Normal view

Received before yesterdayபி ஏ கிருஷ்ணன்

Gandhi’s reaction to the Butchery of Hindus -a rejoinder to Aravindan

Let me say this first. I am aware of the boundless regard Aravindan has for me. This is true of many other persons who joined him malign me. Thus, there is nothing personal in these debates. Of course, there are a few other buffoons and nitwits who have used his post to take potshots at me. I hold them in utter contempt. Now, about my Brahmin birth. Aravindan has separately written to me and said that his intent was not to hurt me. I believe him and hence I would let that matter rest. I know this will be extremely disappointing to Periyarist Nazis and other Brahmin-hating – and Aravindan-hating – nuts, but I can’t help it. However, if Aravindan wants to continue the discussion on these lines and give a few minutes of amusement to these weirdoes, I am ready for it.  

I have been a lifelong fighter on the side of Secularism – especially the Nehruvian brand of secularism. Most of the persons, including Aravindan, were not even born when I started my journey. It is therefore natural for me to get irritated when some of these persons who have newly found secularism try to teach me how to couch my secularism in an acceptable language. If this irritation is mistaken for arrogance, as has been done by some dimwits, I can’t help it. One Ambedkar-worshipping worthy has made a snide remark that a lifelong reading of Gandhi doesn’t make one Gandhian. I have never claimed myself to be a Gandhian. I am a lifelong student of Marx, Gandhi, and Nehru. That is all. In any case, I would remind this worthy of what Ambedkar had to say about Muslims in his famous book on Pakistan. What he wrote doesn’t diminish his secular credentials.

What did I exactly write that made these self-appointed guardians of secularism to bristle and pounce on me? It is just one word, – Hindu. This was what I wrote: My heart goes out to the Hindu families who have lost their dear ones. If I had not added the word ‘Hindu,’ all hell would not have broken loose. The guardians’ contention was that I had dirtied secularism beyond dry-cleaning by adding the word ‘Hindu.’ I was going through what I wrote on the 22nd of April, and these words that I wrote struck me: “Defend Democracy! Defend Secularism! Defend our Supreme Court.” I was also taking on the Hindutva fanatics. I didn’t watch the television that day and got to know of the attack in Pahalgam pretty late at night on that day or the next morning. If I remember rightly, it was DNA’s headlines that caught my attention. It screamed “Hindus Killed in Pahalgam Terror Attack.” I was not then aware that a Muslim was also killed in that attack, and my reaction was spontaneous. I never imagined that it would be nitpicked by self appointed guardians of secularism who had not had a single word of sympathy, until then, for the victims. Their convoluted reasoning was that my mentioning the word ‘Hindu’ would bring the entire Muslim community to disrepute. Now, there have been many attacks by terrorists in the past. This attack is different for a single reason. The terrorists sought out and identified Hindus and trained their guns on them. Yes, terrorism doesn’t have a religion. Yes, terrorists don’t represent Islam. But the victims were butchered because the terrorists identified them to be Hindus. A Nepali was killed. They also killed a Muslim who tried to help the tourists. It is the height of dishonesty to claim that they were killed because they were Indians. Even left-leaning media doesn’t claim that. For instance, in an interview for Frontline, Nirupama Subramaniam clearly says that the terrorists pulled out the tourists after ascertaining their religious identity and shot them execution-style.

Now to Gandhi.

Gandhi’s reaction to mutual butchery in the years 1946 and 1947 was, without doubt, one of anguish. But he never tried to hide the religious identity of the perpetrators. This is what he said in Noakhali in November 1946:

I have heard nothing but condemnation of these acts from Shaheed Suhrawardy [the Chief Minister of Bengal] downwards since I have come here. Words of condemnation may tickle your ears, but they are no consolation to the unfortunate women whose houses have been laid desolate or who have been abducted, forcibly converted, and forcibly married. What a shame for Hindus, what a disgrace for Islam!

This is what he said at his prayer meeting on September 12, 1947:

Let us know our own dharma. In the light of our dharma, I would tell the people that our greatest duty is to see that the Hindus do not act in frenzy, nor the Sikhs indulge in acts of madness… I appeal to the Muslims that they should open-heartedly declare that they belong to India and are loyal to the Union. If they are true to God and wish to live in the Indian Union, they just cannot be enemies of the Hindus. And I want the Muslims here to tell the Muslims in Pakistan who have become the enemies of the Hindus, not to go mad: ‘If you are going to indulge in such madness, we cannot co-operate with you. We will remain faithful to the Union, and salute the tricolour.’

Will these faux guardians accuse Gandhi of suspecting the loyalty of Indian Muslims?

There were instances in the 1920s when Muslims sought out Hindus and butchered them. The Moplah Rebellion of 1921 in Malabar, Kerala, began as an anti-British and anti-landlord uprising by Mappila (Moplah) Muslims but escalated into communal violence targeting Hindus, resulting in significant loss of life and property. Estimates vary, but official figures suggest around 2,339 rebels and sympathizers were killed, with unofficial claims of up to 10,000 deaths, alongside hundreds of Hindus killed, forcibly converted, or displaced. Mahatma Gandhi’s response to the Moplah violence was complex, reflecting his commitment to Hindu-Muslim unity, his support for the Khilafat movement, and his non-violent principles. He appealed to the Hindus to forgive the Mappilas for what they did in ‘ignorance’.

But Gandhi’s reaction to the Kohat massacre of Hindus and Sikhs in September 1924 was different. In fact, Gandhi said this even before the Kohat massacre:

Though the majority of the Mussalmans of India and the Hindus belong to the same stock, the religious environment has made them different… Though, in my opinion, non-violence has a predominant place in the Koran, the thirteen hundred years of imperialistic expansion has made the Mussalmans fighters as a body. They are therefore aggressive. Bullying is the natural excrescence of an aggressive spirit. The Hindu has an age-old civilisation. He is essentially non-violent. (Young India, June 19, 1924)

On the Kohat butchery, he was forthright in condemning the Muslims:

On the 10th, the Muslim fury knew no bounds. Destruction of life and property, in which the Constabulary freely partook, which was witnessed by the officials and which they could have prevented, was general. (Young India, September 25, 1924) Some of the Khilafat volunteers, who were expected to protect the Hindus, neglected their duty, and not only joined in the loot but also took part in the previous incitement. (Young India, September 25, 1924)

On September 18, 1924, Gandhi started a 21-day fast at Mohammad Ali’s residence. This is what he said:

The recent events in Kohat have overwhelmed me with grief… Hindu-Muslim unity has received a rude shock. I have no desire to live if I cannot see Hindus and Mussalmans living as brothers. I undertake this fast as a penance for my failure and as a prayer to God to purify the hearts of both communities.

This is what he said on February 26, 1925, in a letter written to Motilal Nehru:

I have discovered a wide gulf between Shaukat Ali and myself… He believes the riots were provoked by a Hindu poem derogatory to Islam, while I am convinced the conversions of Hindus and the general atmosphere of intolerance were the chief causes. It was as if I found a snake under my quilt.

How would Gandhi have reacted to the butchery of Pahalgam? He would have visited the place. He would have tried to heal the wounds. He would have undertaken a fast to emphasize Hindu-Muslim unity. But he would not have shown cowardice in hiding the fact that those who were butchered were overwhelmingly Hindus and that they were butchered solely because of their Hindu identity. Gandhi was never a coward.

                                                                                                                                                                          Ar

If Gandhi had not been around…

Let us assume that God did not choose to send Gandhi to India and sour the Hindutva dream. Let us assume that a strong Hindu leader took charge and rekindled the dormant spirit of the Kshatriyas.

What would have happened?

Democracy was not an option, because, as per the immutable definition of the Hindutva guys, Muslims were too uncivilized and barbaric to adopt a pristine idea like democracy. The Hindutva leaders of that era, too, were not too fond of democracy, but that is a different point. The Muslims would not chosen to live under an overtly dominant Hindu government. Consequently, there would, in all probability, have been a civil war, mostly fought in Punjab, UP, Bihar, Bengal, Central Provinces, NWFP, Sind, and in parts of Bombay and Assam.

The Muslims in India then comprised 25% of the population, and the civil war would have been horrendously murderous.

India then had 11 provinces. They were Bengal, Bombay, Madras, United Provinces, Punjab, Bihar, Assam, Central Provinces and Berar, Orissa, NWFP, and Sind.

Let us assume that the Hindutva leadership had managed to either evict or subdue the Muslims where they were minorities. The Muslim-majority provinces would, in any case, not have been subdued. Punjab, Bengal, NWFP, and Sind would have either chosen to remain separate, or a partition of Bengal and Punjab would have happened, as it really did in 1947.

Let us not forget the princely states.

The major princely states in India then were Hyderabad, Mysore, Jammu and Kashmir, Gwalior, Indore, Travancore, Bhopal, Jaipur, Jodhpur, Baroda, Patiala, and Udaipur. None of these states would have joined the rump India, as it would not have given them any advantage. In fact, Travancore, Baroda, and Mysore were very efficiently run, and they would not have liked to join the mess. Hyderabad would certainly have remained separate. So would have Kashmir. Dravida Nadu would not have emerged, but a separate Tamil Nadu would have materialized.

There would not have been any Akhand Bharat. There would certainly have been a dozen or more Hindu and Muslim states constantly warring with each other.

Let me say this loudly and clearly.

The cementing forces of 20th-century British India were the Indian National Congress and Mahatma Gandhi. The Congress appealed to a broad spectrum of the Indian upper and middle classes, while Gandhi brought the Congress’s message to the masses. He constantly spoke to them about not only Hindu-Muslim unity but also unity among Hindus. He was unique in that he urged the Hindu upper castes to embrace basic human values—a stance that was, of course, anathema to some Hindus.

The Hindutva proponents certainly didn’t deserve him, but India most certainly did.

Did Gandhi blunt the Revolutionary movements in India?

Hindutva fanatics like Mr. Sai Deepak never tire of repeating that Gandhi blunted the ‘Kshatriya’ spirit of the Hindus. His logic seems to be that if Gandhi had not been around, India would have won its independence through revolution. He also regrets the fact that India – that is, the Hindus – did not spill enough blood.

What does history say?

In the 19th century, the biggest uprising against the British took place in 1857. Mr. Sai Deepak dismisses it as a failed attempt to restore Muslim rule. But who fought side by side with the British to defeat Bahadur Shah and the sepoys? The Rajputs! Notably, prominent Rajput states like Jaipur, Udaipur, Jodhpur, and Bikaner provided assistance to the British in the form of troops, supplies, and logistical support during the war. The Maratha states like the Scindias of Gwalior and the Holkars of Indore also largely remained loyal to the British, as they had been beneficiaries of British support and preferred to maintain their privileges.

I am not even talking about the Sikhs, who had fought a fierce war against the British just eight years earlier, but still chose to side with them in 1857.

What were the other revolutionary movements against the British in the 19th century?
The Southern Rebellion in the early years of the century, the Santhal Rebellion, the Kuka Rebellion, Uyyalawada Narasimha Reddy’s rebellion, and the Bhumiji Revolt were all minor affairs that didn’t even scratch the surface of imperialism.

In the 20th century, the Jugantar and Anushilan Samiti engaged in bombings, assassinations, and armed robberies, particularly after the 1905 partition of Bengal. In the south, Vanchinathan assassinated Ashe. Then there was the Ghaddar Movement.

All these activities took place before Gandhi’s emergence as a central figure. The revolutionary activities that occurred after Gandhi took the lead were spearheaded by the Hindustan Socialist Republican Association, led by Bhagat Singh, and the Chittagong Armoury Raid by Surya Sen. Neither of these had any connection to Hindutva politics, and both had a strong communist overtone.

This leaves the Indian National Army.

Hindutva fanatics conveniently forget that Subhas Chandra Bose was the first to call Gandhi the Father of the Nation, and his “Delhi Chalo” call was dedicated to him. Bose most certainly did not want to establish a Hindu Raj. Forty percent of his army comprised Muslims.

Now, how many soldiers fought in the Indian National Army in the Imphal and Kohima campaigns led by the Japanese imperial forces? Around 20,000. On the other hand, the Indian Army during the Second World War had 2.5 million soldiers. About 1.5 million of them were Hindus, a majority belonging to the so-called ‘Kshatriya’ (martial) races of the Hindus. More than 85000 soldiers shed blood for the British rather than freedom. At least 40000 of them must be Kshatriyas. Add to this about 75000 soldiers died in the First World War, the picture is complete.

This is the story of the revolutionary activities of India. It is pure canard to claim that Gandhi blunted them. In fact, the ‘Kshatriya’ classes blunted the revolution by joining the British.

Here’s a delicious irony.

Two Tamil Brahmins were closely associated with Savarkar during his India House days in London. One was V.V.S. Iyer. The other was an Iyengar, T.S.S. Rajan. Both became ardent Gandhians when Gandhi offered an alternative model! I am sure Sai Deepak has heard their names.

If one really wants to understand how a revolutionary movement evolves, one has to read the modern history of China.

When the Communists were massacred in Shanghai by Chiang Kai-shek’s forces in 1927, the Chinese Communist Party had around 60,000 members. More than 10,000 were killed. Mao Zedong abandoned the urban centers and retreated to rural strongholds. Initially, he had fewer than 1,000 followers. After years of solid work and the establishment of the Jiangxi Soviet, his Red Army grew to about 100,000 soldiers.

It was decimated by Chiang’s extermination campaigns, and at the end of the Long March, Mao had only around 10,000 followers left. In 1937, his Eighth Route Army was formed to counter Japanese aggression. It had about 30,000 troops. By 1945, when the Japanese were defeated, it had become a hardened force of 600,000 soldiers. This was the army that defeated the Kuomintang forces during the Chinese Civil War.

To cut a long story short, armed revolution succeeded in China because its people wanted it. A Gandhian revolution happened in India because Indians wanted it. The ‘Kshatriyas’ were largely with the British. And yes, the forefathers of the Hindutva fanatics were with them too.

அரசியல் குழியில் அகழ்வாராய்ச்சி

காலச்சுவடு மார்ச் 2025ல் வெளிவந்த கட்டுரை:

அகழ்வாய்வும் அரசியலும்

அகழ்வாய்வு என்றும் அறிவியலோடு நெருக்கமாக இருக்க வேண்டும். அரசியலில் இருந்து எத்தனை தொலைவில் இருக்க முடியுமோ அத்தனை தொலைவில் இருக்க வேண்டும். ஆனால் இந்தியாவிலும் தமிழ் நாட்டிலும் அகழ்வாய்வும் தொல்லியல் துறைகளும் அறிவியலை விட்டு வெகு தூரம் சென்று விட்டன என அண்மைக்கால நிகழ்வுகள் சில நினைக்க வைக்கின்றன. அவை அரசியலை இறுக்கமாக அணைத்துச் செயல்படுகின்றன. முன்முடிவுகளோடு அகழ்வாய்வுகள் அணுகப்படுகின்றன. முழுமையான நோக்கு இல்லாமல் தேவையானவற்றை மட்டும் உருவி எடுத்து, அவற்றை வைத்துக் கொண்டு தங்களுக்குத் தோதான தரவுகளை முன் வைத்து அவற்றின் மூலம் முன்முடிவுகளை நிறுவும் வேலைகள்தான் இங்கு நடக்கின்றன.

தமிழ் நாடு அரசின் தொல்லியல் துறை இந்த ஆண்டு “இரும்பின் தொன்மை – தமிழ் நாட்டில் அண்மைக்கால கதிரியக்கக் கணக்கீடுகள்” என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை வெளியிட்டிருக்கிறது. அகழ்வாய்வு ஆராய்ச்சிப் பதிவுகள் அடங்கிய புத்தகம் அரசியல் வெளியீடு போல அமைச்சர்களின் ஆசி பெற்று வருவது இந்தியாவில் மட்டும் நடைபெறும் அதிசயம். சில அகழ்வாய்வாளர்களும் புத்தகத்திற்கு பட்டும் படாமலும் வாழ்த்துச் சொல்லியிருக்கிறார்கள்.

ஆரியர்கள் வரவு என்பதே பொய், அவர்கள் இந்தியாவிலேயே இருந்தவர்கள் என்ற முன்முடிவை நிறுவ வட இந்தியாவில் நடத்தப்படும் விந்தை நிகழ்வுகளுக்கு ஈடாக தமிழகத்திலும் நடைபெறுகிறது. இங்கு தமிழன் உலக நாகரிகத்தின், இந்திய நாகரிகத்தின் முன்னோடிகளில் முதல்வன் என்ற முன்முடிவை நிறுவ என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அவை அனைத்தும் செய்யப்படுகின்றன.

இரும்புக்காலம் என்றால் என்ன?

இரும்பின் தொன்மை என்ற தலைப்பு சரியானதாகத் தோன்றவில்லை. இரும்பு 150 கோடி ஆண்டுகள் தொன்மையானது. பூமியின் மையத்தில் இருப்பதே சுமார் 85 சதவீதம் இரும்புதான். புத்தகம் பேசுவது இரும்புக் கருவிகளின் தொன்மையைப் பற்றி. துல்லியமாகச் சொல்லப்போனால் மனிதன் இரும்பை மற்றப் பொருட்களிலிருந்து பிரித்தெடுத்த காலத்தின் தொன்மையைப் பற்றி. அதை முதலில் செய்தது தமிழன்தான் என்று நிறுவ வாய்ப்பு இருக்கிறது என்பதைச் சொல்லும் புத்தகம் இது. ஆனால் அப்படி வாய்ப்பு இருக்கிறது என்று சொல்ல புத்தகம் கொடுக்கும் தரவுகள் சரியானவையா என்பதைப் பார்க்க வேண்டும்.

அவற்றைப் பற்றிப் பேசுவதற்கு முன்னால், நம் முன்னோர்கள் வாழ்ந்த காலம் எவ்வாறு பிரிக்கப்பட்டிருக்கிறது என்பதைப் பற்றிய தெளிவு வேண்டும். அது முக்கியமாக மூன்று காலங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. முதலாவது கற்காலம், இரண்டாவது வெண்கலக்காலம். மூன்றாவது இரும்புக் காலம். இவற்றிற்குள் உட்பிரிவுகள் இருக்கின்றன. உதாரணமாக கற்காலம் பழைய கற்காலம், இடைக்கற்காலம், புதிய கற்காலம் என்று பிரிக்கப்பட்டிருக்கிறது.  (Paleolithic, Mesolithic, Neolithic). இதே போல கற்காலத்திற்கும் வெண்கலக் காலத்திற்கும் இடையே இருந்த காலம் செம்பு (chalcolithic) காலம் என்று அழைக்கப்படுகின்றது.

இப்பிரிவுகளுக்கான காரணம் எளிமையானது. கற்காலத்தில் மனிதன் கல்லைக் கருவியாகப் பயன்படுத்தத் துவங்கினான். அக்கருவிகளில் முன்னேற்றம் ஏற்பட ஏற்பட கருவிகளின் வடிவங்கள் மாறத் துவங்கின. அவற்றின் திறன்கள் வலுப்படத் துவங்கின. நெருப்பை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தத் துவங்கிய மனிதன் அதை வைத்து மண்ணில் கிடைக்கும் உலோகங்களை உருக்கி அவற்றைப் பிரித்தெடுக்கக் கற்றுக் கொண்டான்.  செம்பை உருக்குவதற்குத் தேவையான வெப்பம் 1100 C. முதலில் செம்பை உருக்கிய அவன், அதையும் தகரத்தையும் (உருக்கத் தேவையான வெப்பம் 232 C) சேர்த்து வெண்கலத்தை உருவாக்கக் கற்றுக் கொண்டான். இரும்புத் தாது கணிசமாகக் கிடைத்தாலும் அதை உருக்க அதிக வெப்பம் (1280 C) தேவையாக இருந்தது. அதற்கான தொழில் நுட்பம் அன்றைய மனிதனிடம் இல்லை.

 இப்பிரிவுகள் ஒன்றன் பின் ஒன்றாக உலகம் முழுவதும் ஒரே சமயத்தில் வந்தன என்று எடுத்துக் கொள்ளக் கூடாது. இது நம் வசதிக்காக, நாம் வரலாற்றைப் புரிந்து கொள்வதற்காக, அமைக்கப்பட்ட பிரிவு. அவ்வளவுதான்.  உதாரணமாக வெண்கலக் காலம் என்ற ஒன்று தமிழகத்தில் இருந்ததே இல்லை. கற்காலத்திலிருந்து நாம் இரும்புக்காலத்திற்கு வந்து விட்டோம்.

இந்தப் பின்புலத்தில் நாம் இரும்புக் காலத்தைப் பார்ப்போம்.

இரும்புக்காலம் என்றால் என்ன? இரும்பை வைத்து மனிதன் ஆயுதங்களையும், விவசாயத்திற்குத் தேவையான கருவிகளையும் பரவலாக பயன்படுத்தத் துவங்கிய காலம். இது வரலாற்றிற்கு முந்தைய காலம். அதாவது மனிதன் எழுத்தறிவு அதிகம் பெற்றிராத காலம். வரலாற்றுப் பதிவுகள் இல்லாத காலம். விதி விலக்குகளும் இருக்கின்றன.. உதாரணமாக எகிப்து நாட்டில் இரும்பு வருவதற்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலேயே எழுத்து முறை இருந்தது. வரலாறு பதியப்பட்டு வந்தது.

இந்தியா ஒரு விதி விலக்காக இருக்கலாம். சிந்துச் சமவெளி நாகரிகத்தில் கிடைத்திருக்கும் வரிவடிவங்கள் எழுத்துகள்தாம் என்பது நிறுவப்பட்டால்,  அதுவும் வரலாற்றுக் காலத்திற்குள் வரலாம். வரலாற்றுக் காலம் என்பதும்  இடத்திற்கு இடம் மாறுபட்டிருந்தது என்பதை விளக்கத் தேவையில்லை.

 ஒரு இடத்தில் இரும்புக்காலம் பிறந்தது என்று சொல்ல வேண்டுமானால் இரும்பைப் பரவலாக அங்கிருந்த மனிதன் பயன்படுத்தத் துவங்கிய காலமாக அது இருக்க வேண்டும்.  இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டுமானால் ஆயுதங்களின் துணையோடு அண்டையில் இருக்கும் பகுதிகள் மீது படையெடுக்கத் துவங்கிய காலத்தையும், விவசாயத்தின் மூலம் உணவு உற்பத்தித் திறனைப் பெருக்கி மேலும் உபரி வருமானத்தை உண்டாக்கத் துவங்கிய காலத்தையு்ம், அதனால் மக்கள் தொகை பெருகிய காலத்தையுமே இரும்புக் காலம் என்று அழைக்க முடியும். முக்கியமாக விவசாயத்திற்குப் பயன்படுத்தப்பட்ட இரும்புக்கருவிகள் வெண்கலக் கருவிகளை விட அதிகம் திறனுடையவையாக இருந்தன. அதிகம் தாக்குப் பிடித்தன. மனிதகுலத்தின் தொழில் நுட்பத் திறன் வெகுவாக அதிகரித்தது.

இரும்புக்காலத்திற்கு முன் இரும்பு

இரும்புக்காலம் வந்தபிறகுதான் மனிதன் இரும்பை பயன்படுத்தத் துவங்கினான் என்று ஆய்வுகள் சொல்லவில்லை. மாறாக இரும்புக்காலத்திற்கு முன்னாலேயே மனிதன் இரும்பைப் பயன்படுத்திக்   கொண்டிருந்தான் என்று சொல்கின்றன. ஆப்பிரிக்காவில் இரும்பு தயாரிப்பது இன்றைக்கு 5600 ஆண்டுகளுக்கு முன் துவங்கி விட்டது என்று புகழ் பெற்ற Science  பத்திரிகையில் வெளிவந்த கட்டுரை சொல்கிறது. (இக்கட்டுரையைப் பற்றி பின்னால் விவாதிக்க இருக்கிறேன்.) எனவே இரும்பு ஒரு இடத்தில் பயன்படுத்தப்பட்டது என்பதை மட்டும் வைத்துக் கொண்டு அது இரும்புக்காலத்தின் துவக்கம் என்று சொல்லிவிட முடியாது. அதனால் விவசாயம் வலுபெற்றதா? மற்ற இடங்களுக்கு இரும்பு தயாரிக்கும் முறை பரவியதா? மக்கள் தொகை அதிகரித்ததா போன்ற பல விவரங்கள் தெரிந்தால்தான் அவ்வாறு நாம் சொல்ல முடியும்.

இரும்பின் காலம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

சிவகளையிலும் மற்றைய இடங்களிலும் கிடைத்த இரும்பின் காலம் அதே குழியில் கிடைத்த கரித்துண்டின் காலத்தை வைத்துக் கணக்கிடப்பட்டிருக்கிறது. அதாவது இரும்பும் அதுவும் ஒரே இடத்தில் கிடைத்ததால் அவை இரண்டும் ஒரே காலத்தியது என்று ஊகம் செய்யலாம் என்று அகழ்வாய்வாளர்கள் கருதுகிறார்கள். இவ்வாறு செய்ய முடியுமா, அறிவியல்பூர்வமாக அத்தகைய கணிப்பு ஒப்புக்கொள்ள முடியுமா போன்ற கேள்விகளுக்குப் பதில்களைத் தேடுவதற்கு முன்னால் அகழ்வாய்வு குறித்த சில விவரங்களையும் விதிகளையும்  புரிந்து கொள்வது அவசியம்.

மண்ணடுக்கு – Stratigraphy

ஓர் இடம் மண்மூடிப் போகும் போது, மண்ணுக்கு அடியில் இருக்கும் பொருள்கள் எந்த இடத்தில் புதையும் போது இருந்தனவோ அதே இடத்தில் அப்ப்படியே இருக்கும் வாய்ப்புகள் இருக்கின்றன – நில அதிர்வு, வெள்ளம் , மனிதர்களே அங்கு தோண்டிப்பார்த்து திரும்ப மூடுவது போன்ற நிகழ்வுகள் ஏற்படாத வரை.  ஒரே இடத்தில் மனிதன் பல தலைமுறைகள் வாழ்ந்திருக்கலாம். அது நடக்கும்போது அவனது வாழ்விடம் முந்தையர் வாழ்ந்த இடத்தில் மேல் இருக்கும் வாய்ப்புகளும் இருக்கின்றன. வாழும் இடத்தில் மண்ணில் மாற்ற ஏற்பட்டாலும் அதன் அடியில் புதைந்து இருப்பவற்றில் மாற்றங்கள் ஏற்படும் வாய்ப்புகள் குறைவு. இது தொடர்ந்து நடக்கும் போது பல அடுக்குகள் ஏற்படுகின்றன. இதை அகழ்வாய்வாளர்கள் மண்ணடுக்குகள் (Stratigraphy) என்று அழைக்கிறார்கள்

மண்ணடுக்கு விதிகள்

அதாவது ஒரு இடத்தில் காலப்போக்கில் மண், மணல், பாறை, பாகுபட்ட பொருட்கள் ஆகியவை அடுக்குகளாக தேங்குகின்றன. ஒவ்வொரு அடுக்கும் (stratum) ஒரு குறிப்பிட்ட காலத்தினை குறிக்கும். பழைய அடுக்குகள் கீழே இருக்கும்.  புதியவை மேலே இருக்கும். எனவே மண்ணடுக்குகளில் தொல்பொருடகள் கீழுள்ள மண்ணடுக்குகளில் காணப்படும் எனில் அவை காலத்தால் முற்பட்டவை. நடு அடுக்குகளில் கிடைக்கும் தொல்பொருட்கள்  கீழடுக்களில் கிடைக்கும் பொருட்களுக்கு காலத்தால் பிறபட்டவை.. மேலுள்ள மண்ணடுக்களில் கிடைப்பவை காலத்தால் கீழுள்ள அடுக்குகளில் கிடைத்தவற்றிற்குப் பிற்பட்டவை. இது Law of Superposition (மேற்கிடை நிலை விதி?) என்று அழைக்கப்படுகிறது. இதைத்தவிர இன்னொரு விதியும் இருக்கிறது: எந்த மண்ணடுக்கின் காலமும்  அதில் கிடைக்கும் மிகவும் பிற்பட்ட காலத்திய தொல்பொருளை விட முன்னதாக இருக்காது.  அதாவது ஒரு மண்ணடுக்கில் 18ம் நூற்றாண்டுப் பொருள் கிடைத்தால் அந்த அடுக்கு 17ம் நூற்றாண்டில் ஏற்பட்டிருக்க முடியாது என்று இந்த விதி சொல்கிறது. இதை இன்னும் தெளிவாகச் சொல்கிறேன். ஒரு இடத்தில் சோழர்கள் கால படிமம் ஒன்றும் பால்பாயிண்ட் பேனா ஒன்றும் கிடைத்தால் அந்த இடத்தின் காலம் சோழர் காலப் படிமத்தியது அல்ல. பால்பாயிண்ட் பேனாவின் காலத்தியது என்பதுதான். இன்னொன்றும் சொல்ல வேண்டும் சோழர் காலப்படிமமும் பால்பாயிண்ட் பேனாவும் ஒரே அடுக்கில் கிடைத்தன் என்பதினால் பால் பாயிண்ட் பேனா சோழர் காலத்திலேயே இருந்தது என்று சொல்ல முடியாது.  இனி இரும்பும் கரித்துண்டும் ஒரே இடத்தில் கிடைத்தால் கரித்துண்டின் காலமும் இரும்பின் காலமும் ஒன்றுதான் என்று சொல்ல முடியுமா என்ற கேள்விக்கு வருவோம். இது கரித்துண்டு எங்கே இருந்தது என்பதைப் பொருத்திருக்கிறது. தோண்டும்போது ஒரு அடுப்பும் கரித்துண்டுகளும் இரும்புப் பாத்திரங்களும் கிடைத்தால் இரும்புப்பாத்திரமும் கரித்துண்டுகளும் ஒரே காலத்தியதாக இருக்கும் என்று ஊகம் செய்யலாம். இது போன்ற இல்லாத பட்சத்தில் கரித்துண்டின் காலத்தை இரும்பின் மீது ஏற்றுவது சரியாக இருக்காது. ஒரு இடத்தில் கரித்துண்டு இருப்பது பல காரணங்கள் இருக்கலாம். அது அங்கே இரும்புப் பொருட்கள் புதைபடும் முன்னால் இருந்திருக்கலாம். வேறு எங்கோ கிடைத்த கரியை/ காட்டுத்தீயால் உருவான கரியை மனிதன் அங்கு கொண்டு வந்திருக்கலாம். இது போன்று பல காரணங்கள் இருக்கலாம். மேலும் ஒரு அடுக்கில் சிதைவுற்றதின் அடையாளங்கள் இருந்தால் (அதாவது புதைந்திருந்த இடத்தை மனிதன் திரும்பத் தோண்டியிருக்கலாம். இடம் நாளடையில் மறுபடியும் புதைந்து போய் இருக்கலாம்) அங்கு கிடைக்கும் பொருட்களின் வயது ஒரே காலத்தியதாக இருக்கும் என்று சொல்ல முடியாது.

இனி புத்தகத்திற்கு வருவோம்

புத்தகம் என்ன சொல்கிறது?

“இரும்பின் தொன்மை” புத்தகம் என்ன சொல்கிறது?

தமிழ் நாட்டில் கண்டுபிடிக்கப்பிட்ட சில இரும்பு ஆலைகளைப் பற்றிப் பேசி விட்டு அவை கி.மு ஐந்தாம் நூற்றாண்டிற்கு முந்தையதாக இருக்கலாம் என்கிறது. இதில் நாம் முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவென்றால் புத்தகம் பேசும் காலத்தைய -அதாவது இன்றைக்கு சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த- எந்த இரும்பு ஆலையும் மாங்காடு, கீழ்நமண்டி, மயிலாடும் பாறை, ஆதிச்சநல்லூர், சிவகளை போன்ற இடங்களில் கண்டுபிடிக்கவில்லை என்பதுதான். தமிழ் நாட்டில் எந்த இடத்திலும் அக்காலகட்டத்தின் இரும்பு ஆலைகள் கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரியவில்லை.(ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே 4000 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த ஆலை கண்டுபிடிக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் இது உள்ளூர் மக்கள் தோண்டி அவர்களாகவே அறிவித்தது. எந்தச் சான்றுகளையும் கொடுக்கவில்லை.)

மாங்காடு முதலிய இடங்களில் எல்லாம் இரும்புப் பொருட்கள் ஈமக்குழிகளில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. இக்குழிகளில் கிடைத்த கரித்துண்டுகளின் காலத்தைக் கணக்கிட்டு அதன் காலமும் இரும்பின் காலமும் ஒன்றுதான் என்று சொல்லப்படுகிறது. ஈமக்குழிகள் என்பவை மனிதர்கள் மீண்டும் மீண்டும் வரும் இடம். எனவே அவற்றில் இருக்கும் எல்லாப் பொருட்களும் சமகாலத்தியவையாக இருக்கலாம் என்று நிச்சயமாகச் சொல்ல முடியாது.

மாங்காடு, கீழ்நமண்டி மற்றும் மயிலாடும் பாறை

மாங்காட்டில் சிதைவுற்ற கல் பதுக்கையிலிருந்து கிடைத்த வாளின் காலம் கி.மு. 1510 என்று சொல்கிறது. இது சிதைவுற்ற பதுக்கையிலிருந்து எடுக்கப்பட்டது என்று புத்தகமே சொல்வதால்  இதை எவ்வாறு கணக்கில் எடுத்துக் கொள்ள முடியும் என்று தெரியவில்லை. இங்கு முக்கியமாக இன்னொன்றும் சொல்ல வேண்டும். மாங்காட்டில் எடுத்துக் கொண்ட மாதிரி இரும்பு. கரித்துண்டு அல்ல.  இதே போன்று சேலம் மாவட்டத்தில் தெலுங்கனூர் என்ற இடத்தில் கிடைத்த வாளின் காலம் கணிக்கப்பட்டது. இங்கு பிடிக்கு ஒரு காலமும் (1425-1233 கி.மு.) வாளுக்கு ஒரு காலமும் (2900 -2627 கி.மு.)கிடைத்தது இரண்டிற்கு இடையே வித்தியாசம் சுமார் 1500 வருடங்கள்!

 கீழ்நமண்டியில் கிடைத்த இரும்புப் பொருட்களில் காலம் கி.மு 1692 என்று புத்தகம் சொல்கிறது. இங்கு மாதிரியாகக் கொடுக்கப்பட்டது கரித்துண்டு. அது ஈமப்பேழைக்கு வெளியே வைக்கப்பட்டிருந்த கல்வட்டத்திலிருந்து எடுக்கப்பட்டது. அது எங்கிருந்து கொண்டு வரப்பட்டது என்பதைப் பற்றிய தகவல் இல்லாமல் அதன் வயதை இரும்பிற்கு ஏற்றுவது பொருத்தமாக இருக்கும் என்று தோன்றவில்லை.

மயிலாடும் பாறை அகழ்வாய்வுகளைப் பற்றி தமிழ் நாடு அரசு இன்னொரு புத்தகத்தை வெளியிட்டிருக்கிறது: அது சொல்வது இது:¨ வாழ்விடம் மற்றும் ஈமத்தளத்தில் முதன்முதலில் 2003-ஆம் ஆண்டு  தமிழ்ப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர்  கா.ராஜன் அவர்களால் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவ்அகழாய்வில்  வெளிக்கொணரப்பட்டநம்பிக்கை  அளிக்கக்கூடிய தரவுகளின் அடிப்படையில், முறையான அகழாய்வுப் பணிகள் 2021-ஆம் ஆண்டு  தொடங்கப்பட்டது.  அகழாய்வுத் தளத்தில் நான்காம் பகுதியில் இடப்பட்ட அகழாய்வுக்குழிகளிலிருந்து  பெறப்பட்ட மாதிரிகளின் வழி முக்கியமான இரண்டு AMS காலக்கணிப்புகள்  பெறப்பட்டுள்ளன.  இவ்விரண்டு மாதிரிகளும் முறையே 104 செ.மீ  மற்றும்  130 செ.மீ  ஆழத்தில் இருந்து பெறப்பட்டுள்ளன.  இவற்றின் சராசரி  மைய அளவீட்டுக்காலம் (Mid-range calibrated dates) முறையே கி.மு 1615 மற்றும் கி.மு 2172 ஆகும்.

புத்தகத்தில் இரும்புப் பொருட்கள் எங்கே இருந்தன என்ற தகவல் கொடுக்கப்பட்டதாக எனக்குத் தெரியவில்லை. மேலும் வாழ்விடப் பகுதிக்கும் ஈமப்பகுதிக்கும் இடையே இருந்த தொடர்பு பற்றியும் வாழ்விடப் பொருட்களின் காலம் பற்றியும் ;புத்தகம் ஏதும் தெளிவாகக் குறிப்பிடவில்லை.

ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளை

ஆதிச்சநல்லூரில் அகழ்வாய்வுகள் சென்ற நூற்றாண்டின் முற்பகுதியில் நிகழ்ந்தன. பின்னர் இந்த நூற்றாண்டில் நிகழ்ந்தன. இங்கு இந்தியத் தொல்லியல் துறையும் தமிழ் நாடு தொல்லியியல் துறையும் iஅகழ்வாய்வுகள் நடத்தின. இதில் இந்தியத் தொல்லியல் துறை நடத்திய ஆய்வில் நெல் தானிய மாதிரிகள் காலக்கணக்கீட்டிற்கு அனுப்பப்பட்டன. கிடைத்த காலம் கி.மு.650 -840. இதே ஆதிச்ச நல்லூரில் தமிழ் நாடு தொல்லியல் துறை நடத்திய அகழ்வாய்வில் வாழ்விடப் பகுதியில் மேற்கொண்ட காலக்கணக்கீடில் கரித்துண்டின் காலம் கி.மு 2613 என்று அறியப்படுகிறது. இங்கும் இரும்பிற்கும் கரித்துண்டிற்கும் இடையே இருக்கும் தொடர்பு தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை.

இனி சிவகளைக்கு வருவோம். சிவகளைப் பறம்பில் மொத்தம் 17 அகழ்வாய்வுக் குழிகள் (10×10 மீட்டர்) தோண்டப்பட்டன. அகழ்வாய்வுக் குழியின் இவற்றில் முக்கியமான குழிகள் A 2 பகுதி II மற்றும் III. A 2 பகுதியில் மூன்றாவது தாழி இறுக்கமாக இருந்தது. அதில் இருந்த நெல்மணியும் இரும்பாலான பொருட்களும் சேகரிக்கப்பட்டன. சேகரிக்கப்பட்ட நெல்மணிகளின் காலம் கி.மு 1155.  

மற்ற தாழிகளில் மண் ஊடுருவி இருந்தன. இவற்றின் உள்ளிலும் வெளியிலும் இரும்புப் பொருட்கள் கிடைத்தன. இக்குழிகளில் கிடைத்த கரி மாதிரிகளின் காலம் கி,மு. 2953 முதல் 3345 வரை.

இனி புத்தகம் சொல்பவற்றை ஆராய்வோம்.

  1. அரிசி மணிகளின் காலத்தையும் கரித்துண்டுகளின் காலத்தையும் இரும்புப் பொருட்களுக்கு மாற்றி இருக்கிறது என்பதைத் தவிர ,கிடைத்த  பொருட்களின் கால வேறுபாடு 2000 ஆண்டுகளுக்கும் மேல். அதுவும் ஒரே பத்திற்கு பத்து மீட்டர் பகுதியில் கிடைத்த பொருட்களின் காலவேறுபாடு.  புத்தகம் என்ன சொல்ல வருகிறது? இரண்டாயிரம் வருடங்களாக அதிகமாக எந்த மாற்றமும் இல்லாமல் வளர்ச்சியும் இல்லாமல் ஒரே மாதிரியான வாழ்க்கையை மக்கள் வாழ்ந்து கொண்டிருந்தார்களா? ஒரு அகழ்வாய்வாளர் என்னிடம் பேசிக் கொண்டிருந்த போது 2000 ஆண்டுகள் கோலி விளையாடிக் கொண்டிருந்தார்களா என்று கேட்டார். இந்த இடங்களில் விவசாயம் எவ்வாறு நடந்தது, அவற்றில் பயன்படுத்தப்பட்ட இரும்புப் பொருட்கள் என்ன என்பது பற்றிய எந்தத் தகவலையும் புத்தகம் தெரிவிக்கவில்லை. மேலும் இரும்புப் பொருட்கள் இரண்டாயிரம் ஆண்டுகளில் மாற்றமே இல்லாமல்  இருந்தனவா? ஒரே மாதிரியான இரும்புப் பொருட்களை மக்கள் பயன்படுத்திக் கொண்டிருந்தார்களா? இவற்றைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை.
  2. இனி காலத்திற்கு வருவோம். இதை நான் கீழடி பற்றிய விவாதத்தில் சொன்னேன். இக்கட்டுரையின் முற்பகுதியின் சொன்னேன். இ்ங்கும் சொல்கிறேன்.. இவர்கள் கொடுத்திருக்கும் காலம் மண்ணடுக்குகளில் கிடைத்த கரித்துண்டுகளின் காலம். இரும்பின் காலம் அல்ல. சிவகளையில் வேறு சிக்கல்களும் இருக்கின்றன. மூடி இறுக்கமாக இருக்கும் தாழியில் கிடைத்த இரும்புப் பொருட்களின் காலமும் வெளியில் கிடைத்த இரும்புப் பொருட்களின் காலமும் இவர்கள் கூற்றுப்படியே வெவ்வேறாக இருக்கின்றன. இரண்டாயிரம் ஆண்டு வித்தியாசம். புத்தகம் இம்மண்ணடுக்குகளில் கிடைத்த வேறு பொருட்களைப் பற்றியோ அவற்றின் காலங்களைப் பற்றியோ குறிப்பிடவில்லை.
  3. கொடுமணலைத் தவிர வேறு எந்த இடங்களிலும் இரும்பை உருக்கும் உலைகள் கிடைக்கவில்லை. இரும்பு இருப்பதை வைத்து அங்கே இரும்பு உருக்கும் உலைகள் இருந்திருக்கலாம் என்ற ஊகம்தான் செய்ய முடிகிறது. அதே இடத்தில் வெண்கலப் பொருட்களும் கிடைத்திருக்கின்றன. அவை இறக்குமதி செய்யப்பட்டிருக்கலாம் என்று புத்தகம் சொல்கிறது. வெண்கலப் பொருட்களை இறக்குமதி செய்யக்கூடிய திறன் படைத்தவர்கள்  இரும்பு தயாரிக்கும் உத்தியை மற்றவர்களுக்குத் தந்திருக்க மாட்டார்களா? அப்படித் தந்திருந்தால் இரும்பு குறைந்தது தென்னிந்தியா முழுவதும் பரவலாக இருந்திருக்காதா? இரும்பின் பயன்பாடு இவர்கள் கூறும் காலக்கட்டத்தில் பரவலாக இருந்ததாக எந்தச் சான்றும் இல்லை.
  4. இரும்பு தயாரிப்பது எளிதல்ல.  அதற்குக் கரி (charcoal) தேவை. கரி தயாரிப்பதற்கு மக்கள் தேவை. இவ்வாறு மக்களைத் திரட்டி வேலை செய்ய வைக்க அமைப்பு தேவை.  பெருமளவு மக்களின் வாழ்வு முறையை மாற்றும் அளவிற்கு இரும்பு தயாரிக்க பேரமைப்பு தேவை. அது போன்ற பேரமைப்பு இவர்கள் சொல்லும் காலத்தில் இருந்திருப்பதற்கான எந்தத் தடையங்களும் நமக்குக் கிடைக்கவில்லை.
  5. தமிழ் நாட்டில்  நெல் சாகுபடி பரவலாக 3000 ஆண்டுகளுக்கு உள்ளாகத்தான் துவங்கியது. அதே போன்று நகரங்களோ, பெரிய கட்டிடங்களோ, இயற்கையை வெகுவாக மனிதன் மாற்றியிருக்கும் தடையங்களோ நம்மிடம் ஏதும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக இல்லை.
  • புத்தகம் இன்னொரு முக்கியமான தகவலைக் கொடுக்கிறது. அதை ஆசிரியர்கள் குறிப்பிடாமல் விட்டது வியப்பை அளிக்கிறது.  நெல்மணிகளின் காலம் ஆதிச்சநல்லூரிலும் கணக்கிடப்பட்டது. சிவகளையிலும் கணக்கிடப்பட்டது. சிவகளை ஆதிச்சநல்லூரில் இருந்து 15 கிலோமீட்டரில் இருக்கிறது. ஆதிச்ச நல்லூரில் கிடைத்த நெல்மணிகளின் காலங்கள் மூன்று இடங்களில் கணக்கிடப்பட்டன. அவை  கி.மு. 1052, 1257 மற்றும் 1384. சிவகளையில் கிடைத்த நெல்மணிகளின் காலம் கி.மு.1155. நெல்மணிகள் கிட்டத்தட்ட ஒரே கால கட்டத்தில் இருப்பதும் கரித்துண்டுகளின் கால வித்தியாசம் ஆயிரக்கணக்கில் இருப்பதும் எதைக் காட்டுகிறது? கரித்துண்டின் காலத்தை வைத்து எதையும் கணிப்பது சரியாக இருக்காது என்பதைத்தானே? அதுவும் ஒரே இடத்தில் அருகருகே இருக்கும் தாழிகளுக்கு இடையே இவ்வளவு வித்தியாசம் இருக்குமானால் அதை வலுவான சான்றாக ஏற்றுக் கொள்ள முடியுமா?
  • புத்தககம் தரும் மற்றொரு வியப்பான தகவல் ஒரே குழியில் இருக்கும் இரண்டு தாழிகளுக்கு இடையே இருக்கும் கால வித்தியாசம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேல்! அதாவது ஒரே குழியில் இரண்டாயிரம் ஆண்டுகள் புதைப்பது நடந்து கொண்டிருந்தது என்பது நம்பக் கூடியதாகவா இருக்கிறது? அதுவும் அங்கு இருக்கும் தாழிகளுக்கு அதிகச் சேதம் இல்லாமல்?

8. எனக்குத் தெரிந்து ஆதிச்சநல்லூரிலும் சிவகளையிலும் அக்காலத்திய செங்கல் கிடைத்ததாகத் தெரியவில்லை. இரும்பை உருக்கும் தொழில் நுட்பத்தை விட செங்கல் செய்யும் தொழில் நுட்பம் கடினமானது அல்ல. வெட்பமும் இரும்பை உருக்குவதை விட அதிகம் தேவையில்லை. செங்கல் என்ற சொல்லே தமிழில் மிகப் பின்னால் வருகிறது. சங்க இலக்கியத்தில் கூட செங்கல் என்ற சொல் இடம் பெறவில்லை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். ‘இஷ்டிகா’ என்ற வடமொழிச்சொல்லின் தமிழ் வடிவமான இட்டிகை என்ற சொல்லே அகநானூற்றில் பயன்படுத்தப்படுகிறது. சொல்லப்போனால் உலகில் மற்றைய இடங்களில் செங்கல் கி.மு 3500 ஆண்டு காலத்திலேயே பயன்படுத்தப்படத் துவங்கி விட்டது. சிந்துச் சமவெளி நாகரிகத்திலும் செங்கல் பரவலாகப் பயன்படுத்தப்பட்டது.  ஆனால் தென்னிந்தியாவில் செங்கல் கி.மு மூன்றாம் நூற்றாண்டிற்குப் பிறகே பரவலாகக் கிடைக்கத் துவங்குகிறது. எனவே  இரும்பைப் பயன்படுத்தத் தெரிந்தவர்களுக்கு செங்கல் செய்யும் முறை ஏன் தெரியவில்லை என்ற கேள்வி எழுகிறது. அதுவும் இரும்பை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக உலகில் மற்ற இடங்களில் பயன்படுத்துவதற்கு முன்னால் பயன்படுத்திய மக்களுக்கு செங்கல் பற்றிய தொழில் நுட்பம் தெரியவில்லை என்று கூற முடியுமா? அதுவும் வெண்கலப் பொருட்களை இறக்குமதி செய்து கொண்டிருந்த ஆதிச்சநல்லூர் மக்களுக்கு செங்கலைப் பற்றி ஏன் தெரியவில்லை?

ஆப்பிரிக்க உதாரணம்

இந்த ‘கரித்துண்டு’  விவகாரத்தை நான் மட்டும்தான் சொல்கிறேன் என்று நினைக்க வேண்டாம். Science கட்டுரையைக் குறித்து முன்னே குறிப்பிட்டிருந்தேன். அது சொல்பவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்.

Several French and Belgian archaeologists have pointed to evidence from sites in Niger, Rwanda, and Burundi suggesting that Africans invented ironworking independently as early as 3600 B.C.E. Their analyses were strongly criticized by prominent researchers in the United States, who argued that the early radiocarbon dates likely came from wood older than the iron artifacts. In reviewing the debate in a 2005 paper in the journal History in Africa, independent scholar Stanley Alpern suggested that Francophone researchers had fallen under the influence of African nationalism and pride, which blinded them to problems in their data.

அதாவது பிரெஞ்சு மற்றும் பெல்ஜியன் தொல்லியல் வல்லுனர்கள் நைஜர், ருவாண்டா, புருண்டி போன்ற இடங்களில் ஆய்வு செய்து ஆப்பிரிக்கர்கள் கி.மு 3600 காலகட்டத்திலேயே இரும்பைப் பயன்படுத்திக் கொண்டிருந்தார்கள் என்று சொன்ன கூற்று கடுமையான விமரிசனத்திற்கு உள்ளானது.  இவர்கள் காலவரையறை செய்வது என்று சொல்வது மரத்தின் (கரித்துண்டின்) அடிப்படையிலே தவிர இரும்பு பொருட்களின் அடிப்படையில் அல்ல என்ற சர்ச்சை எழுந்தது என்று கட்டுரை சொல்கிறது. மேலும் இது போன்று காலத்தை முன் தள்ளுவது ஆப்பிரிக்க தேசியத்தை முன்னிறுத்தத்தான் என்றும் புள்ளி விவரங்களில் இருக்கும் சிக்கல்களைக் காணும் பார்வை ஆய்வாளர்களுக்கு இல்லை என்றும் அது சொல்கிறது.

கட்டுரை மேலும் சொல்கிறது.

Zangato began excavations at the site after a violent storm struck in 1992, sweeping away part of the capping sediments and exposing a layer of metallic objects, potsherds, and stone tools. Zangato and his team spent nine field seasons at the site, opening more than 800 square meters. They recovered 339 stone artifacts and a host of evidence for ironsmithing: a blacksmith’s forge, consisting of a clay-lined furnace, stone anvil, and part of a ceramic pot that likely held water for cooling or possibly tempering red-hot iron. They also found charcoal storage pits, 1450 pieces of slag, 181 pieces of iron bloom, and 280 small iron lumps and objects, including two needles.

சங்காடொ என்பவர் ஆய்வு செய்து முழு இரும்பு ஆலைகளையே கண்டுபிடித்தார். இரும்பை உருவாக்கியிருப்பதற்கு தேவையான ஆதாரங்களை அளித்தார். நம்மைப் போலவே அவர்களும் கரித்துண்டு மாதிரிகளை (ஏழு மாதிரிகள்) காலக்கணக்கீடு செய்தனர். கி.மு. 1612 முதல் கி.மு.3490 வரை.

மற்றைய ஆய்வாளர்கள் இரும்பு உருக்காலை இருந்திருக்கலாம் என்பதை ஒப்புக்கொள்கிறார்கள். ஆனால் இதையும் சொல்கிறார்கள்.

 “Although it seems that the seven oldest radiocarbon dates form a coherent group, they are all coming from a few square meters in a very disturbed

archaeological site.”…“They are closely bounded by pits and structures well

dated to around 2000 B.P. and later.” This means that later ironworkers could have dug into ground laced with charcoal from an earlier occupation or forest fire, giving dates that are far too old. To push back the dates convincingly, say critics, the team needs to publish more detailed stratigraphic data and charcoal studies. They also need several consistent lines of chronological evidence,

such as thermoluminescence (TL) dates on clay furnaces, accelerator mass spectrometre (AMS) dates on short-lived plant remains, and indirect dates from sequences of ceramic tiles.

மிகச் சிறிய இடத்தில் சிதைவுற்ற பகுதிகளில், கிடைத்தவற்றை வைத்துக் கொண்டு அறுதியான முடிவிற்கு வர முடியாது என்கிறார்கள். கரித்துண்டுகள் முன்னால் இருந்தவர்கள் பயன்படுத்தியதாக இருந்திருக்கலாம் அல்லது காட்டுத்தீயின் எச்சமாக இருந்திருக்கலாம் என்கிறார்கள். இன்னும் ஆதாரங்கள் வேண்டும் என்கிறார்கள்! இன்று வரை உலகளவில் இந்த காலக் கணக்கீட்டை கருத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டதாக எனக்குத் தெரியவில்லை.

முடிவாக,

  1. இரும்புக் காலம் என்பது இரும்பு பரவலாக பயன்படுத்தப் பிறகுதான் துவங்குகிறது. சில இரும்புப் பொருள்கள் ஒரு இடத்தில் கிடைத்தன என்ற தகவலை வைத்துக் கொண்டு இரும்புக்காலமே அங்கிருந்துதான் துவங்குகிறது என்று சொல்வது அறிவியல் கூற்றாக ஆகாது.
  2. கீழடி வியாதி பெருகிப் பரவியிருக்கிறது என்பதை இப்புத்தகம் காட்டுகிறது. கரித்துண்டின் காலத்தை இரும்பின் மீது வலுக்கட்டாயமாக ஏற்றுவது அறிவியலோடு பொருந்தாது.
  3. சிவகளையில் ஒரே இடத்தில் மூடி சரியாக இருக்கும் தாழியில் கிடைத்த கரித்துண்டின் காலத்திற்கும் வெளியில் மண் மூடிக் கிடந்த தாழிகளில் கிடைத்த கரித்துண்டுகளின் காலங்களுக்கும் பெரும் வித்தியாசம் இருக்கிறது. இதை வைத்துக் கொண்டு இரும்பின் காலத்தைக் கணக்கிட்டு அதுதான் துல்லியமானது என்று சொல்வது சரியாகாது.

தமிழன் 5300 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பைப் பயன்படுத்தத் துவங்கி விட்டான் என்று சொல்வதற்கு இன்னும் வலுவான ஆதாரங்கள் வேண்டும்.

பி ஏ கிருஷ்ணன்.

உதவி செய்த புத்தகங்கள்

இரும்பின் தொன்மை – தமிழ் நாடு அரசு தொல்லியல் துறை வெளியீடு, 2025

மயிலாடும் பாறை – தமிழ் நாடு அரசு தொல்லியல் துறை வெளியீடு, 2022

Excavations ar Adichchanallur, Archaeological Survey of India, 2020

SCIENCE, VOLUME 323, 9 January, 209

தமிழகத்தின் இரும்புக் காலம் – அறிவியலா அரசியலா

திராவிட இயக்கத்தினர் இப்போதெல்லாம் context பற்றிப் பேசத் துவங்கி விட்டார்கள். அதாவது பெரியாரைப் பற்றி பேசும்போது context முக்கியம் என்கிறார்கள். நான் முழுவதும் உடன்படுகிறேன். அதை எப்போதும் கருத்தில் கொள்ள வேண்டும் என்கிறேன்.

பெரியாருக்கே context தேவை என்றால் அறிவியலுக்கும் அகழ்வாராய்ச்சிக்கு அது நிச்சயம் தேவை. முக்கியமாக கரித்துண்டின் காலத்தை கண்டுபிடிக்கும் பொருள் மீது ஏற்றுவதற்குத் தேவை. கீழடிக் கரித்துண்டிற்கும் இது பொருந்தும். சிவகளை போன்ற இடங்களில் கிடைத்த கரித்துண்டுகளுக்கும் பொருந்தும்.

கீழடியில் கரித்துண்டு கிடைத்த உயரம் வேறு, ஓடு இருந்த உயரம் வேறு.

சிவகளையில் மண்சரிந்து இருந்த இடத்தில் கிடைத்த கரித்துண்டை வைத்துக் கொண்டு இரும்பின் காலத்தைக் கணக்கிடுவது அறிவியலுக்குப் பொருந்தாது. இரும்பு உலைகள் கிடைத்து, அவற்றின் காலம் கணக்கிடப்பட்டால் ஒழிய், தமிழகத்தில்தான் முதன்முதலில் இரும்பு கண்டுபிடிக்கபட்டது என்ற கூற்று அறிவியலால் ஏற்றுக் கொள்ளப்படாது. அறிவியல் கறாரானது. இது திராவிட அரசிற்கும் அதற்கு குடை பிடிப்பவர்களுக்கும் புரியாமல் இருப்பது வருந்தத் தக்கது.

இரும்பின் தொன்மை – முழுமை பெறாத புத்தகம்

(குறிப்பு: இது அவசரமாக எழுதப்பட்டது. இதை விரிவாக்கி எழுதுவேன். நிச்சயம் ஒரு வரி கூட விடாமல் படியுங்கள்)

இரும்பின் தொன்மை என்ற பெயரே சரியில்லை. இரும்பு 150 கோடி ஆண்டுகள் தொன்மையானது. பூமியின் மையத்தில் இருப்பதே சுமார் 85 சதவீதம் இரும்புதான். புத்தகம் பேசுவது இரும்புக் கருவிகளின் தொன்மையைப் பற்றி. துல்லியமாகச் சொல்லப்போனால் தமிழன் இரும்பை மண்ணிலிருந்து பிரித்தெடுத்த காலத்தின் தொன்மையைப் பற்றி.

இப்புத்தகத்தைப் பற்றிப் பேசுவதற்கு முன்னால், நம் முன்னோர்கள் வாழ்ந்த காலம் எவ்வாறு பிரிக்கப்பட்டிருக்கிறது என்பதைப் பற்றிய தெளிவு வேண்டும். அது முக்கியமாக மூன்று காலங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. முதலாவது கற்காலம், இரண்டாவது வெங்கலக்காலம். மூன்றாவது இரும்புக் காலம். இவற்றிற்குள் உட்பிரிவுகள் இருக்கின்றன. உதாரணமாக கற்காலம் பழைய கற்காலம், இடைக்கற்காலம், புதிய கற்காலம் என்று பிரிக்கப்பட்டிருக்கிறது.  (Paleolithic, Mesolithic, Neolithic. இதே போல கற்காலத்திற்கும் வெண்கலக் காலத்திற்கும் இடையே இருந்த காலம் செம்பு (chalcolithic) காலம் என்று அழைக்கப்படுகின்றது.

இப்படிப் பிரிப்பதற்குக் காரணம் எளிமையானது. கற்காலத்தில் மனிதன் கல்லைக் கருவியாகப் பயன்படுத்தத் துவங்கினான். அக்கருவிகளில் முன்னேற்றம் ஏற்பட ஏற்பட கருவிகளின் வடிவங்கள் மாறத் துவங்கின. அவற்றின் திறன்கள் வலுப்படத் துவங்கின. நெருப்பை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தத் துவங்கிய மனிதன் அதை வைத்து மண்ணில் கிடைக்கும் உலோகங்களை  உருக்கி அவற்றைப் பிரித்தெடுக்கக் கற்றுக் கொண்டான்.  செம்பை உருக்குவதற்குத் தேவையான உஷ்ணம் 1100 C. முதலில் செம்பை உருக்கிய அவன், அதையும் தகரத்தையும் (உருக்கத் தேவையான உஷ்ணம் 232 C)  சேர்த்து வெண்கலத்தை உருவாக்கக் கற்றுக் கொண்டான். இரும்புத் தாது கணிசமாகக் கிடைத்தாலும் அதை உருக்க அதிக உஷ்ணம் (1280 C) தேவையாக இருந்தது. அதற்குத் தேவையான தொழில் நுட்பம் பல நூற்றாண்டுகள் மனிதனிடம் இல்லை.

இங்கே முக்கியமாக ஒரு விஷயத்தை நான்  சொல்ல வேண்டும். இப்பிரிவுகள் ஒன்றன் பின் ஒன்றாக உலகம் முழுவதும் அந்தந்த காலகட்டங்களில் வந்தன என்று எடுத்துக் கொள்ளக் கூடாது. இது நம் வசதிக்காக, நாம் வரலாற்றைப் புரிந்து கொள்வதற்காக, அமைக்கப்பட்ட பிரிவு. அவ்வளவுதான்.  உதாரணமாக வெண்கலக் காலம் என்ற ஒன்று தமிழகத்தில் இருந்ததே இல்லை. கற்காலத்திலிருந்து நாம் இரும்புக்காலத்திற்கு வந்து விட்டோம். நம் இரும்புக் காலமும் சீனத்தின் இரும்புக் காலமும் ஒன்றல்ல.

இந்தப் பின்புலத்தில் நாம் இரும்புக் காலத்தைப் பார்ப்போம்.

இரும்புக்காலம் என்றால் என்ன? இரும்பை வைத்து மனிதன் ஆயுதங்களையும், விவசாயத்திற்குத் தேவையான கருவிகளையும் பரவலாக பயன்படுத்தத் துவங்கிய காலம். (இது வரலாற்றிற்கு முந்தைய காலம். அதாவது மனிதன் எழுத்தறிவு அதிகம் பெற்றிராத காலம் – சில விதி விலக்குகளைத் தவிர. இந்தியா ஒரு விதி விலக்கு. இங்கே இரும்புக்காலம் வரலாற்றுக் காலத்திற்குள் வருகிறது. இதுவும் இடத்திற்கு இடம் மாறுபட்டிருந்தது என்பதை விளக்கத் தேவையில்லை.) இதில் முக்கியமான சொல் ‘பரவலாக’. அதாவது மனிதன் ஆயுதங்களை வைத்து இன்னொரு இடத்தின் மீது படையெடுக்கத் துவங்கிய காலத்தையும், விவசாயத்தின் மூலம் உணவு உற்பத்தித் திறனைப் பெருக்கி மேலும் உபரி வருமானத்தை உண்டாக்கத் துவங்கிய காலத்தையுமே நாம் இரும்புக் காலம் என்று அழைக்கிறோம். விவசாயத்திற்குப் பயன்படுத்தப்பட்ட இரும்புக்கருவிகள் வெண்கலக் கருவிகளை விட அதிகம் திறனுடையவையாக இருந்தன. அதிகம் தாக்குப் பிடித்தன. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் மனிதகுலத்தின் தொழில் நுட்பத் திறன் வெகுவாக அதிகரித்த காலம்.

இரும்புக்காலத்திற்கு முன்னாலேயே மனிதன் இரும்பை உபயோகித்துக் கொண்டிருந்தான். இது தமிழ் நாட்டில் மட்டும், இந்தியாவில் மட்டும் நடக்கவில்லை. ஆப்பிரிக்காவில் இரும்பு தயாரிப்பது இன்றைக்கு 5600 ஆண்டுகளுக்கு முன் துவங்கி விட்டது என்று புகழ் பெற்ற Science  பத்திரிகையில் வெளிவந்த கட்டுரை சொல்கிறது. (இக்கட்டுரையைப் பற்றி பின்னால் விவாதிக்க இருக்கிறேன்.) எனவே இரும்பு ஒரு இடத்தில் பயன்படுத்தப்பட்டது என்பதை மட்டும் வைத்துக் கொண்டு அது இரும்புக்காலத்தின் துவக்கம் என்று திரு ஸ்டாலின் சொல்வது போலச் சொல்லிவிட முடியாது. அதனால் விவசாயம் வலுபெற்றதா? மற்ற இடங்களுக்கு இரும்பைத் தயாரிக்கும் முறை பரவியதா? போன்ற விவரங்கள் தெரிந்தால்தான் அவ்வாறு நாம் சொல்ல முடியும்.  “இரும்பின் தொன்மை” புத்தகம் அவ்வாறு சொல்லவில்லை.  

“இரும்பின் தொன்மை” புத்தகம் என்ன சொல்கிறது?

  1. இந்தியாவில் இரும்பு உலைகள் 2500 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்தன என்று சொல்கிறது. குறிப்பாக கொடுமணல் கிடைத்த இரும்பு உருக்கும் உலையைப் பற்றிச் சொல்லி விட்டு அது போன்ற தொல்லியல்தளங்கள் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டிற்கு முற்பட்டவையாக இருக்கலாம் என்று சொல்கிறது.
  2. மாங்காட்டில் கிடைத்த வாளின் காலம் கி.மு. 1510 என்று சொல்கிறது.
  3. மயிலாடும் பாறையில் கிடைத்த இரும்புப் பொருட்களின் காலம் கி.மு 2172
  4. ஆதிச்ச நல்லூரில் கிடைத்த (மண்ணடுக்கு 4)இரும்புப் பொருட்களின் சராசரிக் காலம் கி.மு 2522.
  5. சிவகளையில் கிடைத்த பொருட்களைக் குறித்து புத்தகம் சொல்வது இது: மூன்று தாழிகள் கிடைத்தன. அதில் மூடி இறுக்கமாக இருந்த தாழியிலிருந்து நெல்மணிகளும் இரும்பாலான பொருட்களும் கிடைத்தன. சேகரிக்கப்பட்ட நெல்மணிகளின் காலம் கி.மு 1155. மற்ற தாழிகளில் மண் ஊடுருவி இருந்தது. இவற்றின் உள்ளிலும் வெளியிலும் இரும்புப் பொருட்கள் கிடைத்தன. இக்குழிகளில் கிடைத்த கரி மாதிரிகளின் காலம் கி,மு. 3345.
  6. தெலுங்கனூரில் கிடைத்த வாளின் பிடியின் காலம் 2900-2727. மறுபகுதியின் காலம் 1422-1233.

இனி புத்தகம் சொல்பவற்றை ஆராய்வோம்.

  1. கிடைத்த இரும்புப் பொருட்களின் கால வேறுபாடு புத்தகத்தின் கூற்றுப்படியே 2500 ஆண்டுகளுக்கும் மேல். அதுவும் சிவகளையில் கிடைத்த இரும்புப் பொருட்களின் கால வேறுபாடு 2000 ஆண்டுகளுக்கும் மேல். அதாவது 2்000 வருடங்களாக அதிகமாக எந்த மாற்றமும் இல்லாமல் வளர்ச்சியும் இல்லாமல் ஒரே மாதிரியான வாழ்க்கையை அவர்கள் வாழ்ந்து கொண்டிருந்தார்களா? ஒரு அகழ்வாய்வாளர் என்னிடம் பேசிக் கொண்டிருந்த போது 2500 ஆண்டுகள் கோலி விளையாடிக் கொண்டிருந்தார்களா என்று கேட்டார். இந்த இடங்களில் விவசாயம் எவ்வாறு நடந்தது அவற்றில் பயன்படுத்தப்பட்ட இரும்புப் பொருட்கள் என்ன என்பது பற்றிய எந்தத் தகவலையும் புத்தகம் தெரிவிக்கவில்லை.
  2. இனி காலத்திற்கு வருவோம். இதை நான் கீழடி பற்றிய விவாதத்தில் சொன்னேன். இப்போதும் சொல்கிறேன். இவர்கள் கொடுத்திருக்கும் காலம் மண்ணடுக்குகளில் கிடைத்த கரித்துண்டின் காலம். இரும்பின் காலம் அல்ல.  அகழ்வாராய்வின் அடிப்படை விதி ஒரு மண்ணடுக்கின் காலம் அதில் கிடைக்கின்ற காலத்தில் மிகவும் பிற்பட்ட பொருளில் காலம் என்று தெளிவாகக் கூறுகிறது. அதாவது ஒரு மண்ணடுக்கில் 15ம் நூற்றாண்டின் பொருள் கிடைத்தால் அதன் காலம் 15ம் நூற்றாண்டு என்றுதான் கொள்ள வேண்டும். அதில் கி மு இரண்டாம் நூற்றாண்டின் பொருள் ஒன்றும் கிடைக்கிறது என்று வைத்துக் கொள்வோம்.  அதே அடுக்கில் காலம் அறுதியிடப்படாத பொருளுக்கு கி மு இரண்டாம் நூற்றாண்டு என்று கால வரையறை செய்ய முடியாது. அதாவது கரித்துண்டின் காலத்தை அப்படியே இரும்பிற்கு ஏற்ற முடியாது. சிவகளையில் வேறு சிக்கல்களும் இருக்கின்றன. மூடி இறுக்கமாக இருக்கும் தாழியில் கிடைத்த இரும்புப் பொருட்களின் காலமும் வெளியில் கிடைத்த இரும்புப் பொருட்களின் காலமும் இவர்கள் கூற்றுப்படியே வெவ்வேறாக இருக்கின்றன. இரண்டாயிரம் ஆண்டு வித்தியாசம். புத்தகம் இம்மண்ணடுக்குகளில் கிடைத்த வேறு பொருட்களைப் பற்றியோ அதன் காலத்தைப் பற்றியோ குறிப்பிடவில்லை.
  3. இவர்களே கத்தியின் பிடிக்குக் காலம் ஒன்று மற்ற பகுதிக்கு ஒன்று என்று சொல்கிறார்கள்! அதாவது பிடி செய்து  1500 ஆண்டுகளுக்கு பிறகு வாள் செய்யப்பட்டு பிடியோடு பொருத்தப்பட்டிருக்கலாம் என்கிறார்கள்! எல்லா நம்பிக்கைகளையும் ஆய்வுக்கூட அறிக்கை மீது வைத்தால் முடிவுகள் இது போன்று வேடிக்கையாகத்தான் இருக்கும்.
  4. கொடுமணலைத் தவிர வேறு எந்த இடங்களிலும் இரும்பை உருக்கும் உலைகள் கிடைக்கவில்லை. இரும்பு இருப்பதை வைத்து அங்கே இரும்பு உருக்கும் உலைகள் இருந்திருக்கலாம் என்ற ஊகம்தான் செய்ய முடிகிறது. அதே இடத்தில் வெண்கலப் பொருட்களும் கிடைத்திருக்கின்றன. அவை இறக்குமதி செய்யப்பட்டிருக்கலாம் என்று புத்தகம் சொல்கிறது. வெண்கலப் பொருட்களை இறக்குமதி செய்யக்கூடிய திறன் படைத்தவர்கள்  இரும்பு தயாரிக்கும் உத்தியை மற்றவர்களுக்குத் தந்திருக்க மாட்டார்களா? அப்படித் தந்திருந்தால் இரும்பு குறைந்தது தென்னிந்தியா முழுவதும் பரவலாக இருந்திருக்காதா? இரும்பின் பயன்பாடு இவர்கள் கூறும் காலக்கட்டத்தில் பரவலாக இருந்ததாக எந்தச் சான்றும் இல்லை.
  5. இரும்பு தயாரிப்பது எளிதல்ல.  அதற்குக் கரி (charcoal) தேவை. கரி தயாரிப்பதற்கு மக்கள் தேவை. இவ்வாறு மக்களைத் திரட்டி வேலை செய்ய வைக்க அமைப்பு தேவை.  பெருமளவு மக்களின் வாழ்வு முறையை மாற்றும் அளவிற்கு இரும்பு தயாரிக்க பேரமைப்பு தேவை. அது போன்ற பேரமைப்பு இவர்கள் சொல்லும் காலத்தில் இருந்திருப்பதற்கான எந்தத் தடையங்களும் நமக்குக் கிடைக்கவில்லை.
  6. தமிழ் நாட்டில்  நெல் சாகுபடி பரவலாக 3000 ஆண்டுகளுக்கு உள்ளாகத்தான் துவங்கியது. அதே போன்று நகரங்களோ, பெரிய கட்டிடங்களோ, இயற்கையை வெகுவாக மனிதன் மாற்றியிருக்கும் தடையங்களோ நம்மிடம் ஏதும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக இல்லை. கீழடி நிச்சயம் நகர நாகரிகம் இல்லை.

இந்த ‘கரித்துண்டு’  விவகாரத்தை நான் மட்டும்தான் சொல்கிறேன் என்று நினைக்க வேண்டாம். Science கட்டுரையைக் குறித்து முன்னே குறிப்பிட்டிருந்தேன். அது சொல்பவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்.

Several French and Belgian archaeologists have pointed to evidence from sites in Niger, Rwanda, and Burundi suggesting that Africans invented ironworking independently as early as 3600 B.C.E. Their analyses were strongly criticized by prominent researchers in the United States, who argued that the early radiocarbon dates likely came from wood older than the iron artefacts. In reviewing the debate in a 2005 paper in the journal History in Africa, independent scholar Stanley Alpern suggested that Francophone researchers had fallen under the influence of African nationalism and pride, which blinded them to problems in their data.

அதாவது கி.மு 3600 என்று சொல்வது மரத்தின் (கரித்துண்டின்!) அடிப்படையில் இரும்புப் பொருட்களின் அடிப்படையில் அல்ல என்ற சர்ச்சை எழுந்தது என்று கட்டுரை சொல்கிறது. மேலும் இது போன்று காலத்தை முன் தள்ளுவது ஆப்பிரிக்க தேசியத்தை முன்னிறுத்த்தான் என்றும் புள்ளி விவரங்களில் இருக்கும் சிக்கல்களைக் காணும் பார்வை ஆய்வாளர்களுக்கு இல்லை என்றும் அது சொல்கிறது!

சுருக்கமாக,

  1. இரும்புக் காலம் என்பது இரும்பு பரவலாக பயன்படுத்தப் பிறகுதான் துவங்குகிறது. சில இரும்புப் பொருள்கள் ஒரு இடத்தில் கிடைத்தன என்ற தகவலை வைத்துக் கொண்டு இரும்புக்காலமே அங்கிருந்துதான் துவங்குகிறது என்று சொல்வது அறிவியல் கூற்றாக ஆகாது.
  2. கீழடி வியாதி பெருகிப் பரவியிருக்கிறது என்பதை இப்புத்தகம் காட்டுகிறது. கரித்துண்டின் காலத்தை இரும்பின் மீது ஏற்றுவது அறிவியலோடு பொருந்தாது.
  3. சிவகளையில் ஒரே இடத்தில் மூடி சரியாக இருக்கும் தாழியில் கிடைத்த கரித்துண்டின் காலத்திற்கும் வெளியில் மண் மூடிக் கிடந்த தாழிகளில் கிடைத்த கரித்துண்டுகளின் காலங்களுக்கும் பெரும் வித்தியாசம் இருக்கிறது. இதை வைத்துக் கொண்டு இரும்பின் காலத்தைக் கணக்கிடுவது சரியாகாது.
  4. ஒரே கத்தியில் பிடிக்கு ஒரு காலம் மற்ற பகுதிக்கு இன்னொரு காலம் என்ற முடிவு வந்தது ஒரு பொருளின் காலத்தை ஆய்வுக் கூட முடிவுகளை மட்டும் வைத்துக் கொண்டு, மற்றைய சான்றுகளைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் வரையறை செய்வது சரியாகாது என்பதைக் கோடிட்டுக் காட்டுகிறது.

வாஜ்பாய் – எந்தப் பாதையில் செல்வது?

கண்ணியம் நாற்சந்தியில் காணாமல் போனது

மலிந்தவர் மதிப்பு மிக்கவர்களை மறித்து வைத்திருக்கிறார்கள்.

கடைசி ஒரு முறை நான் முன்னால் செல்லட்டுமா?

அல்லது

காட்சியிலிருந்தே விலகிக் கொள்ளட்டுமா?

எந்தப்பாதையில் செல்வது?

  • வாஜ்பாய் எழுதிய கவிதையில் சில வரிகள்

இரண்டு பிம்பங்கள்

வாஜ்பாய் (1924-2018) நிறைவாழ்வு வாழ்ந்தவர்.  இளவயதிலிருந்தே அரசியலில் தீவிரமாகப் பங்கு பெற்றவர். ஆனால் தன் அரசியல் வாழ்க்கையின் கடைசி நாள் வரை அவருக்கு எந்தப் பாதையில் செல்வது என்பது பற்றிய குழப்பம் இருந்தது. அவரைப் பற்றி மற்றவர்களுக்கும் குழப்பம் இருந்தது. பாஜகவினர் மத்தியில் அவருக்கு மிகுந்த மதிப்பு இருந்தது உண்மை என்றாலும் “மோதி பதவி விலக வேண்டும்” என்று அவர் 2002ல் குஜராத் கலவரங்கள் நடந்தபோது சொன்னதை பல இந்துத்துவர்களால் மன்னிக்கவே முடியவில்லை.  நேரு மீது அவருக்கு இருந்த மரியாதை மதவாதிகளுக்கு மிகுந்த கோபத்தை வரவழைதது. “ஆர் எஸ் எஸ் என் ஆத்மா” என்று அவர் தெளிவாகச் சொல்லியிருக்கிறார். ஆனால் அவ்வியக்கத்தின் அடிப்படைக் கொள்கைகள் மீது அவருக்கு அதிகம் பிடிப்பு இல்லை என்ற குற்றச்சாட்டு அவர் மீது வைக்கப்பட்டது. “மதவாத அரசியலை மையத்திற்குக் கொண்டு வருவதில் மிகப் பெரிய பங்கு வகித்தவர்” என்று இடதுசாரிகள் சொன்னார்கள். ஆனால் பால்ராஜ் மதோக் போன்ற தீவிர இந்துத்துவவாதிகள் “வாஜ்பாய் போன்ற கம்யூனிஸ்டு ஊடுருவிகளால்தான் ஜனசங்கம் (பாஜகவின் முந்தைய பெயர்) சீரழந்தது” என்று குற்றம் சாட்டினார்கள்.  நாட்டிற்காக திருமணமே செய்து கொள்ளாமல் வாழ்ந்தவர் என்று அவர் புகழப்பட்டார். ஆனால்ராஜ்குமாரி கௌல் என்ற திருமணமானவரோடு அவருக்கு உறவு இருந்தது. உறவில் பெண் குழந்தை ஒன்றும் பிறந்தது.

சுதந்திரத்திற்கு முன்

வாஜ்பாய் ஆக்ராவிற்கு அருகே உள்ள படேஷ்வர் என்ற சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர். மத்தியவர்க்கத்திற்கு சிறிது கீழான பொருளாதார நிலைமை. தந்தை பள்ளி ஆசிரியராக குவாலியர் நகரில் பணியாற்றிக் கொண்டிருந்தார். 1939ம் ஆண்டில் தனது 15ம் வயதில் சுயம்சேவகராக ஆர் எஸ் எஸ்ஸுடன் தன்னை இணைத்துக் கொண்டார். 1942 வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் அவர் கலந்து கொண்டதைப் பற்றி பல கட்டுக்கதைகள் உலவுகின்றன. அவர் குவாலியரில் நடந்த ஊர்வலத்தில் பங்கு பெற்றது உண்மை. ஆனால் படேஷ்வரில் கூட்டத்தில் இருந்ததற்காகக் கைதாகி மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்து வெளியில் வந்தார்.  1947ல் வெள்ளையனே வெளியேறு இயக்கமே நேர விரயம் என்று கூறத் துவங்கி விட்டார். இளைஞராக இருந்த போது காந்தியைப் பற்றி அன்றைய சுயம்சேவகர்களைப் போலவே கடுமையாக எதிர்வினை ஆற்றினார். “காந்தி ஆப்கானிஸ்தானை இந்தியா மீது படையெடுக்க அழைத்தார்” என்ற அவதூறைக் கூசாமல் சொன்னார். ஆனால் காந்தியின் மறைவிற்குப் பின் அவர் இருந்த இயக்கமே வேறுவிதமாகப் பாடத் துவங்கி விட்டது. அவரும் பாட்டை மாற்றிக் கொண்டார்.

நேருவின் காலம்

வாஜ்பாய் ஜனசங்கத்தின் தலைவரான சியாம் பிரசாத் முகர்ஜியின் உதவியாளராகப் பணியாற்றியிருக்கிறார். அவருடைய மறைவிற்கு நேருவும் மறைமுகக் காரணம் என்று எழுதியிருக்கிறார். 1957ல் நாடளுமன்ற உறுப்பினராக அவர் பேசிய முதல் பேச்சிலும் நேருவின் கொள்கைகளை வலுவாக விமரிசனம் செய்தார். நேரு அவருடைய பேச்சு வல்லமையை மதித்தார் என்பது உண்மை. ஆனால் அவர் வருங்காலத்தில் பிரதமராக வருவார் என்று நேரு சொன்னர் என்ற பரப்புரை முழுவதும் பொய். 1962ல் சீனாவுடன் நடந்த போர் காரணமாக நேரு மீது பாய முழு வாய்ப்புக் கிடைத்த போதும் அவருடைய தலைமையை ஏற்றுக் கொள்ள வாஜ்பாய் தயங்கவில்லை.”இந்தியா முழுவதும் நேருவின் பின் நிற்கிறது” என்று அறிக்கை விடுத்தார். நேரு மீது அவர் பெருமதிப்பு வைத்திருந்தார் என்பதும் உண்மை.

இந்திரா காந்தி காலம்

பங்களாதேஷ் விடுதலைப் போரில் வெற்றி பெற்றதற்காக

அவரை வாஜ்பாய் அன்னை துர்க்கை என்று அழைத்தார் என்ற கூற்று முழுக் கற்பனை. நேரு இறந்தவுடனேயே வலதுசாரி சக்திகள் தங்களுக்கு வாய்ப்புகள் அதிகரித்து விட்டன என்பதைக் கணக்கிட்டுச் செயல்படத் துவங்கின. ஆனால் மக்களிடம் செல்ல வேண்டுமானால் முதலாளித்துவத்திற்கு முழுவதும் சாதகமாக இயங்குவதாகக் காட்டிக் கொள்ள முடியாது என்ற தெளிவு வாஜ்பாய்க்கு இருந்தது. எனவே வங்கிகளைத் தேசியமயமாக்கல் போன்ற கொள்கைகளை அவர் ஆதரித்தார்.

பிரதமர் வாஜ்பாய்

மூன்று முறை பிரதமராக இருந்த வாஜ்பாய் கூட்டணி தருமத்தைப் பற்றிப் பேசினாலும் கட்சி உறுப்பினர்களிடம் உரையாற்றும் போது மிகத் தெளிவாக ‘நமக்கு கூட்டணி என்பது ஒரு மைல்கல்தான் இலக்கு அல்ல’ என்று சொன்னார். கட்சி அறுதிப் பெரும்பான்மை பெற்று பதவிக்கு வரும் போது, மூன்று இலக்குகளை நிச்சயம் அடையும் என்றார் – அயோத்தியில் கோவில் கட்டப்படும் அரசியல் சட்டம் 370 திரும்பப் பெறப்படும் மற்றும் பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படும் என்ற மூன்று இலக்குகள். அயோத்தியைப் பொருத்தவரை, பாபர் மசூதி இடிப்பட்ட போது  அது தன் வாழ்க்கையில் மிகவும் சோகமான நாள் என்று அவர் கூறினாலும், கோவில் அங்குதான் கட்டப்பட வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார்.

வாஜ்பாய்க்கு இதைத் தவிர மூன்று முக்கியமான இலக்குகளும் இருந்தன. முதலாவது அணு ஆயுத சோதனை. அவர் ஆட்சி காலத்தில்தான் இந்தியா அணு ஆயுத சோதனையை வெற்றிகரமாகச் செய்தது. அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகள் (அன்று ரஷ்யாவும் அமெரிக்கா பக்கத்தில் இருந்தது) பல தடைகளைக் கொண்டு வந்தாலும் வாஜ்பாய் நிலைமையைச் சாமர்த்தியமாகச் சமாளித்தார். ஆனால் இந்தியா பயங்கரவாதத்தைச் சமாளிக்கத் திணறியது.  இரண்டாவது இலக்கு பாகிஸ்தானுடன் உறவுகளை மேம்படுத்திக் கொள்வது. பாகிஸ்தானுக்கு பேருந்தில் பயணம் செய்து  அந்நாட்டுப் பிரதமர் நவாப் ஷரீஃபைச் சந்தித்தார்.  இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே லாகூர் ஒப்பந்தம் கையெழுத்தானது. மூன்றாவது இலக்கு காஷ்மீர் பிரச்சினையைத் தீர்ப்பது. அங்குள்ள மக்களுக்குத் தேவை ‘காஷ்மீரியம், மனிதத்தன்மை, உண்மையான மக்களாட்சி’ என்று சொன்னார் அவர். நான் 2017ல் காஷ்மீர் சென்றிருந்த போது அங்குள்ள மக்கள் வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் எங்களுக்கு மத்திய அரசின் மீது நம்பிக்கை இருந்தது என்றார்கள்.

பாகிஸ்தானோடு நல்லுறவு என்ற பாதையில் பெருங்கற்கள் கார்கில் போர் நடந்த போது விழுந்தன. பாகிஸ்தான் முதுகில் குத்துவதை ஒரு கலையாக ஆக்கி விட்டது என்று இந்தியாவில் பெரும்பாலானவர்கள் நினைத்தனர். முஷரஃப் ஆக்ரா வந்து இந்தியாவோடு ஒப்பந்தம் செய்ய முயன்றாலும் அம்முயற்சி தோல்வியில் முடிந்தது. செப்டம்பர் 11 2001ல் பின் லாடன் அமெரிக்கா மீது நடத்திய தாக்குதலில் பயங்கரவாதம் மனிதகுலத்தின் முதல் எதிரி என்ற உண்மை மேற்கத்திய நாடுகளுக்குப் பிடிபடத் துவங்கியது. இருந்தாலும், பாகிஸ்தான் இந்தியாவிற்கு எதிரான பயங்கரவாதச் செயல்களை விட்டுக் கொடுக்கத் தயராக இல்லை. 13 டிசம்பர் 2001 அன்று நாடாளுமன்றம் தாக்கப்பட்ட போது என் அலுவலக அறை நாடாளுமன்றத்திற்கு மிக அருகில் இருந்ததால் துப்பாக்கி சுடுவதின் ஒலிகள் துல்லியமாகக் கேட்டன. உலகம் முழுவதும் அதன் எதிரொலிகள் கேட்டதால் இந்தியா பயங்கரவாதத்தால் எதிர்கொள்ளும் பிரச்சினை உலக நாடுகளுக்குப் புரியத் துவங்கியது.

வாஜ்பாய் ஆட்சி காலத்தில்தான் ஒரிசாவில் ஸ்டேன்ஸ் குடும்பத்தோடு கொலை செய்யப்பட்டார்.  அவர் ஆட்சியில் இருந்த போதுதான் 2002ல் குஜராத் படுகொலைகள் நிகழ்ந்தன. வாஜ்பாய் மோதியைப் பற்றி பேசியதைச் செயலில் காட்டியிருந்தால் இந்திய வரலாறு வேறுவிதமாக ஆகியிருக்கும்.

நல்ல நண்பர்

வாஜ்பாய் பழகுவதற்கு மிகவும் இனியவர் என்று அவருடன் நட்பில் இருந்தவர்கள் பலர் சொல்லியிருக்கிறார்கள். உதாரணமாக கேரள முதல்வராக இருந்த இ. கே. நயினார் வாஜ்பாய் தலைமையில் மலப்புரம் மாவட்டத்தில் குடும்பஸ்ரீ திட்டத்தைத் திறந்து வைக்கச் செய்தார். பத்திரிகைகள் கம்யூனிஸ்டான நயினார் பாஜக பிரதமரை இஸ்லாமியப் பெரும்பான்மை மாவட்டமான மலப்புரத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கு பெற வைத்ததை பேரதிசயமாகக் கருதின. அவர் கருணாநிதியோடு கூட நட்போடு இருந்தார். அவருக்குப் பல பிரச்சினைகளைக் கொடுத்த ஒரே நண்பர் ஜெயலலிதாவாகத்தான் இருக்க முடியும்.

நகைச்சுவையுணர்வு

வாஜ்பாய் சிரிக்கச் சிரிக்கப் பேசுவதில் வல்லவர். ஒரு முறை ஜகஜீவன் ராம் ரயில்வே அமைச்சராக இருந்தபோது விபத்துகள் அதிகமாக நடைபெறுவதைக் குறிப்பிட்டு வாஜ்பாய் பேசினார். “மக்கள் ரயில் செல்லும் போதெல்லாம் தங்கள் “ஜீவன்” (உயிர்) “ஜகத்தை” ( உலகத்தை) விட்டு போய் விடுமோ என்ற பயத்தில் ராம் ராம் என்று ராமநாமத்தை சொல்லாமல் பயணம் செய்வதில்லை. எனவே அமைச்சரின் பெயர் தினமும் கோடிக்கணக்கான பேர்களால் நினைவு கூரப்படுகிறது” என்று அவர் பேசியதைக் கேட்டு ஜகஜீவன் ராமிற்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.

முடிவாக

வாஜ்பாய்க்கு தன் கவிதைகளைப் பற்றி உயரிய எண்ணம் இருந்தது. ‘நான் அரசியலுக்கு வந்தது இந்திக் கவிதை உலகிற்கு நஷ்டம் என்று பலர் கருதுகிறார்கள்’ என்று அவரே சொல்லியிருக்கிறார். ஆனால் எனக்குத் தெரிந்த ஹிந்திக் கவிஞர்கள் பலர் அதை விடப் பெரிய லாபம் இந்திக் கவிதைக்கு இல்லை என்று கருதுகிறார்கள். அவருடைய அரசியலைப் பற்றியும் இப்படியே சொல்லலாம். மோதியின் இன்றைய அரசியலோடு ஒப்பிடும் போது வாஜ்பாய் காலம் பொற்காலம் என்று கருதுவர்களை விட அவருடைய காலம் இன்றைய அரசியலுக்கு ஓர் ஒத்திகை என்று கருதுபவர்களே அதிகம் இருப்பார்கள்.

பி ஏ கிருஷ்ணன்

அழகர் கோவில் பௌத்த வழிப்பாட்டுத்தலமாக இருந்ததா?

முதலில் ஒன்றைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

இது திரு தொ. பரமசிவன் எழுதிய ‘அழகர் கோவில்’ புத்தகத்தைப் பற்றிய முழு விமரிசனம் அல்ல. தமிழில் வந்த புத்தகங்களில் முக்கியமான ஒன்று அது என்பதில் எனக்கு எந்த ஐயமும் இல்லை. கடுமையான உழைப்பின் விளைவு அது. பல தரவுகளோடு எழுதப்பட்டிருக்கிறது.

என் எதிர்வினை அவருடைய புத்தகத்தில் ஒரு சிறிய பகுதியைப் பற்றியது. அழகர் கோவில் பௌத்த வழிபாட்டுத்தலமாக இருந்தது என்பதற்கு அவர் சொல்லும் ஆதாரங்கள் வலுவற்றவை என்பதை நிறுவுவதே இப்பதிவு.

தொ.ப.  கொடுத்திருக்கும் சான்றுகளை ஆராய்வதற்கு முன்னால் அழகர் கோவிலைப் பற்றிய சில இலக்கியச் சான்றுகளைப் பார்ப்போம்.

பரிபாடல் திருமாலிருஞ்சோலை மலையைப் பற்றிப் பேசுகிறது.

மலையை அது எவ்வாறு அறிமுகம் செய்கிறது என்பதைப் பார்ப்போம்.

உலகில் நம் அறிவுக்கு எட்டாத, தம் நிலையிலிருந்து பெயராத, புகழ் பெற்ற பல மலைகள் இருக்கின்றன. அவற்றில்  மக்களின் பசித்துன்பத்தை நீக்கி பயன் தருபவை சில. அவற்றிலும், தெய்வங்கள் தாமாகவே  விரும்புபவை மிகச் சில. அவற்றிலும் மிகச் சிறந்தது கடலும் தீயும் இணைந்தது போல, சொல்லும் பொருளும் போல, மாயோனும் பலராமனும் சேர்ந்து எழுந்தருளியிருக்கும் மலை மாலிருங்குன்றம்.

சிறந்தது கல் அறை கடலும் கானலும் போலவும்

புல்லிய சொல்லும் பொருளும் போலவும்

எல்லாம் வேறு வேறு உருவின் ஒரு தொழில் இருவர்த 

தாங்கும் நீள் நிலை ஓங்கு இருங்குன்றம்


எனவே பரிபாடல் திருமாலிருங்குன்றம் மிகப்பழமை வாய்ந்தது. இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட்து என்று தெளிவாகக் கூறுகிறது.

பரிபாடலின் காலம் பொ.யு. இரண்டாம் நூற்றாண்டு என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். பொ.யு ஐந்தாம் நூற்றாண்டு என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள்.  இரண்டாம் நூற்றாண்டு என்று வைத்துக் கொண்டால் அதற்கு முன்னாலேயே இது புத்தர் கோவிலாக இருந்திருக்க வேண்டும். அப்படி இருந்ததற்காக எந்தச் சான்றும் இல்லை.

சங்க இலக்கியத்தில் மதுரைக் காஞ்சி புத்தர் பள்ளியைப் பற்றிக் குறிப்பிடுகிறது.

பூவினம் கையினர் தொழுவனர் பழிச்சிச்

சிறந்து புறங்காக்குங் கடவுட் பள்ளியும்

மாங்குடி மருதனார் சிவனுக்கும், மாயோன், முருகன் ஆகிய தெய்வங்களுக்கும் வழிபாடு நடத்தப்படும் மாலையில் ஒலிக்கும்  இசைக் கருவிகள் பற்றிக் குறிப்பிடுகிறார்.  பின்னால் மதுரை மாநகரத்திலுள்ள பிற சமயங்களைப் பற்றிப் பேசும் போது பௌத்தப் பள்ளியைப் பற்றியும் குறிப்பிடுகிறார்.  அவருடைய மதுரை மத நல்லிணக்க மதுரை.

 பரிபாடல் ஐந்தாம் நூற்றாண்டில் எழுதப்பட்டது என்று வைத்துக் கொண்டால் அது களப்பிரர் காலம்.  களப்பிரர்கள் புத்தமத்தை ஆதரித்தவர்கள் அவர்கள் ஆண்ட காலத்தில் புத்தர் கோவிலை திருமால் கோவிலாக மாற்றுவது என்பது நினைக்கக் கூட முடியாது.

எனவே திருமாலிருஞ்சோலையில் மாற்றம் நடைபெற்றிருந்தால் அது பொது நூற்றாண்டிற்கு முன்போ அல்லது அது தொடங்கும் சமயத்திலோ இருந்திருக்க வேண்டும். அதாவது ஏறத்தாழ 2000 ஆண்டுகளுக்கு முன்பு. இன்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவிலேயே விஷ்ணுவிற்கு பல கோவில்கள் இருந்ததாகச் சான்றுகள் இல்லை. எனவே அக்கால கட்ட்த்தில் இது போன்ற மாற்றங்கள் நடந்திருக்கும் சாத்தியக்கூறுகள் அனேகமாக இல்லவே இல்லை என்று கூறி விடலாம்.

இன்னொன்று.

மாற்றம் நடந்திருந்தால் அது தமிழகதின் பொற்காலம் என்று அறியப்படும் சங்ககாலத்தில் நடந்திருக்க வேண்டும். ஆனால் சங்க காலத்தில் மதப்பூசல்கள் நடந்ததற்கு எந்தச் சான்றுகளும் இல்லை. மாறாக மதுரைக் காஞ்சி காலத்திலிருந்து மணிமேகலை சிலப்பதிகாரம் காலம் வரை எல்லா மதங்களும் தமிழகத்தில் பூசல்கள் இன்றி இயங்கிக் கொண்டிருந்தன என்பதை இலக்கிய அகச்சான்றுகள் அறிவிக்கின்றன.

இனி சிலப்பதிகாரம் மாலிருஞ்சோலையை எவ்வாறு பாடுகிறது என்பதைப் பார்ப்போம். காடுகாண் காதையில் மாங்காட்டு மறையோன் குன்றமே திருமாலுடையது என்றுதான் சொல்கிறான்.

மற்றவை நினையாது மலைமிசை நின்றோன்
பொன் தாமரைத் தாள் உள்ளம் பொருந்துமின்.

அவன் தாள் பணிந்தால் பிறவித் துன்பத்திலிருந்து விடுபெறலாம் என்கிறான்.

உள்ளம் பொருந்துவிர் ஆயின், மற்று அவன்
புள் அணி நீள் கொடி புணர்நிலை தோன்றும்;
தோன்றியபின் அவன் துணை மலர்த் தாள் இணை
ஏன்று துயர் கெடுக்கும் இன்பம் எய்தி.

புத்தரைப் பற்றிய பேச்சே இல்லை.

எனவே திருமாலிருஞ்சோலை மலையில் புத்தர் கோவில் இருந்ததாக சங்க இலக்கியத்திலும் சிலப்பதிகாரத்திலும் சான்றுகள் இல்லை. மாறாக அவ்விடம் மிகவும் பழைமையான திருமால் வழிபாட்டுத்தலம் என்றுதான் அவை சொல்கின்றன. . புத்தரின் தடம் கூட அங்கு இருந்த்தாக்க் கூறவில்லை. அங்கு மட்டுமல்ல. தமிழ்நாடு முழுவதும் இதே கதைதான்.

ஆராய்ச்சியாளரான Anne Monius சொல்கிறார்: The archaeological and art-historical records are fragmentary, raising perhaps more questions than the evidence itself will ever be able to answer.”

புகழ்பெற்ற  ஆராய்ச்சியாளரான சம்பகலக்ஷ்மி இன்னும் தெளிவாகச் சொல்கிறார்.:

In the Tamil context, Buddhist influence was confined mainly to the coastal towns where Buddhism was not the only or the dominant creed and where merchants were active. In the centres of the Inland trade routes, Buddhism was prevalent but Jainism enjoyed greater influence and prestige. The rest of the Tamilakam with its uneven socio-economic zones had not yet come out of their tribal and folk traditions of worship and cult practices…

சிலப்பதிகாரத்தில் திருமாலிருஞ்சோலையைக் குறிப்பிடும் மாங்காட்டு மறையோன் அங்கு இருக்கும் புண்ணிய சரவணம், பவகாரிணி, இட்டசித்தி என்ற பொய்கைகளைப் பற்றியும், வரோத்தமை என்ற சிறுதெய்வத்தைப் பற்றியும் குறிப்பிடுகிறான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

எனவே திருமாலிருஞ்சோலை புத்தர் வழிப்பாட்டுத்தலமாக இருந்தது என்பதை நிலைநாட்ட வேண்டும் என்றால் மிகவும் வலுவான சான்றுகள் வேண்டும்.

தொ.பவின் சான்றுகள் மெலிதினும் மெலிதானவை.

அவை என்ன என்று பார்ப்போம்.

  1. ஆராமம்: ‘கோவிலுக்கு அடுத்த குளம் ஆராமத்துக் குளம் என்று அழைக்கப்படுகிறது. ஆராமம் என்பது பாலிச் சொல். புத்தமத்த்தோடு தொடர்புடையது. எனவே கோவிலும் புத்தர் கோவிலாக இருந்திருக்க வேண்டும். ஆராம்ம் என்றால் தோட்டம். “ஆராமம் சூழ்ந்த அரங்கம்” என்று திருமங்கை மன்ன்ன் பாடியிருக்கிறார். இதற்கு மற்றைய கோவில்களால் சூழப்பட்ட அரங்கம் என்று பொருள்’ என்று தொ.ப. சொல்கிறார்.

முதலில் ஆராமம் என்ற சொல் வடமொழிச் சொல். தோட்டம் என்ற பொருளில் மகாபாரதம், ராமாயணம் மனுஸ்மிருதி, யாக்யவல்கிய ஸ்மிருதி, மிருச்சகடிகம் போன்ற நூல்களில் பயன்படுத்தப்படுகிறது. எனவே அது புத்தமதத்திற்கு மட்டும் சொந்தமான சொல் அன்று. இரண்டாவதாக சிறியதிருமடலுக்கு வியாக்கியானம் எழுதிய பெரியவாச்சான் பிள்ளை ஆராமம் என்ற சொல்லிற்கு தோட்டம் என்றுதான் பொருள் கொள்கிறார். ஆனால் திருவரங்கம்தான் இறைவன் எப்போதும் வசிக்கும் தலம் என்றும் மற்றைய திவ்யதேசங்கள் இளைப்பாறும் தோட்டங்கள் போன்றவை என்கிறார்.

(ஆராமம்‌ சூழ்ந்த அரங்கம்‌) .தோட்டங்களால்‌ சூழப்பெற்ற அரங்கம்‌; இங்கு *ஆராமம்‌”” [தோட்டம்‌-நந்தவனம்‌] என்றது மற்றைத்திவ்ய தேசங்களை; மற்றைத்‌ திவ்யதேசங்களால்‌ சூழப்பெற்ற அரங்கம்‌ என்றபடி. ஸ்ரீரங்கஸார்வபெளமனுக்குத்‌ திருவரங்கம்‌ அடியாரை அளிப்பதற்குரிய நித்யபவாஸத்தானமாகவும்‌, மற்றைத்‌ திருப்பதிகள்‌ ஆங்காங்கு வேட்டைக்குச்‌ செல்லும்போது பகலிலே தங்கும்‌ தோட்டங்களாயிருப்பதாகவும்‌ ஆழ்வார்களின்‌..திருவுள்ளம்‌. – இது புத்தூர் சுவாமி- பெரியாவாச்சான் பிள்ளையின் மணிப்பிரவாள மொழியின் தமிழாக்கம்)

எனவே ஆராமத்துக் குளம் என்றால் தோட்டத்தில் இருக்கும் குளம் என்றுதான் பொருள். இதற்கும் பௌத்தத்திற்கும் முடிச்சுப் போடுவது வேடிக்கைதான்.

2. தல விருட்சம்: அழகர் குறவஞ்சி திரேதா யுகத்தில் இக்கோவிலில் தல விருட்சம் போதி மரமாக இருந்த்து என்று சொல்கிறதாம். (கலியுகத்தில் அல்ல!) அதனால் கோவில் புத்தருடையதாம்.  அழகர் குறவஞ்சி 19ம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. அதே போல விருஷபாத்ரி மகாத்மியம் என்ற வடமொழி தலபுராணத்திலும் இந்த்த் தகவல் இருக்கிறது என்று தொ.ப சொல்கிறார். விருஷ்பாத்ரி மகாத்மியம் ஆக்னேய புராணத்தை மேற்கோள் காட்டுகிறது. இந்தப் புராணமும் 19ம் நூற்றாண்டில் எழுதப்பட்டது! தலபுராணம் என்பதே மிகவும் பிந்தையது என்பது நமக்கு நன்றாகத் தெரியும். அதில் சொல்வதை ஆதாரமாக எடுத்துக் கொள்வதற்கு மிகவும் தைரியம் வேண்டும். மேலும் போதி மரம் புத்தருக்கு மொத்த குத்தகை அளிக்கப்படவில்லை. அரச மரம் புத்தருக்கு முன்னாலேயே இந்தியா முழுவதும் பரவலாக இருந்த்து. ‘அச்வத்தா சர்வ விருக்ஷாணாம்’ (மரங்களில் நான் அரச மரமாக இருக்கிறேன்) என்று கீதையில் கிருஷ்ணன் சொல்கிறான். எனவே அரசமரம் விஷ்ணு கோவிலுக்கு தல விருட்சமாக இருப்பது அதிசயம் அல்ல.

3. நரசிம்மர் சிலை கோவிலில் இருப்பது: அழகர் கோவிலில் நரசிம்மர் இருப்பது பிறமத எதிர்ப்பாம். அதாவது அரக்கர்களை விஷ்ணூ கொல்வது என்பதை ‘தமிழர்கள், சூத்திரர்கள், ஆதிவாசிகள், சமணர்கள், பௌத்தர்கள்’ என்று  இவர்கள் வசதிக்கு தகுந்தது போல  மாற்றிக் கொள்ளலாம்!.  நரசிம்மர் விஷ்ணு கோவிலில் இருந்தால் அக்கோவில் முன்னால் புத்தர் கோவிலாக இருந்திருக்க வேண்டும் என்ற முடிவிற்கு வருவது கேலிக்கூத்து. இதுதான் தமிழ் அறிஞர்களின் ஆராய்ச்சி லட்சணம்.

4. புறமதத்தவர் யார்?:

“புந்தியில் சமணர் புத்தர் என்றிவர்கள்

ஒத்தன பேசவும் உவந்திட்டு

எந்தை பெம்மானார் இமையவர் தலைவர்

எண்ணி முன் இடம் கொண்ட கோவில்” என்று திருமங்கை ஆழ்வார் பாடுகின்றதால் வைணவம் எதிர்க்கும் சமயங்கள் சமணம் பௌத்தம் என்று கொள்ளலாமாம். அதனால் இந்தக் கோவில் முன்னால் பௌத்தக் கோவிலாக இருந்திருக்க வேண்டுமாம்.  இது எந்த விதமான வாதம் என்று தெரியவில்லை. அதாவது திருமங்கை மன்னனுக்கு அவருக்கு 800 ஆண்டுகளுக்கு  முன்னால் இது பௌத்தர் கோவிலாக இருந்த்து என்பது தெரிந்து  அதை மறைமுகமாக பாடலில் சொல்லியிருக்கிறார். தொ.ப இருபதாம் நூற்றாண்டில் அதைக் கண்டுபிடித்து விட்டார்!

5. பிரயோகச் சக்கரம்: இக்கோவில் விஷ்ணு கையில் பிரயோகச் சக்கரம் (எதிரிகள் மீது செலுத்துவதற்காக) வைத்திருப்பதால் இக்கோவில் முன்னால் புத்தர் கோவிலாக இருந்திருக்க வேண்டும் என்று சொல்கிறார் தொ.ப.  இது போன்ற ஆராய்ச்சிக்கு பதில் சொல்வதே வீண் வேலை என்று தோன்றுகிறது. பல கோவில்களில் விஷ்ணு பிரயோக சக்கரத்தை வைத்திருக்கிறார். அதனால் அவை அனைத்தும் மற்றைய மதத்தினர் கோவில்கள் என்று சொல்லி விடலாமா? பல்லவர் விஷ்ணு வடிவங்கள் பல பிரயோகச் சக்கரம் கொண்டவை. அவை அனைத்தும் புத்தமத எதிர்ப்பு வடிவங்கள் என்று சொல்லி விடலாமா? பிரயோகச் சக்கரம் வைணவர்களைக் காப்பதற்கு என்று வைணவர்கள் கருதுகிறார்கள்.

6. நங்கள் குன்றம்: நம்மாழ்வார் இக்குன்றத்தை “நங்கள் குன்றம்” என்று அழைக்கிறார். அது சிந்திக்கத்தக்கது என்று தொ.ப எழுதுகிறார்.  கவிஞன் ஒரு சொல்லைப் பயன்படுத்துவதற்குப் பல காரணங்கள் இருக்கக் கூடும். ‘எங்கள் குன்றம்’ என்று அவர் அழைப்பதால் முன்னால் அது வேறொருவர் குன்றமாக இருந்த்து என்று சொல்ல முடியுமா? நம்மாழ்வார் என்று அவர் அழைக்கப்படுவதால் அவர் முன்னால் பௌத்தராக இருந்திருக்க வேண்டும் என்று தொ.ப சொல்லாமல் விட்டதற்கு நன்றி.

7. வட்ட வடிவமான கருவறை:  இங்கு கருவறை வட்ட வடிவமாக அமைந்திருப்பதால் அது புத்தர் கோவிலாக இருந்திருக்க கூடும் என்கிறார். புத்த சைத்தியங்களைச் சுற்றி இது போன்ற வட்ட வடிவமான திருசுற்று உண்டு என்று புத்தர்களில்  கலையைப் பற்றி எழுதிய பர்கீஸ் கூறுகிறார் என்றும் தொ.ப சொல்கிறார். முதலில் சைத்யா என்றால் எவ்வாறு இருக்கும் என்று என்சைக்ளோபீடியா பிரித்தானிகா சொல்வதைப் படிப்போம்: From the 2nd century BC to the 8th century AD, caityas were carved directly into the rock bluffs of the Western Ghāts in a style that clearly alludes to wooden prototypes. For example, “beams” were carved into the roofs of the caves. These permanent caityas characteristically consist of a central rectangular nave separated from aisles at either side by two rows of pillars that support the roof. Often, small meditation rooms line the periphery of the space, and a semicircular apse stands at one end of the room. Frequently, this apse holds a stūpa, a domed enclosure that protects sacred objects and that serves as a focus of Buddhist cultic worship.

எனவே சைத்யங்கள் அனேகமாக வட்ட வடிவமாக இருப்பதில்லை. அதன் சுற்றுப் பிரகாரங்களும் வட்ட வடிவமாக இருக்க வாய்ப்பில்லை. எனக்குத் தெரிந்து ஆந்திராவில் இருக்கும் குண்டுபள்ளி சைத்யம் வட்ட வடிவமாக இருக்கிறது. உலகப் புகழ் பெற்ற கர்லா, பாஜா, அஜந்தா, எல்லோரா சைத்யங்கள் வட்ட வடிவில் இல்லை.

இனி பர்கீஸ் உண்மையில் என்ன சொல்லியிருக்கிறார் என்பதைப் பார்ப்போம்.

Chjaityas (PAli, Chetiya. Like Sttipa, the word Chaitya is applied to a monument or cenotaph, and in a secondary sense to a temple or shrine containing  Chaitya or Dhatugarbha. ‘Chattyas or Da gabas are an essential feature of temples or chapels constructed for purposes of worship, there being a passage round the Chaitya for circumambulation (pradakshinaya) and from these such temples have received their appellation.

எனவே பர்கீஸ் வட்ட வடிவமாகத்தான் திருச்சுற்று இருக்கும் என்று சொல்லவில்லை. நம் கோவில் பிரதட்சணம் போன்ற சுற்றைத்தான் அவர் சொல்கிறார். அது வட்ட வடிவமாக இருக்க எந்தக் கட்டாயமும் இல்லை.

முடிவாக, நான் இந்து மதம் புத்த மதத்திலிருந்து எதையும் எடுத்துக் கொள்ளவில்லை என்று சொல்லவில்லை. இந்திய மதங்கள் அனைத்தும் ஒன்றை ஒன்று சார்ந்தும் எதிர்த்தும் வளர்ந்திருக்கின்றன. பரவியிருக்கின்றன. ஒரு மதத்தின் கோவிலை மற்றைய மதம் கையகப்படுத்தியிருக்கவும் வாய்ப்பு இருக்கிறது.  இந்து மதம் பரவலாக இருப்பதால் அது புத்தக் கோவில்களையும் சமணக் கோவில்களயும் தனதாக்கிக் கொண்டிருக்க அதிக வாய்ப்பு இருக்கிறது. ஆனால் இதை வைத்துக் கொண்டு பார்த்த கோவில்கள் எல்லாம் மாற்றப்பட்டவை என்று சொல்வது அறிவுப்பூர்வமான ஆராய்ச்சி ஆகாது.  உங்கள் அரசியலுக்கு ஆராய்ச்சி வளைந்துக் கொடுக்கும் என்று எதிர்பார்ப்பது தடித்தனம்..

My Review of Mr. Balakrishnan’s book – Journey of A Civilization

(The review appeared on 1 May 2020 in The Federal)

R Balakrishnan – Journey of a Civilization

Mr Balakrishnan’s  Journey of a Civilization is without doubt a publishing milestone. The book is impeccably produced and it has great charts and photographs. The style of the author is lucid and uncomplicated. He also has a delectable way of presenting his points upfront without padding them in academic mumbo jumbo. Even chapters that are technical in nature are generally readable without much difficulty. He has toiled selflessly for many years and his efforts are very much evident in the book.

The purpose of the book according to the author is this:

This book investigates the connections between two riddles – Indus authorship and the Tamil origins. It seeks to present an argument that not withstanding the spatial-temporal gaps, the ‘point’ at which Indus civilization ends and the point from where the extant ‘Sangam texts’ commences are probably one and the same. This book argues that these riddles are two sides of the same coin and the understanding the pre-history of India cannot be complete without realizing this connection.

We all know that the Indus Valley Civilization itself is a riddle, leave alone its end. What about the ‘Sangam Texts’? At what point do these texts commence? The truth is nobody has any idea. Depending on which camp you belong to, you could either push them back to 3rd century BCE or relegate them to 8th century CE, as Herman Tieken has done. In the Tamil country itself, it has been fashionable to try and push the dates of the Sangam corpus as far back as possible, without bothering about a trifle called proof. For instance, Tolkappiyam, the Tamil work of grammar, has been slotted rather arbitrarily to the 3rd BC or even earlier. But several scholars have dated it as far back as 4th Century CE.  Iravatham Mahadevan, to whom this book is dedicated, says it cannot be earlier than 2nd Century CE.  The first time its name is mentioned is in Irayanar Akapporul which is dated sometime after 8th century CE. It is the same story with the other works of Sangam.  In all probability, the corpus which is available to us was written between First Century BCE and 4th Century CE. It was compiled several centuries later. What is more, the urban societiy it portrays is strongly influenced by Vedic, Jain and Buddhist religions.  It speaks about Vedas and Veda- chanting Brahmins. Tolkappiyam speaks about them. Maduraikkanchi and Pattinappalai do too. Almost every god of the Hindu pantheon appears in these poems. Thus, one has to be very brave to make a claim that he has found a point where the Indus civilization ends and Sangam texts commence without the intruders from the Gangetic plains butting in and spoiling the show. The author is one such brave person. Let us analyze his claims.

A research paper was published in PNAS in the year 2016 which said that words with the same meanings in different languages often seemed to share the same sounds — even when those two languages were completely unrelated. They added, rather significantly, that it would be far too easy to come up with unfounded theories to explain such patterns. The more we looked into languages the more we learnt, the scientists said, that they were extremely complex.

The author tries to do something similar in his book. He finds patterns between the current place-names in the area where Indus valley civilization once prospered and the names used in the Sangam poems. This seems extremely contrived. Let me illustrate with a few examples. The name Korkai, the famous Sangam age port, is found in Afghanistan, the author says, with the slightly changed version of  Korkay and Korgay. But there is a Korka in Nepal, Korka in Madhya Pradesh. Korka also happens to be a European name. If I am not wrong, Korka is the name of a weed in Bengali.  Similarly, Tonti is the name of a town in the state of Arkansas in the US. It is also an Italian name.  Tondi is a village in the Bareilly district of UP and also a town in Estonia. Let us now take Vanji. It happens to be a language in Tajikistan. There is a Vanj river too. A town by the name of Vanci exists in the US. Akuto may be a place name in Pakistan, but it is also a Japanese name, meaning a bad man. Armanabad in Afghanistan is obviously derived from the urdu word (arman – the ultimate goal) rather than from Aruman Atti.  Tamil Nadu during the Sangam period was so thinly populated that an overwhelming majority of the present day towns and villages did not exist in the early years of the Common Era at all. It is farfetched to claim that their names signify the memories of the Indus valley. Moreover, if the same logic is applied  in the case of the present dat Indus valley, the people who moved in there were all outsiders and they would have carried their memories and named the towns and villages they founded in memory of the places they left.  India has more than 6,50,000 villages, Pakistan 45,000 and Afghanistan another 35,000. Since culturally India, Pakistan and Afghanistan share the same ancient heritage, some of the names are likely to be similar. In any case, there is absolutely no clue as to what the original names of the Indus valley cities and villages were. Whatever they were, these places were overrun many times over by various invaders and settlers. Thus, the present name of a place in Pakistan or Afghanistan, is unlikely to have anything to do with the name it might have carried,  when Indus civilization was in existence, if at all the place itself had existed then.

His second theory is that Indus citadels were usually built on the western side (high- west) and the dwellings on the eastern side (low-east) and this could be linked to the Tamil usage of mel and kil.  Mel means west and also an elevated place, while kil means East and also a low- lying place. There is a very simple explanation to this.  Tamil Nadu has mountains on the western side and the land slopes towards the sea on the eastern side. Major rivers of Tamil Nadu join the Bay of Bengal. In the case of Indus valley civilization, the citadels were built on the Western side, most probably because the enemies were likely to arrive from the west. Moreover, even in the Vedic mythology west is treated with some respect., Varuna, who is the god-sovereign and the personification of divine in the Vedas , is the god of the West.

Mr Balakrishnan’s third theory is even more strange. He says rather grandly that “BRW (Black and Red Ware) is the pan-Indian and Sangam literature is pan-Indian literature. The Pot Route that links Indus and Vaigai was made of clay, overlaid with burnt bricks and embellished with copper. It is the red-topped road to Tamil antiquity and the colour was a deep Dravidian red.”

Firstly, while it is true that Sangam literature had absorbed many pan-Indian elements and the Black and Red pottery is found all over India, there is a marked discontinuity in the usage of burnt bricks after the decline of the Indus Valley Civilization. The hiatus is more than one thousand and five hundred years. Burnt brick structures start appearing in the south only around 3rd/2nd Century BCE. What has been found in Keeladi too doesn’t support the claim that there is an unbroken road from the Indus Valley to Vaigai. In the Keeladi report published by the government of Tamil Nadu clearly states that the brick structures excavated belong to the early phase of the Christian era, by which time the Tamil country had come under the influence of the Vedic and other religions. Even this structure can hardly be called massive.  It is because of this inconvenient fact that Professor Rajan in his foreword to the report says, ‘One need not depend on brick structures alone for urbanization, as we could not come across any such massive brick structures even during medieval dynasties such as the Pallavas, Pandyas and Cholas.’  Secondly, it should be sobering to remember that there is not a single Tamil word signifying red brick in Sangam literature. The word செங்கல் appears much later in Tamil literature.   We have the word சுடுமண் which may or may not mean brick. In the entire corpus there are few passages which speak about copper walls, which the author says mean brick walls, but that remains just his surmise. Akananuru speaks of இட்டிகை which is a Tamil rendering of the Sanskrit work Ishtika.  Thus, the burnt brick route could have been laid from the Gangetic plains through the Satavahana empire right up to  the Tamil country.

Incidentally, the God of the Dravidian Red, Murukan, about whom the author writes with such passion is depicted to be a Vedic deity in Paripadal. He is born to பைங் கட் பார்ப்பான் – the Brahmin (Shiva) with lovely eyes.

I am not a for a moment suggesting that we don’t carry the memories of our Indus Valley ancestors. According to a study by Indian Institute of Technology Kharagpur, the Indus Valley civilisation remained under severe drought for about 900 years around 4,350 years ago, which led people to abandon their settlements and migrate to southern and eastern regions of India. This migration must have happened very slowly and not in large number. The  entire India must therefore be carrying  tiny slivers of  memory of the Indus valley civilization. The Tamil country is not alone. But carrying memories and continuing with the most essential material elements of a civilization are two different things.

The Indus Valley people were great builders. After the civilization’s decline, for many centuries, we do not find in India man-made structures as extensive as the ones found in places like Mohenjo-Daro. In Keeladi too, despite the propaganda blitz, there is scarcely any credible evidence that a city or even a significant brick structure existed at the site in the years preceding the Common Era. In fact,  in the entire South India, the earliest significant brick structure is the Amravati Stupa which belongs to the 3rd/2nd Century BCE.   

The author also makes an astounding statement that Sangam Tamil corpus emerges as the most ancient urban literature of India that intensely celebrated the life in the cities. The Sangam works like Madurai Kanchi and Pattinapalai that describe urban life date back to 3rd or 4th century AD. On the other hand,  leave alone Mahabharata and Ramayana, even some of the Jataka tales which describe urban life in much greater detail belong to the 3rd Century BCE.

To sum up, despite his awe-inspiring efforts, Balakrishnan has failed to prove that the Dravidian South stands as a sign-post of Indus legacy or that Sangam Tamil texts act as the flag-bearers and legacy holders of Indus urbanism. What is presented in the book, archaeology-wise or literature-wise, is not enough to arrive at such a revolutionary conclusion. Balakrishnan’s claims are extraordinary but extraordinary claims need extraordinary proof, which is unfortunately lacking in the book.  Yes, tomorrow may tell us a different story, but tomorrow is yet to come. I sincerely hope that it will belong to Balakrishnan and his theories.

P A Krishnan

திரு மகுடேசுவரனின் மறுப்புரைக்கு எதிர்வினை

திரு மகுடேசுவரனுக்கு பதில் சொல்வதற்கு முன்னால் சிலவற்றைத் தெளிவு படுத்த விரும்புகிறேன்.

(காலச்சுவடு செப்டம்பர் 2019ல் வெளியான என் கட்டுரையின் சில பகுதிகள் இங்கு இடம் பெறுகின்றன.)

ஹெரோடடஸ் வரலாற்றின் தந்தை என அறியப்படுபவர். பொது நூற்றாண்டு தொடங்குவதற்கு ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னால் (500 BCE) இருந்தவர். இவர் எழுதிய ‘வரலாறுகள்’ புத்தகம் மிகவும் புகழ் பெற்றது. எந்த இனம் பழைய இனம் என்பதை ஆராய்ச்சி செய்த எகிப்திய ஃபாரோ ஒருவரைப் பற்றிய செய்தியை இவர் இப்புத்தகத்தில் தருகிறார். இரண்டு பிறந்த குழந்தைகளை ஆடு மேய்ப்பவரிடம் கொடுத்து மொழிப் பரிச்சயமே இல்லாமல் ஃபாரோ வளர்க்கச் சொன்னார். அவர் ஒழுங்காக வளர்க்கிறாரா என்பதும் கண்காணிக்கப்பட்டது. இரண்டு வருடங்கள் கழித்து குழந்தைகள் ஒருநாள் ‘பெக்கோஸ்’ என்று சொல்லிக் கொண்டு ஓடி வந்தன. ஃபாரோ ‘பெக்கோஸ்’ என்ற சொல்லுக்கு ஃப்ரீஜியன் மொழியில் ரொட்டி என்று பொருள் என்பதை அறிந்தார். எனவே ஃப்ரீஜியன் இனம் எகிப்திய இனத்தை விட முந்தையது என்ற முடிவிற்கு வந்தார்.
இச்சோதனை அறிவுப்பூர்வமானது என்று சொன்னால் இன்று நம்ப முடியுமா? ஏன் நம்பக் கூடாது? முதலாவது, இது யாரோ சொன்ன கதை. இரண்டாவது, குழந்தைகள் சொன்னது ‘பெக்கோஸ்’தான் என்பதும் மேய்ப்பவர் சொல்லித்தான் தெரிகிறது. இது போன்ற ஆதாரங்களை வைத்துக் கொண்டு எந்த முடிவிற்கும் வர முடியாது என்றுதான் இன்றைய அறிவியலை அறிந்தவர்கள் சொல்வார்கள் ஆனால் இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்குப் பின்னரும் ஹெரோடடஸ் பேசுவதைப் போல தமிழில் சில அறிஞர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

மொழி என்றால் என்ன?
நம் எல்லோருக்கும் எழுத்துக்கு முன் பேச்சு வந்து விட்டது என்பது தெரியும். எப்போது மனிதன் பேசத் தொடங்கினான்? சுமார் ஒரு லட்சம் ஆண்டுகளுக்கும் முன்னால் இருக்கலாம் என வல்லுனர்கள் கருதுகிறார்கள். மனித குலம் ஹோமோ சேபியன்ஸ் என்று அறியப்படும் நிலையை அடைய பல லட்சம் ஆண்டுகள் ஆயின என்பதைக் கணக்கில் எடுத்துக் கொண்டால். ஒரு லட்சம் ஆண்டுகள் என்பது மிகவும் சமீபத்தியது. மனிதன் எழுதுவதற்கு முன்னால் வரையத் துவங்கி விட்டான். அவன் விட்டுச் சென்ற மகத்தான ஓவியங்களை – நாற்பதாயிரம் ஆண்டுகளுக்கு முந்தையவை – இன்றும் காணலாம். இதற்கு அடுத்தபடியாக அவன் தான் கொன்ற மிருகங்கள் எத்தனை என்பதற்குக் கணக்கு (மரத்திலோ அல்லது எலும்பிலோ செதுக்கி) வைத்துக் கொள்ளத் துவங்கினான். இம்முறை தோன்றி சுமார் முப்பதாயிரம் ஆண்டுகள் ஆகி விட்டன. அடுத்த வளர்ச்சியாக குறியீடுகள் பிறந்தன. களிமண் வடிவங்களால் அவன் குறியீடுகளைச் செய்யத் துவங்கினான். உதாரணமாக பந்து வடிவம் ஆட்டைக் குறிக்கலாம். மூன்று பந்துகள் மூன்று ஆடுகளைக் குறிக்கலாம். இவ்வாறு துவங்கித்தான் எழுத்திற்கும் பேச்சிற்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டு மொழிகள் வளர்ச்சியடைந்தன. அவை இருபரிமாணங்களில், சுவர் களிமண் சதுரம் போன்ற தளங்களில், எழுதப்படத் துவங்கின. தரப்படுத்தப்பட்ட எழுத்துக்கள் உருவாக பல நூறாண்டுகள் எடுத்திருக்க வேண்டும். உதாரணமாக நான் இங்கு ஆடு என்று தமிழில் எழுதினால் இதைப் படிக்கத் தெரிந்த எல்லோருக்கும் நான் குறிப்பிடுவது ஆடு என்று உடனே புரிந்து விடும். அதை மாடு என்று தவறாக யாரும் எடுத்துக் கொள்ள மாட்டார்கள். இவ்வாறு தரப்படுத்தப்பட்ட எழுத்துக்களைக் கூட்டாகச் சேர்த்து எழுதுவது பிறந்து அதிக ஆண்டுகள் ஆகி விடவில்லை. சுமார் ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால்தான் அவை பிறந்தன.

உலகின் பழைய மொழிகள் யாவை?
தமிழ் முதல்முதலாக எப்போது பேசப்பட்டது என்பதற்கு நம்மிடம் எந்தத் தரவுகளும் இல்லை. நமக்குக் கிடைத்திருக்கும் தமிழின் எழுத்து வடிவங்கள் என்று அறியப்படுபவை சுமார் 2300 ஆண்டுகள் பழமையானவை. எகிப்து மொழி எழுத்துக்கள் கொண்ட கல்லறைகள் அந்நாட்டில் தடுக்கி விழுந்தால் கிடைக்கின்றன். இவை மிகப்பழமையானவை. பல இன்றைக்கு 4700 ஆண்டுகளுக்கு (2700 BCE) முந்தையவை. அதாவது தமிழுக்கு 2200 ஆண்டுகள் பழமையானவை. இந்த 2200 ஆண்டுகளில் உலகெங்கும் சுமார் இருபத்து ஐந்து மொழிகளில் எழுத்துக்கள் கிடைத்திருக்கின்றன. இவற்றில் நமக்குப் பரிச்சயமான பழைய மொழிகளான எகிப்து, சுமேரியன், சீனம், அராமிக், ஹீப்ரூ, ஃபோனிஷியன், ஹிட்டைட், அக்கேடியன், கிரேக்கம் போன்ற மொழிகள் அடங்கும். இவற்றில் எழுதப் பட்டிருப்பவற்றில் பல வரலாற்றுத் தகவல்களைத் தருபவை. அக்கேடியன் மொழியில் 3800 ஆண்டுகளுக்கு முன்னால் பதிக்கப்பட்ட ஹம்முராபியின் சட்டம் (code of Hammurabi) 282 சட்டங்களை எழுத்து வடிவில் தந்திருக்கிறது. எனவே தமிழை உலகின் மிகப் பழைய மொழி என்று சொல்ல முடியாது. இதே போன்று சமஸ்கிருதத்தையும் உலகின் பழமையான மொழி என்று சொல்ல முடியாது.
இந்தியாவில் பேசப்பட்ட மொழிகள் எவை?
மொழிகளைப் பற்றிப் பேசும் முன்னால் நாம் ஒன்றைச் சொல்லியாக வேண்டும். பண்டைய வரலாற்றைப் பொறுத்த அளவில் சான்றுகள் என்று நமக்கு அளிக்கப்படுபவற்றில் பல எதையும் ஆணித்தரமாக நிறுவ உதவுவதில்லை. வேறு ஏதும் கிடைக்காததால் இவற்றைக் கட்டி அழ வேண்டியிருக்கிறது. இவற்றைப் போன்ற சான்றுகளை அறிவியற் துறைகளில் தொட்டுக் கூடப் பார்க்க மாட்டார்கள். எனவே சான்றுகள் கிடைத்து விட்டன, தமிழ் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மொழி, சமஸ்கிருதம் உலகிலேயே மூத்த மொழி என்றெல்லாம் சொல்லிக் கொண்டு மேலும் கீழும் குதிப்பது நகைப்பிற்குரியது. பெரும்பாலான சான்றுகள் இப்படி நடந்திருக்க வாய்ப்பு இருந்திருக்கலாம் என்று சொல்வதற்கு உதவியாக இருக்கின்றனவே தவிர, இப்படித்தான் நடந்தது என்று அறுதியாக நிறுவுவதற்கு உதவுவதில்லை. உலகம் முழுவதும் இதே கதை என்றாலும் இந்தியாவில் பண்டையக்காலத்தைக் குறித்து கிடைக்கும் சான்றுகள், எல்லோராலும் ஏற்கத்தக்க சான்றுகள் மிகவும் குறைவு. இந்திய வரலாற்றில் குறிப்பாக கால ஆராய்ச்சியும், மொழி ஆராய்ச்சியும், யார் எங்கிருந்து எங்கு சென்றார்கள் என்பது பற்றிய ஆராய்ச்சியும் பெரும்பாலும் ஊகங்களில் அடிப்படையிலேயே அமைந்திருக்கின்றன. அவை துறை வல்லுனர்களால் ஒப்புக்கொள்ளக் கூடிய ஊகங்களாக இருக்கலாம், அல்லது ஆமைகளைத் தொடர்ந்து தமிழன் உலகம் முழுவதும் சென்றான் போன்ற ஊகங்களாக இருக்கலாம்.
அறிவியல் என்ன சொல்கிறது?
தொல் இந்தியர்கள் என்று அறியப்படுபவர்கள் சுமார் 65000 ஆண்டுகளுக்கு முன்னால் இங்கு சேர்ந்தடைந்தவர்கள். ஆப்பிரிக்காவிலிருந்து கிளம்பியவர்கள். நம் மரபணுக்களில் ஐம்பதிலிருந்து அறுபது சதவீதம் மரபணுக்கள் தொல் இந்தியர்களைச் சார்ந்தவை என்று சோதனைகள் சொல்கின்றன. நமது பழங்குடி மக்களிடமிருந்து, தாங்கள் மிகவும் சுத்தமான பிராமணர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் வரை இது பொருந்தும்.

அறிவியல் சான்றுகளைக் கொண்டு வல்லுனர்கள் செய்யும் ஊகங்கள் என்ன?
இந்தியாவிற்கு வடமேற்கிலிருந்து வந்தவர்கள் தொல் இந்தியர்களுடன் கலந்து ஹரப்பா நாகரிகத்தை அமைத்தார்கள். இவர்களே தெற்கே வந்து இங்குள்ள தொல் இந்தியர்களுடன் கலந்து இன்று தென்னகத்தில் பரவலாக இருக்கும் தொல் தென்னிந்தியர்களாக (Ancestral South Indian) உருவானார்கள். இதே போன்று வட இந்தியாவிலும் இங்கிருப்பவர்களும் இன்று காகேசியர்கள், ஐரோப்பியர்கள், மத்திய ஆசியர்கள் என்று அழைக்கப்படுப்வர்களும் கலந்ததால் தொல் வட இந்தியர்களாக (Ancestral North Indians) உருவானார்கள். இந்தச் செய்தி முக்கியமான ஒன்றைச் சொல்கிறது. திராவிடர்கள் என்று நாம் இன்று சொல்லிக் கொள்ளும் தொல் தென்னிந்தியர்களும் வந்தேறிகள் பரம்பரைதான். இவர்கள் முன்னால் வந்தார்கள். தொல் வட இந்தியர்கள் பின்னால் வந்தார்கள். அவ்வளவுதான். தொல் இந்தியர்கள் இந்தியாவிலிருந்து மற்ற இடங்களுக்கு பரவியிருக்க முடியாதா? முடியாது என்றுதான் அறிவியற் தரவுகள் சொல்கின்றன. தொல் இந்தியர்களின் மரபணுக் கூறுகள் இந்தியாவிற்கு வெளியே அனேகமாக இல்லை.

இந்தப் பின்புலத்தில் பார்த்தால் இந்திய நிலப்பரப்பில் பல பகுதிகளில் மக்கள் குழுக்களாக வசிக்கத் துவங்கியதைச் சார்ந்து மொழிகள் உருவாயின. அவற்றிலிருந்து வந்தவைதான் இன்று பிழைத்திருக்கும் மொழிகள். எனவே இன்று பிழைத்திருக்கும் மொழிகளில் எந்த மொழியிலிருந்தும் மற்றைய மொழிகள் கிளைத்தன என்று கூறுவதற்கு வலுவான சான்றுகள் தேவை. தமிழை அவ்வாறு கூறுவதற்கு எந்தச் சான்றுகளும் இல்லை என்றுதான் உலக மொழி வல்லுனர்கள் கருதுகிறார்கள்.

இனி திரு மகுடேசுவரனின் மறுப்புரைக்கு வருவோம்:

இலக்கியச் சான்றுகளில் உள்ள தொடர்கள்வழியாகத் தமிழ்மொழி நிலைத்த நிலப்பரப்பினை வரையறுக்கிறீர்கள். வடவேங்கடத்திற்கு வடக்கே பேசப்படவில்லை என்பன இலக்கியச் சான்றுகள். இந்த வரையறை இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டு வரம்புக்குள் வந்துவிடுகிறது. அவ்வாறே இருக்கட்டும். பெண்ணையாற்றுக்குத் தெற்கே என்று அதன் வரம்பினைச் சற்றே நிறைவாய் வரையறுக்கலாம். அதற்கும் அப்பாலான பரப்பில் இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகட்குப் பிந்திய நிலையில் தமிழ்மொழி வழங்கப்படவில்லை என்பது உங்கள் தரப்பு. இருக்கட்டும். இந்தியாவின் மாபெரும் பேரரசான சாதவாகனப் பேரரசுக் காலத்தில் தமிழின் வடபுலத்து நிலை என்ன என்பது ஒரு வரையறை. கரும்பெண்ணை (கிருட்டிணை ஆறு) ஆற்றுப் படுகையில் இன்றைய நாகார்ச்சுன சாகர அணைக்கட்டுக்குள் மூழ்கிக் கிடக்கும் சாதவாகன அரசர்களின் தொல்லியல் எச்சங்கள் அணைக்கட்டின் நடுவேயுள்ள அருங்காட்சியகத்தில் காவற்பட்டுள்ளன. சாதவாகனச் சதகர்ணியான ஹாலா என்பவர் இயற்றியது காஹாசப்தசதி என்ற ஏழ்நூறு பாடல்களைக்கொண்ட நூல். அந்நூல் தமிழ்ச்சங்கத்தின் அகப்பாடல்களின் கருப்பொருள்களைக்கொண்டது. சாதவாகனர் நாணயங்களில் தமிழ் எழுத்துரு வகைமைகள் அந்த மொழிச்செல்வாக்கினை உணர்த்துவதாக இல்லையா?

காதா சப்தசதி அல்லது காஹா சத்தசாய் பற்றி வடமொழியிலும் தமிழிலும் புலமை மிக்க George L Hart கூறுவது இது:

This evidence taken together suggests strongly that both Tamil and Sanskrit derived their shared conventions, metres, and techniques from a common source, for it is clear that neither borrowed directly from the other. Tamil did not borrow from Sanskrit because many of the conventions appear first in Tamil, the metre is not native to Sanskrit (but is to Tamil),… And Sanskrit did not borrow from Tamil because clearly the Sanskrit writers were not acquainted with the Tamil tradition and because, again, the resemblance between the two literatures is not close enough to indicate direct borrowing. Moreover, the evidence shows that for the most part the shared elements entered the Indo-Aryan tradition in Maharastri Prakrit, the language of Hala’s Sattasai. It is of great significance that this southernmost of Prakrits was used in an area where Dravidian and Aryan languages came into contact, an area which even today is characterized by a mixture of North and South Indian customs, and in the Satavahana empire, which embraced Maharashtra and Andhra Pradesh, areas of Aryan and Dravidian speech. Archeologically, the area of Maharastri coincides with the northern limit of the Megalithic Civilization, which existed in South India primarily on the Deccan plateau in the first millennium B.C. and was characterized by uniformity over space and time. In other words, the culture of Maharasthra in the first centuries A.D. was a fusion of Aryan and Deccan (orDravidian). The early Tamil culture, on the other hand, was descended directly from the megalithic culture of South India; indeed, the poems even mention some of the burial practices which characterize the megalithic culture. Thus a case is made that the shared elements, or at least most of them, are taken by both Tamil and Sanskrit from the same megalithic culture of the Deccan.

எனவே ஹார்ட் தெளிவாக காதா சப்தசதி எழுதப்பட்ட மகராஷ்ட்ர பிராக்ருத மொழியும் தமிழ் மொழியும் தக்காண பீடபூமியில் இருந்த பெரும்கற்காலக் கலாச்சாரத்திற்கு கடன்பட்டவை என்று சொல்கிறார். அவர் காதசப்தசதி தமிழிலிருந்து கடன் வாங்கியதாகச் சொல்லவில்லை. மாறாக அவர் தமிழில் எழுத்துரு இன்றைக்கு சுமார் 2200 ஆண்டுகளுக்கு முன்னால் தோன்றினாலும் மொழி முதிர்ச்சி அடைந்து புலவர்கள் உருவாவதற்கு சில நூற்றாண்டுகள் எடுத்தன என்கிறார்:

Probably in the second or third century B.C., the Brahmi syllabary was introduced into Tamilnad. A few centuries after this practical writing system was adapted for Tamil, there arose a class of people called Pulavans, who wrote poems. Unlike the oral bards, these men were drawn almost exclusively from the higher classes.

சாதவாகன நாணயங்களில் தமிழ் எழுத்துரு இருப்பதற்குக் காரணம் அவர்கள் தமிழகத்தின் வடபகுதிகளில் ஆட்சி செலுத்தியதால் இருக்கலாம். நான் இன்னொரு கேள்வி கேட்கிறேன். சங்கத் தமிழ் அரசர்களின் நாணயங்கள் ஏன் பரவலாகக் கிடைப்பதில்லை? அதை வைத்துக் கொண்டு சங்க இலக்கிய அரசர்கள் உண்மையானவர்கள் இல்லை சொல்ல முடியுமா? தமிழ் மொழியின் தாக்கம் வேங்கடத்திற்கு வடக்கே இருந்திருக்கும் என்றால் அதற்கு உறுதியான சான்றுகள் தேவை.

சாதவாகனர்கட்கு முற்பட்ட காலத்தில், அசோகருக்கு அடுத்து வந்த அரசமரபினராகக் கலிங்கத்தை ஆண்ட மகாமேகவாகன மரபின் மூன்றாவது பேரரசன் காரவேலன் (கிமு193 – கிமு170) எழுதிவைத்துள்ள ஹாத்திகும்பாக் கல்வெட்டில் ‘தமிரதேக சங்காதம்’ என்ற சொற்றொடர் உள்ளது. பேரரசுக்குத் தெற்கின் பதின்மூன்று நூற்றாண்டுகளாக நிலவிய தமிழ் மன்னர்களின் கூட்டணியை முறியடித்தான் என்பது அதன் பொருள். அஃதாவது அசோகராலேயே முறியடிக்கப்படாத தமிழ் மன்னர்களின் கூட்டணி. எனில் அசோகரின் ஆட்சிக்கு முன்பான பதின்மூன்று நூற்றாண்டுகள்வரைக்கும் தமிழ் மன்னர்களின் ஆட்சிப்பெரும்பரப்பு கலிங்கம் வரைக்கும் நீண்டுள்ளது என்ன கொள்ளலாமே. அந்தக் காலகட்டம் தமிழோ தமிழின் வழிப்பட்ட கொடுந்தமிழோ அந்த நிலப்பரப்பில் நீண்டதற்கு வழியில்லையா ?

ஹாதிகும்பா கல்வெட்டை முழுவதும் படித்திருக்கிறீர்களா? இவர் இந்தியா முழுவதும் உள்ள அரசர்களை வென்றதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்தக் கல்வெட்டைப் படித்து அதற்கு பலவிதமான விளக்கங்கள் கூறப்பட்டிருக்கின்றன. இவரது காலம் பொது யுகம் முதல் நூற்றாண்டு என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். ஆனால் அவரை பொது யுகத்தின் முதல் நூற்றாண்டிற்கு முன் இன்றைய வரலாற்று ஆசிரியர்கள் யாரும் கொண்டு செல்லவில்லை. தமிரா என்பதை திராவிர என்று படிக்கக் கூடாது என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக அது 113 ஆண்டுகள் இருந்த கூட்டணியைக் குறிக்கிறதே தவிர 1300 ஆண்டுகள் என்று சொல்லவில்லை. இது கல்வெட்டு சொல்வது: and (he) thoroughly breaks up the confederacy of the T[r]amira countries of one hundred and thirteen years. அவர் சதகர்ணியுடன் போர் புரிந்ததையும் குறிப்பிடுகிறார். சாதவாகனா பேரரசு இருக்கும் போது தமிழர்கள் வேங்கடத்திற்கு வடக்கே எந்தப் பகுதியிலும் ஆண்டதாக எந்தச் சான்றுகளும் இல்லை. மேலும் தமிழ் அரசர்கள் ஒன்று சேர்ந்து கூட்டணி அமைத்ததாக எந்தச் சான்றும் தமிழகத்தில் கிடைக்கவில்லை. மாறாக சங்க இலக்கியம் அவர்கள் ஒருவருக்கு ஒருவர் செய்து கொண்டிருந்த போர்களைப் பற்றித்தான் பேசுகிறது.

இதற்கிடையே பிற அரசப்பெரும்பரவல்கள் பாலி, பிராகிருதம் என்று வடபுலத்தில் செல்வாக்குற்றதும் ஏற்புடைத்து. அதில் ஒன்றுதான் சாதவாகனப் பேரரசு. அவ்வாறு வடக்குப் பரவல் மிகுந்திருந்த தமிழோடு (அது தொல்தமிழாகவே இருக்கட்டும்) பிறமொழிப் பெயர்ச்சொற்கள் கலந்து கலந்து உருவானதே அந்தந்த நிலத்து இன்றைய மொழிகள். அதாவது தமிழொன்றே மொழிப்பெயர். பிற பெயர்கள் யாவும் அந்தந்த மொழி வழங்கப்பட்ட நிலத்தால் அழைக்கப்படும் மொழிப்பெயர்கள். தமிழ் மொழிக்குடும்பத்தின் (இங்கே தமிழ் என்பது வேண்டா எனில் திராவிட என்று போட்டுக்கொள்ளலாம்) இருபத்து நான்கு மொழிகளில் தமிழ், தெலுங்கு, கன்னடம் தவிர்த்த யாவும் மலைநாடுகளில் வழங்கப்பட்டுக்கொண்டிருக்கின்ற மொழிகள் என்பதையும் மறக்கக் கூடாது. எனில் காரவேலன் காலத்திற்கு முந்திய பதின்மூன்று நூற்றாண்டுகள் கலிங்கம்வரைக்கும் பரவியிருந்தது தமிழ்மன்னர்களின் கூட்டணியாயிற்றே. அசோகர் காலத்தில் தமிழ்மன்னர்கள் தென்புலத்தோடு வரம்புற ஒடுக்கப்பட்டார்கள் என்றே கொள்ளலாமே. பிறகுதானே சதகர்ணிகள் வருகிறார்கள் ? அவர்களுடைய வீழ்ச்சிக்குப் பிறகுதானே களப்பிரர்கள் வருகிறார்கள் ? இங்கே நாம் கருத வேண்டியது தமிழ் என்கின்ற ஒரு மொழியின் பெரும்பரவல் தென்னிந்தியா முழுவதும் பல்கிப் பரவியிருந்தது.

தமிழ் என்பதே (தொல்)மொழிப் பெயர் என்பதற்கு எந்தத் தரவுகளும் கிடையாது. 1300 ஆண்டுகள் என்று சொல்வது நகைக்கத்தக்க கற்பனை. கல்வெட்டு சொல்வது 113 ஆண்டுகள். இது தனித்தமிழ் வட்டங்களில் மட்டுமே செல்லுபடியாகும். தமிழ் என்ற மொழியின் பெரும்பரவல் தென்னிந்தியா முழுவதும் பல்கிக் பரவியிருந்தது என்று நீங்கள் சொன்னால் போதாது. உண்மையான மொழியியல் படித்த வல்லுனர்கள் சொல்ல வேண்டும். இன்று உலகளவில் பொருட்படுத்தத்தக்க எந்த வல்லுனரும் அவ்வாறு கூறவில்லை.

தென்னிந்திய தீபகற்பத்தில் காவிரிக்கு மேலே பார்த்தால் நடுநிலத்தில் (தீபகற்பத்தின் நடுப்பகுதியில்) வாழும் பெருவாழ்வு பெரிதாக இருக்கவில்லை. இன்றைக்கும் அந்த வெற்றுப்பெரும்பரப்பில் உலவினால் நாத்தள்ளிவிடும். அதனால் அரசுகள் கல்வெட்டுகள் இலக்கியங்கள் என்று தேடவேண்டியதுமில்லை. கடற்கரையை ஒட்டிய, ஆற்றங்கரையை ஒட்டிய வளவாழ்வே தொன்மக்களின் வாழ்வு என்பது கண்கூடு. அதற்காக தென்னிந்தியப் பேராறுகளின் நடுப்பகுதியில் வளவாழ்வு எங்கே என்று தேடினாலும் ஒன்றும் கிட்டாது. அவை சமவெளி சேர்ந்து கழிமுகத்தருகில் மென்னடை பழகினால்தான் வாழ்வினை அமைக்க முடியும். அதுதான் நம் அரசுகளின் நிலம். மொழிக்கும் நாகரிகத்திற்கும் வரலாற்றுக்கும் கல்வெட்டுகட்கும் இலக்கியங்களுக்கும் அதுதானே வாழ்நிலம் ? தமிழ்சார்ந்த ஒரு கல்வெட்டு மூவாயிரம் ஆண்டுகட்கு முந்தியதாக நடுப்பாலை நிலத்தில் எப்படிக் கிட்டும் ? இன்றைக்கும் அந்தப் பகுதிகளில் இரண்டு மாவட்டத் தலைநகரங்களுக்கிடையே வேறு ஊர்ப்புறங்களே இல்லாதபடி வெற்றுப்பெரும்பரப்புகளே. இந்தப் புவியியல் அடிப்படைகளைக் கணக்கில்கொள்ளாத வரலாற்றுக் கொள்கைகள் எப்படிச் செல்லுபடியாகும் ? அதனால்தான் எனது பள்ளிக் காலத்தில் வரலாற்றையும் புவியியலையும் ஒரே பாடமாக வைத்தார்கள்.

நடுப்பாலைவனமா? மசூலிப் பட்டினம் நடுப்பாலைவனமா? கிருஷ்ணா, கோதாவரி நதிகள் காவிரியை விட மிகப் பெரியவை. தமிழ் நாட்டோடு வணிகம் செய்ததைக் குறிப்பிடும் The Periplus Maris Erythraei (or ‘Voyage around the Erythraean Sea’) புத்தகம்தான் மசூலிபட்டினத்தையும் அதன் புகழ்பெற்ற மஸ்லின் துணியையும் குறிப்பிடுகிறது: About these places is the region of Masalia stretching a great way along the coast before the inland country; a great quantity of muslins is made there. 

அரிசி பயிரிடுதல் தமிழகத்திற்கு வருவதற்கு முன்னாலேயே கோதாவரி நதி சார்ந்த இடங்களுக்கு வந்திருக்க வேண்டும்.

The primary route that cultivated rice followed to the Indian subcontinent must have been from Assam down the Brahmaputra to the present day Bangladesh and the Indian State of West Bengal and Bihar. Rice must have dispersed further south on the Indian sub-continent, mainly following the eastern seashore. The Godavari valley, in particular, seems to have been suited for rice cultivation from the earliest times – Watabe Tadayo, in his paper on the ‘Origin and Dispersal of Rice in Asia’
(International Symposium on Civilizations Related to Rice Cultivation
in Asian Countries, Kyoto, 1983) quoted by K Narasimhalu in his book ‘Colonialism, Orientalism and the Dravidian Languages’.

எனவே ஆந்திர நிலப்பரப்பு பாலைவனமாக இருந்த போது தமிழகத்தில் பாலும் தேனும் ஓடிக் கொண்டிருந்தது என்று சொல்வது முழுத்தவறு. இவ்விடங்களில் தமிழ் பேசப்பட்டிருந்தால் ஏதாவது ஆதாரம் கிடைத்திருக்கும். ஏதும் கிடைக்கவில்லை என்பதுதான் உண்மை. தமிழ் இலக்கியமும் அவ்வாறு சொல்லவில்லை.

தமிழைத் தோற்றுவித்த தொன்மொழி என்று புரோட்டோ திராவிடக் கற்பனை ஒன்றினைச் சொல்கிறார்கள் பாருங்கள், அது முற்றிலும் தமிழ்மொழி. அந்தத் தமிழ் வடமொழியாளர் மொழியில் திராவிட என்று அழைக்கப்பட்டது. முன்னாள் தமிழ்மொழி என்பது அதன் பொருள். அந்த முன்னாள் தமிழ்மொழியின் செறிந்த வடிவமே தொல்காப்பியம் எழுதப் பயன்பட்ட மொழி. அந்த மொழியே சங்க இலக்கியத்தைத் தோற்றுவித்த மொழி. அதனால்தான் சங்க இலக்கியங்கள் அடிப்படைச் சொற்கள் நிரம்பிய ஆசிரியப்பாக்களாக இருக்கின்றன. ஒரு பாட்டுக்கு இரண்டே அசைகள் நிரம்பிய அடிப்படைச் சொற்கள்தாம் மணிகள். அதற்கு மேல் ஒரு சொல்லை உருவாக்க முடியாது. ‘கூறிக்கொண்டிருந்தபோது’ என்று ஒரு சங்க இலக்கியச் சொல் பயிலாது. கூறல் என்று அடிப்படையாக முடியும். தென்னாடங்கும் பரவியிருந்த அந்தத் தமிழ்மொழி (திராவிடம் மொழி) அந்தந்த நிலத்து வட்டாரப்பெருமொழியாக நிலைத்தது. காலப்போக்கில் அவற்றில் வடமொழிகள் பல கலந்தன. ஒலிப்புமுறைகள் திரிந்தன, மருவின, பிறழ்ந்தன, உறழ்ந்தன, எல்லாம் ஆயின. பிறகு பார்த்தால் வேற்று மொழிவடிவெடுத்து நிற்கின்றன. எழுத்து முறைகள் வளர்ச்சி பெற்ற பிறகு வளைகோடுகளை முதன்மையாகவும் சிறு கீறுகளைப் பின்னாகவும் வைத்து எழுதுகிறார்கள். தொல்காப்பியத்திற்குப் பல நூற்றாண்டுகள் கழித்தே கன்னட, தெலுங்கு இலக்கண நூல்கள் தோன்றுகின்றன. முதல் தெலுங்கு மொழிக்கவிஞர் யார் என்று பாருங்கள். நன்னையா என்ற பெயர். அவரோ பத்தாம் நூற்றாண்டினைச் சேர்ந்தவர். அந்தந்த மொழிகளின் முதல் நூல்கள் எவையெவை என்று பாருங்கள். அவை ஏன் முற்காலத்தனவாக இல்லை ? ஏனென்றால் அவை பிந்திய மொழிகள். முன்னாடி என்னவாக இருந்தன ? தமிழின் ஒரு பிரிவாய்க் கொடுந்தமிழாக இருந்தன. தமிழைத் தோற்றுவித்த பாட்டியிடமிருந்து வந்திருக்க முடியாதா ? அந்தப் பாட்டியும் தமிழ்தான். மொழியுலகில் பாட்டியும் செத்துப்போகமாட்டாள்தானே ? வாழ்வாளே. அப்படிச் செத்துப் போயிருந்தால் அந்தப் பாட்டி மொழியின் பத்தே பத்துச் சொற்களை இனங்காட்ட முடியுமா ? அந்தச் சொற்கள் தமிழ்மொழியில் இருக்கின்றனவா, இல்லையா என்று பார்த்துவிடுவோம். கன்னட, தெலுங்கு மொழிகளின் தலைசிறந்த சொற்களைத் தேர்ந்தெடுத்து வேர்ச்சொல் வரலாறு பார்ப்போமா ? அதற்குத் தமிழோடு தொடர்பிருந்தால் என்ன செய்யலாம் ? தமிழ்மொழியிலுள்ள வினைச்சொற்களின் பட்டியல் எடுப்போம். தெலுங்கு, கன்னட மொழிகளின் வினைச்சொற்களை எடுப்போம். மொழிகளின் உயிராக விளங்குபவை வினைச்சொற்கள். அவற்றின் தமிழ்த்தொடர்பினை, அல்லது தொடர்பின்மையைக் கண்டுபிடிப்போமா ? எதிலிருந்து எது வந்தது என்று கண்டுபிடித்துவிடலாமே. தமிழில் இலக்கியச் சான்றுகள் கொட்டிக் கிடக்கின்றனவே. இந்த மொழிகளின் இலக்கண அமைப்பினை ஆராய்ந்தால் ஆயிரம் செய்திகள் வெளிப்பட்டுவிடுமே. ஓர் உயிரினத்தின் மரபணுவை ஆராய்வது போன்ற அந்தந்த மொழிகளின் இலக்கணத்தை ஆராய்வது. இதுநாள்வரையிலான மொழியியலாளர்கள் தாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட மொழிகளின் இலக்கணத்தில் எவ்வளவு திறன்பட்ட பிறகு இதனைச் செய்தார்கள் என்பதும் இன்னொரு கேள்விக்குறி. அதனால் தமிழுக்கு எதிராக எதனையேனும் கருதுகோள்களை இறுக்கிப்பிடித்துக்கொண்டிருக்கலாமே தவிர, அது கொடுங்கனவுகளைத் தவிர்க்க உதவுமே தவிர, நடைமுறையில் துரும்பளவும் ஒத்துவராது. இவ்வளவு வாழ்வு கண்ட தமிழுக்கு ஒரு சிறப்பினைத் தருதவதற்கு ஏனிந்தத் தடுமாற்றம் ? என்னென்ன இடையூறுகளை ஏற்படுத்த முடியுமென்று தவிப்பானேன் ? புதிதாய் ஓர் ஆய்வினைச் செய்யப் புறப்பட்டால் நன்று, கடந்த நூற்றாண்டுக் கருதுகோள்கள் – மேலைத்தேய அணுகுமுறைகள், அவர்களின் கற்பனைக் கொள்கைகள் என்று காட்டும் பற்றுதல்களைத் தமிழின்பால் காட்டலாமே.

புரோட்டோ திராவிட மொழி கற்பனை என்றால் டார்வினின் கொள்கையும் கற்பனைதான். மனிதன் ஆப்பிரிக்காவிலிருந்து வெளியேறி உலகம் முழுவதும் பரவினான் என்று சொல்வதும் கற்பனைதான். நான் என் கொள்ளுத்தாத்தாவைப் பார்த்ததில்லை. அவர் படம், அவர் எழுதியது ஏதும் இருந்ததில்லை. அதனால் அவரே இல்லை என்று சொல்லி விட முடியுமா?

முதலில் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். தொல்காப்பியம் ஏதோ 2500 ஆண்டுகளுக்கு முந்தையது என்று தமிழகத்தில் மட்டுமே சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். தொல்காப்பியம் பொது யுகம் 4 நூற்றாண்டைச் சார்ந்தது என்று பல அறிஞர்கள் சொல்கிறார்கள். கன்னட அறிஞரான B G L Swamy மற்றைய தமிழ் இலக்கண நூற்கள் எழுதப்பட்ட காலத்திலேயே தொல்காப்பியமும் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்று சொல்கிறார். தொல்காப்பியத்தின் உரைகள் அனைத்து 12 13 ம் நூற்றாண்டில் எழுதப்பட்டவை என்பதை அவர் சுட்டிக் காட்டுகிறார். இதை Sheldon Pollock போன்ற அறிஞர்களும் ஆதரிக்கிறார்கள்.

இது ஐராவதம் மகாதேவன்: Tolkappiam not only describes ‘pulli’ as the natural (Iyarkai) adjunct of the basic consonant and the short vowels ‘e’ and ‘o’ but also uses the expression ‘pulli’ to denote the basic consonant itself by transfer of meaning. It is thus clear that this grammatical work must have been composed after the ‘pulli’ was invented and had become an integral part of Tamil writing. Judging from the available evidence of the earliest occurrences of ‘pulli’ from about the end of the 1st century A.D., Tolkappiam was composed most probably not earlier than the Late Tamil-Brahmi period (ca. 2nd -4th century A.D.).

இதே போல சங்க இலக்கியமும் எட்டாம் நூற்றாண்டில் பிறந்தது என்று டெய்கன் என்ற ஆசிரியர் புத்தகமே எழுதியிருக்கிறார்.

நம் கல்வெட்டுகளின் மொழிக்கும் சங்க இலக்கிய மொழிக்கும் தொடர்பே இல்லை என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். சிறிதும் இலக்கியத்தரம் இல்லாமல் பிழைகள் நிறைந்த கல்வெட்டுகள்தாம் நமக்குக் கிடைத்திருக்கின்றன. ஐந்தாம் நூற்றாண்டிற்குப் பிறகுதான் கல்வெட்டுகளில் மொழி சிறிதளவாவது திறனோடு கையாளப்படுகிறது. எனவே தமிழின் தொன்மையை நாம் வலுவாக உறுதி செய்து கொண்ட பிறகு அதிலிருந்து மற்றைய மொழிகள் கிளைத்தனவா என்பதைப் பார்க்கலாம்.

இது தெலுங்கு மொழியை பற்றி திரு நரசிம்மலு தன் புத்தகத்தில் சொல்வது:

Telugu is one of the ancient languages of India. The structure of its words comprising of two or three letters is simple. Most of the words end with U, I and A vowels.

எனவே தமிழைப் போலவே தெலுங்கும் எளிமையான அடிப்படைச் சொற்கள் கொண்ட மொழிதான்.

இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டால் தமிழ்தான் பழைய மொழி, அதிலிலிருந்துதான் மற்றைய திராவிட மொழிகள் கிளைத்தன என்று கூறுவது தமிழகத்தின் மட்டுமே செல்லுபடியாகும். வேறு யாரும் இதை ஒப்புக் கொள்ள மாட்டார்கள்.

கால்ட்வெல் தமிழின் தொன்மையைப் பற்றிப் பேசியதைக் குறிப்பிட்டிருக்கிறீர்கள். தமிழ் இலக்கியத்தின் தொன்மையைப் பேசிய அவரே தமிழ் இலக்கியத்தின் மிகப் பழமையான இலக்கியம் கூட பொது யுகம் எட்டாம் அல்லது ஒன்பதாம் நூற்றாண்டிற்கு முன்னால் இருக்க முடியாது என்கிறார். கூடவே திராவிட மொழிகளுக்கும் ஸிதியன் (Scythian) மொழிக்கும் தாய் ஒன்றாக இருக்கலாம் என்று சொல்கிறார்.

❌