Normal view

Received before yesterday

புத்தகக் கண்காட்சியில் இன்று 06/01/25

இன்று சென்னை புத்தகக் கண்காட்சியில் நூல்வனம் அரங்கில் வானம் பதிப்பக உரிமையாளர் மணிகண்டனோடு அளவளாவினொம். அவருடன் நடந்து செல்கையில் திருக்கார்த்தியல் ராம் தங்கம் தம்பியைச் சந்தித்தோம். ராமும் மணியை கலாய்ப்பதில் எங்களோடு சேர்ந்து கொள்ளவே மணிகண்டன் நைசாக கழன்று கொண்டார். பிறகு நாங்கள் மட்டும் ஊர்வலத்தைத் தொடர்ந்தோம்.

விஷ்ணுபுரம் அரங்கில் ஜெயமோகனை சந்தித்தோம். அவரது சிறுகதைத் தொகுப்பான படையல் நூலில் அவரிடம் கையெழுத்துப் பெற்றுக் கொண்டு அவரோடு புகைப்படம் எடுத்துக் கொண்டோம்.

அரங்கிற்கு வெளியே ஒரு காபி குடித்தோம். கிளம்பும் நேரத்தில் என்.ஸ்ரீராமைச் சந்தித்தோம்.

இன்று வாங்கிய நூல்களின் பட்டியல் சிறியதுதான். இன்னமும் நாட்கள் இருக்கின்றன, பார்த்துக் கொள்ளலாம்.

தேசாந்திரியோடு ஒரு புகைப்படம்

புத்தக வெளியீட்டு விழாவில் எஸ்.ரா தம்பதியினரோடு ஒரு புகைப்படம் எடுக்க நினைத்திருந்த போதும், வழக்கம் போல் மறந்துவிட்டோம். எனவே இன்று புத்தகக் கண்காட்சியில் தோழர் எஸ். ராவை தேசாந்திரி அரங்கில் கண்டு, ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டோம்.

❌