Normal view

Received before yesterday

அரசியல் முரண்பாடுகளின் ஆதாரம் அரசியலில் மட்டும் இல்லை. அதற்கான வேர் சமூகத்திலும் பண்பாடிலும் பிணைந்திருக்கிறது - ஸ்டாலின் ராஜாங்கம் நேர்காணல்- 2

27 May 2025 at 09:49

ஸ்டாலின் ராஜாங்கம்

ஸ்டாலின் ராஜாங்கம் தமிழ் சமூகவியல் மற்றும் பண்பாட்டு ஆய்வாளர், செயல்பாட்டாளர். இலக்கிய ஆய்வாளர், ஊடக ஆய்வாளர். தலித் வரலாற்றை மீட்டெழுதுவதில் பெரும்பங்கு வகிக்கும் முன்னணிச் சிந்தனையாளர். கல்வியாளர். தமிழில் இன்று தலித் ஆய்வுகளில் ஒலிக்கும் முதன்மைக்குரலாக ஸ்டாலின் ராஜாங்கம் திகழ்கிறார். ஸ்டாலின் ராஜாங்கத்தின் அயோத்திதாசர் ஆய்வு, விடுபட்ட தலித் ஆளுமைகளின் மீதான ஆய்வு, தமிழ் சினிமாவில் உள்ள பண்பாட்டு கூறுகள் குறித்து என பதினைந்திற்கும் மேற்பட்ட நூல்கள் வெளிவந்துள்ளன. தொடர்ந்து பண்பாட்டு ஆய்வு கட்டுரைகள் இலக்கிய இதழில்களில் வெளிவந்துகொண்டிருக்கின்றன. காலச்சுவடு இதழ் உட்பட இலக்கிய இதழ்களின் ஆசிரியர் குழுவிலும் பணியாற்றி வருகிறார். 

ஸ்டாலின் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே முன்னூர்மங்கலம் என்னும் ஊரில் 19-7-1980 பிறந்தார். தந்தை ராஜாங்கம், அன்னை காளியம்மாள். மனைவி பூர்ணிமா. மகன்கள், புத்தமித்ரன், ஆதன் சித்தார்த். தற்போது மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்ப்பேராசிரியராக பணிபுரிகிறார்.

ஸ்டாலின் ராஜாங்கம்- தமிழ் விக்கி

சிந்து, சிலை, சின்னம் - ஸ்டாலின் ராஜாங்கம்

27 May 2025 at 09:40
photo courtesy: Sunil Abhiman Awachar

சாதி எதிர்ப்புப் போராட்டங்களின் வட்டார வரலாறு 

1928ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11ஆம் நாள் காஞ்சிபுரத்திற்கு அருகேயிருந்த அங்கம்பாக்கம் கிராமத்தின் சேரிக்குள் அதிகாலை ஒரு கும்பல் நுழைந்தது. 70க்கும் மேற்பட்டவர்களைக் கொண்டிருந்த அக்கும்பல் அங்கிருந்த தலித் மக்களைக் கண்மூடித்தனமாகத் தாக்கத் தொடங்கியது. எதிர்பாராத தாக்குதலால் நிலைகுலைந்த மக்கள் சிதறி ஓடத் தொடங்கினர். தாக்குதலை முடித்த கும்பல் குடிசைகளைக் குடிசைகளைக் கொளுத்தி விட்டு அங்கிருந்த குப்புசாமி என்பவரின் வீட்டை நோக்கி முன்னேறியது. அந்த வீட்டின் வெளிப்புறக் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைய முயன்றது. அப்போது வெளியூரிலிருந்து ஊர் திரும்பிக் கொண்டிருந்த குப்புசாமி சேரி மக்களின் நிலைமையை அறிந்ததோடு தம்வீடு சேதப்படுத்தப் பட்டிருந்ததையும் கண்டார். தன் குடும்பத்தினரின் நிலைமையை அறிய வீட்டிற்கு உள்ளே ஓடிய அவரை மறைந்திருந்த கும்பல் கடுமையான ஆயுதங்களோடு சூழ்ந்தது. நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த அவர் கதவைத் தாளிட்டுக்கொண்டு வீட்டிலிருந்த துப்பாக்கியால் தற்காப்பிற்காகக் கூரையை நோக்கிச் சுட்டார். ஆனால், கும்பல் வீட்டை வைக்கோலிட்டுத் தீயிட முயன்று கொண்டிருந்தது. பிறகு வேறுவழியில்லாத குப்புசாமி உள்ளிருந்த வாறே கும்பலை நோக்கித் துப்பாக்கியால் சுட ஆரம்பித்தார். மொத்தம் இருபத்தோருமுறை சுட்டார். இதில் 15 பேர் காயமடைந்தனர். 9 பேர் படுகாயமுற்றனர். ஐந்து உயிர்களும் போயின. இவையெல்லாம் முடிந்தபோது காலை மணி ஆறாகியிருந்தது. பிறகு சென்னை போலீஸ் கமிஷ்னருக்கும் கலெக்டருக்கும் தந்தி அனுப்பிய குப்புசாமி, போலீசார் வந்தபின்பு துப்பாக்கியை ஒப்படைத்தார். அவரோடு ஏழு தலித்துகளும் கைதுசெய்யப்பட்டனர். 

ஆடல் 9, கம்பப்பாடல்கள்: வஜ்ரபாகு - தாமரைக்கண்ணன் புதுச்சேரி

27 May 2025 at 09:31


சூரசம்மார நிகழ்வின் ஒரு பகுதியாக நடக்கும் கம்பம் ஏறும் சடங்கு கந்த புராணத்தின் வச்சிரபாகு பாத்திரம் ஒன்றை மையமாக்கி நிகழ்கிறது. வச்சிரபாகு என்னும் அரக்கன் தான் அந்த கம்பம், குறைந்தபட்சம் அறுபதடி உயரம் உள்ள கம்பம். இவன் இராவணனைப்போல பத்துத் தலையும் இருபது கரமும் உடையவன். வச்சிரம்பாகு என்னும் பெயருக்கு வச்சிரம் போன்ற உறுதியான தோள்களை உடையவன் என்று பொருள். 

ஆய்வு முடிவுகள் மட்டும் முக்கியமானவை இல்லை, முடிவுகளை வந்தடைவதற்கான முறைகளும் முக்கியமானவை - ஸ்டாலின் ராஜாங்கம் நேர்காணல்

5 April 2025 at 07:50
ஸ்டாலின் ராஜாங்கம்

ஸ்டாலின் ராஜாங்கம் தமிழ் சமூகவியல் மற்றும் பண்பாட்டு ஆய்வாளர், செயல்பாட்டாளர். இலக்கிய ஆய்வாளர், ஊடக ஆய்வாளர். தலித் வரலாற்றை மீட்டெழுதுவதில் பெரும்பங்கு வகிக்கும் முன்னணிச் சிந்தனையாளர். கல்வியாளர். தமிழில் இன்று தலித் ஆய்வுகளில் ஒலிக்கும் முதன்மைக்குரலாக ஸ்டாலின் ராஜாங்கம் திகழ்கிறார். ஸ்டாலின் ராஜாங்கத்தின் அயோத்திதாசர் ஆய்வு, விடுபட்ட தலித் ஆளுமைகளின் மீதான ஆய்வு, தமிழ் சினிமாவில் உள்ள பண்பாட்டு கூறுகள் குறித்து என பதினைந்திற்கும் மேற்பட்ட நூல்கள் வெளிவந்துள்ளன. தொடர்ந்து பண்பாட்டு ஆய்வு கட்டுரைகள் இலக்கிய இதழில்களில் வெளிவந்துகொண்டிருக்கின்றன. காலச்சுவடு இதழ் உட்பட இலக்கிய இதழ்களின் ஆசிரியர் குழுவிலும் பணியாற்றி வருகிறார். 

ஸ்டாலின் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே முன்னூர்மங்கலம் என்னும் ஊரில் 19-7-1980 பிறந்தார். தந்தை ராஜாங்கம், அன்னை காளியம்மாள். மனைவி பூர்ணிமா. மகன்கள், புத்தமித்ரன், ஆதன் சித்தார்த். தற்போது மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்ப்பேராசிரியராக பணிபுரிகிறார்.

ஸ்டாலின் ராஜாங்கம்- தமிழ் விக்கி

நாத்திகமும் பௌத்தமும்: ஸ்டாலின் ராஜாங்கம்

5 April 2025 at 07:49

பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைசி காலக்கட்டத்தில் நாத்திகம் பேசும் அமைப்பொன்று சென்னையில் உருப்பெற்றது. இந்து சுயாக்கியானிகள் சங்கம் (Hindu Free thought Union) என்னும் பெயரில் 1878ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த அமைப்பு 1886ஆம் ஆண்டு முதல் சென்னை லௌகீக சங்கம் (Madras Secular Society) என்று பெயர் மாற்றம் பெற்று செயல்பட்டது. காலனிய தமிழ்ச்சமூகத்தில் அறிமுகமான நவீன சிந்தனை போக்குகளின் தாக்கத்தால் உருவான இந்த அமைப்பு 19ஆம் நூற்றாண்டின் இறுதிக்குள்ளாகவே மங்கிப் போனதாகத் தெரிகிறது. இதழ்களை நடத்துவதென்பது அன்றைக்குத் தொடங்கப்பட்ட அமைப்புகளின் பிரதான அங்கமாக இருந்த நிலையில் லௌகீக சங்கம் சார்பாக ‘தத்துவவிவேசினி' (1882- 1888) என்ற தமிழ் வார ஏடும் The Thinker என்ற ஆங்கில வார ஏடும் நடத்தப்பட்டன. பிற்கால அரசியலில் பேசப்பட்ட நிலைபெற்ற நவீன அரசியல் கருத்துகள் சில தொடக்கவடிவில் இந்த இதழ்களில் பேசப்பட்டன. நாத்திகம் பிரதான பேசுபொருளாக இருந்து அதன் தொடர்ச்சியாக மேற்கத்திய அறிவியல் கருத்துகளை ஆதரித்தல், மூடநம்பிக்கைகளை இனங்காட்டி மறுத்தல், பிராமணர் மற்றும் வேதமரபு எதிர்ப்பு கருத்துகளை விவாதித்தல் போன்றவை இந்த இதழ்களில் பிரச்சாரம் செய்யப்பட்டன. இந்த அமைப்பின் செயற்பாட்டை இவ்விரண்டு இதழ்கள் வழி மட்டுமே அறிய முடிகிறது. இந்த இதழ்களை 125 ஆண்டுகளுக்குப் பிறகு 2013ஆம் ஆண்டு முறையே வீ. அரசு, வே. ஆனைமுத்து ஆகிய இருவரும் முன்பின்னாகத் தொகுத்து கொணர்ந்துள்ளனர். நவீன தமிழ்ச்சமூகத்தில் பின்னர் நிலைத்த பல்வேறு கருத்துகளின் அறிமுக காலத்தைச் சேர்ந்தவை என்ற வகையில் இத்தொகுப்புகள் முக்கியமானவை. நவீன தமிழ்ச்சமூகத்தின் தொடக்ககாலம் பற்றிய புரிதலுக்கு இவற்றிலிருந்து புதிய தரவுகளைக் கண்டெடுப்பதே இதுபோன்ற தொகுப்புகளுக்கு நாமளிக்கும் மரியாதையாக இருக்க முடியும். அந்த வகையில் இந்த இதழ்களில் வெளிப்பட்ட கருத்துகளின் தொடர்ச்சியையும், பிந்தைய காலத்தில் வேறு கருத்து நிலைகளோடு அவை உசாவியதன் மூலம் அடைந்த மாற்றங்களையும் காண முயல்வதே இக்கட்டுரையின் நோக்கம். இந்தத் திசையில் இதுவொரு தொடக்கநிலை பதிவாகும். எதிர்காலத்தில் விரியத்தக்கதாகும்.

ஒரு முதன்மைத்தரவு உங்கள் வாழ்க்கை முழுவதற்குமான செயல்களத்தை வழங்குகிறது- உதயசங்கர் நேர்காணல்

25 November 2024 at 07:29
உதயசங்கர்

தொல்லியலை இணையம் வழியாக அனைவருக்கும் கொண்டுசெல்லும்  தன்னார்வலர் உதயசங்கர். தனது இணையதளத்தின் மூலம் தமிழ் கல்வெட்டுகளை அனைவரும் ஒரே இடத்தில் படிக்கும்  வாய்ப்பை உருவாக்கியிருக்கிறார். பயனர் தனக்குத் தேவையான கல்வெட்டுகளை அரசு, நிலவியல், செய்தி போன்றவற்றின் அடிப்படையில் எளிதாக தேடி எடுக்கும்படி 8500 கல்வெட்டுக்களுக்கான தேடுபொறியை இணையத்தில் பொதுப்பயன்பாட்டுக்கு செய்தளித்துள்ளார். கல்வெட்டுகளை எளிதாக புரிந்துகொள்ள கல்வெட்டு அகராதி, சொற்களஞ்சியம் , கல்வெட்டு காலவரிசை ஆகியவையும் அவரது வலைதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. 

உதயசங்கரின் சொந்த ஊர் மதுரை. இயந்திரவியல் (Mechanical Engineering) படித்தவர், தற்போது சென்னையில் ஆர்க்கிடெக்சுரல் 3D ரெண்டரிங் அண்ட் எஸ்டிமேஷன் (கட்டிட முப்பரிமாண உருவாக்கம் மற்றும் மதிப்பீடு) பணி புரிகிறார்.

முதல்வினா- அனங்கன்

25 November 2024 at 07:25

இந்தியர்களாகிய நம்மில் ‘வேதம்’ என்ற சொல்லை கேள்விப்படாதவர்கள் மிகச் சிறிய அளவில் தான் இருப்பார்கள். நேர்நிலையாகவோ எதிர்நிலையாகவோ வேதம் என்பதை அறிகிறவர்கள் எவ்வளவு பேர் அதை மேலும் அறிய முற்பட்டிருப்பார்கள்  என்று தெரியாது. சொற்பொழிவுகள் அறைகுறை தத்துவ நூல்கள் மூலம் அறிபவர்கள்  வேதங்கள் முக்திக்கான வழிமுறை மற்றும்  நல்லொழுக்கங்கள் ஆகியவற்றால் ஆனது என்று நினைக்கிறார்கள். ஒருமுறை எனது நண்பர் வேதத்தில் முக்தியை பற்றி என்ன சொல்லிருக்கிறது என்று கேட்டார்.  வேதங்கள் {முக்தி} விடுதலையைப் பற்றி எதுவும் சொல்லவில்லையே என்று சொன்னேன். அவரால் அதை நம்பமுடியவில்லை. நீங்கள் இன்னும் ஆழ்ந்து வாசித்துப்பாருங்கள் எங்காவது சொல்லப்பட்டிருக்கும். வேதத்தில் சொல்லப்படாத கருத்து எவ்வாறு இத்தனை பெரிய அளவில் வளர்ந்திருக்க முடியும் என்று வாதிட்டார். இதே எண்ணம் பலருக்கும் இருக்கலாம் ஆனால் வேதம் சொல்வது அவற்றை அல்ல.

இந்தியக் கவிதையியல் - 1: தோற்றுவாய், தீ.ந.ஶ்ரீ கண்டய்யா

15 September 2024 at 17:48
தீ.ந.ஶ்ரீ கண்டய்யா

அறிமுகம்

முதுகலைத் தமிழ் பயிலும் மாணவர்களுக்கு இலக்கியக் கொள்கைகளையும், திறனாய்வையும் கற்பிக்கும் பாடநூல்களை அத்துறை அறிஞர்கள் எழுதியிருக்கிறார்கள். இவர்கள், தங்கள் நூல்களில் ஐரோப்பிய இலக்கியக் கொள்கைகளை மாணவர்களுக்கு புரியும் வண்ணம் எளிமையாகவே விளக்கியிருக்கிறார்கள். இலக்கிய நுண்ணுணர்வு முற்காலத்தில் தமிழ்ச்சூழலில் எவ்வாறு விளங்கியது என்பதையும் இவர்களின் பாடநூல்கள் எடுத்துக்காட்ட தவறவில்லை. 

ஆடல் 7, செவ்வேள் ஆடல் -கம்பப்பாடல்கள் , தாமரைக்கண்ணன் புதுச்சேரி

15 September 2024 at 17:47
குக்கே சுப்ரமண்யர்

சூரசம்கார கூத்து

அங்கப் படைவிட் டன்றைப் படுகைக்
கந்திக் கடலிற் ...... கடிதோடா
அந்தப் பொழிலிற் சந்துத் தலையுற்
றஞ்சப் பொருதுற் ...... றொழியாதே
செங்கைக் கதிருற் றொன்றக் கடலிற்
சென்றுற் றவர்தற் ...... பொருளானாய்
சிந்தைக் கனிவைத் தந்தப் பொழிலிற்
செந்திற் குமரப் ...... பெருமாளே.

தனது சேனையை விட்டு கடலை தாண்டி சூரன் நகரான மகேந்திரபுரத்தில் தூது சென்று, அசுரர்கள் அஞ்ச போர் புரிந்து சிவந்த கிரணங்களை உடைய சூரியனை ஒத்து கடலிலிருந்து திரும்பி வந்த வீரபாகுவின் ஆவியான முருகா, பொழில் சூழ்ந்த செந்தூரில் உறையும் குமரா

(கொங்கைப் பணையிற் என்று துவங்கும் திருச்செந்தூர் திருப்புகழ்)

அச்சிலிருந்து திரைக்கு - தியடோர் பாஸ்கரன்

15 September 2024 at 17:46

ஜெயகாந்தனின் திரை உலகம்

பிரித்துப்பார்க்க முடியாத அளவிற்கு அரசியலுடன் சினிமா பிணைந்திருக்கும் தமிழ்ச் சூழலில், இடதுசாரி தரப்பிலிருந்து சில தற்காலிக இடையீடுகள் நடந்துள்ளன. அவற்றுள் ஜெயகாந்தனின் முயற்சிகள் நாம் கவனிக்கவேண்டிய தகுதிவாய்ந்தவை. அதிக தாக்கத்தை உண்டாக்கிய அவரது விரிவான இலக்கியப் படைப்புகளின் வெளிச்சத்தால், தமிழ் சினிமாவுக்கு அவர் ஆற்றியுள்ள பங்களிப்பு பலசமயம் கணக்கில் எடுத்துக்கொள்ளப் படுவதில்லை. தமிழ் சினிமாவுக்கும் வெள்ளித் திரைக்குமான அர்த்தப்பூர்வ உரையாடலை தொடங்கி வைத்ததே அவர்தான். அவ்வப்போது நிகழும் சில தெறிப்புகளை தவிர அவ்வுரையாடல் தொடர்ந்து நிகழவில்லை என்பது வேறு விஷயம். அவருடைய பல கதைகள் படமாக்கப்பட்டிருக்கும் நிலையில், தன் சொந்த கதைகளை ஆதாரமாகக் கொண்டு, அவர் இயக்கிய இரு படங்களுமே தமிழ் சினிமாவின் வரலாற்றில் முக்கியமானவை. 1965 இல் அவர் உருவாக்கிய உன்னைப் போல் ஒருவன், பின்னர் அடுத்த வருடமே அவர் இயக்கிய யாருக்காக அழுதான் (1966) ஆகிய படங்கள், ஒரு எழுத்தாளர் தன் சொந்த இலக்கிய ஆக்கங்களை தானே படமாக்கிய அரிய நிகழ்வுகளுள் முக்கியமானவை.

Archaeological views on Thirukural - S. Vasanthi

15 September 2024 at 17:44

Abstract: 

Thirukkural was written in Tamil around the end of the first century B.C.E., during this period outstanding didactic poetry primarily to Jainism were written. Tirukkural was not only a book that preaches moral and art of living leading a life of virtue in the society. Apart from these facts the condition of social and economic perspectives are prevalent in Thirukkural. The recent developments in the field of archaeology, epigraphy of Tamil country needs to be reviewed in the context of the great work Thirukkural. It is right time to analyse and review the old available data’s with the light of currently available material and interprets them with the present scenario with historic perspective.

❌