Normal view

Received before yesterday

சினிமாவாக வந்த தமிழ் நாவல்கள், சிறுகதைகள்

ரொம்ப நாளாச்சு ஒரு லிஸ்ட் போட்டு.

2 கண்டிஷன்தான். தமிழில் எழுதப்பட்ட புனைவாக இருக்க வேண்டும். திரைக்கதைக்கும் ஒரிஜினலுக்கும் வேறுபாடுகள் இருக்கலாம், ஆனால் ஒரு புனைவைத்தான் திரைக்கதையாக மாற்றி இருக்க வேண்டும், அது வெளிப்படையாக சொல்லப்பட்டிருக்கவும் வேண்டும். அதாவது பிரியா திரைப்படம் மாதிரி ஒரிஜினல் கதையை கொலையே செய்தாலும் இந்த லிஸ்டில் இடம் உண்டு. ஆனால் நான் கடவுளுக்கும் ஏழாம் உலகத்துக்கும் ஒற்றுமை இருந்தாலும், நான் கடவுளை லிஸ்டில் சேர்ப்பதற்கில்லை.

ஆசிரியர், புனைவு, சினிமா என்ற வரிசையில் எழுதி இருக்கிறேன்.

  1. அகிலன், கயல்விழி, மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்
  2. அகிலன், பாவை விளக்கு, பாவை விளக்கு
  3. அண்ணாதுரை, காதல் ஜோதி, காதல் ஜோதி
  4. அண்ணாதுரை, நல்லவன் வாழ்வான், நல்லவன் வாழ்வான்
  5. அண்ணாதுரை, பார்வதி பி.ஏ, பார்வதி பி.ஏ
  6. அண்ணாதுரை, ரங்கோன் ராதா, ரங்கோன் ராதா
  7. அண்ணாதுரை, தாய் மகளுக்கு கட்டிய தாலி, தாய் மகளுக்கு கட்டிய தாலி
  8. அண்ணாதுரை, வண்டிக்காரன் மகன், வண்டிக்காரன் மகன்
  9. அனுராதா ரமணன், சிறை, சிறை
  10. அனுராதா ரமணன், கூட்டுப்புழுக்கள், கூட்டுப்புழுக்கள்
  11. சி.ஏ. பாலன், தூக்குமர நிழலில் நாவல், இன்று நீ நாளை நான் (இன்று நீ நாளை நான் அதே பெயரில் மாலைமதி வெளியீடாக முழு நாவலாக வந்தது. தூக்கு மர நிழலில் கதையில் அது ஒரு சிறிய அத்தியாயம் மட்டுமே.)
  12. சோ ராமசாமி, யாரோ இவர் யாரோ, ஆயிரம் பொய்
  13. தேவன், கோமதியின் காதலன், கோமதியின் காதலன்
  14. எல்லார்வி, கலீர் கலீர், ஆட வந்த தெய்வம்
  15. இந்திரா பார்த்தசாரதி, குருதிப்புனல், கண் சிவந்தால் மண் சிவக்கும்
  16. இந்திரா பார்த்தசாரதி, உச்சி வெயில், மறுபக்கம்
  17. ஜே.ஆர். ரங்கராஜு, ராஜாம்பாள், ராஜாம்பாள்
  18. ஜே.ஆர். ரங்கராஜு, சந்திரகாந்தா, சவுக்கடி சந்திரகாந்தா
  19. ஜே.ஆர். ரங்கராஜு, மோகனசுந்தரம், மோகனசுந்தரம்
  20. ஜாவர் சீதாராமன், பணம் பெண் பாசம், பணம் பெண் பாசம் (முத்துராமன், வடிவுக்கரசி, சரிதா நடித்தது)
  21. ஜெயகாந்தன், சில நேரங்களில் சில மனிதர்கள், சில நேரங்களில் சில மனிதர்கள்
  22. ஜெயகாந்தன், ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள், ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்
  23. ஜெயகாந்தன், யாருக்காக அழுதான், யாருக்காக அழுதான்
  24. ஜெயகாந்தன், கருணையினால் அல்ல, கருணை உள்ளம்
  25. ஜெயகாந்தன், உன்னைப் போல் ஒருவன், உன்னைப் போல் ஒருவன்
  26. ஜெயகாந்தன், கைவிலங்கு, காவல் தெய்வம்
  27. கல்கி, பார்த்திபன் கனவு, பார்த்திபன் கனவு
  28. கல்கி, தியாகபூமி, தியாகபூமி
  29. கல்கி, கள்வனின் காதலி, கள்வனின் காதலி
  30. கல்கி, பொய்மான் கரடு, பொன்வயல்
  31. கொத்தமங்கலம் சுப்பு, தில்லானா மோகனாம்பாள், தில்லானா மோகனாம்பாள்
  32. கொத்தமங்கலம் சுப்பு, ராவ்பகதூர் சிங்காரம், விளையாட்டுப் பிள்ளை
  33. லக்ஷ்மி, பெண் மனம், இருவர் உள்ளம்
  34. லக்ஷ்மி, காஞ்சனையின் கனவு, காஞ்சனா
  35. மஹரிஷி, புவனா ஒரு கேள்விக்குறி, புவனா ஒரு கேள்விக்குறி
  36. மஹரிஷி, பத்ரகாளி, பத்ரகாளி
  37. மஹரிஷி, பனிமலை, என்னதான் முடிவு?
  38. மணியன், இலவு காத்த கிளி, சொல்லத்தான் நினைக்கிறேன்
  39. மணியன், மோகம் முப்பது வருஷம், மோகம் முப்பது வருஷம்
  40. மணியன், இதய வீணை, இதய வீணை
  41. மணியன், லவ் பேர்ட்ஸ், வயசுப்பொண்ணு
  42. மு. கருணாநிதி, வெள்ளிக்கிழமை, அணையா விளக்கு
  43. மு. கருணாநிதி, பொன்னர் சங்கர், பொன்னர் சங்கர்
  44. மு. வரதராஜன், பெற்ற மனம், பெற்ற மனம்
  45. நாமக்கல் வெ. ராமலிங்கம் பிள்ளை, மலைக்கள்ளன், மலைக்கள்ளன்
  46. நாஞ்சில் நாடன், தலைகீழ் விகிதங்கள், சொல்ல மறந்த கதை
  47. நீல. பத்மநாபன், தலைமுறைகள், மகிழ்ச்சி
  48. பொன்னீலன், பூட்டாத பூட்டுகள், பூட்டாத பூட்டுகள்
  49. புஷ்பா தங்கதுரை, ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது, ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது
  50. புஷ்பா தங்கதுரை, நந்தா என் நிலா, நந்தா என் நிலா
  51. புஷ்பா தங்கதுரை, லீனா-மீனா-ரீனா, அந்த ஜூன் 18
  52. புதுமைப்பித்தன், சிற்றன்னை, உதிரிப்பூக்கள்
  53. புதுமைப்பித்தன், வாக்கும் வக்கும், சரஸ்வதி சபதம்
  54. ரா.கி. ரங்கராஜன், இது சத்தியம், இது சத்தியம்
  55. ராஜாஜி, திக்கற்ற பார்வதி, திக்கற்ற பார்வதி
  56. ராஜேந்திரகுமார், வணக்கத்துக்குரிய காதலியே, வணக்கத்துக்குரிய காதலியே
  57. எஸ்.எஸ். வாசன், சதி லீலாவதி, சதி லீலாவதி
  58. ச. தமிழ்ச்செல்வன், வெயிலோடு போய், பூ
  59. சிவசங்கரி, நண்டு, நண்டு
  60. சிவசங்கரி, ஒரு மனிதனின் கதை, தியாகு
  61. சிவசங்கரி, 47 நாட்கள், 47 நாட்கள்
  62. சிவசங்கரி, ஒரு சிங்கம் முயலாகிறது, அவன் அவள் அது
  63. ஸ்டெல்லா ப்ரூஸ், ஒரு முறைதான் பூக்கும், ஆண்களை நம்பாதே
  64. சு. வெங்கடேசன், காவல் கோட்டம், அரவான் (ஒரு பகுதி மட்டும் திரைப்படமாக்கப்பட்டிருக்கிறது)
  65. சுஜாதா, பிரியா, பிரியா
  66. சுஜாதா, காயத்ரி, காயத்ரி
  67. சுஜாதா, கரையெல்லாம் செண்பகப்பூ, கரையெல்லாம் செண்பகப்பூ
  68. சுஜாதா, காகிதச் சங்கிலிகள், பொய் முகங்கள்
  69. சுஜாதா, ஜன்னல் மலர், யாருக்கு யார் காவல்
  70. சுஜாதா, அனிதா இளம் மனைவி, இது எப்படி இருக்கு
  71. சுஜாதா, பிரிவோம் சிந்திப்போம், ஆனந்தத் தாண்டவம்
  72. சுஜாதா, இருள் வரும் நேரம், வானம் வசப்படும்
  73. டி.எஸ். துரைசாமி, கருங்குயில் குன்றத்துக் கொலை, மரகதம்
  74. தங்கர் பச்சான், ஒன்பது ரூபாய் நோட்டு, ஒன்பது ரூபாய் நோட்டு
  75. தி. ஜானகிராமன், மோகமுள், மோகமுள்
  76. துமிலன், புனர்ஜன்மம், போன மச்சான் திரும்பி வந்தான்
  77. உமாசந்திரன், முள்ளும் மலரும், முள்ளும் மலரும்
  78. வாஸந்தி, ஜனனம், யாரோ எழுதிய கவிதை
  79. வடுவூர் துரைசாமி ஐயங்கார், கும்பகோணம் வக்கீல், திகம்பர சாமியார்
  80. வடுவூர் துரைசாமி ஐயங்கார், வித்யாசாகரம், வித்யாபதி
  81. வடுவூர் துரைசாமி ஐயங்கார், மேனகா, மேனகா
  82. வை.மு. கோதைநாயகி, ராஜ்மோகன், ராஜ்மோகன்
  83. வை.மு. கோதைநாயகி, அனாதைப் பெண், அனாதைப் பெண்
  84. வை.மு. கோதைநாயகி, தயாநிதி, சித்தி
  85. வை.மு. கோதைநாயகி, தியாகக்கொடி, தியாகக்கொடி
  86. வை.மு. கோதைநாயகி, நளினசேகரன், நளினசேகரன்

பேசாமொழி இணைய இதழில் இதை அப்படியே எடுத்தாண்டிருக்கிறார்கள். அவர்கள் உபரியாக சேர்த்திருக்கும் புனைவுகள் கீழே.

  1. விக்டர் ஹ்யூகோ, Les Miserables, ஏழை படும் பாடு (சுத்தானந்த பாரதியாரின் தமிழ் மொழிபெயர்ப்பின் பேரும் ஏழை படும் பாடுதான்)
  2. கி. ராஜநாராயணன், கிடை, ஒருத்தி
  3. சி.ஆர். ரவீந்திரன், நண்பா நண்பா, நண்பா நண்பா
  4. ஜெயகாந்தன், ஊருக்கு நூறு பேர், ஊருக்கு நூறு பேர்
  5. பி.எஸ். ராமையா, நாலு வேலி நிலம், நாலு வேலி நிலம்
  6. பி.எஸ். ராமையா, பிரசிடெண்ட் பஞ்சாட்சரம், பிரசிடெண்ட் பஞ்சாட்சரம், (மூலம்: நிகோலாய் கோகோல் எழுதிய இன்ஸ்பெக்டர் ஜெனரல்)
  7. பி.எஸ். ராமையா, போலீஸ்காரன் மகள், போலீஸ்காரன் மகள்
  8. சா. கந்தசாமி, தக்கையின் மீது நான்கு கண்கள், தக்கையின் மீது நான்கு கண்கள்
  9. டி. செல்வராஜ், தேனீர், தேனீர்
  10. சிவசங்கரி, குட்டி, குட்டி
  11. கந்தர்வன், சாசனம், சாசனம்
  12. பூமணி, கருவேலம்பூக்கள், கருவேலம்பூக்கள்

பால் ஹாரிஸ் டேனியல் எழுதிய ‘Red Tea” ஆங்கிலப் புனைவாக இருந்தாலும் சேர்த்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன். பரதேசி திரைப்படத்தின் மூலம் இதுதான்.

இன்னும் நிறைய இருக்க வேண்டும். நினைவு வருவதை சொல்லுங்களேன்!

பிற்சேர்க்கை: இன்னும் புத்தகங்கள் இருக்க வேண்டும். விட்டுப் போன பல புத்தகங்களை சொன்னவர்களில் முதன்மையானவர் ஸ்ரீனிவாஸ். மற்றும் ராமச்சந்திரன் உஷா (நுனிப்புல்), டோண்டு, அரங்கசாமி, ரமணன் (பல பழைய படங்களைப் பற்றி சொன்னவர்), ராம்குமரன், கோகுல் எல்லாருக்கும் நன்றி!

P.S. நான் இன்னும் டிவி சீரியல்கள், சினிமா ஆன நாடகங்கள், வேற்று மொழி படங்கள் ஆகியவற்றை சேர்க்கவில்லை.
தொடர்புடைய சுட்டிகள்:
சினிமா பக்கம்
சுஜாதாவின் சினிமா பங்களிப்பு
ஜெயகாந்தனும் சினிமாவும்
திருடப்பட்ட கதைகள் – அபூர்வ ராகங்கள், முதல் மரியாதை, ஹே ராம், கஞ்சிவரம்

சில சினிமா புத்தகங்கள்

மீனாகுமாரி இந்தியாவின் தலை சிறந்த நடிகைகளில் ஒருவர். சாவித்ரியோடு ஒப்பிடலாம். சொந்த வாழ்க்கையும் கொஞ்சம் சாவித்ரியைப் போலத்தான் இருக்கும். சிறு வயதிலேயே திரைப்படங்கள், அவர் ஊதியத்தை வைத்து வாழ்ந்த குடும்பம், 20-21 வயதிலேயே ஏற்கனவே திருமணமான கமல் அம்ரோஹியுடன் காதல், திருமணம், மணமுறிவு; வித்தியாசம், மணமுறிவுக்குப் பிறகு தர்மேந்திரா உட்பட்ட சில காதலர்கள் இருந்தார்கள், பகிரங்கமாகத்தான் உறவு இருந்தது. வினோத் மேத்தா மீனாகுமாரி மறைந்தபோது அவரைப் பற்றிய ஒரு புத்தகத்தை எழுதினார். பெரிய தரிசனம் என்று எதுவுமில்லைதான், ஆனால் முழுமையான வாழ்க்கை வரலாறு.

மதுபாலா இன்றும் இந்திய நடிகைகளில் மிக அழகானவராகக் கருதப்படுகிறார். மஞ்சு குப்தா தொகுத்த “Madhubala: Her Real Life Story” சிறு வாழ்க்கை வரலாறு. பெரிய குடும்பம், அழகான மதுபாலாவை நடிக்க வைத்துத்தான் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று அப்பா தீர்மானித்திருக்கிறார். குழந்தையாகவே சில படங்கள், பிறகு கதாநாயகி. இருதய நோய் இருந்திருக்கிறது. திலீப்குமாரோடு காதல்; அப்பா சம்மதிக்காததால் பிரச்சினை பெரிதாகி காதல் முறிந்திருக்கிறது. கிஷோர் குமாரை மணந்திருக்கிறார். 34 வயதில் இறப்பு. சுவாரசியமான வாழ்க்கை வரலாறு இல்லை, ஆனால் அவர் வாழ்க்கையைப் பற்றிய அறிமுகம் கிடைக்கிறது.

ராஜேஷ் கன்னா ஆராதனா வெளியான சமயத்திலிருந்து நாலைந்து வருஷம் புகழின் உச்சியில் இருந்தார். அதற்கு சமமாக எம்ஜிஆர்/ரஜினி மேல் தமிழர்களுக்கு இருந்த/இருக்கும் அன்பு, என்டிஆரை தேவுடுவாகவே பார்த்த தெலுங்கர்களை மட்டுமே சொல்ல முடியும். ஆனால் கன்னாவுக்கு இருந்தது அகில இந்திய புகழ். அவரது உச்சங்களும் வீழ்ச்சியும் பெரிய நாவலின் கதைக்களனாக இருக்க சாத்தியம் உள்ளவை. நாலைந்து வருஷம் ராஜா, அதற்குப் பிறகு – முப்பது முப்பத்தைந்து வயதிலிருந்து பெருங்காயம் வைத்த டப்பா என்பது ஒரு மனிதனுக்கு எத்தகைய அகச் சிக்கல்களை உருவாக்கும்? யாஸ்ஸர் உஸ்மான் எழுதிய Rajesh Khanna: The Untold Story of India’s First Superstar ராஜேஷ் கன்னாவின் அகச்சிக்கல்களை நன்றாகவே விவரிக்கிறது. இருந்தாலும் எனக்கு டைம் பாஸ்தான். காரணம் ராஜேஷ் கன்னா எனக்கு முக்கியமானவர் அல்லர். இத்தனைக்கும் “மேரே சப்னோன் கி ராணி” பாடலுக்கு பரம ரசிகன். அந்தப் பாடல் அவரை வைத்து படமாக்கப்பட்டிருக்கும் விதம் என் மனம் கவர்ந்தது. ஆனால் எனக்கு அவரது திரைப்படங்களில் பிடித்தது பாடல்கள்தான். என் நாயகர்கள் ஆர்.டி. பர்மனும் கிஷோர் குமாரும்தான். ஆனந்த் திரைப்படம் இந்திய சினிமாவின் சாதனைகளில் ஒன்று, ஆனால் அது எனக்கு ரிஷிகேஷ் முகர்ஜியின் சாதனை. கௌதம் சிந்தாமணி எழுதிய “Dark Star: The Loneliness of Being Rajesh Khanna” அவரது திரைப்படங்களை விவரிக்கிறது.

சத்ருகன் சின்ஹா, Anything but Khamoshi (2016): பாரதி எஸ். ப்ரதான் எழுதி இருக்கிறார். சத்ருகன் சின்ஹாவின் தன்னம்பிக்கை, அவரது ஸ்டைல், வில்லன் நடிகராக இருந்தவரை பெரிய நட்சத்திரமாக உயர்த்தியது. அவரது பாணி ரஜினிகாந்த், சிரஞ்சீவி, அம்பரீஷ், மோகன்பாபு உட்பட்ட பலருக்கு முன்மாதிரியாக இருந்திருக்கிறது. புத்தகத்தில் கிடைக்கும் சித்திரம் அவர் போலித்தனங்கள் அற்ற மனிதர் என்பதுதான். குறைகள் அற்றவர் அல்லர், ஆனால் நிறைகளும் நிறைய உடையவர். ஆனால் யாருக்கும் தலை தாழ்த்தவில்லை. திருமணம் ஆன புதிதிலேயே கூட நடிகை ரீனா ராயோடு உறவு! பூனத்தோடு திருமணம், ரீனா ராயோடு தேனிலவு என்று இருந்திருக்கிறார். அரசியலில் பாஜகவுக்காக பெரும் கூட்டங்களை ஈர்ப்பவராக இருந்திருக்கிறார், ஆனால் மோதி அரசில் தகுந்த அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று வருத்தம். டைம் பாஸ்தான், ஆனால் படிக்கலாம்.

ரிஷி கபூர், குல்லம் குல்லா (2017): மீனா ஐயரோடு எழுதியது. ரிஷி கபூர் ஹிந்தி சினிமாவின் ராஜ குடும்பத்தில் பிறந்தவர். அதனால் கிடைத்த லாபங்களை எந்தத் தயக்கமும் இல்லாமல் அனுபவித்திருக்கிறார். சில பல குறைகள் உள்ளவர். ஆனால் அவற்றுக்காக வருத்தப்படுபவர் இல்லை. போலித்தனம் இல்லை. என் மனதில் பதிந்த ஒரு இடம் – அவரது மனைவி நீது சிங் ரிஷி கபூர் பிற பெண்களுடன் உறவு கொண்டிருப்பார் என்று கோடி காட்டுவதுதான். இது திரை உலகில் எத்தனை சாதாரணமாக இருந்திருக்கிறது? டைம் பாஸ்தான், ஆனால் படிக்கலாம்.

கரண் ஜோஹர் வம்பு பேசும் வெட்டி பந்தாக்காரர் என்று எனக்கு ஒரு எண்ணம் உண்டு. அது அனேகமாக சில காஃபி வித் கரண் நிகழ்ச்சிகளைப் பார்த்ததால் உருவானது. அவருக்குப் பெரும் சாதனைகளாகத் தெரியும் தில்வாலே துனியா லே ஜாயேங்கே, குச் குச் ஹோத்தா ஹை, கபி குஷி கபி கம், ஸ்டூடண்ட் நம்பர் 1 போன்ற திரைப்படங்களைப் பற்றி எனக்கு கொஞ்சம் இளக்காரமே உண்டு. (ஆனால் கபி குஷி கபி கம் திரைப்படத்தைப் பார்த்து கண்ணீரும் வந்திருக்கிறது, என்னை அப்பா செண்டிமெண்ட் திரைப்படங்கள் எங்கோ தொடுகின்றன) ஆனால் அவரது An Unsuitable Boy புத்தகம் நான் எதிர்பார்த்ததை விட நன்றாகவே இருந்தது. திரை உலக சூழலில் வளர்ந்தது, DDLJ-யின் பாதிப்பு, ஆதித்யா சோப்ரா, ஷா ருக் கான், சல்மான் கான் போன்றவர்களின் நட்பு, தனது ஓரினச் சேர்க்கைத் தன்மை போன்றவற்றை ஓரளவு சுவாரசியமாக விவரித்திருக்கிறார்.

ரஜினிகாந்தின் மகளும் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா Standing on the Apple Box என்று தன் நினைவுகளை எழுதி இருக்கிறார். சுவாரசியப்படவில்லை.

தொகுக்கப்பட்ட பக்கம்: திரைப்படங்கள்

போப்பாக ஒரு திருநங்கை – ராபர்ட் ஹாரிசின் ‘Conclave’

ஒரு வழியாக Conclave திரைப்படத்தை பார்த்தேன். சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர் (ரால்ஃப் ஃபியன்னஸ்) உட்பட பல ஆஸ்கார் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டது, புத்தகத்திலிருந்து திரைக்கதை எழுதப்பட்ட பிரிவில் வெல்லவும் செய்தது. புத்தகத்தைப் படித்தபோது சுமார் என்றுதான் மதிப்பிட்டிருந்தேன். சில சமயம் சுமாரான புத்தகம் சிறப்பான திரைப்படமாக மாறுவதுண்டு, அப்படிப்பட்ட ஒன்றோ என்று நினைத்திருந்தேன்.

ஃபியன்னஸின் நடிப்பு – ஏன் ஸ்டான்லி டுச்சியின் நடிப்பும் கூட அருமைதான். ஆனால் திரைப்படம் இரண்டு ஆண்டுகளில் மறக்கப்பட்டுவிடும். அடிப்படைக் கதை சுவாரசியமான அரசியல் த்ரில்லராக எடுக்கப்பட்டிருக்கிறது, ஆனால் என் கண்ணில் விமானப் பயணங்களில் பார்த்துவிட்டு மறந்துவிடும் திரைப்படம்தான். இன்று திருநங்கை உரிமைகள் என்பது ஒரு trending topic, அந்த குறுகிய கால பிரபலத்தால் பல விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டது என்று தோன்றுகிறது.

முன்பு எழுதிய பதிவை மீள்பதித்திருக்கிறேன்…


சாதாரணமாக spoiler இல்லாமல் புத்தக அறிமுகம் எழுத வேண்டும் என்றுதான் முயற்சிப்பேன். இந்த முறை புத்தகம் கிளப்பிய எண்ணங்களைப் பற்றி எழுத விரும்புகிறேன், அது spoiler இல்லாமல் முடியாது.

ஹாரிஸ் எழுதிய சிசரோ trilogy-க்கு நான் பெரிய ரசிகன். புதிய புத்தகம் – Conclave (2016) – ஒன்று கண்ணில் பட்டதும் படிக்க ஆரம்பித்தேன். சாதாரண வணிக நாவல்தான். விறுவிறுவென்று போவதும், சில நுண்விவரங்களும்தான் புத்தகத்தின் பலம்.

போப் இறந்த பிறகு அடுத்த போப்பை உயர்நிலையில் இருக்கும் சர்ச் குருமார்கள் (cardinals) தேர்ந்தெடுப்பார்கள். தேர்தலை நடத்தும் பொறுப்பு அதிகாரியான லோமலியின் கண்ணோட்டத்தில் மூன்று நாள் நடக்கும் அந்த தேர்தல் விவரிக்கப்படுகிறது. முன்னணியில் இருப்பவர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டு, ஊழல் குற்றச்சாட்டு வெளிவருகின்றன. கடைசியில் புதிதாக மற்றும் ரகசியமாக நியமிக்கப்பட்ட ஒரு cardinal – பெனிடஸ் – போப்பாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார். கடைசி பக்கங்களில் லோமலிக்கு பெனிடஸ் ஒரு திருநங்கை என்று தெரிகிறது. ஆனாலும் பெனிடஸ் போப்பாகிறார்.

மாதொருபாகன் சர்ச்சை (மற்றும் பல சர்ச்சைகள்) பெரிதாக இருந்தபோது பெருமாள் முருகன் ஹிந்து மதத்தை கேவலப்படுத்திவிட்டார் என்று பலரும் ஆத்திரம் அடைந்தனர். அப்போது அடிக்கடி பார்த்த ஒரு கேள்வி – இப்படி பிற மதங்களைப் பற்றி எழுதிவிட முடியுமா? இதோ ஒருவர் எழுதி இருக்கிறார், அது பெஸ்ட்செல்லரும் கூட. யாராவது ஏதாவது கேட்கிறார்களா என்ன? டாவின்சி கோட் இந்தியாவில்தான் தடை செய்யப்பட்டது, கிறிஸ்துவம் dominate செய்யும் மேலை நாடுகளில் அல்ல. ஹாரிஸ் இங்கிலாந்துக்காரர், இங்கிலாந்தின் அரசர்/அரசி இங்கிலாந்து சர்ச்சின் ஏறக்குறைய தலைவர் பதவியில் இருப்பவர். அப்படியும் ஒரு பிரச்சினையும் கிடையாது. என் மகாபாரதச் சிறுகதைகளில் கிருபருக்கு துரோணர் மேல் பொறாமை, பீஷ்மருக்கு அம்பை மேல் காதல் என்றெல்லாம் கற்பனைக் கதைகளாக எழுதித் தள்ளுகிறேன், அதை ஹிந்துத்துவ தளமான தமிழ் ஹிந்து தளத்தில் பிரசுரிக்கவும் செய்கிறார்கள். அது ஏன் திடீரென்று ஒரு புனைவை புனைவாக மட்டும் கருதாமல் அதை தங்கள் மத நம்பிக்கைகளோடு இணைத்துக் கொள்கிறீர்கள்? அதுவும் பன்மைத் தன்மையையும் சகிப்புத்தன்மையையும் தன் அடையாளமாகக் கொண்டுள்ள ஹிந்துக்கள் ஏன் இப்படி செய்கிறீர்கள்? இதற்கு பதிலாக டாவின்சி கோடும் Satanic Verse-உம் தடை செய்யப்படக் கூடாது என்று குரல் எழுப்பலாமே?

தொகுக்கப்பட்ட பக்கம்: த்ரில்லர்கள், Films

பின்குறிப்பு: ஹாரிசின் எல்லா நாவல்களும் ஒரே தரத்தில் இருப்பதில்லை. உதாரணமாக Fear Index (2010) எல்லாம் பஸ்ஸில் படிக்கக் கூட லாயக்கில்லை. ஆனால் சிசரோ புத்தகங்களோ மிகச் சிறப்பானவை. இது சுமாரான வணிக நாவலாக இருக்கிறது…

போப்பாக ஒரு திருநங்கை – ராபர்ட் ஹாரிசின் ‘Conclave’

ஒரு வழியாக Conclave திரைப்படத்தை பார்த்தேன். சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர் (ரால்ஃப் ஃபியன்னஸ்) உட்பட பல ஆஸ்கார் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டது, புத்தகத்திலிருந்து திரைக்கதை எழுதப்பட்ட பிரிவில் வெல்லவும் செய்தது. புத்தகத்தைப் படித்தபோது சுமார் என்றுதான் மதிப்பிட்டிருந்தேன். சில சமயம் சுமாரான புத்தகம் சிறப்பான திரைப்படமாக மாறுவதுண்டு, அப்படிப்பட்ட ஒன்றோ என்று நினைத்திருந்தேன்.

ஃபியன்னஸின் நடிப்பு – ஏன் ஸ்டான்லி டுச்சியின் நடிப்பும் கூட அருமைதான். ஆனால் திரைப்படம் இரண்டு ஆண்டுகளில் மறக்கப்பட்டுவிடும். அடிப்படைக் கதை சுவாரசியமான அரசியல் த்ரில்லராக எடுக்கப்பட்டிருக்கிறது, ஆனால் என் கண்ணில் விமானப் பயணங்களில் பார்த்துவிட்டு மறந்துவிடும் திரைப்படம்தான். இன்று திருநங்கை உரிமைகள் என்பது ஒரு trending topic, அந்த குறுகிய கால பிரபலத்தால் பல விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டது என்று தோன்றுகிறது.

முன்பு எழுதிய பதிவை மீள்பதித்திருக்கிறேன்…


சாதாரணமாக spoiler இல்லாமல் புத்தக அறிமுகம் எழுத வேண்டும் என்றுதான் முயற்சிப்பேன். இந்த முறை புத்தகம் கிளப்பிய எண்ணங்களைப் பற்றி எழுத விரும்புகிறேன், அது spoiler இல்லாமல் முடியாது.

ஹாரிஸ் எழுதிய சிசரோ trilogy-க்கு நான் பெரிய ரசிகன். புதிய புத்தகம் – Conclave (2016) – ஒன்று கண்ணில் பட்டதும் படிக்க ஆரம்பித்தேன். சாதாரண வணிக நாவல்தான். விறுவிறுவென்று போவதும், சில நுண்விவரங்களும்தான் புத்தகத்தின் பலம்.

போப் இறந்த பிறகு அடுத்த போப்பை உயர்நிலையில் இருக்கும் சர்ச் குருமார்கள் (cardinals) தேர்ந்தெடுப்பார்கள். தேர்தலை நடத்தும் பொறுப்பு அதிகாரியான லோமலியின் கண்ணோட்டத்தில் மூன்று நாள் நடக்கும் அந்த தேர்தல் விவரிக்கப்படுகிறது. முன்னணியில் இருப்பவர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டு, ஊழல் குற்றச்சாட்டு வெளிவருகின்றன. கடைசியில் புதிதாக மற்றும் ரகசியமாக நியமிக்கப்பட்ட ஒரு cardinal – பெனிடஸ் – போப்பாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார். கடைசி பக்கங்களில் லோமலிக்கு பெனிடஸ் ஒரு திருநங்கை என்று தெரிகிறது. ஆனாலும் பெனிடஸ் போப்பாகிறார்.

மாதொருபாகன் சர்ச்சை (மற்றும் பல சர்ச்சைகள்) பெரிதாக இருந்தபோது பெருமாள் முருகன் ஹிந்து மதத்தை கேவலப்படுத்திவிட்டார் என்று பலரும் ஆத்திரம் அடைந்தனர். அப்போது அடிக்கடி பார்த்த ஒரு கேள்வி – இப்படி பிற மதங்களைப் பற்றி எழுதிவிட முடியுமா? இதோ ஒருவர் எழுதி இருக்கிறார், அது பெஸ்ட்செல்லரும் கூட. யாராவது ஏதாவது கேட்கிறார்களா என்ன? டாவின்சி கோட் இந்தியாவில்தான் தடை செய்யப்பட்டது, கிறிஸ்துவம் dominate செய்யும் மேலை நாடுகளில் அல்ல. ஹாரிஸ் இங்கிலாந்துக்காரர், இங்கிலாந்தின் அரசர்/அரசி இங்கிலாந்து சர்ச்சின் ஏறக்குறைய தலைவர் பதவியில் இருப்பவர். அப்படியும் ஒரு பிரச்சினையும் கிடையாது. என் மகாபாரதச் சிறுகதைகளில் கிருபருக்கு துரோணர் மேல் பொறாமை, பீஷ்மருக்கு அம்பை மேல் காதல் என்றெல்லாம் கற்பனைக் கதைகளாக எழுதித் தள்ளுகிறேன், அதை ஹிந்துத்துவ தளமான தமிழ் ஹிந்து தளத்தில் பிரசுரிக்கவும் செய்கிறார்கள். அது ஏன் திடீரென்று ஒரு புனைவை புனைவாக மட்டும் கருதாமல் அதை தங்கள் மத நம்பிக்கைகளோடு இணைத்துக் கொள்கிறீர்கள்? அதுவும் பன்மைத் தன்மையையும் சகிப்புத்தன்மையையும் தன் அடையாளமாகக் கொண்டுள்ள ஹிந்துக்கள் ஏன் இப்படி செய்கிறீர்கள்? இதற்கு பதிலாக டாவின்சி கோடும் Satanic Verse-உம் தடை செய்யப்படக் கூடாது என்று குரல் எழுப்பலாமே?

தொகுக்கப்பட்ட பக்கம்: த்ரில்லர்கள், Films

பின்குறிப்பு: ஹாரிசின் எல்லா நாவல்களும் ஒரே தரத்தில் இருப்பதில்லை. உதாரணமாக Fear Index (2010) எல்லாம் பஸ்ஸில் படிக்கக் கூட லாயக்கில்லை. ஆனால் சிசரோ புத்தகங்களோ மிகச் சிறப்பானவை. இது சுமாரான வணிக நாவலாக இருக்கிறது…

ஐபோன் திரைப்படம்

iPhone movie

ஐபோன்16 புரோ மாக்ஸ் பயன்படுத்தி. நான்கு மும்பை இயக்குநர்கள் தங்கள் குறும்படங்களை எளிதாகவும், தரமாகவும் உருவாக்கி உள்ளனர்.

iPhone movie

மும்பை அகாடமி ஆஃப் மூவிங் இமேஜ் (MAMI) – மமி அமைப்பின் ‘ஷாட் ஆன் ஐபோன்’ (MAMI Select: Shot on iPhone) என்ற திட்டத்தின் கீழ் இது நடந்திருக்கிறது. தற்போது இரண்டாவது ஆண்டாக நடைபெறும் இந்த திட்டம், கொங்கனா சென் சர்மா, விக்ரமாதித்ய மோத்வானே, லிஜோ ஜோஸ் பெல்லிசெரி மற்றும் வெற்றிமாறன் உள்ளிட்ட திரைத்துறை வல்லுநர்களின் வழிகாட்டுதலுடன் நடைபெறுகிறது. மமி அமைப்பு மும்பைத் திரைப்பட விழாக்களை நடத்தும் ஒரு பொதுவான அமைப்பாகும்.

திரைப்பட உருவாக்கத்தில் திறன்பேசி படக்கருவிகள், குறிப்பாக ஐபோன் படக்கருவியின் பயன்பாடு, உலகளாவிய சினிமா துறையில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் முதல் முக்கியமான முயற்சி 2011ஆம் ஆண்டு வந்த நைட் பிஷிங் (Night Fishing) என்ற கொரிய குறும்படமாகும். இதை இயக்கியவர் பாக் சான்-வுக். ஐபோன் 4ல் எடுக்கப்பட்ட படம் இது.

அதன்பின் 2015ஆம் ஆண்டு டான்ஜெரின் (Tangerine) என்ற அமெரிக்க திரைப்படம் முழுவதுமாக ஐபோன் 5S-ல் எடுக்கப்பட்டது. இது சண்டான்ஸ் திரைப்பட விழாவில் பாராட்டு பெற்றது. இதன்பிறகு, திறன்பேசியில் திரைப்படம் எடுக்கும் வழக்கம் பரவலானது.

இந்த வரிசையில், பெரும் தயாரிப்பு செலவுகள் இல்லாமல், கதையை மையமாகக் கொண்டு, தொழில்நுட்பத்தை துணையாகக் கொண்டு ஐபோனை மட்டுமே பயன்படுத்தி குறும்படங்களை உருவாக்க திரைப்படக்கல்வியைக் கற்றுத்தரும் நிறுவனங்களே ஊக்குவிக்கின்றனர். தற்போதைய மமி மும்பைத் திரைப்படவிழாவில் நான்கு இயக்குநர்கள் ஐபோனில் இயக்கிய படங்கள் திரையிடப்பட்டன.

அம்ரிதா பக்சி இயக்கியுள்ள ‘டின்க்டோரியா’ (Tinctoria) என்ற உளவியல் துப்பறியும் படமானது 1859ல் வங்காளத்தில் நடந்த இண்டிகோ கிளர்ச்சியை மையமாகக்கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

ரோஹின் ரவீந்திரன் நாயர் உருவாக்கிய ‘கொவர்ட்டி’ (Kovarty) என்பது ஒரு தட்டச்சுப்பொறிக்கும் தட்டச்சாளருக்கும் இடையேயான உறவைக்கூறும் கற்பனை நிறைந்த காதல் கதை. ஐபோனின் சிறிய வடிவமைப்பினால், அதை தட்டச்சுப்பொறிக்குள்ளேயே வைத்து படம் பிடித்து, சிறந்த கோணங்களில் பதிவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார் இயக்குநர் ரோஹின்.

சாணக்ய வியாஸ் இயக்கிய ‘மங்யா’ (Mangya) என்பது ஒரு சிறுவனையும் அவன் வளர்க்கும் சேவலையும் குறித்த வாழ்வியல் கதை. இப்படத்தில் ஒரு முக்கியமான காட்சியில், கதிரவன் உதயமாகும் முன் 1,000 அடி தூரம் நடிகரைத் தொடர்ந்து சென்று படம் பிடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. வழக்கமான படத்தூக்கிக் கருவிகளை அமைக்க நேரமில்லை. ஐபோன் ஆக்சன் மோட் பயன்படுத்தி காட்சிப்படுத்தியுள்ளார் இயக்குநர். மேலும், காணொளி எடுக்கும் போது காட்சியில் ஏற்படும் அதிர்வுகளை குறைத்து, ஒழுங்காக நிலைத்த காட்சியை உருவாக்குவது  (Stabilisation) சவாலாக இருந்ததாக இயக்குநர் தெரிவித்துள்ளார்.

ஒரு பெரிய தமிழ் குடும்பத்தில் உள்ள பெண்களின் அடக்கப்பட்ட உணர்வுகளை பிரதிபலிக்கும் நகைச்சுவை திகில் திரைப்படமாக உருவாகியுள்ளது  சீயிங் ரெட் (Seeing Red). இதில் தமிழ் சினிமாவில் காலம் காலமாக கதாநாயகன் மெதுவான நடையில் அறிமுகமாகும் (slow motion) காட்சிகளை தனது படத்தில் கதாநாயகிக்கு வைத்திருப்பதாக கூறியுள்ளார் இப்படத்தின் இயக்குநர் சாலினி விஜயகுமார்.

ஐபோன்16 புரோ-வின் 120மிமீ லென்ஸை பயன்படுத்தி கதை, அமைப்பு மற்றும் கருப்பொருளை ஒரே ஷாட்டில் ஒருங்கிணைக்க முடியும் என்று இந்த நவீன இயக்குநர்கள் கூறுகின்றனர்.

இந்த நான்கு குறும்படங்களையும் முழுமையாக எம்ஏஎம்ஐ(MAMI) மும்பை திரைப்பட விழா யூட்யூப் பக்கத்தில் காணலாம். இன்றைய இயக்குநர்கள், விலையுயர்ந்த படக்கருவி, ஒளி உமிழும் கருவிகள் இல்லாமலேயே உண்மையான கதை சொல்லல் மீது கவனம் செலுத்துகிறார்கள். ஐபோன் போன்ற கருவிகள், சிறு படைப்பாளிகளுக்கும் பெரிய வாய்ப்புகளை உருவாக்குகின்றன. இதன் மூலம் கலை மற்றும் ஊடகத்துறையில் எளிய மக்களின் பங்கேற்பையும் இடத்தையும் இவை எளிதாக்குகின்றன. தொழில்நுட்பத்தின் உதவியால், கலை, காலத்தையும், எல்லைகளையும் கடந்து நிற்கும் என்பதில் ஐயம் இல்லை.

தொடர்புடைய இணைப்பு

ஆப்பிள் செய்தி
மமி யூட்யூப் பக்கம்

The post ஐபோன் திரைப்படம் appeared first on செல்லினம்.

ஜெயகாந்தனின் சினிமா

தற்செயலாக இந்த இதழ் கண்ணில் பட்டது. பல ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டவைதான். ஆனால் ஜெயகாந்தனே இறந்து சில ஆண்டுகள் ஆகிவிட்டன, அவர் திரைப்படங்கள் பக்கம் தலைவைத்துப் படுத்து பல பத்தாண்டுகள் ஆகிவிட்டன. அதனால் இவை எந்த விதத்திலும் காலாவதி ஆகிவிடவில்லை.

ஜெயகாந்தன் இயக்கிய உன்னைப் போல் ஒருவன், யாருக்காக அழுதான் திரைப்படங்களைப் பற்றி எடிட்டர் லெனின் எழுதி இருக்கிறார். உ.போ. ஒருவன்தான் ஜெயகாந்தன் இயக்கிய முதல் திரைப்படம் போலிருக்கிறது. சில நேரங்களில் சில மனிதர்கள் திரைப்படம் ஜெயகாந்தன் பிடிவாதத்தால் முதலில் 18000 அடி எடுத்தார்களாம். அப்புறம் பீம்சிங் எப்படியோ ஜேகேயின் மனதை மாற்றி 5000 அடி கத்தரித்தாராம். லெனின் கட்டுரையைப் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன். அம்ஷன்குமார் எழுதிய ஒரு நல்ல கட்டுரை இடம் பெற்றிருக்கிறது. இவற்றைத் தவிர சினிமாவுக்குப் போன சித்தாளு நாவலுக்கு ஜேகே எழுதிய முன்னுரை இருக்கிறது. யமுனா ராஜேந்திரன் ஒரு கட்டுரையை எழுதி இருக்கிறார்.

தியோடோர் பாஸ்கரனும் ஒரு சுமாரான கட்டுரை எழுதி இருக்கிறார். யமுனா ராஜேந்திரன் இன்னொரு கட்டுரையை எழுதி இருக்கிறார், ஆனால் அதற்கும் திரைப்படங்களுக்கும் ஒரு தொடர்புமில்லை.

நான் பார்த்தவற்றில் ஜெயகாந்தன் திரைப்படங்கள் என்று அடையாளப்படுத்தக் கூடியவை யாருக்காக அழுதான் (1966), சில நேரங்களில் சில மனிதர்கள், ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் ஆகியவைதான். அவற்றில் சி.நே.சி.ம. படத்தை பத்து பனிரண்டு வயதில் பார்த்தபோதும் சரி, நாற்பத்து சொச்சம் வயதில் மீண்டும் பார்த்தபோதும் சரி, பிடித்திருந்தது. மற்ற இரண்டும் சுமார்தான்.

எப்படி இருந்தாலும் சரி, இந்த இதழைப் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கங்கள்: திரைப்படங்கள், ஜெயகாந்தன் பக்கம்

தொடர்புடைய சுட்டிகள்:

  • பேசாமொழி இதழ்
  • சில நேரங்களில் சில மனிதர்கள் திரைப்பட விமர்சனம்
  • ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் திரைப்பட விமர்சனம்

❌