*-சிறுகதை “தனித்திருப்பவன்“ - தாய்வீடு இதழ் ஜூன் 2025 - பிரசுரம்
எனக்கு வயது எழுபது நெருங்குகிறது. இந்தத் தருணத்தில் என் மகனோடு
இருப்பது எனக்குப் பொருந்தி வரவில்லை. நீயா
எதாச்சும் நினைச்சுக்கிறே...என்கிறான் அவன். மகனின் மருமகளின் வாழ்க்கை முறை என்னுடைய
இளம் பிராய வாழ்க்கை முறையிலிருந்து எவ்வளவோ
சிறுகதை “ஒரு
சொல் கொல்லும்” தினமணி கதிர்-25.05.2025 பிரசுரம்
சிவநேசன்
தன் அறையில் அமர்ந்து கொண்டு ஜன்னல்வழி வெளியே
பார்த்துக் கொண்டிருந்தார். குறிப்பிட்டு ஒன்றைப் பார்க்கிறோம் என்றில்லாமல் அங்கும்
இங்குமாக அவர் பார்வை அலைந்து கொண்டிருந்தது. அது தன் நிலையற்ற மனதைக் குறிப்பதாக அவருக்குத்
தோன்றியது. ஒரு தண்ணீர் லாரி வர, எதிரே ஒரு பள்ளி வாகனம்
சிறுகதை கணையாழி மே 2025 பிரசுரம்
“தூ(பூ)ங்கா
நட்பு” மாலையில் அந்தப் பூங்காவுக்குச்
செல்வோமா வேண்டாமா என்கிற அளவுக்கு யோசிக்க ஆரம்பித்து விட்டார் ஜம்புகேஸ்வரன். தான்
குடியிருக்கும் அந்தப் பகுதியில் வேறு எங்கு பூங்காக்கள் உள்ளன என்று அவர் மனம் தேட
ஆரம்பித்திருந்தது. அங்கு போனாலும் எப்படியிருக்குமோ?. ஒரே மனக் கிலேசங்கள் அங்கும்
உலா வராது என்பது என்ன நிச்சயம்?
&
சிறுகதை பேசும் புதிய சக்தி - மே 2025 இதழ் பிரசுரம்
“பின்னோக்கிய அதிர்வுகள்“
இப்போது என்ன செய்வது என்று யோசிக்க ஆரம்பித்திருந்தது பிரம்மராஜனின்
மனம். முதலிலேயே இந்த யோசனை தோன்றாமல் போய்விட்டதே என்றும் வருந்தியது. அவசரக் குடுக்கை
என்று தன்னைத்தானே திட்டிக் கொண்டார்.
&
பேசும் புதிய சக்தி - ஏப்ரல் 2025 இதழில் “கடைநிலை“ நாவல் அறிமுகம்
சிறுகதை தளம் - காலாண்டிதழ் - -ஜனவரி - மார்ச் 2025 பிரசுரம் “சான்று ”அந்தம்மா தன் ரெண்டு குழந்தைகளையும் பாண்டிச்சேரில தன் தாயார்ட்ட
விட்டுட்டு இங்க வேலை பார்க்கிறதாக்கும்…- அஞ்சனா பரிதாபப்பட்டதுபோல் கூறினாள்.
அடப்பாவமே…கேட்டியா நீ? ஒராளை விட மாட்டே
போலிருக்கு…!
அந்தப் பொண்ணை எனக்குப் பிடிக்கும். குழந்தை
மூஞ்சி…! அடிக்கடி தபால் கொடுக்க வருதே…ன்னு
சிறுகதை (தாய் வீடு மாத இதழ் - மார்ச் 2025 பிரசுரம்)
“இடிச்ச புளி”
உம்மணாம் மூஞ்சி… - அடுப்படியில் தன் வேலைகளைப்
பார்த்துக் கொண்டே கோபத்தோடு இந்த வார்த்தைகளை உதிர்த்தாள் யாமினி. உரிமையோடு எப்படி வேண்டுமானாலும் திட்டுவாள். வெளிப்படையாக அப்படித்
சிறுகதை ஆவநாழி -ஜனவரி-பிப்ரவரி 2025 இதழ் பிரசுரம்
“காளான்கள்…!”
ஆளாளுக்கு
வந்து நின்றார்கள். எங்கிருந்துதான் ஃபோன் எண் கிடைக்குமோ? அதுவும் எட்டுப் பேரில்
அவர்களுக்கு நான்தானா கிடைத்தேன்? ஒரு வேளை அந்தம்மா கொடுத்திருக்குமோ? வேறு யார்?
அவர கான்டாக்ட் பண்ணுங்க….!
அதுதான் சொல்லியிருக்கும்.
சிறுகதை - தாய்வீடு மாத இதழ் பிப்ரவரி 2025
“நாளும்
பொழுதும் நம் கையில் இல்லை”'நாலு கிலோ கோதுமை இந்தப்
பையில...இது ரசப் பொடிக்கு...அரைச்சு வைக்கிறீங்களா?"
சிறுகதை தினமணி கதிர் 29.12.2024 பிரசுரம்
“நெத்தியடி”
எதையாவது சொல்லிட்டே இருப்பியாப்பா? –
எதிர்பாராத இந்தக் கேள்வியால் துணுக்குற்றுப் போனார் நித்யானந்தம். இதுவரை அவனிடமிருந்து
இப்படி ஒரு கேள்வி வந்ததில்லை.
&
சிறுகதை தினமணிகதிர் 10.11.2024 ல் வெளி வந்த சிறுகதை குவிகம்-சிவசங்கரி இலக்கியச் சிந்தனைக் குழுமத்தின் நவம்பர் 2024 மாத சிறந்த சிறுகதையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
“பால் மனக் கணக்கு”
&
“தவறிச் செய்த தவறு”-சிறுகதை - கணையாழி டிசம்பர் 2024
சார்…தொட்டி
நிரம்பி வழியுது…நிப்பாட்டுங்க….-பக்கத்து வீட்டு அம்மாள் கத்திய சத்தம் யார் காதிலும்
விழுந்த மாதிரித் தெரியவில்லை. எல்லோரும் அவரவர் குச்சிலுக்குள் அடைந்து கிடக்கும்போது
எப்படி விழும்.? இவருக்கு மட்டும் விழுகிறதே…அதுதான் துரதிருஷ்டம்…!