Normal view

Received before yesterdayபூதம்

திராவிடரா? தமிழரா?

2 November 2024 at 03:17

தமிழ்நாட்டில் இருக்கும் பெண்கள், ஆண்களின் அடக்குமுறையில் இருந்து தங்களை விடுவிக்கவும், பெண்களுக்கு அனைத்து துறைகளிலும் சம உரிமை கேட்டு போராடவும் ஒரு இயக்கம் துவங்குகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அந்த இயக்கத்துக்கு “பெண்ணுரிமை இயக்கம்”, “பெண் விடுதலை இயக்கம்” இப்படி ஏதாவது பெயர் வைப்பார்களா? அல்லது “தமிழர் உரிமை இயக்கம்”, “தமிழர் விடுதலை இயக்கம்” என்று பெயர் வைப்பார்களா?

ஒடுக்கப்படுகிற பெண்களும் தமிழர்கள்தான். ஆதிக்கம் செலுத்துகிற ஆண்களும் தமிழர்கள்தான். ஆகவே தங்கள் மீது ஆதிக்கம் செலுத்துகிற ஆண்களிடமிருந்து தங்களை பாதுகாக்க “பெண்கள்” என்கிற அடையாளத்தோடு அவர்கள் அணிதிரள்வார்களே தவிர, ஆண்களையும் சேர்த்துக்கொண்டு “தமிழர்” என்கிற அடையாளத்தோடு அணிதிரள மாட்டார்கள்.

“பெண்ணுரிமை இயக்கம்” என்ற பெயரில் ஒரு இயக்கம் துவங்கும் போது, ஆண்கள் அனைவரும் சேர்ந்து “அதென்ன பெண்ணுரிமை இயக்கம்? நாம் அனைவரும் தமிழர்கள்! ஆகவே தமிழர் உரிமை இயக்கம் என்ற பெயர்தான் பொருத்தமானது” என்று கூறினால் அது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்?

விவசாயிகள் போராட்டம் செய்தால் தங்களை விவசாயிகள் என்றுதான் அடையாளப்படுத்தி போராடுவார்கள். அவர்களிடம் சென்று “நீ விவசாயியா? தமிழனா?” என்று கேட்டால் பொளேரென்று பொடனியில் போட்டு அனுப்புவார்கள். அமெரிக்காவில் குடியுரிமை வாங்கிய ஒரு தமிழர் தன்னை “அமெரிக்க தமிழர்” என்றுதான் அடையாளப்படுத்துவார். அவரிடம் சென்று “ஒன்று அமெரிக்கர் என்று சொல். அல்லது தமிழர் என்று சொல். அது என்ன அமெரிக்க தமிழர்? கருவாட்டு சாம்பார் மாதிரி” என்று கேட்டால் மிதிதான் விழும்! அவர் மொழியால் தமிழர். குடியுரிமையால் அமெரிக்கர். இப்படி தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டவர்களுக்கு மொழியை தவிரவும் வேறு பல அடையாளங்கள் இருக்கிறது. போராட்டக்களத்தில் எதை எதிர்த்து போராடுகிறோம், யாரை எதிர்த்து போராடுகிறோம் என்பதை பொறுத்தே அடையாளம் முடிவு செய்யப்படும்.

எதற்காக “திராவிடர்” “தமிழர்” என இரண்டு அடையாளங்கள்?

காரணம் இங்கே இரண்டு எதிரிகள் இருக்கிறார்கள். இரண்டு போராட்டங்கள் இருக்கிறது.

முதல் போராட்டம்: தமிழ்நாட்டு மக்களின் உரிமைகளை டெல்லியில் குவித்து வைத்து, தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தை சுரண்டி, தமிழ்நாட்டு மக்கள் மேல் இந்தி மொழி ஆதிக்கத்தை திணித்து வைத்திருக்கும் இந்திய தேச ஆதிக்கத்திடமிருந்து அரசியல் உரிமையை பெறுவது ஒரு போராட்டம். இங்கே தமிழர் அல்லாதவர்களை எதிர்த்து நாம் போராடுகிறோம். எனவே “தமிழர்” என்கிற அடையாளத்தில்தான் நாம் அவர்களை எதிர்த்து போராட முடியும்.

இரண்டாவது போராட்டம்: தமிழ்நாட்டிலேயே வசித்து, தமிழர் என்கிற அடையாளத்தில் ஒளிந்து கொண்டு, சாதிய படிநிலை, பெண்ணடிமைத்தனம், மூட பழக்க வழக்கங்கள் போன்றவற்றின் ஆணி வேரான ஆரிய பண்பாட்டை வளர்க்க பாடுபடுபவர்களை எதிர்த்து பண்பாட்டு விடுதலைக்கான போராட்டம். இதில் நாம் எதிர்ப்பவர்கள் மொழியால் தமிழர்களே. ஆனால் பண்பாட்டால் ஆரியர்கள். தமிழர்களுக்குள்ளேயே ஒரு பிரிவினர் மற்றொரு பிரிவினரை எதிர்த்து போராடும் போது “தமிழர்” என்கிற அடையாளத்தை எப்படி பயன்படுத்த முடியும்? ஆகவே பண்பாட்டு விடுதலைக்கான போராட்டத்தில் “திராவிடர்” என்கிற அடையாளத்தை பயன்படுத்துகிறோம்.

சுருக்கமா சொன்னால், இந்திய தேச அரசியல் ஆதிக்கத்தை எதிர்த்தும் போராடும் போது “தமிழர்” என்பது நமது அடையாளம். ஆரிய பண்பாட்டு ஆதிக்கத்தை எதிர்த்து போராடும் போது “திராவிடர்” என்பது நமது அடையாளம்.

தமிழர்களில் சிலர்தான் இந்தி மொழி கட்டாய பாடமாக்கப்பட வேண்டும் என்று கருதுகிறார்கள். தமிழர்களில் சிலர்தான் அனைத்து அரசியல் அதிகாரங்களும் ஒன்றிய அரசிடம் சென்று குவிய வேண்டும் என்று கருதுகிறார்கள். தமிழர்களில் சிலர்தான் பெண்கள் ஆண்களை சார்ந்தே வாழ வேண்டும் என்று கருதுகிறார்கள். தமிழர்களில் சிலர்தான் சாதிய ஆதிக்கம் தொடர வேண்டும் என்று கருதுகிறார்கள். ஆகவே தமிழர்கள் அனைவரும் முற்போக்கு சிந்தனை கொண்டவர்களாக இருப்பார்கள் என்று நிச்சயமில்லை.

தமிழ்த் தாத்தா என்று போற்றப்படும் உவே சாமிநாத ஐயர் மொழியால் தமிழர்தான். ஆனால் அந்த உவே சாமிநாத ஐயர்தான் நாடார் சமூக மக்களின் ஆலய நுழைவு போராட்டத்தின் போது, அந்த சமூகத்தினர் கோவிலுக்குள் நுழைவது சாஸ்திரத்துக்கு எதிரானது என்று நீதிமன்றத்தில் கூறினார். மொழியால் தமிழராக இருந்தாலும் அவர் ஆரிய பண்பாட்டைத்தான் பின்பற்றினார். பெண்கள் சபரிமலைக்கு செல்லலாம் என்று 4 ஆண் நீதிபதிகள் தீர்ப்பளித்த போது, அந்த அமர்வில் இருந்த ஒரே ஒரு பெண் நீதிபதிதான் பெண்கள் சபரிமலைக்கு செல்லக் கூடாது என்று தீர்ப்பளித்தார்.

ஆகவே தமிழர்களாக பிறந்தவர்கள் அனைவரும் தமிழர் உரிமைக்காக குரல் கொடுப்பார்கள் என்றோ, பெண்ணாக பிறந்தவர்கள் அனைவரும் பெண்ணுரிமைக்காக குரல் கொடுப்பார்கள் என்றோ நம்புவது அறியாமை. இதன் மூலம், பிறப்பு சிந்தனையை தீர்மானிப்பதில்லை என்பது உறுதியாகிறது. ஆகவே பெரும்பாலும் பிறப்பாலேயே அமையும் மதம், மொழி, நாடு போன்ற அடையாளங்களை விட சித்தாந்த அடையாளமே சரியான அடையாளம்.

யாருக்கு சிக்கல்?

சரி. இந்த போராட்ட அடையாளங்களால் யாருக்கு சிக்கல்? “பெண்ணுரிமை இயக்கம்” என்கிற பெயர் ஆணாதிக்கவாதிகளுக்கு எரிச்சலை கிளப்பும். “தொழிலாளர் உரிமை இயக்கம்” என்கிற பெயர் முதலாளிகளுக்கு எரிச்சலை கிளப்பும். அது போல, “திராவிட இயக்கம்” என்கிற பெயர் ஆரிய பண்பாட்டை ஆதரிப்பவர்களுக்கு எரிச்சலை கிளப்பும்.

தமிழ்நாட்டில் ஆரியத்தை எதிர்க்கும் விடுதலை கருத்தியலுக்கு திராவிடம் என்ற பெயர் நிலைபெற்று விட்டது. எனவே நம்மை சாதிப்பற்று, மதப்பற்று, மொழிப்பற்று, தேசப்பற்று என்று திசை திருப்ப முயலுவார்கள். திராவிடரா தமிழரா என்ற அபத்தமான வாதத்தை முன்வைத்து குழப்ப முயற்சிப்பார்கள். அவர்களின் ஒரே குறிக்கோள், மக்களை சித்தாந்த அரசியலில் இருந்து விலக்கி பிறப்பின் அடிப்படையில் அமையும் அடையாளங்களுக்கு மடைமாற்றி அடிமைப்படுத்துவதே. இதை தமிழ்நாட்டு மக்கள் தெளிவாக உணர்ந்து விட்டால், நமது குறிக்கோள்களான அரசியல் விடுதலையையும், பண்பாட்டு விடுதலையையும் வென்றெடுக்க முடியும்!


மாமாவும் அம்பியும் – நூலிபான் Files

6 May 2023 at 06:07

“என்னடா அம்பி! பையனை ஸ்கூல்ல சேர்த்துட்ட போல. மொத வேலையா கம்யூனிட்டி சர்டிபிகேட் வாங்கிடு. இப்ப சென்ட்ரல் கவர்மண்ட் நடத்துற காலேஜ்ல நம்மவாளுக்கு EWS ரிசர்வேஷன் இருக்குன்னு தெரியுமோ நோக்கு?” 

“வாங்கிட்டேன் மாமா! ஆனா மாமா… ஒரு சந்தேகம். நாலஞ்சு வருசத்துக்கு முன்னாடி வரைக்கும் ரிசர்வேஷனையே ஒழிச்சு கட்டணும்னு சொல்லிண்டுருந்தேள். இப்ப ஏன் EWS ரிசர்வேஷனை யூஸ் பண்ண சொல்றேள்?” 

“அபிஷ்டு! அந்த சமயத்துல நம்மவாளுக்கு ரிசர்வேஷன் இல்ல. அதனால அதை ஒழிச்சு கட்டணும்னு சொன்னேன். இப்பதான் நமக்கும் வந்துடுத்தே. நமக்கு கிடைக்காததை மட்டும்தான் மோசம்னு சொல்லணும். ஹ்ம்ம்… ஒரு காலத்துல 100% ரிசர்வேஷன் அனுபவிச்சோம். இப்ப வெறும் பத்து பர்சன்ட்டுக்கு திண்டாடுறோம்”

“100% ரிசர்வேஷனா? அது எப்படி மாமா?” 

“ரொம்ப சிம்பிள்டா! வர்ணாசிரமம்னு ஒரு சிஸ்டம். அந்த சிஸ்டப்படி இன்ன சாதியில் பொறந்தவா இன்ன தொழில்தான் பண்ணனும்னு பிக்ஸ் பண்ணிட்டோம். இருக்குறதுலேயே ஈஸியான வேலையை எல்லாம் நம்மவா வெச்சிக்கிட்டோம். வயல்ல வேலை பார்க்குறது, தெருவை சுத்தம் பண்ணுறது, பொணம் எரிக்கிறது இந்த மாதிரி கஷ்டமான வேலையை எல்லாம் மத்தவாளுக்கு கொடுத்துட்டோம். கருவறைக்குள்ள சாமி பக்கத்துல நின்னு அர்ச்சனை பண்ணுற நம்மவாளை மத்தவா எல்லாம் “சாமி”ன்னு பயபக்தியோட கூப்பிட ஆரம்பிச்சா. அதனால சமூகத்துல நாமதான் ஒசத்தின்னு ஒரு நம்பிக்கை மக்கள் மனசுல ஆழமா பதிஞ்சிடுத்து. அதனால பெரிய பதவியெல்லாம் நமக்கு மட்டும்தான்னு ஆகிடுத்து” 

“கருவறைக்குள்ள நின்னு மந்திரம் சொல்லுறதை எப்படி மாமா ஈஸியான வேலைன்னு சொல்றேள். எவ்ளோ மனப்பாடம் பண்ணனும்?”

“ஒருத்தர் செருப்பு தைக்கிற வேலை செஞ்சா, அவர் செருப்பை ஒழுங்கா தைச்சு கொடுத்தாத்தான் கூலி கிடைக்கும். செருப்பை நன்னா அப்படி இப்படி இழுத்து பார்த்து திருப்தியா இருந்தாத்தான் காசு கொடுப்போம். தெரு சுத்தமா இல்லாட்டி தெருவை சுத்தம் பண்ணுறவர்க்கு சம்பளம் கிடைக்குமோ? துணி சுத்தமா இல்லாட்டி துணியை வெளுத்தவர்க்கு பணம் கிடைக்குமோ? இப்படி எல்லா வேலையிலயும் output இருந்தாத்தான் காசு கிடைக்கும். ஆனா நம்மவா பார்க்குற வேலைக்கு மட்டும் output என்னான்னு யாருக்கும் தெரியாது. நாம மந்திரம் சரியா சொல்றோமா, தப்பா சொல்றோமான்னு மக்களுக்கு தெரியாது. நாம சொல்றதுதான் மந்திரம். நாம சொல்றதுதான் சடங்கு. லோகத்துல வேற எந்த வேலைக்காவது இந்த வசதி உண்டா?” 

“இந்த சிஸ்டத்துக்கு மத்தவா எப்படி மாமா ஒத்துண்டா? மக்கள் என்ன அவ்வளவு முட்டாளா?”

“மக்கள்கிட்ட கடவுள் நம்பிக்கைன்னு ஒண்ணு இருக்குற வரைக்கும் அவாளை என்ன சொல்லி வேணா ஏமாத்தலாம். இந்த வர்ணாசிரம சிஸ்டத்தை சொன்னதே பகவான்தான்னு ஒரே போடா போட்டுட்டோம். அதுவும் சும்மா சொல்லல. அதுக்காக எக்கச்சக்கமா புராண கதைகளை உருவாக்குனோம். அந்த புராண கதை வழியா இந்த வர்ணாசிரம சிஸ்டத்தை திரும்ப திரும்ப சொல்லி மக்கள் மனசுல பதிய வெச்சோம்”

“அவ்ளோ பெரிய புராண கதையெல்லாம் உருவாக்க நிறைய டயம் எடுக்குமே மாமா?” 

“நம்மவாக்கு அது மட்டும்தானே புல் டைம் வேலையே. வீடு, நிலம் எல்லாம் மன்னர்கள் தானமா கொடுத்துடுவா. அதுல வேலை பார்க்க அடிமைகளையும் கொடுத்துடுவா. நாம நாள் முழுக்க ஹாயா உக்காந்து புராணம் எழுதலாம்”

“மொதல்ல மன்னர்கள் உங்களுக்கு நிலம் கொடுத்தாத்தானே நீங்க சாவகாசமா உக்காந்து புராணம் எழுதி மக்களை ஏமாத்த முடியும். அப்ப மன்னர்களை ஏமாத்த நம்மவா என்ன செஞ்சா?”

“சரியா சொன்னடா அம்பி. மொதல்ல மன்னர்களை ஏமாத்தி, அவா ஆதரவு நமக்கு கிடைச்சாத்தான் மக்களை ஏமாத்த முடியும். ஏதாவது முட்டாள் மன்னன் சிக்கினா போதும்… இப்ப மேஜிக் ஷோ பண்றாளே… அந்த மாதிரி ஏதாவது மேஜிக் ஷோ பண்ணி மன்னனை ஏமாத்தணும். ஆனா அது கடவுள் கொடுத்த பவர்னு அவனை நம்ப வைக்கணும். அதுக்கு அப்புறம் அவனே நம்மவாக்கு வீடு, நிலம், நிலத்துல வேலை பார்க்க அடிமைகள் எல்லாம் தானமா கொடுத்துடுவான். இனி நமக்கு என்ன வேலை? புல் டைம் உக்காந்து கன்டென்ட் கிரியேட் பண்ணுறதுதான் வேலை. அந்த காலத்துல மக்களுக்கு இருந்த ஒரே பொழுதுபோக்கு நாடகம், கதாகாலட்சேபம் இதெல்லாம்தான். சாயந்திரம் ஆனா கோவில்ல மக்களை உக்கார வெச்சி இந்த புராண கதையெல்லாம் சொல்லி மக்களை நமக்கு ஏத்தாப்புல டியூன் பண்ணிட்டோம். content is the king, you know. ஆயிரம் வருசத்துக்கு முன்னாடி நம்மவாக்கு சாதகமான கன்டென்ட் மட்டும்தான் இருந்துச்சு. மக்கள் ஈஸியா நம்ம வலையில விழுந்துட்டா”

“மக்களுக்கு கடவுள் நம்பிக்கை இருந்தாத்தானே மாமா இந்த புராண கதையெல்லாம் நம்பி நம்மவாகிட்ட ஏமாறுவா?”

“ஆமா. அதில என்னடா அம்பி சந்தேகம்?”

“அப்ப மக்களுக்கு கடவுள் நம்பிக்கை போயிடுச்சுன்னா நம்ம ஆட்டம் அம்பேலா?”

“முக்கியமான பாயிண்டுக்கு வந்துட்ட. மக்களுக்கு கடவுள் நம்பிக்கை இருக்குற வரைக்கும்தான் சமூகத்துல நம்மவா மேல… மத்தவா கீழ. இந்த சூட்சுமத்தை ஈவேரான்னு ஒருத்தர் சரியா புரிஞ்சுண்டார்”

“ஈவேரான்னா? பெரியாரா?”

“வாயை கழுவுடா கடன்காரா! அவரை ஈவேரான்னுதான் சொல்லணும்”

“என்னாச்சு மாமா? முகமெல்லாம் வேர்க்குது… வாயெல்லாம் ஒரு மாதிரி குழறுது… ரொம்ப மூச்சு வாங்குது… செத்த உக்காருங்கோ”

“பின்னே? அந்தாளை நினைச்சாலே நேக்கு டாப் டூ பாட்டம் பத்திண்டு வர்றது”

“ஏன்? என்ன பண்ணினார் அவர்?” 

“புரியிற மாதிரி சொல்றேன். சென்ட்ரல் கவர்மெண்ட் ஜாப்ல நம்மவா எத்தனை பேர் இருக்கா?”

“முழுக்க நம்மவாதானே மாமா! சுப்ரீம் கோர்ட்டுல இருந்து, ஐஐடி வரைக்கும் நம்மவா ஆட்சிதானே நடக்குது”

“அப்படியே தமிழ்நாட்டுக்கு வா. ஸ்டேட் கவர்மெண்ட் ஜாப்ல நம்மவா எத்தனை பேர் இருக்கா?”

“ரொம்ப கொறைச்சல்தான் மாமா”

“நன்னா புரிஞ்சிக்கோடா… பவர் மொத்தமும் சென்டர்ல இருக்குற வரைக்கும்தான் நமக்கு சாதகம். இவா கேக்குற மாதிரி மாநில சுயாட்சியோ… இல்ல அந்த ஈவேரா கேட்ட மாதிரி தனித் தமிழ்நாடோ அமைஞ்சிடுத்துன்னா நாம காலி. இப்ப கூட பாரு… நமக்கு EWS சென்டர்ல இருக்கு… ஆனா ஸ்டேட்ல இல்ல”

“ஏன் அப்படி?”

“தமிழ்நாட்டுல நம்மவா எத்தனை பேர் இருக்கோம்?”

“ஒரு 3% இருக்கோம்”

“ஆனா வடக்கே அப்படி இல்ல. அங்க பல மாநிலங்கள்ல நம்மவா கிட்டத்தட்ட 10% இருக்கோம். இப்ப லோக்சபால கிட்டத்தட்ட 50 எம்பி நம்மவாதான். நம்மவா மட்டுமே 100 எம்பி இருந்த காலம் கூட இருக்கு. சென்ட்ரல் கவர்மண்ட்ல எப்பவுமே நம்மவாக்கு அதிகாரத்துல பங்கு கிடைக்கும். விபி சிங் ஓபிசி ரிசர்வேஷன் கொண்டு வந்தாலும் சென்ட்ரல் கவர்மண்ட்ல நமக்கு இருக்குற அதிகாரத்தை யூஸ் பண்ணி முடிஞ்ச வரை அந்த ரிசர்வேஷனை இம்ப்ளிமென்ட் பண்ணாத மாதிரி பார்த்துக்குறோம். ஆனா தமிழ்நாட்டுல நம்மவாக்கு வாக்கு வங்கி  இல்ல. அதனால ஆட்சி அதிகாரத்துல பங்கு கிடைக்காது”

“அச்சச்சோ! அப்ப நாம எப்படி மாமா தமிழ்நாட்டுல பொழப்பு நடத்துறது?”

“நமக்கு கிடைக்காத அதிகாரம் தமிழ்நாட்டுல யாருக்கும் கிடைக்க கூடாது. அதனால எல்லா அதிகாரத்தை சென்ட்ரல் கவர்மெண்ட்ல குவிச்சு வைக்கணும். ஏன்னா அங்க நம்மவாக்கு அதிகாரத்துல பங்கு இருக்கு. இப்ப புரியறதா நாம ஏன் நீட் தேர்வை ஆதரிக்கிறோம்னு?”

“புரியுது மாமா. நீட் தேர்வு மூலமா மெடிக்கல் காலேஜ் அட்மிஷன் முழுக்க சென்ட்ரல் கவர்மெண்ட் கட்டுப்பாட்டுல போயிடும். இப்ப தமிழ்நாட்டோட மெடிக்கல் காலேஜ் அட்மிஷனை நம்மவா கண்ட்ரோல் பண்ணலாம்”

“இது ஒரு சாம்பிள்தான். இந்த மாதிரி எல்லா அதிகாரத்தையும் ஒண்ணு ஒண்ணா நாம டெல்லிக்கு கொண்டு போகணும். நம்மவா எல்லாரும் சொல்லி வெச்ச மாதிரி இந்தியை ஆதரிக்கிறதும் அதுக்குத்தான். இப்ப சொல்லு.. நம்ம மெயின் எதிரி யாரு?”

“மாநில சுயாட்சி கேட்கிறவங்க… தனித் தமிழ்நாடு கேட்கிறவங்க… இவங்க எல்லாம் நமக்கு எதிரி!”

“கரெக்ட். இங்கதான் அந்த ஈவேரா வந்தாரு. தனித் தமிழ்நாடு கேட்டாரு. அதுக்கு நாமதான் குறுக்கு நிக்கிறோம்கிறது அவருக்கு புரிஞ்சு போச்சு. அதனால நாமதான் தமிழர்களோட எதிரின்னு பிரச்சாரம் பண்ண ஆரம்பிச்சாரு.”

“அவரோட பிரச்சாரத்தை முறியடிக்க நம்மவா எதுவும் செய்யலையா மாமா?”

“அப்பப்ப சில ஏவல் நாய்களுக்கு தீனி போட்டு அவருக்கு எதிரா கிளப்பி விடுவோம். அவர் தமிழர் இல்லைன்னு சொல்ல சொல்லுவோம். நாள் முழுக்க உக்காந்து அவரை பத்தி அசிங்கமா பேசி அவர் இமேஜை காலி பண்ண முயற்சி பண்ணிண்டுதான் இருக்கோம். இன்னும் எதுவும் வொர்க் அவுட் ஆகல” 

“அந்த ஈவேரா வழில வந்த கூட்டம் தினம் தினம் ஜாதிக்கு எதிரா பேசிண்டு இருக்காளே?”

“அதுதான் நமக்கு இப்ப இருக்குற பெரிய ஆபத்து. ஜாதி இருக்குற வரைக்கும்தான் நாம டாப்ல இருக்க முடியும். ஜாதி ஒழிஞ்சிட்டா அப்புறம் நமக்கும் சூத்ராளுக்கும் எந்த வேறுபாடும் இல்லைன்னு ஆகிடும். சொசைட்டில நமக்கு கிடைக்கிற மரியாதை போயிடும். குறிப்பா தமிழர்கள் ஜாதியை மறந்து ஒண்ணாகிட கூடாது”

“ஜாதியை காப்பாத்த என்ன பண்ண போறோம் மாமா?” 

“நம்ம ஏவல் நாய்களை மூலமா ஜாதியை பேருக்கு பின்னாடி சேர்த்துக்குறது பெருமைதான்னு மக்களை நம்ப வைக்கணும். ஒவ்வொரு மேடையிலயும் ஏதாவது ஜாதியை பெருமைப்படுத்தி பேசணும். அப்பத்தான் மக்கள் ஜாதியை கெட்டியா புடிச்சிக்குவா. இன்னொரு பக்கம் கலப்பு திருமணம் எதுவும் நடந்துடாம பார்த்துக்கணும். யாராவது காதல் திருமணம் செஞ்சா அது நாடக காதல்னு கிளப்பி விடணும். கல்யாணத்துல இருந்து கருமாதி வரைக்கும் ஒவ்வொரு ஜாதிக்கும் வேற வேற மாதிரி சடங்கு இருக்குன்னு மக்களை நம்ப வைக்கணும். அப்பத்தான் வேற ஜாதியோட கலப்பு திருமணம் செய்ய யோசிப்பா. ஜாதி இருந்தாத்தான் யார் தமிழர்னு கண்டு பிடிக்க முடியும்னு புதுசா ஒரு தியரியை சொல்லணும்”

“இதெல்லாம் ஜாதியை மெயின்டெயின் பண்ணுறதுக்கு சரி. அவாள் மாநில சுயாட்சி, தனி தமிழ்நாடு எல்லாம் கேப்பாளே… அதை முறியடிக்க என்ன செய்யணும்?”

“அவாளையெல்லாம் பிரிவினைவாதி, தேச விரோதின்னு முத்திரை குத்தணும். இன்னொரு பக்கம் தேச பக்தி, தேச ஒற்றுமை இப்படியெல்லாம் உணர்ச்சி வசப்படுறமாதிரி சினிமா எடுத்து நம்ம மக்களை ஒரே அமுக்கா அமுக்கணும்”

“ஒரு டவுட்டு மாமா. நம்மவா வடமாநிலங்கள்ல 10% இருக்கறதா சொன்னேள். அவா எல்லாம் நம்மவான்னு எதை வெச்சி சொல்றேள்? நாம வேற ஜாதி, வடக்கே வேற ஜாதியாச்சே!”

“நான் நம்மவான்னு சொன்னது ஒரே வர்ணம்டா அம்பி. நீ சொன்னது பாதி கரெக்டுதான். வடக்க இருக்கிறவா வேற ஜாதி.. நாம வேற ஜாதி. ஆனா ரெண்டு பெரும் ஒரே வர்ணம்! தலையில பொறந்த வர்ணம்!”

“சரி. நாம இப்படி பல ஜாதிகள் ஒரே வர்ணத்துல ஒண்ணா சேர்ந்த மாதிரி, சூத்ர ஜாதிக்காராள் எல்லாம் ஒரே வர்ணத்துல ஒண்ணு சேர்ந்தா என்ன ஆகிறது? நம்ம பாடு திண்டாட்டம் ஆகிடுமே!”

“அதைத்தான் அந்த படுபாவி ஈவேரா செஞ்சார். திராவிடர்ங்கிற அடையாளத்துல நம்மவாளை தவிர மத்தவா எல்லாரையும் ஒண்ணு சேர்த்தார். திராவிடர் கழகம்னு பேரு வைக்காட்டி சூத்திரர் கழகம்னு பேரு வெச்சிருப்பேன்னு சொன்னார். அந்த அடையாளம்தான் இப்ப வரைக்கும் நம்மவாளை திண்டாட வெச்சிருக்கு. அதனால நம்மவா எல்லாரும் அந்த அடையாளத்தை அசிங்கப்படுத்தணும். அதை எப்படியாவது அழிக்கணும். ஏற்கனவே நம்ம ஏவல் நாய்களை வெச்சி ‘திராவிடரா? தமிழரா?’ன்னு மக்களை குழப்புற வேலையை துவங்கியிருக்கோம்”

“மத்த ஜாதிக்காராள் நமக்கு கீழேயும் இருக்கணும்… அதே நேரத்துல நமக்கு எதிராவும் திரும்பிட கூடாது. இதை மெயின்டெயின் பண்ணுறது ரொம்ப கஷ்டமாச்சே மாமா”

“அதுக்கு இன்னொரு ஐடியா இருக்கு. அவாளோட எதிரி முஸ்லிம்கள்தான்னு அவாளை நம்ப வைக்கணும். பாகிஸ்தான்லயும், ஆப்கானிஸ்தான்லயும் இருக்குறவங்க பண்ணுற தப்பையெல்லாம் இங்க இருக்கிற முஸ்லிம்களோட லிங்க் பண்ணனும். இந்து முஸ்லிம்னு பிரிஞ்சாத்தான், நாம மெஜாரிட்டி மதம்கிற போர்வைக்குள்ள பாதுகாப்பா ஒளிஞ்சிக்க முடியும். எந்த பிரச்சனையும் சிக்காட்டி ஏதாவது கற்பனை கதையை கட்டி விட்டு இந்து முஸ்லிம் பிரிவினை அணையாம பாத்துக்கணும்”

“இன்னொரு பக்கம் ஈவேரா ஆட்கள் ஆகம கோவில்ல எல்லா ஜாதிக்காராளும் அர்ச்சகர் ஆகணும் போராட்டம் பண்ணிட்டுருக்காளே?”

“அதை மட்டும் விடவே கூடாதுடா அம்பி! எப்பாடு பட்டாவது தடுத்தாகணும்”

“ஆனா பெரும்பாலான மக்கள் எல்லா ஜாதிக்காராளும் அர்ச்சகர் ஆகுறது சரிதான்னு சொல்றாளே மாமா?” 

“அவாளை குழப்பி விடணும். நானே கருவறைக்குள்ள போக முடியாது தெரியுமோன்னு சொல்லணும். ஒரு ஹாஸ்பிடல் ஐசியூ வார்டுக்குள்ள யார் வேணா போகலாமா… அது மாதிரி கருவறைக்குள்ள எல்லாரும் போக முடியாதுன்னு சொல்லணும்”

“ரொம்ப சப்பையா இருக்கு மாமா. எந்த ஜாதில பொறந்தாலும் படிச்சு டாக்டர் ஆகி அந்த ஐசியூ வார்டுக்குள்ள போகலாம்… ஆனா எந்த ஜாதில பொறந்தாலும் மந்திரம் படிச்சி அர்ச்சகர் ஆக முடியுமான்னு கேப்பாங்க. இந்த ஈவேரா பாலோயர்ஸ் எல்லா கேள்வியும் ரெடியா வெச்சிருப்பாங்க”

“கோவில் விவகாரத்துல அரசு மூக்கை நுழைக்க கூடாதுன்னு சொல்லுடா அம்பி”

“இதைத்தான் மாமா என் ஆபீஸ் பிரண்டுகிட்ட சொன்னேன். அதுக்கு அவன், இன்ன ஜாதிக்காராள் கோவிலுக்குள்ள வரக்கூடாதுன்னு கோவில் நிர்வாகம் சொன்னா அப்ப அரசு மூக்கை நுழைக்கலாமான்னு கேட்டான்”

“அதுக்கு நீ என்ன சொன்னாய்?”

“நான் என்ன சொல்ல.. அரசு தலையிடலாம்னு சொல்லிட்டேன். அந்த சண்டாளன் அதை கெட்டியா பிடிச்சுண்டு, இன்ன ஜாதிக்காராள் கோவிலுக்குள்ள வரக்கூடாதுன்னு சொன்னா அரசு தலையிடலாம்… ஆனா இன்ன ஜாதிக்காராள் கருவறைக்குள்ள வரக்கூடாதுன்னு சொன்னா மட்டும் அரசு தலையிட கூடாதோன்னு கேட்டு லாக் பண்ணிட்டான். பக்கத்துல இருந்த பிரண்ட்ஸ் எல்லாரும் என்னை பார்த்து ஏளனமா சிரிச்சிட்டா. அவமானமா போச்சு மாமா!”

“இதுக்குத்தான் சொன்னேன்… அந்த ஈவேரா பாலோயர்ஸ் சவகாசமே கூடாதுன்னு”

“நம்மவா எல்லாம் இந்த கருப்பு சட்டைக்காராளை பார்த்தா ஏன் தலை தெறிக்க ஓடுறான்னு இப்பத்தான் மாமா நேக்கு புரியறது. இனி நானும் கவனமா இருக்கேன். நான் வரேன் மாமா… நாழியாகுது”


PDF https://drive.google.com/file/d/1ABAN8jXDJ3_nmX9EIdkotp9d-sGL0q3H/view

நந்தனார் உயிரோடு எரிக்கப்பட்ட கதை

10 October 2020 at 02:19

சிதம்பரம் நடராசர் கோவிலுக்குள் நுழைய விரும்பியதால் உயிரோடு எரித்து கொல்லப்பட்ட நந்தனார் என்பவரை பற்றிய கதை திருநாளைப்போவார் நாயனார் புராணம் என்ற பெயரில் பெரிய புராணத்தின் ஒரு பகுதியாக இருக்கிறது.

அதை இந்த வலைத்தளத்தில் படிக்கலாம் https://shaivam.org/thirumurai/twelveth-thirumurai/872/periya-puranam-mummaiyal-ulakanda-charukkam-thiru-nalaip-povar-nayana-puranam

இப்போது அதில் இருந்து சில பகுதிகள் 

ஆதனூர் என்ற ஊருக்கு வெளியே புலைப்பாடியில் ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்தவராக நந்தனார் அறிமுகம் செய்யப்படுகிறார். தான் பிறந்த குலத்துக்கு விதிக்கப்பட்ட தொழிலை செய்து வந்தாக கூறும் வரிகளின் மூலம் அப்போதே பிறப்பின் அடிப்படையில் தொழில் விதிக்கப்பட்டதை புரிந்து கொள்ளலாம்

கோவில்களின் “திருவாயில் புறம் நின்று” அவர் பாடியதாக கூறும் வரிகள், அவருக்கு கோவிலுக்கு உள்ளே செல்ல அனுமதி இல்லை என்பதை கூறுகிறது.

கோவில் வாசலில் நின்று கொண்டு தன்னை வணங்க முயன்ற நந்தனார் மீது கருணை கொண்டு, சிவபெருமான் தனக்கு முன்னால் இருந்த நந்தியை விலக சொல்லி, நந்தனாருக்கு காட்சி அளித்தாராம். என்ன ஒரு கருணை!

அதற்கு பதிலாக நந்தனாரை உள்ளே வரச்சொல்லி காட்சி அளித்திருக்கலாமே என்றெல்லாம் கேள்வி கேட்க கூடாது.

நிலைமை இப்படி இருக்கும் போது, நந்தனாருக்கு சிதம்பரம் தில்லை நடராசரை சென்று வழிபட வேண்டும் என்ற விபரீதமான விருப்பம் ஏற்பட்டது

சிதம்பரத்தின் எல்லை வரை சென்றவர், அங்கு பார்ப்பனர்கள் வளர்க்கும் வேள்விகளையும் அதில் இருந்து எழும்பும் புகையையும் கண்டார். தான் பிறந்த குலத்தை எண்ணி அஞ்சி அந்த எல்லையிலேயே நின்றார்.

இவ்வாறு ஒவ்வொரு நாளும் இரவு பகலாக சிதம்பரத்தின் எல்லையை வலம் வந்து, தன்னால் நடராசரை வணங்க முடியாத நிலையை எண்ணி வருந்தியவாறே உறங்கச் செல்வார்.

இழிவான குலத்தில் பிறந்தது தனக்கு சிதம்பரத்துக்கு உள்ளே செல்ல தடையாக இருக்கிறதே என்று வருந்தியவாறு தூங்கினார். அப்போது அவரது கனவில் சிவபெருமான் தோன்றினார்.

“உனது இந்த இழிபிறவி நீங்க, நீ நெருப்பில் மூழ்கி எழுந்து, தில்லைவாழ் பார்ப்பனர்கள் மூவாயிரம் பேரோடு என்னுடைய சந்நிதிக்கு வந்து சேர்வாயாக” என்று கனவில் சிவபெருமான் கூறினார். அதோடு நில்லாமல், அந்த பார்ப்பனர்களுடைய கனவிலும் தோன்றி நெருப்பை மூட்டி வைக்குமாறு கூறினார்!!

உடனடியாக தில்லை பார்ப்பனர்கள் ஒன்று கூடி, சிதம்பரம் கோவிலின் தெற்கு வாசலுக்கு முன் ஒரு குழியில் நெருப்பை மூட்டினார்கள். நந்தனார் அந்த நெருப்பை வலம் வந்தார்.

தனது கைகளை கூப்பிக்கொண்டே தீயில் இறங்கினார். சற்று நேரத்தில், தனது உருவம் மறைந்து, பூணூலுடன் பார்ப்பனராக மாறி வெளியே வந்தார்!

பார்ப்பனராக மாறி வெளியே வந்தவர் வேகமாக கோவிலுக்கு உள்ளே சென்றாராம். அதன் பிறகு மாயமாக மறைந்து விட்டார்! சுற்றி நின்று கொண்டிருந்த மக்கள் யாரும் பார்க்கவில்லையாம்!

பார்ப்பனர்கள் ஆகா ஓகோ என்று அதிசயித்தனர். நந்தனார் தனது இழி பிறவியின் பாவங்கள் நீங்கி பார்ப்பனராக மாறி இறைவன் திருவடிகளை சேர்ந்து விட்டார் என்று கூக்குரலிட்டனர்.

இது வரைக்கும் நாம் பார்த்தது பார்ப்பனர்கள் சொன்ன கதை. நாம் அதை அப்படியே நம்பி விட முடியாது. இன்று நம் கண் முன்னால் நடப்பதையே திரித்து சொல்பவர்கள், பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் எப்படியெல்லாம் திரித்து கதை சொல்லியிருப்பார்கள் என்பதையும் எண்ணி பார்க்க வேண்டும். உண்மையில் அங்கு என்ன நடந்திருக்கும் என்பதை ஊகிக்க வேண்டும். 

ஒருவர் அப்படி மாயமாக மறைய முடியுமா? நந்தனார் கனவில் சிவபெருமான் வந்தாரா? அல்லது அது இவர்கள் சேர்த்ததா? நந்தனார் தானாக தீயில் இறங்கினாரா? அல்லது கோவிலில் நுழைந்ததற்கான தண்டனையா? இதெல்லாம் நியாயமாக எழும் கேள்விகள்.

நந்தனார் நுழைந்ததாக கூறப்படும் அந்த வாயில் இன்றளவும் மூடப்பட்டு இருக்கிறது. பார்ப்பனீயம் விதித்த சட்டங்களை மீறி தாழ்த்தப்பட்ட சாதியில் பிறந்த ஒருவன் கோவிலில் நுழைய முயன்றால் என்ன நடக்கும் என்பதை இன்னமும் உணர்த்தியவாறு அந்த சுவர் நின்று கொண்டிருக்கிறது.


PDF வடிவில் தரவிறக்கம் செய்ய https://drive.google.com/file/d/1dJY0aepyXm1kIsDRaPmoNauyVnknTAlJ/view

விஐபி விமானங்கள்

8 October 2020 at 07:37

பிரதமர் மற்றும் குடியரசு தலைவர் பயணம் செய்வதற்காக இரண்டு விமானங்கள் வாங்கப்பட்ட செய்தி வெளிவந்ததில் இருந்து, சில பாஜக தலைவர்கள், இது காங்கிரஸ் ஆட்சியில் போடப்பட்ட ஒப்பந்தத்தினால் வாங்கப்பட்டது என்ற பொய்யை பரப்பி வருகிறார்கள். 

உண்மையில் யார் ஆட்சியில் இதற்கான நிதி ஒதுக்கப்பட்டது?

2018-19 ஆண்டுக்கான பட்ஜெட்டில், இந்த இரண்டு விமானங்களை வாங்குவதற்கு 4 ஆயிரத்து 469 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருப்பது, அரசு வலைத்தளத்தில் இருக்கும் பட்ஜெட் ஆவணத்தில் இருக்கிறது.

https://indiabudget.gov.in/budget2018-2019/ub2018-19/eb/vol1.pdf

2019-20 ஆண்டுக்கான பட்ஜெட்டில் மேலும் 1084 கோடி ஒதுக்கப்பட்டது.

https://www.indiabudget.gov.in/budget2019-20(I)/ub2019-20/eb/vol1.pdf

2020-21 ஆண்டுக்கான பட்ஜெட்டில் 903 கோடி ஒதுக்கப்பட்டது.

https://www.indiabudget.gov.in/doc/eb/vol1.pdf

மொத்தத்தில் 3 ஆண்டுகளில் 6 ஆயிரத்து 456 கோடி பணத்தை, இந்த இரண்டு விமானங்களை வாங்க பாஜக அரசு ஒதுக்கியது.

இது விமானம் வாங்குவதற்கான செலவு மட்டுமே. இதற்கு மேல் விமானத்தின் cabin reconfiguration செலவு இருக்கிறது. அதற்கு 132 மில்லியன் அமெரிக்க டாலர் ஆகும் என்று மாநிலங்களவையில் ஒரு கேள்விக்கு பதிலளிக்கையில் மத்திய அமைச்சர் கூறினார். அதாவது கிட்டத்தட்ட 1000 கோடி ரூபாய். அந்த பணம் தேசிய சிறு சேமிப்பு துறையில் இருந்து எடுக்கப்பட்டதாக அவர் கூறிய செய்தி இதோ https://www.outlookindia.com/newsscroll/govt-releases-money-from-nssf-for-air-indias-vvip-planes-purchase/1274570

ஆகவே, விமானங்கள் வாங்குவதற்கான மொத்த பணமும், கடந்து 3 ஆண்டுகளில், பாஜக ஆட்சியில் கொடுக்கப்பட்டது என்ற உண்மை இதன் மூலம் தெரிய வருகிறது. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் போட்ட ஒப்பந்தத்துக்கு, இப்போது பணத்தை பெற்றுக்கொண்டு, அன்று பேசப்பட்ட விலைக்கு விமானத்தை கொடுக்க விமான நிறுவன முதலாளிகள் முட்டாள்கள் அல்ல.

தொழில் நுட்பமும் மாறியிருக்கும். ஒப்பந்தமும் காலக்கெடுவை தாண்டியிருக்கும்.


PDF வடிவில் படிக்க https://drive.google.com/file/d/1Z0WVxG41JBa7fu15XSZicoJDEBTtmElD/view

நீதிமன்றங்களில் மனுஸ்ம்ரிதி

27 September 2020 at 02:47

சில வழக்குகளின் தீர்ப்பை படிக்கும் போது, மனுஸ்ம்ரிதியில் சொல்லப்பட்ட கருத்துக்களை மேற்கோள் காட்டி, அதன் அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. http://www.indiankanoon.org என்ற இணையதளத்தில் பல வழக்குகளின் தீர்ப்பு பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கிறது. அதில் தேட தேட, மனுஸ்ம்ரிதியை அடிப்படையாக வைத்து வழங்கப்பட்ட தீர்ப்புகள் எண்ணிக்கை மலைக்க வைக்கிறது. நூற்றுக்கணக்கில் இருக்கும் தீர்ப்புகளில் இருந்து ஒரு சிலவற்றை மட்டும் எடுத்து இந்த கட்டுரையில் தொகுத்திருக்கிறேன்


1963 ஆம் ஆண்டு ஒரு வழக்கில், வாரிசுதாரர் யார் என்ற பிரச்சனையில், நீதிபதி மனுஸ்ம்ரிதியை மேற்கோள் காட்டி அளித்த தீர்ப்பு. 

“…தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்த பெண்ணை மணம் செய்யும் உயர் சாதியினரும் தாழ்ந்து விடுவார்கள்…”

Image
தீர்ப்பு லிங்க்: https://indiankanoon.org/doc/1078904/

1964ஆம் ஆண்டு

சொத்தில் யாருக்கெல்லாம் பங்கு என்பதற்கு மனுஸ்ம்ரிதியை மேற்கோள் காட்டியிருக்கிறார் நீதிபதி

“…வாரிசு இல்லாதவர்கள், சாதியில் இருந்து விலக்கி வைக்கப்பட்டவர்கள், பார்வை இல்லாமலோ காது கேளாமலோ பிறந்தவர்கள், இவர்களுக்கு சொத்தில் பங்கு கிடையாது…”

Image
தீர்ப்பு லிங்க்: https://indiankanoon.org/doc/495668/

1953ஆம் ஆண்டு

இரண்டாவது திருமணம் செய்த கணவனிடம் இருந்து ஜீவனாம்சம் கோரி மனைவி தொடர்ந்த வழக்கு

பெண் குழந்தைகளை மட்டுமே பெறுபவளை ஒதுக்கி விட்டு கணவன் வேறு திருமணம் செய்யலாம் என்று ஸ்ம்ரிதிகளில் இருப்பதை நீதிபதி மேற்கோள் காட்டுகிறார்

Image
தீர்ப்பு லிங்க்: https://indiankanoon.org/doc/801259/

1962ஆம் ஆண்டு

ஒரு திருமணம் அசுர மணமா அல்லது பிரம்ம மணமா என்ற வழக்கு. இதற்கு மனுவை நாம் வழிகாட்டியாக எடுத்துக்கொள்வோம் என்கிறார் நீதிபதி

Image
தீர்ப்பு லிங்க்: https://indiankanoon.org/doc/457910/

விடுதலை பெறுவதற்கு முன்பு நிலைமை இன்னும் மோசம்

1926ஆம் ஆண்டு, ஒரு வழக்கில், சூத்திரர்களை நீதிமன்றத்தில் பணி நியமனம் செய்யக்கூடாது என்று மனுஸ்ம்ரிதியில் இருப்பதாக நீதிபதி மேற்கோள் காட்டுகிறார்

Image
தீர்ப்பு லிங்க்: https://indiankanoon.org/doc/1242249/

1912ஆம் ஆண்டு

ஜீவனாம்சம் கோரி நடந்த வழக்கில், சூத்திர பெண்களை பிராமண சத்திரிய வைசியர்கள் திருமணம் செய்வதை மனு கண்டிப்பதாக மனுஸ்ம்ரிதியை நீதிபதி மேற்கோள் காட்டியிருக்கிறார்

Image
தீர்ப்பு லிங்க்: https://indiankanoon.org/doc/621387/

சரி…அது அந்தக் காலம். இப்ப எப்படின்னு பார்க்கலாமா?

2017ஆம் ஆண்டு. மூளை வளர்ச்சி குறைபாடுள்ள மகனின் சீறுநீரகத்தை தானம் கொடுப்பது பற்றிய வழக்கு

மீமாம்சையில் இருக்கும் தத்துவங்களை வைத்து வழக்கை அணுகியிருக்கிறார் நீதிபதி!

Image
தீர்ப்பு லிங்க்: https://indiankanoon.org/doc/179156463/

2015ஆம் ஆண்டு

மனுஸ்ம்ரிதியில், சாட்சிகளின் உடல்மொழியை வைத்து அவர்களை எடை போடுவதை குறித்து எழுதப்பட்டுள்ளதை, நீதிபதி மேற்கோள் காட்டுகிறார்

Image
தீர்ப்பு லிங்க்: https://indiankanoon.org/doc/190174798

இப்படி இன்னும் நிறைய தீர்ப்புகள் இருக்கிறது. கட்டுரை நீண்டு கொண்டே போகும் என்பதால் இத்துடன் நிறுத்துகிறேன்

இந்திய அரசியலமைப்பு சட்டத்தை விட மனுஸ்ம்ரிதியை உயர்வாக கருதும் நீதிபதிகளின் கையில்தான் நம் நீதிமன்றங்கள் இருக்கிறது. அதனால்தான் நீதிமன்ற வளாகத்திலேயே மனுவின் சிலையை நிறுவி, பார்ப்பனீயம் நம்மை பார்த்து ஏளனமாக சிரித்துக் கொண்டிருக்கிறது

Image

மனுஸ்ம்ரிதி போதாதென்று, நீதிமன்றத்தில் மீமாம்ச கொள்கைகளை பின்பற்றி சட்டத்தை விளக்கம் கொள்ள வேண்டும் என்று, 2009 ஆம் ஆண்டு, அப்போதைய உச்சநீதிமன்ற நீதிபதிகளான மார்க்கண்டேய கட்ஜுவும், AK கங்குலியும், உத்தரவு பிறப்பித்தார்கள்

இந்த நீதிபதிகள் குறிப்பிடுகிற மீமாம்ச கொள்கைகளை விளக்கும் நூல்களில் ஒன்றான ஜைமினி மீமாம்ச சூத்திரங்கள் என்கிற நூலில் இருந்து ஒரு பகுதி இதோ. இதை படித்தால் மீமாம்ச கொள்கைகளின் அடிப்படை என்ன என்பது புரிந்து விடும். 

“…வேதத்தை கற்பதற்கு உபநயன சடங்கு செய்ய வேண்டும். சூத்திரர்களுக்கு உபநயன சடங்கு செய்யப்பட தகுதி இல்லை…”

இதை நூலை அடிப்படையாக வைத்துத்தான் சட்டத்தை புரிந்து கொள்ள வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் நினைக்கிறார்கள். இந்த நீதிபதிகளிடமிருந்துதான் நாம் சமூக நீதியை நிலைநாட்டும் தீர்ப்புகளை எதிர்பார்த்து காத்திருக்கிறோம் 


மாட்டுக்கறி அரசியல்

27 September 2020 at 02:09

தாங்கள் மாமிசம் உண்பதை நிறுத்தியதால், அதை ஒரு பெருங்குற்றம் போல சமூகத்தை நம்ப வைக்கும் முயற்சியில் பார்ப்பனர்கள் இறங்கியிருக்கிறார்கள். அதன் முதல் படியாக, மாட்டுக்கறி உண்பது குற்றம் என்று சட்டம் இயற்றி விட்டார்கள். இன்னும் சிறிது காலத்தில், மாமிசம் உண்பதே குற்றம் என்று சட்டம் இயற்றப்பட்டாலும் ஆச்சரியம் இல்லை. 

உழைக்கும் வர்க்கத்தினர் தங்களின் புரத சத்து தேவைக்கு பெரிதும் நம்பி இருப்பது மாமிச உணவுகளையே. அதற்கு வேட்டு வைக்கும் முயற்சி நடை பெற்று வருகிறது.

ஆகவே, அவர்களின் குட்டை உடைக்கும் விதத்தில், பார்ப்பன நூல்களில் மாட்டுக்கறி மற்றும் பிற மாமிசங்களை உண்பது பற்றியும், அவர்கள் யாகங்கள் என்ற பெயரில் தின்று தீர்த்தது பற்றியும் எழுதப்பட்டிருக்கும் குறிப்புகளை தரவுகளோடு பகிர்வதே, இந்த கட்டுரையின் நோக்கம்

யாகங்கள்

வேத காலத்தில்  தீயை மூட்டி, அதில் பல்வேறு மிருகங்களை வெட்டி போட்டு, அவற்றை உண்பதே பார்ப்பனர்களின் வழிபாட்டு முறையாக இருந்தது. நின்றால் யாகம், நடந்தால் யாகம் என்று ஒவ்வொன்றுக்கும் புதிது புதிதாக யாகங்களை கண்டு பிடித்தார்கள். அரசனுக்கு குழந்தை இல்லையா? அதற்கு ஒரு யாகம். எதிரி படை எடுத்து வருகிறானா? அதற்கு ஒரு யாகம். எதிரி மீது படையெடுக்க வேண்டுமா? அதற்கு ஒரு யாகம். 

வாஜபேய யாகம், அசுவமேத யாகம், கோமேத யாகம் என்று பலவிதமான யாகங்கள் இருக்கின்றன. இதில் வாஜபேய யாகத்துக்கு 23 பசுக்களை  பலியிட வேண்டும் என்றும், அசுவமேத யாகத்துக்கு 100 பசுக்களை பலியிட வேண்டும் என்றும் சொல்லப்பட்டிருப்பதாக தனது தெய்வத்தின் குரல் நூலில் காஞ்சி சங்கராச்சாரியார் கூறுகிறார். 

அனைத்து வேதங்களையும் கற்ற, சமஸ்கிருதத்தில் ஆழ்ந்த அறிவுடைய சங்கராச்சாரியாரே இந்த ஒப்புதல் வாக்குமூலத்தை அளிக்கிறார். மேலும், “தர்மத்துக்காக செய்ய வேண்டியது, லோக ஷேமத்துக்காக செய்ய வேண்டியது, ஹிம்சை என்று பார்க்கக்கூடாது” என்று விலங்கு பலியை நியாயப்படுத்துகிறார்.

யாகத்தில் பலியிடப்படும் விலங்குகளை எப்படி கொல்ல வேண்டும், அதை எப்படி வெட்ட வேண்டும், அந்த விலங்கு தீயில் நன்றாக சமைக்கப்பட்ட பிறகு எப்படி தங்களுக்குள் பங்கு போட்ட உண்ண வேண்டும் என்பதெல்லாம் வேதத்தில் தெளிவாக இருக்கிறது. சுக்ல யஜுர் வேதத்தின் சதபத பிராமணம், யாகம் செய்யும் முறை பற்றி விளக்குகிறது. சதபத பிராமணத்தில் கண்வா, மத்யந்தினா என்று இரண்டு பிரிவுகள் இருக்கிறது. முதலில் கண்வா பிரிவில் சொல்லப்பட்ட முறைகளை பார்ப்போம். இந்த நூல் மத்திய கலாச்சார அமைச்சகத்தின் வலைத்தளத்தில் இருக்கிறது http://vedicheritage.gov.in/ebooks/Kanvasatapathabrahmaaam_Vol_III.pdf. ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் C.R. சுவாமிநாதன்.

இதில் 179ஆம் பக்கத்தில், பலியிடப்படும் விலங்கின் கழுத்தில் சுருக்கு போட்டு, அதை மூச்சு திணறடித்து கொல்ல வேண்டும் என்று இருக்கிறது.

மூச்சு அடங்கிய பிறகு, அந்த விலங்கை புரட்டி போட்டு, அதன் மேல் புல்லை பரப்பி விட்டு, அதை கத்தியால் வெட்ட வேண்டும் என்று கூறுகிறது.

வெட்டிய பின் இரத்தம் கொப்பளிக்கும் போது, “இது ராட்சசர்களுக்கானது” என்ற மந்திரத்தை கூற வேண்டும்

191ஆம் பக்கத்தில், அந்த விலங்கின் ஒவ்வொரு பாகத்தை எந்த வரிசையில் வெட்ட வேண்டும் என்று விளக்கப்படுகிறது. முதலில் அதன் நாக்கை வெட்ட வேண்டும். பின்பு அதன் நெஞ்சுப்பகுதியை வெட்ட வேண்டும். அதன் பிறகு, முன்னங்கால்களின் கீழ்ப்பகுதி, அதன் பிறகு பின் பகுதி  என்று வரிசையாக வெட்ட வேண்டும். அதன் மடியின் மேல்பகுதியில் இருக்கும் இடுப்பை வெட்ட வேண்டும் என்ற வரியின் மூலம், யாகத்தில் எந்த விலங்குகள் பலியிடப்பட்டன என்று புரிந்து கொள்ளலாம்

சதபத பிராமணத்தின் மத்யந்தின பிரிவு சற்று கொடூரமானது. அதன் 4ஆம் காண்டம், 5ஆம் அத்தியாயம், 2ஆம் பிராமணத்தில் இருக்கும் வரிகளை பார்க்க போகிறோம். அதை இந்த வலைத்தளத்தில் படிக்கலாம் https://www.wisdomlib.org/hinduism/book/satapatha-brahmana-english/d/doc63239.html

முதல் சுலோகம் சொல்லும் செய்தி. பசுவின் மூச்சு அடங்கிய பிறகு, அதன் குடலை முதலில் உருவ வேண்டும். பின்பு வயிற்றின் உள்ளே கை விட்டு துழாவி, கரு உருவாகி இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.

அப்படி கரு உருவாகி இருந்தால், அதை கருப்பையில் இருந்து வெளியே இழுத்து போட வேண்டும்

பிறகு, அந்த முழுவதுமாக வளர்ச்சியடையாத கன்றின் கழுத்துக்கு கீழே வெட்டி, அதில் இருந்து வழியும் கொழுப்பை ஒரு பானையில் பிடிக்க வேண்டும்

பிறகு, அந்த கருவை ஒரு துணியில் சுருட்டி, சமைப்பதற்காக மூட்டப்பட்டிருக்கும் நெருப்பின் அருகில் வைக்க வேண்டும்

பலியிடப்பட்ட விலங்கு முழுதாக சமைக்கப்பட்ட பிறகு, அதை யாக செய்த பார்ப்பனர்கள் தங்களுக்குள் எப்படி பங்கு போட்டுக்கொள்ள வேண்டும் என்று ரிக் வேதத்தின் ஐத்ரேய பிராமணம் விளக்குகிறது.

யாகத்தில் பங்கு கொண்ட பார்ப்பனர்களுக்கு, அந்த யாகத்தில் அவர்கள் செய்யும் வேலைக்கு ஏற்ப பங்கு வழங்கப்படும். விலங்கின் இடது தொடைப்பகுதி யாருக்கு, வலது தோள் பகுதி யாருக்கு, வலது முன்னங்காலின் கீழ்ப்பகுதி யாருக்கு என்பன போன்ற விதிகள் ஐத்ரேய பிராமணத்தில் தெளிவாக விளக்கப்படுகிறது.

மேலே பகிரப்பட்ட நூலை படிக்க https://books.google.com/books?id=f68gAAAAMAAJ&pg=PA441&lpg=PA441

புராணங்களில் மாமிசம் 

ரந்தி தேவன் என்ற அரசன் பார்ப்பனர்களுக்கு உணவளிக்க தினமும் இரண்டாயிரம் பசுக்களை கொன்றான் என்ற செய்தி மகாபாரதம், வன பர்வம், 207ஆம் அத்தியாயம், 9ஆம் சுலோகத்தில் இருக்கிறது.

இதை மகாபாரதத்தின் ஆங்கில பெயர்ப்பின் 475ஆம் பக்கத்தில் படிக்கலாம். இந்த புத்தகம் பாஜக கட்சி வலைத்தளத்தில் இருக்கிறது http://library.bjp.org/jspui/bitstream/123456789/851/2/Mahabharata%20%28Unabridged%20in%20English%29.pdf

மகாபாரதம், துரோண பர்வம், 67ஆம் அத்தியாயம், 5ஆம் சுலோகத்தில் இருக்கும் வரிகள் 

“பலியிடப்பட்ட விலங்குகளின் தோல் மலை போல் குவிக்கப் பட்டிருந்ததாம். அந்த தோலில் இருந்து கசிந்த திரவம் ஒரு ஆறு போல் ஓடியது. 

தோலில் இருந்து வெளிப்பட்டதால் அந்த ஆற்றுக்கு சர்மன்வதி (சருமம் = தோல்) என்ற பெயர் வந்தது”

மகாபாரதத்தின் துரோண பர்வத்தின் 68ஆம் அத்தியாயத்தில், பரதன் யமுனை ஆற்றங்கரையில் 100 குதிரைகளை பலி கொடுத்ததாகவும், சரஸ்வதி ஆற்றங்கரையில் 300 குதிரைகளை பலி கொடுத்ததாகவும், கங்கை ஆற்றங்கரையில் 400 குதிரைகளை பலி கொடுத்ததாகவும் இருக்கிறது

அனுசாசன பர்வம் 88ஆம் அத்தியாயத்தில் பித்ருக்களுக்கு ஸ்ரார்த்தமாக (முன்னோர்களுக்கு படையல்) எதை அளிக்க வேண்டும் என்ற குறிப்பு இருக்கிறது.

மீன் கறி அளித்தால் அவர்கள் 2 மாதங்களுக்கு மகிழ்ச்சியாக இருப்பார்கள், ஆட்டுக்கறி அளித்தால் 5 மாதங்களுக்கு மகிழ்ச்சியாக இருப்பார்கள், பன்றிக்கறி அளித்தால் 6 மாதங்களுக்கு மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்று பட்டியலிடுகிறார்கள். அந்த வரிசையில், மாட்டுக்கறி அளித்தால் பித்ருக்கள் 1 ஆண்டு மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்று எழுதப்பட்டிருக்கிறது.

இந்த வரிகளையும், பாஜக கட்சி வலைத்தளத்தில் இருக்கும் ஆங்கில மொழிபெயர்ப்பு நூலின் 2041ஆம் பக்கத்தில் படிக்கலாம்.


இராமாயணம் – அயோத்தி காண்டம், 55ஆம் சர்க்கம், 33ஆம் சுலோகம் 

சிறிது தூரம் பயணம் செய்த பிறகு, ராமனும் இலக்குவனும், யமுனை ஆற்றின் கரையில் இருந்த காட்டில், பல மான்களை கொன்று தின்றார்கள்.

இராமாயணம் – அயோத்தி காண்டம், 56ஆம் சர்க்கம் 

காட்டில் ஒரு குடிலை அமைத்த பிறகு, அதற்கு தீட்டு கழிக்க பூஜை செய்ய வேண்டும் என்று முடிவெடுத்த இராமன், இலக்குவனிடம் ஒரு மானை கொன்று அதன் மாமிசத்தை எடுத்து வருமாறு கூறினான். இது 22ஆம் சுலோகத்தில் இருக்கிறது.

https://www.valmikiramayan.net/utf8/ayodhya/sarga56/ayodhya_56_frame.htm

25ஆம் சுலோகம். மான் கறியை கொண்டு வந்த இலக்குவனிடம், அதை வேக வைக்குமாறு இராமன் கூறினான்

27ஆம் சுலோகம்: இரத்தம் எதுவும் மீதம் இல்லாத அளவுக்கு அந்த மான் கறி வெந்துவிட்டதை உறுதி செய்த இலக்குவன் பின்வருமாறு கூறினான்

28ஆம் சுலோகம்: ராமா! இந்த மான் முழுவதுமாக சமைக்கப்பட்டு விட்டது. இப்போது நாம் வழிபாட்டை தொடங்கலாம்.

இராமாயணம் – அயோத்தி காண்டம், 96ஆம் சர்க்கம் 

மந்தாகினி ஆற்றின் கரையில், இராமனும் சீதையும் மாமிசம் உண்ணும் போது, இராமன் “இந்த மாமிசம் தீயில் சுடப்பட்டது. மென்மையாகவும், சுவையாகவும் இருக்கிறது” என்று கூறினான். 


பிருகாதாரண்யக உபநிஷத். ஆதி சங்கரர் உரை.

“ஆண் குழந்தை வேண்டுமென்றால், சோற்றுடன் வீரியம் வாய்ந்த காளை மாட்டுக்கறியை சேர்த்து சாப்பிட வேண்டும்”

பிரம்ம சூத்திரத்தின் சுலோகம் 3.1.25, விலங்கு பலி தவறல்ல என்று வாதிடுகிறது.

சாஸ்திரங்கள் விலங்குகளை பலியிடலாம் என்று கூறுவதாகவும், அதனால் பாவம் நேராது என்றும் கூறுகிறது

மனுஸ்மிருதி சுலோகம் 5.30

“தினமும் மாமிசம் சாப்பிடலாம். அதில் எந்த பாவமும் இல்லை”

மனுஸ்மிருதி சுலோகம் 5.39

விலங்குகள் கடவுளால் படைக்கப்பட்டதே பலியிடுவதற்காகத்தான். ஆகவே, பலியிடுவதற்காக அவற்றை கொல்வது உண்மையில் கொலையல்ல!!

மனுஸ்மிருதி சுலோகம் 5.35

“ஒரு விருந்துக்கு அழைக்கப்பட்டு,  அங்கு பரிமாறப்பட்ட மாமிசத்தை உண்ணாவிட்டால், அடுத்த பிறவில மிருகமாக பிறப்பான்”

ஆபஸ்தம்ப தர்ம சாஸ்திரம். படலம் 1, பாகம் 3, சுலோகம் 10

“வீட்டுக்கு விருந்தினர் வந்தால், அன்று பசுவை வெட்டலாம்”

விவேகானந்தர் பிப்ரவரி 2, 1900 அன்று கலிபோர்னியாவில் ஆற்றிய உரையில் அவர் கூறியது.

“…பண்டைய காலங்களில், மாட்டுக்கறியை சாப்பிடாதவன் இந்துவே கிடையாது…”

Swami Vivekananda Centenary Memorial Volume என்ற நூலில் இந்த வரி இருக்கிறது

முடிவுரை

மேலே பகிரப்பட்ட தரவுகளின் மூலம், மாமிசம் உண்ணும் வழக்கம், குறிப்பாக மாட்டுக்கறி உண்ணும் வழக்கம் பார்பனர்களிடையே இருந்தது தெரிய வரும். மாட்டை வெட்டி தீயில் வாட்டி உண்ணுவதை அவர்கள் தங்களின் வழிபாட்டு முறையாகவே வைத்திருந்தார்கள்.

புத்தமதம் மக்களிடையே வரவேற்பை பெற்ற பிறகு, வேத மதம் மீண்டும் தங்கள் ஆதிக்கத்தை நிலை நிறுத்த பல்வேறு வழிகளை கையாண்டது. புத்தமதம் மாமிசம் உண்பதை எதிர்க்கவில்லை. புத்தரே மாமிசம் உண்டதாக சில நூல்களில் பார்க்க முடிகிறது. ஆனால், யாகம் என்ற பெயரில் ஆயிரக்கணக்கில் விலங்குகள் வெட்டப்பட்டு தீயில் வீசப்படுவதை புத்தமதம் கடுமையாக கண்டித்தது. அந்த தாக்குதலை சமாளிக்க, கொஞ்சம் கொஞ்சமாக விலங்கு பலியை நிறுத்தினார்கள் பார்ப்பனர்கள். ஆனால், புத்த துறவிகளை விட தாங்கள் புனிதமானவர்கள், உயர்வானவர்கள் என்று காட்டிக்கொள்ள அவர்களுக்கு ஒரு வழி தேவைப்பட்டது. அதற்கு அவர்கள் கண்டெடுத்த பல வழிகளில் ஒன்றுதான், மாமிசம் உண்பதை மொத்தமாக கைவிட்டு, மாமிசம் உண்பதே இழிவானது என்ற நம்பிக்கையை பரப்புவது. அதன் மூலம், மாமிசம் உண்பவர்கள் அனைவரும் கீழானவர்கள் என்ற பிம்பம் உருவாக்கப்பட்டது. கலி யுகத்தில் விலங்கு பலி கூடாது என்று புராணங்களில் எழுத ஆரம்பித்தார்கள்.

விலங்குகளை கொல்லக்கூடாது என்று புராணங்களில் எழுதியிருக்கும் சில வரிகளை காட்டி, வேத மதம் விலங்குகளை கொல்வதை என்றுமே ஆதரித்தது இல்லை என்ற பொய்யை அவர்கள் கூறுவார்கள். விலங்குகளை உணவுக்காக கொல்லக் கூடாது என்று மட்டுமே புராணங்கள் கூறுகிறது. ஒரு சாதாரண மனிதன் தனது பசிக்காக மாமிசம் உண்ணக்கூடாதாம். ஆனால் யாகங்களுக்காக எவ்வளவு வேண்டுமானாலும் கொன்று தின்பார்களாம். கேட்டால், அந்த மிருகங்களை சொர்கத்துக்கு அனுப்புகிறோம் என்பார்கள். 

ஆகவே இனி யாராவது உங்களிடம், மாமிசம் உண்ணக்கூடாது என்று கூறினால் “எங்கள் மத நம்பிக்கைப் படி நாங்கள் அந்த விலங்குகளை சொர்கத்துக்கு அனுப்புகிறோம்… எங்கள் நம்பிக்கையை புண் படுத்தாதீர்கள்” என்று கூறுங்கள்!


PDF வடிவில் படிக்க https://drive.google.com/file/d/1brm1rTWdXJujtPwK_OOYj2a7HSVGQhxM/view

பார்ப்பன நூல்களில் பெண்ணடிமைத்தனம்

27 September 2020 at 02:08

வீட்டுக்கு வெளியே அடிமை சேவகம் செய்ய சூத்திரர்கள். வீட்டுக்கு உள்ளே அடிமை சேவகம் செய்ய பெண்கள். பார்ப்பனீயத்தின் அடிப்படை இதுதான். சுற்றி இருப்பவர்களை கடவுளின் பெயரால் அடிமைப்படுத்தி, தாங்கள் அடிமைப்பட்டு கிடக்கிறோம் என்ற உணர்வே வராமல் தங்களுக்கு சேவை செய்ய வைப்பது.

அந்த வகையில், பெண்களை அடிமைப்படுத்தும் விதத்தில் பார்ப்பனர்கள் தங்கள் சாஸ்திரங்களிலும், புராணங்களிலும் என்னென்ன கருத்துக்களை புகுத்தினார்கள் என்பதை இந்த கட்டுரையில் பார்ப்போம். 

குழந்தைத் திருமணம்

பெண் குழந்தைக்கு மிகவும் இளம் வயதிலேயே திருமணம் செய்து வைப்பது, அவளை அடிமைப்படுத்த எளிமையான வழி. அவள் தனது வாழ்வில் எடுக்க வேண்டிய முக்கியமான முடிவு தன் வாழ்க்கை துணையை தேர்ந்தெடுப்பது. அந்த முடிவையே அவளிடமிருந்து பறிக்க என்ன வழி? தானே சிந்தித்து முடிவெடுக்கும் வயதை அவள் எட்டுவதற்குள், தங்கள் முடிவை அவள் மேல் திணிப்பது! யாராவது எதிர்த்தால் என்ன செய்வது? சாஸ்திரத்திலேயே இருக்கிறது என்று காட்டி விடலாம் என்று முடிவெடுத்த பார்ப்பனர்கள், அதை ஒன்று விடாமல் எல்லா சாஸ்திரங்களிலும் எழுதி வைத்தார்கள். எல்லா புராண கதைகளிலும் எழுதி வைத்தார்கள். அதிலிருந்து சிலவற்றை இப்போது பார்ப்போம்

பெண் குழந்தைகளை பருவமடைவதற்கு முன்பே திருமணம் செய்து கொடுத்து விட வேண்டும் என்று கவுதம தர்ம சாஸ்திரம், 18ஆம் அத்தியாயம்  21ஆம் சுலோகம் கூறுகிறது. அவ்வாறு செய்யாவிட்டால் பெண்ணின் தந்தைக்கு பாவம் வந்து சேரும் என்றும் எச்சரிக்கிறது. அந்த பெண் குழந்தை, ஆடைகளை அணியும் வயதுக்கு வரும் முன்பே திருமணம் செய்து வைத்து விட வேண்டும் என்றும் கூறுகிறது.

பவுதாயன தர்மசாஸ்திரத்தின் 4ஆம் காண்டம், முதல் அத்தியாயம், 11ஆம் சுலோகமும் அவ்வாறே கூறுகிறது. பருவமடைந்த பிறகு பெண் குழந்தை வீட்டிலேயே வைத்திருக்க கூடாது என்று எச்சரிக்கிறது.

மனுஸ்ம்ரிதி சுலோகம் 9.94 இவ்வாறு கூறுகிறது. “30 வயது ஆண், 12 வயது பெண்ணை திருமணம் செய்யலாம். 24 வயது ஆண், 8 வயது பெண்ணை திருமணம் செய்யலாம்”

மகாபாரதம் அனுசாசன பர்வம், அத்தியாயம் 44, சுலோகம் 14: “30 வயது ஆண், 10 வயது பெண்ணை திருமணம் செய்ய வேண்டும். 20 வயது ஆண், 7 வயது பெண்ணை திருமணம் செய்ய வேண்டும்”

இந்த மொழிபெயர்ப்பு பாஜக கட்சி வலைத்தளத்தில் இருக்கிறது

Page 251: http://library.bjp.org/jspui/bitstream/123456789/229/2/Anusana%20Parva.pdf

தேவி பாகவதம், சுலோகம் 3.27.40: ஒரு தந்தை, தன் மகள் 10 வயதை தாண்டி விட்டதாகவும், திருமண வயதை கடந்து விட்டதாகவும் புலம்புவதாக வருகிறது 

ஸ்கந்த புராணம், சுலோகம் 3.3.18.4: மனைவியை இழந்த ஒரு பார்ப்பனருக்கு, தனது 12 வயது மகளை ஒரு தந்தை கொடுத்ததாக வருகிறது.

https://www.wisdomlib.org/hinduism/book/the-skanda-purana/d/doc423681.html

ராமனுக்கும் சீதைக்கும் திருமணம் நடக்கும் போது, ராமனின் வயது 12 என்றும், சீதையின் வயது 6 என்றும் சாஸ்திரிகள் இந்த காணொளியில் கூறுகிறார்.

இந்த தகவல், வால்மீகி இராமாயணத்தில் நேரடியாக சொல்லப்படவில்லை. இரண்டு இடங்களில் சொல்லப்பட்ட தகவல்களை வைத்து, திருமணத்தின் போது அவர்களின் வயது என்ன என்பதை புரிந்து கொள்ளலாம். முதலில், ஆரண்ய காண்டம், 47ஆம் சர்கம், 4ஆம் சுலோகத்தில், தான் அயோத்தில் 12 ஆண்டுகள் வாழ்ந்ததாக சீதை சொல்வது வருகிறது.

அடுத்ததாக, 10 மற்றும் 11ஆம் சுலோகங்களில், அயோத்தியை விட்டு காட்டுக்கு செல்லும் போது, ராமனுக்கு 25 வயது என்றும், தனக்கு 18 வயது என்று சீதை கூறுகிறாள். 

12 ஆண்டுகள் அயோத்தியில் வாழ்ந்ததாகவும், 18 வயதில் அயோத்தியில் இருந்து காட்டுக்கு கிளம்பியதாகவும் சீதை சொல்வதை வைத்து, அவள் 6 வயதில் திருமணம் முடிந்து அயோத்திக்கு வந்தாள் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

மேலே உள்ள சுலோகங்களை இந்த வலைப்பக்கத்தில் காணலாம் https://valmikiramayan.net/utf8/aranya/sarga47/aranya_47_frame.htm

அண்ணலும் நோக்கினார், அவளும் நோக்கினாள் என்ற வரிகளை கேட்கும் போது, நாம் இருவரையும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களாக கற்பனை செய்திருப்போம். ஆனால் ஒரு 12 வயது சிறுவனும், 6 வயது சிறுமியும் அந்த இடத்தில் இருந்தார்கள் என்பது கற்பனை கூட செய்து பார்க்க முடியாத அசிங்கம்.

ஸ்ரீமத் பாகவதத்தில், கிருஷ்ணன் ருக்மணியை கடத்தி சென்று திருமணம் செய்த நிகழ்வு வருகிறது. அதிலும் இதே கதைதான். கடத்தி செல்லப்படுவதற்கு முன்பு, ருக்மணியின் அழகை வர்ணிக்கும் வரிகளில், அவர் பருவ வயதை கூட எட்டவில்லை என்ற செய்தியும் சொல்லப்படுகிறது.

12 வயது கூட நிரம்பாத ஒரு பெண் குழந்தையை கடத்தி சென்று திருமணம் செய்ததை வீரதீர சாகசம் போல கதாகாலட்சேபம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

அந்த சிறுமியின் அழகில் மயங்கி சுற்றி நின்றவர்கள் அவளை ஆசையோடு பார்த்ததாக 53ஆம் சுலோகம் கூறுகிறது.

56ஆம் சுலோகத்தில், சுற்றியிருந்த ஓநாய்களிடமிருந்து தன் இரையை பிடிங்கி செல்லும் சிங்கத்தை போல, ருக்மணியை கிருஷ்ணன் திருடி சென்றான் என்று இருக்கிறது. 

மேலே பகிரப்பட்ட புத்தகத்தை இந்த வலைப்பக்கத்தில் படிக்கலாம் https://archive.org/details/in.ernet.dli.2015.142278/page/n223/mode/1up

இதுவரை பகிரப்பட்ட தரவுகளின் மூலம், குழந்தை திருமணம் என்பது ஏதோ சமூகத்தில் ஒரு சிலர் அறியாமையால் செய்த தவறு அல்ல என்பதும், அது தர்ம சாஸ்திரங்கள் மற்றும் புராணங்களின் மூலம் சமூகத்தில் புகுத்தப்பட்டது என்பதும் தெரிய வருகிறது.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த சமூகம் அதை ஆதரித்தது, இப்போது யார் அதையெல்லாம் ஆதரிக்கிறார்கள் என்ற கேள்வி எழலாம். இன்னமும் அதை ஆதரிப்பவர்கள் இருக்கிறார்கள் என்பதுதான் அதிர்ச்சிகரமான தகவல். 

இந்த காணொளியில் பிரம்மஸ்ரீ பரணீதர சாஸ்திரிகள் 8 வயதில் பெண் குழந்தைக்கு திருமணம் செய்து வைத்து விட வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்.

காஞ்சி சங்கராச்சாரியாரின் தெய்வத்தின் குரல் நூலில், எப்படி சிறுவர்களுக்கு 8 வயதில் உபநயனம் என்கிற பூணூல் அணிவிக்கும் சடங்கை செய்கிறோமோ, அதே போல பெண் குழந்தைகளுக்கு 7 வயதில் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்கிறார். திருமணமே பெண்களுக்கான உபநயனம் என்கிறார்.

இதற்கு அவர் சொல்லும் காரணங்கள்தான் அதிர்ச்சிகரமானது. பெண்கள் சிந்தித்து கேள்வி கேட்கும் வயது வருவதற்கு முன்பே ஒருவனை காட்டி “இவன்தான் உன் குரு. இவன்தான் உன் தெய்வம்” என்று மனதில் பதிய வைத்து விட வேண்டுமாம். வளர்ந்த பிறகு அவர்கள் சிந்திக்க துவங்கி விட்டால் அதை செய்வது கடினமாகி விடுமாம்!

பெண்களுக்கு மட்டும்தான் 8லிருந்து 12 வயதுக்குள் மணம் முடித்து விட வேண்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகிறது. ஆனால், ஆண்களுக்கு அவர்கள் உபநயனம் முடிந்து, குருகுல கல்வி முறையில் பிரம்மச்சரியத்தை கடை பிடிக்க வேண்டும் என்று தர்மசாஸ்திரங்கள் கூறுகிறது. ஆகவே ஆண்களுக்கு திருமணம் பெரும்பாலும் 16 வயதுக்கு மேலேயே நடந்து வந்தது. எடுத்துக்காட்டாக, ராமகிருஷ்ண பரமஹம்சர் தனது 23ஆம் வயதில், 5 வயது சாரதா தேவியை மணம் முடித்த செய்தி அவரது வாழ்க்கை வரலாறாக எழுதப்பட்ட The Gospel Of Sri Ramakrishna என்ற நூலில் இருக்கிறது.

அப்படியென்றால் ஆண்கள் மட்டும்தான் குருகுலத்தில் சென்று கல்வி கற்க அனுமதி இருந்ததா? பெண்களுக்கான கல்வி எப்படி இருந்தது?

பெண்களுக்கு கல்வி கூடாது! சுதந்திரம் கூடாது!

பார்ப்பனர்களை பொறுத்தவரை கல்வி என்பது வேதக்கல்வி மட்டுமே. அந்த வகையில், சூத்திரர்கள் மற்றும் பெண்களுக்கு வேதக்கல்வி கூடாது என்று ஆதிசங்கரர் எழுதிய தைத்திரிய உபநிஷத் உரையில் இருக்கிறது. அதன் மொழிபெயர்ப்பு நூலின் 462ஆம் பக்கத்தில் காணலாம்.

இந்த நூலை தரவிறக்கம் செய்ய https://drive.google.com/file/d/1WmXyoxFuHBikEbADn4MqJjY1ggGkZyZW/view

இந்த வலைப்பக்கத்தில் இருந்தும் படிக்கலாம் https://www.wisdomlib.org/hinduism/book/the-taittiriya-upanishad/d/doc79819.html

பெண்களை படிக்க வைத்தால் அவர்களது மார்க்கம் மாறிப் போய் விடும் என்று வேத விற்பன்னர் ஒருவர் கூறுகிறார் கேளுங்கள்.

பெண்கள் வீட்டு வேலைகளை மட்டுமே செய்ய வேண்டும் என்பதுதான் இவர்களின் சட்டம். அவர்கள் சுதந்திரமாக இருக்கக்கூடாது, வேலைக்கு சென்று சம்பாதிக்க கூடாது, ஆணுக்கு அடிமையாக வீட்டில் இருக்க வேண்டும் என்பதே இவர்கள் விருப்பம். இதை காஞ்சி சங்கராச்சாரியார் தனது தெய்வத்தின் குரல் நூலில் இவ்வாறு கூறுகிறார்.

மேலே குறிப்பிட்ட பகுதியை காஞ்சி சங்கர மடத்தின் வலைத்தளத்தில் படிக்கலாம் http://www.kamakoti.org/tamil/3dKK52.htm

இன்னும் ஒரு படி மேலே சென்று, “சித்த விகாரங்களை தூண்டி விடுகிற சூழ்நிலையில்” பெண்களை பெற்றோர் வேலைக்கு அனுப்புகிறார்கள் என்றும், அவர்களுக்கு “குளிர் விட்டு விட்டது” என்றும் “விவஸ்தை கெட்டு விட்டது” என்றும் கூறுகிறார்.

பெண்கள் தங்கள் வாழ்நாள் முழுதும் இன்னொருவரை நம்பியே வாழவேண்டும் என்பதுதான் சாஸ்திரங்களும், புராணங்களும், மடாதிபதிகளும் கூறும் நீதி. பெண் திருமணத்துக்கு முன் தன் தந்தையின் பாதுகாப்பில் இருக்க வேண்டும், திருமணத்துக்கு பிறகு கணவனின் பாதுகாப்பில் இருக்க வேண்டும், கணவனுக்கு பிறகு மகனின் பாதுகாப்பில் இருக்க வேண்டும் என்று அனைத்து பார்ப்பன நூல்களும் கூறுகிறது. அவர்களை பொறுத்த வரையில் பெண் என்பவள் ஒரு பொருள்தான் என்பது இந்த கருத்தின் மூலம் விளங்கும். நாங்கள் பெண்ணை பாதுகாக்கிறோம் என்று அவர்கள் திரும்ப திரும்ப கூறுவது பெண் தன்னை பாதுகாத்துக்கொள்ள வலிமையில்லாதவள் என்ற கருத்தை வலியுறுத்தவே.

இந்த காணொளியில், பெண்கள் தங்கள் பெயரில் வங்கிக்கணக்கு கூட வைத்துக்கொள்ளக் கூடாது என்று இவர் கூறுவதை கேளுங்கள். 

இஸ்கான் நிறுவனர் சுவாமி பிரபுபாதா, அதே கருத்தை வலியுறுத்துகிறார். பெண்களுக்கு பொருளாதார சுதந்திரம் கூடாது என்பதுதான் இவர்கள் அனைவரின் கருத்தும்.

காஞ்சி சங்கர மடத்தின் பரணீதர சாஸ்திரிகள், பெண்கள் சுதந்திரமாக எப்போதும் இருக்கக்கூடாது என்று கூறும் காணொளி.

மனுஸ்ம்ரிதியின் சுலோகம் 9.3: பெண்கள் பருவ வயதை எட்டும் வரை தந்தையின் பாதுகாப்பில் இருக்க வேண்டும். திருமணத்துக்கு பிறகு கணவனின் பாதுகாப்பில் இருக்க வேண்டும். முதுமை அடைந்த பிறகு மகன்களின் பாதுகாப்பில் இருக்க வேண்டும். அவர்கள் சுதந்திரமாக இருக்கக் கூடாது.

கணவனுக்கு அடிமையாக இருப்பது மட்டுமல்ல… படுக்கையில் வேசியாகவும் இருக்க வேண்டுமாம். சுலோகத்தை சொல்கிறார் கேளுங்கள்

ஆன்மீக விஷயங்களிலும், தத்துவ ஞானத்திலும் ஆண்களுக்குத்தான் விருப்பம் இருக்கும். சமையல் மற்றும் சாப்பாட்டு விஷயங்களில்தான் பெண்களுக்கு விருப்பம் இருக்கும் என்ற சுலோகத்தை இந்த காணொளியில் விளக்குகிறார்.

பெண்களுக்கு எந்த பொறுப்போ பதவியோ கொடுக்க கூடாது என்று சாணக்கியர் கூறியதாக இஸ்கான் நிறுவனர் சுவாமி பிரபுபாதா மேற்கோள் காட்டுகிறார்

கணவனை இழந்த பெண்களின் நிலை என்ன?

கணவன் மறைந்த பிறகு பெண்கள் பின்வரும் மூன்று வழிகளில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுக்கலாம்

  1. உடன்கட்டை ஏறுதல்
  2. கைம்பெண்ணாக வாழ்நாளை கழிப்பது
  3. நியோகம்

உடன்கட்டை ஏறுதல் 

பராசர ஸ்ம்ரிதியின் 4ஆம் அத்தியாயத்தின் 32ஆம் சுலோகம், தன் கணவனோடு உடன்கட்டை ஏறும் மனைவி சொர்க்கத்துக்கு செல்வாள் என்று கூறுகிறது.

அக்கினி புராணத்தின் 222ஆம் அத்தியாயத்திலும் அதே கருத்து இருக்கிறது

பிரம்ம புராணம் 4ஆம் பாகம், சுலோகம் 10.75

கணவன் இறந்த உடன் தானும் உயிர் விடுவதே மனைவியின் கடமை ஆகும். அதுவே வேதங்களில் சொல்லப்பட்டிருக்கிறது.

https://archive.org/details/dli.bengal.10689.20270/page/n59/mode/1up

தசரதன் இறந்த பிறகு கோசலை, கைகேயி, சுமத்திரா தவிர அவரது 60 ஆயிரம் மனைவிகளும் உடன் கட்டை எறியதாக அடுத்து வரும் காணொளியில் குறிப்பிடுகிறார்.

மகாபாரதத்தில், பாண்டுவின் இரு மனைவிகளில் ஒருவரான மாத்ரி உடன்கட்டை ஏறிய செய்தி, ஆதி பர்வம், 95ஆம் அத்தியாயம், 64ஆம் சுலோகத்தில் இருக்கிறது

பெண்களை வலுக்கட்டாயமாக உடன்கட்டை ஏற்ற வேண்டும் என்று எதிலும் கூறப்படவில்லை. ஆனால், அந்த செயலை ஒரு உயர்ந்த செயல் போல புனிதப்படுத்தி, கணவன் இறந்த பிறகு உயிரோடு இருக்கும் பெண்களை குற்ற உணர்ச்சிக்கு உள்ளாக்கும் விதத்தில் சாஸ்திரங்களிலும் புராணங்களிலும் எழுதப்பட்டிருக்கிறது.

தெய்வத்தின் குரல் நூலில், சங்கராச்சாரியார் உடன்கட்டை ஏறுதலை “உயர்ந்த உணர்ச்சி” என்றும் இந்த காலத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக பெண்கள் உடன்கட்டை ஏறுவது “ரொம்ப விசேஷம்” என்றும் புனிதப்படுத்துகிறார்.

மறுமணம் கூடாது

உடன்கட்டை ஏறாமல், கைம்பெண்ணாக வாழ்வை தொடரும் பெண்களுக்கு விதிக்கப்பட்ட சட்டங்கள் மிக கடுமையானவை. 

அக்கினி புராணத்தின் 222ஆம் அத்தியாயம், கைம்பெண்கள் தங்களை அலங்கரித்துக் கொள்ளக் கூடாது என்ற கருத்தை கூறுகிறது.

பவுதாயன தர்ம சாஸ்திரத்தின் சுலோகம் 2.2.4.7 கூறுவது: “கைம்பெண்கள் தரையில் படுத்து உறங்க வேண்டும்”

கைம்பெண்கள் மறுமணம் செய்யக்கூடாது என்பதை ஏராளமான பார்ப்பன நூல்கள் வலியுறுத்துகின்றன.

மகாபாரதம் ஆதி பர்வம் 160ஆம் அத்தியாயம் 36ஆம் சுலோகம் சொல்லும் செய்தி: ஆண்கள் பல பெண்களை மணக்கலாம். ஆனால் பெண்கள் இரண்டாவது திருமணம் செய்யக்கூடாது!

Page 465: http://library.bjp.org/jspui/bitstream/123456789/229/3/Mahabharata%20-%20Adi%20Parva.pdf

வாமன புராணம் 12ஆம் அத்தியாயம் 35ஆம் சுலோகம்: கைம்பெண்ணை மணம் செய்தவன் கையால் ஸ்ரார்த்தம் வாங்கி உண்பவர்கள் புழு பூச்சிகளையும் எறும்புகளையும் தின்பவர்கள் ஆவார்கள் 

இந்த காணொளியில் “ரெண்டாவது கல்யாணத்துக்கு மந்திரமே கிடையாது.. தெரியுமா?” என்று குண்டை தூக்கி போடுகிறார் அருளமுதம் ரா. பார்த்தசாரதி.

மேலும் “ரெண்டாவது கல்யாணம் பண்ணி வெச்ச வாத்தியாரும் நரகத்துக்கு போவார். அந்த பொண்ணை கல்யாணம் பண்ணி குடுத்த அப்பா அம்மாவுக்கும் நரகம் கிடைக்கும். புனர் விவாகம் (கைம்பெண் மறுமணம்) பண்ணக்கூடாது… சாஸ்திர விரோதம்!!” என்று கூறுகிறார்

ஸ்கந்த புராணத்தில் இருக்கும் வரிகள். 

“இரண்டாவது திருமணம் செய்த கைம்பெண்ணின் மகளை தவிர்க்க வேண்டும். அவள் ஒரு தாழ்ந்த பிறப்பு”

யஜ்னவாக்கிய ஸ்ம்ரிதியின் 3ஆம் அத்தியாயம் 52ஆம் சுலோகம் ஒருவன் யாரை திருமணம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்துகிறது. அதில் “இதற்கு முன் வேறொரு திருமணம் செய்திராத பெண்ணை மணம் புரிய வேண்டும்” என்று கூறுகிறது.

அந்த சுலோகத்தின் விளக்க நூல், கைம்பெண் மறுமணம் கூடாது என்று தெளிவாக குறிப்ப்பிடுகிறது

நியோகம்

ஒரு பெண் அவள் தன் கணவனோடு உடலுறவு கொள்வதற்கு முன்னால் கணவன் மறைந்து விட்டால், அவள் தன் கணவனின் தம்பியோடு சேர்ந்து கொள்ளலாம் என்று மகாபாரதம் கூறுகிறது. (அனுசாசன பர்வம் 44ஆம் அத்தியாயம் 52ஆம் சுலோகம்)

இதில் நாம் கவனிக்க வேண்டியது, “திருமணம் செய்து கொள்ளலாம்” என்று கூறவில்லை. “unite herself” என்று மட்டுமே கூறுகிறது 

குழந்தை இல்லாத கைம்பெண் தனது கணவனின் இளைய சகோதரனுடன் இணைந்து குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்று மனுஸ்ம்ரிதி சுலோகம் 9.59 கூறுகிறது.

இப்படி கணவனின் சகோதரனோடு சேர்ந்து குழந்தை பெற்றுக்கொள்வதை “நியோகம்” என்கிறார்கள்.

மகாபாரதத்தில் பாண்டு, திருதிராஷ்டிரன் மற்றும் விதுரன் இந்த முறையில்தான் பிறந்ததாக ஆதி பர்வத்தின் 105ஆம் அத்தியாயம் கூறுகிறது. சத்தியவதி என்ற பெண்ணுக்கு திருமணத்துக்கு முன்பு பராசர முனிவரோடு ஏற்பட்ட உறவில் பிறந்தவர் வியாசர். சத்தியவதி பின்னர் சாந்தனு என்கிற அரசனை திருமணம் செய்து பட்டத்து ராணி ஆகிறாள். அவளுக்கு பிறந்த விசித்திர வீரியன் திருமணத்துக்கு பிறகு இறந்து விடுகிறான். அவனுக்கு வாரிசு இல்லாததாலும், திருமணத்துக்கு முன்பு தனக்கு பிறந்த வியாசர், விசித்திர வீரியனுக்கு அண்ணன் என்பதாலும், வியாசரை அழைத்து தனது மருமகள்களோடு உறவு கொண்டு அவர்களுக்கு குழந்தை வழங்குமாறு கேட்கிறாள்.

வியாசர் அதற்கு ஒப்புக்கொள்கிறார். அப்படி பிறந்தவர்கள்தான் பாண்டு, திருதிராஷ்டிரன் மற்றும் விதுரன்.

இந்த கதைகளின் மூலம், பெண் என்பவள் வெறும் குழந்தை பெற்றுக்கொடுக்கும் உணர்ச்சிகளற்ற எந்திரம் போல நடத்தப்பட்டது புரியும். கணவனின் மறைவுக்கு பிறகு இன்னொருவனை முறையாக திருமணம் செய்து தங்கள் விருப்பப்படி வாழும் வாழ்வை பார்ப்பனீய சாஸ்திரங்கள் அனுமதிக்கவில்லை என்பது தெளிவாகும்.

பெண்கள் குறித்த சாணக்கிய நீதியின் பார்வை

சாணக்கிய நீதி என்கிற புத்தகத்தை பற்றி கேள்விப்பட்டிருப்போம். அதில் பெண்களை பற்றி என்ன கருத்துக்கள் கூறப்பட்டிருக்கிறது என்பதை இந்த பகுதியில் பார்ப்போம்.

ஒரு பெண் தான தர்மங்களை செய்வதை விடவும், விரதங்களை கடைப்பிடிப்பதை விடவும், புனித தலங்களுக்கு செல்வதை விடவும், கணவனின் கால்களை கழுவி அந்த நீரை குடிப்பதே அவளை தெய்வ பக்தியுள்ளவள் ஆக்கும் என்று சாணக்கிய நீதியின் 60ஆம் சுலோகம் சொல்கிறது.

பெண்கள் தெளிவற்ற சிந்தனை உடையவர்கள் என்று 477ஆம் சுலோகம் கூறுகிறது.

57ஆம் சுலோகம்: பெண்களுக்கு ஆண்களை விட 8 மடங்கு காம இச்சை இருக்கும்

58ஆம் சுலோகம்: பெண்கள் இயல்பிலேயே பொய் பேசுபவர்கள், ஏமாற்றும் குணம் உடையவர்கள், பேராசை கொண்டவர்கள், கொடூரமான எண்ணம் கொண்டவர்கள்

359ஆம் சுலோகம்: பெண்களை நம்பக்கூடாது

360ஆம் சுலோகம்: பெண்கள் சமூக ஒழுங்குகளை அறியாதவர்கள்

274ஆம் சுலோகம்: எப்படி ஏமாற்றுவது என்பதை பெண்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும்

62 ஆம் சுலோகம்: பெண்கள் ஒருவனிடம் பேசிக்கொண்டிருக்கும்போதே இன்னொருவனின் மீது பார்வை வீசுவார்கள். அப்படியே மூன்றாவதாக ஒருவனை விரும்புவார்கள். ஒருவனை மட்டும் முழு அர்ப்பணிப்போடு விரும்ப அவர்களால் முடியாது

386 ஆம் சுலோகம்: ஆண் குழந்தைகள் இல்லாதவனுக்கு சொர்க்கத்தில் அனுமதி கிடையாது

387 ஆம் சுலோகம்: ஆண் குழந்தைகளை பெறுபவளே உண்மையான மனைவி 

388 ஆம் சுலோகம்: தனக்கு ஆண் வாரிசை அளித்த அரசியாரிடமே அரசன் செல்ல வேண்டும் 

391 ஆம் சுலோகம்: ஆண் குழந்தைகளை பெற்றெடுப்பதே பெண்களின் வேலை 

336 ஆம் சுலோகம்: கணவனின் விருப்பத்துக்கு ஏற்பவே மனைவி நடந்து கொள்ள வேண்டும் 

510 ஆம் சுலோகம்: கணவனை விட உயர்ந்த தெய்வம் மனைவிக்கு வேறு எதுவும் இல்லை

சாணக்கிய நீதிக்கு BK சதுர்வேதி எழுதிய இந்த மொழிபெயர்ப்பை இந்த லிங்கில் இருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம் 

https://drive.google.com/file/d/1_UDRB9mQ9sn7x_XAqHBuYppxrDsgKJL6/view

பெண்களின் மீதான வன்முறை 

ப்ரிகதாரண்யக உபநிஷத்தின் சுலோகம் 6.4.7 சொல்லும் செய்தி: அவள் ஒப்புக்கொள்ளவில்லை என்றால் அவளை சம்மதிக்க வைக்க வேண்டும். எவ்வளவு முயன்றும் அவள் ஒப்புக்கொள்ளாவிட்டால், பிரம்பாலோ கையாலோ அடிக்க வேண்டும்

ஸ்ரீமத் பாகவத்துக்கு இஸ்கான் நிறுவனர் சுவாமி பிரபுபாதா எழுதிய விளக்க நூலில் அவர் தெரிவித்திருக்கும் கருத்து “பெண்களின் மீதான பாலியல் வன்முறையை சட்டம் அனுமதிக்காவிட்டாலும், அவ்வாறு செய்யும் ஆண்களையே பெண்கள் விரும்புகிறார்கள்”

1184ஆம் பக்கம் https://prabhupadabooks.com/pdf/SB4.4.pdf

நூலின் 1184ஆம் பக்கத்தில் இந்த வரிகள் இருக்கிறது. தரவிறக்கம் செய்ய https://prabhupadabooks.com/pdf/SB4.4.pdf

1185ஆம் பக்கம் இருக்கும் வரிகள்: “ஒரு பெண் பருவமடையும் வயதை அடைந்த உடன் அவள் பாலியல் ஆசைகளால் ஆட்கொள்ளப்படுகிறாள். அதனால் அந்த பெண்ணின் தந்தை அவளை பருவமடைவதற்கு முன்பே திருமணம் செய்து வைக்க வேண்டும். அந்த வயதில் அவளை பாலியல் உறவு மூலம் யார் திருப்தி படுத்துகிறார்களோ, அவன் யாராக இருந்தாலும் அவனை அவள் தனது வாழ்வின் இறுதி வரை விரும்புவாள்”

1185ஆம் பக்கம் https://prabhupadabooks.com/pdf/SB4.4.pdf

இந்த வரிகள் ஏதோ ஆபாச புத்தகத்தில் இருக்கும் வரிகள் அல்ல. ஸ்ரீமத் பாகவத்துக்கு இஸ்கான் நிறுவனர் சுவாமி பிரபுபாதா எழுதிய விளக்க நூலில் இருக்கும் வரிகள்!!

129ஆம் பக்கம் இருக்கும் வரிகள். “பெண்கள் பொதுவாகவே பாலியல் உறவில் நாட்டம் கொண்டவர்கள். பெண்களின் பாலியல் ஆசை ஆண்களை விட 9 மடங்கு அதிகம் இருக்கும்” (சாணக்கிய நீதியில் சொல்லப்பட்ட அதே கருத்து. அதில் 8 மடங்கு. இதில் ஒரு படி மேலே சென்று, 9 மடங்கு என்கிறார்)

129ஆம் பக்கம் https://prabhupadabooks.com/pdf/SB4.4.pdf

1184ஆம் பக்கம்: தனது மனைவியை உடலுறவின் மூலம் திருப்தி படுத்தி, அவளுக்கு தேவையான நகைகள், உடைகள் மற்றும் உணவு கொடுப்பவனுக்கு பெண்கள் அடங்கி நடப்பார்கள்

1184ஆம் பக்கம் https://prabhupadabooks.com/pdf/SB4.4.pdf

1975ஆம் ஆண்டு சுவாமி பிரபுபாதா ஆஸ்திரேலியா சென்ற போது அளித்த பேட்டி prabhupadabooks.com வலைத்தளத்தில் இருக்கிறது. அதில் இருந்து ஒரு பகுதி. “பெண்கள் பாலியல் வன்முறையை எதிர்ப்பது போல காட்டிக்கொண்டாலும், உண்மையில் அவர்கள் அதை விரும்புகிறார்கள்”

நம்ப முடியவில்லையா? அந்த பேட்டி ஆடியோ பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அது இந்த வலைத்தளத்தில் இருக்கிறது https://vanisource.org/w/index.php?title=750511_-_Morning_Walk_-_Perth

அதிலிருந்த குறிப்பிட்ட அந்த பகுதி மட்டும் இதோ 

முடிவுரை

இந்த கட்டுரையில் பகிரப்பட்ட தரவுகளின் மூலம், பெண்ணடிமைத்தனம் என்பது நமது நாட்டில் ஏதோ ஒரு சிலரால் செய்யப்படுவது இல்லை என்பதும், அது சாஸ்திரம் என்ற பெயரில் நூல்களில் எழுதப்பட்டு, புராணம் என்ற பெயரில் மக்களிடையே பரப்பப்பட்டு, தீவிர பிரச்சாரங்கள் மூலம் மக்களின் மனதில் ஆழமாக விதைக்கப்பட்டது விளங்கும்.

நிறுவனப்படுத்தப்பட்ட அமைப்புகள் மூலம் இந்த பிரச்சாரம் இன்றளவும் தீவிரமாக நடைபெறுகிறது என்பதை இந்த கட்டுரையில் பகிரப்பட்ட காணொளிகளில் இருந்து தெரிந்து கொள்ளலலாம். இதை எதிர்த்து பிரச்சாரம் செய்ய வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. நாம் அமைதியாக இருந்தால், இந்த பெண்ணடிமைத்தன பிரச்சாரம் வெற்றியடையும் என்பதை நாம் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்.


PDF வடிவில் படிக்க https://drive.google.com/file/d/1zQDgCZufNJ01_1LHZiwAzL_r6GTldk8S/view

பினாமி சோ

3 September 2020 at 06:03
Rare! Jayalalitha as Cho Ramaswamy's pair - Tamil News - IndiaGlitz.com

சோ ராமசாமியை நமக்கு பத்திரிகையாளராக தெரியும். நடிகராக தெரியும். ஆனால் நமக்கு தெரியாத ஒரு முகம், அவர் ஒரு பினாமியாகவும் இருந்தார் என்பது. அதற்கான ஆதாரங்களை, இந்த கட்டுரையில் பார்ப்போம்.

ஒரு நிறுவனத்தின் இயக்குனர்கள் யார் என்கிற விவரங்கள் அனைத்தும் பொது வெளியில் இருப்பவை. யார் வேண்டுமானாலும் http://www.mca.gov.in/ என்கிற அரசு இணைய தளத்துக்கு சென்று இந்த விவரங்களை பார்க்கலாம். ஒரு சில வலைத்தளங்கள், இந்த தகவல்களை தொகுத்து எளிதாக தேட உதவுகிறது. அப்படி ஒரு வலைத்தளத்தில் சோ ராமசாமியின் பெயரில் இதுவரை இருந்த அனைத்து நிறுவனங்களும் பட்டியலிடப் பட்டிருக்கிறது.

இந்த லிங்கில் இருக்கும் வலைப்பக்கத்தில் ஜாஸ் சினிமாஸ், ஸ்ரீ ஜெயா பைனான்ஸ் உள்ளிட்ட பல நிறுவனங்களில் சோ ராமசாமி இயக்குனராக இருந்தார் என்ற தகவலை காணலாம். https://www.thecompanycheck.com/people-profile/cho-srinivasan-ramasamy/associated-company-shares/02226714

Image

இதில் ஒரு விஷயம் தனியாக தெரியும். கிட்டத்தட்ட 8 நிறுவனங்களுக்கு சோ ராமசாமி ஒரே நாளில் இயக்குனராக நியமிக்க பட்டிருக்கிறார். அது 2011ஆம் ஆண்டு, டிசம்பர் 16ஆம் நாள். ஒரே நாளில் இத்தனை நிறுவனங்கள் சோ ராமசாமியின் பெயருக்கு எதற்காக மாற்றப்பட்டன? காரணம் இதோ!

2011 டிசம்பர் மாதம், ஜெயலலிதா சசிகலாவுக்கு இடையில் பிரச்சனை வெடித்து, டிசம்பர் 19ஆம் நாள் சசிகலாவை போயஸ் கார்டனில் இருந்து வெளியேற்றுகிறார் ஜெயலலிதா. அதற்கு 3 நாட்களுக்கு முன்புதான் அத்தனை நிறுவனங்களும் சோ ராமசாமியின் பெயருக்கு மாற்றப் பட்டிருக்கிறது.

2012 மார்ச் இறுதியில் சசிகலா எழுதிய பகிரங்க மன்னிப்பு கடிதத்துக்கு பிறகு அவரை ஜெயலலிதா மீண்டும் போயஸ் கார்டனில் சேர்த்துக்கொண்டார்.

இரண்டு மாதங்கள் கழித்து, அத்தனை நிறுவனங்களுக்கும் சசிகலாவின் உறவினர்களான சிவகுமார் மற்றும் கார்த்திகேயன் கலியபெருமாள் இந்த அத்தனை நிறுவனங்களுக்கும் ஒரே நாளில் இயக்குனர்களாக நியமிக்கப் படுகிறார்கள்.

இந்த வலைப்பக்கத்தில் சிவக்குமார் இயக்குனராக இருக்கும் நிறுவனங்களின் பட்டியல் இருக்கிறது. https://www.thecompanycheck.com/people-profile/sivakumaar/associated-company-shares/02115453

கார்த்திகேயன் கலியபெருமாள் இயக்குனராக இருக்கும் நிறுவனங்களின் பட்டியல் இங்கே இருக்கிறது. https://www.thecompanycheck.com/people-profile/karthikeyan-kaliaperumal/associated-company-shares/02726512

இந்த நியமனங்களில் இருந்து ஒரு விஷயத்தை தெளிவாக புரிந்து கொள்ளலாம். சசிகலாவோ சோ ராமசாமியோ அந்த நிறுவனங்களின் உண்மையான இயக்குனர்கள் அல்ல. அவர்கள் வெறும் பினாமிகளே. உண்மையான இயக்குனர் யார் என்பது இப்போது புரிந்திருக்கும்!

நன்றி


இந்த கட்டுரையை PDF வடிவில் படிக்க https://drive.google.com/file/d/1ey6dx82LbcfgKjziCtjv8I9y0EA3OHx5/view?usp=sharing

நவோதயா உண்மைகள்

26 August 2020 at 13:44

நவோதயா பள்ளிகளை தமிழக அரசியல் கட்சிகள் தடுத்து வருவதாகவும், அதனால் தமிழகத்தின் அனைத்து பள்ளிக்குழந்தைகளுக்கும் தரமான கல்வி கிடைக்காமல் தடுக்கப்படுவதாகவும் ஒரு கருத்து பரப்பப்பட்டு வருகிறது. உண்மை என்ன என்று பார்ப்போமா?

நவோதயா பள்ளி ஆரம்பிக்க மாநில அரசு 30 ஏக்கர் நிலத்தையும் கொடுத்து, பள்ளி கட்டிடம் கட்டி முடிக்கப்படும் வரை, தற்காலிக இட வசதியையும் செய்து கொடுக்க வேண்டும்.

ஏன்… அந்த பணத்தில் தமிழக அரசுக்கு பள்ளிக்கூடம் கட்டி நடத்த தெரியாதா?

நவோதயா பள்ளி 6ஆம் வகுப்பில் இருந்துதான் ஆரம்பிக்கிறது. அங்கு 6ஆம் வகுப்பில் சேர நுழைவுத்தேர்வு எழுத வேண்டும்!

நுழைவுத்தேர்வு வைத்து 0.1% மாணவர்களை மட்டும் தேர்ந்தெடுத்து, மீதி 99.9% எப்படியாவது போகட்டும் என்று இருப்பது மத்திய அரசு மாடல். 

கையில் இருக்கும் நிதியை வைத்து முடிந்த அளவுக்கு எல்லோருக்கும் சமமான கல்வியை கொடுக்க முயற்சி செய்வது தமிழக மாடல். 

சென்ற ஆண்டு நவோதய பள்ளியின் 6ஆம் வகுப்பு நுழைவுத் தேர்வு எழுதியவர்கள் 19 இலட்சத்து 94 ஆயிரம்.

அதில் தேர்வானவர்கள் வெறும் 46 ஆயிரம்! நவோதயா வலைத்தளத்தில் இந்த தகவல் இருக்கிறது https://navodaya.gov.in/nvs/en/Admission-JNVST/JNVST-Result-Statistics/

அப்ப தேர்வாகாத மாணவர்கள் கதி? அவர்களுக்கு உங்கள் “தரமான” கல்வி திட்டத்தில் இடமில்லையா?

நவோதயா பள்ளியின் வலைத்தளத்தில் இருக்கும் இந்த வரியை பாருங்கள்.

“…to select 80 most meritorious students for each JNV…”

ஒரு மாவட்டத்துக்கு 80 மாணவர்களுக்கு மட்டுமே கல்வி வழங்கப்படும்! மீதி மாணவர்கள் தரமான கல்வி கற்க தகுதியற்றவர்கள் என்று அவர்கள் 6ஆம் வகுப்பு படிக்கும் போதே தரம் பிரிக்கப்படுவார்கள்!

தமிழ்நாட்டுல இப்ப என்ன 38 மாவட்டமா? அப்ப தமிழ்நாடு முழுக்க மொத்தம் 3040 மாணவர்களுக்கு மட்டுமே! 

தமிழநாட்டில் சென்ற ஆண்டு +2 தேர்வு எழுதியவர்கள் 8.5 இலட்சம்! இவர்கள் வெறும் 3 ஆயிரம் பேருக்காக ஒரு பள்ளி நடத்தி தமிழ்நாட்டு கல்வித்தரத்தையே உயர்த்த போகிறார்களாம்! அதற்கு தமிழக அரசு நிலம் கொடுக்காததால்தான் எல்லாம் கெட்டுப் போய்விட்டதாம்!

நவோதயாவை அனுமதித்த பிற மாநிலங்களில் என்ன நடக்கிறது தெரியுமா? 4ஆம் வகுப்பு, 5ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வு கோச்சிங் என்ற பெயரில் தினம் வதைக்கப்படும் அவலம் நடக்கிறது.  


சென்ற ஆண்டு தேர்ச்சி பெற்றவர்கள் இவர்கள் என்று குழந்தைகள் படங்களை போட்டு கல்வி வியாபாரம் நடக்கிறது 

கிராமப்புற மாணவர்களுக்காக நவோதயா பள்ளிகள் நடத்தப்படுகிறது என்று கதை விடுவார்கள். எந்த கிராமத்தில் இப்படி கோச்சிங் செண்டர்கள் நடக்கிறது? 

இந்த நுழைவுத்தேர்வில் யார் வெல்வார்கள்? கோச்சிங் செண்டர்களுக்கு பணம் செலவழித்து தங்கள் குழந்தைகளை படிக்க வைப்பவர்கள் வெல்வார்கள். ஏழைகள் இந்த போட்டியில் ஜெயிக்க முடியுமா?

தனியார் பள்ளிகளில் நுழைவுத் தேர்வு நடக்கவில்லையா என்று நீங்கள் கேட்கலாம். தனியார் பள்ளிகள் நமது வரிப்பணத்தில் நடக்கவில்லை. ஆனால் மத்திய அரசு நடத்தும் பள்ளிகள், நமது வரிப்பணத்தில் நடக்கிறது.

மாநில அரசு நடத்தும் எந்த பள்ளியிலாவது சேர நுழைவுத்தேர்வு இருக்கிறதா? இருக்காது! ஏனென்றால் பள்ளிக்கல்வி என்பது உரிமை! அதை மறுக்க அரசுக்கு அதிகாரம் கிடையாது. ஆனால் இங்கே பகிரங்கமாக மத்திய அரசு அடிப்படை பள்ளிக்கல்வியை வழங்க மாணவர்களை முளையிலேயே தரம் பிரிக்கிறது.

நாம் 800 மாணவர்களின் கல்விக்காக செலவு செய்யும் நிதியை, நம்மிடம் இருந்து மத்திய அரசு பிடுங்கி “நாங்கள் 80 மாணவர்களுக்கு மட்டும் தரமான கல்வியை அளிக்கிறோம்” என்கிறார்கள். எது சரியான மாடல்? இருக்கிற நிதியை 800 மாணவர்களின் கல்விக்காக சரி சமமாக பகிர்ந்தளிப்பதா? அல்லது அதில் 80 மாணவர்களை மட்டும் தேர்ந்தெடுத்து, அனைத்து நிதியையும் அவர்களுக்காக மட்டுமே செலவு செய்வதா?


PDF வடிவில் தரவிறக்கம் செய்ய https://drive.google.com/file/d/1SayKod_yBnFXH3Rrcha4MH5JQgz7bGGm/view?usp=sharing

இந்தி ஏன் தேவையில்லை?

26 August 2020 at 13:43
Protesters blacken Hindi portion of Chennai Park railway sign ...


இந்தி எந்த பிரச்சனைக்கான தீர்வு?

இந்தியாவுக்கு ஒரு பொது மொழி தேவை என்ற கருத்தில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. ஒன்றிய அரசு வெளியிடும் ஆணைகள், அறிக்கைகள் மற்றும் செய்திகள் அனைத்து மக்களையும் சென்று சேர வேண்டும் என்றால், அவற்றை அனைத்து மக்களுக்கும் பொதுவான ஒரு மொழியில் வெளியிட்டாக வேண்டும். அந்த வகையில் ஒரு பொது மொழி கட்டாயம் தேவை. மேலும், பல்வேறு மொழிகளை பேசுபவர்கள், இணைந்து பணியாற்றும் போது, அவர்கள் கருத்துக்களை பரிமாறிக்கொள்ளவும், உரையாடவும் ஒரு பொது மொழி தேவைப்படுகிறது.

நம் முன் என்ன சிக்கல்கள் இருக்கிறது என்பதை தெளிவாக வரையறுத்தால்தான் அதற்கான தீர்வுகளை எட்ட முடியும். இந்தியாவுக்குள் ஒரு பொது மொழி தேவை என்பது ஒரு பிரச்சனை. அதே போல், பிற நாடுகளோடு தொடர்பு கொள்ள ஒரு பொது மொழி வேண்டும் என்ற இன்னொரு பிரச்சனையும் இருக்கிறது. ஆகவே, நம் முன்னால் இரண்டு சிக்கல்கள் இருக்கிறது.

  1. இந்தியாவுக்குள் ஒரு பொது மொழி வேண்டும்
  2. உலக நாடுகளுக்குள் ஒரு பொது மொழி வேண்டும் 

உலக நாடுகளுக்கான பொது மொழியாக ஆங்கிலம் வலுவான இடத்தை பிடித்து விட்டது. காரணம், அந்த மொழியில் ஏராளமான நூல்கள் மற்றும் தகவல்கள் தினமும் எழுதப்பட்டு வருகிறது. அறிவியல் நூல்கள், ஆராய்ச்சி கட்டுரைகள் அனைத்தும் ஆங்கிலத்திலேயே எழுதப்படுகிறது. ஆகவே உலகின் மற்ற நாடுகளோடு போட்டி போட, ஆங்கில அறிவும் அவசியம் என்றாகி விட்டது. இதை, இந்தி வேண்டும் என்று சொல்பவர்களும் மறுக்கவில்லை. அதனால்தான் இந்தி பேசுகிற மாநிலங்களிலும் ஆங்கிலம் கட்டாயப்பாடமாக இருக்கிறது.

இந்தி பேசுகிற மாநிலங்களிலும் ஆங்கிலம் கற்கிறார்கள், நாமும் ஆங்கிலம் கற்கிறோம் எனும் போது, இந்தியாவுக்குள் ஒரு பொது மொழி வேண்டும் என்ற பிரச்சனைக்கான தீர்வு எளிதாகி விடுகிறதே! ஆங்கிலம்தானே அந்த பொது மொழியாக இருக்க முடியும்? ஆனால் இங்குதான் புதிதாக ஒரு பிரச்னையை கிளப்புகிறார்கள். உலக நாடுகளோடு தொடர்பு கொள்ள ஆங்கிலம் இருக்கட்டும், ஆனால் இந்தியாவுக்குள் தொடர்பு மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்பதே இந்தியை ஆதரிப்பவர்களின் நிலைப்பாடு! இரண்டு சிக்கல்களுக்கு ஒரு தீர்வு இருக்கும் போது, எதற்காக தனித்தனியாக இரண்டு தீர்வுகள்?

இந்தி பேசும் மாநிலங்களிலும் ஆங்கிலம் கட்டாயப்பாடமாக இருக்கும் போது, அவர்களால் ஏன் நம்மோடு ஆங்கிலத்தில் உரையாட முடியாது? எதற்காக இன்னொரு இணைப்பு மொழி? பள்ளியில் ஆங்கிலம் படித்தாலும் அவர்களால் நம்மோடு ஆங்கிலத்தில் உரையாட முடியாது என்றால், பள்ளியில் இந்தி படித்து விட்டு நம்மால் மட்டும் எப்படி இந்தியில் உரையாட முடியும்?

பொது மொழி வேண்டும் என்ற பிரச்னைக்கு எளிதான தீர்வு இருக்கும் போது, அவர்கள் இந்தியும் வேண்டும் என்ற வாதத்தில் இறுதியாக வந்து நிற்பது “என்ன இருந்தாலும் ஆங்கிலம் அந்நிய மொழி அல்லவா? இந்திதானே நமது மொழி. இந்தி பொது மொழியாக இருந்தால்தானே பெருமை” என்ற புள்ளியில்தான். ஆகவே, அவர்கள் பொது மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்று கூறுவது தங்களின் பெருமைக்காகத்தானே தவிர பிரச்சனைக்கான தீர்வாக அல்ல. இந்தியை தாய்மொழியாக கொண்டவர்களுக்கு வேண்டுமானால் இந்தி பொது மொழி என்பது பெருமையாக இருக்கலாம். பிற மொழியினரை பொறுத்த வரை ஆங்கிலமும் வேற்று மொழிதான், இந்தியும் வேற்று மொழிதான். ஆங்கிலத்தையும் இந்தியையும் ஒரே தராசில் வைத்து எடை போட்டு, ஆங்கிலத்தில் அறிவியல் நூல்கள் அதிகம் இருப்பதை உணர்ந்து அதை தேர்வு செய்கிறோம் நாம்.

இந்தி படிக்க வேண்டும் என்று கூறுபவர்கள் வைக்கும் மற்றொரு வாதம், இந்தி படித்தால்தான் அரசு பணிகள் கிடைக்கும் என்பது. இந்தி படித்தால்தான் குறிப்பிட்ட சில அரசு பணிகள் கிடைக்குமானால் அந்த சட்டத்தை அல்லவா நாம் கேள்வி கேட்க வேண்டும்? இந்த நாட்டில் அனைத்து மொழிகளும் சமம், ஆனால் ஒரு மொழி மட்டும் உசத்தி என்பதை எப்படி ஏற்றுகொள்வது? 

இந்தி படித்தால் வேலைவாய்ப்பு பெருகுமா?

2017ஆம் ஆண்டு, ஒன்றிய அரசு Economic Survey என்ற பொருளாதாரம் குறித்த கணக்கெடுப்பு செய்து ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில் ஒவ்வொரு மாநிலத்திலும் இருந்து பிற மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்து செல்பவர்கள் குறித்த ஆய்வு முடிவை வெளியிட்டது. அந்த அறிக்கை அரசு இணைய தளத்தில் இருக்கிறது. அதன் லிங்க் இதோ https://www.indiabudget.gov.in/budget2017-2018/es2016-17/echap12.pd

இந்த அறிக்கையின் படி, பிற மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்து செல்வதில் முதலிடத்தில் இருப்பது உத்திர பிரதேசம், பீகார், மத்திய பிரதேசம், ராஜஸ்தான்.

அத்தனையும் இந்தி பேசும் மாநிலங்கள்!!

268ஆம் பக்கத்தில் இந்த தகவல் இருக்கிறது. எண்ணிக்கை மைனசில் செல்ல செல்ல, வெளிமாநிலங்களுக்கு செல்பவர்கள் அதிகம் என்று பொருள் 

இந்த புள்ளிவிவரங்கள் மூலம், இந்தி பேசப்படுகிற மாநிலங்களில் இருந்துதான் அதிகமான எண்ணிக்கையில் வேலை தேடி மற்ற மாநிலங்களுக்கு செல்கிறார்கள் என்பது தெளிவா தெரிகிறது. இந்தி சோறு போடாது, உழைப்புதான் சோறு போடும் என்பது தெரிகிறது. இந்திக்கும் பொருளாதார முன்னேற்றத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது புரிகிறது 

மூன்றாவதாக ஒரு மொழியை கற்பதில் என்ன பிரச்சனை?

அன்றாட வாழ்வில் பயன்படுத்தினால், எந்த ஒரு மொழியையும் இரண்டு மாதத்தில் கற்றுக்கொள்ளலாம். அன்றாட தேவைகளுக்கான சொற்களை இரண்டே நாட்களில் கூட கற்றுக்கொள்ளலாம். தேவை என்று வரும் போது மனித மூளை அசாத்திய வேகத்தில் வேலை செய்யும். 

ஆனால், பயன்பட போகிறதா இல்லையா என்று தெரியாமல் ஒரு மொழியை, அதுவும் பள்ளிப்பருவத்தில், கற்பது தேவையற்ற சுமையே. அந்த நேரத்தில் அவர்களை விளையாட அனுமதித்தால், அதுவே குழந்தைகளுக்கு நாம் செய்யும் மிகப்பெரிய உதவி.

தினசரி வாழ்க்கையில் பயன்படுத்தாமல் எந்த மொழியையும் கற்றுக்கொள்ள முடியாது. குழந்தைகள் எளிதில் எந்த மொழியையும் கற்று கொள்வார்கள் என்று கூறுவது, புத்தகத்தின் வாயிலாக கற்றுக்கொள்வதற்கு பொருந்தாது. தினமும் பேச பயன்படுத்தும் மொழியை மட்டுமே குழந்தைகள் எளிதாக கற்றுக்கொள்வார்கள். 

கல்லூரிப்படிப்பை முடித்து வேலையில் இருப்பவர்களுக்கு ஒரு கேள்வி. உங்களில் எத்தனை பேருக்கு கல்லூரி முடிக்கும் போது ஆங்கிலத்தில் சரளமாக பேச முடிந்தது? 12 ஆண்டுகள் பள்ளியில் ஆங்கிலம் படித்தும் நம்மால் ஆங்கிலத்தில் சரளமாக பேச முடிவதில்லை. ஆனால் வேலையில் சேர்ந்து ஆங்கிலத்தில் கட்டாயம் பேசி ஆக வேண்டும் என்ற சூழ்நிலை வரும் போது, சில மாதங்களில் எளிதாக பேச வந்துவிடுகிறது. ஆகவே, ஒரு மொழியை பள்ளியில் படித்தால் அந்த மொழியில் பேச வந்து விடும் என்கிற வாதமே அடிப்படை இல்லாதது.  

தனியார் பள்ளிகளில் இந்தி

தனியார் பள்ளிகளில் இந்தி கற்றுக்கொடுக்கிறார்களே! தனியார் பள்ளிகளில் சேர முடியாத ஏழைக் குழந்தைகள் எப்படி இந்தி கற்பார்கள்? ஆகவே அரசு பள்ளிகளில் இந்தி கற்றுக்கொடுக்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.

சில தனியார் பள்ளிகளில் நீச்சல் கூடத்தான் கற்றுக்கொடுக்கிறார்கள். குதிரை ஏற்றமும் கற்றுக்கொடுக்கிறார்கள். ஏழைக்குழந்தைகள் நீச்சல் கற்க வேண்டாமா? ஆகவே அரசு பள்ளிகளில் நீச்சல் கற்றுக்கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பலாமே! இந்தி கற்றுக்கொள்வதை விட நீச்சல் கற்றுக்கொள்வது முக்கியமாயிற்றே! உயிரை காக்குமே!

அது ஏன் முடியாதென்றால், இருக்கிற நிதியை அதை விட முக்கியமான பாடங்களை கற்றுக்கொடுக்க செலவு செய்ய வேண்டும். நம்மிடம் எல்லையற்ற அளவு நிதி இருக்கிறதென்றால், எல்லாவற்றையும் கற்றுக்கொடுக்கலாம். ஒரு நாளில் 24 மணி நேரம் மட்டுமே இருக்கிறது. ஒரு நாளில் பள்ளியில் மாணவர்கள் இவ்வளவு நேரம்தான் செலவிட முடியும் என்று இருக்கிறது. இருக்கிற நிதியில், கிடைக்கிற நேரத்தில் மாணவர்களின் அடிப்படை கல்விக்கு தேவையானதை மட்டும் கற்றுக்கொடுத்தால் போதுமானது. இந்தி மொழி அந்த அடிப்படை கல்வியில் வராது.

தனியார் பள்ளிகளில் கொடுப்பதை எல்லாம் அரசு பள்ளி மாணவர்களுக்கு கொடுக்க வேண்டுமென்றால், அந்த தனியார் பள்ளிகளில் ஒரு மாணவருக்கு எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படுகிறதோ அவ்வளவு பணத்தை ஒவ்வொரு அரசு பள்ளி மாணவருக்கும் அரசு செலவு செய்தாக வேண்டும். அவ்வளவு நிதி வேண்டுமென்றால் தமிழ்நாட்டின் பட்ஜெட் இப்போது இருப்பதை போல நான்கு மடங்கு அதிகமாக வேண்டும். பட்ஜெட் நான்கு மடங்கு அதிகமாக வேண்டுமென்றால் வரியை நான்கு மடங்கு அதிகரிக்க வேண்டும். செய்வோமா?

மூன்றாவது மொழியை கற்பதில் என்ன ஆபத்து இருக்கிறது? 

பயன்படாமல் போனால் என்ன? ஒரு மொழியை கற்றுக்கொண்டால் குடியா மூழ்கிப் போய் விடும் என்ற கேள்வி எழலாம்.

முதலில் உத்திர பிரதேசத்தில் இந்த ஆண்டு (2020) பொதுத்தேர்வு தேர்வு முடிவுகளை பார்த்து விடுவோம். செய்தியின் லிங்க்:

https://www.thanthitv.com/News/India/2020/06/30091831/1481674/Uttar-Pradesh.vpf

மொத்தம் 7.95 இலட்சம் மாணவர்கள் இந்தி பாடத்தில் தோல்வி அடைந்தனர்! இந்தி பேசும் மாநிலத்திலேயே இத்தனை மாணவர்கள் இந்தியில் தோல்வி அடைந்திருக்கிறார்கள்.

அடுத்ததாக குஜராத் மாநில ப்ளஸ் டூ தேர்வு முடிவுகளை பார்ப்போம்.

செய்தியின் லிங்க்:

https://www.hindustantimes.com/education/gseb-12th-arts-commerce-result-2020-live-updates-gujarat-board-hsc-result-check-topper-list-pass-percent-latest-updates/story-GJOc8Y3AFGrnyEplvMjCfK.html

இந்தி பாடத்தில் தேர்ச்சி அடைந்தவர்கள் 66.71 விழுக்காடு. தோல்வி அடைந்தவர்கள் 32.29 விழுக்காடு! அத்தனை மாணவர்களின் வாழ்விலும் ஒரு ஆண்டு வீண்! தேர்வில் தோல்வி அடையும் மாணவர்களில் பெரும் பகுதியினர் படிப்பை பாதியில் நிறுத்துகின்றனர்! 

தமிழ்நாட்டில் நிலைமை இந்த அளவுக்கு மோசமாக இருக்காது என்று வைத்துக்கொள்வோம். சென்ற ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி தேர்வு எழுதியவர்களின் எண்ணிக்கை 9.7 இலட்சம். அதில் 5% மாணவர்கள் இந்தி பாடத்தில் தோல்வி அடைகிறார்கள் என்று வைத்துக்கொண்டால் கூட, 48 ஆயிரத்து 500 மாணவர்கள் தோல்வி அடைவார்கள். 

அப்படி மாணவர்களின் ஒரு ஆண்டு படிப்பை பணயம் வைத்து படிக்கிற அளவுக்கு இந்தியில் என்ன இருக்கிறது? உயர்ந்த இலக்கியங்கள் இருக்கிறதா? அல்லது ஆங்கிலம் போல வேறு எந்த மொழியிலும் இல்லாத அறிவியல் புத்தகங்கள் இருக்கிறதா?

எதிர்காலத்துக்கு தேவைப்படுகிற கணக்கு, அறிவியல், ஆங்கிலம் போன்ற பாடங்களையே அனைத்து மாணவர்களும் எளிதாக கற்று தேர்ச்சி அடையும் நிலையை நம் நாடு இன்னும் எட்டவில்லை. இந்த நிலையில் கூடுதலாக ஒரு சுமை தேவையா?

வேற்று மாநிலத்தவரை அவர்கள் தாய்மொழியில் கற்க விடாமல் தடுக்கிறோமா?

தமிழகத்தில் எந்த மொழியையும் கற்பதற்கு தடை இல்லை. தமிழகத்தில் மொழிவாரி சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் பகுதிகளில், அவர்கள் தாய்மொழியில் கல்வி கற்கும் வசதி பல ஆண்டுகளாக இருந்து வருகிறது.  

2016ஆம் ஆண்டு ஒன்றிய அரசு வெளியிட்ட மொழிவாரி சிறுபான்மையினருக்கான 52வது அறிக்கையில் இதை பற்றிய புள்ளிவிவரங்கள் இருக்கிறது. அறிக்கை அரசு வலைத்தளத்தில் இருக்கிறது. அதன் லிங்க்: http://www.minorityaffairs.gov.in/sites/default/files/2.%2052nd%20Report%20English.pdf

அறிக்கையின் 136ஆம் பக்கத்தில், தமிழகத்தில் இருக்கும் சிறுபான்மை மொழிகளுக்கான பள்ளிகளின் எண்ணிக்கை, மற்றும் அதில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை பற்றிய விவரம் இருக்கிறது. அதில் தெலுங்கு, உருது, மலையாளம், கன்னடம், இந்தி, இவ்வளவு ஏன், குஜராத்தி மொழியில் கல்வி கற்பிக்கும் பள்ளிகள் கூட இருப்பதை காணலாம்.
ஓசூர் பகுதிகளில், பல அரசு பள்ளிகளில் தெலுங்கு மற்றும் கன்னட வழி கல்வி பயிற்றுவிக்க படுகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில், சில அரசு பள்ளிகள் மலையாளம் பயிற்றுவிக்க படுகிறது.

இது தவிர, புலம்பெயர் தொழிலாளர்களின் குழந்தைகள் அவர்கள் தாய்மொழியில் கல்வி கற்க உதவி வழங்கப்படுகிறது. பெங்காலி, ஓடியா மொழிகளிலேயே அவர்களுக்கு பாட புத்தகம் வழங்கப்படுகிறது. 

இந்த தகவல் தமிழக அரசு வெளியிட்ட கல்விக் கொள்கை ஆவணத்தில் இருக்கிறது. அதன் லிங்க்: https://cms.tn.gov.in/sites/default/files/documents/schooledu_e_pn_2016_17.pdf

இந்தியை தாய்மொழியாக கொண்டவர்களுக்கு, தமிழ்நாடு பாடநூல் நிறுவனமே இந்தியில் புத்தகங்களை அச்சடித்து வழங்குகிறது!

புத்தகத்தின் லிங்க்:  http://tnschools.gov.in/media/textbooks/5th_Hindi_Final_19-03-19.pdf

இதில் இருந்தே தெளிவாகி இருக்கும். மாற்று மொழியினர் தங்கள் மொழியை கற்க தமிழகம் என்றுமே தடையாக இருந்ததில்லை. ஒரு படி மேலே போய் உதவி செய்து வருகிறது. ஆனால், திணிக்க நினைத்தால், எதிர்ப்பு கிளம்பும்!

நம்மை இந்த அளவுக்கு இந்தியை படிக்க சொல்லி வற்புறுத்துபவர்கள், அவர்கள் மாநிலங்களில் மொழிவாரி சிறுபான்மையினர் தங்கள் மொழியை கற்க என்ன வசதி செய்து கொடுத்திருக்கிறார்கள் என்று பார்ப்போமா?

அதே மொழிவாரி சிறுபான்மையினருக்கான 52வது அறிக்கையில், 50ஆம் பக்கத்தில், உத்திர பிரதேசத்தின் இலட்சணத்தை காணலாம். 

எந்த வசதியும் செய்து கொடுக்கப்படவில்லை!! இதுதான் இந்தி பேசும் மாநிலங்களின் இரட்டை வேடம். இத்தனை ஆண்டுகளாக, பிற மாநிலங்கள் மூன்று மொழி கற்க வேண்டும் என்று சட்டம் போட்டவர்கள், தங்கள் மாநிலங்களில் இது வரை மற்ற மாநில மொழிகளை மூன்றாவது மொழியாக கற்க அனுமதித்தார்களா? இல்லை!

மூன்றாவது மொழியாக எந்த மொழியையும் தேர்வு செய்யலாம் என்ற புதிய உருட்டு 

தற்போது மூன்றாவது மொழியாக எந்த மொழியை வேண்டுமானாலும் தேர்வு செய்து கொள்ளலாம் என்று சமரசம் செய்தது போல் காட்டிக்கொள்கிறார்கள். ஆனால், நடைமுறையில் அது நடக்காது என்று தெரியும். ஒரு வகுப்பில், ஒரு மாணவன் மட்டும் பெங்காலி மொழி கற்க விரும்பினால், அந்த மாணவனுக்காக மட்டும் ஒரு ஆசிரியரை நியமிக்க முடியுமா? குறைந்த பட்சம் 20 மாணவர்கள் வேண்டும், 30 மாணவர்கள் வேண்டும் என்று புதிதாக ஒரு சட்டத்தை கொண்டு வருவார்கள். கடைசியில், அனைத்து மாணவர்களும் இந்தி மொழியையே கற்கும் நிலைமை வரும்.

மூன்றாவது மொழியாக எந்த மொழியையும் தேர்வு செய்ய தேவையான அளவு நிதியை ஓதுக்குவோம் என்று ஒன்றிய அரசு கூறுமேயானால், அதை முதலில் ஒரு இந்தி பேசும் மாநிலத்திலோ, குஜராத்திலோ செயல் படுத்தி காட்டட்டும்.  

குஜராத்தில் அடிப்படை கல்வியை கற்றுக்கொடுக்கவே தேவையான அளவு ஆசிரியர்கள் இல்லை. உபி, பிகார் மாநிலங்களில் இன்னும் மோசம். இரண்டு மொழிகளை கற்றுக்கொடுக்கவே நிதியை ஒதுக்காத அரசுகளா அத்தனை மொழிகளுக்கு நிதி ஒதுக்க போகிறது? இருக்கிற நிதி அனைத்தும் இந்தி சமஸ்கிருதத்துக்கே செலவிடப்படும்!

இந்தி பேசும் மாநிலங்களில், தென்னிந்திய மொழியை கற்க மாட்டார்கள். சமஸ்கிருதத்தையே விரும்புவார்கள். காரணம், இந்தி பேசுபவர்களுக்கு, சமஸ்கிருதம் படிப்பது எளிது. அவர்களுக்கு மூன்றாவது மொழி படிப்பது எளிதாகி விடும். ஆனால், தமிழகத்து மாணவர்களுக்கு சுமையாகி விடும்.

இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி. 

இந்தி பேசப்படும் மாநிலங்களில் சமஸ்கிருதம்.

இதுவே அவர்கள் திட்டம்.

பிற மொழிகளுக்கான ஆசிரியர்களை தேர்ந்தெடுக்க தேவையான அளவு நிதியை ஒன்றிய அரசு ஒதுக்காது என்பதற்கு இதோ ஒரு எடுத்துக்காட்டு.

செம்மொழிகளுக்கு கடந்த 3 ஆண்டுகளில் செலவிடப்பட்ட நிதி எவ்வளவு என்ற கேள்விக்கு, 3.2.2020 அன்று மக்களவையில் ஒன்றிய அமைச்சர் பிரகலாத் சிங்க் படேல் அளித்த பதில் இது. மக்களவை வலைத்தளத்தில் இருக்கிறது. லிங்க் http://164.100.24.220/loksabhaquestions/annex/173/AU171.pdf 

மூன்று ஆண்டுகளுக்கும் செலவிடப்பட்ட மொத்த தொகை

சமஸ்கிருதம் – 643.84 கோடி 
தமிழ்             –    22.94 கோடி

644 கோடிக்கும் 23 கோடிக்கும் இடையே கடலளவு தூரம் இருக்கிறது. இதுதான் இவர்கள் பிற மொழிகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவம். ஒன்றிய அரசின் தமிழ் மொழி பாசமெல்லாம் பேச்சளவில் மட்டுமே… செயலில் இருக்காது என்பதை அமைச்சர் கொடுத்த இந்த புள்ளிவிவரத்தில் இருந்தே புரிந்து கொள்ளலாம்.

இந்தி திணிக்கப்படுவதின் உள்நோக்கம் என்ன?

  1. குறிப்பிட்ட அந்த நான்கு மாநிலங்களின் ஓட்டு! அந்த நான்கு மாநிலங்களில் இடங்களை அள்ளினால், மத்தியில் பெரும்பான்மை ஆட்சி அமைப்பது எளிது 
  2. இந்தியா முழுக்க ஒற்றை கலாச்சாரம் கொண்டு வர வேண்டும் என்ற ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் குறிக்கோள்.
  3. அனைத்து மாநிலங்களிலும் தேர்தல் பிரச்சாரம் எளிதாகி விடும்
  4. கல்வியை முழுக்க ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு செல்ல முதல் படி  

கட்டுரைச் சுருக்கம் 

  1. இந்தி பேசுபவர்களும் ஆங்கிலம் கற்பதால், ஆங்கிலம் பொது மொழியாக இருப்பதே எளிதான தீர்வு.
  2. இந்தி மொழிக்கும் பொருளாதார முன்னேற்றத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதற்கு இந்தி மொழி பேசும் மாநிலங்களின் பொருளாதார பின்னடைவே எடுத்துக்காட்டு 
  3. புத்தகங்களில் படிப்பதன் மூலம் ஒரு மொழியை கற்றுக்கொள்ள முடியாது. அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தினால் மட்டுமே கற்றுக்கொள்ள முடியும்
  4. மூன்றாவது மொழி மாணவர்களுக்கு ஒரு தேவையற்ற சுமை. ஒரு ஆண்டு பின்தங்கும் ஆபத்து இருக்கிறது. இடைநிற்றல் அதிகரிக்கும் ஆபத்து இருக்கிறது.
  5. தமிழகத்தில் பிற மொழியினர் அவர்கள் மொழியை கற்க வசதி இருக்கிறது.
  6. மூன்றாவது மொழியாக எந்த மொழியையும் கற்கலாம் என்பதை நடைமுறைப்படுத்துவது இயலாது.

நன்றி


❌