எந்த ஒரு மனிதனும் உணவை மட்டுமே போதும் எனச் சொல்வான். வேறு எந்த பொருளையும் போதும் என்று சொல்ல மனம் வருவதில்லை. வீண்பகட்டு,வெற்று ஆடம்பரம் , புகழ் மயக்கம் போன்றவற்றில் மனதை செல்லவிடும் மனிதன் தன் மனதைக் கட்டுபடுத்தத் தெரியாமல் அதன்போக்கில் செல்லவிடும்போது மனம் செம்மையை இழந்துவிடுகிறது.
உடலையும் மனதையும் ஒருசேர செம்மையாக வைத்திருக்க உதவுவது படிப்பு மட்டுமே.
எந்த நூலாயினும் முன்னுரை, பதிப்புரை ,மதிப்புரை படித்தபின்பே மைய நூலைப் படிப்பேன். அது ஒரு வழிகாட்டியாக நூலைப் புரிந்து கொள்ள உதவும். அந்த வகையில் ஆசிரியரின் முன்னுரையால் ஒருவித பதற்றத்துடன் கதையைப் படிக்கத் துவங்க ....
திரு ஏ.பி.ஜெ. அப்துல்கலம், இந்தியாவின் முன்னணி ஏவுகணை விஞ்ஞானியாக, தனது சுயசரிதையில் தனது வாழ்க்கை மற்றும் சாதனைகளை விவரிக்கின்றார். பெற்றோரின் வாழ்வியல், நண்பர்களின் உதவிகள், தோல்விகளை எதிர்கொண்டு வெற்றிக்கு அணுகுமுறைகளை வகுப்பது போன்ற அனுபவங்களில் கல்வி மற்றும் நம்பிக்கையின் விருதுகளை அடைகிறார்.
முல்லா கதைகள் என்ற சிறுகதைத் தொகுப்பில் 69 கதைகள் உள்ளன. முல்லா, புகழ்பெற்ற வாத்களுக்காக செல்வாக்குள்ளவர், ஏற்படும் சிக்கல்களில் புத்திசாலித்தனம் காட்டுகிறான். இந்த கதைகள் விவகாரங்களை நகைச்சுவையுடன் விவாதிக்கின்றன, மகிழ்ச்சி தருகின்றன, மற்றும் முல்லாவின் அறிவை பற்றிய பல்வேறு காட்சிகளை வழங்குகின்றன.
ஆசிரியர் விபூதிபூஷண் பந்தோ பாத்யாயா பற்றிய குறிப்பில் பதேர் பாஞ்சாலி கதையை எழுதியவர் என்பதைப் படித்ததும் புத்தகத்தை வாங்கிவிட்டேன். பதேர் பாஞ்சாலிக் கதை மிகவும் பேசப்பட்ட கதை என்று மட்டுமே தெரியுமே தவிர வாசித்ததில்லை. அவரது எழுத்தை படிக்க வேண்டி இந்த சிறுகதைத் தொகுப்பையேனும் வாசிப்போமே என வாங்கினேன்.
ஆசிரியை லெஷ்மி அவர்களின் கதைகளில் பெரும்பாலும் பெண்கள் குடும்ப வாழ்வில் எதிர் கொள்ளும் பிரச்சனைகளும் அதனை அவர்கள் கையாளும் விதமும் பற்றியே அமைந்திருக்கும்.பூக்கள் அ த்தனையுமே அழகுதான் இருப்பினும் சில பூக்கள் மட்டுமே சிறப்பானதாகிறது. பூக்களின் ராஜா எனஅழைக்கப்படும் ரோஜாவை விரும்பாதவர் யாருமில்லை. அதில் முள் இருக்கிறதென யாரும் வெறுப்பதுமில்லை.
இலக்கியத்தில் எனக்கு மிகப்பிடித்த திருக்குறளையே முதலாவது பதிவாக பதிவுசெய்கிறேன். மறை என்பதற்கு பொருளாக பல சொற்கள் உண்டு. இருப்பினும் பொதுவாக வேதம், மற்றும் மறைதல் என்ற பொருளிலேயே நேரடியாக நாம் வழக்கமாகப் யன்படுத்துகிறோம். வேதத்தின் பொருளை அனைவராலும் படித்து பொருள் உணர்ந்து கொள்ள முடியாது.
இன்றைய வேகமான உலகில் பணம் பணம் என்று பணத்தை துரத்தியே பலரும் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். திரைப்படத்தில் ஒரே பாடலில் மூன்றே நிமிடத்தில் பல வேலைகள் செய்து பணக்காரனாக ஆவதுபோல் நிஜ வாழ்க்கையில் முடியாதென்பதை உணர்ந்திருப்போம் . உண்மையில் பங்குச்சந்தையின் நுட்பம் தெரிந்தவர்க்கு இது சாத்தியமாகலாம்.
உலகின் பல பகுதிகளில் மக்கள் நிலையான வாழ்வு தேடி அலைந்த கொண்டிருக்க , நிலையான அரசு சமுதாய ஒருமைப்பாடு என்பதைத் தாண்டி இலக்கிய வளமும் பெற்று திகழ்ந்தது நம் தமிழ் சமூகம்.
அகிலாண்டம் என்ற தன் பெயரை அகிலன் என மாற்றிக்கொண்டவர். ஞானபீட விருது பெற்றவர். என் அபிமான எழுத்தாளர். ஒவ்வொருமுறை பள்ளி விடுமுறையின் போதும் அப்பா சேகரித்து வைத்திருக்கும் ராணிமுத்து நாவல்கள் தான் என் உலகம். அதனால் ஒவ்வொரு நாவலையும் பலமுறை படித்திருப்பேன். அப்படி படித்ததில் மிகப்பிடித்த நாவல் அகிலனின் நெஞ்சின் அலைகள் . எத்தனை முறை படித்திருப்பேன் என்று தெரியாது. காலங்கள் மாற இருக்குமிடத்தில் நூலகத்திலிருந்து என்உலகத்தை தொடர்ந்துகொண்டேன். சென்ற ஆண்டு புத்தகத்திருவிழாவில் நாவலை (புதையலைக் கண்டதுபோல்)வாங்கியபின் மூன்று முறை படித்தாகிவிட்டது.
பூக்கடைக்கு விளம்பரம் எதற்கு? என்பார்கள் அதன்பொருள் அதன் மணமே காட்டிக் கொடுத்துவிடும் என்பதாகும். அதுபோல இன்றும் தொலைக்காட்சியில் நடத்தும் பாட்டுப் போட்டிகளில் கவிஞரின் பாடல்கள் பாடப்படுவதும் கொண்டாப்படுவதும் அவை வாடாத பூக்களாய் என்றென்றும் மணம் வீசிக்கொண்டிருப்பதே சாட்சியாகும்.
ஆசிரியரைப்பற்றி ஒரேவரியில் சொல்வதானால் இலக்கியத்திலிருந்து இலக்கணம் என்பார்கள் அதுபோல முத்தமிழறிஞர் என்ற அவருடைய பெயரே அவரின் சிறப்பை சொல்லி நிற்கிறது.