Normal view

Received before yesterdayஅரவிந்த் சச்சிதானந்தம்

சினிமா புத்தகங்கள் – நிழல் இதழில்

இந்த மாதம் (மார்ச் 2025) நிழல் இதழில் என்னுடைய கட்டுரை ஒன்று வெளியாகி இருக்கிறது என்பதை பகிர்வதில் மகிழ்கிறேன். சில முக்கிய சினிமா (திரைக்கதை மற்றும் இயக்கம்) புத்தகங்கள் பற்றிய அறிமுகங்கள் கொண்ட கட்டுரை. நன்றி நிழல்.

மேடம்- சிறுகதை

நான் மேடமை முதல் முதலில் சந்தித்தது சிசிடிவி திரையில் தான். சந்தித்தது என்று சொல்வதை விட பார்த்தது அல்லது எனக்கு மேடமின் அறிமுகம் கிட்டியது என்று சொல்வது தான் பொருத்தமாக இருக்கும்.  அது ஒரு வியாழக்கிழமை. ஒவ்வொரு வியாழக்கிழமையும் குறைந்தது ஒரு வாகனக் கடனாவது கொடுக்க வேண்டும் என்று எங்களுடைய பிராந்திய மேலாளர் உத்தரவிட்டிருந்தார். அனுதினமும் ஏதாவது ஒரு இலக்கு இருந்தது. திங்கட்கிழமை என்றால் வாராக்கடனை வசூலிக்க வேண்டும். செவ்வாய் கிழமை புதிய காப்பீடுகளை இணைக்க வேண்டும். […]

தாத்தாவின் கதை

தாத்தா எப்போதுமே என் மீது பெரிய நம்பிக்கை வைத்திருந்தார். முயற்சிகள் எல்லாமுமே ஜெயமாகும் என்பார். மணிரத்னம் படைப்புகளை முழுவதுமாக வாசித்துவிட்டு ‘நல்லா பண்ணிருக்க’ என்றார். தொண்ணூற்றி ஐந்து வயதில் அவர் அதை வாசித்திருக்க வேண்டிய அவசியமில்லை. எனக்காக தான் வாசித்தார். நான் தாத்தாவிற்காக அவர் ஆசைப்பட்ட வரலாற்று நாவல் ஒன்றை இந்த வாழ்நாளில் எழுதிவிடுவேன். இன்று தாத்தாவின் பத்தாவது நினைவு நாள். *** #தாத்தாவின்கதை

வல்லான்- திரைப்படம்

நண்பர் மணி சேயோனின் இயக்கத்தில் ‘வல்லான்’ திரைப்படம் நேற்று (24.01.2025) வெளியாகி இருக்கிறது. இதில் நானும் திரு. மணி சேயோனோடு இணைந்து வசனம் எழுதி இருக்கிறேன் என்பதை பகிர்வதில் மகிழ்கிறேன். நண்பர் மணி சேயோனுக்கு நன்றிகள் வல்லான் குழுவிற்கு வாழ்த்துகள்.

லக்கி பாஸ்கர் – கொஞ்சம் திரைக்கதை

குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக தவறான வழியில் பணம் ஈட்ட நினைக்கும் ஒரு சாதாரணன், பேராசையால் ஆட்கொள்ளப்பட்டு ஒருகட்டத்தில் பணம் ஈட்டுவதை மட்டுமே தன் நோக்கமாக மாற்றிக் கொள்கிறான். இது பிரேக்கிங் பேட்டின் ஒன்லைன். லக்கி பாஸ்கர் படத்தின் ஒன் லைன்னும் இதுவே.  பிரேக்கிங் பேட்டின் வால்ட்டர் வைட், தன்  திறமைக்கான அங்கீகாரம் தனக்கு கிட்டவில்லை என்கிற ஆதங்ககத்திலேயே  வாழ்பவன். ஒரு தருணத்தில் அந்த ஆதங்கம் கோபமாக மாற, தன் திறமையை தவறான வழியில் செலுத்தி பணம் […]

அநிருத்தன் செய்த மூன்று கொலைகள்- அரங்கேற்றம்

என்னுடைய ‘அநிருத்தன் செய்த மூன்று கொலைகள்’ என்கிற சிறுகதை நேற்று (17.11.2024) Alliance Française Madras- யில் மேடை நாடகமாக அரங்கேறியது என்பதை பகிர்வதில் மகிழ்கிறேன். என்னுடைய சிறுகதைகளில் நான் முக்கியமானதாக கருதும் கதைகளில் ஒன்று ‘அநிருத்தன் செய்த மூன்று கொலைகள்’. காரணம், இது பேசும் அரசியல். வெளிப்படையாக பலரும் பேசத் தயங்கும் அரசியல்… இது வேலை, பணம் அதன் இயலாமை தரும் மனம் அழுத்தத்தை பற்றிய கதையாக தோன்றினாலும் இதன் ஆதாரம், வாய்ப்பு உள்ளவர்கள் வாய்ப்பு […]

அநிருத்தன்-மேடை நாடகம்

என்னுடைய ‘ஏப்ரல் இரவில், ராக் மியூசிக் இசையில், அநிருத்தன் செய்த மூன்று கொலைகள்’ சிறுகதை, மேடை நாடகமாக அரங்கேற இருக்கிறது என்பதை பகிர்வதில் மகிழ்கிறேன். படைப்பு குழுவிற்கு நன்றியும் வாழ்த்துக்களும் இடம்: Alliance Francaise, Nungambakkam நாள்: நவம்பர் 17, 2024 இயக்கம்: முருகானந்தம் எழுத்து: அரவிந்த் சச்சிதானந்தம் நன்றி

3 BHK வீடு- சிறுகதை

பிறந்ததிலிருந்து முப்பத்தி சொச்சம் ஆண்டுகளாக வாடகை வீட்டிலேயே இருந்துவிட்ட எனக்கு சொந்தமாக ஒரு  வீடு வாங்கிவிட வேண்டும் என்பது தான் வாழ்வின் பெரும் கனவு. அப்பா அம்மாவின் கனவும் அது  தான். எனக்கு முன்பிருந்தே அந்தக் கனவுகளை சுமந்து வருகிறார்கள் அவர்கள்.  கால் நூற்றாண்டுக்கு மேலாக அப்பாவுக்கு பல்லாவரத்தில் ஒரு லெதர் கம்பெனியில் தான் வேலை. அதனாலேயே பொழிச்சலூர், பம்மல் என பல்லாவரம் சுற்றியே குடியிருந்து விட்டோம். ஐம்பத்தைந்து  வயதில், நுரையீரலில் பிரச்சனை வரவே வேலையிலிருந்து நின்று […]

மைக்ரோ பார்வை- 1- அப்பம் வடை தயிர்சாதம்- பாலகுமாரன்

இதன் ஆரம்ப அத்தியாயங்களில் ஒரு தொடர்பற்ற தன்மை இருக்கிறது. அது இந்நாவல் தொடர்கதையாக எழுதப்பட்டதால் இருக்கலாம். ஆனால் இறுதியில் எல்லா புள்ளிகளும் மிக அழகாக இணைகின்றன. ஒரு தலைமுறைக்கு நிகழ்ந்ததே அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் நிகழ்வதே இதன் சுவாரஸ்யம்.  சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தில் புரோகித தொழிலை விட்டுவிட நினைக்கிறது ஒரு பிராமண குடும்பம். வைதீகத்திற்கு மதிப்பு இல்லை, வருங்காலம் இல்லை என்று கருதுகிறார் அந்த குடும்பப் பெரியவர். கும்பகோணத்தில் தற்காலிகமாக சிறிய சுண்டல் கடை தொடங்கி அதற்கு பெரும் […]

பால்கனியுடன் கூடிய வீட்டை விரும்பும் ஒரு பெண்: குறுங்கதைகள்

என் இனையதளத்தின் பதின்மூன்றாவது பிறந்த நாளான இன்று,என்னுடைய அடுத்த (குறும்)புத்தகத்தை வெளியிடுவதில் மகிழ்கிறேன். பால்கனியுடன் கூடிய வீட்டை விரும்பும் ஒரு பெண்: குறுங்கதைகள் தொகுப்பு இந்த குறுங்கதைகள் தொடர்ந்து பத்து இரவுகள் எழுதப்பட்டவை. இதன் கதை மாந்தர்கள் அப்பழுக்கற்றவர்கள் அல்ல. அவர்கள் மிகச் சாதாரணமானவர்கள். அன்றாட வாழ்வின் சிக்கல்களில் சிக்குண்டு தவிப்பவர்கள். சாதாரண மனிதர்களின் எளிய ஆசைகள், அதை நிறைவேற்றிக் கொள்ளும் தவிப்பு, அது நிறைவேறாமல் போகும் போது ஏற்படும் ஏமாற்றம் ஆகியவை இந்த கதைகளில் அழகாக […]

❌