Normal view

Received before yesterday

சினிமா புத்தகங்கள் – நிழல் இதழில்

இந்த மாதம் (மார்ச் 2025) நிழல் இதழில் என்னுடைய கட்டுரை ஒன்று வெளியாகி இருக்கிறது என்பதை பகிர்வதில் மகிழ்கிறேன். சில முக்கிய சினிமா (திரைக்கதை மற்றும் இயக்கம்) புத்தகங்கள் பற்றிய அறிமுகங்கள் கொண்ட கட்டுரை. நன்றி நிழல்.

தாத்தாவின் கதை

தாத்தா எப்போதுமே என் மீது பெரிய நம்பிக்கை வைத்திருந்தார். முயற்சிகள் எல்லாமுமே ஜெயமாகும் என்பார். மணிரத்னம் படைப்புகளை முழுவதுமாக வாசித்துவிட்டு ‘நல்லா பண்ணிருக்க’ என்றார். தொண்ணூற்றி ஐந்து வயதில் அவர் அதை வாசித்திருக்க வேண்டிய அவசியமில்லை. எனக்காக தான் வாசித்தார். நான் தாத்தாவிற்காக அவர் ஆசைப்பட்ட வரலாற்று நாவல் ஒன்றை இந்த வாழ்நாளில் எழுதிவிடுவேன். இன்று தாத்தாவின் பத்தாவது நினைவு நாள். *** #தாத்தாவின்கதை

வல்லான்- திரைப்படம்

நண்பர் மணி சேயோனின் இயக்கத்தில் ‘வல்லான்’ திரைப்படம் நேற்று (24.01.2025) வெளியாகி இருக்கிறது. இதில் நானும் திரு. மணி சேயோனோடு இணைந்து வசனம் எழுதி இருக்கிறேன் என்பதை பகிர்வதில் மகிழ்கிறேன். நண்பர் மணி சேயோனுக்கு நன்றிகள் வல்லான் குழுவிற்கு வாழ்த்துகள்.

லக்கி பாஸ்கர் – கொஞ்சம் திரைக்கதை

குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக தவறான வழியில் பணம் ஈட்ட நினைக்கும் ஒரு சாதாரணன், பேராசையால் ஆட்கொள்ளப்பட்டு ஒருகட்டத்தில் பணம் ஈட்டுவதை மட்டுமே தன் நோக்கமாக மாற்றிக் கொள்கிறான். இது பிரேக்கிங் பேட்டின் ஒன்லைன். லக்கி பாஸ்கர் படத்தின் ஒன் லைன்னும் இதுவே.  பிரேக்கிங் பேட்டின் வால்ட்டர் வைட், தன்  திறமைக்கான அங்கீகாரம் தனக்கு கிட்டவில்லை என்கிற ஆதங்ககத்திலேயே  வாழ்பவன். ஒரு தருணத்தில் அந்த ஆதங்கம் கோபமாக மாற, தன் திறமையை தவறான வழியில் செலுத்தி பணம் […]

அநிருத்தன்-மேடை நாடகம்

என்னுடைய ‘ஏப்ரல் இரவில், ராக் மியூசிக் இசையில், அநிருத்தன் செய்த மூன்று கொலைகள்’ சிறுகதை, மேடை நாடகமாக அரங்கேற இருக்கிறது என்பதை பகிர்வதில் மகிழ்கிறேன். படைப்பு குழுவிற்கு நன்றியும் வாழ்த்துக்களும் இடம்: Alliance Francaise, Nungambakkam நாள்: நவம்பர் 17, 2024 இயக்கம்: முருகானந்தம் எழுத்து: அரவிந்த் சச்சிதானந்தம் நன்றி

பால்கனியுடன் கூடிய வீட்டை விரும்பும் ஒரு பெண்: குறுங்கதைகள்

என் இனையதளத்தின் பதின்மூன்றாவது பிறந்த நாளான இன்று,என்னுடைய அடுத்த (குறும்)புத்தகத்தை வெளியிடுவதில் மகிழ்கிறேன். பால்கனியுடன் கூடிய வீட்டை விரும்பும் ஒரு பெண்: குறுங்கதைகள் தொகுப்பு இந்த குறுங்கதைகள் தொடர்ந்து பத்து இரவுகள் எழுதப்பட்டவை. இதன் கதை மாந்தர்கள் அப்பழுக்கற்றவர்கள் அல்ல. அவர்கள் மிகச் சாதாரணமானவர்கள். அன்றாட வாழ்வின் சிக்கல்களில் சிக்குண்டு தவிப்பவர்கள். சாதாரண மனிதர்களின் எளிய ஆசைகள், அதை நிறைவேற்றிக் கொள்ளும் தவிப்பு, அது நிறைவேறாமல் போகும் போது ஏற்படும் ஏமாற்றம் ஆகியவை இந்த கதைகளில் அழகாக […]

❌