Normal view

Received before yesterday

கானல்வரி பரிந்துரைகள் : “காலச்சுவடு – கிளாசிக் முதல் நவீனம் வரை” 

கானல்வரி பக்கத்தில் புத்தகத் திருவிழாக்களை ஒட்டி வகைமை வாரியான நூல் பரிந்துரைகளைத் தொடர்ந்து பதிந்து வருகிறோம். 

நாளை (06-09-2024) தொடங்கவிருக்கும் மதுரை புத்தகத் திருவிழாவை முன்னிட்டு காலச்சுவடு பதிப்பகத்தின் கிளாசிக் முதல் நவீனம் வரையிலான நாவல், சிறுகதை, கட்டுரை நூல்கள் அடங்கிய பட்டியலை இங்கு பதிவிடுகிறோம். இப்பட்டியல் ஆரம்பகட்ட மற்றும் நடுத்தர வாசகர்கள் பயன்பெறுதற் பொருட்டு பரிந்துரைக்கப்படுகிறது.

இந்நூற்பட்டியலைப் பரிந்துரைத்து உதவிய காலச்சுவடு அய்யாசாமி அவர்களுக்கு அன்பும் நன்றியும்.

படங்களைத் தொடர்ந்து பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது.

நாவல்கள்

1) கிழவனும் கடலும் – எர்னெஸ்ட் ஹெமிங்வே (தமிழில் – எம்.எஸ்)

2) தோட்டியின் மகன் – தகழி சிவசங்கரப் பிள்ளை (தமிழில் – சுந்தர ராமசாமி )

3) மஹ்ஷர் பெருவெளி – புனத்தில் குஞ்ஞப்துல்லா, (தமிழில் -குளச்சல்.மு. யூசப்)

4) மீஸான் கற்கள் – புனத்தில் குஞ்ஞப்துல்லா, (தமிழில் -குளச்சல்.மு. யூசப்)

5) கடல்புரத்தில் – வண்ணநிலவன்

6) ஈரம் கசிந்த நிலம் – சி.ஆர்.ரவீந்திரன்

7) தண்ணீர் – அசோகமித்திரன்

8) சில நேரங்களில் சில மனிதர்கள் – ஜெயகாந்தன்

9) அம்மா வந்தாள் – தி.ஜானகிராமன்

10) நாளை மற்றொரு நாளே – ஜி.நாகராஜன்

11) தலைகீழ் விகிதங்கள் – நாஞ்சில் நாடன்

12) ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் – ஜெயகாந்தன்

13) நாகம்மாள் – ஆர்.ஷண்முகசுந்தரம்

14) பள்ளிகொண்டபுரம் – நீல.பத்மநாபன்

15) பசித்த மானுடம் – கரிச்சான்குஞ்சு

16) ஜே.ஜே.சில குறிப்புகள் – சுந்தர ராமசாமி

17) புளிய மரத்தின் கதை – சுந்தர ராமசாமி

18) கோபல்ல கிராமம் – கி.ராஜநாராயணன்

19) புனலும் மணலும் – ஆ.மாதவன்

20) அஞ்சு வண்ணம் தெரு – தோப்பில் முஹம்மது மீரான்

21) அமிர்தம் – தி. ஜானகிராமன்

22) மாதொருபாகன் – பெருமாள்முருகன்

23) வெல்லிங்டன் – சுகுமாரன்

24) அஜ்னபி – மீரான் மைதீன்

25) சாய்வு நாற்காலி – தோப்பில் முஹம்மது மீரான்

26) காச்சர் கோச்சர் – விவேக் ஷான்பாக், (தமிழில், கே.நல்லதம்பி)

27) பால்யகாலசகி – வைக்கம் முஹம்மது பஷீர், (தமிழில் -குளச்சல்.மு. யூசப்)

சிறுகதைகள்

28) சிலிர்ப்பு – தி.ஜானகிராமன்

29) குதிரைக்காரன் – அ. முத்துலிங்கம்

கட்டுரைகள்

30) மழைக்காலமும் குயிலோசையும் – மா.கிருஷ்ணன்

31) கோவில்-நிலம்-சாதி – பொ.வேல்சாமி

32) உய்யடா உய்யடா உய் – இசை

33) கெட்டவார்த்தை பேசுவோம் – பெருமாள் முருகன்

34) பதிப்புகள் மறுபதிப்புகள் – பெருமாள் முருகன்

35) மயிர்தான் பிரச்சினையா – பெருமாள் முருகன்

36) சாதியும் நானும் – பெருமாள் முருகன் (ப. ஆ)

37) பதிப்பும் படைப்பும் – கண்ணன்

38) நகலிசைக் கலைஞன் – ஜான்சுந்தர்

39) பண்பாட்டு அசைவுகள் – தொ.பரமசிவன்

40) நடந்தாய் வாழி காவேரி – சிட்டி, தி.ஜானகிராமன்

41) அந்தக் காலத்தில் காபி இல்லை – ஆ.இரா.வேங்கடாசலபதி

42) எனது இந்தியா – ஜிம் கார்பெட், (தமிழில் -யுவன் சந்திரசேகர்)

43) என்கதை – கமலாதாஸ், (தமிழில் – நிர்மால்யா)

44) கவர்ன்மென்ட் பிராமணன் – அரவிந்த மாளகத்தி, (தமிழில் – பாவண்ணன் )

45) நளினி ஜமீலா – ஒரு பாலியல் தொழிலாளியின் சுயசரிதை, (தமிழில் – குளச்சல் மு.யூசுப்)

46) திருடன் மணியன்பிள்ளை -ஜி.ஆர்.இந்துகோபன், (தமிழில் – குளச்சல் மு.யூசுப்)

47) ஒரு தந்தையின் நினைவுக் குறிப்புகள் – டி.வி.ஈச்சரவாரியர் (தமிழில்,குளச்சல் மு.யூசுப்)

48) ஆணவக் கொலை சாமிகளும் பெருமிதக் கொலை அம்மன்களும் – ஆ.சிவசுப்பிரமணியன்

49) கிழக்கும் மேற்கும் பன்னாட்டு அரசியல் கட்டுரைகள் – மு.இராமனாதன்

50) காலந்தோறும் பெண் – ராஜம் கிருஷ்ணன்

The post கானல்வரி பரிந்துரைகள் : “காலச்சுவடு – கிளாசிக் முதல் நவீனம் வரை”  appeared first on Kaanalvari.

ஆபீஸ் அத்தியாயம் 56 அவரவர் உலகம்

ராமசாமியைப் பார்த்துவிட்டு வந்ததிலிருந்து, மன விரிவே சிந்தனையை விரிக்கும். சுயசிந்தனையே பிரத்தியேகப் பார்வையைக் கொடுக்கும். தனித்துவப் பார்வையே ஆளுமையை உருவாக்கும். அதிலும் இருக்கிற சட்டகத்திற்குள் அடங்காத ஆளுமையாக உருவெடுக்க எதிரெதிர் கருத்துகளுக்கு முகம் கொடுத்து எழுந்து வரவேண்டும் என்று என்னென்னவோ எண்ணங்கள் தோன்றிக்கொண்டிருந்தன


ஆனால், அவள் அப்படித்தான் பற்றி சுந்தர ராமசாமி இப்படிச் சொன்னார் என்று சொன்னதும் படாரென ருத்ரைய்யா போட்ட ஒரே போடில் அவன் ஆடிப்போய்விட்டான். தருமு சிவராமு உட்பட, சுந்தர ராமசாமியை போகிற போக்கில் இவ்வளவு சாதாரணமாக யாரும் அடித்து அவன் பார்த்ததில்லை என்பதால் பேச்சு மூச்சற்று அவர் ஆபீசில் அமர்ந்திருந்தான்


நாகர்கோவிலில் இருந்து திரும்பிவந்து மெட்ராஸில் இருந்த நான்கைந்து நாட்களில் ஒருமுறை, மந்தைவெளியில் திறந்தவெளி குப்பைக் கூளத்திற்கு நடுவில் பெரிய கட்டடத்தில் இருந்த  ருத்ரையாவின் ஆபீசுக்குப் போயிருந்தான். அவன் போனது என்னவோ,ஜோதிவிநாயகத்தைப் பார்க்கப்போனபோது நாகலாபுரத்தில் அவள் அப்படித்தான் ஓடிக்கொண்டு இருந்ததையும் அந்தக் கொட்டகைச் சுவரில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டரில் டைரக்‌ஷன் வி சசி என்று பிட்டு படம்போல அச்சிடப்பட்டிருந்த அநியாயத்தையும் சொல்வதற்காகத்தான். அவரைப் போய்ப் பார்க்க அது ஒரு சுவாரசிய முகாந்திரமாக இருக்கும் என்றுதான் அதைத் தூக்கிக்கொண்டு போனான். ஆனால், அவன் ருத்ரையாவிடம் பேச்சை ஆரம்பித்ததென்னவோ அவள் அப்படித்தானைப் பற்றி சுந்தர ராமசாமி சொன்னதை வைத்துதான்


ஆபீஸ் அத்தியாயம் 56 அவரவர் உலகம்

இப்பதான்னு இல்ல. எப்பவுமே இப்படித்தான்

எட்டடிக் குச்சுக்குள்ளே எல்லோரும் பத்தினிகள் 

- ஞானரதம் (அக்டோபர் - டிசம்பர் 1983)

 

தமிழனுடைய தோலின் தடித்தனம் பற்றிகுறைபட்டுக்கொள்ளாத எழுத்தாளர்களே இல்லை என்று சொல்லிவிடலாம். சிறுமுனகல் தொடங்கிவிரை ஏறிக்கொள்ளும் அளவிற்கு எல்லோரும்அவரவர் இயல்பிற்கேற்ப சத்தம் போடுகிறார்கள்சிறுபத்திரிகை வளாகத்திற்குள். 

இந்த வருட இதயம் பேசுகிறதுதீபாவளி மலரில் ஒரு அதிசயம். வர்ஜாவர்ஜமின்றிஅகிலன்சுந்தர ராமசாமிகலைஞர் கருணாநிதிஅசோகமித்திரன்செல்வி ஜெயலலிதாசா. கந்தசாமிபட்டுக்கோட்டை பிரபாகர்டி. செல்வராஜ்சுஜாதாகு. சின்னப்ப பாரதிஹேமா ஆனந்ததீர்த்தன்இந்திரா பார்த்தசாரதிஜெயகாந்தன்ராஜேந்திரகுமார். ஆ. மாதவன்இந்துமதிநகுலன்சிவசங்கரிநீல பத்மநாபன்ஜோதிர்லதா கிரிஜாஆதவன்சு. சமுத்திரம்அனுராதா ரமணன்வல்லிக்கண்ணன்வாஸந்திஜெயந்தன்காசியபன் என்று எல்லோருடைய புகைப்படங்களும்குறிப்பிடத்தக்கதென எழுத்தாளர்களே குறிப்பிடும் அவரவர் நாவலின் பெயருமாக ஒரு ஆல்பம் போல வெளியிடப்பட்டிருக்கிறது,

ஒரு எழுத்தளான்புகைப்படம் எடுத்துக் கொள்வதிலோஅதை பத்திரிகையில் வெளியிடுவதிலோ தவறேதுமில்லை. ஆனால் எந்தப் பத்திரிகையில்எந்த விதத்தில்?

உண்மையைத் தேடும் சுந்தர ராமசாமிக்கும்இளமை இனிமை புதுமைக்கும் என்ன உறவுவியாபாரப் பத்திரிகைகளுக்கெதிராக போர்க்கொடி உயர்த்திய கசடதபற கலகக்காரரான சா. கந்தசாமிக்கும்கலாசாரத்தைச் சீரழிக்கும் நபும்சக’ பத்திரிகைக்கும் என்ன கூட்டுபெண்விடுதலை என்று தாண்டிக்குதித்து எகிறும் ஜோதிர்லதா கிரிஜாவுக்கும் தொடையில் எங்கே மச்சம் என்று தேடச்சொல்லி போட்டி வைக்கும் இதழுக்கும் என்ன தொடர்புமதம் மக்களுக்கு அபின் என்று சதா ஜெபிக்கிற சிவப்பிலக்கியவாதிகளான டி. செல்வராஜ்கு. சின்னப்ப பாரதிக்கும்இந்துமத மொத்த குத்தகைக்காரரான மணியனுக்கும் என்ன சம்பந்தம்?

வியாபாரப் பத்திரிகையில் எழுதுவதைவெகுஜனங்களை அடைகிற நோக்கம் என்கிற அம்சத்திலேனும் ஏற்றுக்கொள்ளலாம். மேற்படி எழுத்தாளர்களின் நாவலையோ அல்லது நாவல் சுருக்கத்தையோ வெளியிட்டுகூடவே புகைப்படம் போட்டிருந்தாலும் பரவாயில்லை. வெளியிட்டிருப்பது 'வெறும் பொட்டோ'.

சாகித்திய ஞானபீடங்களுக்கெதிராக யுத்த சந்நத்தம் கொள்ளும் இவர்கள். 'நீ இதுவரை என் எழுத்தைக் கேட்டதில்லை. இப்போதும் என் எழுத்தை வெளியிடப் போவதில்லை. போட்டோதான் கேட்கிறாய். எழுத்தாளன் என்கிற விதத்தில் என் முகத்தை விடவும் எழுத்துதான் முக்கியம்போட்டோ தரமுடியாது போய்யா என்றல்லவா சொல்லியிருக்கவேண்டும் ?

இலக்கியம்எந்த சீரழிவை எதிர்த்து. சமூகத்தின் திரைகளைக் கிழித்து வெளிச்சம்போட்டு காட்டுகிறதோஅந்த நிலையை மேன்மேலும் வளர்க்கிறஆயிரம் பிரதிகள் போட்ட தரமான புத்தகம்ஐந்து வருடத்திலும் விற்று முடியாதபடிக்குநாடு முழுக்க நரகலைப் பரப்பிக்கொண்டிருக்கும் ஒரு பத்திரிகையில்எழுத்துகூட இல்லைதங்கள் முகம் சில ஆயிரம் பிரதிகளில் அச்சேறிதமிழ் மகாஜனங்களை அடைவதில் அப்படி என்ன சந்தோஷம்?

தன் பத்திரிகையின் ஆபாச முகத்தைத் திரை விலக்கிக் காட்டிவிட்டார் என்ற காழ்ப்பில்இலக்கியத்திற்கும்கிசுகிசுமூட்டி கிளப்பிவிடுவதற்கும் வித்தியாசம் தெரியாதமதம்+ செக்ஸ் என்று தமிழர்களுக்கு ஆத்ம சரீர சுகமளிக்கும் மணியன்இதே பத்திரிகையில் வண்ணநிலவனைப் படுகேவலமாகத் தாக்கினார். சக எழுத்தாளன்ஒரு நியாயமான விஷயத்திற்குக் குரல் கொடுக்கப்போய்கேவலப் படுத்தப்படுவதைக் கண்டித்து மேற்படி எழுத்தாளர்கள் எவரும் குரலெழுப்பவில்லை. மாறாக அவன் கேட்டவுடன் எங்கிருந்து மாலை விழுந்தாலும் பரவாயில்லை என்று கழுத்தை நீட்டி போட்டோ அனுப்பியிருக்கிறார்கள். இந்த ஒரு காரணத்திற்காகவே இவர்களின் எழுத்து நாளைக்கே வியாபாரத்தனமாகிவிடும் என்று அர்த்தமில்லை. ஆனால் இவ்வளவு பெரிய பயில்வான்கள்போயும் போயும் போட்டோ தடுக்கியா விழவேண்டும்?

இந்த எழுத்தாளர்களையெல்லாம் தோளில் சுமந்தபடி சுற்றிவருகிற இளைஞர்களை இதைவிட வேறு எப்படி அவமானப்படுத்திவிட முடியும் 


***


இது வெளியான 1983 ஞானரதத்தைத் தேடிப்பிடித்து, இந்தப் பக்கத்தை ஸ்கேன் செய்து அனுப்பிவைத்த மொழிபெயர்ப்பாளர் ஜி. குப்புசாமிக்கு நன்றி.

 

❌