Normal view

Received before yesterday

மாதுளை மங்கை (சிறார் கதை) – தீபா சிந்தன்

31 May 2025 at 11:35
சரியாக நான்கு பருவநிலை மாற்றங்களுக்கு முன்பு ஆச்சி எங்கள் வீட்டை விட்டுச் சென்றார்.  ஒருநாள் காலை திடீரென நான் கண்விழித்துப் பார்த்தபோது ஆச்சியை வீட்டில் காணவில்லை. அவருடைய கைத்தடி மட்டும் கட்டிலுக்குப் பக்கத்தில் இருந்தது.  ஆச்சியிடம் அதைக் கொடுப்பதற்காக கைத்தடியை எடுத்துக்கொண்டு நான் சென்றேன்.  எப்போதும் அவர் இருக்கும் மாட்டுத் தொழுவத்திற்கு ஓடிச்சென்று பார்த்தேன். ஆனால் அங்கு அவர் இல்லை.  பின்னர் வைக்கோல் வைத்திருக்கும் களத்திற்குச் சென்றேன். அங்கும் ஆச்சி இல்லை.  தண்ணீர் எடுக்க குளத்திற்கு சென்று […]

Source

தொலைந்து போன நரி (சிறார் கதை) – தீபா சிந்தன்

3 May 2025 at 04:30
அகிலா மாஞ்சோலை மலை அடிவாரத்தில் தன் குடும்பத்தோடு வசித்து வந்தாள். அவளது அப்பா தச்சு வேலைகளை செய்யும் தச்சர். அதென்ன தச்சு வேலை? மரப்பலகைகளில் இருந்து கலை பொருட்கள் செய்வதும், கட்டிடங்களுக்குத் தேவையான கதவுகள், ஜன்னல்கள் செய்வதும் அவரது தொழில். அதற்காக மாஞ்சோலை மலை அடிவாரத்தில் குடிசை அமைத்து அவர்கள் வசித்து வந்தனர். அந்த பகுதிக்கு அருகே ஒரு அடர்ந்த வனப் பகுதியை இருந்தது. அந்த மலைக் குன்றில் ஆங்காங்கே ஓரிரு வீடுகள் இருந்தன. அக்கம் பக்கத்தில் […]

Source

உருளைக்கிழங்கு செல்லக்குட்டி (சிறார் கதை) – தீபா சிந்தன்

5 April 2025 at 07:59
உமருக்கு செல்லப்பிராணிகள் என்றால் மிகவும் பிடிக்கும்.அவன் பெற்றோரிடம் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் செல்லப்பிராணி ஒன்று வாங்கிக் கேட்பதில் தவறுவதே இல்லை. “அம்மா, அம்மா, எனக்கு ஒரு நாய்க்குட்டி வாங்கித் தரீங்களா?” என்று அவன் கேட்காத நாளே இல்லை எனலாம். ஆனால், அவன் பெற்றோரோ, “நாய்க்குட்டிலாம் வேணாம், உமர். செல்லப்பிராணிகளைப் பாதுகாத்து வளக்குற அளவுக்கு நமக்கு எங்க நேரம் இருக்கு? அதுவும் நாய்க்குட்டி வளக்குறது எல்லாம் ரொம்ப சிரமம். அதுக்குத் தினமும் சாப்பாடு கொடுக்கணும், வெளிய நடக்கக் கூட்டிட்டுப் […]

Source

❌