Normal view

Received before yesterdayதமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்

தமுஎகச கலை இலக்கிய விருதுகள் 2024

2024ஆம் ஆண்டுக்குரிய “தமுஎகச கலை இலக்கிய விருது”களுக்கான நூல்கள், ஆவணப்படங்கள் / குறும்படங்கள் வரவேற்கப்படுகின்றன. ஏற்கனவே வழங்கப்பட்டுவரும் விருதுகளுடன் *தோழர் கருப்பு கருணா* பெயரால் நுண்கலைகளுக்கான விருதும்,  *தோழர் ஜனநேசன்* பெயரால் எழுத்தாளரின் முதல் நூலுக்கான விருதும் இவ்வாண்டு முதல் இணைகின்றன.  2024ஆம் ஆண்டில் வெளியானவை மட்டுமே பரிசீலனைக்குரியவை. நூலின் மூன்று பிரதிகள் 2025 மார்ச் 10ஆம்

மதச்சார்பின்மைக்கு மாறாக பழனி மாநாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானங்களை திரும்பப்பெறுக!

தமுஎகச வலியுறுத்தல்இந்து சமய அறநிலையத்துறையின் முன்னெடுப்பில் பழனியில் அகில உலக முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெற்று முடிந்துள்ளது. இந்த மாநாட்டில், 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.சித்த மருத்துவத்தை இனிவரும் காலங்களில் தமிழர் சித்த மருத்துவம் என்று அழைத்திட தமிழ்நாடு அரசுக்கு பரிந்துரை செய்தும் பழனியில் தமிழர் சித்த மருத்துவர் ஆராய்ச்சி மையம் அமைத்திட பரிந்துரைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ள

தமுஎகச பொன்விழா ஆண்டு இலட்சினை வெளியீடு

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் பொன்விழா இலச்சினை இன்று (2024 ஜூலை 7) கோவையில் வெளியிடப்பட்டது. வரைந்தளித்த ஓவியர்: பிரபாகரன் காசிராஜன்

இப்போதில்லாவிட்டால்…

தமிழ்நாட்டு வாக்காளர்களுக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் வேண்டுகோள்    நாட்டின் விடுதலைக்காகத் தீரமுடன் போராடிய மக்களின் விருப்பார்வங்களிலிருந்து உருவான நமது அரசியல் சட்டத்தை ஒழித்துக்கட்ட, அன்னியராட்சிக்கு சேவகம் செய்து வந்தவர்களின் கூட்டுமுகமான பாஜக ஆட்சி தொடர்ந்து முயற்சித்துவருகிறது. அரசியல் சாசனத்தின் மாண்புகளுக்கு ஒத்திசைவாகவும் சுதந்திரமாகவும் இயங்கவேண்டிய நாடாளுமன்றம்/ சட்டமன்றங்கள்,

கர்நாடக இசைப் பாடகர் டி.எம்.கிருஷ்ணாவை அவமதிப்பதா? - தமுஎகச கண்டனம்

தனது இசைப்புலமைக்காகவும் துணிச்சலான எழுத்துக்காகவும் சமூகச் செயல்பாடுகளுக்காகவும் சர்வதேச விருதுகள் பலவற்றை பெற்றுள்ள கர்நாடக இசைப் பாடகர் டி.எம்.கிருஷ்ணா, சென்னை மியூசிக் அகாடமியின் 2024ஆம் ஆண்டுக்கான சங்கீத கலாநிதி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். விருதுக்குரியவர் என்ற வகையில் 2024 டிசம்பர் இறுதியில் நடைபெறவுள்ள மியூசிக் அகாடமியின் 98ஆம் ஆண்டு இசை நிகழ்வுகளுக்கு கிருஷ்ணா தலைமை வகிப்பார்.

தமுஎகச கலை இலக்கிய விருதுகள் 2023

01.02.20242023ஆம் ஆண்டுக்குரிய “தமுஎகச கலை இலக்கிய விருது”களுக்கான நூல்கள், ஆவணப்படங்கள் / குறும்படங்கள் வரவேற்கப்படுகின்றன. 2023ஆம் ஆண்டில் வெளியானவை மட்டுமே பரிசீலனைக்குரியவை. நூலின் மூன்று பிரதிகள் 2024 பிப்ரவரி 28ஆம் தேதிக்குள் அஞ்சல் / தூதஞ்சல் (கூரியர்) மூலம் அனுப்பப்பட வேண்டும். பரிசீலனைக்கு வரும் நூல்களைத் திருப்பி அனுப்ப இயலாது.நூல்களை அனுப்ப வேண்டிய முகவரி:பொதுச்செயலாளர், தமிழ்நாடு

தோழர் என்.சங்கரய்யா மறைவுக்கு தமுஎகச புகழஞ்சலி

விடுதலைப்போராட்ட வீரர், இந்திய பொதுவுடமை இயக்கத்தின் மகத்தான தலைவர், தகைசால் தமிழர் தோழர் என்.சங்கரய்யா அவர்களின் மறைவுக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் தன்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது. அவரது மறைவு முற்போக்கு கலை இலக்கிய உலகிற்கு பேரிழப்பாகும். எழுத்தாளர் கு.சின்னப்பபாரதி செம்மலர் இலக்கிய ஏட்டினைத் தொடங்குவதற்கு உந்துசக்தியாக இருந்தவர்களுள் தோழர் சங்கரய்யாவும்

தமுஎகச மாநிலச்செயற்குழுக் கூட்டத்தின் தீர்மானங்கள்

2023 அக்டோபர் 7 அன்று தேனியில் மாநிலத்தலைவர் தோழர் மதுக்கூர் இராமலிங்கம் தலைமையில் நடைபெற்ற தமுஎகச மாநிலச் செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு: 1. ஜனநாயகத்தின் தாயகம் இந்தியா என்று பீற்றிக்கொண்டே ஜனநாயகத்தைத் தாங்கும் தூண்களில் ஒன்றான ஊடகங்களை ஒடுக்கிவருவது தொடர்பாக மோடி அரசு உலகளாவிய கண்டனங்களைப் பெற்றுவருகிறது. ஆனாலும் அரசியல் சாசனத்தால் உறுதி செய்யப்பட்டுள்ள

நூற்றாண்டு காணும் கவிஞர் தமிழ்ஒளி அவர்களைப் போற்றும் தமிழ்நாடு அரசின் அறிவிப்பு

தமுஎகச வரவேற்பு 19.09.2023 “தனிமுறையில் நான் உனக்குப் புதிய சொத்து” என்று தமிழ்ச்சமூகத்திற்கு தன்னை ஒப்பளித்த கவிஞர் தமிழ்ஒளி 1924 செப்டம்பர் 21 அன்று பிறந்தவர். நாளை மறுதினம் அவரது நூற்றாண்டு தொடங்குகிறது. பாரதி, பாரதிதாசன், பெரியார், ஜீவா ஆகியோரின் கருத்தியல்களால் ஈர்க்கப்பட்டு கலை இலக்கியத்தளத்திலும் அரசியலிலும் தீவிரமாக பங்காற்றியவர் கவிஞர் தமிழ் ஒளி. விடுதலைக்கு முந்தைய காலனிய இந்தியாவிலும்

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரையைத் திரிக்கும் மோசடி

தமுஎகச கண்டனம் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் 2023 செப்டம்பர் 2 அன்று சென்னையில் நடத்திய சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரையைத் திரித்து அவர் மீது அவதூறு பரப்புவோருக்கு தமுஎகச தனது கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது.  உதயநிதி ஸ்டாலின் ஆற்றிய உரை உள்ளிட்டு மாநாட்டின் நிகழ்வுகள் அனைத்தும் காணொலியாக சமூக ஊடகங்களில் காணக்கிடைக்கிறது. அவற்றை காணும்

சனாதன ஒழிப்பு மாநாடு - தீர்மானங்கள்

சனாதன ஒழிப்பு மாநாடு2023 செப்டம்பர் 2, காமராசர் அரங்கம், சென்னைதீர்மானங்கள் 1. மனிதர்களை பிறப்பின் அடிப்படையில் பாகுபடுத்தும் வர்ணாஸ்ரமக் கோட்பாட்டை தொகுத்தெழுதிய மநுவின் சிலை ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தின் ஜெய்ப்பூர் அமர்வாய வளாகத்தில் 1989ஆம் ஆண்டு முதல் இருப்பது அரசியல் சட்டத்தின் மாண்புகளுக்கு விரோதமானது. எனவே அதை உடனடியாக அகற்ற வேண்டும். 2. அரசியல் சட்டத்தின் நோக்கங்களை

பிளவுவாத அரசியலுக்கு எதிராக ஒன்றுபடுவோம்!

பொது சிவில் சட்டம் பற்றி 12.07.2023 மாலை இணையவழியில் தமுஎகச மாநிலக்குழு நடத்திய தெளிவரங்கில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்: பொது சிவில் சட்டத்திற்கான கருத்துக்கேட்பு என்ற பெயரில் ஒன்றிய பாஜக அரசு பன்மைத்துவ இந்தியா எனும் தேன்கூட்டின் மீது கல்லெறிந்து மீண்டும் களேபரத்தைத் துவக்கியுள்ளது. அயோத்தியில் பாபர்மசூதியை இடித்த இடத்தில் ராமருக்குக் கோவில் கட்டுவது, ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்புச் சலுகை

தமிழ்நாட்டில் பயிற்றுவிக்க இந்தியும் சமஸ்கிருதமும் படித்தவர் எதற்கு?

- தமுஎகச கண்டனம் தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனம்,  பகுதிநேர கெளரவ விரிவுரையாளர் பணிக்கு ஆளெடுப்பது தொடர்பான  விளம்பரம் ஒன்றை இன்று நாளேடுகளில் வெளியிட்டுள்ளது. இந்தப் பணியில் சேர்வதற்கான கல்வித்தகுதி பற்றிய குறிப்பில் தமிழ், ஆங்கிலம், இந்தி, மற்றும் சமஸ்கிருதம் ஆகிய மொழிப்பாடங்களில் முதுநிலை அல்லது எம்.பில்., பட்டம் பெற்றிக்கவேண்டும் எனக்

தமுஎகச நடத்தும் சனாதன ஒழிப்பு மாநாடு

இலச்சினை  வரையும் போட்டி சனாதன தர்மம் என்பது இந்தியாவில் குடியேறிய ஆரியர்களுக்குரியது; அது நான்கு வேதங்கள், நான்கு ஸ்மிருதிகள், இரண்டு இதிகாசங்கள், பதினெட்டு புராணங்கள் ஆகியவற்றில் தனிநபர், குடும்பம், சமூகம் சார்ந்து சொல்லப்பட்டுள்ள சட்டங்கள், ஒழுங்குகள், மதிப்பீடுகள், கடமைகள் ஆகியவற்றைப் பின்பற்றி வாழும்படி வற்புறுத்துகிறது. இதற்கேற்ப புனையப்பட்ட உயர்வுXதாழ்வு, புனிதம்Xதீட்டு எனும் கற்பிதங்கள்

கவிஞர் விடுதலை சிகப்பி மீது பொய்வழக்கு: கருத்துரிமைக்கு அச்சுறுத்தல்

தமுஎகச கண்டனம் மலக்குழியில் இறக்கிவிடப்பட்டு அன்றாடம் செத்தொழிவதற்கென்றே ஒருசில சாதிகளை கடவுள்கள்தான் படைத்தனரென சொல்லப்பட்டால், அந்தக் கடவுளர்கள் ஒருநாள் இறங்கி, அந்த வாழ்வு எவ்வளவு கொடியது என்பதை நேரடியாய் உணரட்டும் என்கிற மெய்யாவேசத்துடன் எழுதப்பட்டதுதான் விடுதலை சிகப்பியின் கவிதை. ஆனால் இக்கவிதை கடவுள்களை அவமதித்துவிட்டதாகவும் தங்களது மனதை புண்படுத்திவிட்டதாகவும் திரித்து பாரத் இந்து முன்னணி

தமுஎகச மாநிலக்குழு தீர்மானங்கள்

தமுஎகச மாநிலக்குழுக் கூட்டம் 2023 ஏப்ரல் 29, 30 ஏற்காடு 2023 ஏப்ரல் 29,30 தேதிகளில் சேலம் மாவட்டம் ஏற்காட்டில் நடைபெற்ற தமுஎகச மாநிலக்குழுக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:தீர்மானங்கள்:  இந்தியாவில் சமூக மாற்றத்திற்கான போராட்டத்தின் முன்னோடி சிங்காரவேலரின் பெயரில் இந்த ஆண்டு மே தினத்தைக் கொண்டாடுக! இந்தியாவில் முதன்முதலில் மேதினம் கொண்டாடியப் பெருமை சிந்தனைச்சிற்பி

இந்திய அரசியல் சட்டத்தின் அடிப்படை 'சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம்' மட்டுமே!

2023 ஏப்ரல் 2 அன்று சென்னையில் நடைபெற்ற ”திருப்பாவையில் நவீன மேலாண்மைப் பாடம்” உள்ளிட்ட மூன்று நூல்களின் வெளியீட்டு விழாவில் பேசிய உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் நீதிபதி திரு.ஜி.ஆர்.சுவாமிநாதன் தெரிவித்த சில கருத்துகள் அவர் வகிக்கும் பதவியின் மாண்புக்கு ஏற்புடையதல்ல என்ற தமுஎகச கருதுகிறது. “இந்திய அரசமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டபோது இருந்த Demographic Profile மாறாமல் இருக்கும் வரைதான்,

காவிரி டெல்டாவில் நிலக்கரிச் சுரங்கம் அமைக்க தமுஎகச எதிர்ப்பு

நாடு முழுவதும் 101 நிலக்கரிச் சுரங்கங்களை ஏலம் விடுவதற்கான அறிவிப்பை இந்திய ஒன்றிய அரசின் நிலக்கரி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில், தமிழ்நாட்டின் உணவு உற்பத்தி மண்டலம் என்கிற தனிச்சிறப்பு வாய்ந்த காவிரி டெல்டா மாவட்டங்களில் மூன்று சுரங்கங்களைத் தோண்டப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் வரலாற்றிலும் கலை இலக்கியத்திலும் பண்பாட்டிலும் தொல்காலந்தொட்டு செழித்துப் பரவியுள்ள
❌