Normal view

Received before yesterday

பந்தம் : 15

அத்தியாயம் : 15

சுமதி, தன் மருமகள் ஜீவிதா உணவு உண்ண வராததால் தயக்கத்துடன் மாடியைப் பார்த்தார். அப்போது ஜீவகன், "அவள் சொல்லச் சொல்லக் கேட்காமல் அடம் பிடிக்கிறாள். தாயைப் போலவே வளர்ந்திருக்கிறாள். ரெண்டு நாள் பட்டினி இருந்தால் சரியாகப் போகும். நீங்க சாப்பாட்டை எடுத்து வையுங்க" என்றான்.

ஜன்னல் அருகே நின்றிருந்த ஜீவிதா அதைக் கேட்டு கோபமடைந்தாள். விருப்பமில்லாத இந்தத் திருமண பந்தத்திற்கு தன்னை உட்படுத்தி விட்டு, ஜீவகன் நல்லவன் போலவும் மற்றவர்கள் மோசமானவர்கள் போலவும் சித்தரிக்கிறான். அவன்...


Read more

பந்தம் : 13

அத்தியாயம் : 13

அபிராமி, ஜீவகனைப் பார்த்து, "உன் அம்மாவைப் பற்றிச் சொன்னதும் உன்னால் தாங்க முடியலயா? 'மாமன் மகளைக் கட்டிக்க யாருடைய அனுமதியும் தேவையில்லை'னு பெரிய வசனம் பேசினே. நீ யார்? எதுக்காக இங்கே வந்து என் மகளின் திருமண நேரத்தில் உறவு முறையைச் சொல்லி நாடகம் ஆடுகிறாய்னு சொல்ல வேண்டியதுதானே! முடியாது. உன்னால் சொல்ல முடியாது! ஏன்னா, உன் அம்மாவால் ஏற்பட்ட அவமானத்தை அவள் மகனான நீயும் தரப் பார்க்குறே... ரத்தம் அப்படித் தான் இருக்கும்!" என்று பலமாக குத்தினார்.

அவன் மனம் வலிக்க கண்களை...


Read more

பந்தம் : 12

அத்தியாயம் : 12

உடைகளை மாற்றுவதற்காக அறைக்குள் நுழைந்த ஜோதிகாவின் கண்கள், படுக்கையில் சாய்ந்து ஏதோ சிந்தனையில் ஆழ்ந்திருந்த ஜீவிதாவை நோக்கின. அவளை யோசனையுடன் இருக்கிறாளா அல்லது திருமணத்திற்குப் பிறகு என்ன நடக்குமோ என்ற பயத்தில் இருக்கிறாளா என்று எண்ணியவாறே தனது புடவையைக் மாற்றினாள்.

இரவு ஆடையை அணிந்துகொண்டு, ஜீவிதா அருகில் சென்று கைப்பேசியில் அன்று எடுத்திருந்த புகைப்படங்கள் அனைத்தையும் காண்பித்தாள்.

அவற்றைப் பார்த்த ஜீவிதாவின் கண்கள் நிலை குத்திப் போயின. இதே புகைப்படங்களைத்தானே...


Read more

பந்தம் : 9

அன்றைய தினம் வழக்கத்திற்கு மாறாக தோழிகள் இருவரும் அமைதியாகக் காணப்பட்டனர். ஜீவகனின் நடவடிக்கைகள் ஏற்கனவே ஜீவிதாவின் நிம்மதியைக் குலைத்திருந்த நிலையில், யாரும் பேசாமல் இருப்பதைக் கண்டதும் அவள் நிமிர்ந்து பார்த்தாள்.

ஜோதிகாவும் தாமினியும் விசயத்தைப் புரிந்து கொண்டு, மற்றவர்களைப் பார்த்து வாய்விட்டுச் சிரித்தவாறு இருக்க, அவர்களோ இருவரையும் முறைத்துக் கொண்டு இருந்தார்கள். ஜீவிதா என்ன நடந்தது என்று தெரியாமல் ஜோதிகாவிடம் கேட்க, அவள், "நம்ம முரட்டு சிங்கிள், கெத்து ஹீரோ, சிடுமூஞ்சி புரொபஸர்...


Read more

பந்தம் : 1

inbound2559800010686410915.jpg

ஜென்ம ஜென்மமாய் தொடரும் பந்தம்

அத்தியாயம் : 1


திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் எம்.சி.ஏ இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவிகள் சிலர், தங்கள் கல்லூரிக்கு வரவிருக்கும் புதிய பேராசிரியரைப் பற்றி கிசுகிசுத்துக் கொண்டிருந்தனர்.

இன்னும் சற்று நேரத்தில் கல்லூரிக்கு வரக்கூடிய புதிய பேராசிரியர் எப்படிப்பட்டவராக இருப்பார் என்பது பற்றிய எதிர்பார்ப்பு அவர்களிடம் காணப்பட்டது.

ரம்யா குதூகலமாக, "ஏய்! ஒரு குட் நியூஸ். புதுசா வரப்போற...


Read more

பந்தம் : 5

அத்தியாயம் : 5

திடீரென்று தூரமாகச் சென்று விழுந்த ஆல்வின், தலையை உலுக்கிக் கொண்டு நிமிர்ந்து பார்க்க, அவனைக் கொன்று போட்டு விடும் வெறியில் நிற்கும் ஜீவகன் விழிகளில் விழுந்தான். ஆனாலும், போதை கண்களை மறைத்தது.

கால்களை அங்கும் இங்குமாக வைத்தவாறு நடந்து சென்று அவனை அடிக்க முயல, அளவு மீறிய கோபத்தில் இன்னும் ரெண்டு கொடுத்தான் ஜீவகன். அவன் எழ முடியாமல் தலையைப் பற்றியவாறு கீழே விழுந்து கிடக்க, ஜீவிதாவை பார்த்த பார்வையில் கடுமை நிறைந்து காணப்பட்டது.

பேசாமல் சென்று ஜோதிகாவை தூக்கிக் கொண்டு...


Read more

பந்தம் : 2

அத்தியாயம் : 2

கல்லூரியில் இருந்து விடுதிக்குச் செல்லப் பத்து நிமிடத் தொலைவு இருந்தது. ஜோதிகாவுடன் பேசிக்கொண்டே ஜீவிதா அங்குச் செல்வாள்.

மற்ற தோழிகள் மூவரும் அவர்களிடம் விடைபெற்று வீட்டிற்குச் சென்று விடுவார்கள். இவர்கள் இருவருக்கும் பிடித்த உணவை வீட்டில் சமைத்தால் கொண்டு வந்து கொடுப்பார்கள். விடுமுறை நாட்களில் தங்கள் வீட்டிற்கு வருமாறு அழைப்பு விடுப்பார்கள். ஆனால், ஜீவிதா விடுமுறை வந்துவிட்டாலே, அம்மாவைப் பார்க்க ஊருக்குச் சென்று விடுவது வழக்கம்.

என்னதான் வீட்டில் உள்ளவர்களின்...


Read more

பந்தம் : 3

அத்தியாயம் : 3

காலையில் புடவை அணிந்து கொண்டு அருகில் இருந்த கோவிலுக்குச் சென்றாள் ஜீவிதா.

கண்களை மூடி மனதில் இருப்பதை இறைவனின் பாதத்தில் சமர்ப்பணம் செய்தாள். விழிகள் இரண்டும் கலங்கின. உதடுகள் துடித்து அவரிடம் எதையோ சொல்லத் தயங்கின. அப்போது கோவில் மணி உரத்து ஒலித்தது. கண்களைத் திறந்து பார்த்தாள். கல்லூரிக்குப் புதியதாக வந்திருக்கும் பேராசிரியர் ஜீவகன், இரு கைகளையும் குவித்து இறைவனை வழிபட்டு கொண்டு நின்றான்.

அவனைக் கண்ட அடுத்த நொடி, அங்கிருந்து விலகிச் சென்றாள் ஜீவிதா. இறைவனின்...


Read more
❌