதா அல்லது வீட்டின் ஒரு அறையை வாடகைக்கு விடுவதா என்பதில் இரண்டாவதைத் தேர்ந்தெடுத்த உடன் Blakeஐத் துயரங்கள் வரிசையில் நின்று சந்திக்கத் துடிக்கின்றன.

Trap Set செய்வது என்பது Freidaவின் பல நாவல்களில் வருகின்றது.  Trap set செய்பவர்கள் அதில் மாட்டிக்கொள்வதும் நேர்கிறது.  மருத்துவம் குறித்த பகுதியே இல்லாது வரும் மற்றுமொரு நாவல் இது.  Hallucination முக்கிய பங்கு வகிக்கிறது.  ஒரு டிவிஸ்ட் போதாதென்று மற்றுமொன்றைச் சேர்த்திருக்கிறார் Freida.  திரில்லர் நாவலில் ஆழமான காதல் ஒன்றும் ஒளிந்திருக்கிறது.  

Tell Me Everything – by Elizabeth Strout- Women’s Prize for Fiction Award 2025-Shortlist 3/6:

எலிஸபெத் ஒரு அமெரிக்க எழுத்தாளர்.  அமெரிக்க சமகால நாவல் இலக்கியத்தில் பெரிதும் மதிக்கப்படுபவர்.  இவருடைய Olive Kitteridge என்ற நாவலுக்காகப் புலிட்சர் விருதை வென்றவர்.  இந்த ஒரு நாவல் மட்டுமே விற்பனையில் மூன்றரைக் கோடி டாலரைக் (இந்திய மதிப்பில் முன்னூறு கோடி ரூபாய்) கடந்திருக்கிறது,  HBO series ஆக வந்திருக்கிறது.  இது இவருடைய பத்தாவது நாவல்.

சாதாரண மனிதர்களின் சாதாரண வாழ்க்கையை சுவை குன்றாமல் சொல்வது எலிஸபெத்தின் Success formula.  ஏற்கனவே இவரது நாவல்களில் வந்த கதாபாத்திரங்கள் இதில் மீண்டும் வருகிறார்கள்.  Olive, Lucy இருவரும் அடிக்கடி சந்தித்துக் கதைகளைப் பரிமாறிக் கொள்கிறார்கள்.  வாழ்க்கையின் அர்த்தம் என்ன என்ற கேள்வியும் மெல்லிய இழையாய் நாவலில் இழைந்து வருகிறது.  ஒரு சொல்லாத காதலும் கூட.

கதாபாத்திரங்களின் உள்ளாக ஊடுருவிச் சென்று அவர்களது மனச்சலனங்களை வாசகர் முன் கடைவிரித்தல் எலிஸபெத்தின் பாணி.  அவரது பழைய நாவல்களை வாசித்தவர்களுக்கு பிரதான கதாபாத்திரங்களின் குணாதிசயங்கள் ஏற்கனவே தெரிந்திருப்பதால் அது குடித்துவிட்டு, இரவுதாமதமாக வீட்டுக்கு வந்து காலிங்பெல்லை அழுத்திவிட்டுக் காத்திருக்கும் கணவனின் எதிர்பார்ப்பை ஒத்திருக்கும். 

இந்த நாவலில் ஒரு கொலைக்கு யார் காரணம் என்பதும் தெரிய வருகின்றது.  

Sin eaters என்பது ஒரு முக்கியமான பதம்.  அடுத்தவர்களின் பாவத்தை முழுங்கிக்கொண்டு உறவைப் பேணுபவர்கள்.  எலிஸபெத்தின் மொழிநடை சீராக ஓடும் நதியின் நடை. இவரை இதுவரை வாசிக்காதவர்கள்,

இந்த நாவல் அல்லது Olive Kitteridge ஆகியவற்றில் எதையேனும் Stand alone நாவலாகவும் வாசிக்கலாம்.

All Fours by Miranda July-  Women’s Prize for Fiction Award 2025-Shortlist 2/6:

மிராண்டா ஒரு அமெரிக்க எழுத்தாளர், திரைப்பட இயக்குனர், திரைக்கதாசிரியர், நடிகை.   பல விருதுப் பட்டியல்களில் இடம்பெற்ற இந்த நாவல் மிராண்டாவின் இரண்டாவது நாவல்.

ஒரு பெண், அவரது தோழி குறித்துக் கூறுகையில், தோழி நள்ளிரவில் ஆண்துணை வேண்டி பல ஆண்நண்பர்களைத் தொடர்பு கொண்டு யாரும் Availableஆக இல்லாததால்,  வண்டியை எடுத்துக் கொண்டு சற்றே பரிட்சயமான இன்னொரு ஆண்நண்பரின் ரூம் கதவைத் தட்டியதாகக் கூறினார்.  காமத்தைக் கட்டுப்படுத்த முடியாது எதுவும் செய்யத் தயாராக இருக்கும் பெண்களைக் கதாநாயகிகளாகக் கொண்ட கதைகள் தமிழில் இருக்கின்றதா?  இந்த நாவல் நாற்பத்தைந்து வயதில் காமத்தை அடக்கி ஒடுக்க நினைக்கும் பெண்ணின் கதை.

எதிர்பாராமல் வந்த 20000 டாலரை லாஸ்ஏஞ்சல்ஸிலிருந்து நியூயார்க்கு கார்பயணம் சென்று செலவு செய்யும்படி கணவன் கூறியதை ஏற்றுக் கிளம்பும் நாற்பத்தைந்து வயதுப்பெண் முப்பது மைலிலேயே நெடுஞ்சாலையை விட்டு விலகி, சிற்றூரில் தங்கி விடுகிறாள்.  இவளை விடப் பதினான்கு வயது குறைந்த ஒருவனுடன் தொடர்பு ஏற்படுகிறது.  மூன்று வாரங்களில் அந்த உறவு முடிந்து விடுகிறது.  ஆனால் அதன் தாக்கம் நான்கு வருடங்கள் இருக்கின்றது.

Perimenopause, காமஉணர்வைத் தூண்டிப் படுத்தும் பாடு குறித்து இந்த நாவல் போல் வேறு நான் படித்ததில்லை.  Female sexuality குறித்து ஏராளமான ஆங்கில நூல்கள் இருக்கின்றன,  ஆனால் இது முற்றிலும் வேறானது.  ஒரு Bisexual பெண்ணின் ததும்பும் காம உணர்வுகளை விவரிக்கும் நாவல்.

Open marriage என்பது நாவலின் இன்னொரு பகுதி.  இந்தியாவில் Open marriage அந்தப் பெயர் சொல்லப்படாமல் வெகுகாலமாக இருக்கின்றது.  ஆனால் மேலைநாடுகளில் Trust, loyalty போன்றவை இன்றும் புனிதமாகக் கருதப்படுவதால் அங்கே விவாகரத்துகளில் முடிந்து விடுகின்றன. மிராண்டா Erotism+ பெண்ணுடலின் தேவைகள் இரண்டையும் கலந்து இந்த நாவலை எழுதி இருக்கிறார்.

Tell Me Everything – by Elizabeth Strout- Women’s Prize for Fiction Award 2025-Shortlist 3/6:

எலிஸபெத் ஒரு அமெரிக்க எழுத்தாளர்.  அமெரிக்க சமகால நாவல் இலக்கியத்தில் பெரிதும் மதிக்கப்படுபவர்.  இவருடைய Olive Kitteridge என்ற நாவலுக்காகப் புலிட்சர் விருதை வென்றவர்.  இந்த ஒரு நாவல் மட்டுமே விற்பனையில் மூன்றரைக் கோடி டாலரைக் (இந்திய மதிப்பில் முன்னூறு கோடி ரூபாய்) கடந்திருக்கிறது,  HBO series ஆக வந்திருக்கிறது.  இது இவருடைய பத்தாவது நாவல்.

சாதாரண மனிதர்களின் சாதாரண வாழ்க்கையை சுவை குன்றாமல் சொல்வது எலிஸபெத்தின் Success formula.  ஏற்கனவே இவரது நாவல்களில் வந்த கதாபாத்திரங்கள் இதில் மீண்டும் வருகிறார்கள்.  Olive, Lucy இருவரும் அடிக்கடி சந்தித்துக் கதைகளைப் பரிமாறிக் கொள்கிறார்கள்.  வாழ்க்கையின் அர்த்தம் என்ன என்ற கேள்வியும் மெல்லிய இழையாய் நாவலில் இழைந்து வருகிறது.  ஒரு சொல்லாத காதலும் கூட.

கதாபாத்திரங்களின் உள்ளாக ஊடுருவிச் சென்று அவர்களது மனச்சலனங்களை வாசகர் முன் கடைவிரித்தல் எலிஸபெத்தின் பாணி.  அவரது பழைய நாவல்களை வாசித்தவர்களுக்கு பிரதான கதாபாத்திரங்களின் குணாதிசயங்கள் ஏற்கனவே தெரிந்திருப்பதால் அது குடித்துவிட்டு, இரவுதாமதமாக வீட்டுக்கு வந்து காலிங்பெல்லை அழுத்திவிட்டுக் காத்திருக்கும் கணவனின் எதிர்பார்ப்பை ஒத்திருக்கும். 

இந்த நாவலில் ஒரு கொலைக்கு யார் காரணம் என்பதும் தெரிய வருகின்றது.  

Sin eaters என்பது ஒரு முக்கியமான பதம்.  அடுத்தவர்களின் பாவத்தை முழுங்கிக்கொண்டு உறவைப் பேணுபவர்கள்.  எலிஸபெத்தின் மொழிநடை சீராக ஓடும் நதியின் நடை. இவரை இதுவரை வாசிக்காதவர்கள்,

இந்த நாவல் அல்லது Olive Kitteridge ஆகியவற்றில் எதையேனும் Stand alone நாவலாகவும் வாசிக்கலாம்.

All Fours by Miranda July-  Women’s Prize for Fiction Award 2025-Shortlist 2/6:

மிராண்டா ஒரு அமெரிக்க எழுத்தாளர், திரைப்பட இயக்குனர், திரைக்கதாசிரியர், நடிகை.   பல விருதுப் பட்டியல்களில் இடம்பெற்ற இந்த நாவல் மிராண்டாவின் இரண்டாவது நாவல்.

ஒரு பெண், அவரது தோழி குறித்துக் கூறுகையில், தோழி நள்ளிரவில் ஆண்துணை வேண்டி பல ஆண்நண்பர்களைத் தொடர்பு கொண்டு யாரும் Availableஆக இல்லாததால்,  வண்டியை எடுத்துக் கொண்டு சற்றே பரிட்சயமான இன்னொரு ஆண்நண்பரின் ரூம் கதவைத் தட்டியதாகக் கூறினார்.  காமத்தைக் கட்டுப்படுத்த முடியாது எதுவும் செய்யத் தயாராக இருக்கும் பெண்களைக் கதாநாயகிகளாகக் கொண்ட கதைகள் தமிழில் இருக்கின்றதா?  இந்த நாவல் நாற்பத்தைந்து வயதில் காமத்தை அடக்கி ஒடுக்க நினைக்கும் பெண்ணின் கதை.

எதிர்பாராமல் வந்த 20000 டாலரை லாஸ்ஏஞ்சல்ஸிலிருந்து நியூயார்க்கு கார்பயணம் சென்று செலவு செய்யும்படி கணவன் கூறியதை ஏற்றுக் கிளம்பும் நாற்பத்தைந்து வயதுப்பெண் முப்பது மைலிலேயே நெடுஞ்சாலையை விட்டு விலகி, சிற்றூரில் தங்கி விடுகிறாள்.  இவளை விடப் பதினான்கு வயது குறைந்த ஒருவனுடன் தொடர்பு ஏற்படுகிறது.  மூன்று வாரங்களில் அந்த உறவு முடிந்து விடுகிறது.  ஆனால் அதன் தாக்கம் நான்கு வருடங்கள் இருக்கின்றது.

Perimenopause, காமஉணர்வைத் தூண்டிப் படுத்தும் பாடு குறித்து இந்த நாவல் போல் வேறு நான் படித்ததில்லை.  Female sexuality குறித்து ஏராளமான ஆங்கில நூல்கள் இருக்கின்றன,  ஆனால் இது முற்றிலும் வேறானது.  ஒரு Bisexual பெண்ணின் ததும்பும் காம உணர்வுகளை விவரிக்கும் நாவல்.

Open marriage என்பது நாவலின் இன்னொரு பகுதி.  இந்தியாவில் Open marriage அந்தப் பெயர் சொல்லப்படாமல் வெகுகாலமாக இருக்கின்றது.  ஆனால் மேலைநாடுகளில் Trust, loyalty போன்றவை இன்றும் புனிதமாகக் கருதப்படுவதால் அங்கே விவாகரத்துகளில் முடிந்து விடுகின்றன. மிராண்டா Erotism+ பெண்ணுடலின் தேவைகள் இரண்டையும் கலந்து இந்த நாவலை எழுதி இருக்கிறார்.

❌