Normal view

Received before yesterday

இந்தியக் கவிதையியல் - 5: குறிப்பை மறுப்பவர்களும், வேறு பிரிவில் உட்படுத்துபவர்களும், தீ.ந.ஶ்ரீ கண்டய்யா

27 May 2025 at 09:20

ஒரு புதிய கவிதைக் கொள்கையை ஆனந்தவர்தனர் த்வன்யாலோகத்தில் அறிவித்த அளவில் எல்லோரும் அதனை ஏற்றுக்கொண்டு விடவில்லை. மாற்றுக் கொள்கைகள் எழுந்தன. மறுப்புகள் எழுந்த வண்ணம் இருந்தன. குணம், அணி தவிர எவை கவிதையை அழகுபடுத்துகின்றன? அழகுபடுத்தும் கவிதைக்கூறுகள் தொடர்பான எல்லாவற்றையும் முன்னோர்கள் கூறிவிடவில்லையா? குணம், அணி இவற்றை விடவும் குறிப்பு வேறுபட்டதாக வாதிட்டாலும் அது மட்டும்தான் கவிதையை அழகுபடுத்துவதாக எப்படி ஏற்றுக்கொள்வது? புதிதாக சில அணிகளை வகுப்பது போன்று ஒருசில அழகுக்கூறுகளை குறிப்புக் கொள்கையாளர்களும் முன்வைத்திருக்கலாம். தாங்கள்தான் இணைமனம் கொண்டவர்கள் என்னும் போலி இறுமாப்பில் பூரித்தவாறு இதற்கே அவர்கள் “த்வனி த்வனி” எனக் கத்தியபடி கண்மூடிக் கூத்தாடலாமா? சில பெயர்களைப் புதிதாகச் சூட்டிவிட அதுவே பெரும்புலமை என்று ஆகிவிடுமா என்ன? இப்படி எல்லாம் கூட சிலர் கூறியிருக்கிறார்கள்.[1]

இந்தியக் கவிதையியல் - 4: குறிப்புக் கொள்கை, தீ.ந.ஶ்ரீ கண்டய்யா

5 April 2025 at 07:43


பகுதி I: இலக்கண வளர்ச்சி

அத்யாயம் 4: குறிப்புக் கொள்கை

உடல், ஆன்மா எனக் கவிதையைப் பாகுபடுத்திப் பார்க்கும் பார்வை வாமனர் காலத்திலேயே தோன்றிவிட்டது. நடிப்பையும் பாடலையும் நாடகம் அங்கீகரித்து வந்தது. அதுபோன்று இலக்கியமும் சுவை உருவாகும் இயல்பை பழங்காலம் முதல் அங்கீகரித்தே வந்திருக்கிறது. அரங்கில் நடிப்பதற்காக இயற்றப்பட்ட நாடகங்கள் உயர்ந்த இலக்கியங்களாகவும் இருந்துவந்தன. எனவே, நாடகங்களின் இலக்கியத்தன்மையையும் அணியியலாளர்கள் அங்கீகரித்திருக்கிறார்கள். இவ்வாறு இருக்கும் நிலையில், கவிதையியலின் அடிப்படையில் நாடகம், இலக்கியம் இரண்டையும் ஒருங்கிணைந்த நோக்கில் பார்வையிட்டு காட்சிக் கவிதைக்கு மட்டுமல்ல, கேட்புக் கவிதையின் நோக்கமும் சுவை உருவாக்கம்தான், எல்லா வகைக் கவிதைகளின் உண்மையான ஆன்மா சுவைதான் என்னும் புரிதலை முன்வைக்கும் இலக்கணவாதிகளின் வருகை இயல்பான ஒன்றுதான்.[1]

இந்தியக் கவிதையியல் - 3: அலங்காரக் கொள்கையும் ரீதிக்கொள்கையும், தீ.ந.ஶ்ரீ கண்டய்யா

12 January 2025 at 10:53

பகுதி I: இலக்கண வளர்ச்சி

அத்யாயம் 3: அலங்காரக் கொள்கையும் ரீதிக்கொள்கையும்

பாரதீய நாட்டிய சாத்திரத்தில் நடனத்தின் பகுதியாகவே கவிதை இலக்கண அடிப்படைகள் வெளிப்பட்டன. அவை தனித்தன்மையான இடத்தைப் பெறவே இல்லை. இவ்வாறிருக்கும் நிலையில் தற்போது கிடைக்கும் அணியிலக்கண நூல்களில் பாமகரின் காவ்யலங்காரமும் தண்டியின் காவ்யாதர்சமும் தான் பழைமையானவை. பரதருக்கும், பாமகர், தண்டி ஆகிய இருவருக்குமிடையே நான்கைந்து நூற்றாண்டுகள் கடந்து சென்றுவிட்டன. இந்தக் காலகட்டத்தில் இலக்கணம் எவ்வாறு வளர்ச்சியடைந்தது என உறுதியாக அறிந்துகொள்ள வாய்ப்பில்லை. ஆனாலும் ஆராய்ச்சி நடைபெற்றிருக்கவும், நூல்கள் தோன்றியிருக்கவும் வேண்டுமென்று கூறுவதற்கு கவிஞர்கள் இலக்கணத்தைக் கருத்தில் கொண்டு படைப்புகளை அவ்வப்போது உருவாக்கியிருப்பதே சான்று. கிறித்துயுக ஆரம்பத்தில் கல்வெட்டுகளின் மெய்க்கீர்த்திப் பகுதிகளை எழுதியவர்கள் சொல்லணிகளையும் பொருளணிகளையும் திட்டவட்டமாக பயன்படுத்தியிருப்பது தெரியவருகிறது. ருத்ரதாமனின் கிர்நார் மெய்க்கீர்த்தியில் [கி.பி.150] வெளிப்படை [ஸ்புட], இனிமை[மதுரம்] உள்ளிட்ட குணப் பெயர்கள் இடம்பெற்றிருக்கின்றன. *1.

இந்தியக் கவிதையியல் - 2: பரதரின் நாட்டிய சாத்திரம், தீ.ந.ஶ்ரீ கண்டய்யா

25 November 2024 at 07:26

 பகுதி - I: இலக்கண வளர்ச்சி

அத்யாயம் - 2: பரதரின் நாட்டிய சாத்திரம்

கவிதை இலக்கணமும் நாடக இலக்கணமும் சிறிது காலம் தனித்து, வெவ்வேறு வடிவங்களில் வளர்ந்த பிறகு சந்தித்துக் கொண்டதாக முன்பே கூறியிருக்கிறோம். இந்த இரண்டிலும் தொன்மையானது நாடக இலக்கணம். நடனச்செயல்பாடு சிக்கலானது என்பதால், அது இலக்கணவாதிகளின் கவனத்தை முதலாவதாக கவர்ந்ததில் ஆச்சரியம் இல்லை. பாணினியின் காலகட்டத்திலேயே [கி. மு. ஐந்தாம் நூற்றாண்டு] ‘சிலாலி’, ‘க்ருஸஸ்வர்’ ஆகியவர்களின் நாட்டிய சூத்திரம் புழக்கத்தில் இருந்திருக்கிறது. *1

இந்தியக் கவிதையியல் - 1: தோற்றுவாய், தீ.ந.ஶ்ரீ கண்டய்யா

15 September 2024 at 17:48
தீ.ந.ஶ்ரீ கண்டய்யா

அறிமுகம்

முதுகலைத் தமிழ் பயிலும் மாணவர்களுக்கு இலக்கியக் கொள்கைகளையும், திறனாய்வையும் கற்பிக்கும் பாடநூல்களை அத்துறை அறிஞர்கள் எழுதியிருக்கிறார்கள். இவர்கள், தங்கள் நூல்களில் ஐரோப்பிய இலக்கியக் கொள்கைகளை மாணவர்களுக்கு புரியும் வண்ணம் எளிமையாகவே விளக்கியிருக்கிறார்கள். இலக்கிய நுண்ணுணர்வு முற்காலத்தில் தமிழ்ச்சூழலில் எவ்வாறு விளங்கியது என்பதையும் இவர்களின் பாடநூல்கள் எடுத்துக்காட்ட தவறவில்லை. 

❌