மாதுளை மங்கை (சிறார் கதை) – தீபா சிந்தன்
31 May 2025 at 11:35
சரியாக நான்கு பருவநிலை மாற்றங்களுக்கு முன்பு ஆச்சி எங்கள் வீட்டை விட்டுச் சென்றார். ஒருநாள் காலை திடீரென நான் கண்விழித்துப் பார்த்தபோது ஆச்சியை வீட்டில் காணவில்லை. அவருடைய கைத்தடி மட்டும் கட்டிலுக்குப் பக்கத்தில் இருந்தது. ஆச்சியிடம் அதைக் கொடுப்பதற்காக கைத்தடியை எடுத்துக்கொண்டு நான் சென்றேன். எப்போதும் அவர் இருக்கும் மாட்டுத் தொழுவத்திற்கு ஓடிச்சென்று பார்த்தேன். ஆனால் அங்கு அவர் இல்லை. பின்னர் வைக்கோல் வைத்திருக்கும் களத்திற்குச் சென்றேன். அங்கும் ஆச்சி இல்லை. தண்ணீர் எடுக்க குளத்திற்கு சென்று […]