Normal view

Received before yesterday

சாப விமோசனம்

சிவராமனின் மனம் காயத்ரி ஜபத்தில் லயிக்கவில்லை. குளத்தின் ஆழத்தில் உறங்கும் யக்ஷியைச் சுற்றி வந்தது. வீட்டின் கொல்லைப்புறத்தில் இருந்தாலும் அந்த சிறு குளத்தில் விளையாடவோ குளிக்கவோ ஒரு நாளும் அனுமதி அவனுக்கு இல்லை. அவன் மட்டும் அல்ல அப்பா சாம்பசிவம் கூட கிணற்றில் தான் நீர்  மொண்டு குளிப்பார். வருடங்களுக்கு ஒரு முறை குளத்தை சுற்றி இருக்கும் கற் படிகள் சீரமைக்கப்பட்டு சுத்தமாக்கப்படும். ஆனால் குளத்தின் நீர் என்னவோ எப்போதுமே மாசு படாமல் இருந்தது. அதில் தண்ணீர் குறைந்ததும் இல்லை கூடியதும் இல்லை.
❌