புத்தகங்களை வகைப்படுத்திப் பொதிகட்டி வெளியேற்றுதல். - 1. மலாயா இடப்பெயர்வு.
வாசித்தலும், புத்தகச் சேகரிப்பும் தொடங்கும் காலத்தில் நல்லாத்தன் இருக்கும். ஆனால், அதில் வெள்ளை யானை வளர்பிலும் மேலதிகமான சுமையும், வலியும் உள்ளது. பிற்காலத்தில் எமது புத்தகச் சேகரத்திற்கு என்னவாகும் என்ற கவலை மனஅழுத்தம் தரும் ஒன்றகும்.
''பெற்ற பிள்ளைகளகளாவது தங்கள் கால்களில் நிற்பதற்கு பழகிக் கொள்வார்கள் - அவர்களுக்குக் கிடைத்த கல்வியின் மூலம் தங்களை நிலைநிறுத்திக் கொள்வார்கள், ஆனால் நான் சேர்த்து வைத்திருக்கும் புத்தகங்களுக்கு என்னவாகும் என்ற கவலை என்னைச் சிலகாலம் வாட்டியது என்னவோ உண்மைதான், ஆனால் நான் இப்ப அதையிட்டு நான் கவலையடைவதை விட்டு ஒரு detachment & unlearning மனநிலைக்கு வந்துவி்ட்டேன்''
என்ற சச்சியின் சொற்கள் என் காதுகளில் இன்னமும் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கின்றன என்றே சொல்லலாம்.
கொரோனா பொருந்தொற்றுக் காலத்தில் நான் இலங்கை திரும்பியிருந்த நிலையில் சச்சி நோய்த் தொற்றினால் மரணமடைய, அவரது பெறுமதிமிகு நூற்சேகரம் யானை வாயில் சிக்கிய கரும்பாகிய செய்தியும் நூல்சேகரிப்பாளராக என்னை இன்றும் வருத்திக்கொண்டிருக்கிறது.
வாசிப்புவெறிகொண்ட ஒருவருக்கு மனதிற்குப் பிடித்த வகை நூல்களைத் தேடும் அல்லது வாங்கும் வேளையில் சில பிறவகை நூல்களையும் பின்னர் வாசிக்கலாம், பின்னர் கிடைக்காமலே போய்விடுமோ என்ற அச்சத்தில் வாங்கி வைத்துக்கொள்ளும் ஒருவகை நோயின் தாக்கமும் ஏற்படுவதுண்டு. அதுவும் ஆய்வுப் பெறுமதியான நூல்கள் என்றால் அவற்றை வாங்காது விட்டுச் செல்வதென்பது முடியாத செயல். அவ்வாறாக நூற் சேகரத்தில் இணைந்த சில நூல்கள் வாசிக்கப்படாமலே தேங்கிக்கொள்ளும்.
சீ. ரா. ரங்கநாதனின் நூலக விதிகளின் சாரமாக ஒருநூல் தனக்குரிய வாசகனை அடைதலைத் தடுக்கும் ஒருவன், உண்மையில் வாசகனாகவே இருக்கமுடியாதென்பது என் முடிபு.
அந்தவகையில் தமிழர்களின் மலாயா இடப்பெயர்வை ஆவணப்படுத்தியிருக்கும் சில நூல்களைப் பொதிகட்டி வெளியேற்ற விரும்புகிறேன். ஏன் பொதிகட்டுதல் என்றால் - இதிலுள்ள 6 நூல்களை ஆறு வெவ்வேறான நபர்களுக்குக் கொடுப்பதால் எவருமே ஒரு முழுமையான வாசிப்பினை அடையமுடியாது, ஆகவேதான் பொதிகட்டல், ஒருவராவது முழுமையடையட்டும்.
இலங்கைத் தமிழர்களுக்கும், தனது மேற்படிப்பு ஆய்வுத் தலைப்பாக ''மலாயா இடப்பெயர்வை''க் கொண்டிருக்கும் ஆய்வு மாணவருக்கு (இலவசமாகவும்) முன்னுரிமை. நூல்கள் யாவும் யாழ்ப்பாணத்தில் உள்ளன.
அரிய நூல்களை விலை கொடுத்து வாங்க விரும்புகிறவர்களையும் வரவேற்கிறேன்.
சும்மா வெறுமனே ''மலாயா இடப்பெயர்வு'' தமது விருப்பிற்குரியதென்று கூறி இந்நூல்களைப் பெற்றுக்கொள்ள நான் இடம்தரமாட்டேன். இன்றைய திகதிக்கு முன்னராக அவர்களின் ''மலாயா இடப்பெயர்வு'' விருப்பிற்கான ஏற்றுக்கொள்ளக்கூடிய ஆவணம் ஒன்றினைக் காட்டுவது அவசியம். அது ஒரு சிறு கட்டுரையாகவோ அல்லது விருப்பமாகவோ ஏற்கனவே வெளிப்படுதிய அறிவிப்பு ஒன்றாக காட்டக்கூடியவாறு இருக்கவேண்டும்.
ஏற்றுக்கொள்ளக்கூடிய காரணங்கள் இன்றி இவற்றைத் தருவது எனக்கு உடன்பாடானது அல்ல. (பெற்ற மகளைத் தக்க ஒருவனு்கு மணமுடித்துக் கொடுத்தலிலும் பார்க்க கவனமாக இருக்கவேண்டும்)
யாழ் குடாநாட்டின் பலபகுதிகளிலிருந்தும் குறித்த தொகையானவர்கள் மலாயாவிற்குப் பெயர்ந்திருந்தபோதிலும் அவர்களைப் பற்றிய ஆய்வென்பது, இலங்கைப் பல்கலைக்கழகங்களில் முழுமையாக நடைபெறவில்லையென்பது என் அவதானிப்பு.
80களில் உலகின் பல பகுதிகளுக்கும் புலம்பெயர்ந்தவர்களின் மூன்றாம் தலைமுறைக்குப் பின்னரானவர்களைப் புரிந்துகொள்வதற்கு எமக்கு ஒரு வழிகாட்டியாக மலாயாவில் தங்கிவிட்ட அரியவகைத் தமிழர்களின் வாழ்க்கைப்பதிவுகள் அவசியம் என்பதாக நான் உணர்கிறேன்.
பொதியிலுள்ள நூல்கள்
- "The Hundred Years of Ceylonese in Malaysia and Singapore" - by Dr.S.Durai Raja Singam
- "The Legacy of the Pioneers - 125 years of Jaffna Tamils in Malaysia - by T.Selvaratnam & S.Apputhurai
- "The Legacy of the Pioneers - 125 years of Jaffna Tamils in Malaysia Volume II - by T.Selvaratnam & S.Apputhurai
- Glorious Malaya by S. Muthuthamby Pillai edited by Prof A. Veeramani.
- மலேசிய இந்தியர்களின் இக்கட்டான நிலை - ஜானகிராமன் மாணிக்கம்
- மலாயாக் குடிப்பெயர்வும் யாழ்ப்பாணச் சமூகமும் - சமாதிலிங்கம் சத்தியசீலன்
- (மலாயாவின் தோற்றம் - பழனியப்ப செட்டியார்) நூல் உள்ளது, தேடி எடுக்கவேண்டும்