Normal view

Received before yesterday

இந்தியத் தத்துவம் – சாங்கியம், யோகம்: பி. ஏ.கிருஷ்ணன்

சாங்கிய தத்துவம் மானுட துயரம் என்ற யதார்த்தத்தை அடிப்படையாகக்கொண்டது. இந்த துயரமான வாழ்க்கை தளையில் இருந்து விடுபட மறுபிறப்பை தவிர்க்க வேண்டும் என நம்புகிறது. அதை அடைவதற்கான வழிதான்  சாங்கியத்தின் இலக்கு.

ஸோஃபி : அலிஸாண்ட்ரா டட்டன்

May 18, 2025 இப்போது அவள் முன்னால் இருக்கும் இந்த மங்கை யார்? அவளின் உள்ளின் உள்ளே அந்தரங்க ஆழத்தில் உள்ள அவளை, இந்த ஓவியம் அப்படியே உள்ளது உள்ளபடியே வெளியே கொண்டு வந்திருந்தது. இப்படியான தன் முகத்தை, இன்னும் கண்ணாடியில் காணக்கூட அவளுக்கு வேளை வந்திருக்கவில்லை. ஸோஃபி திரும்பி, தன் பெற்றோரின் முகங்களைப் பார்த்தாள்; வேதனையால் அவை சுண்டிப்போயிருந்தன.

அழகியல் விமர்சனத்தால் ஒரு படைப்பின் கலைத்தன்மையை நிறுவமுடியாது- கே.சி.நாராயணன்

May 15, 2025 அழகியல் விமர்சனத்தின் ஒரு விசேஷமான இயல்பை அல்லது எல்லையை சொல்லவேண்டியிருக்கிறது. அழகியல் விமர்சனத்தால் ஒரு படைப்பின் கலைத்தன்மையை நிறுவமுடியாது. அது தன் கலை அனுபவத்திலிருந்து சில அவதானங்களை முன்வைக்கிறது, வாசகனுக்கு அதை பகிர்கிறது. அந்த அனுபவத்தை கொஞ்சமேனும் ஏற்றுக்கொண்டவர்களிடம் மட்டுமே அதனால் பேசமுடியும். உதாரணமாக, நான் எம்.டி.ராமநாதன் நல்ல பாடகர் என்று சொல்லி, அவரின் தனித்தன்மைகளாக நான் உணர்ந்ததை சொல்கிறேன். நீங்கள் அந்த தனித்தன்மைகளில் சிலவற்றை ஏற்கிறீர்கள், சில தனித்தன்மைகளை மறுக்கிறீர்கள் என்றால் நாம் உரையாடலாம். மாறாக, நீங்கள் எம்.டி.ராமநாதன் பாடகரே அல்ல என்று சொன்னால் நம்மால் உரையாடவே முடியாது. உங்களிடம் எம்.டி.ராமநாதன் கலைத்தன்மைகொண்டவர்தான் என்பதை  சொல்லி நிறுவ அழகியல்விமர்சனத்தால் முடியாது.

விண்மீன்கள் மோதும் போது… : ஒடெசா மோஷ்ஃபெக்

May 12, 2025 மதுக்கூடத்திற்குத் திரும்பும் வழியில் என்னை சந்தித்த அவள், இவ்வாறு தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டாள். அவள் சொன்ன விதம், நான் அவளை முன்பே கவனிக்காவிட்டாலும், இரவு முழுவதும் நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டே இருந்தது போலவும், அதை சொல்வதற்காகவே காத்துக்கொண்டிருந்தது போலவும் இருந்தது.

உலகின் கடைசி இரவு : ரே பிராட்பரி

May 03, 2025 இதில் ஏதோ மிகவும் வேடிக்கையாகத் தோன்றியது, அவனால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை. தான் செய்த வேடிக்கையான காரியம் என்னவென்று அறிந்ததில் அவளும் அவனுடன் சேர்ந்து சிரித்தாள். இறுதியில் அவர்கள் சிரிப்பதை நிறுத்திவிட்டு, தங்களது குளிர்ந்த இரவுப் படுக்கையில் கைகோர்த்துக் கொண்டு, தலைகளை அருகருகே வைத்துக் கொண்டு படுத்தார்கள்.

இந்தியத் தத்துவம் – பொருள்முதல்வாதம் : பி.ஏ.கிருஷ்ணன்

April 10, 2025 புத்தரின் காலத்தில் ஏற்கனவே புழக்கத்தில் இருந்த பொருள்முதல்வாத கருத்துகளில் இருந்து லோகாயுதா தூண்டுதலை பெற்றது. இம்மரபின் முக்கியமான சூத்திரங்கள் பிரஹஸ்பதியால் இயற்றப்பட்டன. அவை சார்வாக சூத்திரங்கள் என அழைக்கப்பட்டன. துரதிர்ஷ்டவசமாக இவை தொலைந்துவிட்டாலும், இவற்றின் எதிர்ப்பாளர்களின் கடுமையான, ஆத்திரமான மேற்கோள்களின் வாயிலாக ஓரளவிற்கு புனரமைக்கப்பட்டன. பிற்கால சார்வாக சிந்தனையாளர்கள் பற்றிய தரவுகளும், சார்வாக சிந்தனையின் சாரமான செய்யுள்களும் இவ்வாறு மறுவழிகளில் மட்டுமே கடத்தப்பட்டன.
❌