Normal view

Received before yesterday

VVT -22

அத்தியாயம் -22


ஹாசினியின் தந்தை பாண்டியன் கூறியதைக் கேட்டு அதிர்ந்தான் உதயன்.

“எ.. என்ன சார் சொல்றீங்க? ஹாசினி வீட்டை விட்டுப் போயிட்டாளா?”

“ஆமா தம்பி. இவ்வளவு பெரிய பிரச்சினை நடந்ததுக்கு அப்புறம், அவ இங்கே இருந்தா, அவளைப் பேசிப் பேசியே இவ தினம் சித்திரவதை பண்ணுவா தம்பி. அதை நினைச்சுத் தாங்க முடியாம தான் நானும் அவளை போயிட்டு வாம்மான்னு சொல்லி அனுப்பி வச்சேன். அவ கையிலே வேலை இருக்கு. தைரியம் இருக்கு என் பொண்ணுக்கு. இங்கே இருக்கிறதை விட வெளியே இருந்தா தான் அவ நல்லா இருப்பான்னு...


Read more

VVT -20

அத்தியாயம் -20


யசோதா, வீட்டில் வேலையாய் இருந்தாள். முதல் நாள் இரவு ஆதர்ஷிடம் பேசி முடித்த பின்னும், அதைப் பற்றிய சிந்தனையில் இருந்ததால் தாமதமாகத் தூங்கினாள். அதனால் காலையில் முழிப்பு தட்டவே நேரமாகி விட்டது அவளுக்கு.

மகனும் மகளும் அப்போது தான் பள்ளிக்கு, கல்லூரிக்கு கிளம்பி இருந்தனர். கணவரும் கிளம்பத் தயாராகி விட்டார்.

அவளுக்குத் தான் அன்று மருத்துவமனைக்கு செல்லத் தாமதமாகி விட்டிருந்தது. தலையும் வலித்தது போல் இருக்கவே அரை நாள் விடுப்பு கூறி விட்டு வந்து வேலையைத் தொடர்ந்தாள்...


Read more

VVT-19

அத்தியாயம் -19


மருத்துவர் கூறிய அந்தச் செய்தியை நினைத்து உதயனால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.

‘தன்னோட கடைசி நாட்களை எண்ணிட்டு இருக்காளா திரிவேணி? என்னையும் குழந்தையையும் அநாதையா விட்டு, இந்த உலகத்தை விட்டு போகப் போறாளா?’

மனம் பதறியது அவனுக்கு. ஆனால் அதை மாற்றத் தான் முடியுமா அவனால்? எவ்வளவு அழுதாலும் கவலைப் பட்டாலும் அது தானே உண்மை? அதை ஏற்றுக் கொள்ளத் தானே வேண்டும்?

‘எனக்கே இப்படி இருக்கு. திரிவேணிக்கு எப்படி இருக்கும்? அவ எப்படி இதைத் தாங்கப் போறா? குழந்தைய விட்டுட்டு போகப்...


Read more

VVT -18

அத்தியாயம் -18


குழந்தையின் சிரிப்பைக் கண்டதும் அனைத்துக் கவலைகளையும் மறந்த உதயன், குழந்தையைத் தன் இரு கைகளால் அள்ளினான்.

“யௌவனா குட்டி, தூங்கி எழுந்தாச்சா? பசிக்குதா செல்லத்துக்கு? அப்பா பால் சேத்துக் கொண்டுட்டு வருவேனாம் இப்ப. அது வரைக்கும் என் யௌவனா கண்ணு அழாம சமர்த்தா வாக்கர்ல உக்காந்து இருப்பீங்களாம். சரியாடா செல்லம்?”

தலையை ஆட்டிக் கேட்டான் உதயன். தந்தையின் செய்கையையும் பேச்சையும் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்த குழந்தை, அவன் பேசியது புரிந்தது போன்று, அவளும் இலேசாகத் தன் தலையை...


Read more

VVT -17

அத்தியாயம் -17


தான் உயிருக்கு உயிராய் காதலித்துக் கொண்டிருக்கும் பெண் மீது, எங்கே தன் அக்கா யசோதா, அவதூறாகப் பழி சொல்லி விடுவாளோ என்று அஞ்சிய ஆதர்ஷ், அவளிடம் இருந்து, அந்தப் பெண் அப்படி எல்லாம் இல்லை, நல்ல பெண் அவள் என்கிற வார்த்தைகள் வந்ததும் தான் நிம்மதியானான்.

ஆனால் அடுத்த நிமிடம் அவனுக்குக் குழப்பம் தான் மிஞ்சியது.

‘என்ன இந்த அக்கா, இப்படி மாத்தி மாத்தி என்னென்னமோ பேசிட்டு இருக்காளே! ஹாசினிக்குக் குழந்தை இருக்குன்னு வேற சொல்றாளே!’ என்று அலைபேசியைக் காதில் வைத்தவாறே சிந்தனைக்குத்...


Read more

VVT -14

அத்தியாயம் -14


திரிவேணி, தான் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாத அந்தக் காரணத்தை, தன் வாழ்வில் நடந்த அந்த கொடுமையான சம்பவங்களை ஹாசினியிடம் கூறி முடிக்கும் போது, மிகவும் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் கண்ணெல்லாம் கலங்கிப் போயிருந்தது ஹாசினிக்கு.

அவளுடைய கலங்கிய கண்களைப் பார்த்ததும் பதறிப் போனாள் திரிவேணி.

“ஏய் ஹாசினி, நீ எதுக்கு இப்படி கண்ணெல்லாம் கலங்கிப் போய் இருக்கே இப்ப? ஏன்மா என்னாச்சு?”

அவள் கேட்டதும் மனம் தாள முடியாமல் மேலும் விசும்ப ஆரம்பித்தாள் ஹாசினி.

“என்னால தாங்க முடியலேக்கா...


Read more

VVT -21

அத்தியாயம் -21


அந்த மாலை நேரத்தில், அந்த ரெஸ்டாரண்ட்டின் ஒரு ஓரத்தில் எதிரெதிர் இருக்கைகளில் அமர்ந்து இருந்தனர் ஆதர்ஷும் ஷீலாவும்.

“சொல்லுங்க சார், எப்படி இருக்கீங்க? திடீர்னு ஃபோன் பண்ணி ஹாசினியப் பத்தி ஏதோ பேசணும்னு சொன்னீங்க. என்ன சார் விஷயம்?”

ஷீலாவுக்கு ஒரே குழப்பம்.

‘ஹாசினியோட இவருக்கு நடக்க இருந்த கல்யாணம் தான் நின்னு போயிடுச்சே. அப்புறம் என்ன பேசணும் அவளப் பத்தி? ஒருவேளை அவளோட வாடகைத்தாய் விஷயம் ஆதர்ஷுக்குத் தெரிஞ்சிருக்குமா? அது பத்தி தான் பேச நினைக்கிறாரோ?’

எதுவும்...


Read more

VVT -15

அத்தியாயம் -15


பெங்களூரில் வேலை என்றவுடன் முதலில் வேண்டாம் என்று தான் முடிவெடுத்து இருந்தாள் ஹாசினி.

‘திரும்ப பெங்களூரா? திரிவேணி அக்கா அங்கே தானே இருக்காங்க! அதே ஊருக்குத் திரும்ப நான் போனேன்னா, அங்கே எந்த சந்தர்பத்திலேயாவது அக்காவைப் பாக்குற மாதிரி, என் குழந்தைய.. இல்லல்லே, அக்காவோட குழந்தைய பாக்குற ஒரு சூழ்நிலை வந்துட்டா, அப்புறம் அவங்களுக்கும் சங்கடம். எனக்குமே தான் சங்கடம்.

அவங்களுக்கு நான் சத்தியம் பண்ணிக் குடுத்துருக்கேன். எந்தச் சூழ்நிலையிலும் அவங்களையோ குழந்தையையோ பாக்கவோ...


Read more

VVT -12

அத்தியாயம் -12


மருத்துவர்கள் கூறிய செய்தியில் உதயனும் திரிவேணியும் அப்படியே இடிந்து போய் விட்டனர்.

இனி தன்னால் தன் வாழ்நாளில் குழந்தை என்று ஒன்றைப் பெறவே முடியாது என்று தெரிந்தால் எந்தப் பெண்ணால் தான் தாங்கிக் கொள்ள இயலும்?

இந்த ஜென்மத்தில் தங்களுக்குக் குழந்தை பாக்கியம் இல்லை என்பதை நம்பவே அவர்களுக்கு சில காலம் தேவைப்பட்டது.

அதை ஏற்றுக் கொண்டு, இனி அடுத்து என்ன செய்யலாம் என்று யோசிக்க ஆரம்பித்தான் உதயன்.

ஆனால் திரிவேணியால் தான் இந்த உண்மையை ஜீரணிக்கவே முடியாமல் தவித்தாள்...


Read more

VVT -11

அத்தியாயம் -11


ஒரு வருடத்திற்கு முன்பு தன் வாழ்க்கையில் நடந்த அந்த துயர சம்பவத்தைப் பற்றி கூற ஆரம்பித்தாள் திரிவேணி.

காலையில் இருந்து ஐந்தாவது தடவையாக வாமிட் செய்து விட்டு ரெஸ்ட் ரூமில் இருந்து வெளியே வந்த திரிவேணி, ஆயாசமாக சோபாவில் சாய்ந்து அமர்ந்து கொண்டாள்.

இலேசாகத் தலை சுற்றுவது போல் இருந்தது அவளுக்கு. அப்படியே உட்கார்ந்தவாறு கண்களை மூடிக் கொண்டாள்.

அலுவலகத்திற்குக் கிளம்பத் தயாராகி வெளியே வந்த உதயன், சோர்ந்து போய் அமர்ந்து இருந்த மனைவியைக் கண்டதும் பதறிப் போய் அவளருகே சென்றான்...


Read more

VVT -10

அத்தியாயம் -10


ஹாசினி தனது சம்மதத்தைத் தெரிவித்தவுடன் மறுநாளே அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றாள் திரிவேணி.

குழந்தை பெற்றுக் கொள்வதற்கு அவளுடைய உடல்நிலை எந்தப் பிரச்னையும் இன்றி நன்றாக ஆரோக்கியமாக இருக்கிறதா என்று முழு பரிசோதனை செய்யப்பட்டது.

பரிசோதனையின் முடிவில் அவள் பூரண ஆரோக்கியமாக இருக்கிறாள் என்றும் தாராளமாக குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிந்தது.

உடனே அதன் அடுத்த கட்டமாக, ஹாசினியிடம் ஒப்பந்தப் பத்திரத்தை நீட்டினாள் திரிவேணி.

“இந்தாங்க ஹாசினி, இந்தப் பத்திரத்த நல்லா...


Read more

VVT -9

அத்தியாயம் -9


குளித்து விட்டு வந்ததும் தன்னைக் கொஞ்சம் புத்துணர்வாக உணர்ந்தாள் ஹாசினி.

உண்மையிலேயே கடந்த இரண்டு நாட்களாக, தன் தந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சேர்த்ததில் இருந்து அவளால் நிம்மதியாக சாப்பிட முடியவில்லை. உறங்க முடியவில்லை.

யோசனையிலேயே தான் நாட்களைக் கடத்தினாள். தன் தந்தையின் அறுவை சிகிச்சைக்குப் பணத்தை எப்படிப் புரட்டுவது? கடன் கேட்கக்கூட தனக்கு நாதியில்லையே என்று மிகவுமே மனம் கவலைப்பட்டு விட்டாள் பாவம்!

மனிதர்களுக்குத் தான் வாழ்க்கையில் பணம் எவ்வளவு...


Read more

VVT -6

அத்தியாயம் -6


நேரம் காலை பத்து மணி. அன்று ஞாயிற்றுக்கிழமை. ஹாசினி, தான் எப்போதும் வழக்கமாகச் செல்லும் கோவிலில் இருந்தாள். உள்ளே சன்னதிக்குச் சென்று இறைவனை வழிப்பட்டுக் கொண்டிருந்தாள்.

‘கடவுளே! என்னுடைய சுயநலத்துக்காக, என் வாழ்க்கையில நடந்த மிக முக்கியமான ஒரு விஷயத்த ஆதர்ஷ் கிட்ட மறைச்சு திருமண மேடை வரைக்கும் போயிட்டேன்.

இந்த உண்மைய அவர் கிட்ட சொன்னா, எங்கே எனக்குக் கிடைக்க இருக்கிற நல்ல ஒரு வாழ்க்கை எனக்குக் கிடைக்காமலேயே போயிடுமோ என்ற ஒரு எண்ணத்தில தான் இந்த விஷயத்த அவர் கிட்ட...


Read more

VVT -8

அத்தியாயம் -8


ஹாசினி, உறுதியான ஒரு முடிவோடு, செய்தித்தாளில் இருந்த எண்ணிற்கு அழைப்பு விடுத்து விட்டு, எதிர்முனையில் வரப்போகும் குரலுக்காக ஒருவித படபடப்புடன் காத்திருந்தாள்.

அந்தக் காத்திருக்கும் நேரத்தில், அழைப்பில் வருகிறவர்கள் என்ன பேசுவார்கள், அதற்கு, தான் என்ன பேச வேண்டும் எப்படிப் பேச வேண்டும் என்றெல்லாம் மனதிற்குள் ஒத்திகை பார்த்துக் கொண்டாள்.

அழைப்பின் சத்தம் எதிர்முனையில் கேட்டுக் கொண்டே இருந்தது. இன்னும் யாரும் தொடர்பில் வரவில்லை.
ஹாசினிக்குச் சிறிது ஏமாற்றமாக இருந்தது.

இந்த...


Read more

VVT -7

அத்தியாயம் -7


ஹாசினி, தன் வாழ்க்கையில் நடந்த அந்த இரகசியத்தை ஷீலாவிடம் விவரிக்க ஆரம்பித்தாள்.

“ஒரு வருஷத்துக்கு முன்னாடி, நான் பெங்களூர் போயி ஒரு வருஷம் இருந்துட்டு வந்தேன்ல! ஞாபகம் இருக்கா?”

“ஆமா.. நேத்து கூட நான் சொல்லிட்டு இருந்தேனேடி! இனிமே அங்கேயே நீ இருக்கப் போறேன்னு நினைச்சேன்னு”

“ம்ம்.. அப்ப நான் போனது இதுக்காகத் தான். இங்கே வேலை பாக்குற இடத்திலே இருந்து என்னை அனுப்பி வச்சதா நான் சொன்னது பொய். என்னை யாரும் அனுப்பி வைக்கல. இந்த வாடகைத்தாய் வேலைக்காக நானா தான் போனேன்”

ஷீலாவின்...


Read more
❌