அது இது எது – Crime Novel
அந்த நள்ளிரவு வேளையில் சோகையாக இயங்கிக்கொண்டிருந்த கெட் வெல் ஹாஸ்பிடலின் அமைதியை குலைக்கும் வகையில் ஒரு கார் வந்து நிற்க, அதிலிருந்து இறங்கிய ஒரு தம்பதி(ஜானகிராமன்- கனகம்) தங்களுடைய மகள் சூடாமணியை ஸ்ட்ரெச்சரில் வைத்தனர்.
அவசரமாக ஸ்ட்ரெச்சரைத் தள்ளிக் கொண்டு உள்ளே சென்ற ஜானகிராமனும், கனகமும் கண்களில் வழியும் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு டியூட்டி டாக்டர் மகேந்திரனை அணுகினர். பாத்ரூமில் வழுக்கி விழுந்த சூடாமணியின் தலையில் டாக்டர் பெரிய பேண்டேஜ் கட்டைப் போட்டார்.
சூடாமணியின் நிலையை உணர்ந்த டாக்டர் உடனடியாக சீஃப் டாக்டர் வராகசாமியை அழைக்கிறார். தூக்கம் கெட்ட கண்களுடன் வந்த வராகசாமி கோமா நிலைக்குச் சென்றுவிட்ட அந்தப் பெண்ணைப் பார்த்தார்.
கதறி அழுத இருவரையும் சமாதானப்படுத்திவிட்டு, பிளட் டெஸ்ட் ரிப்போர்ட்டை பார்க்க செல்கிறார் டாக்டர். ரிப்போர்டைப் பார்த்த அவர் அதிர்ந்து போனார்.
காரணம் சூடாமணியின் ரத்தத்தில் காட்மைன் எனும் போதைப் பொருள் கலந்திருக்க, அடுத்த திடுக்கிடும் தகவலாக சூடாமணியின் பெற்றோர் காணாமல் போயினர்.
அதே சமயம்..
தன்னுடைய இரண்டு தங்கைகளான ஹேமா & ஜமுனாவை கல்லூரிக்கு அனுப்பிவிட்டு, அப்பா ரங்கநாதனிடம் சொல்லிவிட்டு இன்டர்வியூவிற்குக் கிளம்பினாள் குமுதா. நீண்ட நாட்களாக வேலை தேடிக் கொண்டிருந்தவளுக்கு, ரெயின் ட்ராப் கம்பெனி மூலமாக வேலை கிடைக்கும் வாய்ப்பு இருந்தது.
இன்டர்வியூ லைனில் காத்திருந்த அவளை, அந்தக் கம்பெனியைச் சேர்ந்த ஆள் வந்து டைரக்டர் சங்கர் பாபுவின் அறைக்கு அழைத்துச் செல்கிறார். அங்கே பதற்றத்துடன் அமர்ந்திருந்த சங்கர் பாபுவைப் பார்த்தாள் குமுதா.
நேரடியாகவே விசயத்திற்கு வந்த சங்கர் பாபு, யார் அந்த மெகாபோன் மைக்கேல் என்று கேட்டு, உன்னிடம் இருக்கும் என்னைப் பற்றிய வில்லங்கமான ஆதாரம் என்ன..? என்று கேட்கிறார்.
அதே புன்னகை முகத்துடன் தன் கையில் வைத்திருந்த போனில் வீடியோ ஆப்ஷனைத் தட்டி, அவர் முன் நீட்டுகிறாள் குமுதா. அதில் கையில் துப்பாக்கியுடன் இருந்த சங்கர் பாபு ஒருவனை சுடும் வீடியோ பதிவாகியிருக்க..அதிர்ந்தார் அவர்.
பணத்தைக் கொடுத்து பேரம் பேச முடிவு செய்த சங்கரை நிறுத்திய குமுதா, தனக்கு பணம் வேண்டாம் எனக் கூறி இந்தக் கம்பெனியில் வேலை தான் வேண்டும் என்கிறாள். மேலும் நீங்கள் நியாயமாக இருந்தால் என்றைக்கும் வீடியோ ஆதாரம் போலீஸ் கைக்கு போகாது என்று கூறுகிறாள்.
ஒரு வழியாக சங்கரை மிரட்டி வேலையை வாங்கிய குமுதா, ஒரு மாதத்தைக் கடந்த நிலையில் வீட்டிற்குச் செல்ல இருந்த அவளுக்கு ஒரு பார்சலில் கேசட் வந்து சேர்கிறது. கேசட்டைப் போட்டுப் பார்த்த குமுதா அதிர்ந்து போகிறாள்.
கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கட்டிலில் மயங்கிய நிலையில் கிடக்கிறாள் அவளின் தங்கை ஹேமா. இதற்கு காரணம் சங்கர் என்பதை அறிந்த அவள் அவனை மிரட்ட, பதிலுக்கு அந்த கொலை வீடீயோவைக் கேட்டு அவன் மிரட்டுகிறான்.
தங்கை ஹேமாவின் மானத்தைக் காப்பாற்ற வீடியோ ஆதாரங்களை குமுதா ஒப்படைத்தாளா..? கொலை நடந்த வீடீயோவை எடுத்தது யார்..? சூடாமணி யார்..? விலையுயர்ந்த போதை மருந்து அவள் ரத்தத்தில் இருந்ததன் பின்னணி என்ன..? சூடாமணியின் பெற்றோர் எங்கே..?
want to buy : https://amzn.in/d/awe6P28