Normal view

Received before yesterday

தேசாந்திரியோடு ஒரு புகைப்படம்

புத்தக வெளியீட்டு விழாவில் எஸ்.ரா தம்பதியினரோடு ஒரு புகைப்படம் எடுக்க நினைத்திருந்த போதும், வழக்கம் போல் மறந்துவிட்டோம். எனவே இன்று புத்தகக் கண்காட்சியில் தோழர் எஸ். ராவை தேசாந்திரி அரங்கில் கண்டு, ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டோம்.

சஞ்சாரம் நாவல் வாசிப்பனுபவம்

பக்கிரியை பொருத்தவரை நாதஸ்வரம் என்ற கருவி விசித்திரமானது. ஒரு சாவியை போல் அவன் மனதை திறந்து புதைந்துள்ள ரகசியங்களை, சந்தோஷத்தை, கண்ணீரை, வலிகளை காட்டுகிறது. ஈர வேட்டி உளர்வதைபோல் மனம் எடையற்று போய்விடுகிறது. சிலசமயம் குளத்தில் மூழ்கிச் சென்று மண் எடுப்பது போல் மூச்சு திணறுகிறது, உடல் முழுதும் கண் முளைத்தது போலும் தோன்றும்.  வாசிப்பில் ஆழ்ந்தால் உடலே இல்லமால் போய்விடுவதை உணர்கிறான். அந்த உணர்வில் பெறும் ஆனந்தத்தை அடைகிறான்.
❌