Normal view

Received before yesterday

செஞ்சீலை

காட்சி அவன் தர்க்கத்திற்குள் சிக்க மறுத்துக் கொண்டிருந்தது போலும். கதிரவன் தியானத்தில் திளைப்பவன் போல அசையாது இருந்தான். புளியமரத்தடியில் இருவரும் பூசைக்கான ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தனர். சாமிக்குப் போட்டு கழிந்த மாலைகள், திருநீறு, குங்குமம், சூடகம், ஊதுபத்தி, தீப்பெட்டி, பன்னீர் குப்பி, உடைந்த சிறு மண்பானை ஓடு, வேப்பிலை கொத்து, சிவப்பு பட்டு சால்வை என எல்லாமே சம்பாதித்து வந்திருந்தனர் எப்படியோ. நீள் வாக்கில் கிடந்த சிதைந்த சிறிய வேலி கருங்கல்லைப் பிரதிஷ்டை செய்து அலங்கார பணிவிடை நடந்து கொண்டிருந்தது. 
❌