Normal view

Received before yesterday

‘சொல்வனம்’ எழுத்தாளர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்!

ஏப்ரல் 5 சனிக்கிழமை தரு பதிப்பகத்தாரால் ஐந்து நூல்கள் வெளியிடப்பட்டன. மொழியாக்கம் செய்யப்பட்ட சிறுகதை தொகுப்புகள் இரண்டு. மலையாளத்திலிருந்து தமிழில் அரவிந்த் வடசேரி மற்றும் வட இந்திய மொழிகளிலிருந்து தமிழில் அனுராதா க்ருஷ்ணஸ்வாமியால் மொழிபெயர்க்கப்பட்ட கதைகளடங்கிய தொகுப்புகள். ஆவநாழி மின்னிதழ் ஆசிரியர் சுதேச மித்திரனின் 'கோபுரம் தாங்கி' சிறுகதை தொகுப்பின் இரண்டாம் பதிப்பு, ஆவநாழி மின்னிதழில் வெளிவந்த தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு மற்றும் ஓவியர் ஜீவா அவர்களின் திரைப்படம் சார்ந்த கட்டுரைகளின் தொகுப்பு. இப்படியாக ஐந்து நூல்கள் வெளியிடப்பட்டன.

செயற்கை நுண்ணறிவு : இயற்றறிவு கவிதைகள்

நீ சொன்னாய்: "உன் தாய்நாட்டைப் பற்றிச் சொல்" நான் என் நாக்கை கடித்தேன். எப்படி விவரிப்பது தீயில் மூழ்கும் வீட்டை? எப்படி விவரிப்பது கடலில் மிதக்கும் பெயர்களை? எனது தாத்தா கவிதை போல வாழ்ந்தார், வார்த்தைகள் அவரது உடலில் வடுக்களாக. இங்கே, வெளிச்சத்தில், நான் நிழல் மட்டுமே, அவரது கதையின் ஒரு துண்டு. இந்தப் பழைய புகைப்படத்தில், அம்மா சிரிக்கிறாள், அவளது கண்களில் இன்னும் கனவுகள் இருக்கின்றன. அப்போது அவள் தெரியவில்லை

சொல்வனம் சிறப்பு வெளியீட்டு அறிவிப்பு: “கவிதையின் நேரம் – சொல்வனம் சிறப்பிதழ்”

இதழ்-340 – சொல்வனம் | இதழ் 340 | 13 ஏப் 2025 அன்பார்ந்த வாசகர்களுக்கும் கவிஞர்களுக்கும், சில தவிர்க்க முடியாத சூழ்நிலைகளாலும், “கவிதையின் நேரம்” என்ற சொல்வனம் சிறப்பிதழுக்கான சிறப்பு தொகுப்புப் பணிகளின் காரணமுமாக, இம்முறை சொல்வனம் இதழ் சிறிது தாமதமாகி, ஏப்ரல் 30 அன்று பிரசுரிக்கப்படும் "சொல்வனம் சிறப்பு வெளியீட்டு அறிவிப்பு: “கவிதையின் நேரம் – சொல்வனம் சிறப்பிதழ்”"

மனித ஆன்மாவின் நெசவு

இலக்கியத்தை மொழியின் கிரீடம் என்று கருதினால் அதன் மீது அமர்ந்திருக்கும் இறகு என கவிதையை உருவகிக்கலாம். மனித மனதிற்கு அதன் இயல்பில் தர்க்க ஒழுங்குகள் இல்லை, அது மொழியினூடாக ஒரு பயிற்சியாகவே வந்து சேர்கிறது. நாவல்களும் சிறுகதைகளும் கவிதை அல்லாத பிற இலக்கிய வடிவங்களும் மொழி கட்டமைக்கும் இந்த தர்க்கத்தினூடாகவே வாசகனிடம் உரையாடுகின்றன, கற்பனை விரிவினால் சிந்தனைகளை மறுவரையறை செய்கின்றன. கவிதை மொழிக்குள் தர்க்கமற்ற தூய இருப்பாக ஒளிந்திருக்கும் ஏதோ ஒன்றைத்தான் தொட எத்தனிக்கிறது. அதன் வாயிலாக ஆழ் மனதின் தர்க்கமற்ற ஒரு பரப்பை சீண்டுகிறது.

விழியங்கள் – புனைவு வனம் + வினா வனம்

புனைவு வனம் எழுத்தாளர் கணேஷ் ராம் உடன் ‘தெப்பம்’ குறுநாவல் குறித்த உரையாடல்: சொல்வனம்.காம்: ஆசிரியரை சந்திப்போம் சொல்வனம்.காம்: புனைவு வனம்: எழுத்தாளர் ஷங்கர் பிரதாப் உடன் சந்திப்பு: ‘உயிர்வளி’ குறித்த உரையாடல் எழுத்தாளர் பாலாஜி ராஜு – Writer Balaji Raju Short Stories: Review and "விழியங்கள் – புனைவு வனம் + வினா வனம்"

குவாண்டம் கணி 101

குவாண்டம் கணிப்பீடு என்றால் என்ன? பாரம்பரிய கணிப்பொறிகளின் (classical computers) ஒப்பிடுகையில், குவாண்டம் கணிப்பொறிகள் எவ்வாறு வேறுபடுகின்றன? குவாண்டம் பிட்ஸ் (qubits) என்றால் என்ன, மேலும் அவை எப்படி வேலை செய்கின்றன? குவாண்டம் superposition மற்றும் entanglement என்றால் என்ன? குவாண்டம் கணிப்பொறிகளை எந்தெந்த துறைகளில் பயன்படுத்த முடியும்?

சாட் ஜிபிடி-யால் என்ன செய்ய முடியும்?

ஏஐ என்றால் என்ன? சாட்ஜிபிடியா? நம் உருவத்தை மாற்றி ஏமாற்றும் ஒரு பொதியா? ஏஐ - பல வருடங்களாகவே இருக்கிறதே!? ஐபிஎம்மின் டீப் ப்ளு செஸ் விளையாட்டில் 1997ல் மனிதர்களை தோற்கடித்தது. ஆனால் இப்ப சமீப 4-5 ஆண்டுகளில் ஏன் இந்த திடீர் சுறுசுறுப்பு? சமிபத்தில் அநிருத் மலேசியா வாசுதேவனின் குரலை ஏஐ மூலம் மீள் உருவாக்கம் செய்திருந்தார். இதன் மூலம் வருங்காலம் இசை, அமைப்பாளர் பாடகர்கள் எல்லாருக்கும் என்ன பணி மீதம் இருக்கும்?
❌