Normal view

Received before yesterday

இந்தியத் தத்துவம் – சாங்கியம், யோகம்: பி. ஏ.கிருஷ்ணன்

சாங்கிய தத்துவம் மானுட துயரம் என்ற யதார்த்தத்தை அடிப்படையாகக்கொண்டது. இந்த துயரமான வாழ்க்கை தளையில் இருந்து விடுபட மறுபிறப்பை தவிர்க்க வேண்டும் என நம்புகிறது. அதை அடைவதற்கான வழிதான்  சாங்கியத்தின் இலக்கு.

இந்தியத் தத்துவம் – பொருள்முதல்வாதம் : பி.ஏ.கிருஷ்ணன்

April 10, 2025 புத்தரின் காலத்தில் ஏற்கனவே புழக்கத்தில் இருந்த பொருள்முதல்வாத கருத்துகளில் இருந்து லோகாயுதா தூண்டுதலை பெற்றது. இம்மரபின் முக்கியமான சூத்திரங்கள் பிரஹஸ்பதியால் இயற்றப்பட்டன. அவை சார்வாக சூத்திரங்கள் என அழைக்கப்பட்டன. துரதிர்ஷ்டவசமாக இவை தொலைந்துவிட்டாலும், இவற்றின் எதிர்ப்பாளர்களின் கடுமையான, ஆத்திரமான மேற்கோள்களின் வாயிலாக ஓரளவிற்கு புனரமைக்கப்பட்டன. பிற்கால சார்வாக சிந்தனையாளர்கள் பற்றிய தரவுகளும், சார்வாக சிந்தனையின் சாரமான செய்யுள்களும் இவ்வாறு மறுவழிகளில் மட்டுமே கடத்தப்பட்டன.
❌