Normal view

Received before yesterday

வேடன்

குரு அரவிந்தன்

வேடன் என்றால் என்வென்று யோசிபீர்கள், சங்க இலக்கியத்தில் வேட்டுவன் என்ற சொல் பாவனையில் இருந்திருக்கிறது. வேடன் என்றால் வேட்டையாடுபவன் என்றும் பொருள் படலாம். நான் இங்கே சொல்ல வந்தது ‘வேடன்’ என்ற புனைப்பெயர் கொண்ட ஒரு பாடகனைப் பற்றியது. இவர் பாடல்களையும் எழுதியிருக்கின்றார். இன்று எங்கள் சமூக ஊடகங்களில் அதிகம் பேசப்படும் சொல்லாகவும் இந்த வேடன் சொல் இருக்கின்றது.

ஹிரந்தாஸ் முரளி என்று சொல்லப்படும் 30 வயதான இவரது தந்தை கேரளாவையும், தாயார் யாழ்ப்பாணத்தையும் சேர்ந்தவர்கள். இவர் திருச்சூரில் பிறந்தார். இவர் தனது மார்பிலே ‘அ’ என்ற தமிழ் உயிரெழுத்தின் முதல் எழுத்தைப் பெரிதாகப் பச்சை குத்தியிருப்பதால், தமிழ் இசைப் பிரியர்களின் பார்வை இவர்மீது திரும்பியது. பாலக்காட்டில் நடந்த ஒரு நிகழ்ச்சியின் போது இதுவரை இவ்வளவு கூட்டம் எந்த ஒரு இசை நிகழ்ச்சிக்கும் சேரவில்லை என்று அறிவிப்பாளர் குறிப்பிட்டார். கனடாவைச் சேர்ந்த ஒரு இளம் பெண்கூட இவரது பாடல்வரிகளுக்கு ஏற்ப பாவனை செய்து தனது முகநூலில் பதிவிட்டிருக்கின்றார்.

ஒரு காலத்தில் மைக்கல் ஜாக்ஸன் எப்படி பரதநாட்டியத்தை தனது காணெளியில் கலந்து வெளியிட்டுத் தமிழர்களிடையே பிரபலமானாரோ, அதேபோல இவர் தமிழர்களின் பறை இசையைக் கலந்து கேரள மக்களைக் கவர்ந்து வருகின்றார். இதைவிட ஒடுக்குமுறை குறித்த துணிச்சலான இவரது பாடல் வரிகளுக்காக ‘வாய்ஸ் ஆஃப் தி வாய்ஸ்லெஸ்’ என்ற தனது முதல் இசை காணெளி மூலம் அவர் பிரபலமானார். ‘பூமி என்ஜன் வாழுனிதம்’ என்ற இசைத்தட்டு அடுத்து வெளிவந்ததும் இன்னும் ரசிகர்கள் அதிகமாயினர்.

ஒருவர் தனது துறையில் வேகமாக வளர்ந்து பிரபலமாகும் போது, அவர்மீது அவதூறு சொல்லவும் சிலர் இருப்பார்கள். தங்களால் முடியவில்லையே என்ற ஆதங்கம் வெறுப்பாக மாறலாம். அதுவே பிரபலமனவரை பெண்களுடன் தொடர்பு படுத்தியோ அல்லது போதை வஸ்துவுடன் தொடர்பு படுத்தியோ சில பொது ஊடகங்களில் உள்ளவர்கள் அவதூறுகளை எழுதத் தொடங்கிவிடுவார்கள். இவர் முகநூலில் பெண்களைப் பற்றி தவறாக எழுதினார் என்றும், இவரது நண்பர்கள் போதை வஸ்;து வைத்திருந்தனர் என்றும், தனது கழுத்திலே புலிப்பல்லைக் கட்டித் தொங்கவிட்டார் என்றெல்லாம் இவர் மீது குற்றங்கள் சுமத்தப்படன. 

வேடனை முளையிலே கிள்ளி எறிந்துவிட வேண்டும் என்று சில பிரபலங்கள் முயற்சி எடுத்தார்கள், எந்தப் பொலிஸார் கைது செய்து காவலில் வைத்தார்களோ அவர்களே இப்போது பாதுகாப்பாய் அவரை நிகழ்ச்சிக்கு அழைத்து வருவதற்குக் காரணம் மக்கள் குரல் அவருக்குப் பின்னால் இருப்பதுதான்.

இசையுலகில் நீர்க்குமிழி போல உடைந்து போவாரா அல்லது  இதையெல்லாம் கடந்து இவர் செல்வாரா என்பதைக் காத்திருந்துதான் பார்க்க முடியும்.

கவிஞர் ஆத்மாஜீவுக்கு உதவிதேவை

3 June 2025 at 11:42

கவிஞர் ஆத்மாஜீவுக்கு உதவிதேவை

C:\Users\computer\Desktop\ATHMAJIV\493264165_1822589748308751_7037754692867415298_n.jpg

_ லதா ராமகிருஷ்ணன்

காலக்ரமம் என்ற சிற்றிதழைக் கைக்காசு போட்டு நடத்தியவர். கணிசமான எண்ணிக்கையில் தரமான கவிதைகள் எழுதியிருப்பவர்; எழுதிவருபவர் கவிஞர் ஆத்மாஜீவ். சமீபகாலமாக உடல்நலன் குன்றி, கூடவே மகளின் திருமணம், பிரசவகால சிக்கல்கள் ஆகியவற்றால் கடனாளியாகி, தான் செய்துகொண்டிருக்கும் கணினி தட்டச்சுவேலையையும் சரிவர செய்ய இயலாமல் மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறார். ஃபேஸ்புக்’கில் வெளியாகிக்கொண்டிருக்கும் அவருடைய சமீப கால கவிதைகள் அவருடைய வாழ்வியல் சார் நெருக்கடியை, இயலாமையை, அதனால் அவர் ’ஃபேஸ்புக்’ நட்பினரிடம் உதவி யாசிக்கவேண்டிய கட்டாயத்தில் இருப்பதை, அப்படி அவருக்கு சிலர் உதவ முன்வருவதை, வேறு சிலர் அவரை அதற்காகப் பரிகசிப்பதை, மதிப்பழிப்பதையெல்லாம் கவித்துவம் குறையாத கவிதை களாக வெளிப்படுத்துகின்றன. ஆனால், அவற்றின் கவித்துவத்தைப் பூரணமாக அனுபவிக்க முடியாதபடி அவருடைய இக்கட்டான நிலை நமக்குள்ளும் ஒரு அலைக்கழிப்பை ஏற்படுத்துகிறது. [கவிஞர் ஆத்மாஜீவை மின்னஞ்சல் மூலம் நான் கண்ட பேட்டி பதிவுகள் இணைய தளத்தில் 28 மார்ச் இதழில் வெளியாகியுள்ளது. அதன் இணைப்பு  இதோ: https://www.geotamil.com/…/202…/9055-2025-03-28-18-07-45 ]

ஆத்மாஜீவின் சமீபகால கவிதைகள் சில:

ஒவ்வொரு விடியலிலும் 

இரவின் வாசனை

கவலைகளின் படுக்கையில் 

படுத்திருப்பது நினைவுகளின் 

உடல்.

துயரின் போர்வைக்குள் 

ஒளிந்து கொள்கிறேன்.

ஆறுதல்களின் காற்றில் மனம் 

நொடிநேர ஆசுவாசமாகிறது.

கடந்து போகிற சாலைகளில் 

இரத்தச் சுவடுகள் பதிகிறது.

எனது முகத்தைப் பார்க்கும்போது 

யாரோவின் முகமாகத் தெரிகிறது.

கடவுளே 

எங்கே நான் தொலைந்து போனேன்.

ஆத்மாஜீவ்

உற்சாகம் மிகுந்த 

நொடிகளுக்காக ஏங்குகிறேன்.

கவலைகள் படிந்த 

இந்த முகத்தைப் பிடிக்கவில்லை.

கம்பீரமான வார்த்தைகள் 

ஒதுங்கி நிற்கிறது.

ஒரு காலத்தில் 

சிரித்துக் கொண்டிருந்ததாக ஞாபகம்.

கொடுத்துக் கொண்டிருந்த கைகள் 

ஏந்திக் கொண்டிருக்கும் ஓவியத்தை 

வரைகிறேன் இப்போது.

உற்சாகம் இழந்து 

கவலைகள் படிந்த முகத்துடன் 

அலையும் என் கண்களில் படிகிறது 

ஒரு பிச்சைக்காரனின் வலி.

ஆத்மாஜீவ்

#ஆதிவிதையின்_நிழல்

ஜன்னல்கள் எல்லாவற்றையும்

சாத்தி விட்டேன்

அறையின் நடுவில் எரிந்தபடி இருக்கிறது

சிறிய அகல்விளக்கு

அகண்ட நெருப்புக்கோளத்தின்

அடையாளமாக

எனது முக ஓவியம் தீட்டப்பட்ட மேல்சுவற்றில்

இரண்டு நட்சத்திரங்கள் மட்டும்

இடையறாமல் ஒளிர்ந்து கொண்டு இருக்கிறது

மூன்றாம் கண்ணிற்குள் அமர்ந்து

வாசித்துக் கொண்டிருக்கும் புத்தகத்தில்

எழுத்துகள் எதுவும் பதிக்கப்படவில்லை

வருவதும் போவதற்குமான

இடைவெளிகளில் நிற்கும் கடவுளை

கண்டு கொள்வதாயில்லை யாரும்

திறந்தே இருக்கும் வாசலின் கதவை

தட்டியபடி நிற்கும் கரங்களில் வழிகிற

குருதியிலிருந்து மறுபடி முளைக்கிறது

ஆதிவிதையின் நிழல்

ஆத்மாஜீவ் 

#காற்றில்_புரளும்_காலத்தின்_ஏடுகள்.

காலத்தின் ஏடுகள் காற்றில் புரள்கிறது.

சுவற்றில் வரையப்பட்ட கிறுக்கல்களாய் 

எனது வார்த்தைக் கூட்டங்கள்.

ஈரத்துணியை முறுக்கிப் பிழிவதுபோல் 

இருக்கிறது எனது வாழ்க்கை.

உயிருணர்வு மிக்க நிழல் 

உலவுகிறது.

கனிதரும் மரங்களை வரைகிறேன்.

ஈரமுலராத மண்ணில் வேரூன்றி நிற்கிறது

அது.

கடந்து போகும் பாதையில் இரைந்து 

கிடக்கத்தான் செய்யும் கல்லும் முல்லும்

மெல்ல ஓதுகின்றன 

என்னுள் ஐக்கியமாகும் இறைநிழல்கள்.

எனது துயரங்களின் குரலை 

கருணையுடன் கேட்கும் காதுகளை 

கடவுளின் வரவாக இருப்பில் வைக்கிறேன்.

எதையும் கேட்க விரும்பவில்லை 

நான்.

பயணத்தின் பாதை முடிகிற போது 

வண்டியிலிருந்து இறங்கிச் செல்லும் 

ஒரு வழிபோக்கனின் கடைசி பாதச்சுவட்டில் 

விதை ஒன்றை புதைக்கிறேன்.

யாரும் எதுவும் செய்ய வேண்டாம்.

காற்றில் புரளும் காலத்தின் ஏடுகளிலிருந்து 

ஒருக்கால் 

மலர் ஒன்று மலரக் கூடும்.

ஆத்மாஜீவ்

என் வாழ்வின் கடைசித் துயர்

உதிரப்போகும் இலையின் அசைவு.

கல்தூணை விரும்பாதவனின்

எளிமையான விடைபெறுதல்.

சொற்களால் அடையாளப்பட்டவனின் மொழி

தனிமையின் வனாந்தரத்தில் அலைகிறது.

எழுதப்படாத புத்தகத்தின் வெற்றுப் பக்கத்தில்

கண்சிமிட்டிக் கொண்டிருக்கிறது

முற்றுப்புள்ளி.

நடந்து கொண்டேயிருக்கிறேன்

பாம்பின் சட்டையை உரித்துக் கொண்டு.

யாசித்து அழுகிய கைகளை

எங்கே சென்று புதைப்பேன்.

ஆத்மாஜீவ்

கவிஞர் ஆத்மாஜீவின் வேண்டுகோள் இது. முடிந்தவர்கள் உதவ மறவாதீர்கள்

கவிஞர் ஆத்மாஜீவ் கைகூப்பிக் கேட்கிறேன்.

நட்பினர்களுக்கு என் அன்பான வணக்கம். 🙏

என் இதயத்திலிருப்பதை என் நட்பினரிடம் மனம்விட்டு சொல்கிறேன். 

ஓரிரு நிமிடங்கள் இந்தப் பதிவை தயவுசெய்து வாசிக்கும்படி பணிவுடன் வேண்டுகிறேன்.

இப்படி தொடர்ந்து உதவிகேட்டு பதிவிடுவதும், அதன் லிங்கை இன்பாக் சில் அனுப்பி யாசிப்பதும், எனக்கு மிக அவமானமாகத்தான் இருக்கிறது. ஒரு குற்றவுணர்ச்சியுடன்தான் வேறுவழியின்றி நண்பர்களை சங்கடப்படுத்திக் கொண்டிருக்கிறேன்.

எனது உடலும் மனமும் முற்றிலும் தளர்ந்து விட்டது. உணவுக்கான தேவையைக்கூட பூர்த்தி செய்து கொள்ள முடியவில்லை. அன்புமகளின் வாழ்க்கை கேள்விக்குறியாகி விட்டது. 

கழுத்தை நெறிக்கும் கடன்பிரச்சனை ஏறுமுகமாகவே இருக்கிறது. அதிகப் படியான மனஉளைச்சலின் காரணமாக மூன்று வாரத்திற்குமுன் நான் மூர்ச்சையிழந்து சாவை சந்தித்து, ஆக்சிஜன் மூலம் மறுஉயிர்த்தெழந்ததில் ஏகப்பட்ட மருத்துவச்செலவு. இரண்டு வாரங்களாக வேலைக்கு செல்ல முடியாமல் போனது. இப்போதும் நீண்ட நேரம் அமரமுடியாதநிலை. மயக்கமும், மிகுந்த அழுத்தமான மனவேதனையும் சூழ்ந்திருக்கிறது.

இப்படி உதவி கேட்டு தொடர்ந்து முகநூலில் பதிவிடுவது பெரிய அவமானமாக இருக்கிறது. முகநூலில் எனக்கான இடம் முற்றிலும் கேலிக்குரியதாகி விட்டது. வாழ்வதற்கான எந்த ஆதாரமும். பிடிப்புமின்றி அவதிப்பட்டுக் கொண்டிருக் கிறேன்.

முகநூல் நண்பர்கள் அவ்வப்போது அனுப்பும் உதவிப் பணத்தில்தான் மருத்துவச் செலவும், உணவுத் தேவைகளையும் கவனித்துக் கொண்டிருக்கிறேன். நிறைவாக இல்லையென்றாலும், நட்பினரின் உதவியால்தான் ஓரளவுக்காவது சமாளித்துக் கொள்கிறேன்.

இன்பாக்சில் பலரிடம் உதவி கேட்பது சங்கடமாக இருந்தாலும், உடல் ஒத்துழைக் காத நிலையில்தான் அவமானத்துடன் இப்படி கேட்கவேண்டியதாக இருக்கிறது.

அன்பு நண்பர்களே,

கவிதை எழுதிக் கொண்டிருந்த நான் இன்று அதையே காரணங்காட்டி பிச்சை யெடுத்துக் கொண்டிருக்கிறேன் என்பதை ஒத்துக் கொள்கிறேன். இந்த முகநூலை விட்டால் எனக்கு வேறு நாதியில்லை என்ற நிலையில் தான் இன்று இந்தப் பதிவை மிகுந்த தயக்கத்துடன் கூனிக்குறுகி பதிவிடுகிறேன்.

உங்களால் முடிந்தது சிறுதொகை என்றாலும், தயவுசெய்து பிச்சையிடுவதாக நினைத்து அனுப்பி உதவுகிறீர்களா? 

கையறுநிலையில் கையேந்தும் ஒருவனுக்கு நீங்கள் அனுப்பித்தரும் சிறு அளவிலான ஆதரவும் எனக்கு, எங்களுக்கு பேருதவியாக இருக்கும்

பணிவுட னும் வணக்கத்துடனும்

இப்படி உதவி கேட்டுதான் வாழ வேண்டுமா? என்ற கேள்வி என்னை தலைகுனிய வைக்கிறது. 

நான் மட்டும் சம்பந்தப்பட்டிருந்தால், சென்ற 2024 ஏப்ரல் மாதமே “எல்லாம் முடிந்திருக்கும்”. இதுபோல, “கடன்பிரச்சனை கழுத்தை நெறிக்கிறது தயவு செய்து உங்களாலான உதவியை செய்யுங்கள்”, என்று யாசிக்கும்படியாக பதிவிட வேண்டியதிருந்திருக்காது.

எனக்கு மட்டுந்தான் கடன்பிரச்சனை, குடும்பப்பிரச்சனை. உடல் மற்றும் மனஉளைச்சல் பிரச்சனைகளா? இப்படி அசிங்கப்படும்படியாக உதவிகேட்டு கையேந்த வேண்டுமா? என்ற கேள்விகள் ஒருபுறம் இருந்தாலும், எனக்கு வேறுவழி தெரியவில்லை. மன்னியுங்கள் நண்பர்களே.

“உடுக்கை இழந்தவன் கைபோல…” என் மீதுள்ள அபிமானத்தில் சில நண்பர்கள் அவ்வப்போது உதவுகிறார்கள்.

“ஒருவரையொருவர் நேசிக்கிற பெருங்குணம் காரணமாக, தன்பக்க மிருக்கும் சிரமங்களுக்கிடையிலும் சிறுதொகையேனும் எனக்கு அனுப்பி உதவி செய்திருக் கிறார்கள் பலர்.

சொல்வதற்கு நன்றி என்ற ஒற்றை வார்த்தை போதாது. உதவிய அனைவரும் மனிதவுருவில் தெய்வமென நன்றியுடன் வணங்குகிறேன்.

எத்தனை முயற்சி செய்தும், நம்பிக்கையை வளர்த்துக் கொள்ள, நேர்மறையான சிந்தனைகளில் மனதை தேற்றிக் கொள்ள முயற்சித் தாலும், பசியும் கடனும் நெருக்கும்போது, தானாகவே எதிர்மறையில் போய் சிக்கிக் கொள்ள நேர்கிறது. 

கடந்து போகும் என்ற நம்பிக்கையை மட்டும் கடந்துபோகாமல் இறுகப் பிடித்துக் கொண்டு போராடுகிறேன்.

இந்தப் பதிவை முழுதாக வாசித்தவர்களுக்கும், இதைப்போன்றோ, அல்லது இதைவிட சற்றுகூடுதல் குறைவாகவோதான் வாழ்க்கையிருக்கு மென அறிவேன். எனினும், எனது நட்பு வட்டத்திலுள்ள நண்பர்களின் மீதான அதீத நம்பிக்கையில், என்னை நான் வெளியரங்கப்படுத்திக் கொண்டுள்ளேன். பலர் உள்ளுக்குள் புழுங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

எனது கவிதைப் பயிற்சிக்கான ஒரு அருமையான களமாக இந்த முகநூலை பயன்படுத்திக் கொண்டிருந்த நான், இன்று என்னை ஒரு கவிஞனாக முன்னிலைப்படுத்தி கையேந்திக் கொண்டிருக்கிறேன் என்பது தவிர இந்த வாழ்க்கைமீது எனக்கு எந்த புகாருமில்லை என்பதையும் பதிவு செய்து கொள்கிறேன்.

உதவ மனமிருந்தும் உதவமுடியாத சூழலிருப்பவர்களுக்கும், இதுவரை யிலும் எனக்கு உதவி செய்த அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரி வித்துக் கொள்கிறேன்.

உதவக்கூடிய சாத்தியமுள்ளவர்கள், தங்களால் முடிந்த உதவியை செய்வீர்கள் என்று நம்புகிறேன்.

உங்களின் எந்தவொரு சிறுஉதவியும் எனக்கு பேருதவியாகவே இருக்கும் நண்பர்களே.

நம்பிக்கையுடன், நன்றியுடன்… 🙏

ஆத்மாஜீவ், காலக்ரமம் ஆத்மாஜீவ் என்கிற வி.சி.ராஜேந்திரன், சேலம்

எனது வங்கி மற்றும் GPay விபரங்கள்.

#Bank_Details : Rajendran Chinnasamy

Kotak Mahindra Bank

Branch : Shevapet, Salem.

Account Number : 6249465891

IFSC Code : KKBK0008781

#GPay_Number : 84385 44124

#Name : V.C. Raj

C:\Users\computer\Desktop\ATHMAJIV\APPEAL FROM ATHMAJIV\கவிஞர் ஆத்மாஜீவுக்கு உதவி தேவை (1) image.jpg

அரசுப் பள்ளிகளும், தரமான கல்விக்கான அடித்தட்டு மக்களின் அடிப்படை உரிமையும்

3 June 2025 at 11:37

C:\Users\computer\Desktop\download (1).jpg

 _லதா ராமகிருஷ்ணன்

C:\Users\computer\Desktop\images.jpg

எந்த நாட்டு மக்களாக இருந்தாலும் சரி, கல்வி என்பது அவர்களின் அடிப்படை உரிமை அப்படி தரப்படும் கல்வி தரமானதாக இருக்க வேண்டியது அவசியம் அரசு பள்ளி ஆசிரிய பெருமக்களுக்கு தனியார் பள்ளி ஆசிரிய பெருமக்களை விட சம்பளமும் சலுகைகளும் மிக அதிகம் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அதேபோல், பள்ளி சார்ந்த உள்கட்டமைப்பு வசதிகளும் அரசு பள்ளிகளில் மிகவும் நன்றாகவே உள்ளன

 அப்படி இருந்தும் தங்கள் வசதியின்மையையும் மீறி அடித்தட்டு மக்கள் வட்டிக்கு கடன் வாங்கியாவது தனியார் பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளை சேர்க்க வேண்டிய அவசியம் என்ன? பிள்ளைகள் ’டாடி’, ’மம்மி’ சொல்வார்கள் என்று அல்ப சந்தோஷம் என்று அதை ஒதுக்க முடியுமா?

 ஒரு பள்ளி என்ற கட்டமைப்பின் முதலும் முடிவுமான கவனக்குவிப்பு மாணாக்கர்களாகவே இருக்க வேண்டும். அப்படி இருக்கிறதா?

அரசுப் பள்ளிகளில் அர்ப்பணிப்போடு பணியாற்றும் ஆசிரியப் பெருமக்கள் பலர் இருக்கலாம். அதே சமயம், அரசுப் பள்ளிகளிலான பணி நியமனங்களில் லஞ்சம் தந்து பதவி பெறும் வழக்கமும் பரவலாக இருப்பதாக பேசப்படுகிறது – அது எவ்வளவு தூரம் உண்மை? ஆளுங்கட்சி அரசியல்வாதிகளின் சிபாரிசோடு உரிய பணத்தை தந்து பணியில் இணையும் ஆசிரியர்கள், மற்ற ஊழியர்கள் தவறு செய்தால் அவர்களை தலைமை ஆசிரியரோ மற்ற நிர்வாகிகளோ தட்டிக் கேட்க முடிவதில்லை என்கிறார்களே – அது உண்மையா?

 பள்ளி நேரங்களில் பல வகுப்புகளில் ஆசிரியர்கள் இருப்பதில்லை என்கிறார்கள் பெற்றோர்கள். ஆசிரியர்கள் இல்லாத சமயத்தில் பிள்ளைகள் ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்கிறார்கள்; காயப்படுத்திக் கொள்கிறார்கள் என்று கூறுகிறார்கள்.

 அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள்,  மற்றும் அவர்களுடைய பெற்றோர்களிடம் பள்ளி சார் குறைகளை பற்றி கேட்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்வதற்கான தொடர்ந்து இடைவெளிகளான கலந்துரையாடல்கள். ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெறுவதாகத் தெரியவில்லை.  அப்படி ஏதாவது குறைகளை கூற வரும் பெற்றோர்களிடம்  – இவர்களில் பெரும்பாலோர் அடித்தட்டு மக்கள், குறைந்தபட்ச கல்வியறிவு பெற்றவர்கள் – ”என்ன பெரிசா கேள்வி கேட்கிறீங்க? காசு கொடுத்தா உங்க புள்ளையை படிக்க வைக்கிறீங்க?” என்று மதிப்பழிப்பதாகப் பேசி கூனிக்குறுக வைக்கும் ஆசிரியர்களும் நிர்வாகிகளும் உள்ளனர்

 கூலி வேலைக்கு வீட்டு வேலைக்கு செல்லும் அடித்தட்டு வர்க்கப் பெற்றோர்கள் தான் ஏதேனும் எதிர்த்துச் சொல்லிவிட்டால் பள்ளிகளில் அதனால் தங்கள் பிள்ளைகளை ’கட்டம் கட்டி’ கண்டிப்பதும், தண்டிப்பதும் நடக்குமோ என்று அச்சப்படுவது வெளிப்படை.

 நிறைய பள்ளிகளில், வகுப்புகளில் அவசர அவசரமாக பாடங்களை நடத்தி முடிக்கும் நிலையே உள்ளதாகத் தெரிகிறது. பாடம் மாணாக்கர்களுக்கு புரிகிறதா, சுவாரசியமாக இருக்கிறதா என்பதெல்லாம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவதில்லை. விடைகளை –  கணித பாடம் உட்பட –  மிகுந்த பிரயத்தனத்தோடு மனனம் செய்யப் பழகுவதே மாணாக்கர்கள் அறிந்த, அவர்களுக்கு அறிவுறுத்தப்படும், ஒரே கற்றல்வழியாக இருப்பதாகத் தெரிகிறது.

 அரசுப் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு வரை வருடாந்திர இறுதித் தேர்வு என்று எதுவும் இல்லாமல் மாணவர்கள் அடுத்தடுத்த வகுப்புகளுக்கு அனுப்பப்படுவதால் அவர்க ளுடைய கற்றல் அளவையோ, கற்றல் தினையோ மதிப்பிட இயலாமல் இருக்கும் நிலை. தேர்வு என்பதை அவர்களுடைய கற்றல்திறனை மதிப்பிட மட்டும் பயன்படுத்தலாமே என்ற பேச்சு எழுந்ததற்கே ‘கூடவே கூடாது – அது அவர்களை மன அழுத்தத்திற்கு ஆளாக்கும்’ என்றெல்லாம் சொல்லி அநாவசியமாக அச்சுறுத்தி முட்டுக் கட்டை யிட்டார்கள் இங்கே.  

அதற்கு பிறகான வருடங்களில் பொதுத்தேர்வுகள் வரும்போது பள்ளி 100% தேர்ச்சியை காண்பிக்க வேண்டும் என்பதற்காக கல்வி கற்பதில் சற்று பின்தங்கியுள்ள மாநகர்களை பள்ளியிலிருந்து நின்று விடுமாறு வேறு பள்ளிக்கு போய்விடும் மறைமுகமாகவும் நேரடியாகவும் வற்புறுத்துவதாகவும் சில பெற்றோர்கள் சொல்ல கேட்டதுண்டு

 அரசுப் பள்ளிகளில் உள்கட்ட அமைப்புகளும் இடவசதியும் நன்றாகவே இருந்தாலும் அவற்றை சுத்தமாக பராமரித்தல் குறிப்பாக கழிப்பறைகளை பராமரித்ததில் போதிய கவனம் செலுத்தப்படுவதில்லை என்கிறார்கள் குழந்தைகளுக்கு சுத்தம் சுகாதாரத்தை அவற்றின் அவசியத்தை முக்கியத்துவத்தை போதிக்க வேண்டிய கல்விக்கூடங்கள் அவற்றில் அலட்சியமாக இருந்தால் எப்படி?

 ஆரம்ப வகுப்புகளில் உள்ள சின்னப் பிள்ளைகளுக்கு சிறுநீர் கழித்தல் மலம் கழித்தல் போன்றவற்றை அடக்கிக் கொள்ளவோ உரிய நேரத்திற்கு இயற்கை உபாதைகளை கழிப்பதை பழக்கப்படுத்திக் கொள்ளவும் வராது அதற்காக அந்த குழந்தைகளை அடிப்பதும் திட்டுவதும் குற்றவாளிகளாக உணரச் செய்வதும் அடக்கிக் கொள்ளச் சொல்வதும் கொடுமை.

 அரசுப் பள்ளிகளில் கணினிகள் கணினி கற்பிக்கும் அறைகள் நூலகங்கள் என்று இருந்தாலும் அவை எந்த அளவுக்கு மாணவர்கள் பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறது என்பது ஒரு கேள்விக்குறி. புத்தகங்களை கிழித்து விடுவார்கள் என்பதற்காகவே நூலகங்களை பூட்டி வைத்துள்ள பள்ளிகள் உண்டு என்று கூறுகிறார்கள். அதேபோலத் தான், கணினி கற்றுக் தரவும் நிறைய பள்ளிகளில் ஆசிரியர்களே இல்லை என்கிறார்கள்.

 அரசுப் பள்ளி மாணவர்கள் பலருக்கு சரியாகத் தமிழ் படிக்க தெரியவில்லை, தமிழ் உச்சரிப்பு தெரியவில்லை, அடிப்படை தமிழ் ஆங்கிலம் கணிதம் தெரியவில்லை என்று கடந்து சில வருடங்களாக மேற்கொள்ளப்பட்ட சுற்றாய்வுகளின் புள்ளி விவரங்கள் சுட்டிக் காட்டுகின்றன ஆனால் அது உண்மையா என்பதை சரிபார்த்து தெரிந்துகொள்ள முயலாமல் சுற்றாய்வுகளைப் பழிப்பதும், அவற்றுக்கு உள்நோக்கம் கற்பிப்பதும் இங்கே வாடிக்கையாக இருக்கிறது. அல்லது, நாட்டிலேயே எங்கள் மாநிலம் தான் கல்வியில் முதலிடத்தில் இருக்கிறது என்று பாமர மக்களுக்கு புரியாத தரவுகளை தந்து வாய டைத்து விடுகிறார்கள்.

அரசு பள்ளிகளில் நல்ல மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடையும் மாணாக்கர்கள் கணிசமாக இருக்கிறார்கள். அர்ப்பணிப்பு மனோபாவத்தோடு பணிபுரியும் ஆசிரியர் பெருமக்களும் இருக்கிறார்கள். அவர்களை இனங் கண்டு அவர்கள் அவர்களை ஒவ்வொரு பள்ளிக்குமான ஆலோசனை குழுவினராக அதிகாரம் அளித்த பள்ளி நிர்வாகம் சீராக செம்மையாக நடந்தேறு அவர்களே சுதந்திரமாக கலந்த ஆலோசனைகள் மேற்கொள்ள செயல்பட ஊக்குவிக்கலாம்.  

மதிப்பெண்கள் அதிகம் வாங்கும் மாணாக்கர்களைப் புகழ்ந்து பேசி அதில் பெருமை கொள்வதைப் போலவே சரியாக படிக்காதம் நிலவும் பள்ளிச் சூழல், வகுப்புச் சூழலில் கற்கவியலாப் பிள்ளைகளுக்கும் உரிய அதிகார அமைப்புகள் பொறுப்பேற்க வேண்டும். அதற்குத் தேவையான நிவாரண நடவடிக்கைகளை, நிர்வாக சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.  அப்படியில்லாமல், எதற்கெடுத்தாலும் தனியார் பள்ளி மட்டும் மேலானதா?’ என்றவிதமாகப் பேசி, பிரச்சனையை திசைதிருப்புவது எந்த வகையிலும் அரசுப் பள்ளிகளின் பயனாளிகளான எதிர்காலக் குடிமக்களுக்குப்  பலன் அளிக்காது.

 பள்ளி நிர்வாகத்தில் ஆளும் கட்சி அரசியல்வாதிகளின் தலையீடு அதிகம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அரசியல்வாதிகளின் ஆக்கப்பூர்வமான தலையீடு இருக்கலாம். எதிர்க்கட்சிகள் அரசுப் பள்ளிகள் நடக்கும் விதத்தை நேரில் சென்று பார்வையிடலாம். அதற்கு அரசு அவர்களுக்கு அனுமதி அளிப்பதே சரி. வாக்கு வங்கிகள் அல்ல என்பதால் மாணாக்கர்களை, குறிப்பாக அரசுப் பள்ளி மாணாக்கர்களின் கல்வி சார் அக, புற தாக்கங்களை கண்டுகொள்ளாமல் இருப்பது சரியல்ல.

சில வருடங்களுக்கு முன், அரசுப் பள்ளி ஆசிரியர்களே அவர்களுடைய பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் தான் சேர்க்கிறார்கள் என்பது தொடர்பான வாதப்பிரதிவாதங்கள் நடந்தன. “என் பிள்ளை அங்கே படிக்கிறான்” என்று ஒரு பிரபல தனியார் பள்ளியின் பெயரை கர்வத்தோடு சொல்லும் அரசுப் பள்ளி ஆசிரியர்களே அதிகம்.

சமீபத்தில் பேஸ்புக்கில் ஆசிரியராக பணிபுரியும் படைப்பாளி ஒருவர் அரசு ஊழியர்கள் ஏன் அரசுப் பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளைப் படிக்க வைப்பதில்லை என்று கேள்வி எழுப்பியிருந்தார். கூடவே, அரசுப் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளைப் படிக்க வைக்கும் பெற்றோர்களுக்கு அரசுப் பணி தரலாம், வேறு சில சலுகைகளை அரசு தரலாம் என்று அபத்தமான ஆலோசனையையும் அளித்திருந்தார். இது என்னவிதமான சமூகப் பிரக்ஞை? என்னவிதமான தீர்வு?

 சமீபத்தில் மறைந்த நடிகர் ஒருவர் அரசு ஆசிரியராக வேலை பார்த்ததாகவும் அந்த வேலையை அவர் தேர்ந்தெடுத்ததற்கு முக்கிய காரணம் ஆசிரியப்பணியில் நிறைய விடுமுறை கிடைக்கும் திரைப்படங்களில் நடிக்க, நடிக்க முயற்சி செய்ய அது நல்ல வாய்ப்பு என்று குறிப்பிட்டதாகவும் தகவல் வெளியாகியிருந்தது. ஆசிரியர் பணி என்பது மிகுந்த அர்ப்பணிப்பு மனோபாவமும், சமூகப் பிரக்ஞையும் தேவைப்படும் ஒன்று. அதை வெறும் வாழ்வாதாரத்திற்கான இன்னொரு பணியாக பாவிப்பது மாணாக்கர்களை தான் பாதிக்கும்

 கல்விக்கூடம் என்பதில் ஆசிரியர் பெருமக்கள், நிர்வாகிகள், உதவியாளர்கள், கடைநிலை ஊழியர்கள் என்று பலதரப்பட்டவர்கள் பணியாற்றினாலும் அதன் முதலும் முடிவுமான நோக்கமும் இலக்கும் மாணாக்கர்களாகவே, அவர்களின் நலம் சார்ந்ததாகவே இருக்க வேண்டும்  என்பதில் இரு வேறு கருத்துக்கள் இடமில்லை.

***

நிலவும் போர்ச்சூழலும் தமிழக அரசின் பேரணியும்

13 May 2025 at 02:12

C:\Users\computer\Desktop\496468948_2596393650706223_2021053981496977304_n.jpg
C:\Users\computer\Desktop\495211967_2596393720706216_2790141143476197362_n.jpg

இந்தப் போர்ச்சூழலில் இந்திய அரசு, ராணுவத்தின் பக்கம் நிற்பதாக நம் தமிழக அரசு சென்னையில் ஒரு பேரணி நடத்தியிருப்பது பாராட்டுக்குரியது. இதை காரியார்த்த மானது என்றும், பாவனை என்றும் இன்னும் வேறாகவும் சிலர் சொல்லக்கூடும்; சொல்ல முடியும். ஆனால், இந்தப் பேரணி இன்றைய இந்திய அரசின் மீதுள்ள வெறுப்புக்கும், இந்தியா என்ற நாட்டின் மீதே உள்ள வெறுப்புக் குமான பிரிகோட்டை கவனமாக வெளிப்படுத்துகிறது. இது அவசியமானது.

இந்தியா என்ற நாட்டின் ஒரு மாநிலமாக இருந்துகொண்டு எதற்கெடுத்தாலும் மத்திய அரசைக் குறைசொல்வதும், எதிர்த்துநிற்பதும், மதிப்பழிப்பதாய் பேசுவதும், தனித்தமிழ் நாடு கேட்கிறார்களோ, அதற்கான கலவரங்கள் ஊக்குவிக்கப்படுமோ என்ற அச்சத்தை நிறைய பேர் மனங்களில் ஏற்படுத்தியிருந்தது. அத்தகைய கலவரங்களை விரும்பும், ஊக்குவிக்க விரும்பும் (இத்தகைய கலவரங்களில் பெரிதும் பாதிப்படைவோர் எளிய மக்களே என்பதைச் சொல்ல வேண்டியதில்லை) தரப்பினருக்கும் இந்தப் பேரணி மாநில அரசுக்கு அப்படியெதுவும் எண்ணமில்லை என்று தெளிவுபடுத்தியிருக் கிறது. அவ் வகையிலும் இது முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில் ‘மாநில சுயாட்சி’ என்ற சொற் றொடர் இங்கே இரண்டுவிதமான அர்த்தங்க ளில் பயன்படுத்தப்பட்டுவருகிறது. எனவே, அதைத் தெளிவுபடுத்தல் அவசியமாகி றது.

இது மக்களாட்சி நாடு. ஆளும் அரசு பிடிக்கவில்லை யென்றால் அடுத்த தேர்தலில் அவர்களைத் தோற்கடிப்ப தற்கான நியாயமான ஆயத்தங்களை, பரப்புரைகளை மேற் கொள்ளலாம். ஆனால், ஒரேயடியாக ஆளுங்கட்சி செய்வதையெல்லாமே திட்டித்தீர்த்த வாறிருந்தால் எதிர்க்கட்சியென்றாலே இப்படித்தான் என்று மக்கள் அதைப் பொருட் படுத்த மாட்டார்கள். 

ஆனால், படைப்பாளி என்றாலே ‘அரசு’ என்ற கட்ட மைப்பை எதிர்க்கக் கடமைப் பட்டவர் என்பதாக இங்கே ஒரு பார்வை நிலவுகிறது. (ஆனால், இந்தக் கண் ணோட்ட முடைய இலக்கியவாதிகளும் மாநில அரசுக்கு எதிராக இதுவரை முணுமுணுப்பாகக்கூட குரல் எழுப்பியதில்லை என்பதையும் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டியிருக் கிறது).

மாறாக, பாராட்ட வேண்டியவற்றை பாராட்டினால், பின் அரசின் மீது – அது மத்திய அரசோ, மாநில அரசோ – நாம் வைக்கும் எதிர்விமர்சனங்களைப் பொருட்படுத்தி கவனத்தில் கொள்வார்கள். காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் ‘ இப்போ தைய போர்ச்சூழல் தொடர்பான மத்திய அரசின் முயற்சிகளை மிகத் தெளிவாக அலசி பாராட்டியிருப்பது ஓர் உதாரணம்.

நிலவும் போர்ச்சூழலும், நிரந்தர மேம்போக்கு மனித நேயவாதிகளும்

13 May 2025 at 01:56

நிலவும் போர்ச்சூழலும், நிரந்தர மேம்போக்கு மனித நேயவாதிகளும் 

(அல்லது)

கொடும் போர்ச்சூழலும் காகிதக் கிளர்ச்சியாளர்க ளும் காரியார்த்தக் கலகக்காரர்களும்

……………………………………………………………………………………………………………………………………

_ லதா ராமகிருஷ்ணன்

C:\Users\computer\Desktop\495299374_2594163524262569_2891087551592783261_n.jpg

ஒரு போர்ச்சூழலைப் பயன்படுத்தி தம்மை மனிதநேய, பெண்ணுரிமை, மனித உரிமை ஆர்வலராக, போராளியாக முன்னிலைப்படுத்திக்கொள்ள முயற்சிப்பவர் களைப் பற்றி என்ன சொல்ல? எழுத்தாளர்கள் கூடவா இப்படி இருப்பார்கள்? ஒரு போரை உரிமைப்போர் என்று சொல்லி உயர்த்திப்பிடிப்பார்கள் -ஒரு போரை வன் முறை என்று வரையறுப்பார்கள். பல நேரங்களில், வசதிக்கேற்ப வேறு வேறு அளவுகோல்களை, தரநிர்ண யங்களைப் பயன்படுத்தி.

பஹல்காம் படுகொலைகள் அரசின் பாதுகாப்பு நிர்வாகத் தில் நேர்ந்த குறைபாடு என்பது உண்மை. உளவுத்துறை யிலிருந்து தீவிரவாதிகள் ஊடுருவல், திடீர்த் தாக்குதல் குறித்து எச்சரிக்கை விடுத்ததை அடுத்து இரண்டு வாரங் கள் முழுக்கத் தேடி அப்படி எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று பாதுகாப்பை விலக்கிக்கொண்ட அதே நாள் (ஏப்ரல் 22) பஹல்காம் தாக்குதல் நடைபெற்றதாக செய்திகள் வாசிக்கக் கிடைக்கின்றன. இன்னொரு செய்தி தாக்குதல் நடந்த இடத்தில் இன்னும் இரண்டு மாதங்கள் கழித்துத் தான் பாதுகாப்பு வளையமிட்டு சுற்றுலாவாசிகள் அனுமதிக் கப்படுவார்கள் என்றும் ஆனால் உள்ளூர் சுற்றுலா வழிகாட்டிகள் அதை அறிந்தும் அங்கே ’ஊர் சுற்றிப்பார்க்க வந்திருந்தவர்களை அழைத்துச்சென்றார் கள் என்று இன்னொரு செய்தி. எப்படியிருந்தாலும் இது அரசின் பாதுகாப்புநிர்வாகஞ்சார் குறைபாடு என்றே வைத்துக்கொள்ளலாம். அதற்காக, இந்திய அரசு தன்னைத் தானே குற்றவாளியாக உணர்ந்து கூனிக்குறுகி நின்றுகொண்டிருந்தால் எல்லாம் சரியாகிவிடுமா? இதற்கு முன்பாகவும்கூட அந்தப் பகுதியில் தீவிரவாதத் தாக்குதல்கள் அவ்வப்போது நடந்துகொண்டுதானிருந்தன.

இன்னொருவர் ‘ஆபரேஷன் ஸிந்தூர்’ என்ற பெயரைக் குறைகூறுகிறார். பெண் ணுக்கு ஸிந்தூர்(குங்குமம்) மங்கலச்சின்னம் என்று பேசுவதே பெண்ணடிமைத் தனம் என்று பழிக்கிறார். பஹல்காமில் குடும்பத்தோடு சென்ற ஆண்களை சுட்டுக் கொன்றவர்களால் கணவனை இழந்த பெண்களை இவர் மதிப்பழிக்கிறார் என்றே கொள்ளவேண்டியிருக்கிறது.இந்த மாதிரி வெறுப்புப் பேச்சுகளால் பெண்ணுரிமை எங்ஙனம் மேலோங்க முடியும்? வெறுப்பு தான் விரிந்து பரவும். 

பஹல்காம் படுகொலைச் சம்பவத்தில் நேரடியாக பாதிக்கப்பட்டவர்கள் பயங்கர வாதிகள் சொல்லச் சொன்னதாகச் சொன்னதை அப்படியில்லவேயில்லை என்று இங்கே சிலர் அடித்துச்சொல்லவேண்டிய அவசியமென்ன? பஹல்காம் படு கொலையில் கணவரை, ஆண் உறவினர்களைப் பறிகொடுத்தவர்கள் ஒரு மதத்தின் பெயரால் தாம் அப்படி நடத்தப்பட்டதை எடுத்துரைத் திருக்கிறார்கள். அவர்களைப் பேட்டி கண்டவர்கள், களத்திற்கு சென்று நிலவரம் அறிந்த ஊடகவியலாளர்கள் (இவர்கள் மோடி ஆதரவு ஊடகங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்ல) கொலையாளிகளின் இந்த அணுகு முறையை அடிக்கோடிட்டுக் காட்டியிருக்கிறார்கள். அன்று அந்த இடத்தில் இருந்த உள்ளூர்வாசிகள் இதைக் கூறியிருக்கிறார்கள். ஆனாலும், இங்கேயுள்ள சில அறிவுசாலிக் குழுமங்கள் அப்படியொன்று நடக்கவேயில்லை என்று இங்கிருந்தே எப்படிக் கூறுகிறார்கள் என்று தெரியவில்லை. 

ஊரில், நாட்டில் நடக்கும் கொலை கொள்ளைகளிலெல் லாம் பல்வேறு சாதி, மதம் சார்ந்த மனிதர்கள் ஈடுபடுகிறார்கள். அதற்காக அந்தப் பிரிவுகளைச் சார்ந்த அத்தனை பேரையும் மக்கள் குற்றவாளிகளாக பாவிப்ப தில்லை; குறைத்துப் பேசுவதில்லை. அப்படிச் செய்பவர்கள் (எடுத்துக்காட்டாக, எங்காவது ஒரு பார்ப் பனர் குற்றச் செயலொன்றில் ஈடுபட்டால் உடனே அதை ஒட்டுமொத்த பார்ப்பனகுலத்தின் தலைமீது ஏற்றிவிடுபவர்கள் இங்கே சாதாரண மக்களில்லை; தம்மை மனிதநேயவாதிகளாக, சமூகப்பிரக்ஞையாளர்களாக பிரகடனம் செய்து கொள்ளும் அறிவுசாலிகளே). 

இந்த நேரத்தில் அரசியல்வாதிகளான ஒமார் அப்துல்லா, ஒவைஸி போன்றோர் கூட கவனமாகப் பேசுகிறார்கள். பாகிஸ்தானின் தொடர் அத்துமீறலைக் கண்டிக்கி றார்கள். ஆனால், காகிதக் கிளர்ச்சியாளர்களுக்கு அந்தப் பொறுப்புணர்வு கொஞ்சமும் இல்லை. இது வருத்தத்திற்குரியது; கண்டிக்கத்தக்கது.

இன்னும் சிலர் மதரீதியான வெறுப்பை வளர்க்க இந்த சந்தர்ப்பத்தைப் பயன்ப டுத்திக்கொள்கிறார்கள். மிகவும் வேதனையளிக்கும் விஷயம் இது. 

இன்னும் சிலர் போர்நடவடிக்கைகளை romanticize செய்கி றார்கள். வன் முறையை நம் சினிமாக்களும் , சீரியல்க ளும் தொடர்ந்தரீதியில் Heroismஆக வரையறுத்துக் கொண்டேயிருப்பதுபோல். (சமீபகாலமாக ஊரில் நடக்கும் வெட்டு குத்துக்களையும், கோர விபத்துகளை யும் காட்சி ஊடகங்கள் எல்லா நேரமும் காட்டிக்கொண் டேயிருக்கின்றன; இதற்கென்றே தனி ‘க்ரைம் டைம்’ நிகழ்ச்சிகள் பரபரப்பாக, ஏற்ற இறக்க தொனிகளிலான விவரிப்புடன் தினமும் எல்லா செய்தி ஊடகங்களிலும் ஒளிபரப்பப்படுகின்றன. இது நீடிக்கலாகாது; நிறுத்தப்பட வேண் டியது. 

வெளிநாடுகளுக்குப் பயணமாகும் படைப்பாளிகள் பலர் இந்தியாவை மதிப்பி றக்கிப் பேசுவதும், இந்துமத நம்பிக்கைகள், நியமங்கள், நெறிமுறைகளை நிந்திப் பதும் வழக்கமாக இருக்கிறது.  அதற்கென்றே அயல்நாடுகளில் இயங்கிவரும் அமைப்புகள் சிலவற்றால் அவர்கள் அழைக்கப்படுவதும் நடக்கிறது.

’எம்மைத் தவிர வேறு எந்த படைப்பாளியும் ஊரில் நடக்கும் சாதிக்கொடுமை களுக்குக் குரல் கொடுப்பதில்லை – நிலா, மழை என்று மட்டுமே எழுதிக்கொண்டி ருக்கிறார்கள்’ என்று சக படைப்பாளிகளைச் சாடுபவர்கள் என்றேனும் சாதிக் கலவரப் பகுதிகளுக்குச் சென்று ஆதிக்கசாதி யினரோடு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்ட தாகவோ, அல்லது அங்கே நிகழ்ந்த சாதிக்கொடுமைக்கு எதிராக போராட்டம் நடத்தியதாகவோ, அல்லது, சட்டம்-ஒழுங்குக்கு நேரடி பொறுப்பான மாநில அரசிற்கு எதிராக போர்க்குரல் எழுப்பியதாகவோ தெரியவில்லை. 

போர் வேண்டாம் என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை. அதேபோல்தான், நிஜமான போர்ச்சூழல் நில வும் இந்நேரத்தில் இந்த மேம்போக்கு மனிதநேய வாதிகளுக்கும் ‘காகிதக் கிளர்ச்சியாளர்களுக்கும் காரியார்த்தக் கலகக்காரர்க ளுக்கும்’ இடமளிக்கலாகாது.

*

மாறிவரும் பாடத்திட்டங்களும் மாறாத தேர்வுமுறைகளும்!!

2 May 2025 at 12:22
மாணவர்களிடம் சென்று சேர்ந்த பாடக் கருத்துக்கள் எந்த அளவுக்கு அவர்களது மனதில் ஆழமாகப் பதிந்துள்ளன?  மாணவர்களின் கற்றல் திறன் எவ்வாறு உள்ளது?! என்பனவற்றை மதிப்பீடு செய்வதற்கே மதிப்பீட்டு முறைகள் உருவாக்கப்படுகின்றன. கல்வியில் நவீனமயமாக்கம் கல்விக் கொள்கைகள் மாறிவரும் சமூகச் சூழலுக்கு ஏற்ப அவ்வப்போது மாற்றம் கண்டு வருகின்றன. கல்விக் கொள்கைகள் மாற்றம் அடையும்போது, அதற்கு ஏற்றாற்போல் கலைத்திட்டமும் நவீனமாகி வருகிறது.  கலைத்திட்டத்தில் வந்து சேரும் புதியபுதிய கலை அறிவியல் கருத்துக்கள் அனைத்தையும் மாணவர்களின் பருவத்திற்கு ஏற்றவாறு வழங்குவதற்கு […]

Source

இடம், பொருள் – வெளிப்பாடு

28 April 2025 at 23:24

  • சோம. அழகு

ஒருவன் பரோட்டா வாங்கச் சென்றிருக்கிறான். பரோட்டா பொட்டலத்தின் வெளியில் சுற்றப்பட்டிருந்த துண்டுத் தாளில், குறுக்கும் மறுக்குமாகச் சென்ற நூற்கோடுகளின் அடியில், “பரோட்டா சாப்பிட்ட பிளஸ்-1 மாணவி சாவு” என்ற செய்தி அம்மாணவியின் புகைப்படத்துடன் அச்சிடப்பட்டிருந்திருக்கிறது. அதைப் புகைப்படம் எடுத்து அதில் ‘உனக்கு பரோட்டா கட்டி குடுக்க வேற பேப்பரே கிடைக்கலியா? ஏன்டா இப்பிடி அநியாயம் பண்றீங்க?’ என நகைச்சுவையாக தட்டச்சு செய்து மீம் ஒன்றை வலைதளத்தில் உலவ விட்டான். யாரும் பார்த்தவுடன் சிரித்துவிட்டுச் சாதாரணமாகக் கடந்துவிடுகிற விஷயம்தான். 

எனக்கு மட்டும் ஏனோ யாரென்றே தெரியாத அம்மாணவியின் பெற்றோர் முகமற்றவர்களாக என் மனதினுள் வந்து அமர்ந்தனர். ஒரு அற்ப விஷயத்திற்காகப் பிள்ளையைப் பறி கொடுத்த அவர்கள் எதேச்சையாக இதைப் பார்க்க நேர்ந்தால் மீண்டும் துணுக்குற மாட்டார்களா? ஏற்கெனவே அவ்வுணவை மகளுக்கு வாங்கித் தந்த அத்தருணத்திற்குப் பல முறை சென்று தங்களைத் தாங்களே கடிந்து கொண்டிருப்பவர்களுக்கு இது இன்னும் வலியைத் தராதா? அந்த மீம் தயார் செய்தவன் ஏதோ விளையாட்டாகத்தான் செய்திருக்கக் கூடும். நிச்சயம் இவ்வளவெல்லாம் யோசித்திருக்க மாட்டன்தான். 

ஒருவேளை நான்தான் இதை அளவிற்கு மீறிய நுண்ணுணர்வோடு அணுகுகிறேனா? ஒரு சிறு தடுமாற்றமோ கலக்கமோ என்னில் உருவாவதற்கு அம்மாணவி எனக்குத் தெரிந்தவளாகிப் போகும் வரை காத்திருக்க வேண்டுமா? அதுவரை கெக்கலித்துக் கொள்ளலாமா? ‘இப்படியெல்லாம் பார்த்தால் எந்த நகைச்சுவையையும் ரசிக்க முடியாது’ என்பது இதற்குப் பொருந்துமா என்றும் தெரியவில்லை.

சமீபமாக நகைச்சுவை என்று வகைப்படுத்தப்படும் சிலவற்றைக் காண்கையில் எவ்வாறு எதிர்வினை ஆற்றுவது என்று ஒரு கணம் திகைப்பு ஏற்படுகிறது. இரண்டாம் உலகப் போரின் போது அமெரிக்க இயற்பியல் விஞ்ஞானியான Oppenheimer தலைமையில் ஒரு குழு அணுகுண்டை உருவாக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். ஜூலை 16, 1945 அன்று நியூ மெக்ஸிகோவில் முதல் அணுவெடிப்புப் பரிசோதனையில் வெற்றியடைகிறார்கள்(!). இதுதான் அவ்விஞ்ஞானியின் பெயர் கொண்ட திரைப்படத்தின் கதை. ஆகஸ்ட் 6-9, 1945ல் ஹிரோஷிமா நாகசாகி பேரழிவுகளுக்கு வித்திட்டதில் முக்கியப் பங்காற்றியது அச்சோதனையே! 

இத்திரைப்படம் வெளிவந்த அதே நாளில் Barbie என்ற திரைப்படமும் வெளிவர, இணைய உலகம் இரண்டு படங்களையும் ஒருங்கிணைத்து மீம் உருவாக்கத்தில் ஈடுபட்டது. அதில் ஒன்று – Barbie கதாபாத்திரங்கள் சிரித்தவாறே நிற்க, பின்புலத்தில் (கொடுந்துயரமாகிப் போன ஹிரோஷிமா நாகசாகி அணுகுண்டு தாக்குதல்களைக் குறிக்கும்) காளானாக மூண்டு நிற்கும் புகை மண்டலத்துடன் கூடிய ஒரு சித்திரம். இன்னொன்று, Oppenheimer தோளில் Barbie சிரித்தவாறே அமர்ந்திருக்க, பிண்ணனியில் அணுகுண்டு வெடித்துச் சிதறியதில் தீ அம்புகளாகிப் பறக்குமாறு வடிவமைக்கப்பட்டு Barbenheimer என்று பெயரிடப்பட்ட ஒரு சித்திரம். Barbie திரைப்படம் ஜப்பானில் வெளியாகவிருந்த தேதி ஆகஸ்ட் 11, 2023 என்பதால் அந்தச் சித்திரத்தை வடிவமைத்தவரின் அப்பதிவுக்குக் கீழ் Barbie Movieன் அலுவலகக் கணக்கிலிருந்து “It’s going to be a summer to remember” என X தளத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தது. 

 அவ்வளவு பெரிய கோரத் தாக்குதல் நிகழ்ந்த அதே ஆகஸ்ட் மாதம் குறித்து அத்தாக்குதலை நிகழ்த்திய அமெரிக்காவிடமிருந்தே வெளிப்பட்ட இவ்வகையான கேலிக்கூத்துகள் நிச்சயம் ஜப்பானியர்களுக்கு ரசிக்கும்படியாக இருந்திருக்கவில்லை. காளான் குடையென விரிந்த கரும்படலம், எத்தனை காலமானாலும் இழந்த லட்சக்கணக்கான உயிர்களையும் வலியையும் நினைவுபடுத்தும் ஒன்று. அதை ஏதோ வெற்றிக் களிப்பாக, அறிவியல் சாதனையாக, அதிகாரத்தின் உறைவிடமாகப் பாவிக்கும் அமெரிக்கர்களின் இச்செயலை வறட்டுத்தனமாகக் காண்பதாக DePaul University, Chicagoவில் பணிபுரியும் பேராசியர் Miyamoto Yuki கூறியிருந்தார். ஜப்பானியர்களிடம் பரவலாகக் காணப்பட்ட எதிர்ப்பால் Barbie திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான Warner Bros திரைப்பட வெளியீட்டு தேதியையொட்டி மன்னிப்பு கேட்டது. Oppenheimer திரைப்படத்தையோ ஜப்பானில் எட்டு மாதங்கள் கழித்துதான் திரையிட்டார்கள்.

அணுவெடிப்பு அவலத்தை நகைச்சுவையாகக் கையாள்வதே தவறு. இதில் உவமையாகவெல்லாம் பயன்படுத்தும் கொடுமையை எங்கு போய்ச் சொல்ல? சமீபத்தில் அமெரிக்காவின் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த Tim Walberg “காஸாவை ஹிரோஷிமா நாகசாகியைப் போல் கையாளுங்கள்” என இஸ்ரேலுக்கு அறிவுரை வழங்கியது சர்ச்சைக்கு உள்ளாக உடனே, “பிரச்சனையைச் சீக்கிரம் முடிவுக்குக் கொண்டு வரவும் இனி எஞ்சியிருக்கும் அப்பாவிகளின் உயிரைக் காப்பாற்றவும்தான் அப்படிச் சொன்னேன்” என்று அயோக்கியத்தனமாகச் சப்பைக் கட்டு கட்டினார். 

*******************

சில சமயங்களில் இக்கட்டான சூழல்களினின்று மீளவோ அல்லது சமாளிக்கும் வழிமுறையாகவோ(coping mechanism) அவல நகைச்சுவை (dark humour), நையாண்டி என நகைச்சுவை வெவ்வேறு வகைகளில் வெளிப்படுவதுண்டு. உதாரணமாக ஒரு நெருக்கடியான அரசியல் சூழலில் எதேச்சதிகாரத்தைத் தூக்கிப் பிடிக்கும் தலைவர்களை நகைச்சுவையாகச் சாடுவது என்பது சர்வாதிகாரத்தின் மூடத்தனங்களைச் சுட்டிக் காட்டி இடித்துரைக்கவும் மக்களுக்கு அதை நினைவூட்டிக் கொண்டே இருக்கவும் உதவும் ஒரு நல்ல பாணி. ஆனால் நிதர்சனம் வேறு மாதிரியாக இருக்கிறது.

“கோமியத்தில் பல மருத்துவப் பண்புகள் இருக்கின்றன. காய்ச்சலைக் குணப்படுத்தும்; பாக்டீரியாக்களைப் பதம் பார்க்கும்; வைரஸை விரட்டியடிக்கும்…” என்று விளையாட்டல்லாத தொனியில் அடுக்கிக் கொண்டே சென்ற கோமியக்கோடிகள், வம்படியாக வந்து அதற்குக் காவடி எடுத்துக் கம்பு சுற்றி முட்டு கொடுத்த திருவாளர் பெருமக்கள் ஆகியோரைப் பார்த்துச் சினம் கொள்ளாமல் சிரித்துக் கடந்து செல்வதும்; இம்முட்டாள்தனங்களையும் இக்கருத்துகளை உதிர்க்கும் அறிவுஜீவிகளையும் பகடி செய்யும் குணால் காம்ரா போன்ற முதுகெலும்பு படைத்த மேடைச் சிரிப்புரையாளர்களைக்(standup comedians) கண்டு பொங்கி எழுந்து சிறையில் தள்ளுவதும்…. அடடே!!!

எதைக் கூறினாலும் ‘புண்படுகிறது’ என்று கிளம்பி வரத் தயாராகக் காத்திருக்கும் கூட்டம் ஒருபுறம்; எல்லாவற்றையும் எள்ளி நகையாடும் கூட்டம் இன்னொரு புறம். இவர்களுக்கு மத்தியில் நகைச்சுவைக்கான எல்லைக் கோடுகளை வரையறுப்பது சற்று கடினம்தான். வேண்டுமானால் இப்படிக் கொள்ளலாம். ஒரு நகைச்சுவையினால் யார் புண்படுகிறார்கள் என்பதைப் பொறுத்து அது ஏற்றுக் கொள்ளத்தக்கதா இல்லையா என முடிவு செய்யலாம். இங்கு மீண்டும் ஒரு குழப்பம். எது சரி? யார் புண்பட்டால் பரவாயில்லை? என் ‘சரி’ இன்னொருவருக்குத் தவறாக இருக்கும். ஆகையால்… மனிதத்தின் பக்கம் இருக்கும் பொதுவான ‘சரி’ என்றொன்று உண்டு. அதைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ளுதல் நலம். 

என்னதான் நகைச்சுவையை நெறிப்படுத்த முயன்றாலும் அந்தந்த இடத்தையும் உட்பொருளையும் கொண்டே அது ஒரு நல்ல நகைச்சுவையாக அமையும். இல்லையெனில் மிகப் பரிதாபமாக ரணத்தை மட்டும் வெளிப்படுத்தி முகம் சுழிக்க வைக்கும். நகைச்சுவையும் துன்பியலும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் என்ற Jack Deeன் வார்த்தைகள் தெரியாமல் இல்லை. இரண்டையும் துல்லியமாகப் பிரித்தறிதல் எளிதானதும் அல்ல. 

இக்குழப்பம் நகைச்சுவைக்கு மட்டுமல்ல; எந்த ஒரு உணர்ச்சி வெளிப்பாட்டிலும் உண்டு. ‘மிகைப்படுத்துதல்’ நகைச்சுவையில் எடுபடுவது போலவே இன்னும் சில உணர்வுகளின் ஆழத்தை உணர்த்தவும் உதவும். ஆனால் மிகைப்படுத்துதலைச் சரியாகக் கையாளாவிட்டால் எடுத்துக்கொண்ட பொருளின் சாரம் தொலைந்து நீர்த்தும் நமநமத்தும் போய்விடும். 

Ghibli கலை வடிவத்தைச் செயற்கை நுண்ணறிவின் கையில் தராதீர்கள் எனக் கிட்டத்தட்ட கெஞ்சிக் கேட்டுக் கொண்ட அக்கலையின் தந்தை Hayao Miyazakiன் வலியைக் குறிப்பிட்டு X தளத்தில் இவ்வாறாகப் பதிவிட்டிருந்தார் ஒருவர் – “கலைத்திருட்டு என்பது மிகவும் கொடூரமான வன்புணர்வு”. இவ்வார்த்தையை உவமை என்னும் பெயரில் இவ்வளவு இலகுவாகப் பயன்படுத்துதல் வன்புணர்வுக்கு உள்ளானவர்களின் உணர்வுகளைச் சிறுமைப்படுத்துவதோ சாதாரணப்படுத்துவதோ ஆகாதா?

**********************

இவ்வளவு எண்ணவோட்டங்களுக்கும் முத்தாய்ப்பாக நினைவிற்கு வந்தது ஒரு நிகழ்வு. சரியான இடத்தில் சரியான பொருளில் சரியான விஷயத்தை ஒருவர் வெளிப்படுத்தும் போது அவரை அந்நியப்படுத்தும் வகையில் சுற்றியிருக்கும் சராசரி மனிதர்களிடமிருந்து கிட்டும் மட்டமான எதிர்வினைக்கு அவ்வளவு முக்கியத்துவம் தர வேண்டியதில்லை என்பதற்கான ஆகப் பெரும் சான்று. 

 நீட் தேர்வில் வெற்றி பெற்று அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்த மாணவ மாணவியரின் பெற்றோருடன் ஆளுநர் நடத்திய கலந்துரையாடலில் ஒரு தந்தை, “கடந்த சில வருடங்களாக நீட் தேர்வினால் எங்கள் பிள்ளைகளுக்கு மருத்துவப் படிப்பில் சேர மிகவும் கடினமாக இருக்கிறது. எப்போது நீட் விலக்கு மசோதாவில் கையொப்பமிடுவீர்கள்?” என்று மரியாதையாகவும் கண்ணியமாகவும் ஆளுநரிடம் கேட்டார். “Never! Ever ! Never ever will I sign it. I will be the last person to give clearance” என்று காவிக்கே உரிய ஆணவம் பதிலாக வந்தது. உடனே அக்கூட்டத்தினர் ஏதோ அறிவுப்பூர்வமான பதிலைக் கேட்டுவிட்டதைப் போல் கைகளைத் தட்டினர். மனம் தளராமல் அந்த தந்தையும் விடாப்பிடியாக, “எங்களது உயர்ந்த மருத்துவத் தரம் குறித்து நீங்களே சிலாகித்திருந்தீர்கள். இத்தனை வருடங்கள் நீட் இல்லாமல்தான் எங்கள் மாநிலம் மருத்துவத்தில் பல சாதனைகளைப் படைத்துள்ளது. இவ்வளவு வளர்ச்சியும் நீட் இன்றிதான் நிகழ்ந்தது” எனத் தொடர்ந்து பல சரியான வாதங்களை முன் வைத்தார். “அதெல்லாம் எதிர்காலத்திற்குப் போதாது. Sit down” என்று அருவருக்கத்தக்க தொனியில் அடக்க முயன்றார் ஆளுநர். மீண்டும் கூட்டம் கைதட்டி ஆர்ப்பரித்தது. அத்தந்தை மீண்டும் பேச முனைய ஒருங்கிணைப்பாளர்கள் அவரிடம் வந்து மைக்கை வாங்கும் முயற்சியில் ஈடுபடுவதோடு அக்காணொளி முடிந்தது. 

அக்கூட்டத்தில் பிடரிக்குக் கீழ் தண்டுவடம் தென்பட்ட ஒரே நபரான அத்தந்தையைச் சகப் பெற்றோர்கள் அனைவரும் அதிகாரத் திமிரிடம் கைவிட்டது கொஞ்சம் நெருடலாகவே இருந்தது. தன் குழந்தைக்கு இடம் கிடைத்துவிட்ட போதும் அதே வசதியும் வாய்ப்பும் மறுக்கப்படும் இன்ன பிற குழந்தைகளுக்காக கேள்வி எழுப்பிய அம்மனிதரின் பொதுநலத்தை மௌனம் காத்தாவது ஆமோதித்திருக்கலாம். அறத்தின் பக்கம் ஆவேசமாக இல்லாவிடினும் அமைதியாகவேனும் நிற்க வேண்டிய அடிப்படை இங்கிதம் கூடவா தொலைந்துவிட்டது?

அவ்வளவிற்கா சமூகப் பிரக்ஞையற்றவர்களாக சூடு சுரணையற்றவர்களாக மாறிக் கொண்டிருக்கிறோம்? சிந்திக்க வேண்டிய இடத்தில் சிரித்து வைப்பது; சிரிக்க வேண்டிய இடத்தில் கோபப்படுவது; கோபத்துடன் அறச்சீற்றம் கொள்ள வேண்டிய இடத்தில் முதுகு வளைந்து மண்டியிடுவது; அனுதாபம் கொள்ள வேண்டிய இடத்தில் ஆதாயம் தேடுவது; உணர்வுப்பூர்வமான விஷயங்களை cringe என்று நெளிவது; நிஜமான cringeகளை ரசித்து ரசித்து உருகுவது; தகுதியில்லாதவர்களைத் தூக்கி வைத்துக் கொண்டாடுவது; கொண்டாட வேண்டியவர்களை நகைப்புக்குரியவர்களாக பாவிப்பது….. பெருன்பான்மை வெகுசனம் ஏன் இப்படிக் குழம்பிக் கிடக்கிறது? 

எச்சூழலிலும் எவ்வுணர்வையும் சூடிக் கொள்ளலாம் என்று விநோதமான வெளிப்பாடுகளைக் கொண்ட இச்சமூகத்தின் இயங்கு முறை கொஞ்சம் அச்சமூட்டுவதாகவே இருக்கிறது.    

  • சோம. அழகு  

கணபதி வழிபாடும் வரலாறும்



பிள்ளையார் கோயில் இல்லாத இடமே தமிழ்நாட்டில் இருக்காது. எந்தக் காரியம் செய்வதற்கு முன்னாலும் பிள்ளையாரை வணங்குவது இந்தியா முழுவதும் தொடர்ந்து வரும் வழக்கம். யானை முகமுடைய கணேசத் திருவுரு இந்தியப் பண்பாட்டின் அடையாளமாகவும் சர்வதேச அரங்கில் பார்க்கப்படுகிறது.

இந்த கணேசக் கடவுள் உருவான வரலாறு சுவாரசியம் மிக்கது. சிவனுக்கும் பார்வதிக்கும் மகனாகப் பிறந்தவர் என்கிற புராணக் கதைகளுடன் நாட்டார் கதைகளும் கணபதிக்கு உண்டு. பெருந்தெய்வம், சிறு தெய்வம் ஆகிய இரு வழிபாடுகளிலும் கணேசர் இருந்திருக்கிறார். பக்திக்கு அப்பாற்பட்ட பண்பாட்டு அடையாளமுமாக முன்னிறுத்தப்படுகிறது. தாண்டவம் ஆடும் புகழ்பெற்ற நடராஜரைப் போல் கணேசக் கடவுளின் சிலைகளும் இந்திய அடையாளமாகப் பிரசித்தி பெற்றவை. நிஷ்கலங்கமான ஆனை முகமும் குள்ள உருவமும் இதற்குக் காரணம் எனலாம்.

பெளத்த சமயத்தைப் பின்பற்றிய குஷாணப் பேரரசுக் காலகட்டத்தைச் சேர்ந்த தாமிர நாணயங்களில் கணேசக் கடவுளின் உருவம் கண்டறியப்பட்டுள்ளது. பொது ஆண்டின் இரண்டாம், மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த நாணயங்கள் அவை.

குப்தப் பேரரசு காலகட்டத்தைச் சேர்ந்த உதயகிரி சமணக் குடைவரைக் கோயிலில் காணப்படும் விநாயகரின் சிற்பம் இந்திய அளவில் கணேசக் கடவுளின் முதல் கற்சிற்பம் எனச் சொல்லப்படுகிறது. இது பொ..ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இதற்கு முன்பே வேதத்திலேயே இந்தக் கடவுளைக் குறித்துப் பெயரளவில் குறிப்புகள் உள்ளதாகச் சொல்லப்பட்டாலும், இன்றைக்குப் பிரம்மாண்டமான அளவில் வளர்ந்துள்ள கணபதியின் தெய்விகத் திருவுரு பெளத்த, சமண விநாயகரை ஒத்தது எனலாம்.

இனவியல் பேராசிரியர் பி..குப்தே, கணேசர் உழவர்களின் கடவுள் என்றும் அவரது உருவமே அதன் அடிப்படையில் உருவானது என்றும் ஆராய்ந்து கூறியிருக்கிறார். உழவர்கள் சுமந்து செல்லும் சோளத்தட்டைதான் கணபதி உருவக் கற்பனைக்கு வித்திட்டது என்பது அவரது துணிபு. வேளாண் நிலத்தில் உள்ள எலியே அவரது வாகனமாகவும் ஆனது என்கிறார் அவர்.கணபதி வழிபாடு குப்தப் பேரரசு காலத்தில் பொ.. ஐந்தாம் நூற்றாண்டில் தொடங்கிவிட்டதாக இந்திய வரலாற்றறிஞர் எம்.கே. தவாலிகர் குறிப்பிடுகிறார். மார்க்சிய அறிஞர் தேவி பிரசாத் சட்டோபாத்யாய தனது ‘லோகாயுத’ நூலில் திராவிடப் பழங்குடியின் சூரிய வழிபாட்டுடன் கணேச வழிபாட்டுக்குத் தொடர்புண்டு எனச் சொல்கிறார். இதே கருத்தை இந்தியக் கலை தத்துவவியலாளரான ஆனந்த குமாரசாமியும் வலியுறுத்துகிறார்.

பல்லவர்களுக்கும் சாளுக்கியர்களுக்கும் பொ.. ஏழாம் நூற்றாண்டில் நடந்த போர் வழியாக இங்கே இந்தப் புதிய விநாயகர் வடிவம் வந்ததாகக் கருதப்படுகிறது. சாளுக்கிய மன்னன் இரண்டாம் புலிகேசியை முதலாம் நரசிம்ம பல்லவனின் படைத் தளபதி பரஞ்சோதி சாளுக்கியத் தலைநகரான வாதாபியில் வெற்றிகொண்டார். இந்தப் படையெடுப்பில் விநாயகர் சிலையை அவர் தனது ஊரான திருச்செங்கட்டான்குடியில் நிறுவினார். இவர்தான் பின்னாளில் 63 நாயன்மார்களில் ஒருவரானார். கர்னாடக இசை மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீட்சிதரின் ‘வாதாபி கணபதிம்’ என்கிற கீர்த்தனையின் ஆதாரம் இந்த வரலாறுதான்.

தமிழில் திருமுறைகளில்தான் விநாயகர் குறித்த குறிப்புகள் கிடைக்கின்றன. சம்பந்தரும் நாவுக்கரசரும் விநாயகக் கடவுளைப் பற்றிய குறிப்புகளைத் தருகிறார்கள். புராணக் கதைகளை ஒட்டியே இந்தக் கருத்துகள் இருக்கின்றன. பாண்டியர், முத்தரையர் காலகட்டத்துக் குடைவரைக் கோயில்களில் விநாயகர் சிற்பங்களைக் காண முடிகிறது.

பாண்டியர் காலகட்டத்தைய பிள்ளையார்பட்டி குடைவரைக் கோயிலில் சுற்றுப் பிரகாரத் தெய்வமாக விநாயகர் உருவம் இருக்கிறது. இந்தக் கோயில் தொடக்கத்தில் சிவனை முதன்மைக் கடவுளாகக் கொண்டு உருவாக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. கோகர்ணம், குன்றக்குடி, திருக்கோளக்குடி போன்ற குடைவரைகளில் விநாயகர் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன.பல்லவ, பாண்டிய, முத்தரையர் கால கட்டத்தில் சுற்றுப் பிரகார தெய்வமாக இருந்த விநாயகர், சோழர் ஆட்சிக் காலத்தில் அஷ்டப் பரிவாரத் தெய்வமானதாக வரலாற்றாய்வாளர் இரா.கலைகோவன் தன் கட்டுரையில் சொல்கிறார்.

கணேசக் கடவுளைப் பிற்காலத்தில் பிரபலப்படுத்தியதில் பொ..14ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மோரியா கோசாவி என்னும் துறவிக்கு முக்கியப் பங்குண்டு. விஷ்ணு, சிவன், சக்தி, சூரிய வழிபாட்டுடன் கணேச வழிபாட்டையும் ஓர் அம்சமாகப் பிரச்சாரம் செய்தார். இன்றைக்கும் வட இந்திய பிள்ளையார் சதுர்த்தி வழிபாட்டில் ‘கணபதி பாபா மோரியா’ எனப் பக்தி கோஷம் எழுப்பப்படுவதைக் கேட்கலாம். புனேக்கு அருகில் சிஞ்ச்வாத் என்னுமிடத்தில் கணேசக் கடவுளுக்கு இவர் கோயில் அமைத்தார். இவருக்கு முன்பே பொ..எட்டாம் நூற்றாண்டில் ஆதி சங்கரர் நெறிப்படுத்திய இந்து மதத்தின் ஆறு பிரிவுகளில் காணபத்யம் எனப்படும் விநாயகர் வழிபாடும் ஒன்றாக இருந்தது. ஆதி சங்கரர் ‘கணேச பஞ்சரத்தினம்’ என்னும் துதிப் பாடலையும் எழுதியுள்ளார்.

பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் பாலகங்காதர திலகர், 1893இல் மிகப் பெரிய மக்கள் திரளுடன் பிள்ளையார் சதுர்த்தியைக் கொண்டாடினார். இந்தக் கொண்டாட்டம் எழுச்சியாகப் பரவியது. ‘சர்வஜன கணேச உற்சவம்’ என இந்த எழுச்சியைத் திலகர் அழைத்தார். மராட்டிய மன்னன் சிவாஜி காலகட்டத்தில் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டதாகச் சான்று இருந்தாலும் திலகரின் இந்த இயக்கம் நாடு முழுவதும் சுதந்திரப் போராட்டத்தின்வழி பரப்பப்பட்டது. 19ஆம் நூற்றாண்டில் வட இந்திய கணேசக் கடவுள் வழிபாட்டுப் பண்பாடு பிரபலம் அடைவதற்கு முன்பே தமிழகத்தில் விநாயகர் வழிபாடு இருந்தது. என்றாலும் இந்தக் காலகட்டத்தில் கணேசர் வழிபாடு பரவலானது. இது இயக்கமாகவும் நம்பிக்கையாகவும் வளர்க்கப்பட்டு பெரும் வழிபாடாக இன்று அச்சமூட்டும் இடத்துக்கு நகர்ந்திருக்கிறது

-மண்குதிரை (இந்து தமிழ் திசை, 25.08.2022)

நிற்க கல்விக்கு தக

 கல்வி கற்பதும், வணிகம் செய்வதும் இருவேறு துருவங்கள் என்பது போல நீண்ட விவாதங்கள் கொண்ட பதிவுகளைக் காண நேர்ந்தது. இவ்வளவு மேம்போக்காக, இவ்வளவு அதீதமாக கொட்டி நிரப்பும் விவாதங்கள் மட்டுமே நமது தமிழ்ச்சூழலில் அறிவார்ந்த விவாதங்கள் என்று நம்பி அலைமோதுவதைக் காணும்போது அயர்ச்சியே எஞ்சியது.

கல்வி கற்பது, திறனை வளர்த்துக் கொள்வது போன்றவை எல்லாம் ஏன் வணிகம் செய்வதற்கு இடையூறாக இருக்கப் போகிறது? அல்லது வணிகம் என்பதை மட்டுமே நம்பும் சமூகம், எப்படி சமுதாயத்தை சீர்கேடாக்குகிறது? இது போன்ற அடிப்படை பிரக்ஞை எதுவுமில்லாமல், வெறும் அதிர்ச்சி மதிப்பீட்டிற்காக மட்டுமே எதையாவது உருட்டி பிரட்டி கருத்துரைக்க வேண்டும் என்கிற அகநெருக்கடி ஏன் உண்டாகிறது?

JSTOR போன்ற தளங்களில் இது போன்ற அதிர்ச்சி மதிப்பீடாக எழுதிக் குவிக்கப்படும் கட்டுரைகளை நீங்கள் பார்க்கலாம். காந்தி ஏன் குடியை எதிர்த்தார் என்பதை காந்தியின் அத்தனை எழுத்துகளிலும் இருந்து புரிந்து கொள்ளாமல், ஏதாவது ஒரு மேல்நாட்டுக்காரர் திரிபுவாதமாக எழுதி வைத்திருப்பதை அப்படியே உருவி எடுத்து தமிழ்ச்சூழலில் உலவவிடுவது போன்றவை அறிவு செயல்பாடுகளுக்கு முற்றிலும் புறம்பானவை.


நமது சமூகத்தின் கல்வி திட்டத்தில் குறைபாடுகள் உள்ளனவா? மிக அதிக மனித வளம் கொண்ட நாட்டில், அனைவருக்கும் அடிப்படை கல்வியும், அதற்கு மேல் தரமான உயர்கல்வியும் அளிக்கும் சிஸ்டம் சாமானியமாக உருவாக்கப் படுவதில்லை. ஏகப்பட்ட கருத்து விவாதங்களின் மீது, கற்க வேண்டிய கல்வி வரையறுக்கப்பட்டு, மொத்த சமூகத்தையும் உள்ளடக்கிய ஒரு பரந்த திரளின் மீதான அதன் தாக்கத்தை எடைபோட்டு, இந்த கல்வித்திட்டம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
இதன் போக்கில் பல குறைபாடுகள் விளைந்து கொண்டேதான் இருக்கும். அவற்றை சீர்படுத்தி செப்பனிடுவதும் நமது பொறுப்புதான்.
மாறாக, வணிகம் மட்டுமே நோக்காக கொண்டு செயல்படும் சில சமூக்கத்தினரை உதாரணமாக காட்டி, 'அதுதான் உயர்ந்தது' என்று அடித்து விடுவதெல்லாம் அறிவுச்செயலுக்கு அடாதது.
வணிகம் மட்டுமே நோக்காக கொண்டவருடைய பார்வையில், இலாபம் மட்டுமே முதன்மையானதாக இருக்கும். சுரண்டல், வன்முறை, பெண்களை போகப்பொருளாக மட்டும் பார்க்கும் தடித்தனம், காரியம் சாதிக்க யாரையும் காவுகொடுக்கும் அடாவடித்தனம், சமூக சீர்கேடுகளைக் கண்டு கொள்ளாதிருத்தல் என பல எதிர்மறை குணங்களை, அதன் ஊறுகள் தெரியாமலே தன்னகத்தே கொண்டிருக்கும் அவலம் நிகழ்வதற்கு சாத்தியங்கள் அதிகம் உண்டு.
வள்ளுவரின் வாக்கில் சொல்வதானால், "கற்க வேண்டியவற்றை குறையில்லாமல் கற்றுக் கொள்ள வேண்டும்'. இதில் 'காசு பணம் சம்பாதிப்பதும்' உள்ளடக்கம்தானேத் தவிர, அது மட்டுமே 'கற்பவை' அல்ல. ஒரு குடிமைச் சமூகத்திற்கு தேவையான பரந்துபட்ட கல்வியைத்தான் வள்ளுவர் 'கற்பவை' எனக் குறிப்பிடுகிறார்.
அரசியல் வெளியில், சிறந்த ஜனநாயக முறை என்பது மிகவும் சர்ச்சைகள் கொண்ட, கருத்து மோதல்களுக்கு பரந்த இடமளிக்கக் கூடிய, கட்டுபாடான முன்னேற்றத்தை மட்டுப்படுத்தி கேள்விக்குட்படுத்தும் மக்கள் செயல்பாடுகள் எல்லாம் உள்ளடக்கியது. ஜனநாயக முறையின் திறனுக்கு, தீர்க்கமான அளவுகள் இல்லை.
ஆனால், ஜனநாயக முறைதான் நமது குடிமை அமைப்பிற்கு, குறைந்த ஊறுகளை விளைவிக்கும் சிறந்த அரசியல் முறை.
அது போலதான், வெறும் வணிக இலாபத்தை மட்டும் நோக்காக கொண்ட இனக்குழு செயல்பாடுகளைக் காட்டிலும், அனைத்தையும் உள்ளடக்கிய சீரான கல்விமுறைதான் சமூகத்திற்கு அத்தியாவசியமான ஒன்று.
நான் கற்ற கல்வியோ, பெற்ற செல்வமோ, அறிவுச்சமூகத்தில் வெறும் அடையாளங்கள்தான். அந்த கல்வியின் வழியே நான் என்னை நடத்திக் கொள்ளும் முறையே என் தகுதியை தீர்மானிக்கின்றது.
அப்படியல்லாது, வணிக இலாபங்களை புகழ்ந்தும், அறிவு செயல்பாட்டை இகழ்ந்தும் அடையாளப்படுத்துமானால், அந்த சமூகம் எனக்கானதல்ல. அடிப்படை மனித பண்புகள் கொண்ட எவருக்கானதுமல்ல.



உங்கள் கருத்துகளை தெரிவிக்க http://www.sridharblogs.com/ தளத்திலோ [email protected] மெயிலுக்கோ எழுதித் தெரிவிக்கலாம்.

உலகின் பெருமை

(இச்செய்தி புதியதல்ல, வள்ளுவர் என்றைக்கோ எளிமையாகச் சொல்லிச் சென்றதுதான்…)

ஓர் ஆசிரியர் தம் மாணவனிடம் கேட்டார். “தம்பீ, அவன் தன் கிராமத்திலேயே முதன்முதலாகப் படித்திருக்கிறான், அவனுக்கும் அவன் ஊருக்கும் அது பெருமை என்றாய் அல்லவா?”

“ஆமாம் சார்”

“அப்புறம், நம் தலைவர் இதைச் செய்திருக்கிறார், அதைச் செய்திருக்கிறார், மிகவும் ‍பெருமையாக இருக்கிறது என்றாய் அல்லவா?”

“ஆமாம் சார்”

“அதுபோல இந்த உலகத்திற்கே மிகப் பெரிய பெருமை ஒன்று இருக்கிறது என்கிறார் வள்ளுவர், தெரியுமா உனக்கு?”

“இல்லை சார்”

“அப்படியானால் தெரிந்துகொள். நெருநல் உளன் ஒருவன் இன்று இல்லை என்னும் பெருமை உடைத்து இவ் உலகு என்கிறார் வள்ளுவப் பெருமான்.”

“புரியவில்லை சார்”

“அதாவது, நேற்று ஒருவன் இருந்தான், ஆனால் இன்று பார்த்தால், அவன் இல்லை. அதுதான் இந்த உலகிற்குப் பெருமை என்கிறார் வள்ளுவர்.”

“சார், இது எப்படிப் பெருமையாகும்?”

ஒருவன் ஒரு பொருளைப் படைக்கிறான். அது பெருமை இல்லையா?

“ஆமாம் சார்”

அதை இன்னொருவன் வாங்கிப் பாதுகாப்பாக வைத்திருக்கிறான். அது பெருமை இல்லையா?

“ஆமாம் சார், முன்னதைவிட இது பெருமை.”

இன்னொருவன் அதை அழித்துவிடுகிறான். அது பெருமையல்லவா?

“எப்படி சார்? அழிப்பது எப்படிப் பெருமையாகும்?”

ஓர் ஆசிரியர் கரும்பலகையில் எழுதியதை அழித்துவிடுகிறார். அது பெருமையா இல்லையா?

எப்படி சார்? எப்படி அது பெருமை?

அவரால் அதே போல புதிதாக எழுதமுடியுமே. அதனால்தானே அழிக்கிறார்?

“நீ உன் பழைய வகுப்புகளில் படித்த எல்லாவற்றையும் வைத்திருக்கிறாயா?”

“இல்லை சார், நான்தான் அதைத் தாண்டிவிட்டேனே, என்னால் இப்போது புதிதாகவே எழுதமுடியுமே”

அது போலத்தான், இறைவனால் ஒன்றை அழித்தாலும் வேறொன்றை உருவாக்க முடியும். அதனால்தான் அழிக்கிறான். அது பெருமையல்லவா?

ஆமாம் சார்.

அதனால்தான் வள்ளுவர் சொல்கிறார், நெருநல் (நேற்று) இருந்த ஒருவன், இன்று இல்லை. அதுதான் உலகிற்குப் பெருமை என்று. ஏனென்றால் உலகினால் புதிது புதிதாக மனிதர்களை அல்லது வேறு ஜீவராசிகளை உருவாக்கவும் வாழ‍வைக்கவும் முடியுமே?

ஆம். நெருநல் உளன் ஒருவன் இன்று இல்லை. அதுதான் இந்த உலகிற்குப் பெருமை. அது வேறு புதிது புதிதாக ஜீவராசிகளை உருவாக்கும். பழையகால டைனோசார்கள் இன்று இல்லாமற்போனாலும் புதிதாக எத்தனையோ இனங்கள்…மனிதர்கள் போன்ற இனங்கள் தோன்றியிருக்கின்றன. ஏனெனில் உலகம் இன்றிருந்தபடியோ, மாறியோ தொடர்ந்து இருக்கும். அது‍போல இன்றுள்ள மனிதர்கள் அவ்வளவு பேருமே இல்லாமற் போனாலும் வேறு புதிய மனிதர்களோ வேறு இனங்களோ தோன்றுவார்கள். இது உலகின் பெருமை யல்லவா? ஆனால் இது மனிதனின் சிறுமையை, இயலாமையை ஞாபகப்படுத்துவது என்பதையும் நினைவில் கொள்.”

கேள்விகளும் பதில்களும்

இரு மாதங்களுக்கு முன்பு கனடாவிலிருந்து

நண்பர் அகிலன் கேட்ட கேள்விகளும்

அவற்றுக்கு நான் அளித்த பதில்களும்

1. தனிநாயகம் அடிகளார் எழுதிய Nature in Ancient Tamil poetry என்னும் நூலை நிலஅமைப்பும் தமிழ்க் கவிதையும் என்ற பெயரில் மொழிபெயர்த் திருந்தீர்கள். அவர் இறந்து நீண்ட காலத்தின் பின் இவ்வரிய நூலை மொழிபெயர்க்க வேண்டிய அவசியம் என்ன? தனிநாயகம் அடிகளாரிடம் கல்வி கற்றதன் காரணமாக இம்மொழிபெயர்ப்புத் துறையில் ஈடுபட்டீர்களா?

முதலில் ஒரு யூகத்தைக் களைந்துவிடுகிறேன். நான் தனிநாயகம் அடிகளாரிடம் கல்வி கற்றவன் அல்ல. அதற்கான வாய்ப்பு எனக்குக் கிட்டவில்லை. ஆனால் ஒரு வேடிக்கை தெரியுமா? நான் ஏழாம் வகுப்பு படித்தபோதே தனிநாயகம் அடிகளாரின் ஒன்றே உலகம் என்ற (பயண) நூலைப் பரிசாகப் பெற்றேன். அவரது பிற படைப்புகளையும் பின்னர் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. திருச்சியில்தான் நான் நீண்டகாலம்–32 ஆண்டுகள் (1975 முதல் 2007 வரை) கல்லூரிப் பேராசிரியனாகப் பணிபுரிந்தேன். அங்கு தமிழ் இலக்கியக் கழகம் என்ற அமைப்பை வைத்து நடத்திவருபவர் அருட்திரு. அமுதன் அடிகளார். அவர் தனிநாயகம் அடிகளோடு தொடர்புடையவர். அவர்தான் தனிநாயகம் அடிகளாரின் நூலை மொழிபெயர்த்துத் தருமாறு எனக்குக் கூறினார். அதனை நான் நிறைவேற்றினேன், அவ்வளவுதான்.     

2. ரஷ்ய இலக்கியங்கள் தமிழகத்தில் மாத்திரமல்ல இலங்கையிலும் அதிக செல்வாக்குச் செலுத்தின. அத்தோடு தமிழில் ரஷ்ய உருவவாதம் குறித்து வெளிப்படையாக யாரும் பேசாத நிலையில் உங்களின் ‘ரஷ்ய வடிவ வியல்’ கட்டுரை ஈழத்தில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தின. இந்நிலையில் பழங்கால ரஷ்ய இலக்கியங்கள் குறித்து பேசும் பலர் அண்மைக்கால ரஷ்ய இலக்கியங்கள் குறித்து பேசப்படாமைக்கான காரணம் என்ன?

அண்மைக்கால ரஷ்ய இலக்கியங்கள் குறித்துப் பேசாமைக்குக் காரணம், அதற்கான தேவையின்றிப் போனதுதான் என்று நினைக்கிறேன். (கலாச்சார மாற்றம்தான் அதற்கான தேவை). எங்கள் சிறுவயதில் டால்ஸ்டாய் ஒரு பெரிய ஆதரிசமாக இருந்தார். ஆனால் தாஸ்தாயேவ்ஸ்கி குறித்து அப்போது அதிகம் கேள்விப்பட்டதில்லை.

நான் அதிகமும் ஈடுபாடு கொண்ட துறை இலக்கியக் கொள்கை. இன்றைய இலக்கியக் கொள்கை பற்றிப் பேச முனையும் எவரும் வடிவஇயல் வாதங்களான அன்றைய மேற்கத்திய வடிவஇயலையும் (Western Formalism) ரஷ்ய வடிவஇயலையும் (Russian Formalism) குறித்துப் பேசாமல் இருக்க முடியாது அல்லவா? மேலும் பக்தின் போன்றோர் அறிமுகப்படுத்திய பலகுரல் தன்மை போன்றவை இன்றைய இலக்கிய அடிப்படைகளாக உள்ளன.     பழங்கால ரஷ்ய இலக்கியத்தில் பூஷ்கின், டால்ஸ்டாய், தாஸ்தாயேவ்ஸ்கி போன்ற பல ஆதரிசங்கள் இருந்தனர். அந்த அளவுக்குப் பின்னால்வந்த ரஷ்ய எழுத்தாளர்கள் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஒரு குறிப்பிட்ட நோக்கம் கருதி ரஷ்ய நாவல்களையும் படைப்புகளையும் மொழிபெயர்ப் பில் அளித்துவந்த என்சிபிஎச் போன்ற நிறுவனங்களும் அதை நிறுத்திக் கொண்டன என்பது முக்கியக் காரணம்.     

3. தமிழவன், தி.சு.நடராசன், பிரம்மராஜனைப் போன்று கவிதை இலக்கியம் குறித்து தமிழகத்தில் ஆழ, அகலமாக எழுதியவர்களுள் நீங்களும் ஒருவர். தெலுங்கு கவிஞர் வரவர ராவினால் சிறையில் இருந்து எழுதப்பட்ட கடிதங்களை சிறைப்பட்ட கற்பனை என்ற பெயரில் தமிழில் மொழிபெயர்த்து இருந்தீர்கள். ஆயினும் ஒப்பீட்டளவில் கவிதைகள் குறித்தான உங்களுடைய மொழிபெயர்ப்புகள் குறைவாக இருப்பதற்கான காரணம் என்ன?

இரண்டு காரணங்கள்: ஒன்று, எனக்கு அடையாளம் பதிப்பகத்திலிருந்து தான் மொழிபெயர்ப்புக்கான நூல்கள் கிடைத்தன. அடையாளம் சாதிக் உரைநடையில் ஆர்வம் காட்டியதுபோல கவிதையில் ஆர்வம் காட்டவில்லை என்றே நினைக்கிறேன். பெரும்பாலும் அவர் அளித்த நூல்களையே நான் மொழிபெயர்த்தேன்.  

இரண்டாவது, அன்றைய இலக்கிய நண்பர்கள் சிலர், கவிதை மொழிபெயர்ப்பு மிகவும் கடினமானது, அதைச் செய்யவேண்டாம் என்று எனக்கு அறிவுறுத்தினார்கள். (இது பிழையானதொரு கருத்து என்று தெரிந்தாலும், மாற்றிக்கொள்ளவில்லை.)

4. ஆங்கிலத்தைப் போன்று இந்தி மொழியிலும் புலமைத்துவம் கொண்டவர் நீங்கள். ஆயினும் இந்தியில் இருந்து ஒரு சிறந்த மொழிபெயர்ப்பை உங்களால் ஏன் தரமுடியவில்லை?

வெளிப்படையாக இல்லாவிட்டாலும், மறைமுகமாக நான் சந்தை நிலவரத்துக்குக் கட்டுப்பட்டு (அடையாளம், எதிர் போன்ற பதிப்பகங்களின் பார்வையில்) மொழிபெயர்ப்புகளைச் செய்தவன். அவர்கள் எனக்கு நல்ல இந்தி நூல்கள் எதையும் மொழிபெயர்ப்புக்கெனப் பரிந்துரை செய்ய வில்லை. மேலும் என் ஆங்கிலப் புலமை நாடறிந்த ஒன்று. (தமிழ் வகுப்பு களையே ஆங்கிலத்தில் நடத்துபவன் என்று அக்காலத்தில் பேசப்பட்டவன் நான்.) அதனால் இந்தியில் இருந்து மொழிபெயர்ப்பதில் அக்கறை காட்ட வில்லை. அத்துடன், ஆங்கிலத்துடன் ஒப்பிடுகையில் இந்தியில் அதே அளவு சிறந்த இலக்கியங்கள் இருந்ததாக (இன்றும்!) எனக்குத் தோன்ற வில்லை.  

5. ஒரு மொழி பெயர்ப்பாளனுக்கு இருக்கவேண்டிய அடிப்படைத் தகுதிகளாக நீங்கள் எதனைக் கருத்துகிறீர்கள்?

என்னைப் பொறுத்தவரை, ஒன்றே ஒன்றுதான். நேர்மை. அதாவது எந்த விதத்திலும் மூலத்தின் கருத்துகளைப் பிறழ உணர்த்தலாகாது. அதற்கு அடுத்த நிலையில்தான் இலக்கிய அழகு, நடை போன்றவை வருகின்றன. அழகிற்காக, அலங்காரத்திற்காக, நடைக்காகக் கருத்துகளை மாற்றுபவனை மொழிபெயர்ப்பாளன் என்று கூற முடியாது. தழுவலாளன் என்று வைத்துக் கொள்ளலாம்.

6. ஈழத்தில் கிளிநொச்சியில் நடைபெற்ற புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களுக்கான சர்வதேச மாநாட்டின்போது உங்களால் மொழிபெயர்க்கப் பட்ட சாமுவேல் பி.ஹண்டிங்டனின் ‘நாகரிகங்களின் மோதல்’ என்ற நூல் அறிமுகம் செய்யப்பட்டது. உலக ஒழுங்கின் மறு ஆக்கமான நாகரிகங்களின் மோதல் குறித்துப் பேசும் இந்நூல் பனிப்போருக்குப் பின்னரான உலக அரசியல் நிலையை தமிழ் உலகுக்கு வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது. இந்நூலாக்கத்தின் போது உங்களுக்கு ஏற்பட்ட அனுபவப் பகிர்வை கூறமுடியுமா?

அச்சமயத்தில் இருந்த மனநிலையை இப்போது என்னால் சொல்ல முடிய வில்லை. அதை வெளிப்படுத்துவதற்குக் கிடைத்த ஒரே சந்தர்ப்பம், ஆனந்தவிகடன் பரிசளிப்பு விழாவின்போது. ஆனால் கருத்துரையாளர்கள் அதில் ஆர்வம் காட்டவில்லை. அவர்களைப் பொறுத்தவரை மேடை என்பது ஜனரஞ்சகத்துக்கானது, கருத்துகளுக்கானதல்ல. என்னைப் பொறுத்தவரை என்றைக்குமே அமெரிக்காவின் (நாகரிகம் உள்ளிட்ட) ஆதிக்கக் கொள்கைகளுக்கு எதிரானவன். அதற்கு ஓரளவு இந்த நூல் உதவுமோ என்ற எண்ணம்தான் மொழிபெயர்ப்பின்போது எனக்கு இருந்தது. அவ்வாறில்லாமல் போய்விடக் கூடாதே என்ற அச்சமும் இருந்தது.

7. காஷ்மீர்ப் பள்ளத்தாக்கில் போரினால் அலைக்கழிக்கப்பட்டு நொந்து நொடிந்து வாழும் மக்களின் இயல்பு வாழ்வை நுட்பமாக வரையும் சித்திரமே பஷரத் பீரின் ‘ஊரடங்கு இரவு’ இந்நூலை எச்சூழலில் மொழிபெயர்க்க வேண்டுமென்ற ஆவல் உங்களுக்கு ஏற்பட்டது?

அன்றல்ல, இன்றுவரை காஷ்மீர் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிரானவன் நான். (இன்றைய பிரதமரின் நோக்கில் காஷ்மீர் துண்டாடப் பட்டு பிரிக்கப்பட்டது, காஷ்மீர்ப் “பண்டிதர்களை” வெளிப்படையாக ஆதரித்து அவர்களுக்காக முஸ்லிம்களைக் கொடுமைப் படுத்துவது போன்ற செயல்களையும் நான் ஆதரிக்கவில்லை. அதனால் திரு. கண்ணன் (காலச்சுவடு) ஊரடங்கு இரவு நூலை மொழிபெயர்க்கமுடியுமா என்று கேட்டபோது உடனே ஒப்புக் கொண்டேன்.

8. 1993இல் புக்கர் விருதைப் பெற்ற மிகச்சிறந்த நாவல்களில் ஒன்றே சல்மான் ரூஷ்தியின் நள்ளிரவின் குழந்தைகள். இந்தியா தன்னாட்சி நாடாக சுதந்திரமடைந்த நிலையில் நவீனத்துவத்துக்கும் பாரம்பரிய கலாச்சாரத்திற்கும் இடையில் போராடும்  சலீம் சினாயின் வாழ்வைப் பிரதிபலித்ததே நள்ளிரவின் குழந்தைகள் நாவல். இந்நிலை இந்தியாவில் இன்னும் தொடர்வதாக நீங்கள் நம்புகிறீர்களா?

கண்டிப்பாக. நான் சிறுவயதில் (ஏறத்தாழ ஐம்பத்தாறு ஐம்பத்தேழு ஆண்டு களுக்கு முன்பு) வேலூருக்கு அருகிலுள்ள விரிஞ்சிபுரம் என்ற ஊரில் வாழ்ந்தேன். இன்றும்கூட அங்கு பஸ்நிலையத்துக்கு மேற்குப்புறம் முஸ்லிம்கள் குடியிருப்பு தனியாக இருப்பதைக் காணமுடியும் என்றே நினைக்கிறேன். மேலும் என் சொந்த ஊர் ஆர்க்காடு. அதற்கு அருகிலேயே விஷாரம் என்ற முஸ்லிம்களின் தனிக்குடியிருப்பு (ஊர்) இருந்தது. உயர்ந்த அடுக்கு மாளிகைகள், குறுகிய, நெருக்கமான தெருக்கள், அழகும் சுகாதாரமும் அற்ற சூழ்நிலைகள் என்பன அவர்களைத் தனியே பிரித்துக் காட்டின. அங்குள்ள முஸ்லிம்களின் வாழ்க்கை ஏறத்தாழ சலீம் சினாயின் அனுபவத்தை எனக்கு 1965 வாக்கிலேயே அளித்தது என்று கூறலாம். அக்காலத்தில் (1960-70) அந்த முஸ்லிம்களால் நமது (பொது இந்திய, தமிழக) வாழ்க்கையுடன் ஒட்ட முடியவில்லை என்றே உணர்ந்தேன்.   

9. மாவோயிஸ்ட்கள் குறித்து தன் முன்னே நடந்த, தன்னைப் பாதித்த சம்பவங்களை மையமாகக் கொண்டு அருந்ததிராயால் எழுதப்பட்ட நூலே  ‘புரோக்கன் ரிபப்ளிக்’. இதனை ‘நொறுங்கிய குடியரசு’ என்ற பெயரில் தமிழில் மொழிபெயர்த்து இருந்தீர்கள். இந்நூல் வெளிவந்து சில காலத்துக்குள்ளேயே விற்றுத் தீர்ந்து விட்டதாக அறிந்தேன். இந்நூலை மொழிபெயர்க்கும் போதே இந்நூல் அமோக வரவேற்பினை பெறும் என்பதை நீங்கள் உணர்ந்து கொண்டீர்களா? இவ்வாறான சூழலில் பதிப்பகங்கள் உங்களுக்கு றோயல்டி தருகின்றதா?

பொதுவாக அருந்ததிராயின் எழுத்துத்திறனில் எனக்கு நம்பிக்கை அதிகம்.

அதனால் அந்த நூலை மொழிபெயர்த்தேன். அது நல்ல வரவேற்புப் பெறும் என்பதற்கான அறிகுறிகள் முன்னரே தெரிந்தன. ஆனாலும் காலச்சுவடு கண்ணன், அந்த நூலைப் பற்றிய அருந்ததி ராயுடனான விவாதங்களில் எனக்கு இடமளிக்காமல் வேறு எவ்வெருக்கோ வாய்ப்பளித்தார். (அதனால் ஏற்பட்ட கசப்பில் பிறகு அவருக்காக எந்த நூலையும் நான் மொழிபெயர்க்க வில்லை.)

கேரள ராயல்டி மரபு திரு. கண்ணனுக்கு நன்கு தெரியும் என்றாலும் அவர் அதைப் பின்பற்றவில்லை. பொதுவாக எனக்கு தமிழ்ப் பதிப்பாளர்கள் ராயல்டி தருவதில்லை. அந்த நூல்கள் வெளிவந்தவுடனே (அவர்கள் அளவில் தகுதியானது என்று நினைக்கின்ற, பல சமயங்களில் சிறிய) ஒரு தொகையினைத் தந்துவிடுவார்கள். அவ்வளவுதான். அதற்குப் பிறகு நூலுக்கும் நமக்கும் தொடர்பில்லை. கேரளாவில் முறையான ராயல்டி தரும் மரபு இருக்கிறது. அதைப்பற்றி அடையாளம் சாதிக்-உடன் விவாதித்தும் இருக்கிறேன். அங்கே நூல்கள் விற்பனை அதிகமாக உள்ளது, இங்கு தமிழ்ச் சூழலில் நூல்கள் விற்காதநிலை-தேக்கம்தான் உள்ளது என்று அவர் காரணம் சொல்வார்.

10. ‘டாக்டர் இல்லாத இடத்தில் பெண்கள்’, ‘பேற்றுச்செவிலியர் கையேடு’ , ‘இணை மருத்துவம், மாற்றுமருத்துவம், உங்கள் உடல்நலம் ‘,‘தலைமுடி இழப்பு-மருத்துவம்’, ‘மூல வியாதி’, ‘ஐம்பது உடல்நலக் குறிப்புகள்’ என அதிகளவான மருத்துவநூல்களை மொழிபெயர்க்கும் நீங்கள் எதிர்கொண்ட சிரமங்களை இலக்கிய வெளி வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியுமா?

பெரும்பாலும் நான் மொழிபெயர்க்கவேண்டிய நூல் எந்தத் துறையைச் சேர்ந்ததோ, அந்தத் துறையில் அடிப்படை நூல்களைப் படித்துவிடுவது எனது வழக்கம். அதனால் எனக்கு எந்தத் துறையிலும் மொழிபெயர்ப்பது எளிதாகவே இருந்தது. சிரமங்கள் என்று குறிப்பாக எதுவும் ஏற்பட்ட தில்லை. (இன்னும் இது பற்றிப் பேசவேண்டுமானால் விரிவான களம் வேண்டும்.) எனது மொழிபெயர்ப்பின் அடிப்படை, என் பரந்த படிப்பு. நான் படித்த துறைகள் மிகுதி. அநேகமாக கலையியல், மனிதவியல், அறிவியல் துறைகள் எல்லாவற்றிலும் எனக்குப் பரிச்சயம் உண்டு.

கலைச்சொல் உருவாக்கலில் பல சிரமங்கள் ஏற்பட்டிருக்கலாம். அதில் எனக்கு அக்காலக் கலைக்கதிர் பத்திரிகை, திரு. ஜி. ஆர். தாமோதரன் மேற்பார்வை யில் வெளிவந்த கலைச் சொல் உருவாக்க நூல்கள், மணவை முஸ்தபா வின் கூரியர் இதழ் போன்றவை ஊக்கமளித்தன. நானாகவும் நிறையச் சொற்களை மொழிபெயர்த்தேன். பொதுவாக, கலைச் சொல்லாக்கத் துறையில் எனக்கு முன்னர் இருந்தவர்கள் நல்ல பாதையை எனக்குச் செப்பனிட்டுத் தந்திருந்தார்கள் என்றே நினைக்கிறேன். குறிப்பான கலைச்சொல்லாக்கத்தைவிட, எடுத்துக் கொண்ட நூலின் கருத்து வாசகர்களுக்குப் போய்ச் சேரவேண்டும் என்பதில்தான் எனது அக்கறை. தமிழ் பயின்றவன் என்பதைவிட அடிப்படையில் நான் ஓர் அறிவியல் மாணவன். பி.எஸ்சி இயற்பியல் எனது தலைமைப்பாடம். அதைப் படிக்கும்போதே விரிவாக அறிவியல்துறையில், குறிப்பாக மருத்துவத் துறையில் பல நூல்களையும் நான் படித்திருந்தேன்.

11. ‘கீழையியல் தத்துவம்’, ஸ்டீவ் புரூஷீன் ‘சமூகவியலின் அடிப்படைகள்’, ‘பின்நவீனத்துவம்’ ‘உலகமயமாக்கல்’, டிலான் இவான்சின் ‘உணர்வெழுச்சி ‘, டேவீட்எஃப் ஃபோர்டுவின் ‘இறையியல்’ என கோட்பாட்டு நூல்களை அதிகளவில் மொழிபெயர்த்து தந்த சிறந்த ஆளுமைகளில் நீங்களும் ஒருவர். இது தவிர கோட்பாட்டியல் சார்ந்து நிறையக் கட்டுரைகளையும் மொழிபெயர்த்து எழுதியுள்ளீர்கள்.அவ்வாறு மொழிபெயர்க்கும்போது சாதாரண தமிழில் பயின்று வராத சொற்களைத் தமிழ்ப்படுத்த வேண்டிய சூழல் உங்களுக்கு ஏற்படும். அவ்வாறு உங்களால் உருவாக்கப்பட்டு இன்று தமிழில் வழக்கத்தில் உள்ள கலைச்சொற்கள் குறித்து உங்கள் அனுபவப் பகிர்வுகளை எம்மோடு பகிர்ந்து கொள்ள முடியுமா? அடையாளம் பதிப்பகத்துக்காகவே இந்நூல்களை அதிகம் மொழிபெயர்த்திருந்தீர்கள் இது எதனால் விளைந்தது?

அடையாளம் பதிப்பத்துடனான என் தொடர்பு ஏறத்தாழ 2006இல் ஏற்பட்டது. முதன்முதலில் அவர் உலகமயமாக்கல் நூலை மொழிபெயர்த்துத் தர முடியுமா என்று கேட்டார். நான் இசைந்து மொழிபெயர்ப்புச் செய்தேன். அதிலிருந்து பல்வேறு துறைகளிலும் எனது மொழிபெயர்ப்புகள் அடையாளம் பதிப்பகத்துக்காகத் தொடங்கின. அடையாளம் பதிப்பகத்துடனான என் தொடர்பு, என் மொழிபெயர்ப்பு, கலைச்சொல் லாக்கப் பாதையில் ஒரு மைல்கல். பின்னர் சில நூல்களை எதிர் வெளியீட்டிற்காகவும் மொழிபெயர்த்தேன்.

முதன்முதலில் குளோபலைசேஷன் என்ற சொல்லைத் தமிழ்ப்படுத்துவதி லேயே ஒரு சிக்கல்- இதை உலகமயமாதல் என்பதா, உலகமயமாக்கல் என்பதா? “குளோபலைஸ்” என்ற சொல்லை ஆராயும்போது அது வேண்டு மென்றே (சிலரால்) செய்யப்படும் முன்னெடுப்பைத்தான் காட்டுகிறது. தானாக எதுவும் ‘குளோபலைஸ்’ ஆக முடியாது. எனவே உலகமயமாதல் என்பதைவிட உலகமயமாக்கல் என்பதே பொருத்தமாக இருக்கமுடியும். அதேபோல வெப்பமயமாதலா, வெப்பமயமாக்கலா? இம்மாதிரிச் சிறு சொற்கள் தொடங்கி, மிகத் துல்லியமான கலைச் சொற்களை உருவாக்குவது வரை பல நிலைகளில் சந்தேகங்கள் ஏற்படும். அவற்றை விரிவாக ஒரு நூலாகத் தான் எழுத முடியும்.

முதன்முதலில் நான் ஸ்ட்ரக்சுரலிசம் நூலைத் தமிழில் அளித்தபோதே (1990) நிறையக் கலைச் சொற்களை உருவாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அந்த நூலிலேயே நூற்றுக்கணக்கான கலைச் சொற்களை நான் உருவாக்கியிருப்பதை நீங்கள் காண முடியும். தமிழவன் எந்தச் சிரமமும் படாமல் ஸ்­ட(?)ரக்சுரலிசம் என்றே தன் நூலுக்குப் பெயரிட்டிருந்தார். நான் (பொருள் அடிப்படையில்) அமைப்புமையவாதம் என்று அதைக் கையாண்டி ருந்தேன். பிறகு அச்சொல் அமைப்புவாதமாகி, இன்று அமைப்பியம் என்ற சொல்லாகியிருக்கிறது. இதிலிருந்தே, நான் பொருளை உணர்ந்து அதற் கேற்பச் சொல்லை உருவாக்குபவன் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளலாம்.

இனிமேல்தான் நான் எந்தஎந்தச் சூழ்நிலையில் எந்தெந்தக் கலைச்சொற் களை என் நூல்களில் உருவாக்கியுள்ளேன் என்பதை ஆராய வேண்டும். இதை நானே செய்வதில் எனக்கு ஆர்வம் இல்லை.  

முதன்முதலில் அமைப்புமைய வாதம், தொடர்பியல் கோட்பாடுகள் என்ற நூல்களை 1990இல் எழுதிய போதே கலைச்சொல் உருவாக்க முயற்சிகள் என்னிடம் தோன்றிவிட்டன. எவ்வளவு கலைச் சொற்களை நான் உருவாக் கியிருக்கிறேன், அது பற்றிய முறையான எனது நோக்கு என்ன என்பதைத் தனியாகத்தான் ஆராய வேண்டும்.

(வேறு செல்வாக்கு மிகுந்த ஆளாக இருந்தால் இதை ஆய்வு மாணவர்கள் இந்நேரம் செய்திருப்பார்கள்!)

பெரும்பாலும் எனது உள்ளுணர்வையும் என் அடிப்படையான அறிவுசார் நோக்கையும் நம்பியே நான் கலைச்சொற்களை உருவாக்குகிறேன். இதற்கு எனக்கு முன்னோடிகள் இல்லை.     

நான் உருவாக்கிய பலசொற்கள் இப்போது பொதுப் பயன்பாட்டில் உள்ளன. உதாரணமாக 1980இல் நான் உருவாக்கிய சொல் பின்னூட்டம் (Feedback) என்பது. இன்று அச்சொல் அதிகமாகப் பயன்பாட்டில் உள்ளது. நான் உருவாக்கி, இன்று பயன்பாட்டில் உள்ள கலைச்சொற்கள் பற்றி எனக்குக் கணக்குத் தெரியவில்லை. அதைப்பற்றி நான் மிகுதியாக அக்கறை கொள்ளவும் இல்லை. நம் நாட்டில் இண்டெக்ஸ் (Index-பொருளடைவு) என்பதை நூல்களில் சேர்க்கும் வழக்கம் இல்லை. என் நூல்கள் ஒவ்வொன்றுக்கும் அப்படி இண்டெக்ஸ் சேர்த்தால் நான் உருவாக்கிய சொற்களை எளிதாகவே கண்டுபிடித்துக் கொள்ளலாம்.

12. சமஸ்கிருதத்திலும் இந்திய ஆய்விலும் முனைவர் பட்டம் பெற்ற சமய வரலாற்று அறிஞர் வெண்டி டோனிகர் எழுதிய “இந்துக்கள்: ஒரு மாற்று வரலாறு”  நூலை தமிழில் மொழிபெயர்த்துள்ளீர்கள். இந்தியாவில் இந்நூலை ஆங்கிலத்தில் பென்குயின் பதிப்பகம் வெளியிட்ட போது இந்நூலை தடை செய்யவேண்டும் என டெல்லி உயர் நீதிமன்றத்தில் இந்துத்துவவாதிகள் வழக்குத் தொடுத்த சம்பவப்பின்னணி யையும் இதனை தமிழில் மொழிபெயர்க்க வேண்டிய அவசியநிலையும் ஏன் ஏற்பட்டது என்பதை எமக்கு கூறமுடியுமா?

வெளியான நூல்கள் தடைசெய்யப்படுவது போன்ற அரசியல் விஷயங் களில் நான் அதிகமாக அக்கறை காட்டியதில்லை. ஆங்கிலத்தில் நிறைய நல்ல நூல்களுக்கு இந்த கதி ஏற்பட்டுள்ளதை நான் அறிவேன். அதனால் அவற்றின் பிராபல்யமோ, மொழிபெயர்ப்புத் தன்மையோ குறைந்ததில்லை.

இம்மாதிரிச் சோதனைகள் எல்லாம் முடிந்தபிறகுதான் எதிர் வெளியீடு அனுஷ் இந்துக்கள்-ஒரு மாற்று வரலாறு நூலுக்கான உரிமையை வாங்கி, என்னை மொழிபெயர்க்குமாறு சொன்னார். நூலை மொழிபெயர்க்கும் முன்பு அதை ஒருமுறை படித்துப் பார்ப்பது இயல்புதானே? அம்மாதிரி அந்த நூலைப் படிக்கும்போது அதைச் சிறப்பாக மொழிபெயர்த்தே ஆக வேண்டும் என்ற உத்வேகம் எனக்குள் ஏற்பட்டது. அப்போது அந்த நூல் பற்றிய வரலாற்றையும் தெரிந்து கொண்டேன். இதுபோலவே அடையாளம் பதிப்பகத்திற்கான ஒரு மதசம்பந்தமான நூலை மொழிபெயர்க்கும்போதும்  அனுபவம் ஏற்பட்டது. மொழிபெயர்ப்புக்கான நூல்களைப் பதிப்பகத்தினர் அளிக்கும்போதே இந்தப் பிரச்சினைகள் தீர்ந்தபிறகு அனுமதி வாங்கித்தான் செய்கிறார்கள். எனவே இதில் எனக்குப் பிரச்சினை எதுவும் இல்லை. இருந்தால் பதிப்பகத்துக்குத் தான் இருக்கமுடியும்.

13. நவீன அரசியலின் இடர்பாட்டை விளக்கி நிற்கும் சிறந்த நூல்களில் ஒன்றே உங்களால் மொழிபெயர்க்கப்பட்ட ஹெரால்டு ஜே.லாஸ்கியின் ‘அரசியலின் இலக்கணம்’. இன்றைய சூழலில் அரசு, குடிமக்களின் உரிமைகள் மற்றும் சர்வதேச உறவுகளின் முக்கியத்துவம் குறித்து இந்நூல் விளக்கிச் செல்கிறது. லாஸ்கியின் சிந்தனைகள் இந்திய அரசியலிலும் தமிழ்நாட்டிலும் பாரிய தாக்கத்தை செலுத்தியதாகக் கூறப்படுகிறதே இக்கருத்தின் உண்மைநிலை குறித்து கூறமுடியுமா?

லாஸ்கியின் சிந்தனைகள் இந்தியாவிலோ தமிழ்நாட்டிலோ பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியதாக எனக்குத் தோன்றவில்லை. ஏனெனில் இதனை அன்றிருந்த, இன்றுள்ள அரசியல்வாதிகள் பலரும் படித்திருந்தால் இந்தியாவில் அரசியலின் போக்கே வேறுவிதமாகத்தான் இருந்திருக்க முடியும்.

அல்லது அரசியல்வாதிகள் படிப்பது வேறு, நடப்பது வேறு என்று காரணம் சொல்வீர்களா? அல்லது கட்சிகளின் கருத்தியல்தான் ஆதிக்கம் செலுத்துகிறது என்பீர்களா?

அறிஞர் அண்ணா இந்த நூலைப் படித்திருப்பதற்கான வாய்ப்பிருக்கிறது. அவரது சமகாலத் தோழர்கள் (பேராசிரியர் அன்பழகன், நெடுஞ்செழியன் போன்றோர்) இதைப் படித்திருக்கலாம். பின்னர் வந்த “அறிஞர்கள்” (இருபதாயிரம் நூல்களைப் படித்திருப்பதாகப் பெருமையடித்துக் கொண்ட ‘அறிஞர்கள்’ உட்பட) எவரும் இந்த நூலைப் படித்திருப்பர் என்று எனக்குத் தோன்றவில்லை.    இன்றைய நிலையில் இந்நூலின் தமிழ் மொழிபெயர்ப்பைப் பேராசிரியர்கள், அறிஞர்கள் சிலர் வாங்கிச் சென்று மொழிபெயர்ப்பு நன்றாக இருக்கிறது என்று எழுதினர். அது எனக்கு மகிழ்ச்சியளித்தது.

14. கேரள எழுத்தாளர் மனுஜோசப் எழுதிய சீரியஸ்மென் நாவலை ‘பொறுப்பு மிக்க மனிதர்கள் என்ற பெயரில் தமிழாக்கம் செய்திருந்தீர்கள். இப்புதினத்தை அடிப்படையாகக் கொண்டு, இயக்குனர் சுதிர் மிஸ்ரா ஒரு திரைப்படத்தை வெளியிட்டார் என அறிய முடிகிறது. அது குறித்து ஏதேனும் கூறமுடியுமா? மற்றும் இந்நாவலை மொழிபெயர்த்தமைக்காக சிறந்த தமிழ் மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருதை 2016 ஆம் ஆண்டு பெற்றிருந்தீர்கள். வண்ணதாசனுக்கும் உங்களுக்கும் ஒரேகாலப்பகுதியில் இவ்விருது கொடுக்கப்பட்டது. அது குறித்த நினைவுகளை எம்மோடு இரமீட்டிப் பார்க்க முடியுமா?

சுதீர் மிஸ்ரா சீரியஸ் மென் என்ற தலைப்பிலேயே இந்தியில் இந்தப் படத்தை இயக்கி வெளியிட்டார் (2020) என்பதும், அவர் பல படங்களைச் சிறப்பாக இயக்கியவர் என்பதும் தெரியும். மற்றப்படி அதற்கு மேல் எனக்குச் செய்தி எதுவும் தெரியாது. அந்தப் படத்தைக் காணும் வாய்ப்பை நான் ஏற்படுத்திக் கொள்ளவில்லை.

தமிழ் மொழிபெயர்ப்பு சிறப்பாக அமையும், நல்ல வரவேற்புப் பெறும் என்பது எனக்கு அந்த நாவலை மொழிபெயர்த்தபோதே தெரியும்.   வண்ணதாசனுக்கும் எனக்கும் விருதுகள் ஒரேசமயத்தில் தரப்படவில்லை. எனக்கு மொழிபெயர்ப்புக்கான விருது அகர்தாலாவில் தனியாக அளிக்கப் பட்டது. அவருக்கு தில்லியில் அளித்தார்கள் என்று கேள்விப்பட்டேன். அக்காலப்பகுதியே குழப்பமானதாக இருந்தது. ஏன் என்று எனக்கு இப்போது நினைவில்லை.

15. அண்மைக்கால மொழிபெயர்ப்புகள் பல குறைபாடுகள் உடையதாகவே வருகிறது. குறிப்பாக வியாபாரச் சந்தைகளை மையப்படுத்தி இம் மொழிபெயர்ப்புக்கள் செய்யப்படுவதால் தரமான மொழிபெயர்ப்புகளை வாசகர் கண்டடைய முடியாமல் போகிறது என்ற குற்றச்சாட்டு பரவலாக முன்வைக்கப்படுகிறது. இக்கருத்தை ஏற்றுக் கொள்கிறீர்களா?

நீங்கள் குறிப்பிடும் குற்றச்சாட்டு உண்மையே என்பதை அனுபவத்தில் என்னால் உணர முடிகிறது. குறிப்பாகச் சென்னையில் ஜனவரி மாதம் புத்தகச் சந்தை நிகழும்போது இது பெரிய வேதனையையே ஏற்படுத்துகிறது. கிழக்கு போன்ற பெரிய பதிப்பகங்கள் பல தாறுமாறாக மொழிபெயர்ப்பு நூல்களை, அவற்றின் தேவை தரம் தகுதி பற்றிய எண்ணம் எதுவுமின்றி வெளியிடுகின்றன. விற்கும் என்று தெரியவந்தால் போதும், வெளியிட்டு விடுவார்கள்! இன்றுள்ள மோசமான நிலைக்குப் பதிப்பகங்களே காரணம்.

மொழிபெயர்ப்பாளர்கள் பதிப்பாளர்களை நம்பியே வாழ வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. ஒரு நல்ல நூலை மொழிபெயர்த்தால்கூட, இது மார்க்கெட்டில் நன்றாகப் போகுமா என்று “ஆராய்ந்து தெளிந்த” பிறகே பதிப்பாளர்கள் எங்களிடமிருந்து பிரதியைப் பெறுகின்றார்கள். அல்லது

சந்தையை முன்வைத்து, இந்தக் குறிப்பிட்ட நூலை மொழியாக்கம் செய்யமுடியுமா என்றுதான் பதிப்பகத்தினர் எங்களைக் கேட்கிறார்கள். சந்தையில் விற்காவிட்டால் நாங்கள் ஏன் வெளியிட வேண்டும் என்பது அவர்களின் கேள்வி. நூலின் தற்காலத் தேவை பற்றியோ, தரம் பற்றியோ அவர்களுக்கு அக்கறை இல்லை.    அண்மையில் இந்த நிலை மாற வாய்ப்பில்லை என்பதுதான் என் கருத்து. ஒரு நூலைப் பதிப்பித்தல் என்பது அதிகமாகப் பணம்போட்டு, விற்கும் என்ற எதிர்பார்ப்பை நம்பிச் செய்யப்படும் ஓர் ஊகவணிகம். இதில் மொழிபெயர்ப்புக்குச் சாதகமான நிலை நிலவவில்லை என்பது உண்மை.

பூச்சியமும் ஒன்றும்

Nothing and Being

மனித வாழ்க்கை என்பது என்ன அதன் அர்த்தம் என்ன என்றெல்லாம் பெரிய அறிஞர்கள் விவாதித்திருக்கிறார்கள். பல மதங்களும் அதைப் பற்றிப் பேசுகின்றன.

என்னைப் பொறுத்தவரை

மனித வாழ்க்கை என்பது

பூச்சியத்திலிருந்து தொடங்கி ஒன்று ஆகி பிறகு மீண்டும் பூச்சியமாகவே ஆகிப் போவது. அவ்வளவுதான்.

குழந்தை பிறக்கும்போது பூச்சியமாக இருக்கிறது. மிருகங்களைப் போலத் தன் உண‍வைத் தேடவும் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவும்கூட இயலாமல் இருக்கிறது. பிறகு ஒன்று ஆகிறது, ஒன்றாகிறது. காலப் போக்கில் மீண்டும் தேய்ந்து ஒன்று என்ற நிலையிலிருந்து கீழே குறைந்து சாவில் பூச்சியமாகிறது.

அவ்வளவுதான் மனித வாழ்க்கை. இதில் எதற்கும் அர்த்தம் இல்லை. ஒன்று என்பது ஒரு இழிவான பணிபுரியும் தொழிலாளியாகவும் இருக்கலாம், மந்திரம் ஓதித் தன்னைப் பெரிய அறிவாளியாகக் காட்டிக் கொள்ளமுயலும் உயர்சாதியினனாகவும் இருக்கலாம். எல்லாம் ஒன்றுதான். மீண்டும் அனைவரும் பூச்சியத்தை நோக்கிய பயணத்தைச் சற்று முன்னாலோ பின்னாலோ தொடங்கிவிடுகிறார்கள் என்பது நிதரிசனம். இதில் எல்லா நிகழ்வுகளுக்கும் அர்த்தம் கற்பித்துக் கொண்டு தன்னைப் பெரியவன் என்றோ மிகச் சிறியவன் என்றோ கருதிக்கொள்பவர்களைப் பார்த்து பூச்சியம் சிரிக்கிறது.

இயற்கையை நேசியுங்கள்

1964ஆம் ஆண்டு சமாதானத்துக்கான நோபல் பரிசைப் பெற்ற புகழ்பெற்ற அமெரிக்க மனித உரிமைப் பாதுகாப்புத் தலைவர் மார்ட்டின் லூதர் கிங்-இடம் ஒருமுறை "நீங்கள் நாளை இறந்துபோகப் போவதென அறிந்தால் என்ன செய்வீர்கள்?" என்று கேட்டார்கள். அவர் பதில்: "ஒரு மரம் நடுவேன்".  மரம் வாழ்வின் குறியீடு.  "நாம் மரங்களை நடுகிறோம், அதன் குளிர்ந்த நிழலில் அடுத்த தலைமுறை இளைப் பாறுவார்கள்" என்கிறது ஒரு பழமொழி. சீனர்கள் மத்தியில் ஒரு பழமொழி இருக்கிறது: "நிழல்தர மரமில்லையா? சூரியனைக் குற்றம் சொல்லக்கூடாது, உன்னைத் தான் சொல்லவேண்டும்". மரங்கள் இயற்கையின் பகுதி, மனிதனின் ஊட்டத்தின் மூலப் பொருள். ஆனால் இயற்கை மரங்கள் மட்டுமல்ல, அதற்கு மேலும்தான். ஞாயிறு, நிலவு, நட்சத்திரங்களை உள்ளடக்கியுள்ள வானம்; கடல்கள், ஏரிகள், ஆறுகள், ஓடைகள், அருவிகள்; மலைகளும் குன்றுகளும்; நாம் வசிக்கும் இந்த மண்; நாம் சுவாசிக்கும் இந்தக் காற்று; நம்மிடையே வாழும் உயிரினங்கள்-இவை யாவும் நாம் வாழ்வதை அனுமதிக்கின்ற, நம் வாழ்க்கையைத் தொடரவிடுகின்ற இயற்கைக் கூறுகள். ஆகவே இயற்கையை நேசிப்பதும் பாதுகாப்பதும் நம் மற்றும் நம் எதிர்காலச் சந்ததி களின் வாழ்க்கையை நேசிப்பதும் பாதுகாப்பதும் போன்றதுதான். ஆனால் துரதிருஷ்டவசமாக, நம்மை எவ்விதம் மாற்றிக்கொள்வது என்று அறிவதற்கு முன்னா லேயே இன்று நம்மில் பலர் மிகவேகமாக இயற்கைச் சூழலை மாற்றிவிட்டார்கள். இயற்கைக்கு அழகாக இருக்க நம் உதவி தேவையில்லை, நமக்குத்தான் இயற்கையின் உதவி தேவை. நாம் வாழும் இந்த உலகமாகிய கிரகத்தின் எதிர்காலம்தான் இன்று மனித இனத்தை எதிர்நோக்கியிருக்கும் மிக முக்கியமான பிரச்சினை. ஒரு மரத்தை வெட்டுவதற்கு முன்னால், ஒரு பறவையைப் பிடிப்பதற்கு முன்னால், ஒரு குன்றினைத் தரைமட்டமாக்குவதற்கு முன்னால் நாம் நினைவில் வைக்கவேண்டியது இது: "இயற்கை தான் நமது வாழ்க்கை".         
ஒரு நாட்டின் தலைவர் ஒருமுறை கூறினார்: "மனிதன் நிலவுக்குப் போய்விட் டான், ஆனால் ஓர் எரிநிறப்பூக்கொண்ட மரத்தையோ, ஒரு பாடும் பறவையையோ எப்படி உருவாக்குவதென்று இன்னும் அவனுக்குத் தெரியாது. இதே மரங்களையும் பறவைகளையும் எதிர்காலத்தில் அவாவுவதற்குக் கொண்டுசெல்கின்ற, மாற்ற முடி யாத தவறுகளை நாம் செய்யாமல் நம் நாடுகளைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்". 
மனித உறவுகளைப் போல, இயற்கைமீதான நமது நேசமும் ஆழமாகவும் காலங்காலத்துக்குத் தொடர்வதாகவும் இருக்கவேண்டும். இங்குதான் நாம் ஆஸ்திரே லியப் பழங்குடி இனத்தவர்களிடமிருந்து-அவர்கள்தான் உலகின் மிகப் பழமையான மிக நீண்ட கலாச்சாரத்தை உடையவர்கள்-கற்கவேண்டி யிருக்கிறது. ஞானத்திலும் ஆழ்நோக்கிலும் வளமான ஒரு பண்பாட்டுப் பாரம்பரியத்தின் தொடர்ச்சியான அவர்கள், அந்தப் பழங்குடியினர், இயற்கைக்கும் மனிதனுக்குமிடையிலுள்ள நெருக்க மான தொடர்பின் முக்கியத்துவத்தை அறிந்தவர்கள்-"நாங்கள் மரங்களை வெட்டுவ தில்லை, பட்ட மரங்களைத்தான் பயன்படுத்துகிறோம்." 

“விண்ணுலகும் பூமியும் நானும் ஒன்றாய் வாழ்கிறோம்” என்று ஒரு டாவோ பொன் மொழி சொல்கிறது. டாவோ போதனையின்படி, இயற்கையின் எல்லாக் கூறுகளுக் கிடையிலும் ஒருங்கிசைவு வேண்டும். அதனால்தான் சீன நிலத்தோற்ற ஓவியங்களில் நாம் ஆறுகளையும் ஏரிகளையும் மலைகளையும் மட்டுமே காணமுடிகிறது, மனிதர்கள் அதற்குள் ஆதிக்கம் செய்வதில்லை.

இயற்கையை நேசி, அதனுடன் ஒருங்கிசைவுடன் வாழ், அதைப் பாழாக்கவோ அழிக்கவோ செய்யாதே.

வாழ்க்கை என்பது என்ன? அது இரவில் ஒளிரும் ஒரு மின்மினிப்பூச்சியின் ஒளிவீச்சு...குளிர்காலத்தில் ஓர் எருமை விடும் மூச்சு...சூரியமறைவின்போது புல்லின் மீது விரைந்து சென்று மறையும் ஒரு நிழல்.

-அமெரிக்க இந்தியப் போர்வீரர்.

தீபாவளி

“நான் சிரித்தால் தீபாவளி” ஆம், பலபேருக்கு, அவர்கள் சிரிக்கின்ற–மகிழ்ச்சியோடிருக்கின்ற ஒரு நாள் எதுவாக இருப்பினும் அதுதான் தீபாவளி.

நான் தீபாவளியைக் கொண்டாடும் வழக்கமில்லை. உண்மையில் தீப-ஆவளி, அல்லது தீப வரிசை என்றால் இன்னும் சில நாட்கள் கழித்துவரப்போகும் கார்த்திகை தீபம்தான். கார்த்திகையைச் சங்ககாலத்திலிருந்தே கொண்டாடி வருகிறோம். இடையில் “நான்தான் தீப வரிசை” என்று எந்தக்காலத்தில் இந்த வடநாட்டு தீபாவளி புகுந்தது என்று தெரியவில்லை. அநேகமாக நாயக்கர் காலத்தில்தான் நிகழ்ந்திருக்கக்கூடும்.

நரகாசுரன் என்பதையும் நான் நம்புவதில்லை. நம் கண்ணெதிரே ஆயிரம் நரகாசுரர்கள் இருக்கும்போது கற்பனையில் ஒரு நரகாசுரன் எதற்கு? நரக அசுரன் என்றால் அப்புறம் சுவர்க்க அசுரன் ஒருவன் இருந்தானா?

இதை வடநாட்டவர்கள் தாண்டிராஸ் என்று ஐந்துநாள் கொண்டாடுகிறார்கள். என்ன என்ன கட்டுக்கதைகளோ அதன் பின்னால்.

என்னைப் பொறுத்தவரை வருடத்தில் ஒருநாள் நான்கரை ஐந்து மணிக்குள் குளித்துவிட்டு ஏழரை மணிக்கு போளி வ‍டை தோசை என்று சாப்பிடுவது நன்றாகத்தான் இருக்கிறது. இனிப்புகள் வாங்குவது பெரும்பாலும் அடுத்தடுத்த வீட்டுக்காரர்களுக்காக, நண்பர்கள் உறவினர்கள் வந்தால் தருவதற்காக.

என் சின்ன வயதில் எங்கப்பாவும் நாங்களும், அவர் இரு தம்பியர் குடும்பத்தினரும் ஒன்றாகச் சேர்ந்து கொண்டாடிய பல தீபாவளி தினங்கள் ஞாபகம் இருக்கின்றன. அந்தக் கூடுகை, சிரிப்பு, மகிழ்ச்சி இருந்ததே, அதுதான் தீபாவளி. ஆனால் தீபாவளி என்றாலே பெரும்பாலும் மழையும் சேர்ந்தே ஞாபகம் வரும். நான் கொண்டாடிய மழையற்ற தீபாவளிகள் குறைவு. எல்லாரும் பட்டாசு வாங்கி வைத்துக் கொண்டு முழித்துக்கொண்டிருப்போம்.

ஹ்ம்…ம்…இதெல்லாம் பழைய காலம். நான் பெரியவனாகி சம்பாதிக்கத் தொடங்கிய பிறகு குடும்பத்தோடு, என் தம்பி தங்கையரோடு கொண்டாடிய தீபாவளிகள் மிகவும் குறைவு. காரணங்கள் பல.

தீபாவளி என்றாலே ஜாலி என்றுதான் அர்த்தம்! தீபாவளி கொண்டாடக்கூடாது என்று தமிழ்நண்பர்கள் பலர் சொல்கிறார்கள்…ஆனால் இந்தக் குதூகலம், சிரிப்பு, மகிழ்ச்சி, ஒன்று சேர்தல் இதற்காகக் கொண்டாடுங்கள் ஐயா…ஏன் நரகாசுரனை நினைக்கிறீர்கள்? என்னைப் பொறுத்தவரை ஒரு இந்துப் பண்டிகையாக தீபாளியை ஒரே ஓர் ஆண்டுகூடக் கொண்டாடியதில்லை. என் வீடும் அப்படித்தான். அது ஒரு மகிழ்ச்சித் திருநாள், அவ்வளவுதான். பிள்ளைகள் பட்டாசு வெடிக்க, மத்தாப்பு கொளுத்த, இல்லாதோர் புத்தாடை உடுத்த, ஆண்டில் ஒருநாளாவது பலபேர் இனிப்புகள் ருசிக்க…

திருச்சியில் இருந்தவரை தீபாவளிக்கு முன்னாட்களில் ஒரு நாள் சின்னக் கடைத் தெருவுக்குச் சென்று வருவோம். கூட்டம் தள்ளும். தப்பிப் பிழைத்துவருவது கடினம். (சென்னை ரங்கநாதன் தெரு அனுபவம் எனக்கு இல்லை.) ஒவ்வொன்றாக ஆண்டுகளும் அனுபவங்களும் கடந்து செல்கின்றன…

இப்போது 73 முடிந்துவிட்டது. இன்னும் எத்தனை தீபாவளிகளைப் பார்க்கப் போகிறேனோ நான்… மீண்டும் சொல்கிறேன், கட்டுக் கதைகளை, புராணங்களை விட்டு விடுங்கள்…”நாம் அனைவரும் சிரிக்கும் நாளே தீபாவளி!”

பூரணச்சந்திரன் அறக்கட்டளை – மூன்றாம் நாள் பயிலரங்கம்

முதலில் தமிழ்க் கவிதை பற்றிப் பேரா. இராமசாமியின் உரை சிறப்புற அமைந்தது.

பிறகு இன்றைக்குத் தேவையான எழுத்து என்ற குழு விவாதம் நடைபெற்றது. இதில் திரு. கிராமியன், பிஎச்இஎல் பொறியாளர் திரு. விவேக், திரு. விக்டர் ஆல்பர்ட் மூவரும் பிறரும் சிறந்த முறையில் பங்கேற்றனர்.

பிறகு சமகாலத் திரைப்படம் பற்றியும் அதை நோக்கும் விதம் பற்றியும் திரு. இராமசாமி சுவையாக எடுத்துரைத்தார். இடையில் மாணவர்கள் நேற்று எழுதிவந்த கவிதைகளையும் மதிப்பீடு செய்தார்.

மதிய உணவுக்குப் பின்னர் கோவை பி.எஸ்.ஜி. கலைக் கல்லூரிப் பேராசிரியர் ராமராஜ் மாணவர்களைத் திறம்பட நடிக்க வைத்துத் தம் நாடகத் திறனை வெளிப் படுத்தினார். அகஸ்ட் போவாலின் கருத்துகள் அடிப்படையில் (இன்விசிபிள் தியேட்டர்) அந்த நாடக ஆக்கம் அமைந்தது சிறப்பாகும்.

தேநீருக்குப் பிறகு நிறைவு விழா. முதல்வர் வர இயலாததால் தமிழ்த்துறைத் தலைவர் திரு. இராஜ்குமாரே மாணவர்களுக்குப் பரிமாற்ற முறையில் சான்றிதழ்களை வழங்கினார். திரு. சிவசெல்வன் நன்றிகூற மூன்றுநாள் படைப்பாக்க நிகழ்ச்சி நன்கு நடந்தேறியது.

மூன்று நாள் அமர்வுகளையும் சிறப்புற ஏற்பாடு செய்தவர் பேரா. சாம் கிதியோன். உணவு உட்பட, உட்காரும் இடங்கள், அறைகள் உட்பட கவனித்துக் கொண்டார். அவருக்குத் துணையாகத் தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் உதவி செய்தனர். திரு. சாம் கிதியோனுக்கும் அவருக்குத் துணையாக அமைந்த பேராசிரியர்களுக்கும் தனிப்பட நமது நன்றிகள் உரியன.

பூரணச்சந்திரன் அறக்கட்டளை – இரண்டாம் நாள் பயிலரங்கம்

முதல் அமர்வில் முதல் உரையாகப் பேரா. பூரணச்சந்திரனின் “உரைநடைப் புனைவின் அடிப்படைகள்” என்பது அமைந்தது.

பின்னர் இலக்கியத்தில் உள்ள நுண்அரசியலைப் பற்றி, குறிப்பாக ஒடுக்கப்பட்டவர்களும் பெண்களும் எவ்விதம் படைக்கப்படுகின்றனர் என்பது பற்றிப் பேராசிரியர் காசி. மாரியப்பன் நகைச்சுவை படப் பேசினார்.

அடுத்து காலையில் தமிழ் நாவலைப் பற்றியும் மாலையில் தமிழ்ச் சிறுகதை பற்றியும் திரு. இராமசாமி பேசினார். இடையில் மாணவர்களின் சில படைப்புகளை வாசித்துக் கருத்துரை அளித்தார்.

நேற்று மாணவர்களுக்குத் தந்த பணி சிறுகதை எழுதுவது. அதைச் சிலர் செய்திருந்தனர். ஆனால் சிறுகதை வடிவம் பொதுவாக மாணவர்களுக்குச் சிக்கல் தருவதாகவே அமைந்திருந்தது. பலரும் ஐம்பதாண்டு நிகழ்ச்சிகளை, வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கங்களை எல்லாம் சிறுகதை என எழுதினர்.

அவற்றைப் பூரணச்சந்திரன் விமரிசனம் செய்து எப்படி எழுத வேண்டும் என எடுத்துரைத்தார். திரு. இராமசாமி, ஐந்து தலைப்புகளை அளித்து அவற்றை மறுநாள் கவிதையாக்கி வருமாறு மாணவர்களுக்கு வேலையளித்தார்.

குழந்தைகளின் வெளி

 

குழந்தைகளின் வெளி

உதயசங்கர்




குழந்தைகள் தங்களுடைய பெற்றோர் வழியே இந்த பூமிக்கு வந்த இயற்கையின் படைப்புகள். அவர்கள் பெற்றோரின் தனிப்பட்ட சொத்தல்ல என்று புகழ்பெற்ற கவிஞர் கலீல் ஜிப்ரான் சொல்கிறார். அதனால் தான் ஒவ்வொரு குழந்தையும் தனித்துவத்துடன் திகழ்கிறார்கள். இயற்கை தன்னுடைய படைப்புகளனைத்துக்கு அத்தகைய தனித்துவமான குணத்தைக் கொடையாகக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. ஒரே மரத்தின் ஒவ்வொரு இலையும் ஒன்று போல இருப்பதில்லையெனும்போது குழந்தைகள் மட்டும் எப்படி ஒன்று போல இருப்பார்கள்? அவர்களுடைய தனித்துவமான ஆளுமையை வளர்ப்பதில் சமூகத்தின் மூன்றுவெளிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

முதலாவது குடும்பவெளி. அப்பா அம்மா அண்ணன் தம்பி தங்கை அக்கா மாமா அத்தை சித்தி சித்தப்பா என்று நெருங்கிய உறவு முறைகளைக் கொண்டது. இந்த உறவுமுறைகள் எல்லாவித உரிமைகளையும் எடுத்துக் கொள்கிற உறவுமுறைகள். குடும்பவெளியென்பது குழந்தையின் அடிப்படையான உணர்வுநிலைகளைக் கட்டமைக்கக்கூடியது. எப்போதும் மிரட்டப்பட்டும், அதட்டப்பட்டும், அடிக்கப்பட்டும் வளர்க்கிற குழந்தைகள் தாழ்வு மனப்பான்மையையும் தன்னம்பிக்கையில்லாமலும் வளர்வார்கள். எதைச் செய்தாலும் ஒரு தயக்கமும் பயமும் வந்து கொண்டேயிருக்கும். எங்கே குழந்தைகள் எந்தவித அச்சுறுத்தலுமில்லாமல் மகிழ்ச்சியாக இருக்கிறார்களோ அங்கே தான் அவர்களுடைய படைப்பூக்கம் ( CREATIVITY ) சுதந்திரமாக மலரும். எனவே குடும்பத்தில் அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கும்போது அவர்களுடைய ஆளுமையும் மகிழ்ச்சியாக வளரும்.

ஏனெனில் ஒவ்வொரு வினையும் அதற்குச் சமமான எதிர்வினையை உருவாக்கும். அப்படியென்றால் நாம் குழந்தைகளின் மீது செலுத்துகிற வன்முறையை குழந்தையும் எப்போதெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அப்போது இந்தச் சமூகத்திடம் திருப்பிக் கொடுப்பான். அல்லது சமூகத்தில் பயந்து நடுங்கி வாழ்வான். இது மொத்த சமூகத்துக்கே பொருந்துமென்றாலும் குடும்பம் தான் குழந்தைகளின் முதல்வெளியாக இருப்பதால் குழந்தைகள் அங்கிருந்தே அடிப்படையான அனுபவங்களை எதிர்கொள்கிறார்கள்., அந்த அனுபவங்களே அவர்களுடைய உணர்வுவெளியைத் தீர்மானிக்கின்றவையாக இருக்கின்றன.

ஒரு குறிப்பிட்ட காலம் வரை குழந்தைகள் குடும்பத்தைச் சார்ந்தே வாழவேண்டும். குடும்பச்சூழ்நிலைகளுக்கேற்ப தன்னைத் தகவமைத்துக் கொள்ள வேண்டும். தன்னுடைய உணர்வுநிலைகளைக் கட்டுப்படுத்தவோ அல்லது வெளிக்கட்டவோ வேண்டும். குடும்பம் என்பது குழந்தைகளின் ஆளுமைக்கான அடிக்கட்டுமானமாக இருக்கிறதென்பதைப் பெற்றோர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இரண்டாவதாகப் பள்ளிக்கூடவெளி.

நம்முடைய கல்விமுறைகளில் எத்தனையோ மாற்றங்கள் வந்தாலும் இன்னமும் குழந்தைகள் முழுமையான மகிழ்ச்சியுடன் பள்ளி செல்வதில்லை. ஏன் என்பதை யோசிக்க வேண்டும்? கற்றல் என்பது குழந்தைகள் பிறந்ததிலிருந்து ஒவ்வொரு கணமும் செய்து கொண்டேயிருக்கிற செயல்முறை தான். அது உயிரின் இயல்பு. தன்னைத் தகவமைத்துக் கொள்ள இயற்கை உயிர்களுக்குக் கொடுத்திருக்கிற கொடையென்று கூடச் சொல்லலாம்.

ஆனால் கற்றல் முறை தன்னார்வத்துடனும், மகிழ்ச்சியாகவும் நிகழும் போது கற்றலின் வழியே குழந்தைகள் புதிதாக இந்த உலகத்தைப் பார்ப்பார்கள். புதிய சிந்தனைகளும் கண்டுபிடிப்புகளும் நிகழும். ஆனால் அப்படியான சூழல் இந்தியக் கல்விக்கூடங்களில் இல்லை. அதிகாரமும் அடக்குமுறைகளும் நிறைந்ததாக பள்ளிக்கூடங்கள் இருக்கின்றன. இன்னமும் கூட பள்ளிகளில் பிரம்புகள் குழந்தைகளை அடித்துக் கொண்டேதான் இருக்கின்றன. நேரடியாகவும் மறைமுகமாகவும் அடித்தால் தான் ஒழுங்காகப் படிப்பார்களென்ற எண்ணம் பரவலாக இருக்கிறது. எனவே தான் குடும்பத்துக்கடுத்தபடியாக அதிகாரமிக்கதாக பள்ளிக்கூடங்கள் இருக்கின்றன. இந்த அதிகாரமும் அடக்குமுறையும் குழந்தைகளின் ஆன்மாவை ஒடுக்கி அவர்களை சுயமரியாதை இல்லாதவர்களாக்குகிறது.

நம்முடைய கல்விமுறையில் பெரும் மாற்றம் நிகழவேண்டும். குழந்தைகளின் கற்றல்வெளியென்பது பல்வகைப்பூக்கள் பூக்கும் பூந்தோட்டமாக இருக்கவேண்டும். எல்லாக்குழந்தைகளையும் ஒரே மாதிரி ஜெராக்ஸ் பிரதிகளைப் போல உருவாக்காமல் ஒவ்வொரு குழந்தையும் தனித்துவமான திறமையுள்ளவர்களென்பதை புரிந்து கொண்டு அதற்கேற்ற கல்விமுறைகளைக் கொண்டு வரவேண்டும். ஏனெனில் நம்முடைய கல்விமுறை ஆரோக்கியமானவர்களைச் சேர்த்துக் கொண்டு நோயுற்றவர்களை விரட்டிவிடும் மருத்துவமனை போல விசித்திரமானதாக இருக்கிறது. எந்தக் குழந்தைக்குக் கற்றல்குறைபாடு இருக்கிறதோ அந்தக் குழந்தைகளுக்குத்தான் முன்னுரிமை தரவேண்டுமென்ற அடிப்படைகளை மறுக்கின்ற கல்விமுறையாக இருப்பதனால் தான் இடைநிற்கும் குழந்தைகள் அதிகமாகிறார்கள். அவர்கள் சமூகத்தின் உதிரித்தொழிலாளிகளாகவோ, கலகக்காரர்களாகவோ, சமூகவிரோதிகளாகவோ மாறுகிறார்கள்.

எனவே நம்முடைய கற்றல்முறை மாறும்போது குழந்தைகளின் ஆளுமை இன்னும் பிரகாசிக்கும். ஒரு குழந்தையின் ஆளுமையென்பது ஆன்மாவின் வெளிச்சம். கலவிமுறை அந்த வெளிச்சத்தை அணைத்து விடக்கூடாது.

மூன்றாவது சமூகவெளி

நம்முடைய சமூகத்தில் குரலற்றவர்களாகப் பெண்களும் குழந்தைகளுமே இருக்கிறார்கள். அவர்களைக்குறித்து கிஞ்சித்தும் அக்கறையின்றியே தான் சமூகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. அடியாத மாடு பணியாது, கறிவேப்பிலையை ஒடித்து வளர்க்கணும் பிள்ளையை அடித்து வளர்க்கணும், ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது. என்று குழந்தைகளுக்கு எதிரான பொதுப்புத்தியுடன் தான் இன்னமும் இருக்கிறது. பொதுவெளியில் குழந்தைகளைச் சமூகம் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளவில்லை. தங்களை விட சிறியவர்களை அரவணைப்பதில்லை. மதிப்பதில்லை. பள்ளிக்குழந்தைகள் சாலைகளைக் கடக்கக் காத்திருப்பதைப் பார்க்கும் போதும் அவர்களைப் பற்றிக் கவலையே படாமல் அவசர அவசரமாகச் செல்கிற இந்த சமூகம் குறித்து குழந்தைக்கு என்ன விதமான பார்வை வருமென்று யோசிப்பதில்லை. அவர்களை அலட்சியப்படுத்தியோ, அவமானப்படுத்தியோ கடந்து செல்கிறது. போட்டிகளை உருவாக்கி தோல்வியாளர்களை விளிம்புநிலைக்குத் தள்ளுகிறது.  போட்டிகள் தனித்துவத்தை மறுப்பவை. வெற்றியாளர்களை மட்டுமே கொண்டாடுபவை. எதற்கும் லாயக்கற்றவன் என்று குழந்தைகள் தங்களைத் தாங்களே அவமானப்படுத்த உருவாக்கப்பட்ட சதியென்று கூடச் சொல்லலாம்.

சமவாய்ப்புகளையும் சமத்துவத்தையும் குழந்தைகளுக்குத் தருகிற சமூகத்தில் மட்டுமே குழந்தைகளின் மகிழ்ச்சி உண்மையானதாக இருக்கும். இந்த வாழ்க்கை ஒரு பயணம். போட்டியல்ல. இந்தப்பயணத்தில் மனிதர்கள் வாழும்காலம் வரை ஒருவருக்கொருவர் அன்பு செய்தும் உதவி செய்தும் சமூக மனிதர்களாக வாழவேண்டுமென்றால் குழந்தைகளின் மூன்று வெளிகளிலும் மாற்றங்கள் நிகழவேண்டும்.

எந்தச் சமூகத்தில் குழந்தைகள் மகிழ்ச்சியாக இருக்கிறார்களோ அந்த சமூகமே மகிழ்ச்சியான சமூகமாக இருக்கும். அப்படிப்பட்ட சமூகமாக நம்முடைய சமூகமும் மாற குழந்தைகளைக் குறித்தும் அவர்களது உரிமைகள் குறித்தும் ஆழமான விவாதங்களும் உரையாடல்களும் நடக்கவேண்டும்.

.

 

டிராகன் - தமிழ் சினிமா


நிஜம் போலவும், அடுத்த நிமிடத்தில் காத்திருக்கும் ஆச்சரியங்களைக் கொண்டது வாழ்க்கை எனவும் சிலர் ’டிராகன்’ சினிமாவைப் பாராட்டி எழுதுவதை பார்க்கும்போது எரிச்சல்தான் வருகிறது.  

லவ் டுடே போல டிராகனும் 2கே கிட்ஸுக்கான படம் என்று வகைப்படுத்துவதும், டிரெண்ட் செய்வதும் ஒரு  விளம்பர யுத்தியாக மட்டும் தெரியவில்லை. ஆபத்தின் அறிகுறியாகவும் படுகிறது.  

ஒருவேளை தற்கொலை செய்ய முனையும் அந்த மாணவனைப் பற்றி ராகவன் அறிய நேராமல் போயிருந்தால் என்னவாகி இருக்கும்.? அப்படி என்ன தவறு செய்துவிட்டதாய் ராகவனின் கல்லூரிக் காதலிக்கு குற்ற உணர்ச்சி வருகிறது? என நியாயமான கேள்விகளாய் கேட்க ஆரம்பித்தால் – பிரின்ஸ்பாலாய் வரும் மிஸ்கின் சொல்வது போல அஸ்திவாரம் இல்லாமல் அடுக்கப்பட்ட கதை என்பது புலனாகும்.  

படிப்புதான் வாழ்க்கை என ப்ளஸ் டூ வரைக்கும் இருந்தவன் ஒரு பெண்ணால் பாதை மாறுகிறான்.  எல்லா பாடங்களிலும் அரியர்ஸாய் குவித்து  கெத்தாய் ஒரு பெண்ணின் மனதில் இடம் பிடித்து காலேஜை விட்டு வெளியேறுகிறான். வேலைக்குப் போவதாய் வீட்டை ஏமாற்றி சிகரெட், மது, காதல் என மிதந்து கொண்டு இருந்தவனை தரையில் இறக்கிவிட்டு காதலி பிரிகிறாள். காதலி முன்பு வாழ்ந்து காட்ட மோசடி செய்து டிகிரி வாங்கி ஐ.டி கம்பெனியில் மாதம் மூன்று லட்சம் சம்பாதிக்கிறான். பெரும் தொழிலதிபரின் மகளுக்கு நிச்சயம் ஆகிறது. போலி டிகிரியை தெரிந்து கொண்ட காலேஜ் பிரின்ஸ்பால் அவனை மீண்டும் காலேஜில் சேர்ந்து முந்தைய அரியர்ஸை கிளியர் செய்யுமாறு, செய்த பாவத்துக்கு பரிகாரம் செய்ய வழி சொல்கிறார். காதலியே அவனுக்கு லெக்சரராக வந்து காதலனை ஏமாற்றிய தனது முந்தைய பாவத்தை கிளியர் செய்ய அவனுக்கு உதவுகிறாள். அப்படியும் அவனால் முடியாமல் மீண்டும் மோசடி செய்கிறான். பரீட்சை பேப்பர் மாற்றப்பட்டு அவனால் ஒருவன் தற்கொலைக்குத் துணிகிறான். குற்றவுணர்ச்சி வாட்ட எல்லோர் முன்பும் தான் செய்த குற்றங்களை ஒப்புக் கொள்கிறான். ’முன்னேற ஆசைப்பட்டது உண்மை. இன்னொருவன் வாழ்க்கையை கெடுத்து விட்டு அல்ல” என்ற பஞ்ச் வசனம் பார்வையாளர்களை நெகிழ வைக்கிறது.  

இரண்டு மணி நேரம் 20 நிமிடங்கள் குப்பையாய் கொட்டிவிட்டு, கடைசி 15 நிமிடங்கள் அந்த குப்பைகளை ஒதுக்கி அல்லது ஒளித்து வைத்து ’சுத்தமே சுகம்’ என நீதி சொல்லி முடித்திருக்கிறார்கள்.  

அறமற்ற, தார்மீக நெறியற்ற, மனிதாபிமானமற்ற, தன்னைச் சுற்றி இருப்பவர்கள் மீது அன்பும் மரியாதையுமற்ற அருவருப்பான அலட்சியமான ஒருவனது நடவடிக்கைகளை  எந்நேரமும் காட்டி இயல்பாக்கி விட்டு, திடீரென உதயமாகும் ஞானத்தை அற்புதம் போலக் காட்டுகிறார்கள். குப்பையை கொட்டியதற்கும் மக்கள் குதூகலிக்கிறார்கள். சுத்தம் செய்வதையும் மக்கள் கொண்டாடுகிறார்கள்.  

ராகவனைப் பற்றிய உண்மை வெளியே தெரிந்துவிடக் கூடாது என பார்வையாளர்களின் மனநிலை உருவாக்கப்படுவதில் ’டிராகனின்’ ஆபத்து இருக்கிறது.

சின்ன பட்ஜெட்டில் உருவான ஒரு குட்டி டிராகன். 

குடும்பஸ்தன் - தமிழ் சினிமா


பல கோடி குடும்பங்களின் கதை இது.  

சர்வ வல்லமை படைத்த பணம்தான் இந்த சமூக அமைப்பையே ஆட்டுவிக்கிறது. பணம்தான்  குடும்ப உறவுகளை தீர்மானிக்கிறது. மனிதனின் மதிப்பை மட்டும் அல்ல, இருப்பையும் கூட பணமே  முடிவு செய்கிறது. அனுபவங்களில் அதைக் கண்டு வெறுத்துப் போகிற  மனிதர்களின் கதை இது.  

நம்ம சொந்த பந்தம் என்ன பேசும், நாலு பேர் என்ன நினைப்பாங்க, ஊர் எப்படி பார்க்கும் என்று கடிகார முள் ஒன்று உள்ளுக்குள் ஒடிக்கொண்டிருக்கும்.  கிழிந்து கிடக்கும் உண்மை நிலைமையை தனக்குள் மறைத்துக் கொண்டு மற்றவர்கள் முன்னால் சிரிக்கவும் தலைநிமிர்ந்து நடக்கவும் மெனக்கெடுவதே வாழ்க்கையாகிப் போகும் மனிதர்களின் கதை இது.  

தனக்கு பிடித்தமானது எது, தன்னால் இயன்றது எது எனத் தெரிந்திருந்தாலும், அதை விட்டு விட்டு சம்பந்தமில்லாத வழிகளில் எல்லாம் சென்று ஒவ்வொருமுறையும் அடிபட்டு, காயங்களோடு திரும்புகிற மனிதர்களின் கதை இது.  

எப்படியாவது பிழைத்துக் கொள்ள முயன்று, தோற்று, தோற்று, கடைசியில் எதாவது ஒருநாளில் நடந்து விடாதா என மூளையில் பதற்றம் தொற்றி அலைபாயும் மனிதர்களின்  கதை இது.  

நாம் அன்றாடம் பயணிக்கும் வழியெல்லாம், பார்க்கும் இடமெல்லாம்  நடமாடும் எத்தனையோ மனிதர்களின் கதை இது.  

தன் உழைப்பிலிருந்து தானே அந்நியமாகும் மனிதர்களின் கதை இது.

அந்த மனிதர்கள் எல்லோருக்குமான உதாரணம்தான் குடும்பஸ்தனாக வரும் நவீன். இயல்பான தோற்றத்தில், சாதாரண உடையில், சின்னச் சின்னக் கனவுகளோடு இருக்கும் அவன் காதல் திருமணத்தில் துவங்குகிறது படம். அவர்கள் இருவருக்கும் ஒழு பெண் குழந்தை பிறப்பதோடு படம் முடிவடைகிறது. அதற்குள் அவன் படும் பாடுதான் குடும்பஸ்தன். 

இடைவேளை வரை வலி, கோபம், சந்தோஷம் எல்லாவற்றையுமே நகைச்சுவை துணுக்குகள் போலாக்கி அதைக் கோர்த்திருக்கிறார்கள். உணர்வுகள் மேலோங்காமல் அங்கங்கு அலுப்பும் கூட தட்டுகிறது. பல இடங்களில் தர்க்கங்கள் இடறுகின்றன. இடைவேளைக்குப் பிறகு காட்சிகளின் ஊடாகவும், மேலோங்கியும் மனிதத்தின் வண்ணங்கள் தெரிகின்றன. பணத்தை மீறி நிற்கும் மனித அழகுகள் பிடிபட படத்தின் இறுதி நெகிழ்ச்சியடைய வைக்கிறது.  

இந்தப் படத்தில் பணம் சம்பாதிப்பவர்களாகவும், குடிகாரர்களாகவும், வட்டிக்கு பணம் கொடுப்பவர்களாகவும்,  ஆண்கள் கிடந்து அல்லோலப்படுகிறார்கள். குழந்தை சுமப்பவராக, தனக்குள் பொருமுகிறவர்களாக,  புரணி பேசுகிறவர்களாக துணை பாத்திரங்களாய் பெண்கள் இருக்கின்றனர். பணம் சம்பாதிக்கும் ஒரே பெண், ரசிகர்களை கொண்டிருக்கும் ஒரு யூடியுபராக  இருக்கிறார். நடுத்தர, எளிய குடும்பங்களில் பெண்களின் நிலைமையும், பங்களிப்பும்  இன்று முக்கியம் பெற்றிருக்கிறது. அவர்களுக்குரிய இடம் இந்தப் படத்தின் கதையிலும், காட்சிகளிலும் இல்லை.  

நவீனின் மாமாவாக வரும் குருசோமசுந்தரமும், நவீனின் மனைவியாக வரும் மேகன்னாவும் சிறப்பாக நடித்திருந்தாலும் மொத்தப் படத்தையும் சுமந்து நிற்கிறார் நவீனாக வரும் நடிகர் மணிகண்டன். அவரது உடல் மொழியும், குரல் தொனியும் அவ்வளவு இயல்பாய் கதாபாத்திரத்தோடு இணைந்து விடுகிறது. தமிழுக்கு கிடைத்த இன்னொரு நல்ல திரைக்கலைஞர் அவர். மனைவியின் வயிற்றுக்குள் இருக்கும் குழந்தையோடு அவர் பேசும் காட்சிகள் கவிதைகளாய் இருக்கின்றன. இந்தப் படம் என்ன சொல்கிறது என்பதும் அதுதான். 

எதையெல்லாம் நக்கலடித்துக் கொண்டு கடக்க முடியும். எதையெல்லாம் அப்படி கடக்க முடியாது என்பதையும் ‘குடும்பஸ்தன்’ காட்டுகிறது. படத்தின் பலவீனம் அது. இயக்குனர் ராஜேஸ்வர் காளிசாமி அதை அறிந்து கொண்டால் மேலும் நல்ல படங்களைத் தரமுடியும்.


நான் என்ன செய்கிறேன் தெரியுமா? - 4



”நான் என்ன செய்கிறேன் தெரியுமா?”
மனைவியிடம் கேட்டான்
அந்த மகா புருஷன்
 
புரியாமல் நின்றவளிடம்
புத்தன் நான் என்று
வீட்டை விட்டு வெளியேறினான்
 
ஐம்பத்தாறு ஆண்டுகளாய்
சொல்லத் துணியாத அவளிடம்
பத்திரமாய் இருக்கிறது
பதில் ஒன்று
 
“ஆசையைத் துறந்தவன்
அன்புக்காக அதிகாரத்தையே
விட்டுக் கொடுத்தவன்
புத்தன்
பேராசைக்காரன்
அதிகாரத்துக்காக
எதையும் விட்டுக் கொடுப்பவன்
என் புருஷன்”
 
நரைமுடி காற்றில் அலைய
வெறுமை கொண்ட கண்கள்
எங்கோ நிலைத்திருக்க
தனக்குள் சொல்லிக்கொள்ள
முடிந்ததெல்லாம் ஒன்றுதான்
அது-
”நான் யசோதாதான்”

❌