Normal view

Received yesterday — 6 June 2025சிலிகான் ஷெல்ஃப்

ஒரு பழைய நாவல்

ய. மஹாலிங்க சாஸ்திரி எழுதிய நாமொன்று நினைக்க (1950) என்ற நாவல் இணையத்தில் கிடைக்கிறது.

மிஸ்டர் வேதாந்தம் பாணி நாவல். பணக்காரக் குடும்பத்து வாரிசு ராமநாதன். அவன் உயிர் நண்பன் சீதாராமன் ஏழைக் குடும்பத்தை சேர்ந்தவன். ராமநாதனின் அப்பாதான் அவனையும் படிக்க வைக்கிறார். ராமநாதனின் மாமாவுக்கு இது பிடிக்கவில்லை. தன் மகளை ராமநாதனுக்கு மணம் முடிக்க விரும்புகிறார். பல ஜோடிகள், கடைசியில் எல்லாருக்கும் திருமணம் ஆகிறது.

இந்த நாவலைப் படிக்கும்போதுதான் கல்கி, தேவன், லக்ஷ்மி போன்றவர்களின் அருமை புரிகிறது. கட்டுக்கோப்பாக ஒரு தொடர்கதை எழுதுவது கஷ்டம்தான். அதை சாதித்ததால்தான் அன்று இவர்கள் பிரபலமாக இருந்திருக்கிறார்கள். சாஸ்திரியும் முயன்றிருக்கிறார்தான், ஆனால் அவர்கள் தரத்தை எட்ட முடியவில்லை.

இந்தப் பதிவை எழுத நாவலின் ஒரு பாராதான் தூண்டுகோல். ராமநாதனின் மாமா சிவராமன் தன் மகள் செல்லத்தை ராமநாதனுக்கு மணம் முடிக்க விழைகிறார். ஆனால் ராமநாதனுக்கு உஷா மீது காதல். உஷா யார்? அதே சிவராமன் மாமாவின் வைப்பாட்டி மகள், தாசிக்கு பிறந்தவள். இது சிவராமனுக்கு தெரிய வரும்போது அவர் ராமநாதனுக்கு அறிவுரை சொல்கிறார் – நீ உஷாவை மணந்து கொள்ள விரும்புகிறாயே, வீட்டில் டிபன் சரியில்லை என்றால் கிளப்புக்கு போகலாம், ஆனால் வீடு என்று ஒன்று இருக்க வேண்டும், எனக்கு முறையாகப் பிறந்த பெண் செல்லத்தையே மணந்துகொள், செல்லம் வேண்டாமென்றால் வேறு “நல்ல குலப்பெண்ணாக” மணந்து கொள் என்கிறார்! விழுமியங்கள் எத்தனை மாறி இருக்கின்றன!

சாஸ்திரி எழுதிய டூவா சேர்த்தியா என்ற எளிய கதை புன்னகை வர வைக்கிறது.  ஒப்பந்தக் கல்யாணம் (1945) என்ற சிறுகதையும் இணையத்தில் கிடைக்கிறது.

சாஸ்திரி சமஸ்கிருத அறிஞர். தி.ஜா. இவர் போன்ற திறமைசாலி அபூர்வம் என்கிறாராம்.

முப்பது நாற்பதுகளுக்கான வணிக எழுத்து என்று மதிப்பிடுகிறேன். இந்த நாவலே கூட கலைமகளில் நாற்பதுகளில் தொடர்கதையாக வந்ததுதான்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் வணிக எழுத்து

தொடர்புடைய சுட்டிகள்:

தமயந்தி

தமயந்தி எழுதிய அனல்மின்மனங்கள் எனக்குப் பிடித்த சிறுகதைகளில் ஒன்று. எஸ்தர் சிறுகதையை திருப்பிப் போட்ட மாதிரி இருக்கும். கிழவியை என்ன செய்வது என்ற அதே கருதான். மகனுக்கும் வேண்டாம், மகளுக்கும் வேண்டாம். கடைசியில் மகன் அவளை பஸ் ஸ்டாண்டில் விட்டுவிட்டு போய்விடுகிறான். குரூரம் எத்தனை சிறப்பாக வந்திருக்கிறது? குறும்படமாகவும் வந்ததாம். (கழுவேற்றம்) இந்தப் பதிவை எழுதுவதற்கு காரணமே அந்தச் சிறுகதைதான். இணையத்தில் எங்காவது கிடைக்கிறதா?

அவரது சிறுகதைகள் பல விகடனில் எழுதப்பட்டிருக்கின்றன. என் கண்ணில் அவர் முயற்சிகள் எப்போதும் வெற்றி பெறவில்லை, ஆனால் அவர் இலக்கியம்தான் படைக்க முயல்கிறார்.

பிரபஞ்சன் “தமயந்தியின் சொற்சிக்கனம் அலாதியானது, தமிழ்க் கதைப் பரப்பில், அவர் அளவுக்குக் குறைவான சொற்களால் பெரிய சித்திரம் தீட்டிக் காட்டும் எழுத்து வன்மை மிகவும் குறைவானவர்களுக்கே சாத்தியப்பட்டிருக்கிறது” என்று பாராட்டி இருக்கிறாராம்.

அவரது சில சிறுகதைகள் சிறுகதைகள் தளத்தில் கிடைக்கின்றன. அவற்றில் அலர் நல்ல சிறுகதை, அம்பையை சில விதங்களில் நினைவுபடுத்தியது. ஜோதி பேசுவதைப் படிக்கும்போது சும்மா பூந்து விளாசும்மா என்று தோன்ற வைத்தது. பொதுவாகவே அவரது கதைகளில் கொஞ்சம் தைரியமான பெண்ணின், அடங்கிப் போகாத பெண்ணின் சித்தரிப்பு வரும்போது பிடிக்கிறது. உதாரணமாக காற்றில் பரவும் கதைகள் படிக்கலாம் ரகம்தான், ஆனால் நாயகியின் சித்தரிப்பு பிடித்திருந்தது. நூலிழை இறகுகள் கதையில் காட்டப்படும் ஆண்-பெண் ஈர்ப்பு, கைகூடாமல் போவது எல்லாம் நன்றாக இருக்கிறது. ஒரு கனவும் பாதி ஃபலூடாவும் இளமைக்கால ஏக்கங்களை நன்றாக விவரிக்கிறது. ஆனால் இவற்றில் ஏதோ நல்ல கூறுகள் இருக்கின்றனவே தவிர படித்தே ஆக வேண்டியவை என்று வகைப்படுத்தமாட்டேன்.

ஆனால் நான் படித்த இலுப்பைப்பூ ரகசியம், ஜன்னல், வாக்குமூலம், யானைக்கனவு, முள்வீடு, தனிமையின் வாசனை, கோட்டை காவல் நிலையம், தேனும் ஒரு கொயர் கோல நோட்டும், பிரட்சிநாதனும் பிராண்டட் ஷர்ட்டும், பீஃப் பிரியாணி, மாஹித் ஹிப்சன், 36 பெருமாள்புரம் எல்லாவற்றையும் சுமார் என்றுதான் தரப்படுத்துகிறேன்.

தமயந்தி இலக்கியம்தான் படைக்க முயல்கிறார், ஆனால் அனல்மின்மனங்கள் சிறுகதை மட்டும்தான் என் கண்ணில் தவறவிடக் கூடாத சிறுகதை.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் எழுத்தாளர்கள்

தொடர்புடைய சுட்டிகள்:

Received before yesterdayசிலிகான் ஷெல்ஃப்

தமயந்தி

தமயந்தி எழுதிய அனல்மின்மனங்கள் எனக்குப் பிடித்த சிறுகதைகளில் ஒன்று. எஸ்தர் சிறுகதையை திருப்பிப் போட்ட மாதிரி இருக்கும். கிழவியை என்ன செய்வது என்ற அதே கருதான். மகனுக்கும் வேண்டாம், மகளுக்கும் வேண்டாம். கடைசியில் மகன் அவளை பஸ் ஸ்டாண்டில் விட்டுவிட்டு போய்விடுகிறான். குரூரம் எத்தனை சிறப்பாக வந்திருக்கிறது? குறும்படமாகவும் வந்ததாம். (கழுவேற்றம்) இந்தப் பதிவை எழுதுவதற்கு காரணமே அந்தச் சிறுகதைதான். இணையத்தில் எங்காவது கிடைக்கிறதா?

அவரது சிறுகதைகள் பல விகடனில் எழுதப்பட்டிருக்கின்றன. என் கண்ணில் அவர் முயற்சிகள் எப்போதும் வெற்றி பெறவில்லை, ஆனால் அவர் இலக்கியம்தான் படைக்க முயல்கிறார்.

பிரபஞ்சன் “தமயந்தியின் சொற்சிக்கனம் அலாதியானது, தமிழ்க் கதைப் பரப்பில், அவர் அளவுக்குக் குறைவான சொற்களால் பெரிய சித்திரம் தீட்டிக் காட்டும் எழுத்து வன்மை மிகவும் குறைவானவர்களுக்கே சாத்தியப்பட்டிருக்கிறது” என்று பாராட்டி இருக்கிறாராம்.

அவரது சில சிறுகதைகள் சிறுகதைகள் தளத்தில் கிடைக்கின்றன. அவற்றில் அலர் நல்ல சிறுகதை, அம்பையை சில விதங்களில் நினைவுபடுத்தியது. ஜோதி பேசுவதைப் படிக்கும்போது சும்மா பூந்து விளாசும்மா என்று தோன்ற வைத்தது. பொதுவாகவே அவரது கதைகளில் கொஞ்சம் தைரியமான பெண்ணின், அடங்கிப் போகாத பெண்ணின் சித்தரிப்பு வரும்போது பிடிக்கிறது. உதாரணமாக காற்றில் பரவும் கதைகள் படிக்கலாம் ரகம்தான், ஆனால் நாயகியின் சித்தரிப்பு பிடித்திருந்தது. நூலிழை இறகுகள் கதையில் காட்டப்படும் ஆண்-பெண் ஈர்ப்பு, கைகூடாமல் போவது எல்லாம் நன்றாக இருக்கிறது. ஒரு கனவும் பாதி ஃபலூடாவும் இளமைக்கால ஏக்கங்களை நன்றாக விவரிக்கிறது. ஆனால் இவற்றில் ஏதோ நல்ல கூறுகள் இருக்கின்றனவே தவிர படித்தே ஆக வேண்டியவை என்று வகைப்படுத்தமாட்டேன்.

ஆனால் நான் படித்த இலுப்பைப்பூ ரகசியம், ஜன்னல், வாக்குமூலம், யானைக்கனவு, முள்வீடு, தனிமையின் வாசனை, கோட்டை காவல் நிலையம், தேனும் ஒரு கொயர் கோல நோட்டும், பிரட்சிநாதனும் பிராண்டட் ஷர்ட்டும், பீஃப் பிரியாணி, மாஹித் ஹிப்சன், 36 பெருமாள்புரம் எல்லாவற்றையும் சுமார் என்றுதான் தரப்படுத்துகிறேன்.

தமயந்தி இலக்கியம்தான் படைக்க முயல்கிறார், ஆனால் அனல்மின்மனங்கள் சிறுகதை மட்டும்தான் என் கண்ணில் தவறவிடக் கூடாத சிறுகதை.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் எழுத்தாளர்கள்

தொடர்புடைய சுட்டிகள்:

ந. பிச்சமூர்த்தி

பிச்சமூர்த்தியைப் பற்றி முன்னாலும் எழுதி இருக்கிறேன். ஒரு காலத்தில் பாரதியைத் தவிர்த்து நான் ரசித்த ஒரே நவீன காலக் கவிஞர் அவர்தான். (ஆனால் இன்று குயிலின் சுருதி புத்தகம் – கவிதைகள் – எனக்குத் தேறவில்லை)

பிச்சமூர்த்தியின் கவிதைகளில் எனக்கு மிகவும் பிடித்தது காதல். இன்று சரியாக வரிகள் நினைவில்லை. காதலன் வருவான், அன்று அலங்கரித்துக் கொள்ளலாம் என்று காத்திருக்கும் காதலி வீட்டுக்கு எதிர்பாராதவிதமாக காதலன் வருகிறான்.  வீடெங்கும் குப்பைகூளம், கை எங்கும் சமையல் மணம், வேளை பார்த்தா நாதர் வந்தார் அசடானேன் என்று சில வரிகளும் கேட்பது அல்ல காதல் தருவதுதான் காதல் என்று தரையில் அமர்ந்தார் என்றும், என்னைக் காணேன் என்ற முத்தாய்ப்பும் இன்னும் நினைவிருக்கின்றன. இது காதலா, பக்தனுக்கு கடவுள் காட்சி தருவதா? என்னைக் காணேன் என்ற முத்தாய்ப்பு என்னை மிகவும் கவர்ந்தது. சும்மா இரு சொல்லற என்றலுமே அம்மா பொருளொன்றும் அறிந்திலனே என்ற கந்தர் அனுபூதி வரிகளை நினைவுபடுத்துகிறது.

பிச்சமூர்த்தியின் கதைகளும் அப்படித்தான். எளிமையினால், காலாவதி ஆகிவிடாத முன்னோடித்தனத்தால், இன்று கிழவனாகிய எனக்கே மங்கலாகவே நினைவில் மிச்சமிருக்கும் ஒரு உலகத்தைக் காட்டுவதால் (உதாரணமாக: ஞானப்பால் சிறுகதையின் அன்னசத்திரம்), சிறு மின்னல் போல அடிக்கும் ஓரிரு வரிகளால் மனதைக் கவர்கின்றன. அவரது கதைகளின் எளிமை நம்மை ஏமாற்றிவிடலாம். ஆனால் அது மேலோட்டமான எளிமை மட்டுமே. உதாரணமாக ஞானப்பால் சிறுகதையை எளிய பண்டாரத்தில் விழிப்பு என்று எண்ணிவிடலாம். ஆனால் அது ஞானோதயம் என்று படித்தால் மனம் நிறைகிறது. அந்த மாதிரி கட்டங்களை மெலிதாகச் சொல்லிச் செல்வதுதான் அவரது பாணி. ஆன்மீகம் கீன்மீகம் என்பதில் பெரிய நம்பிக்கை இல்லாத என்னையே அந்தத் தருணத்தை ஆன்மீகமானதாக உணரச் செய்கிறார்.

ஆனால் அவரது சிறுகதைகளில் எதையும் நான் உலகத் தரமானது, மொழிபெயர்க்க வேண்டியது என்று கருதவில்லை. ஒன்று வேண்டுமானால் ஞானப்பால். அவர் என் கண்ணில் முன்னோடி சிறுகதை எழுத்தாளர்தான். தமிழ் இலக்கிய வரலாறு எழுதப்பட்டால் அவருக்கு ஓரிரண்டு பாராக்கள் கிடைக்கலாம், அவ்வளவுதான்.

பல கதைகள் படிக்கலாம் ரகம். (1961), இரட்டை விளக்கு

முதல் ஃபிடில் சிறுகதையை சாரு நிவேதிதா சிலாகிக்கிறார். என் கண்ணில் சுமார்தான்.

மாய மான் (1961), வரிசை விளக்கு (1961), வெறும் செருப்பு (1977), நெருப்புக்கோழிவானம்பாடி, வேப்பமரம், ஏணி, கணபதி துணை, கல் குமிழிகள், வண்டிக்காரர்கள், மண்ணாசை, பரிசு பெற்ற ஓவியம், பஞ்சகல்யாணி, மலடி மகன், கண்ணம்மா, வண்ணாத்திப்பூச்சி எல்லாம் சுமார்.

, ஈஸ்வர லீலை (1961), நெருக்கடி (1961), தலையெழுத்து (1961). ஒரு பேரட்டி (1961), கோர்ட்டு முத்திரை (1961), வயிறு, வலி, இலக்கிய வழக்கழகனார், கோணங்கள், புசிப்பு, புரட்சிகரமான ஓவியம், பெரிய கண், நாடகம் (1977), ஈயத்தவலை பேரம் (1977), ஆகாசத் தையல் (1977) போன்ற மிக எளிய கதைகளைத் தவிர்க்கலாம்.

அசோகமித்திரன் பிச்சமூர்த்தியைப் பற்றி சாஹித்ய அகடமிக்காக இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசையில் ஒரு அறிமுகப் புத்தகம் எழுதி இருக்கிறார்.

தொகுக்கப்பட்ட பக்கம்: பிச்சமூர்த்தி பக்கம்

தொடர்புடைய சுட்டிகள்:

டோனல்ட் லாம் கதைகள்

எர்ல் ஸ்டான்லி கார்ட்னர் எழுதிய பெர்ரி மேசன் கதைகள் ஒரு காலத்தில் மிகப் பிரபலமாக இருந்தன. 1970-இல் அவர் இறக்கும்போது  20-ஆம் நூற்றாண்டின் அதிகப் புத்தக விற்பனை அவர் புத்தகங்கள்தானாம். சிறு வயதில் விழுந்து விழுந்து படித்திருக்கிறேன். டைம் பாஸ் புத்தகங்கள். கிட்டத்தட்ட நூறு பெர்ரி மேசன் புத்தகங்கள் இருக்கலாம். எல்லா புத்தகங்களும் ஒரே மாதிரிதான் இருக்கும். சில படிக்க சுவாரசியமாகவும் இருக்கும். ஆனால் படித்த ஐந்தாவது நிமிஷம் மறந்தும் போய்விடும்.

எனக்கு பெர்ரி மேசன் கதைகளை விட டோனல்ட் லாம் துப்பறியும் கதைகள் பிடிக்கும். லாம் முன்னாள் வக்கீல், இன்னாள் துப்பறிபவன். பெர்த்தா கூல் நடத்தும் துப்பறியும் நிறுவனத்தில் பணி புரிகிறான், அதன் முக்கியத் துப்பறிவாளன் அவனே. சட்டத்தை வளைக்கத் தெரிந்தவன். எனக்குப் பிடித்தவை அப்படி ஒரு சட்ட நுணுக்கத்தை விளக்கி லாம் எப்படி சட்டத்தை வளைக்கிறான் என்று விவரிக்கும் கதைகளே. ஆனால் இவற்றை pulp fiction என்றுதான் வகைப்படுத்த வேண்டும்.

இருபது இருபத்தைந்து நாவல்கள் இருக்கும். அத்தனையும் படிக்கும் பொறுமை எல்லாம் இருபது இருபத்தைந்து வயதோடு போய்விட்டது. ChatGPT-யிடம் சிறந்த டோனல்ட் லாம் நாவல்கள் எவை என்று கேட்டேன், அது தந்த பட்டியல்:

  • Bigger They Come (1939). முதல் நாவல். லாம் வேலையும் பணமும் இல்லாமல் தவிக்கும்போது பெர்த்தா கூல் உதவி செய்கிறாள், அவளுடைய நிறுவனத்தில் சேர்கிறான். அமெரிக்காவில் ஒரு மாகாணத்தில் குற்றம் புரிந்துவிட்டு வேறு மாகாணத்தில் பிடிபட்டால் அவனை குற்றம் புரிந்த மாகாணத்திற்கு திரும்பிக் கொண்டு வருவதில் சில முறைமைகள் இருக்கின்றன. Rules of Extradition. தானே கொலையாளி என்று ஒத்துக் கொண்டாலும் அவனை தண்டிக்க முடியாதபடி extradition சட்டத்தில் இருக்கும் ஒரு ஓட்டையை இந்தப் புத்தகம் விவரிக்கிறது. இந்தப் புத்தகம் வெளியானதற்குப் பிறகு இந்த ஓட்டையை அடைக்க சட்டமே மாற்றப்பட்டதாம்.
  • The Count of Nine (1958) சுமாரான நாவல். இந்த முறை ஒரு கொலை, ஒரே மாதிரியான இரண்டு புத்தர் சிலைகள். நாலு பக்கத்துக்கு ஒரு முறை டோனல்ட் அதிபுத்திசாலி என்று யாராவது சொல்கிறார்கள். பஸ்ஸில் படித்துவிட்டு தூக்கிப் போட்டுவிடலாம்.
  • Double or Quits (1941) கொஞ்சம் இழுவை. ஆனாலும் படிக்கலாம். இந்த முறை ஒரு மருத்துவரின் மரணம். அவரது மனைவியின் நகைகள் திருடு போய்விட்டன, அவற்றை கண்டுபிடிக்க லாமை நியமிக்கிறார், அடுத்த நாளே இறந்து போய்விடுகிறார்.
  • The Knife Slipped (2016) கார்ட்னர் 1930களிலேயே எழுதிய நாவல். ஆனால் பிரதியைக் கண்டுபிடித்து தூசி தட்டி 2016-இல்தான் பதித்திருக்கிறார்கள். இதில் பெர்த்தாவுக்கு கொஞ்சம் பெரிய ரோல்.
  • Turn on the Heat (1940), Spill the Jackpot (1941), Top of the Heap (1952) எல்லாம் தண்டம்.

ChatGPT-க்கும் எனக்கும் ரசனையில் கணிசமான வித்தியாசம் இருக்கிறது! அதனால் ChatGPT பரிந்துரைத்த  Some Women Won’t Wait (1960), The Knife Slipped (2016) புத்தகத்தை தேடக் கூட இல்லை. இவற்றில் Knife Slipped கார்ட்னர் 1930களிலேயே எழுதிய நாவல். ஆனால் பிரதியைக் கண்டுபிடித்து தூசி தட்டி 2016-இல்தான் பதித்திருக்கிறார்கள்.

இவற்றைத்  தவிர கொஞ்சம் படிக்கக் கூடியவை

  • Beware the Curves (1956) நாவல் இன்னொரு ஓட்டையை விவரிக்கிறது. அமெரிக்க சட்டப்படி பொதுவாக கொலைக்கு காலவரம்பு (statute of limitations) கிடையாதாம். ஆனால் திட்டமிடப்படாத கொலைக்கு (manslaughter) காலவரம்பு உண்டாம். லாம் கொஞ்சம் அஜால்குஜால் வேலை பார்த்து அரசு தரப்பு வக்கீலை இது திட்டமிடப்படாத கொலை என்று ஒத்துக் கொள்ள வைக்கிறார். பிறகு காலவரம்பு கடந்துவிட்டது என்று சுட்டிக்காட்டி தன் கட்சிக்காரரை விடுவிக்கிறார்.
  • Up For Grabs (1964)-இல் கரு கொஞ்சம் சுவாரசியமானது. இன்ஷூரன்சை ஏமாற்றும் இரட்டை வாழ்க்கை வில்லன்; தன் காரை இடித்ததாகச் சொல்லப்படுபவனும் அவனேதான்!

மற்றவற்றில்

  • Give ‘Em the Ax (1944) இழுவைதான். ஆனாலும் படிக்கலாம். லாம் கொஞ்சம் சைட் அடிக்கும் ஒரு பெண்ணின் அபார்ட்மெண்டில் ஒரு பிணம். கடைசியில் சம்பந்தம் இல்லாத ஒரு பாத்திரம்தான் கொலையாளி என்று முடித்துவிடுகிறார்.
  • Gold Comes in Bricks (1940) போன்ற கதைகள் எல்லாம் டைம் பாஸ்.

கார்ட்னர் எழுதியவற்றில் எனக்கு இன்னும் பிடித்தவை லெஸ்டர் லெய்த் (Lester Leith) கதைகள். லெஸ்டர் திருடர்களிடம் திருடுபவன். அவனை உள்ளே தள்ள போலீஸ் முயன்று கொண்டிருக்கிறது. அவனிடம் உளவறிய ஒரு போலீஸ்காரனை அவனிடம் பட்லராக வேலை செய்ய அனுப்பி இருக்கிறது. இந்த சட்டகத்தை வைத்துக் கொண்டு ஜாலியாக கதைகள் எழுதி இருக்கிறார். Monkey Murder Case போன்றவற்றை சொல்லலாம். பல கதைகள் எழுதி இருந்தாலும் இவை இப்போது கிடைப்பது அரிதுதான். எலரி க்வீன் தொகுத்த ஒரு புத்தகம் – Amazing Adventures of Lester Leith – மட்டுமே இன்னும் கிடைக்கிறது. இதே சட்டகத்தில் வேறு பாத்திரங்களை வைத்து Kid Clips.a Coupon போன்ற சிறுகதைகளையும் எழுதி இருக்கிறார். சில pulp கதைகளையும் (எட் ஜெங்கின்ஸ் கதைக) எழுதி இருக்கிறார், சகிக்க முடியாதவை.

கார்ட்னர் பதின்ம வயதிலேயே டைம் பாஸ் என்ற அளவில்தான் இருந்தார். இப்போது மீள்வாசிப்பெல்லாம் நாஸ்டால்ஜியாவால்தான். தவிர்த்துவிடலாம். ஒரே ஒரு புத்தகம் முயற்சித்துப் பார்ப்பதென்றால் Bigger They Come புத்தகத்தைப் படித்துப் பாருங்கள்.

தொகுக்கப்பட்ட பக்கம்: துப்பறியும் கதைகள்

பிடித்த SF சிறுகதை: ஃப்ரெடெரிக் ப்ரௌன் எழுதிய Arena

இந்தச் சிறுகதையை என் பதின்ம வயதுகளில் முதல் முறையாகப் படித்தேன்.

நேரான, சிம்பிளான கரு/கதை. பூமிக்கும் இன்னொரு கிரகத்துக்கும் போர். மனிதர்களின் பிரதிநிதியாக ஒருவன், வேற்று கிரகத்து பிரதிநிதியாக பல வளையும் கரங்கள் (tenatcles) கொண்ட உருண்டு செல்லும் கோளம் இருவருக்கும் நடுவில் துவந்த யுத்தம். அவ்வளவுதான் கதை.

அப்போதெல்லாம் மாபெரும் வீரனாக உலகை வெல்ல வேண்டும் என்றெல்லாம் கனவிருந்தது. சில நூறாண்டுகளுக்கு முன்னால் பிறக்காமல் போய்விட்டோமே என்று கொஞ்சம் வருத்தம். இந்தச் சிறுகதை என்னைக் கவர்ந்ததில் என்ன வியப்பு!

1944-இல் எழுதப்பட்ட சிறுகதை. பின்னாளில் ஸ்டார் ட்ரெக் தொலைக்காட்சித் தொடர் இந்தச் சிறுகதையை ஒரு அத்தியாயத்துக்கு (episode) பயன்படுத்திக் கொண்டது. 1965-க்கு முற்பட்ட 20 சிறந்த SF சிறுகதைகளில் ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.

இன்றும் பிடித்துத்தான் இருக்கிறது. படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

ப்ரெடெரிக் ப்ரௌனின் ஒரு இரண்டு வரி சிறுகதை – Knock – மிகவும் புகழ் பெற்றது.

Imagine all human beings swept off the face of the earth, excepting one man. Imagine this man in some vast city, New York or London. Imagine him on the third or fourth day of his solitude sitting in a house and hearing a ring at the door-bell!

அவ்வளவுதான் கதை!

இந்தப் பதிவை எழுதும்போது Dark Interlude என்ற சிறுகதையையும் படித்தேன். நல்ல கரு. எதிர்காலத்திலிருந்து வரும் ஒருவன் இன்றைய அமெரிக்காவில் ஒரு பெண்ணை மணக்கிறான். அவன் கால்பகுதி கறுப்பன், மணந்தது வெள்ளை இனப் பெண். அவன் உடலில் நீக்ரோ ரத்தம் ஓடுவது தெரியும்போது வெள்ளையர்கள் உயர்ந்தவர்கள் என்ற மனநிலை உள்ளவர்கள் அதை எப்படி எதிர்கொள்வார்கள்? ஆனால் என் கண்ணில் நன்றாக எழுதப்படவில்லை.

Cry Silence என்ற இன்னொரு சிறுகதையும் கிடைத்தது. தனக்கு கேட்கும் திறன் போய்விட்டது என்று கதை கட்டிவிட்டு தன் மனைவி, அவளது காதலன் தங்களைக் காப்பாற்றும்படி கூச்சலிட்டது கேட்கவில்லை என்னும் கணவன். நல்ல கரு, ஆனால் இன்னும் சிறப்பாக எழுதி இருக்கலாம் என்று தோன்ற வைத்தது.

தொகுக்கப்பட்ட பக்கம்: SF

ந. பிச்சமூர்த்தி

பிச்சமூர்த்தியைப் பற்றி முன்னாலும் எழுதி இருக்கிறேன். ஒரு காலத்தில் பாரதியைத் தவிர்த்து நான் ரசித்த ஒரே நவீன காலக் கவிஞர் அவர்தான். (ஆனால் இன்று குயிலின் சுருதி புத்தகம் – கவிதைகள் – எனக்குத் தேறவில்லை)

பிச்சமூர்த்தியின் கவிதைகளில் எனக்கு மிகவும் பிடித்தது காதல். இன்று சரியாக வரிகள் நினைவில்லை. காதலன் வருவான், அன்று அலங்கரித்துக் கொள்ளலாம் என்று காத்திருக்கும் காதலி வீட்டுக்கு எதிர்பாராதவிதமாக காதலன் வருகிறான்.  வீடெங்கும் குப்பைகூளம், கை எங்கும் சமையல் மணம், வேளை பார்த்தா நாதர் வந்தார் அசடானேன் என்று சில வரிகளும் கேட்பது அல்ல காதல் தருவதுதான் காதல் என்று தரையில் அமர்ந்தார் என்றும், என்னைக் காணேன் என்ற முத்தாய்ப்பும் இன்னும் நினைவிருக்கின்றன. இது காதலா, பக்தனுக்கு கடவுள் காட்சி தருவதா? என்னைக் காணேன் என்ற முத்தாய்ப்பு என்னை மிகவும் கவர்ந்தது. சும்மா இரு சொல்லற என்றலுமே அம்மா பொருளொன்றும் அறிந்திலனே என்ற கந்தர் அனுபூதி வரிகளை நினைவுபடுத்துகிறது.

பிச்சமூர்த்தியின் கதைகளும் அப்படித்தான். எளிமையினால், காலாவதி ஆகிவிடாத முன்னோடித்தனத்தால், இன்று கிழவனாகிய எனக்கே மங்கலாகவே நினைவில் மிச்சமிருக்கும் ஒரு உலகத்தைக் காட்டுவதால் (உதாரணமாக: ஞானப்பால் சிறுகதையின் அன்னசத்திரம்), சிறு மின்னல் போல அடிக்கும் ஓரிரு வரிகளால் மனதைக் கவர்கின்றன. அவரது கதைகளின் எளிமை நம்மை ஏமாற்றிவிடலாம். ஆனால் அது மேலோட்டமான எளிமை மட்டுமே. உதாரணமாக ஞானப்பால் சிறுகதையை எளிய பண்டாரத்தில் விழிப்பு என்று எண்ணிவிடலாம். ஆனால் அது ஞானோதயம் என்று படித்தால் மனம் நிறைகிறது. அந்த மாதிரி கட்டங்களை மெலிதாகச் சொல்லிச் செல்வதுதான் அவரது பாணி. ஆன்மீகம் கீன்மீகம் என்பதில் பெரிய நம்பிக்கை இல்லாத என்னையே அந்தத் தருணத்தை ஆன்மீகமானதாக உணரச் செய்கிறார்.

ஆனால் அவரது சிறுகதைகளில் எதையும் நான் உலகத் தரமானது, மொழிபெயர்க்க வேண்டியது என்று கருதவில்லை. ஒன்று வேண்டுமானால் ஞானப்பால். அவர் என் கண்ணில் முன்னோடி சிறுகதை எழுத்தாளர்தான். தமிழ் இலக்கிய வரலாறு எழுதப்பட்டால் அவருக்கு ஓரிரண்டு பாராக்கள் கிடைக்கலாம், அவ்வளவுதான்.

பல கதைகள் படிக்கலாம் ரகம். (1961), இரட்டை விளக்கு

முதல் ஃபிடில் சிறுகதையை சாரு நிவேதிதா சிலாகிக்கிறார். என் கண்ணில் சுமார்தான்.

மாய மான் (1961), வரிசை விளக்கு (1961), வெறும் செருப்பு (1977), நெருப்புக்கோழிவானம்பாடி, வேப்பமரம், ஏணி, கணபதி துணை, கல் குமிழிகள், வண்டிக்காரர்கள், மண்ணாசை, பரிசு பெற்ற ஓவியம், பஞ்சகல்யாணி, மலடி மகன், கண்ணம்மா, வண்ணாத்திப்பூச்சி எல்லாம் சுமார்.

, ஈஸ்வர லீலை (1961), நெருக்கடி (1961), தலையெழுத்து (1961). ஒரு பேரட்டி (1961), கோர்ட்டு முத்திரை (1961), வயிறு, வலி, இலக்கிய வழக்கழகனார், கோணங்கள், புசிப்பு, புரட்சிகரமான ஓவியம், பெரிய கண், நாடகம் (1977), ஈயத்தவலை பேரம் (1977), ஆகாசத் தையல் (1977) போன்ற மிக எளிய கதைகளைத் தவிர்க்கலாம்.

அசோகமித்திரன் பிச்சமூர்த்தியைப் பற்றி சாஹித்ய அகடமிக்காக இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசையில் ஒரு அறிமுகப் புத்தகம் எழுதி இருக்கிறார்.

தொகுக்கப்பட்ட பக்கம்: பிச்சமூர்த்தி பக்கம்

தொடர்புடைய சுட்டிகள்:

ஒரு பழைய திமுக எம்எல்ஏ

அரங்கண்ணலை இன்று வெகு சிலருக்கே நினைவிருக்கும். திமுகவின் முக்கியத் தலைவர்களோடு வெகு நெருக்கமாக இருந்தவர், அண்ணாவுக்கு மூத்த மகன் ஸ்தானத்தில், கருணாநிதிக்கு தம்பி மாதிரி இருந்தவர். ஆனால் பெரிய பதவி எதுவும் வகிக்கவில்லை. குடிசைமாற்று வாரியத் தலைவராக இருந்ததுதான் அவருக்குக் கிடைத்த பெரிய பதவி.

அரங்கண்ணல் திரைப்படத் தயாரிப்பாளர். பூவா தலையா, அனுபவி ராஜா அனுபவி என்று சில படங்களதி தயாரித்திருக்கிறார். பாலசந்தரின் கல்லூரிக் கால நண்பர். மரோ சரித்ராவும் இவர் தயாரித்ததுதானா என்று நினைவில்லை.

அரங்கண்ணல் தன் சுயசரிதையை நினைவுகள் என்ற பேரில் எழுதி இருக்கிறார். எழுபது வரைக்குமாவது – எம்ஜிஆர் திமுகவிலிருந்து நீக்கப்படும் வரைக்குமாவது – அது உண்மையாகத்தான் தெரிகிறது. அதற்குப் பிறகு கொஞ்சம் பூசி மெழுகி இருக்கிறார்தான்.

அரங்கண்ணல் கோனார் ஜாதியில் பிறந்தவர். பெரிய மிராசுதார் இல்லைதான், ஆனால் வசதியான குடும்பம். இவரைப் பெரிய படிப்பு வைக்க வேண்டும் என்று வீட்டாருக்கு ஆசை. பள்ளிக்காலத்தில் தமிழ்ப்பேச்சு, கட்டுரை என்று சில பரிசுகள் கிடைத்திருக்கின்றன. கருணாநிதி பள்ளியில் இவருக்கு சீனியர். 12-13 வயதில் காங்கிரஸ்தான் இவரை ஈர்த்திருக்கிறது. ஆனால் கருணாநிதி பள்ளிக் காலத்திலேயே ஹீரோ போலிருக்கிறது. மெதுமெதுவாக கருணாநிதியால் ஈர்க்கப்பட்டிருக்கிறார். இளம் வயதிலேயே திராவிடக் கழகத்திற்காக மும்முரமாக செயல்பட ஆரம்பித்திருக்கிறார். அங்கங்கே மாநாடு, கூட்டம், மாணவர் மாநாடு என்று அலைந்திருக்கிறார். கருணாநிதியும் இவரை ஊக்குவித்திருக்கிறார்.

அன்றைய திராவிடக் கழகத் தலைவர்களில் அய்யாவும் (ஈ.வெ.ரா.) அண்ணாவும்தான் நாயகர்கள். அவர்களை சந்திக்க வேண்டும், கூட்டங்களுக்கு அழைத்து வர வேண்டும், பேச வைக்க வேண்டும் என்றெல்லாம் ஆசை. அண்ணா இரண்டு மூன்று முறை கூட்டத்தில் பேச வருகிறேன் என்று சொல்லிவிட்டு வரவில்லை. ஆனால் வந்தபோது மனதில் இருந்த வருத்தம் எல்லாம் போய்விட்டதாம்.

பள்ளிப் படிப்பு முடிந்தது. அண்ணாமலை பல்கலைக்கழகம்தான் அன்று திராவிட இயக்க சார்புடைய மாணவர்களுக்கு வசதியாம். பின்னால் சபாநாயகராக இருந்த மதியழகன் அங்கே அறிவிக்கப்படாத திராவிட இயக்கத் தலைவர். அரசியலில் ஆர்வம் இல்லாத பாலசந்தர் இவருக்கு சீனியர், அவர் அறையில் நிறைய அரட்டை அடிப்பாராம். அங்கே ஒரு முறை மாணவர்களுக்கும் ஊராருக்கும் ஏற்பட்ட சண்டையை விவரிக்கிறார், மாணவர்களுக்கு இருக்கும் கொஞ்சம் திமிர் அருமையாக விவரிக்கப்பட்டிருக்கிறது. பிறகு அய்யாவின் பத்திரிகையில் வேலை. (ஈ.வெ.கி. சம்பத் இண்டர்மீடியட்டில் ஃபெயிலாம், பிறகு பட்டப்படிப்பு வரைக்கும் போயிருக்கிறார். ஈ.வெ.ரா.வுக்கு ரொம்ப கோபமாம்) அய்யா திருமணம் என்று அறிவித்தபிறகு ஏறக்குறைய அழுதிருக்கிறார். கிழவர்கள் இளைஞிகளை மணக்கக் கூடாது என்று அய்யா பேசிய பேச்சை எடுத்து அய்யாவின் பத்திரிகையில் போட்டிருக்கிறார்.ராஜினாமா செய்ததை அய்யா சுலபத்தில் ஏற்கவில்லை. ஆனால் பிடித்த பிடியை விடவில்லை. காஞ்சிபுரம் போய்விட்டார்.

1946-இல் மதுரையில் திராவிடர் கழக மாநாடு நடக்க ஏற்பாடுகள். அங்கே பயங்கர அடிதடியாம். வைத்தியநாத ஐயர் தூண்டுதலால் திராவிடக் கழகத்தினர் மீது கடுமையான தாக்குதல் நடந்ததாம்.

அண்ணாவின் திராவிடநாடு பத்திரிகையின் பொறுப்பு இவர் மீது விழுந்திருக்கிறது. எட்டு ஆண்டுகள் பொறுப்பேற்றுக் கொண்டு அண்ணா மெச்சும்படி சிறப்பாக செயல்பட்டிருக்கிறார். அண்ணாவின் குடும்பத்தினரும் மிகவும் பாசமாக இருந்திருக்கிறார்க்ள்.

அண்ணா திமுகவை ஆரம்பிக்க நிறையவே யோசித்தாராம். அய்யாவை எதிர்க்க அவருக்கு கொஞ்சம் தயக்கம் இருந்ததாம். எல்லாரையும் அரவணைத்துக் கொண்டு போவாராம். சம்பத் கொஞ்சம் ஈகோ உள்ளவராம். என்.எஸ். கிருஷ்ணன் போதையில் ஒரு முறை அண்ணாவை கன்னாபின்னா என்று திட்டிவிட்டாராம், அதை சம்பத் அண்ணாவிடம் கோள் மூட்டிவிட்டாரம். அதற்காக என்எஸ்கே நாசூக்காக மன்னிப்பு கேட்டாராம். நெடுஞ்செழியன், மதியழகன், அன்பழகன் என்று பலரையும் பற்றி அவர் போகிற போக்கில் விவரிப்பது உண்மையாக இருக்கிறது.

ஆசைத்தம்பி ஐம்பதுகளில் போராட்டங்களுக்காக சிறை சென்ற முதல் சில திமுக்காரர்களில் ஒருவர். அவருக்கு சிறையில் மொட்டை அடிக்கப்பட்டது. அதை பத்திரிகையில் அரங்கண்ணல் பதித்து சர்ச்சை ஆகி இருக்கிறது.  பின்னாளில் ஆசைத்தம்பி ஒரு முறை அண்ணாவை கடுமையாகத் தாக்கினாராம். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அண்ணா மீது அழுத்தம் தரப்பட்டதாம். அண்ணா எனக்கு கட்சிக்காக மொட்டை அடிக்கப்பட்ட ஆசைத்தம்பிதான் தெரிகிறான், என்னைத் தவறாகப் பேசும் ஆசைத்தம்பி அல்ல என்று எல்லாரையும் அடக்கினாராம். சம்பத் முரண்டு பிடித்தபோதெல்லாம் கொஞ்சம் விட்டுக்கொடுத்து போயிருக்கிறார்.

பணம் அண்ணா போன்றவர்களுக்கு பெரிய பிரச்சினை. மூன்றாம் வகுப்பு ரயில் பிரயாணம்தான் அனேகமாக. அதுவும் கூட்டங்களுக்கு அழைப்பவர்கள் சில சமயம் பணம் தராத சூழ்நிலை.

எல்லாரையும் போல இவரையும் சினிமா இழுத்திருக்கிறது. கதை வசனம் எழுதி இருக்கிறார். எம்ஜிஆர் நடித்த தாய் மகளுக்கு கட்டிய தாலி உட்பட. எதுவும் பெரிதாக ஓடவில்லை. ராசியில்லாத எழுத்தாளர் என்று கருதப்பட்டிருக்கிறார். பீம்சிங்குடன் நல்ல பழக்கம். அவரது “கதை இலாகாவில்” இருந்திருக்கிறார். பச்சை விளக்கு திரைப்படத்தில் ஓரளவு பங்களிப்பு இருந்ததாம்

1962-இல் மயிலாப்பூர் எம்எல்ஏ. நல்ல பேர் வாங்கி இருக்கிறார். குப்பத்து மக்களிடமும் படித்தவர்களிடம் செல்வாக்கு ஏற்பட்டிருக்கிறது. அப்போதுதான் திரைப்படத் தயாரிப்பு. பெரிய பணக்காரர் ஆக முடியவில்லை. கடன் வாங்கி வீடு வாங்கி இருக்கிறார், பிறகு விற்க வேண்டிய சூழ்நிலை. அன்றைய தொழிலமைச்சர் ஆர். வெங்கடராமன் உதவியால் மீண்டும் கொஞ்ச்ம் நிலம் வாங்கி இருக்கிறார். அதில்தான் வீடு கட்டிக் கொண்டாராம். ஊழல் செய்யாதவர் என்றுதான் தோன்றுகிறது.

1967-இல் அண்ணா முதல்வர் ஆனபோது அண்ணா நெருக்கமான பலரை மந்திரி ஆக்கத் தயங்கி இருக்கிறார். இவர், அன்பழகன், என்.வி. நடராஜன் என்று பலர். ஆனால் அண்ணாவுக்கு காரியதரிசி போல வேலை பார்த்திருக்கிறார்.

பிறகு குடிசைமாற்று வாரியத் தலைவர் பதவி. கடுமையாக உழைத்திருக்கிறார் என்று தெரிகிறது. ஆனால் ஆட்சியில் ஊழலே இல்லை என்று முழுப் பூசணிக்காயை சோற்றில் ம்றைக்கிறார். எம்ஜிஆரை கட்சியிலிருந்து விலக்கக் கூடாது என்று அழுதாராம். கருணாநிதிக்கு எம்ஜிஆரை நீக்க வேண்டும் என்று ஆசை இருந்தாலும் கொஞ்சம் தயக்கம் இருந்தது, நெடுஞ்செழியன் போன்றவர்கள்தான் இதற்கு முக்கியக் காரணம் என்கிறார்.

நெருக்கடி நிலை காலத்தில் கொஞ்சம் பயந்திருப்பாரோ என்று தோன்றுகிறது. அப்போதுதான் தன் உயிர் நண்பரிடம் கொஞ்சம் விலக்கம் ஏற்பட்டிருக்கிறது. பிறகு அதிமுகவுக்குப் போய், திமுகவுக்கு மீண்டிருக்கிறார்.

மூன்றாம் நிலை தலைவர்தான். அண்ணாவுக்கு அணுக்கமாக இருந்தவர், அவரை அருகிலிருந்து பார்த்தவர். அண்ணாவைப் பற்றி அவர் தரும் சித்திரம் அருமையாக இருக்கிறது. அதற்காகவே படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் அபுனைவுகள்

தொடர்புடைய சுட்டிகள்:

Fritz Leiber – Sword and Sorcery

மந்திரவாதிகளும் வாள் வீரர்களும் வாய்மொழிக் கதைகள் ஆரம்பித்த காலத்திலிருந்தே நம் மனதைக் கவர்ந்திருக்கிறார்கள். உலகின் முதல் கதை எனப்படும் கில்கமேஷ் கதையைக் கூட அப்படிப் படிக்கலாம். இருந்தாலும் இன்று Sword and Sorcery ஒரு தனி sub-genre-தான். தோள் வலிமையாலும் வாள் திறமையாலும் மந்திர தந்திரம் அறிந்த எதிரிகளை வெல்லும் வீரர்களின் கதைகள்.

சில டார்ஜான் கதைகள், Conan the Barbarian இதற்கு நல்ல உதாரணங்கள். அவற்றை விட ஒரு மாற்று சிறந்தவையாக நான் மதிப்பிடுவது Fritz Leiber எழுதிய Fafhrd and the Gray Mouser கதைகள். மந்திர தந்திரம் உள்ள கதைகள்தான், ஆனால் ஃபாஃபர்டும் க்ரே மௌசரும் ஓரளவு நம்பகத்தன்மை உள்ள பாத்திரங்கள்.

ஃபாஃபர்ட் ஏழடி உயரம்; மௌசர் ஐந்தடி. இருவரும் தொழில் முறை திருடர்கள். நல்ல வாள் வீரர்கள். அன்றைய உலகத்தின் முக்கிய நகரம் லங்க்மார். அங்கே திருடர்கள் சங்கமே வைத்து நடத்துகிறார்கள். அந்தச் சூழலில் இவர்களுடைய சாகசங்கள்தான் இந்தக் கதைகள். இவற்றை வெறும் அம்புலி மாமா கதைகளாக்காமல் உயர்த்துவது அவர்கள் நம்பக் கூடிய மனிதர்களாக இருப்பதுதான்.

Snow Women (1970) அருமையாக ஆரம்பிக்கிறது. ஃபாஃபர்டின் ஆரம்பம். ஃபாஃபர்ட் 18 வயது இளைஞன். வடக்கின் பனிப் பிரதேசங்களில் வாழும் பழங்குடியினன். அவனுக்கு “நாகரீகமான” தென்பகுதிகளைப் பற்றி அறிய ஆவல். நாடகக் குழு ஒன்று அங்கே பனிப்பிரதேசத்துக்கு வந்திருக்கிறது, வ்லானா முக்கிய நடிகை. ஃபாஃபர்டின் குடிப்பெண்களுக்கு பனியை தங்கள் விருப்பப்படி வளைக்கும் மந்திர சக்தி உண்டு. ஃபாஃபர்ட் பனிப் பிரதேசங்களை விட்டு வெளியேறக் கூடாது என்று இந்தப் பெண்கள் தங்கள் சக்தியை பயன்படுத்துகிறார்கள். வ்லானாவும் ஃபாஃபர்டும் எப்படி இணைகிறார்கள், தப்பிக்கிறார்கள் என்று நல்ல சாகசக் கதை.

Unholy Grail (1962) சுமாரான சிறுகதை. க்ரே மௌசரின் முன்கதை. மௌசர் ஒரு மந்திரவாதியிடம் white magic கற்கிறான். அந்த ஊர் ராஜாவின் பெண்ணான இவ்ரியனும் அங்கே பயில்கிறாள், ஆனால் ரகசியமாக. ஏனென்றால் ராஜாவோ தன் அரசாங்கத்தில் மாயமந்திரம் என்ற பேச்சே இருக்கக் கூடாது என்று நினைக்கிறான். மௌசர் இல்லாதபோது மௌசரின் குருவை ராஜா கொன்றுவிட, மௌசர் அவனைப் பழிவாங்குவதும் இவ்ரியனோடு நாட்டை விட்டு ஓடுவதும்தான் கதை…

Ill Met in Lankhmar (1970) நெபுலா மற்றும் ஹ்யூகோ விருதுகளைப் பெற்ற குறுநாவல். அவர்கள் முதல் சந்திப்பை விவரிக்கிறது. ஒரே இடத்தில் – திருடர்களிடம் – இருவரும் ஒரே நேரத்தில் திருடப் போகிறார்கள், ஒருவருக்கொருவர் உதவிக் கொள்கிறார்கள். தங்கள் காதலிகளான வ்லானா மற்றும் இவ்ரியனோடூ பார்ட்டி! திருடர்கள் ஒரு பெரிய அமைப்பைச் சேர்ந்தவர்கள். அவர்களின் மந்திரவாதி கறுப்புப் புகையை க்ரே மௌசர் வீட்டுக்கு அனுப்புகிறான். மௌசரும் ஃபாஃபர்டும் அப்போது காதலிகளால் தூண்டப்பட்டு அந்த அமைப்பிற்குள் நுழைகிறார்கள். இவர்களுக்கு வைத்த குறி இவர்கள் காதலிகளைக் குரூரமாகக் கொன்றுவிட, இவர்கள் அந்த மந்திரவாதியைக் கொல்கிறார்கள். பிறகு இருவரும் ஜோடியாக பல சாகசங்களைப் புரிகிறார்கள். ஒரே ஒரு கதையைப் படித்துப் பார்க்க விரும்பினால் இதைத்தான் பரிந்துரைப்பேன்.

Swords against Death (1970), Swords in the Mist (1968) நல்ல தொகுப்புகள். ஃபாஃபர்டும் மௌசரும் பல எதிரிகளை வெல்கிறார்கள். குறிப்பாக When the Sea-King is Away சிறுகதை.

Swords against Wizardry (1968), Swords in Lankhmar (1961), Swords and Ice Magic (1977), The Knight and the Knave of Swords (1988) என்று இன்னும் சில புத்தகங்கள் இருக்கின்றன. ஆனால் படித்தவரை போதும் என்று தோன்றுகிறது.

லெய்பர் எழுதிய ஒரு சிறுகதை “Gonna Roll the Bones” ஹ்யூகோ விருது மற்றும் நெபுலா விருது பெற்றது. என் கண்ணில் சுமார்தான். A Pail of Air சுவாரசியமான கரு. ஏறக்குறைய உலகமே போரில் அழிய அங்கும் இங்கும் சிலர் தப்புகிறார்கள். கிணற்றிலிருந்து தண்ணீர் கொண்டு வருவது போல ஆக்சிஜனை சேகரிப்பு இடத்திலிருந்து கொண்டு வர வேண்டி இருக்கிறது…

இவை எல்லாம் சாகச நாவல் விரும்பிகளுக்குத்தான். இருந்தாலும் Ill Met in Lankhmar சிறுகதையை மட்டுமாவது படித்துப் பாருங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: சாகச நாவல்கள்

தொடர்புடைய சுட்டிகள்:

டிக் ஃபிரான்சிஸ்

டிக் ஃபிரான்சிஸ் எனக்குப் பிடித்த த்ரில்லர் எழுத்தாளர்களில் ஒருவர். முன்னாள் குதிரைப் பந்தய ஜாக்கி. இங்கிலாந்து அரச குடும்பத்தினருக்கே ஜாக்கியாக இருந்தவர். ரிடையர் ஆன பிறகு எழுத ஆரம்பித்தார்.

டிக் ஃப்ரான்சிசுக்கு ஒரு template உண்டு. எல்லா கதைகளுக்கும் குதிரைப் பந்தய பின்புலம் உண்டு. ஹீரோ ஜாக்கியாக இருக்கலாம், முன்னாள் ஜாக்கியாக இருக்கலாம், அக்கௌன்டன்ட், டிரைவர், குதிரைகளின் பயிற்சியாளர், ஏதாவது ஒரு வகையில் ஹீரோவுக்கு குதிரைப் பந்தய உலகோடு தொடர்பு இருக்கும். எல்லா ஹீரோவும் ஏறக்குறைய ஒரே மாதிரி குணம் உள்ளவர்கள். Strong morals, integrity உள்ள low-key ஆட்கள். என்ன பிரச்சினை வந்தாலும் நிதானம் இழக்கமாட்டார்கள். தன்னை நன்றாக புரிந்து கொண்டவர்கள். அடுத்தவர்களை புரிந்து கொள்ள முயற்சிப்பவர்கள். ஏதாவது ஒரு சீனில் வில்லன்களிடம் பயங்கர அடி வாங்குவார்கள். அதுதான் புத்தகத்தின் highlight சீன் ஆக இருக்கும். அடி என்றால் உங்கள் வீட்டு எங்கள் வீட்டு அடி இல்லை. Nerve-இல் ஹீரோவை heating இல்லாத குதிரை லாயத்தில் கைகளை மேலே தூக்கி கட்டிவிட்டு வில்லன் போய்விடுவான். ஹீரோ நாலைந்து மணி நேரம் அப்படி தொங்க வேண்டி இருக்கும். Forfeit-இல் ஹீரோ வெறும் விஸ்கியை இரண்டு முழு டம்ளர் குடித்துவிட்டு கார் ஓட்ட வேண்டி வரும். கால் உடைந்து படுத்திருக்கும் ஒரு ஹீரோவை தாக்க ஒரு வில்லன் வருவான். எனக்கு அந்த மாதிரி உணர்ச்சிவசப்படாத, எதையும் லாஜிகலாக பார்க்கும் மனிதர்களைப் பிடிக்கும் என்பதால்தானோ என்னவோ இவரது புத்தகங்களை நான் பெரிதும் ரசிக்கிறேன்.

டிக் ஃபிரான்சிசின் இறுதிக் காலத்தில் தன் மகன் ஃபீலிக்ஸ் ப்ரான்சிசுடன் இணைந்து சில புத்தகங்களை எழுதினர். அனேகமாக டிக் ஃபிரான்சிசின் ஐடியாக்களை ஃபீலிக்ஸ் டெவலப் செய்திருக்க வேண்டும். புத்தகங்களின் தரம் குறைவுதான். சமீபத்திய புத்தகமான Gamble இதைத் தெளிவாகக் காட்டுகிறது.

ஒரே ஒரு புத்தகம் படிக்க வேண்டுமென்றால் நான் பரிந்துரைப்பது Forfeit-ஐத்தான். Nerve, Odds Against, Enquiry, Whiphand, Banker, Danger, Break-In, Bolt, Decider, To the Hilt போன்றவையும் நல்ல புத்தகங்கள். எல்லா புத்தகங்களையும் பற்றி ஓரிரு வரி விவரிப்பு கீழே.

மிச்ச பரிந்துரைக்கும் கதைகள்:

Bonecrack, 1971: இன்னும் ஒரு நல்ல த்ரில்லர். குதிரைப் பயிற்சியாளரான அப்பாவுக்கு விபத்து. மகன் நீல் க்ரிஃபான் பொறுப்பேற்கிறார். வில்லன் ஜாக்கியாக அனுபவமே இல்லாத என் 19 வயது மகனுக்கு முதல் தர ரேசில் முதல் தர குதிரையை சவாரி செய்ய ஏற்பாடு செய், இல்லாவிட்டால் உன்னை கொன்று விடுவேன் என்கிறார். நீல் எப்படி சமாளிக்கிறார்?

In the Frame, 1976: விறுவிறுவென்று போகும் நாவல். ஓட்டைகளை எல்லாம் கவனிக்க நேரமே கிடையாது. குதிரைகளை வரையும் சார்லஸ் டாட். அவனது கசினின் வீடு கொள்ளையடிக்கப்படுகிறது, கசினின் மனைவி கொல்லப்படுகிறாள். தற்செயலாக ஆஸ்திரேலியாவில் நிறைய பணம் கொடுத்து ஓவியங்களை வாங்கும் இரண்டு ஆங்கிலேயர்களின் வீடுகளில் கொள்ளை நடந்திருப்பதை உணர்கிறான். சுவாரசியமாகச் செல்லும் மர்மக் கதை.

Banker, 1982: மெதுவாகப் போகும் கதை. ஆனால் கதையின் சுவாரசியம் தொய்யாமல் இருக்கும். எகாடரின் ஒரு சிறு வங்கியின் சீனியர் அலுவலர். பெண் குதிரைகளைப் புணர்ந்து குட்டி போடுவதற்காக ஒரு பிரபலமான குதிரையை வாங்க வங்கியில் கடன் தருகிறார். இன்றைய venture capitalists மாதிரி. ஆனால் பிறக்கும் குட்டிகளில் பல உடல் ஊனத்துடன் பிறக்கின்றன. கடன் கொடுத்த எகாடரினின் நிலை அலுவலகத்தில் மிக மோசமாகிறது. குதிரைக்கு என்ன பிரச்சினை?

Danger, 1983: நாயகன் ஒரு பாதுகாவல் கம்பெனியில் வேலை செய்கிறான். அவனுடைய ஸ்பெஷாலிடி கடத்தப்பட்டவர்களை குறைந்த பட்ச மீட்புத்தொகை (ransom) கொடுத்தோ இல்லை எதுவும் கொடுக்காமலோ மீட்பது. கதை அவன் ஒரு அழகிய பெண் ஜாக்கியை மீட்பதிலிருந்து ஆரம்பிக்கிறது. எனக்குப் பிடித்த கதைகளில் ஒன்று.

Proof, 1984: விறுவிறுவென்று போகும் கதை. மது வியாபாரி டோனி பீச். தற்செயலாக உயர்ந்த தர வைன், விஸ்கி என்று தாழ்ந்த தர மதுக்களை விற்கும் ஒரு கும்பல் இருக்கிறது என்பதைக் கண்டுபிடிக்கிறான். கும்பலின் தலைவன் தனக்கு அபாயமானவர்கள் என்று தோன்றுபவர்களை முகத்தில் ப்ளாஸ்டர் ஆஃப் பாரிசில் கட்டு போட்டு (மூச்சு விடமுடியாது) கொடூரமாகக் கொல்கிறான். பீச் எப்படி தப்பிக்கிறான்?

Break In, 1985: ரோமியோ ஜூலியட் மாதிரி இரண்டு பரம்பரை பகையாளி குடும்பங்களுக்குள் (அல்லார்டெக், ஃபீல்டிங் குடும்பங்கள்) ஒரு காதல். கல்யாணமும் நடந்துவிடுகிறது. இந்த ஜோடி குதிரைகளை பயிற்றுவிக்கிறது. இந்த ஜோடி மீது பல மோசமான வதந்திகள், அவர்கள் திவாலாகும் நிலை. “ஜூலியட்டின்” அண்ணன் கிட் ஃபீல்டிங்தான் நாயகன். ஜாக்கி. பிரச்சினையை சிறப்பாக சமாளிக்கிறான்.

Bolt, 1986: Break In-இன் தொடர்ச்சி. கிட் சவாரி செய்யும் குதிரைகளுக்கு சொந்தக்காரி ஒரு பிரபு குடும்பத்துப் பெரிய மனுஷி. அவர்களது பிசினசை ஆக்கிரமிக்க முயலும் ஒரு வில்லன். மீண்டும் கிட் பிரச்சினையை சிறப்பாக சமாளிக்கிறான்.

Hot Money, 1987: பங்குச் சந்தையில் பெருவெற்றி பெற்றிருக்கும் அப்பா; ஐந்து முறை திருமணம் நடந்திருக்கிறது. அவரை கொல்ல யாரோ முயலும்போது தன் இரண்டாம் மனைவியின் மகனான இயன் பெம்ப்ரோக்கிடம் உதவி கேட்கிறார்.

Decider, 1993: ஸ்ட்ராட்டன் குடும்பத்தில் பல ரகசியங்கள். அவர்களுக்கு ஒரு ரேஸ்கோர்ஸ் சொந்தமாக இருக்கிறது. லீ மாரிஸ் குடும்ப சண்டையில் இழுக்கப்படுகிறான். லீ மாரிஸின் சித்திரம் எனக்குப் பிடித்த ஒன்று.

படிக்கலாம், ஆனால் கொஞ்சம் சுமாரானவை:
Flying Finish, 1966: படிக்கலாம். குதிரைகளை ஒரு இடத்திலிருந்து இன்னொன்றுக்கு கொண்டு செல்லும் ஒரு கம்பெனி.

Smokescreen, 1972: நாயகன் ஒரு நடிகன். அவனைக் கொல்லப் போடப்படும் திட்டத்தை கையும் களவுமாக சினிமாவாகவே படம் பிடித்து விடுகிறான்.

High Stakes, 1975: ஸ்டீவன் ஸ்காட் குழந்தைகளுக்கான விளையாட்டு பொம்மைகள் செய்து மில்லியனர் ஆனவன். குதிரைகளை வாங்கி ரேசில் கலந்து கொள்ள வைப்பவன். தன் ட்ரெய்னர் ஜோடி தன்னை ஏமாற்றுகிறான் என்பதை உணர்கிறான். ஜோடியிடமிருந்து தன் குதிரைகளை இன்னொரு ட்ரெய்னரிடம் அனுப்புகிறான். ஜோடி தான் அனுப்ப வேண்டிய உயர் ஜாதி குதிரையைப் போல இருக்கும் வேறு ஒரு சோதா குதிரையை அனுப்பி வைக்கிறான். ஸ்காட் என்ன செய்கிறான் என்பதுதான் கதை. படிக்கலாம்.

Reflex, 1980: சுமார். இறந்து போன ஒரு பத்திரிகையாளனிடம் பலரது குற்றங்கள்-ரகசியங்களுக்கான ஃபோட்டோ ஆதாரங்கள் இருக்கிறது. அவை ஜாக்கி ஃபிலிப் நோரேவிடம் வந்து சேர்கின்றன. பிறகு?

Twice Shy, 1981: ரேசில் எப்போதும் ஜெயிக்க ஒரு கம்ப்யூட்டர் ப்ரோக்ராம் இருக்கிறது. அதைத் தேடும் வில்லனை அண்ணன் ஜெயிலுக்கு அனுப்பிவிடுகிறான். விடுதலையான பிறகு தம்பிக்கு பிரச்சினை. படிக்கலாம்.

Straight, 1989: டெரக் ஃப்ராங்க்ளினின் அண்ணன் – ரத்தினக் கற்கள் வியாபாரி – இறந்துவிடுகிறார். வழக்கம் போல மர்மங்கள். படிக்கலாம்.

Longshot, 1990: இளம் எழுத்தாளன். பணத்தேவைக்காக ஒரு குதிரைப் பந்தய பயிற்சியாளரின் வாழ்க்கை வரலாற்றை எழுத வருகிறான். குதிரைகளை கவனித்துக் கொள்ளும் ஒரு பெண் ஆறு மாதங்களுக்கு முன் காணாமல் போயிருக்கிறாள். அவள் பிணம் கிடைக்கிறது. போலீஸ் சந்தேகப்படுபவனைக் கொலை செய்ய ஒரு முயற்சி. சுமாரான நாவல்தான்.

To the Hilt, 1996: நாயகன் ஒரு எக்சென்ட்ரிக் ஓவியன். ஸ்காட்லாந்தின் பெருகுடும்பம் (clan) ஒன்றைச் சேர்ந்தவன். ஏறக்குறைய ஒரு (குடும்பத்துக்கு சொந்தமான) குகையில் வாழ்கிறான். அவனுடைய மாற்றாந்தந்தை பிசினஸ் சிக்கலில். பெருகுடும்பத்தின் தலைவன் பழங்கால வாள் ஒன்றை ஒளித்து வைக்கும்படி சொல்லி இருக்கிறான். குடும்பம் என்பது எவ்வளவு வலிவான பந்தமாக இருக்கலாம் என்பதை நன்றாக காட்டி இருப்பார்.

10 LB. Penalty, 1997: சுமார். தேர்தல் பின்புலம்.

தவிர்க்க வேண்டியவை:

Dead Cert, 1962: முதல் நாவல். கொஞ்சம் அமெச்சூர்தனமாக இருக்கும். தவிர்க்கலாம்.

For Kicks, 1965: ரேஸ்களில் மீண்டும் மீண்டும் எதிர்பாராத விதமாக குதிரைகள் ஜெயிக்கின்றன. லார்ட் அக்டோபர் டேனியல் ரோக்கை துப்பறிய அனுப்புகிறார். ரோக் குதிரைகளுக்கு பாவ்லோவ் முறையில் ஒரு விசில் சத்தத்தையும் நெருப்பையும் வைத்து அவற்றை வேகமாக ஓட்டுகிறார்கள் என்று கண்டுபிடிக்கிறான். ரொம்ப ஸ்லோவான கதை. இன்னும் ஃபிரான்சிஸ் தன் ஃபார்முலாவை முழுதாக கண்டுபிடிக்கவில்லை. தவிர்த்துவிடலாம்.

Risk, 1977: சுமார். அக்கௌன்டன்ட் ரோலண்ட் ப்ரிட்டன் கடத்தப்படுகிறான். ஏன்?

Field of 13, 1998: சிறுகதைகள்.

Blood Sport 1967, Rat Race 1970, Slay Ride 1973, Knockdown 1974, <strongTrial Run 1978, Edge 1988, Comeback 1991, Driving Force 1992: இவை எல்லாமே கொஞ்சம் போரடிக்கும். தவிர்க்கலாம்.

Wild Horses, 1994, Second Wind, 1999, Shattered, 2000: இவை எல்லாம் நிறையவே போரடிக்கும், தவிருங்கள்.

டிக் ஃப்ரான்சிஸ், மற்றும் அவர் மகன் ஃபீலிக்ஸ் ஃப்ரான்சிசோடு இணைந்து சில புத்தகங்களை – Dead Heat 2007, Silks: 2008, Even Money 2009, Crossfire, 2010 – எழுதி இருக்கிறார். பொதுவாக ஒரு மாற்று குறைவு. தீவிர டிக் ஃப்ரான்சிஸ் ரசிகர்களுக்கு மட்டும்.

இப்போது ஃபீலிக்ஸ் ஃப்ரான்சிஸ் தனியாக எழுதிக் கொண்டிருக்கிறார் – Gamble (2011), Bloodline (2012), Refusal (2013), Damaged (2014), Frontrunner (2015), Triple Crown (2016), Pulse (2017), Crisis (2018), Guilty or Not Guilty (2019), Iced (2021), No Reserve (2023), Syndicate (2024) – இரண்டு மாற்று குறைவு! அதிலும் Guilty or Not Guilty புத்தகத்தில் குதிரைப் பந்தயம் பற்றி இருப்பது பெருங்காயம் வைத்த பாண்டமாகத்தான் இருக்கிறது. Syndicate நாவலில் நிறைய நுண்விவரங்கள், ஆனால் முடிச்சு மகாசுலபமாக அவிழ்கிறது. அதிதீவிர டிக் ஃப்ரான்சிஸ் ரசிகர்களுக்கு மட்டும்.

தொகுக்கப்பட்ட பக்கம்: த்ரில்லர்கள்

தொடர்புடைய சுட்டிகள்:
டிக் ஃப்ரான்சிசின் சிட் ஹேலி
டிக் ஃபிரான்சிஸ் எழுதிய “ஃபோர்ஃபிட் (Forfeit)”
டிக் ஃபிரான்சிசின் “என்கொயரி”
டிக் ஃபிரான்சிஸ் எழுதிய “நெர்வ்”

ஒரு பழைய திமுக எம்எல்ஏ

அரங்கண்ணலை இன்று வெகு சிலருக்கே நினைவிருக்கும். திமுகவின் முக்கியத் தலைவர்களோடு வெகு நெருக்கமாக இருந்தவர், அண்ணாவுக்கு மூத்த மகன் ஸ்தானத்தில், கருணாநிதிக்கு தம்பி மாதிரி இருந்தவர். ஆனால் பெரிய பதவி எதுவும் வகிக்கவில்லை. குடிசைமாற்று வாரியத் தலைவராக இருந்ததுதான் அவருக்குக் கிடைத்த பெரிய பதவி.

அரங்கண்ணல் திரைப்படத் தயாரிப்பாளர். பூவா தலையா, அனுபவி ராஜா அனுபவி என்று சில படங்களதி தயாரித்திருக்கிறார். பாலசந்தரின் கல்லூரிக் கால நண்பர். மரோ சரித்ராவும் இவர் தயாரித்ததுதானா என்று நினைவில்லை.

அரங்கண்ணல் தன் சுயசரிதையை நினைவுகள் என்ற பேரில் எழுதி இருக்கிறார். எழுபது வரைக்குமாவது – எம்ஜிஆர் திமுகவிலிருந்து நீக்கப்படும் வரைக்குமாவது – அது உண்மையாகத்தான் தெரிகிறது. அதற்குப் பிறகு கொஞ்சம் பூசி மெழுகி இருக்கிறார்தான்.

அரங்கண்ணல் கோனார் ஜாதியில் பிறந்தவர். பெரிய மிராசுதார் இல்லைதான், ஆனால் வசதியான குடும்பம். இவரைப் பெரிய படிப்பு வைக்க வேண்டும் என்று வீட்டாருக்கு ஆசை. பள்ளிக்காலத்தில் தமிழ்ப்பேச்சு, கட்டுரை என்று சில பரிசுகள் கிடைத்திருக்கின்றன. கருணாநிதி பள்ளியில் இவருக்கு சீனியர். 12-13 வயதில் காங்கிரஸ்தான் இவரை ஈர்த்திருக்கிறது. ஆனால் கருணாநிதி பள்ளிக் காலத்திலேயே ஹீரோ போலிருக்கிறது. மெதுமெதுவாக கருணாநிதியால் ஈர்க்கப்பட்டிருக்கிறார். இளம் வயதிலேயே திராவிடக் கழகத்திற்காக மும்முரமாக செயல்பட ஆரம்பித்திருக்கிறார். அங்கங்கே மாநாடு, கூட்டம், மாணவர் மாநாடு என்று அலைந்திருக்கிறார். கருணாநிதியும் இவரை ஊக்குவித்திருக்கிறார்.

அன்றைய திராவிடக் கழகத் தலைவர்களில் அய்யாவும் (ஈ.வெ.ரா.) அண்ணாவும்தான் நாயகர்கள். அவர்களை சந்திக்க வேண்டும், கூட்டங்களுக்கு அழைத்து வர வேண்டும், பேச வைக்க வேண்டும் என்றெல்லாம் ஆசை. அண்ணா இரண்டு மூன்று முறை கூட்டத்தில் பேச வருகிறேன் என்று சொல்லிவிட்டு வரவில்லை. ஆனால் வந்தபோது மனதில் இருந்த வருத்தம் எல்லாம் போய்விட்டதாம்.

பள்ளிப் படிப்பு முடிந்தது. அண்ணாமலை பல்கலைக்கழகம்தான் அன்று திராவிட இயக்க சார்புடைய மாணவர்களுக்கு வசதியாம். பின்னால் சபாநாயகராக இருந்த மதியழகன் அங்கே அறிவிக்கப்படாத திராவிட இயக்கத் தலைவர். அரசியலில் ஆர்வம் இல்லாத பாலசந்தர் இவருக்கு சீனியர், அவர் அறையில் நிறைய அரட்டை அடிப்பாராம். அங்கே ஒரு முறை மாணவர்களுக்கும் ஊராருக்கும் ஏற்பட்ட சண்டையை விவரிக்கிறார், மாணவர்களுக்கு இருக்கும் கொஞ்சம் திமிர் அருமையாக விவரிக்கப்பட்டிருக்கிறது. பிறகு அய்யாவின் பத்திரிகையில் வேலை. (ஈ.வெ.கி. சம்பத் இண்டர்மீடியட்டில் ஃபெயிலாம், பிறகு பட்டப்படிப்பு வரைக்கும் போயிருக்கிறார். ஈ.வெ.ரா.வுக்கு ரொம்ப கோபமாம்) அய்யா திருமணம் என்று அறிவித்தபிறகு ஏறக்குறைய அழுதிருக்கிறார். கிழவர்கள் இளைஞிகளை மணக்கக் கூடாது என்று அய்யா பேசிய பேச்சை எடுத்து அய்யாவின் பத்திரிகையில் போட்டிருக்கிறார்.ராஜினாமா செய்ததை அய்யா சுலபத்தில் ஏற்கவில்லை. ஆனால் பிடித்த பிடியை விடவில்லை. காஞ்சிபுரம் போய்விட்டார்.

1946-இல் மதுரையில் திராவிடர் கழக மாநாடு நடக்க ஏற்பாடுகள். அங்கே பயங்கர அடிதடியாம். வைத்தியநாத ஐயர் தூண்டுதலால் திராவிடக் கழகத்தினர் மீது கடுமையான தாக்குதல் நடந்ததாம்.

அண்ணாவின் திராவிடநாடு பத்திரிகையின் பொறுப்பு இவர் மீது விழுந்திருக்கிறது. எட்டு ஆண்டுகள் பொறுப்பேற்றுக் கொண்டு அண்ணா மெச்சும்படி சிறப்பாக செயல்பட்டிருக்கிறார். அண்ணாவின் குடும்பத்தினரும் மிகவும் பாசமாக இருந்திருக்கிறார்க்ள்.

அண்ணா திமுகவை ஆரம்பிக்க நிறையவே யோசித்தாராம். அய்யாவை எதிர்க்க அவருக்கு கொஞ்சம் தயக்கம் இருந்ததாம். எல்லாரையும் அரவணைத்துக் கொண்டு போவாராம். சம்பத் கொஞ்சம் ஈகோ உள்ளவராம். என்.எஸ். கிருஷ்ணன் போதையில் ஒரு முறை அண்ணாவை கன்னாபின்னா என்று திட்டிவிட்டாராம், அதை சம்பத் அண்ணாவிடம் கோள் மூட்டிவிட்டாரம். அதற்காக என்எஸ்கே நாசூக்காக மன்னிப்பு கேட்டாராம். நெடுஞ்செழியன், மதியழகன், அன்பழகன் என்று பலரையும் பற்றி அவர் போகிற போக்கில் விவரிப்பது உண்மையாக இருக்கிறது.

ஆசைத்தம்பி ஐம்பதுகளில் போராட்டங்களுக்காக சிறை சென்ற முதல் சில திமுக்காரர்களில் ஒருவர். அவருக்கு சிறையில் மொட்டை அடிக்கப்பட்டது. அதை பத்திரிகையில் அரங்கண்ணல் பதித்து சர்ச்சை ஆகி இருக்கிறது.  பின்னாளில் ஆசைத்தம்பி ஒரு முறை அண்ணாவை கடுமையாகத் தாக்கினாராம். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அண்ணா மீது அழுத்தம் தரப்பட்டதாம். அண்ணா எனக்கு கட்சிக்காக மொட்டை அடிக்கப்பட்ட ஆசைத்தம்பிதான் தெரிகிறான், என்னைத் தவறாகப் பேசும் ஆசைத்தம்பி அல்ல என்று எல்லாரையும் அடக்கினாராம். சம்பத் முரண்டு பிடித்தபோதெல்லாம் கொஞ்சம் விட்டுக்கொடுத்து போயிருக்கிறார்.

பணம் அண்ணா போன்றவர்களுக்கு பெரிய பிரச்சினை. மூன்றாம் வகுப்பு ரயில் பிரயாணம்தான் அனேகமாக. அதுவும் கூட்டங்களுக்கு அழைப்பவர்கள் சில சமயம் பணம் தராத சூழ்நிலை.

எல்லாரையும் போல இவரையும் சினிமா இழுத்திருக்கிறது. கதை வசனம் எழுதி இருக்கிறார். எம்ஜிஆர் நடித்த தாய் மகளுக்கு கட்டிய தாலி உட்பட. எதுவும் பெரிதாக ஓடவில்லை. ராசியில்லாத எழுத்தாளர் என்று கருதப்பட்டிருக்கிறார். பீம்சிங்குடன் நல்ல பழக்கம். அவரது “கதை இலாகாவில்” இருந்திருக்கிறார். பச்சை விளக்கு திரைப்படத்தில் ஓரளவு பங்களிப்பு இருந்ததாம்

1962-இல் மயிலாப்பூர் எம்எல்ஏ. நல்ல பேர் வாங்கி இருக்கிறார். குப்பத்து மக்களிடமும் படித்தவர்களிடம் செல்வாக்கு ஏற்பட்டிருக்கிறது. அப்போதுதான் திரைப்படத் தயாரிப்பு. பெரிய பணக்காரர் ஆக முடியவில்லை. கடன் வாங்கி வீடு வாங்கி இருக்கிறார், பிறகு விற்க வேண்டிய சூழ்நிலை. அன்றைய தொழிலமைச்சர் ஆர். வெங்கடராமன் உதவியால் மீண்டும் கொஞ்ச்ம் நிலம் வாங்கி இருக்கிறார். அதில்தான் வீடு கட்டிக் கொண்டாராம். ஊழல் செய்யாதவர் என்றுதான் தோன்றுகிறது.

1967-இல் அண்ணா முதல்வர் ஆனபோது அண்ணா நெருக்கமான பலரை மந்திரி ஆக்கத் தயங்கி இருக்கிறார். இவர், அன்பழகன், என்.வி. நடராஜன் என்று பலர். ஆனால் அண்ணாவுக்கு காரியதரிசி போல வேலை பார்த்திருக்கிறார்.

பிறகு குடிசைமாற்று வாரியத் தலைவர் பதவி. கடுமையாக உழைத்திருக்கிறார் என்று தெரிகிறது. ஆனால் ஆட்சியில் ஊழலே இல்லை என்று முழுப் பூசணிக்காயை சோற்றில் ம்றைக்கிறார். எம்ஜிஆரை கட்சியிலிருந்து விலக்கக் கூடாது என்று அழுதாராம். கருணாநிதிக்கு எம்ஜிஆரை நீக்க வேண்டும் என்று ஆசை இருந்தாலும் கொஞ்சம் தயக்கம் இருந்தது, நெடுஞ்செழியன் போன்றவர்கள்தான் இதற்கு முக்கியக் காரணம் என்கிறார்.

நெருக்கடி நிலை காலத்தில் கொஞ்சம் பயந்திருப்பாரோ என்று தோன்றுகிறது. அப்போதுதான் தன் உயிர் நண்பரிடம் கொஞ்சம் விலக்கம் ஏற்பட்டிருக்கிறது. பிறகு அதிமுகவுக்குப் போய், திமுகவுக்கு மீண்டிருக்கிறார்.

மூன்றாம் நிலை தலைவர்தான். அண்ணாவுக்கு அணுக்கமாக இருந்தவர், அவரை அருகிலிருந்து பார்த்தவர். அண்ணாவைப் பற்றி அவர் தரும் சித்திரம் அருமையாக இருக்கிறது. அதற்காகவே படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் அபுனைவுகள்

தொடர்புடைய சுட்டிகள்:

Fritz Leiber – Sword and Sorcery

மந்திரவாதிகளும் வாள் வீரர்களும் வாய்மொழிக் கதைகள் ஆரம்பித்த காலத்திலிருந்தே நம் மனதைக் கவர்ந்திருக்கிறார்கள். உலகின் முதல் கதை எனப்படும் கில்கமேஷ் கதையைக் கூட அப்படிப் படிக்கலாம். இருந்தாலும் இன்று Sword and Sorcery ஒரு தனி sub-genre-தான். தோள் வலிமையாலும் வாள் திறமையாலும் மந்திர தந்திரம் அறிந்த எதிரிகளை வெல்லும் வீரர்களின் கதைகள்.

சில டார்ஜான் கதைகள், Conan the Barbarian இதற்கு நல்ல உதாரணங்கள். அவற்றை விட ஒரு மாற்று சிறந்தவையாக நான் மதிப்பிடுவது Fritz Leiber எழுதிய Fafhrd and the Gray Mouser கதைகள். மந்திர தந்திரம் உள்ள கதைகள்தான், ஆனால் ஃபாஃபர்டும் க்ரே மௌசரும் ஓரளவு நம்பகத்தன்மை உள்ள பாத்திரங்கள்.

ஃபாஃபர்ட் ஏழடி உயரம்; மௌசர் ஐந்தடி. இருவரும் தொழில் முறை திருடர்கள். நல்ல வாள் வீரர்கள். அன்றைய உலகத்தின் முக்கிய நகரம் லங்க்மார். அங்கே திருடர்கள் சங்கமே வைத்து நடத்துகிறார்கள். அந்தச் சூழலில் இவர்களுடைய சாகசங்கள்தான் இந்தக் கதைகள். இவற்றை வெறும் அம்புலி மாமா கதைகளாக்காமல் உயர்த்துவது அவர்கள் நம்பக் கூடிய மனிதர்களாக இருப்பதுதான்.

Snow Women (1970) அருமையாக ஆரம்பிக்கிறது. ஃபாஃபர்டின் ஆரம்பம். ஃபாஃபர்ட் 18 வயது இளைஞன். வடக்கின் பனிப் பிரதேசங்களில் வாழும் பழங்குடியினன். அவனுக்கு “நாகரீகமான” தென்பகுதிகளைப் பற்றி அறிய ஆவல். நாடகக் குழு ஒன்று அங்கே பனிப்பிரதேசத்துக்கு வந்திருக்கிறது, வ்லானா முக்கிய நடிகை. ஃபாஃபர்டின் குடிப்பெண்களுக்கு பனியை தங்கள் விருப்பப்படி வளைக்கும் மந்திர சக்தி உண்டு. ஃபாஃபர்ட் பனிப் பிரதேசங்களை விட்டு வெளியேறக் கூடாது என்று இந்தப் பெண்கள் தங்கள் சக்தியை பயன்படுத்துகிறார்கள். வ்லானாவும் ஃபாஃபர்டும் எப்படி இணைகிறார்கள், தப்பிக்கிறார்கள் என்று நல்ல சாகசக் கதை.

Unholy Grail (1962) சுமாரான சிறுகதை. க்ரே மௌசரின் முன்கதை. மௌசர் ஒரு மந்திரவாதியிடம் white magic கற்கிறான். அந்த ஊர் ராஜாவின் பெண்ணான இவ்ரியனும் அங்கே பயில்கிறாள், ஆனால் ரகசியமாக. ஏனென்றால் ராஜாவோ தன் அரசாங்கத்தில் மாயமந்திரம் என்ற பேச்சே இருக்கக் கூடாது என்று நினைக்கிறான். மௌசர் இல்லாதபோது மௌசரின் குருவை ராஜா கொன்றுவிட, மௌசர் அவனைப் பழிவாங்குவதும் இவ்ரியனோடு நாட்டை விட்டு ஓடுவதும்தான் கதை…

Ill Met in Lankhmar (1970) நெபுலா மற்றும் ஹ்யூகோ விருதுகளைப் பெற்ற குறுநாவல். அவர்கள் முதல் சந்திப்பை விவரிக்கிறது. ஒரே இடத்தில் – திருடர்களிடம் – இருவரும் ஒரே நேரத்தில் திருடப் போகிறார்கள், ஒருவருக்கொருவர் உதவிக் கொள்கிறார்கள். தங்கள் காதலிகளான வ்லானா மற்றும் இவ்ரியனோடூ பார்ட்டி! திருடர்கள் ஒரு பெரிய அமைப்பைச் சேர்ந்தவர்கள். அவர்களின் மந்திரவாதி கறுப்புப் புகையை க்ரே மௌசர் வீட்டுக்கு அனுப்புகிறான். மௌசரும் ஃபாஃபர்டும் அப்போது காதலிகளால் தூண்டப்பட்டு அந்த அமைப்பிற்குள் நுழைகிறார்கள். இவர்களுக்கு வைத்த குறி இவர்கள் காதலிகளைக் குரூரமாகக் கொன்றுவிட, இவர்கள் அந்த மந்திரவாதியைக் கொல்கிறார்கள். பிறகு இருவரும் ஜோடியாக பல சாகசங்களைப் புரிகிறார்கள். ஒரே ஒரு கதையைப் படித்துப் பார்க்க விரும்பினால் இதைத்தான் பரிந்துரைப்பேன்.

Swords against Death (1970), Swords in the Mist (1968) நல்ல தொகுப்புகள். ஃபாஃபர்டும் மௌசரும் பல எதிரிகளை வெல்கிறார்கள். குறிப்பாக When the Sea-King is Away சிறுகதை.

Swords against Wizardry (1968), Swords in Lankhmar (1961), Swords and Ice Magic (1977), The Knight and the Knave of Swords (1988) என்று இன்னும் சில புத்தகங்கள் இருக்கின்றன. ஆனால் படித்தவரை போதும் என்று தோன்றுகிறது.

லெய்பர் எழுதிய ஒரு சிறுகதை “Gonna Roll the Bones” ஹ்யூகோ விருது மற்றும் நெபுலா விருது பெற்றது. என் கண்ணில் சுமார்தான். A Pail of Air சுவாரசியமான கரு. ஏறக்குறைய உலகமே போரில் அழிய அங்கும் இங்கும் சிலர் தப்புகிறார்கள். கிணற்றிலிருந்து தண்ணீர் கொண்டு வருவது போல ஆக்சிஜனை சேகரிப்பு இடத்திலிருந்து கொண்டு வர வேண்டி இருக்கிறது…

இவை எல்லாம் சாகச நாவல் விரும்பிகளுக்குத்தான். இருந்தாலும் Ill Met in Lankhmar சிறுகதையை மட்டுமாவது படித்துப் பாருங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: சாகச நாவல்கள்

தொடர்புடைய சுட்டிகள்:

சினிமாவாக வந்த தமிழ் நாவல்கள், சிறுகதைகள்

ரொம்ப நாளாச்சு ஒரு லிஸ்ட் போட்டு.

2 கண்டிஷன்தான். தமிழில் எழுதப்பட்ட புனைவாக இருக்க வேண்டும். திரைக்கதைக்கும் ஒரிஜினலுக்கும் வேறுபாடுகள் இருக்கலாம், ஆனால் ஒரு புனைவைத்தான் திரைக்கதையாக மாற்றி இருக்க வேண்டும், அது வெளிப்படையாக சொல்லப்பட்டிருக்கவும் வேண்டும். அதாவது பிரியா திரைப்படம் மாதிரி ஒரிஜினல் கதையை கொலையே செய்தாலும் இந்த லிஸ்டில் இடம் உண்டு. ஆனால் நான் கடவுளுக்கும் ஏழாம் உலகத்துக்கும் ஒற்றுமை இருந்தாலும், நான் கடவுளை லிஸ்டில் சேர்ப்பதற்கில்லை.

ஆசிரியர், புனைவு, சினிமா என்ற வரிசையில் எழுதி இருக்கிறேன்.

  1. அகிலன், கயல்விழி, மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்
  2. அகிலன், பாவை விளக்கு, பாவை விளக்கு
  3. அண்ணாதுரை, காதல் ஜோதி, காதல் ஜோதி
  4. அண்ணாதுரை, நல்லவன் வாழ்வான், நல்லவன் வாழ்வான்
  5. அண்ணாதுரை, பார்வதி பி.ஏ, பார்வதி பி.ஏ
  6. அண்ணாதுரை, ரங்கோன் ராதா, ரங்கோன் ராதா
  7. அண்ணாதுரை, தாய் மகளுக்கு கட்டிய தாலி, தாய் மகளுக்கு கட்டிய தாலி
  8. அண்ணாதுரை, வண்டிக்காரன் மகன், வண்டிக்காரன் மகன்
  9. அனுராதா ரமணன், சிறை, சிறை
  10. அனுராதா ரமணன், கூட்டுப்புழுக்கள், கூட்டுப்புழுக்கள்
  11. சி.ஏ. பாலன், தூக்குமர நிழலில் நாவல், இன்று நீ நாளை நான் (இன்று நீ நாளை நான் அதே பெயரில் மாலைமதி வெளியீடாக முழு நாவலாக வந்தது. தூக்கு மர நிழலில் கதையில் அது ஒரு சிறிய அத்தியாயம் மட்டுமே.)
  12. சோ ராமசாமி, யாரோ இவர் யாரோ, ஆயிரம் பொய்
  13. தேவன், கோமதியின் காதலன், கோமதியின் காதலன்
  14. எல்லார்வி, கலீர் கலீர், ஆட வந்த தெய்வம்
  15. இந்திரா பார்த்தசாரதி, குருதிப்புனல், கண் சிவந்தால் மண் சிவக்கும்
  16. இந்திரா பார்த்தசாரதி, உச்சி வெயில், மறுபக்கம்
  17. ஜே.ஆர். ரங்கராஜு, ராஜாம்பாள், ராஜாம்பாள்
  18. ஜே.ஆர். ரங்கராஜு, சந்திரகாந்தா, சவுக்கடி சந்திரகாந்தா
  19. ஜே.ஆர். ரங்கராஜு, மோகனசுந்தரம், மோகனசுந்தரம்
  20. ஜாவர் சீதாராமன், பணம் பெண் பாசம், பணம் பெண் பாசம் (முத்துராமன், வடிவுக்கரசி, சரிதா நடித்தது)
  21. ஜெயகாந்தன், சில நேரங்களில் சில மனிதர்கள், சில நேரங்களில் சில மனிதர்கள்
  22. ஜெயகாந்தன், ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள், ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்
  23. ஜெயகாந்தன், யாருக்காக அழுதான், யாருக்காக அழுதான்
  24. ஜெயகாந்தன், கருணையினால் அல்ல, கருணை உள்ளம்
  25. ஜெயகாந்தன், உன்னைப் போல் ஒருவன், உன்னைப் போல் ஒருவன்
  26. ஜெயகாந்தன், கைவிலங்கு, காவல் தெய்வம்
  27. கல்கி, பார்த்திபன் கனவு, பார்த்திபன் கனவு
  28. கல்கி, தியாகபூமி, தியாகபூமி
  29. கல்கி, கள்வனின் காதலி, கள்வனின் காதலி
  30. கல்கி, பொய்மான் கரடு, பொன்வயல்
  31. கொத்தமங்கலம் சுப்பு, தில்லானா மோகனாம்பாள், தில்லானா மோகனாம்பாள்
  32. கொத்தமங்கலம் சுப்பு, ராவ்பகதூர் சிங்காரம், விளையாட்டுப் பிள்ளை
  33. லக்ஷ்மி, பெண் மனம், இருவர் உள்ளம்
  34. லக்ஷ்மி, காஞ்சனையின் கனவு, காஞ்சனா
  35. மஹரிஷி, புவனா ஒரு கேள்விக்குறி, புவனா ஒரு கேள்விக்குறி
  36. மஹரிஷி, பத்ரகாளி, பத்ரகாளி
  37. மஹரிஷி, பனிமலை, என்னதான் முடிவு?
  38. மணியன், இலவு காத்த கிளி, சொல்லத்தான் நினைக்கிறேன்
  39. மணியன், மோகம் முப்பது வருஷம், மோகம் முப்பது வருஷம்
  40. மணியன், இதய வீணை, இதய வீணை
  41. மணியன், லவ் பேர்ட்ஸ், வயசுப்பொண்ணு
  42. மு. கருணாநிதி, வெள்ளிக்கிழமை, அணையா விளக்கு
  43. மு. கருணாநிதி, பொன்னர் சங்கர், பொன்னர் சங்கர்
  44. மு. வரதராஜன், பெற்ற மனம், பெற்ற மனம்
  45. நாமக்கல் வெ. ராமலிங்கம் பிள்ளை, மலைக்கள்ளன், மலைக்கள்ளன்
  46. நாஞ்சில் நாடன், தலைகீழ் விகிதங்கள், சொல்ல மறந்த கதை
  47. நீல. பத்மநாபன், தலைமுறைகள், மகிழ்ச்சி
  48. பொன்னீலன், பூட்டாத பூட்டுகள், பூட்டாத பூட்டுகள்
  49. புஷ்பா தங்கதுரை, ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது, ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது
  50. புஷ்பா தங்கதுரை, நந்தா என் நிலா, நந்தா என் நிலா
  51. புஷ்பா தங்கதுரை, லீனா-மீனா-ரீனா, அந்த ஜூன் 18
  52. புதுமைப்பித்தன், சிற்றன்னை, உதிரிப்பூக்கள்
  53. புதுமைப்பித்தன், வாக்கும் வக்கும், சரஸ்வதி சபதம்
  54. ரா.கி. ரங்கராஜன், இது சத்தியம், இது சத்தியம்
  55. ராஜாஜி, திக்கற்ற பார்வதி, திக்கற்ற பார்வதி
  56. ராஜேந்திரகுமார், வணக்கத்துக்குரிய காதலியே, வணக்கத்துக்குரிய காதலியே
  57. எஸ்.எஸ். வாசன், சதி லீலாவதி, சதி லீலாவதி
  58. ச. தமிழ்ச்செல்வன், வெயிலோடு போய், பூ
  59. சிவசங்கரி, நண்டு, நண்டு
  60. சிவசங்கரி, ஒரு மனிதனின் கதை, தியாகு
  61. சிவசங்கரி, 47 நாட்கள், 47 நாட்கள்
  62. சிவசங்கரி, ஒரு சிங்கம் முயலாகிறது, அவன் அவள் அது
  63. ஸ்டெல்லா ப்ரூஸ், ஒரு முறைதான் பூக்கும், ஆண்களை நம்பாதே
  64. சு. வெங்கடேசன், காவல் கோட்டம், அரவான் (ஒரு பகுதி மட்டும் திரைப்படமாக்கப்பட்டிருக்கிறது)
  65. சுஜாதா, பிரியா, பிரியா
  66. சுஜாதா, காயத்ரி, காயத்ரி
  67. சுஜாதா, கரையெல்லாம் செண்பகப்பூ, கரையெல்லாம் செண்பகப்பூ
  68. சுஜாதா, காகிதச் சங்கிலிகள், பொய் முகங்கள்
  69. சுஜாதா, ஜன்னல் மலர், யாருக்கு யார் காவல்
  70. சுஜாதா, அனிதா இளம் மனைவி, இது எப்படி இருக்கு
  71. சுஜாதா, பிரிவோம் சிந்திப்போம், ஆனந்தத் தாண்டவம்
  72. சுஜாதா, இருள் வரும் நேரம், வானம் வசப்படும்
  73. டி.எஸ். துரைசாமி, கருங்குயில் குன்றத்துக் கொலை, மரகதம்
  74. தங்கர் பச்சான், ஒன்பது ரூபாய் நோட்டு, ஒன்பது ரூபாய் நோட்டு
  75. தி. ஜானகிராமன், மோகமுள், மோகமுள்
  76. துமிலன், புனர்ஜன்மம், போன மச்சான் திரும்பி வந்தான்
  77. உமாசந்திரன், முள்ளும் மலரும், முள்ளும் மலரும்
  78. வாஸந்தி, ஜனனம், யாரோ எழுதிய கவிதை
  79. வடுவூர் துரைசாமி ஐயங்கார், கும்பகோணம் வக்கீல், திகம்பர சாமியார்
  80. வடுவூர் துரைசாமி ஐயங்கார், வித்யாசாகரம், வித்யாபதி
  81. வடுவூர் துரைசாமி ஐயங்கார், மேனகா, மேனகா
  82. வை.மு. கோதைநாயகி, ராஜ்மோகன், ராஜ்மோகன்
  83. வை.மு. கோதைநாயகி, அனாதைப் பெண், அனாதைப் பெண்
  84. வை.மு. கோதைநாயகி, தயாநிதி, சித்தி
  85. வை.மு. கோதைநாயகி, தியாகக்கொடி, தியாகக்கொடி
  86. வை.மு. கோதைநாயகி, நளினசேகரன், நளினசேகரன்

பேசாமொழி இணைய இதழில் இதை அப்படியே எடுத்தாண்டிருக்கிறார்கள். அவர்கள் உபரியாக சேர்த்திருக்கும் புனைவுகள் கீழே.

  1. விக்டர் ஹ்யூகோ, Les Miserables, ஏழை படும் பாடு (சுத்தானந்த பாரதியாரின் தமிழ் மொழிபெயர்ப்பின் பேரும் ஏழை படும் பாடுதான்)
  2. கி. ராஜநாராயணன், கிடை, ஒருத்தி
  3. சி.ஆர். ரவீந்திரன், நண்பா நண்பா, நண்பா நண்பா
  4. ஜெயகாந்தன், ஊருக்கு நூறு பேர், ஊருக்கு நூறு பேர்
  5. பி.எஸ். ராமையா, நாலு வேலி நிலம், நாலு வேலி நிலம்
  6. பி.எஸ். ராமையா, பிரசிடெண்ட் பஞ்சாட்சரம், பிரசிடெண்ட் பஞ்சாட்சரம், (மூலம்: நிகோலாய் கோகோல் எழுதிய இன்ஸ்பெக்டர் ஜெனரல்)
  7. பி.எஸ். ராமையா, போலீஸ்காரன் மகள், போலீஸ்காரன் மகள்
  8. சா. கந்தசாமி, தக்கையின் மீது நான்கு கண்கள், தக்கையின் மீது நான்கு கண்கள்
  9. டி. செல்வராஜ், தேனீர், தேனீர்
  10. சிவசங்கரி, குட்டி, குட்டி
  11. கந்தர்வன், சாசனம், சாசனம்
  12. பூமணி, கருவேலம்பூக்கள், கருவேலம்பூக்கள்

பால் ஹாரிஸ் டேனியல் எழுதிய ‘Red Tea” ஆங்கிலப் புனைவாக இருந்தாலும் சேர்த்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன். பரதேசி திரைப்படத்தின் மூலம் இதுதான்.

இன்னும் நிறைய இருக்க வேண்டும். நினைவு வருவதை சொல்லுங்களேன்!

பிற்சேர்க்கை: இன்னும் புத்தகங்கள் இருக்க வேண்டும். விட்டுப் போன பல புத்தகங்களை சொன்னவர்களில் முதன்மையானவர் ஸ்ரீனிவாஸ். மற்றும் ராமச்சந்திரன் உஷா (நுனிப்புல்), டோண்டு, அரங்கசாமி, ரமணன் (பல பழைய படங்களைப் பற்றி சொன்னவர்), ராம்குமரன், கோகுல் எல்லாருக்கும் நன்றி!

P.S. நான் இன்னும் டிவி சீரியல்கள், சினிமா ஆன நாடகங்கள், வேற்று மொழி படங்கள் ஆகியவற்றை சேர்க்கவில்லை.
தொடர்புடைய சுட்டிகள்:
சினிமா பக்கம்
சுஜாதாவின் சினிமா பங்களிப்பு
ஜெயகாந்தனும் சினிமாவும்
திருடப்பட்ட கதைகள் – அபூர்வ ராகங்கள், முதல் மரியாதை, ஹே ராம், கஞ்சிவரம்

சில சினிமா புத்தகங்கள்

மீனாகுமாரி இந்தியாவின் தலை சிறந்த நடிகைகளில் ஒருவர். சாவித்ரியோடு ஒப்பிடலாம். சொந்த வாழ்க்கையும் கொஞ்சம் சாவித்ரியைப் போலத்தான் இருக்கும். சிறு வயதிலேயே திரைப்படங்கள், அவர் ஊதியத்தை வைத்து வாழ்ந்த குடும்பம், 20-21 வயதிலேயே ஏற்கனவே திருமணமான கமல் அம்ரோஹியுடன் காதல், திருமணம், மணமுறிவு; வித்தியாசம், மணமுறிவுக்குப் பிறகு தர்மேந்திரா உட்பட்ட சில காதலர்கள் இருந்தார்கள், பகிரங்கமாகத்தான் உறவு இருந்தது. வினோத் மேத்தா மீனாகுமாரி மறைந்தபோது அவரைப் பற்றிய ஒரு புத்தகத்தை எழுதினார். பெரிய தரிசனம் என்று எதுவுமில்லைதான், ஆனால் முழுமையான வாழ்க்கை வரலாறு.

மதுபாலா இன்றும் இந்திய நடிகைகளில் மிக அழகானவராகக் கருதப்படுகிறார். மஞ்சு குப்தா தொகுத்த “Madhubala: Her Real Life Story” சிறு வாழ்க்கை வரலாறு. பெரிய குடும்பம், அழகான மதுபாலாவை நடிக்க வைத்துத்தான் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று அப்பா தீர்மானித்திருக்கிறார். குழந்தையாகவே சில படங்கள், பிறகு கதாநாயகி. இருதய நோய் இருந்திருக்கிறது. திலீப்குமாரோடு காதல்; அப்பா சம்மதிக்காததால் பிரச்சினை பெரிதாகி காதல் முறிந்திருக்கிறது. கிஷோர் குமாரை மணந்திருக்கிறார். 34 வயதில் இறப்பு. சுவாரசியமான வாழ்க்கை வரலாறு இல்லை, ஆனால் அவர் வாழ்க்கையைப் பற்றிய அறிமுகம் கிடைக்கிறது.

ராஜேஷ் கன்னா ஆராதனா வெளியான சமயத்திலிருந்து நாலைந்து வருஷம் புகழின் உச்சியில் இருந்தார். அதற்கு சமமாக எம்ஜிஆர்/ரஜினி மேல் தமிழர்களுக்கு இருந்த/இருக்கும் அன்பு, என்டிஆரை தேவுடுவாகவே பார்த்த தெலுங்கர்களை மட்டுமே சொல்ல முடியும். ஆனால் கன்னாவுக்கு இருந்தது அகில இந்திய புகழ். அவரது உச்சங்களும் வீழ்ச்சியும் பெரிய நாவலின் கதைக்களனாக இருக்க சாத்தியம் உள்ளவை. நாலைந்து வருஷம் ராஜா, அதற்குப் பிறகு – முப்பது முப்பத்தைந்து வயதிலிருந்து பெருங்காயம் வைத்த டப்பா என்பது ஒரு மனிதனுக்கு எத்தகைய அகச் சிக்கல்களை உருவாக்கும்? யாஸ்ஸர் உஸ்மான் எழுதிய Rajesh Khanna: The Untold Story of India’s First Superstar ராஜேஷ் கன்னாவின் அகச்சிக்கல்களை நன்றாகவே விவரிக்கிறது. இருந்தாலும் எனக்கு டைம் பாஸ்தான். காரணம் ராஜேஷ் கன்னா எனக்கு முக்கியமானவர் அல்லர். இத்தனைக்கும் “மேரே சப்னோன் கி ராணி” பாடலுக்கு பரம ரசிகன். அந்தப் பாடல் அவரை வைத்து படமாக்கப்பட்டிருக்கும் விதம் என் மனம் கவர்ந்தது. ஆனால் எனக்கு அவரது திரைப்படங்களில் பிடித்தது பாடல்கள்தான். என் நாயகர்கள் ஆர்.டி. பர்மனும் கிஷோர் குமாரும்தான். ஆனந்த் திரைப்படம் இந்திய சினிமாவின் சாதனைகளில் ஒன்று, ஆனால் அது எனக்கு ரிஷிகேஷ் முகர்ஜியின் சாதனை. கௌதம் சிந்தாமணி எழுதிய “Dark Star: The Loneliness of Being Rajesh Khanna” அவரது திரைப்படங்களை விவரிக்கிறது.

சத்ருகன் சின்ஹா, Anything but Khamoshi (2016): பாரதி எஸ். ப்ரதான் எழுதி இருக்கிறார். சத்ருகன் சின்ஹாவின் தன்னம்பிக்கை, அவரது ஸ்டைல், வில்லன் நடிகராக இருந்தவரை பெரிய நட்சத்திரமாக உயர்த்தியது. அவரது பாணி ரஜினிகாந்த், சிரஞ்சீவி, அம்பரீஷ், மோகன்பாபு உட்பட்ட பலருக்கு முன்மாதிரியாக இருந்திருக்கிறது. புத்தகத்தில் கிடைக்கும் சித்திரம் அவர் போலித்தனங்கள் அற்ற மனிதர் என்பதுதான். குறைகள் அற்றவர் அல்லர், ஆனால் நிறைகளும் நிறைய உடையவர். ஆனால் யாருக்கும் தலை தாழ்த்தவில்லை. திருமணம் ஆன புதிதிலேயே கூட நடிகை ரீனா ராயோடு உறவு! பூனத்தோடு திருமணம், ரீனா ராயோடு தேனிலவு என்று இருந்திருக்கிறார். அரசியலில் பாஜகவுக்காக பெரும் கூட்டங்களை ஈர்ப்பவராக இருந்திருக்கிறார், ஆனால் மோதி அரசில் தகுந்த அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று வருத்தம். டைம் பாஸ்தான், ஆனால் படிக்கலாம்.

ரிஷி கபூர், குல்லம் குல்லா (2017): மீனா ஐயரோடு எழுதியது. ரிஷி கபூர் ஹிந்தி சினிமாவின் ராஜ குடும்பத்தில் பிறந்தவர். அதனால் கிடைத்த லாபங்களை எந்தத் தயக்கமும் இல்லாமல் அனுபவித்திருக்கிறார். சில பல குறைகள் உள்ளவர். ஆனால் அவற்றுக்காக வருத்தப்படுபவர் இல்லை. போலித்தனம் இல்லை. என் மனதில் பதிந்த ஒரு இடம் – அவரது மனைவி நீது சிங் ரிஷி கபூர் பிற பெண்களுடன் உறவு கொண்டிருப்பார் என்று கோடி காட்டுவதுதான். இது திரை உலகில் எத்தனை சாதாரணமாக இருந்திருக்கிறது? டைம் பாஸ்தான், ஆனால் படிக்கலாம்.

கரண் ஜோஹர் வம்பு பேசும் வெட்டி பந்தாக்காரர் என்று எனக்கு ஒரு எண்ணம் உண்டு. அது அனேகமாக சில காஃபி வித் கரண் நிகழ்ச்சிகளைப் பார்த்ததால் உருவானது. அவருக்குப் பெரும் சாதனைகளாகத் தெரியும் தில்வாலே துனியா லே ஜாயேங்கே, குச் குச் ஹோத்தா ஹை, கபி குஷி கபி கம், ஸ்டூடண்ட் நம்பர் 1 போன்ற திரைப்படங்களைப் பற்றி எனக்கு கொஞ்சம் இளக்காரமே உண்டு. (ஆனால் கபி குஷி கபி கம் திரைப்படத்தைப் பார்த்து கண்ணீரும் வந்திருக்கிறது, என்னை அப்பா செண்டிமெண்ட் திரைப்படங்கள் எங்கோ தொடுகின்றன) ஆனால் அவரது An Unsuitable Boy புத்தகம் நான் எதிர்பார்த்ததை விட நன்றாகவே இருந்தது. திரை உலக சூழலில் வளர்ந்தது, DDLJ-யின் பாதிப்பு, ஆதித்யா சோப்ரா, ஷா ருக் கான், சல்மான் கான் போன்றவர்களின் நட்பு, தனது ஓரினச் சேர்க்கைத் தன்மை போன்றவற்றை ஓரளவு சுவாரசியமாக விவரித்திருக்கிறார்.

ரஜினிகாந்தின் மகளும் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா Standing on the Apple Box என்று தன் நினைவுகளை எழுதி இருக்கிறார். சுவாரசியப்படவில்லை.

தொகுக்கப்பட்ட பக்கம்: திரைப்படங்கள்

Everything is Tuberculosis

என் பாட்டி காச நோயில் இறந்தவர். அப்போது காச நோய்க்கு மருந்து கிடையாது. தாம்பரம் அருகே உள்ள சானடோரியத்தில் தங்க வைப்பார்கள், நல்ல காற்று, நல்ல உணவு இருந்தால் குணமாகலாம் என்று ஒரு நம்பிக்கை. அப்போது என் தாத்தா ஓய்வு பெற்றுவிட்டார், பென்ஷனில் குடும்பம் எப்படியோ ஓடிக் கொண்டிருந்தது,  நல்ல உணவு இருந்திருக்காது என்று நினைக்கிறேன். பற்றாக்குறைக்கு அப்போதெல்லாம் ரேஷன், அரிசி கூட சரியாகக் கிடைக்காது.

இந்தப் புத்தகத்தின் தலைப்பைப் பார்த்ததும் எப்படி கண்டுபிடித்தார்கள், எப்படி ஒழித்தார்கள் என்று தெரிந்து கொள்ளலாம் என்று ஆரம்பித்தேன். இன்றும் ஒழியவில்லை. ஆஃப்ரிக்காவில் லட்சக்கணக்கில் இன்றும் இறக்கிறார்களாம்.

புத்தகம் என் மனதைத் தொட்டது. Everything is Tuberculosis அல்ல, Everything is Money என்பதுதான் உண்மை. இன்று மேலை நாடுகளில் காசநோய் ஏறக்குறைய ஒழிந்துவிட்டது. இந்தியாவில் கூட அப்படித்தான் என்று நினைக்கிறேன். ஆனால் 1950கள் வரை இதற்கு மருந்தே கிடையாதாம். (என் பாட்டி இறந்த பிறகுதான் மருந்து கண்டுபிடித்திருக்கிறார்கள்). ஆரம்ப நிலையில் கண்டுபிடித்தால் ஆறிலிருந்து ஒன்பது மாதத்தில் குணப்படுத்திவிடலாமாம். ஆனால் மருந்துக்குப் பணம்? மருந்து கம்பெனிகளுக்கு லாபம்? அதனால் இன்று ஏழை நாடுகளில் அமுலில் இருக்கும் ட்ரீட்மெண்ட் வழிமுறைகள் – WHO பரிந்துரைகள் – அத்தனை efficient ஆக இல்லை என்கிறார்.

புத்தகம் முழுக்க பல நுண்விவரங்கள்; உதாரணமாக ஒரு காலத்தில் காசநோய்க்காரர்கள் அழகிகள் என்று கருதப்பட்டனராம். இன்றும் கன்னத்தில் rouge தடவப்படுவது அந்த நினைப்பின் எச்சம்தானாம். அமெரிக்காவில் இன்றைய நியூ மெக்சிகோ மாகாணத்தில் அன்று வெள்ளையர்கள் குறைவாக இருந்தார்களாம், அதனால் அமெரிக்கா அந்த மாகாணத்தை சேர்த்துக் கொள்ள மறுத்ததாம். காசநோய்க்காரர்களுக்கு ஏற்ற தட்பவெப்பநிலை என்று பிரச்சாரம் செய்து வெள்ளையர்களை அங்கே வரவழைத்தார்களாம். காசநோயால் இறந்தவர்கள் இது வரை மனித குலத்தில் மூன்றில் ஒரு பகுதி என்கிறார்.

புத்தகம் தனிப்பட்ட முறையிலும் – சியரா லியோனி நாட்டில் ஒரு சிறுவனை முன்வைத்து – மனதைத் தொடுகிறது. ஜான் க்ரீன் அந்தப் பையனை முதலில் பார்க்கும்போது அவனுக்கு ஒன்பது வயது என்று நினைக்கிறார். 17! சரியான உணவு இல்லாமல் வளர்ச்சி குறைவாக இருக்கிறது. எப்படியாவது அவனுக்கு குணமாகாதா என்று நினைக்க வைக்கிறார். (குணமாகிறது)

புத்தகத்தை எழுதிய ஜான் க்ரீன் சிறுவர் நாவல்களுக்காக பிரபலமானவர்.

படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: அபுனைவுகள்

தொடர்புடைய சுட்டி: ஜான் க்ரீன் விக்கி குறிப்பு

ஷெர்லாக் ஹோம்ஸின் போட்டியாளர்கள்

எனக்கு துப்பறியும் கதைகள் மீது கொஞ்சம் பித்து உண்டு. பதின்ம வயதில் படித்த ஷெர்லாக் ஹோம்ஸ் கதைகள் என் உள்ளம் கவர்ந்தவை. அதை விட சிறந்த துப்பறியும் கதைகள் இன்னும் வரவில்லை. பிடித்த கதைகளை சமீபத்தில் ஒரு லிஸ்ட் போட்டிருந்தேன்.

ஹோம்ஸ் கதைகளைப் படித்துவிட்டு வேறு கதைகளைப் படிக்க வேண்டும் என்று ஆவல். அகதா கிறிஸ்டி, பெர்ரி மேசன் கதைகளைத் தவிர வேறு எதுவும் தெரியவில்லை. கிறிஸ்டி பிடித்திருந்தாலும் ஹோம்ஸ் அளவு இல்லை என்று தெளிவாகத் தெரிந்தது. பெர்ரி மேசன் கிறிஸ்டி அளவு கூட வரவில்லை. வேறு துப்பறியும் கதைகளைப் பற்றி எதுவும் தெரியவில்லை.

அப்போது ஹ்யூ கிரீன் தொகுத்த Rivals of Sherlock Holmes என்ற புத்தகம் கிடைத்தது. ஹ்யூ கிரீன் (கிரஹாம் கிரீனின் சகோதரர்) இப்படி மூன்று அருமையான தொகுதிகளை கொண்டு வந்திருக்கிறார். Rivals of Sherlock Holmes, Further Rivals of Sherlock Holmes, American Rivals of Sherlock Holmes. அவர்தான் பிற நல்ல கதைகளை அறிமுகம் செய்து வைத்தார். இந்த Rivals அனைவரும் ஹோம்ஸின் “சமகாலத்தவர்” – அதாவது ஹோம்ஸ் கதைகள் வந்த காலத்தில் – 19 -ஆம் நூற்றாண்டு இறுதி, இருபதாம் நூற்றாண்டு ஆரம்பம் – இந்த கதைகள் எழுதப்பட்டிருக்கின்றன.

அந்த மூன்று தொகுதிகளிலிருந்து எனக்குப் பிடித்த சில துப்பறியும் “நிபுணர்கள்”, எழுத்தாளர்கள் பற்றி சின்ன ட்விட்டர் ஸ்டைல் குறிப்புகள்:

கிரான்ட் ஆலனின் கர்னல் க்ளே (Grant Allen’s Colonel Clay): க்ளே ஒரு ஏமாற்றுக்காரன். மீண்டும் மீண்டும் தென்னாப்பிரிக்க மில்லியனர் வாண்ட்ரிஃப்டிடமிருந்து பணத்தை திருடிக்கொண்டே இருக்கிறான். Episode of the Diamond Links என்னுடைய ஃபேவரிட் கதை.

ராபர்ட் பாரின் யூஜீன் வால்மான்ட் (Robert Barr’s Eugene Valmont): Absent-minded Coterie ஒரு அருமையான கதை. ஆனால் வேறு எதுவும் அவ்வளவு சுகமில்லை.

ஜாக்விஸ் ஃப்யூட்ரல்லின் திங்கிங் மெஷின் (Jacques Futrelle’s Thinking Machine): ப்ரொஃபசர் வான் டூசன் எல்லாம் தெரிந்த விஞ்ஞானி. சவால் விட்டு ஜெயிலிலிருந்து தப்பிக்கும் Problem of Cell 13 மிகவும் அருமையான கதை. எல்லா கதைகளிலும் தரம் எப்போதும் நன்றாக இருக்கும் என்று சொல்வதற்கில்லை, ஆனால் படிக்கலாம்.

மாரிஸ் லேப்ளான்கின் ஆர்சீன் லூபின் (Maurice Leblanc’s Arsene Lupin): லூபின் ஒரு திருடன். சில கதைகள் – Arsene Lupin in Prison, Red Silk Scarf – நன்றாக இருக்கும்.

ஆர்தர் மாரிசனின் மார்ட்டின் ஹெவிட் (Arthur Morrison’s Martin Hewitt): ஹெவிட் ஒரு சம்பிரதாய துப்பறியும் நிபுணர். படிக்கலாம்.

ஆர்தர் மாரிசனின் டாரிங்க்டன் (Arthur Morrison’s Dorrington): டாரிங்க்டன் துப்பறிபவனாக வேஷம் போடும் திருடன். படிக்கலாம்.

கிளிஃபோர்ட் ஆஷ்டவுனின் ராம்னி ப்ரிங்கிள் (Clifford Ashdown’s Romney Pringle): ராம்னி ப்ரிங்கிள் ஏமாற்றுக்காரர். நான் படித்த கதைகளின் ambience charming ஆக இருந்தது.

பாரனஸ் ஆர்க்சியின் (Baroness Orczy) Old Man in the Corner: ஒரு டீக்கடையில் உட்கார்ந்துகொண்டு மர்மங்களை தீர்ப்பார் இந்தக் கிழவர். மிகவும் நன்றாக இருக்கும்.

ஆஸ்டின் ஃபிரீமனின் டாக்டர் தார்ண்டைக் (Austin Freeman’s Dr. Thorndyke): தார்ண்டைக் விஞ்ஞானத்தை பயன்படுத்தி துப்பறிபவர். கொஞ்சம் dry ஆக இருந்தாலும் கதைகள் மிக நன்றாக இருக்கும்.

வில்லியம் ஹோப் ஹாட்க்சனின் கார்னகி (William Hope Hodgson’s Carnacki): கார்னகி பேயோட்டுபவர். எல்லா கதைகளிலும் ஒரு supernatural background இருக்கும்.

எர்னஸ்ட் பிரம்மாவின் மாக்ஸ் காரடோஸ் (Ernest Bramah’s Max Carrados): காரடோஸ் ஒரு குருடர். ஹோம்ஸ் தரத்துக்கு இல்லாவிட்டாலும் நல்ல துப்பறியும் கதைகள்.

சில இன்று curiosities மட்டுமே. Guy Boothby உருவாக்கிய திருடன் Simon Carne (A Wedding Guest சிறுகதை, Prince of Swindlers தொகுப்பு), E. Phillips Oppenheim (Mr. Blunt’s Three Clients சிறுகதை போன்றவை.

இந்தத் தொகுப்பில் இடம் பெறாத சில நல்ல துப்பறியும் கதைகளை எழுதியவர்கள்:

  1. எட்கார் ஆலன் போ – டூபின் (Edgar Allan Poe – Auguste Dupin) குறிப்பாக Purloined Letter சிறுகதை. டூபின் இல்லாத Gold Bug சிறுகதை.
  2. அகதா கிறிஸ்டி – ஹெர்க்யூல் போய்ரோ, மிஸ் மார்பிள் கதைகள் (Agatha Christie: Hercule Poirot, Miss Marple)
  3. டோரதி சேயர்ஸ் – பீட்டர் விம்சி கதைகள் (Dorothy Sayers: Lord Peter Wimsey)
  4. ஜி.கே. செஸ்டர்டன் – ஃபாதர் பிரவுன் கதைகள் (G.K. Chesterton: Father Brown)
  5. ஈ.சி. பென்ட்லி – ட்ரென்ட் கதைகள் (E.C. Bentley: Trent)
  6. ஹெச்.சி. பெய்லி – டாக்டர் ஃபார்ச்சூன் கதைகள் (H.C. Bailey – Dr. Fortune)
  7. எட்கார் வாலஸ் – ஜே.ஜி. ரீடர் கதைகள் (Edgar Wallace – J.G. Reeder)
  8. ஜோசஃபின் டே (Josephine Tey) – குறிப்பாக Daughter of Time நாவல்.
  9. மெல்வில் டேவிசன் போஸ்ட் – அங்கிள் எப்னர், ராண்டால்ஃப் மேசன் கதைகள் (Melville Davisson Post – Uncle Abner, Randolph Mason)
  10. டாஷியல் ஹாம்மட் (Dashiel Hammett)
  11. ரேமன்ட் சாண்ட்லர் – ஃபிலிப் மார்லோ (Raymond Chandler – Phillip Marlowe)
  12. ஜான் டிக்சன் கார் (John Dickson Carr) – குறிப்பாக Three Coffins நாவல்.

தொகுக்கப்பட்ட பக்கம்: த்ரில்லர்கள்

Everything is Tuberculosis

என் பாட்டி காச நோயில் இறந்தவர். அப்போது காச நோய்க்கு மருந்து கிடையாது. தாம்பரம் அருகே உள்ள சானடோரியத்தில் தங்க வைப்பார்கள், நல்ல காற்று, நல்ல உணவு இருந்தால் குணமாகலாம் என்று ஒரு நம்பிக்கை. அப்போது என் தாத்தா ஓய்வு பெற்றுவிட்டார், பென்ஷனில் குடும்பம் எப்படியோ ஓடிக் கொண்டிருந்தது,  நல்ல உணவு இருந்திருக்காது என்று நினைக்கிறேன். பற்றாக்குறைக்கு அப்போதெல்லாம் ரேஷன், அரிசி கூட சரியாகக் கிடைக்காது.

இந்தப் புத்தகத்தின் தலைப்பைப் பார்த்ததும் எப்படி கண்டுபிடித்தார்கள், எப்படி ஒழித்தார்கள் என்று தெரிந்து கொள்ளலாம் என்று ஆரம்பித்தேன். இன்றும் ஒழியவில்லை. ஆஃப்ரிக்காவில் லட்சக்கணக்கில் இன்றும் இறக்கிறார்களாம்.

புத்தகம் என் மனதைத் தொட்டது. Everything is Tuberculosis அல்ல, Everything is Money என்பதுதான் உண்மை. இன்று மேலை நாடுகளில் காசநோய் ஏறக்குறைய ஒழிந்துவிட்டது. இந்தியாவில் கூட அப்படித்தான் என்று நினைக்கிறேன். ஆனால் 1950கள் வரை இதற்கு மருந்தே கிடையாதாம். (என் பாட்டி இறந்த பிறகுதான் மருந்து கண்டுபிடித்திருக்கிறார்கள்). ஆரம்ப நிலையில் கண்டுபிடித்தால் ஆறிலிருந்து ஒன்பது மாதத்தில் குணப்படுத்திவிடலாமாம். ஆனால் மருந்துக்குப் பணம்? மருந்து கம்பெனிகளுக்கு லாபம்? அதனால் இன்று ஏழை நாடுகளில் அமுலில் இருக்கும் ட்ரீட்மெண்ட் வழிமுறைகள் – WHO பரிந்துரைகள் – அத்தனை efficient ஆக இல்லை என்கிறார்.

புத்தகம் முழுக்க பல நுண்விவரங்கள்; உதாரணமாக ஒரு காலத்தில் காசநோய்க்காரர்கள் அழகிகள் என்று கருதப்பட்டனராம். இன்றும் கன்னத்தில் rouge தடவப்படுவது அந்த நினைப்பின் எச்சம்தானாம். அமெரிக்காவில் இன்றைய நியூ மெக்சிகோ மாகாணத்தில் அன்று வெள்ளையர்கள் குறைவாக இருந்தார்களாம், அதனால் அமெரிக்கா அந்த மாகாணத்தை சேர்த்துக் கொள்ள மறுத்ததாம். காசநோய்க்காரர்களுக்கு ஏற்ற தட்பவெப்பநிலை என்று பிரச்சாரம் செய்து வெள்ளையர்களை அங்கே வரவழைத்தார்களாம். காசநோயால் இறந்தவர்கள் இது வரை மனித குலத்தில் மூன்றில் ஒரு பகுதி என்கிறார்.

புத்தகம் தனிப்பட்ட முறையிலும் – சியரா லியோனி நாட்டில் ஒரு சிறுவனை முன்வைத்து – மனதைத் தொடுகிறது. ஜான் க்ரீன் அந்தப் பையனை முதலில் பார்க்கும்போது அவனுக்கு ஒன்பது வயது என்று நினைக்கிறார். 17! சரியான உணவு இல்லாமல் வளர்ச்சி குறைவாக இருக்கிறது. எப்படியாவது அவனுக்கு குணமாகாதா என்று நினைக்க வைக்கிறார். (குணமாகிறது)

புத்தகத்தை எழுதிய ஜான் க்ரீன் சிறுவர் நாவல்களுக்காக பிரபலமானவர்.

படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: அபுனைவுகள்

தொடர்புடைய சுட்டி: ஜான் க்ரீன் விக்கி குறிப்பு

ஆஸ்டின் ஃப்ரீமனின் டாக்டர் தார்ண்டைக்

Austin Freeman
Austin Freeman

ஆஸ்டின் ஃப்ரீமன் போன்ற எழுத்தாளர்கள் துப்பறியும் நாவல்களின் பரம ரசிகர்களுக்காக மட்டுமே. அந்த சிறுவட்டத்தில் அவர் ஒரு சூப்பர்ஸ்டார். ஷெர்லக் ஹோம்ஸுக்கு அடுத்த நிலையில் உள்ள எழுத்துக்கள்.

ஃப்ரீமனின் டாக்டர் தார்ண்டைக் அறிவியலின் துணை கொண்டு துப்பறிபவர். அதனால் புகைப்படங்கள், கைரேகைகள், மைக்ரோஸ்கோப் போன்றவை அடிக்கடி அடிபடும். அதுவும் தார்ண்டைக் ஒரு colorless person. அதனால் கதைகள் எப்போதும் கொஞ்சம் dry ஆகத்தான் இருக்கும். மர்மம் எப்படி அவிழ்கிறது என்பதற்காகத்தான் படிக்க வேண்டும். ஆனால் அவற்றை மீறி அவ்வப்போது தெரியும் குசும்பு (Moabite Cipher), கைரேகைகளை வைத்து விளையாடும் Red Thumb Mark (1907) போன்ற படைப்புகள் இவரது எழுத்துக்களை உயர்த்துகின்றன.

ஃப்ரீமனின் முக்கிய பங்களிப்பு Inverted Detective Story. அதாவது முதல் பகுதியில் குற்றம் விவரிக்கப்படும். குற்றவாளி யாரென்பது வாசகனுக்கு நேரடியாகவே சொல்லப்படும். இரண்டாவது பகுதியில் அவன் விட்டுச்சென்ற தடையம் என்ன, எப்படி மாட்டிக் கொள்கிறான் என்பது தெளிவாகும்.

தார்ண்டைக் கதைகள் பலவற்றிலும் ஒரு obscure உண்மையை வைத்து தார்ண்டைக் மர்மத்தை அவிழ்ப்பார். இந்த வகைப் பாசி இங்கிலாந்தில் ஒரே ஒரு இடத்தில்தான் இருக்கிறது, ஆனால் வேறு இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பிணத்தின் நுரையீரலில் அது இருந்தது, அதனால் கொல்லப்பட்ட இடம் வேறு – இந்த மாதிரி. யாருக்கும் இதெல்லாம் தெரியப் போவதில்லை. ஆனாலும் படிக்கக் கூடிய கதைகளே.

தார்ண்டைக் நாவல்களில் மிகச் சிறந்தது Red Thumb Mark (1907). திருட்டுப் போன இடத்தில் ரத்தம் பதிந்த மிகத் தெளிவான கட்டைவிரல் கைரேகை கிடைக்கிறது. ஆனால் ரேகையின் சொந்தக்காரன் திருடவில்லை. சரளமான கதை. தார்ண்டைக்கின் பாத்திரம் – அறிவியல் மற்றும் சட்டத்தில் நிபுணர், அதைத் தவிர அவர் வாழ்க்கையில் வேறு எதுவும் இல்லை – மிகத் தெளிவாக வரையப்படுகிறது.

Eye of the Osiris (1911) சுமார்தான். சொத்துக்காரர் இறந்துவிட்டார் என்று தெரிகிறது, ஆனால் அவர் பிணம் கிடைக்கவில்லை. சட்டப்படி அவர் இறந்தாரா இல்லையா? அவரது உயில்படி எப்போது சொத்தைப் பிரிக்கலாம்? ஜெல்லிகோ என்ற பாத்திரம் நன்றாக வடிவமைக்கப்பட்டிருக்கும்.

ப்ரீமனின் ராம்னி ப்ரிங்கிள் சீரிசும் படிக்கக் கூடியவை. (படித்தே ஆக வேண்டியவை அல்ல). குறிப்பாக Assyrian Rejuvenator, Submarine Boat போன்ற சிறுகதைகளில் தெரியும் மெல்லிய நகைச்சுவையை நான் ரசிப்பவன்.

தார்ண்டைக் ஹோம்ஸ் அல்லர்தான். ஆனால் துப்பறியும் கதை ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும். என் கண்ணில் முக்கியமான துப்பறியும் கதை எழுத்தாளர். மற்றவர்களும் Moabite Cipher மாதிரி சிறுகதைகளை முயற்சித்துப் பார்க்கலாம். ஒரே ஒரு நாவல் படித்துப் பார்க்க வேண்டுமென்றால் Red Thumb Mark.

ஏறக்குறைய ஃப்ரீமனின் எல்லா படைப்புகளும் இணையத்தில் கிடைக்கின்றன.

தொகுக்கப்பட்ட பக்கம்: துப்பறியும் கதைகள்

தமிழ் வணிக எழுத்தாளர்கள், நாவல்கள்

இந்தப் பதிவில் வரும் எவரும் (மகரிஷி தவிர்த்து) எந்த விதத்திலும் முக்கியமான எழுத்தாளர் அல்லர். ஒரு காலகட்டத்தில் அந்தக் காலத்துக்கு சுவாரசியமான, இப்போது காலாவதியாகிவிட்ட கதைகளை வாரப் பத்திரிகைகளில் தொடர்கதைகளாகவோ, மாத நாவல்களாகவோ எழுதியவர்கள், அவ்வளவுதான். தமிழ் வணிக எழுத்து வரலாற்றிலேயே அதிகபட்சம் ஒரு அடிக்குறிப்பு (footnote) என்பதற்கு மேல் இவர்கள் யாருக்கும் இடமில்லை.

இது முழுமையான வணிக எழுத்து பட்டியலும் அல்ல என்பது தெளிவு.

படித்த சில நாவல்கள்/எழுத்தாளர்கள் பற்றி தனித்தனியாக எழுத சோம்பேறித்தனம், அதனால் இங்கே ஒன்றாக எழுதிவிட்டேன். மகரிஷி பற்றி மட்டும் என்றாவது தனியாக எழுத வேண்டும். இப்போதைக்கு அவரது நாவல்கள் சரியாக நினைவில்லை.

ஆனால் வார இதழின் பக்கங்களைக் கிழித்து bind செய்யப்பட்ட நாவல்களைப் படிப்பதில் ஒரு தனி சுகம் இருக்கிறது. அது என் தலைமுறைக்காரர்களுக்கு மட்டும்தான் தெரியும்!


  • என் பதின்ம வயதில் ராஜேந்திரகுமார் ஓரளவு பிரபலமான வணிக எழுத்தாளர். மாத நாவல்கள் ஆரம்பித்த காலத்தில் மிகப் பிரபலமாக இருந்தார். நண்பர்கள் வட்டாரத்தில் சுஜாதா, புஷ்பா தங்கதுரை இருவருக்கும் அடுத்த இடத்தில் இருந்தார். ஞே என்று விழிக்கும் பாத்திரங்கள், பைக்கில் போகும் இளைஞனின் முதுகில் அழுந்தும் இளைஞிகள் அடிக்கடி வருவார்கள். இன்று படிக்கும்போதுதான் கழுத்துக்கு கீழே கை நகர்ந்தது என்று படித்தாலே கிளுகிளுப்பு அடைந்தோமா என்று தோன்றுகிறது.
  • நாஸ்டால்ஜியாவால் சமீபத்தில் சில கதைகளைப் படித்தேன். வால்கள் (1963) அறுபதுகளில் எழுதப்பட்டிருக்கும் என்று நினைக்கிறேன். முன்னுரையில் 1963-இல் எழுதப்பட்டது என்று போட்டிருந்தாலும் அமலா, நதியா என்று எண்பதுகளின் நடிகைகள் பேரெல்லாம் வருகிறது. ஒரு வேளை காலத்துக்கேற்ப் அப்டேட் செய்துவிட்டாரோ என்னவோ. ஒன்று நிச்சயம், 1963 காலகட்டத்தில் வெற்றி பெற்ற வணிக நாவலாக இருந்திருக்கும். பதின்ம வயதுப் பள்ளிப் பெண்களின் லூட்டி. அந்தக் காலத்து வணிக நாவல்களின் பிரதிநிதியாக இணைத்திருக்கிறேன். காப்பிரைட் பிரச்சினை வந்தால் எடுத்துவிடுவேன்.
  • மாத நாவலாக வந்த காதலுக்கு கெட்டிக்காரனை மீள்வாசிப்பு செய்தபோது அவரது அந்தக் காலக் கவர்ச்சியை புரிய வைத்தது. சளசளவென்று உரிமையோடு ஆண்களோடு பேசும் நாயகி! அந்த மாதிரி யாராவது கிடைக்கமாட்டார்களா என்று அலைந்த காலம்.
  • வணக்கத்துக்குரிய காதலியே டைம்பாஸ் புத்தகம். திரைப்படமாக வந்தது. இளமை இனிமை இந்துரேகா ஏதோ மாத நாவல். திறமையாக எடிட் செய்யப்பட்ட திரைப்படம் போல காட்சிகள் மாறுகின்றன. ஆனால் கதையில் வலு இல்லை.
  • ஒரு சாத்தான் வேதம் ஓதுகிறது எழுபதுகளில் வரும் திரைப்படம் போல பல திடுக்கிடும் காட்சிகளைக் கொண்டது.
  • என்றும் உன் அருகில், கண்டுபிடி கண்ணே, குளிர் குளிர் குளிர், மறுபடியும் மரணம், நம்புவதற்கல்ல, நீலமான ராத்திரி, நியாயம் சில சமயம் கொல்லும், ஒரு தேவி என்னைத் தேடுகிறாள் எல்லாம் படிப்பவர்களைக் கொல்கிறது.

  • ஒரு காலத்தில் மணியனுக்கு இருந்த பிரபலம் புரியாத புதிர்தான். அவர் கொடி கட்டிப் பறந்த காலத்திலேயே – நான் வேர்க்கடலை கட்டி வந்த காகிதங்களைக் கூட படித்த காலம் – அவர் கதைகளை என்னால் படிக்க முடிந்ததில்லை. எல்லாவற்றிலும் செக்ஸ், காதல் பற்றித்தான் பேச்சு. ஆனால் நேரடியாகப் பேசமாட்டார்கள், கடுப்படிக்கும் வகையில் சுற்றி வளைப்பார்.
  • கெட்ட கேட்டுக்கு இதில் பல திரைப்படமாகவும் வங்திருக்கிறது – மோகம் முப்பது வருஷம், இதய வீணை, சொல்லத்தான் நினைக்கிறேன் (இலவு காத்த கிளி), வயசுப்பொண்ணு (லவ்பேர்ட்ஸ்) என்று. இதய வீணையும் சொ. நினைக்கிறேனும் நன்றாக ஓடின என்று நினைக்கிறேன்.
  • லவ்பேர்ட்ஸ், கணவன் அமைவதெல்லாம், ஆசை வெட்கமறியும்(1976) போன்ற வாரப் பத்திரிகை தொடர்களெல்லாம் சுத்த வேஸ்ட்.
  • இதயம் பேசுகிறது தொடர்தான் அவரை பிரபலமாக்கியது என்று நினைக்கிறேன். வெளிநாட்டுக் கவர்ச்சியில் அப்போது ஆர்வமாக எல்லாரும் படித்தார்களோ என்னவோ. இரண்டு மூன்று முறை புரட்டிப் பார்த்திருக்கிறேன், எப்போது பார்த்தாலும் சாப்பாட்டைப் பற்றித்தான் புலம்புவது போல இருந்தது…

  • javar_seetharamanஎனக்குத் தெரிந்த ஜாவர் சீதாராமன் நடிகர் ஜாவர்தான். அந்த நாள், பட்டணத்தில் பூதம், வீரபாண்டிய கட்டபொம்மன், மணமகன் தேவை மாதிரி சில படங்களில் பார்த்திருக்கிறேன். எனக்குத் தெரிந்து அவர் நன்றாக நடித்தது ஏழை படும் பாடு திரைப்படத்தில்தான். அந்தப் படத்தில் ஜாவர் கதாபாத்திரத்தில் நடித்தத்தால்தான் அவருக்கு ஜாவர் என்று அடைமொழி ஏற்பட்டது.
  • ஜாவர் எழுதுவார் என்று கேள்விப்பட்டிருந்தாலும் எதையும் நான் படித்ததில்லை. சமீபத்தில்தான் சில புத்தகங்கள் pdf வடிவத்தில் கிடைத்தன. அவர் ஒன்றும் பிரமாதமாக எழுதிவிடவில்லை. அதுவும் சில சமயஙகளில் கிளுகிளுப்பாக எழுதுகிறோம் என்று நினைத்துக் கொண்டு (ரவிக்கை கிழிவது என்றால் அவருக்கு ரொம்பப் பிடிக்கும் போலிருக்கிறது) செயற்கையாக எழுதுவது கொஞ்சம் கடுப்படிக்கிறது. ஐம்பதுகளின் திரைக்கதைகள் போல பல யூகிக்கக் கூடிய செயற்கையான ட்விஸ்டுகளுடன் எழுதி இருக்கிறார். இருந்தாலும் அன்று சுவாரசியமாக இருந்திருக்கும், அந்தக் காலத்தில் நான் வாழ்ந்திருந்தால் சில நாவல்களை இன்று போல வேண்டாவிருப்பாக இல்லாமல் நிச்சயமாக விரும்பிப் படித்திருப்பேன் – குறிப்பாக உடல் பொருள் ஆனந்தி மற்றும் பணம் பெண் பாசம் – என்றுதான் நினைக்கிறேன். (மின்னல் மழை மோகினியும் அன்றைய காலகட்டத்துக்கு படிக்கக் கூடிய தொடர்கதையே) ஐம்பதுகளில் திரைப்படமாகவோ அல்லது நாடகமாகவோ வந்திருந்தால் நிச்சயம் வெற்றி பெற்றிருக்கும்.
  • அவர் எழுதியவற்றில் சிறந்தவை உடல் பொருள் ஆனந்தி மற்றும் பணம் பெண் பாசம். உ. பொ. ஆனந்தியில் மெஸ்மரிசம் என்ற போர்வையில் ஒரு பேய்க்கதை. படிக்கலாம். ப. பெ. பாசத்தில் பணக்கார வில்லன் அப்பா, அவரை நல்ல வழிக்குக் கொண்டு வர பாடுபடும் பெண். மி.ம. மோகினியில் கன்னிப் பெண்ணுக்கு இன்னல் வந்து தீர்கிறது.
  • மற்ற நாவல்கள் எல்லாம் தண்டம். நானே நான் மாதிரி நாவலில் வரும் உருவ ஒற்றுமை உள்ள இருவர், ஒருவருக்கு அம்னீசியா என்பதெல்லாம் அறுபதுகளில் கூட திரைப்படங்களில் பார்க்கக் கூடிய கருக்கள்தான். சொர்க்கத்தில் புயல் பல சினிமாத்தனமான ட்விஸ்டுகளுடன் படு செயற்கையாக எழுதப்பட்டிருக்கிறது.
  • கொடுமையிலும் பெரும் கொடுமை கிளுகிளுப்பாக எழுதுகிறோம் என்று நினைத்துக் கொண்டு எதையோ எழுதி இருப்பது. குறிப்பாக அவர் கதைகளில் ரவிக்கையை கிழித்துக் கொண்டே இருக்கிறார்கள்!

  • மகரிஷி: பல நாவல்களை எழுதி இருக்கிறார், ஆனால் பனிப்போர் என்ற குறுநாவல் மட்டுமே ஏனோ இன்னும் நினைவிருக்கிறது. ஆனால் விவரிக்கும் அளவு வொர்த் இல்லை. பிற நாவல்களைத் தேடிப் பார்க்க வேண்டும்.
  • ஜெயமோகன் மகரிஷியின் பனிமலை, வட்டத்திற்குள் ஒரு சதுரம், நதியைத் தேடிவந்த கடல் ஆகியவற்றை குறிப்பிட வேண்டிய புனைவுகள் என்கிறார்.
  • சில நாவல்கள் திரைப்படமாக வந்தன – பனிமலை என்னதான் முடிவு என்ற திரைப்படமாக; பத்ரகாளி, புவனா ஒரு கேள்விக்குறி, சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு,  வட்டத்துக்குள் சதுரம், நதியைத் தேடி வந்த கடல் ஆகிய நாவல்களும் திரைப்படமாக வந்தன.

  • கல்கி ராஜேந்திரன் கல்கியின் மகன். கல்கி பத்திரிகைக்கு ஆசிரியராக இருந்தவர்.
  • ரவிகுலதிலகன் என்ற சுமாரான சரித்திர நாவலை எழுதி இருக்கிறார்.
  • சைக்கோ சாரநாதன் எழுதப்பட்டபோது பிரபலமாக இருந்தது என்று கேள்வி. சைக்கோக்கள் பற்றி எழுதுவது அப்போது புதுமையாக இருந்திருக்கும்.

  • எல்லார்வி: கலீர் கலீர் என்ற நாவல் – அதுவும் கடைசி சில பக்கங்களைக் காணவில்லை – கிடைத்தது. அந்தக் காலத்தில் புகழ் பெற்ற வயலின் கலைஞர் மலைக்கோட்டை கோவிந்தசாமிப் பிள்ளை என்பவர் 18 நாள் ஒரு மன நோயாளியிடம் தினம் ஒரு மணி நேரம் வயலின் வாசித்ததில் அவரது மன நோய் குணமாகிவிட்டதாம். அதை அடிப்படையாக வைத்து நடனத்தின் மூலம் ஒரு மன நோயாளி குணமானார் என்று கதை எழுதி இருக்கிறார். டி.ஆர். மஹாலிங்கம், அஞ்சலி தேவி, ஈ.வி. சரோஜா, எம்.ஆர். ராதா நடித்து ஆட வந்த தெய்வம் என்று திரைப்படமாகவும் வந்தது.
  • தோடி அடகு என்ற ஒரு அபுனைவும் கிடைத்தது. பல இசை வல்லுனர்களின் வாழ்க்கை நிகழ்ச்சிகளின் தொகுப்பு.
  • ராஜமாணிக்கம் பிள்ளையின் வாழ்க்கை வரலாற்றையும் புத்தகமாக எழுதி இருக்கிறார்.
  • எல்லார்வியின் ஒரு சிறுகதையை – நல்வாழ்வு – இணையத்தில் கிடைக்கிறது.

  • கிருஷ்ணமணி எழுதிய வேர்கள் என்ற நாவல் விகடன் நாவல் போட்டியில் பரிசு பெற்றது. சுமாரான வணிக நாவல். நிறைய பேசிக் கொண்டே இருக்கிறார்கள். நாயகன், நாயகி இருவரும் நாயகன் நாயகி என்ற காரணத்தினாலேயே காதலில் விழுகிறார்கள், மகா தெளிவுடன் இருக்கிறார்கள்…

  • தேவிபாலாமடிசார் மாமி (1992) விகடனில் தொடர்கதையாக வந்தது, அந்தக் காலத்தில் பிரபலமாகவும் இருந்தது. பத்தினிக்கு இன்னல் வரும் ஃபார்முலாவை ஒரு ஆணும் பிடித்துக் கொண்டாரே என்று ஆச்சரியப்பட வைத்தார்.

  • யுவகிருஷ்ணா எழுதியஅழிக்கப் பிறந்தவன் நாவலின் பின்புலம் – பர்மா பஜாரின் குற்றப் பின்னணி – மட்டுமே அதை கொஞ்சம் வித்தியாசப்படுத்துகிறது. எப்படியோ முடிக்க வேண்டும் என்று அவசரப்பட்டிருக்கிறார்.

  • ஏ.கே. பட்டுசாமி எழுதிய கான்ஸ்டபிள் கந்தசாமி கல்கியில் தொடர்கதையாக வந்தது. பந்தா காட்டும் நாயகன், அவனுடைய காதல், அவன் மாட்டிக் கொள்ளும் சம்பவங்கள், கடைசியில் அடிக்கும் ஜாக்பாட் என்று கதை. கதை முக்கியமே இல்லை, ஆனால் அதன் ambience பழைய நினைவுகளைத் தூண்டியது.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் வணிக எழுத்தாளர்கள்

தொடர்புடைய சுட்டிகள்:

சில மலையாள நாடகங்கள்

சமீபத்தில் சில மலையாள நாடகங்களைப் படிக்க முடிந்தது.

சி.ஜே. தாமஸ் ஜேஜே சில குறிப்புகளின் நாயகனாக ஜேஜேயின் ரிஷிமூலமாம். தாமஸ் எழுதிய “அவன் வீண்டும் வருன்னு” சில விதங்களில் இப்சனின் பாணியை நினைவுபடுத்தியது. ஆனால் சுமாரான நாடகம்தான். 1949-இல் எழுதப்பட்டிருக்கிறது, அப்போது தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கலாம். இன்று முன்னோடி நாடகம் மட்டும்தான் என்று தோன்றுகிறது. இரண்டாம் உலகப் போரில் பணத்தேவைகளுக்காக சிப்பாயாகச் சென்றிருக்கும் மாத்துக்குட்டி. நாலு வருஷம் பிரிவில் மாத்துக்குட்டியின் நண்பனுக்கும் மாத்துக்குட்டியின் மனைவிக்கு உறவு ஏற்படுகிறது, சாராம்மா கர்ப்பம். கண்களை இழந்து திரும்பி வரும் மாத்துக்குட்டி முதல் கோபத்துக்குப் பின் மனைவி தன் பொறுப்பு என்று உணர்கிறான், ஆனால் அவளோடு நெருங்க முடியவில்லை. ஒரு உபதேசியார் ஏசு வருகிறார் என்று பேசிக் கொண்டே இருக்கிறார், அந்தப் பாத்திரம்தான் இந்த நாடகத்தில் நினைவிருக்கப் போகிறது.

கே.டி. முகம்மது எழுதிய “இது பூமியாணு” அன்று புரட்சிகரமான நாடகமாக இருந்திருக்கும். சீர்திருத்த எண்ணம் கொண்டு காலித் ஒரு ஏழைப்பெண்ணை தன் வீட்டிற்கு அழைத்து வந்து ஆதரிக்கிறான். ஊரில் – அவனது பெரியப்பா உட்பட – எல்லாரும் அவனை காறித் துப்புகிறார்கள். பெரியப்பா பாத்திரம் நடிக்க நல்ல ஸ்கோப் உள்ளது. படிக்கலாம்.

என். கிருஷ்ணபிள்ளை எழுதிய “கன்யகா” (1944) நாடகத்தோடு என்னால் ஒட்ட முடியவில்லை. 1944-இல் 35 வயதுப் பெண், திருமணம் ஆகவில்லை, அவள் சம்பளத்தில் அவள் வீட்டில் எல்லாரும் வசதியாக வாழ்கிறார்கள், அவள் தம்பிக்கு வேலைக்குப் போவது இழிவு என்றுதான் எண்ணம். அவள் தங்கை கணவனுக்கு வேலை இல்லை, அவன் வீட்டை விட்டு வெளியேறுகிறான். தவிர்க்கலாம்.

என்.என். பிள்ளை (ஓமசேரி) எழுதிய கோவில் ஆன ஒரு satire. பசியால் முரண்டு பிடிக்கும் யானையின் கதையை வைத்து அரசியல், அதிகாரிகள் எல்லாரையும் தாக்குகிறார். சுமார்தான்.

இவற்றைத் தவிர நிங்ஙள் என்னை கம்யூனிஸ்டாக்கி (1952) என்ற தோப்பில் பாசி நாடகத்தைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். வேறு முக்கியமான நாடகம் என்னென்ன என்று தெரியவில்லை. உங்களுக்கு ஏதாவது தெரிந்தால் சொல்லுங்கள்!

நான் படித்த நாலு நாடகங்களை வைத்து சொல்லிவிட முடியாதுதான். இருந்தாலும் படித்தே ஆக வேண்டிய மலையாள நாடகங்கள் குறைவுதான் என்று தோன்றுகிறது.

தொகுக்கப்பட்ட பக்கம்: இந்திய புனைவுகள்

❌