Normal view

Received before yesterdayநுட்பம் கவிதை இதழ்

கவிதைக்காரன் இளங்கோ கவிதைகள்

ஒரு வழியாக.. சந்தேகத்தை இடவலமாக அதக்கி வைத்திருக்கும் கன்னக் கதுப்பில் ஓராயிரம் அர்த்தக் குமைச்சல் ஊறுகிறது எதுவும் பயன்படப் போவதில்லை நீயும் நானும் ஒப்புக்கொள்ள விரும்பும் சமரசத்தை தொலைத்துவிட்டேன் பழியை எண்ணி மனதை அஞ்சி பெருங்காட்டின் இடைவழியில் சரித்து உருட்டித் தள்ளும் பாதாள அடுக்குகளில் மோதி பிளந்தது யோசனையின் பின்மண்டை தலைகீழ் கோணத்தை நேர்ப்படுத்திக்கொள்ள நான் எனக்கு ஒரு தூக்க மாத்திரையைப் பரிந்துரை செய்கிறேன் கனவுகளின் இரகசிய கதவுகள் திறந்ததும் வெளியேற வேண்டியது முதலில் தன்மானம் அல்ல […]

The post கவிதைக்காரன் இளங்கோ கவிதைகள் appeared first on Nutpam.

பாலைவன லாந்தர் கவிதைகள்

கென்யா மூத்தக்குடி காகுரு அந்த பூர்வக்குடி வாத்தியத்தை இசைப்பதை நிறுத்து உன் தசைகள் துடிக்க வாசிக்கும் போது ஆப்பிரிக்க காற்று மணம் மாறுவதைக் கவனி எதற்கான எச்சரிக்கை இது எட்டு திசையிலிருந்தும் தடதடவென நிலம் அதிர ஓடிவருகின்றன காட்டெருமைகள் விரிந்தக் காதுகளுடைய யானைகள் சிங்கங்கள் சிறுத்தைகள் புலிகள் வரிக்குதிரைகள் ஒட்டகச் சிவிங்கிகள் இன்னும் எண்ணற்றவை ஓஹ் என்ன மாயை இது இந்த இசைக்கும் இவைகளுக்கும் என்ன பரிமாணம் நைரோபி எத்தனை பழைய கிழவி நீ வெள்ளைக் கூந்தலுக்குப் […]

The post பாலைவன லாந்தர் கவிதைகள் appeared first on Nutpam.

ரேவா கவிதைகள்

  இசையும் காலம் மனமெங்கும் அலையத் தொடங்கும் யோசனையின் கால்கள் ஒவ்வொன்றும் காலத்தின் வெவ்வேறு தொடர்ச்சிக்கு இழுத்துப்போகிறது சொல் முந்த வழித் திறந்த காலம் இறவாப் பொழுதாகிக் கனக்கிறது நிகழும் மௌனத்தை எடையேற்றி நியாபகத்தின் பொத்தலில் நிறையும் கணக்கற்ற நானுக்கோ தந்துதவ நல்ல சொல் தேடித் தேடி ஓடுகின்ற கால்கள் ஒயுமிடம் மாயும் மனம் எங்கு உண்டு நானின் வளையா நான் மூங்கில் மனம் உடைத்துத் துளையிட்ட விசையில் இசையும் பொழுதால் நிகழ்கிறது ஓயும் காலுக்கான காத்திருப்பு.. […]

The post ரேவா கவிதைகள் appeared first on Nutpam.

சமகால வியட்நாமிய கவிதைகள்

ஹோன் டோன் (Hoan Doan) நீங்கள் எதை வெளிப்படுத்த விரும்புகிறீர்களோ அதைவிட வெளிப்பாடு முக்கியமானது – என்று சொல்லும் ஹோன் டோன் தன் உடலையே கலைப்படைப்பாக மாற்றுகின்ற Cai No  என்று காணொளி வடிவத்தில் புதுமையான வகையில் ஒரு கலை படைப்பை உருவாக்குவதில் ஈடுபாடு கொண்ட கலைஞர். Cai No என்பதற்கு (The Slavery) அடிமைத்தனம் என்று பொருள். அந்தகைய புதுமையான கலை வழியாக பெண்ணுடல் மீது திணிக்கப்பட்டுள்ள வலியை பாடுகளை பிரச்சனைகளை மாறுபட்ட கோணங்களில் உடலோடு […]

The post சமகால வியட்நாமிய கவிதைகள் appeared first on Nutpam.

சவிதா கவிதைகள்

நகர மறுக்கும் இசை. என் பாதைகள் தவறிவிட்டன. நேரான பாதையில் நடப்பதாக லயித்திருந்தேன். தவறியதற்கு நான் பொறுப்பல்ல. உன் இசைதான் காரணம். தேர்ந்த இசைக்கருவிகளுக்கு செவிசாய்த்த நீ என் தடுமாற்றங்களை மறந்து விட்டாய். என் பாதைகளின் முட்களும், கற்களும் உன் பயணத்தைத் தடுக்க அனுமதிப்பதில்லை நான். பாதங்களில் வழியும் குருதியின் சிவப்பில் நிறைபவளுக்கு ஈடென தர உன் வாழ்வில் ஏதும் மிச்சமில்லை. நிறைவாழ்வு உம்முடையது. வாழ்க. மங்கலமுடைத்து வாழ்க. பொலிக. நான் இருளில் ஒளிவேன். முரடான கற்களுக்குள் […]

The post சவிதா கவிதைகள் appeared first on Nutpam.

நிம்மி சிவா கவிதைகள்

1) நொடி உணர்வுகளின் அழிவு நடைக்குள் சிதறும் நிழல்களைப் போல் மறைந்துருக்கும் குரல்கள் சலனமற்ற துளியாய் சில வரிகள் மட்டும் நீளுகின்றன மணலில் புதைந்து போன வெளிச்சத்தில் பிரவாகமெடுக்கும் சொற்களின் ஓரங்களில் பதிந்த ரகசியங்கள் பிம்பமாக ஜொலிக்கின்றன நீரோடைகள் உதிர்த்த கனலாய் கண்களின் எல்லை பிய்க்கும் தருணம் தோளில் பஞ்சாயுதம் சுமந்ததுபோல் பாதங்களில் தீக்கதிர்கள் சுடுகின்றன காற்றில் சுழன்றுகொண்டிருக்கும் தடுமாறும் இரவுகள் வேரற்ற நினைவுகளின் நிழலாய் பின்தொடர்கின்றன காற்றில் பழுத்த நினைவுகளை நான் கைப்பற்றும்போது அவற்றின் விதைகள் […]

The post நிம்மி சிவா கவிதைகள் appeared first on Nutpam.

வருணன் கவிதைகள்

வாழ்க்கை போலொரு விளையாட்டு விதிகளற்ற விளையாட்டு வாழ்க்கையைப் போல இருக்கும். சமன்செய் நீளங்களை ஆழங்களை அகலங்களை நீட்டல்களை குறைத்தல்களை கணிக்கிற பயிற்சியே அன்றாடத்தின் அதிமுக்கிய பணி சரி,எதனோடு அல்லது எவரோடு சமன்செய்தல்? ஷூ… சும்மாயிரு. தொணதொணக்காமல்… அலுத்துக் கொள்ள என்ன இருக்கிறது? சலிப்பின் கசப்பேறிய பொழுதுகளை மூடி வைத்திட இழுத்து வந்து கொண்டே இருக்கிறது அந்தி கொஞ்சம் பொறு கொஞ்சம் பொறு அச்சு எதுவெனும் ரகசியம் தெரியாத (ரகசியமாம் பெரிய…) ஆனால் அதற்குள் கச்சிதமாய் பொருந்திக் கொள்கிற […]

The post வருணன் கவிதைகள் appeared first on Nutpam.

ஜார்ஜ் ஜோசப் கவிதைகள்

1. மறத்தல் ஒரு இனிய சுபாவமாகத் திரள்கிறது கதவுகளின் இடுக்குகளில் இருந்து ஏங்கும் தந்தையைக் கட்டிலின் விளிம்பிலிருந்து விழப் பார்க்கும் அன்னையை கோபத்தின் முடிச்சிலிருந்து விலகமுடியா உற்றவளை என எல்லோரையும் மறக்க முடிகிறது எதிரே சில சொற்கள் இருந்தால் அதிலும் அது புதியது என்றால் தன்னையே மறக்கவும் வாய்க்கிறது இவ்வினிய சுபாவத்திற்காகவே தினமொரு தந்தையை பொழுதொரு அன்னையை கணமொரு காதலை அழியச்செய்து லயிக்கிறேன். 2. யாரும் படிக்காத கவிதையைப் புரட்டுகிறது ஒரு கை யாரோடும் போதாச் சொற்களோடு […]

The post ஜார்ஜ் ஜோசப் கவிதைகள் appeared first on Nutpam.

ராஜேஷ் வைரபாண்டியன் கவிதைகள்

1.பூனைகள் அம்மாவுக்கு பூனைகளே உலகம். அப்பாவின் உலகிற்குள் நுழைந்துவிடாத பூனைக்குட்டிகளை அம்மா வளர்த்தாள். அப்பா வீடு நீங்கும் பொழுதுகளில் முதலில் வரவேற்பறைக்குள் வந்தது. பின்னொரு நாளில் படுக்கையறைக்குள். பூனைக்காரி என்று ஊர் சொன்னபோதும் அம்மா பூனைகளுடன் வசிப்பதை நிறுத்தவில்லை. ஊர் உறங்கும் ஓர் இரவில் அப்பா மறைந்து போனார். அப்பாவின் உடலை ருசித்த பூனைகள் அன்றிரவு அவரது உயிரையும் ருசித்தன என்பது யாரும் அறிந்திடாத ரகசியம். 2.மாற்றம் யானைகளைக் கொல்வது எளிதாகிவிட்ட இக்காலத்தில்தான் எறும்புகள் தங்களுக்கு தந்தங்கள் […]

The post ராஜேஷ் வைரபாண்டியன் கவிதைகள் appeared first on Nutpam.

ந.பெரியசாமி கவிதைகள்

நீங்களும் வந்திருக்கலாம். பாத்திரமொன்றில் கொஞ்சுண்டு கடலை நிறைத்து வீட்டில் வைத்திருந்தான். பாத்திரம் பாசியை வளர்க்க அலைகளில் கால் நனைத்து விளையாட தினசரி வந்துகொண்டு இருக்கிறார்கள். ******** மணம் அறிந்திராததோ புழங்கியதோ இல்லாமல் இல்லை புதிதானதைப் போன்று இருப்பதன் காரணம் அறிந்ததுதான் பிடித்தமானதாகிவிட்டது நீல நிறத்தவள் நினைவிலும் நிஜத்திலும் உடனிருக்க உருக்கொள்ளும் புழுதியின் மணம். ******** என்செய்ய அதிகாரம் யார் கைகளில் இருக்கிறது என்பதை அறியாதவர்கள் அல்ல. என்செய்ய ஏதும் செய்ய இயலாது எதிர்படுகையில் நாணலாகி கடந்திடுகிறோம் இதுகூட […]

The post ந.பெரியசாமி கவிதைகள் appeared first on Nutpam.

கவிதைக்காரன் இளங்கோ கவிதைகள்

என்னிடமிருந்தும் இல்லாமல்.. துயரம் அழுந்தும்போது தோள்கள் இளகி வாகாக ஒரு நினைவைத் தாங்கிக் கொள்கின்றன நிபந்தனைகள் எதுவும் அவசியமாகவில்லை ஒரு நேர்க்கோட்டின் நடுவழியில் பதற்றத்தோடு உதறிச் செல்ல வைராக்கியம் மிக்க சொற்களை கைவசம் வைத்திருக்கிறேன் புடைத்து வீங்கிய சூழ்நிலைகளின் அசௌகரிய இடர்களை மீறி உருண்டு முனை மழுங்கிய அவமானங்களின் வெப்பம் அமிழ்கிறது தன்னிரக்கத்தின் குமிழ் உடைய மெல்ல மெல்ல தனிமையின் அடிமடியில் இன்னுமோர் முறை நீயுன்னையே அழைத்துப் பேசியிருக்கலாம் விடுபட்ட பாதையின் திசையில் நைந்து கிடக்கிறது ஒரு […]

The post கவிதைக்காரன் இளங்கோ கவிதைகள் appeared first on Nutpam.

ரேவா கவிதைகள்

குரல் பாதை நினைத்துக்கொள்ளும் தருணங்களிலிருந்து தப்புகிற வலிக்கு நுழைத்துக் கொண்ட மலையின் வழி களைத்து வருகிறது ஒரு பெரும் குரல் எதிரொலி எதிர்பட சுமக்கும் காற்றுக்குள் தட்டுப்படுகிறது உன் அசைவுக்கு இசையா மௌனம் மரி மூளை மடிப்பின் முனை மடங்க பழுப்பேறியிருக்கிறது உன் பாத்திரம் யாசகா ஒரு மந்திரமென என்னை உச்சரி வரம் தர வளர்க்கிற காளியின் உரு என் பிச்சை பொருள் சேர் பிறப்பில் நழுவும் துளிக்குள் வதம் செய்ய இடுகிறேன் ஒரு சொல்லை

The post ரேவா கவிதைகள் appeared first on Nutpam.

பத்மகுமாரி கவிதைகள்

இடிந்து சரியும் நிகழ் நிரந்தரம் இருப்பென்பதை அசைத்துப் பார்த்திடும் கடப்பாறை இந்நொடிக்குள் தொலைய கதவடைக்கின்ற எதனோடும் ஒரு முழங்கையளவு தூரம் வகித்துக்கொள்கிறேன் அந்தரத்தில் ஆடும் கேள்விக்குறிகள் வளர்ந்து பெருகுகின்றன பாதுகாப்பு பெட்டிக்குள் அடைக்கலம் தந்திடும் துயிலின் சாவியை கையேந்துகிறது மனம் சாட்சி சொல்ல மறுக்கிற மூளையின் சிரிப்புக்கு அகன்ற பற்கள் உழன்று களைக்கிற உடலின் தேய்மான நெடிக்குள் ஒளிந்திருக்கிறது நிரந்தரமற்ற ஓட்டம் °°° உதிரும் பொழுதுகள் காலியான ஜாடிக்குள் நிரம்பும்படி நிர்ப்பந்திக்கிறார்கள் நசுங்கும் யோசனையை ஊசிமருந்தில் திணிக்கும் […]

The post பத்மகுமாரி கவிதைகள் appeared first on Nutpam.

வருணன் கவிதைகள்

01 வீடு திரும்பல் சூன்யத்துள் அலைந்து திரிந்து அலுத்த சுடர் விளக்கேற்றும் போதெல்லாம் திரி நுனியில் இளைப்பாற அமருகிறது பசலையில் தவிக்கும் சூன்யம் காற்றைத் தூதனுப்ப அலைந்து அலைந்து சமரசம் இவர்களின் ஊடலுக்கிடையில் அலைவுறுகிறோம் நானும் அறையும் சகலமும் 02 அற்பப் பிறவி மென்தூரலாய்த் துவங்கி அடைமழையின் சாயலை வரிந்து கொண்டபோது ஈரமாதலுக்குத் தயங்கி எதிரெதிராய் அண்டி நின்றிருந்த அத்தனை கண்களும் நிலை கொண்டது சாவதானமாய் நனைந்து கொண்டே நடந்த வீதியோர நாயொன்றின் மீது இருபுறமும் அப்போது […]

The post வருணன் கவிதைகள் appeared first on Nutpam.

காதல் கோலங்கள்

1 ஒளிந்து விளையாடுவது எனக்குக் கொஞ்சம் பிடிக்கும் உனக்கு ரொம்பப் பிடிக்கும். நாமிருவரும் நம் இருப்பில் இல்லாமல் சிலகாலம் தலை மறைவாகிவிடுவோம். இடைப்பட்ட காலத்தில் திட்டிக்கொண்டே என்னுடைய உருவத்தை உன்னுடைய மனச்சுவற்றிலும் உன்னுடைய உருவத்தை என்னுடைய மனச்சுவற்றிலும் தீட்டிக் கொள்வோம். வண்ணமும் எண்ணமும் வறண்டுபோகும் நாளில் இருப்பைத் தேடி நாய்போல அலைவோம். இருண்ட வெளியிலிருந்து தட்டுத் தடுமாறி இருப்பைக் கண்டடையும்போது உயிர் பெறட்டும் அவ்விரு சித்திரமும்! 2 குடிசைக்குத் தீ மூட்ட கூட்டமொன்று வருவதை மூத்தோர் எச்சரித்தால் […]

The post காதல் கோலங்கள் appeared first on Nutpam.

முக்கோண வீடு

உயிரோட்டமாய் ஒரு சிசுப் பிண்டம் நீ பாதுகாக்கும் பொருட்டு உன்னிடம் ஒப்படைக்கப்பட்ட ஒர் வஸ்து… நீயே குழந்தை யாதலால் உன் வாகனத்திலிருந்தது தூக்கி வீசப்படுவதாய் கனாக் கண்டு அதிர்ந்து எழாதே! துன்பம் தவிர்க்கப்பட வேண்டியது.. அனுபவிக்கப்பட வேண்டியதல்ல.. விடியற் காலை துயிலெழ அருகதை யற்றவன் நீ உன்னிடத்திலிருந்து நீ செய்யக் கூடியதை செய்த தாய் மரணித்த பின் அவள் மடியில் சாய்ந்து கனவில் கிடப்பதாக மூடிய இமைகளுக்குள் கண்ணீர் சுரக்காதே! துன்பம் உழன்று வாடப்பட வேண்டியதல்ல.. தவிர்க்கப்பட […]

The post முக்கோண வீடு appeared first on Nutpam.

மூன்று கவிதைகள் : ரவி அல்லது

பார்ப்பதன் பிழைகள். அதிகமாகிக் கொண்டிருக்கும் அணுக்க தூரம் அருகாமையில் இருப்பதைப் போன்றதான சுவாசித்தலில் காட்சிகள் யாவையும் காண்பதென்னவோ நீதான். அறிவுப் போதாமையின் அலுப்பில் உணர்வுகளை மொழிபெயர்க்கும் சாத்தியமிருந்தால் காலமும் தூரமும் காட்சிப் பிழைதான் எப்பொழுதும் இணங்கிப் போன கூட்டுறவில். பைத்தியங்களென பார்த்துச்சென்ற பலதும் உணர்தலுக்குள் விழும்பொழுதில் புரியும். காதலுக்கு கண் இல்லைதான் மோகித்த இம்மௌனத்திற்கு முன்னாளென்பது. வழிமொழியப்படாத வலிகள். மனம் சிதைக்கும் மாய வேலைகள் நிகழ்கிறது மட்டுப்படாமல் பொழுதொரு வண்ணம் புதிதாக புத்திகள் தடுமாற. தொப்புள்க்கொடி உறவென்றாலும் […]

The post மூன்று கவிதைகள் : ரவி அல்லது appeared first on Nutpam.

ச.விஜயலட்சுமி கவிதைகள்

1.கேரக்டர் தரமதிப்பீடுகள் புள்ளிவிவரங்கள் கணக்கீடுகள் ஆளுகையின் பதிவேடுகளாக சாமானியரின் நாளது வாழ்க்கை பல கயிறுகளும் முடிச்சுகளும் அவற்றின் ஓட்டங்களும் அதற்கிடையிலான சிக்கல்களும் கடந்து பயன்பாட்டிற்காக காத்திருக்கும் கோரைப்பாயாக பதிவேடுகளுக்கும் வாழ்க்கைப் பயணத்திற்குமான தொலைவு மைல்கல்களில் இல்லை மதிப்பீடுகளிலும் உறைந்து நிற்பதில்லை பட்டுப்பூச்சியின் காத்திருப்பு குயில் முட்டையின் தவிப்பு ரெட்டைவால் குருவியின் சீற்றம் கேரக்டர் இதற்குள் எங்கோ ஒளிந்திருக்கிறது கேரக்டர் மானுடம் கேரக்டர் எல்லை மீறல் கேரக்டர் தர மதிப்பீடு கேரக்டர் சார்லி சாப்லின் கேரக்டர் கிலோ கணக்கிலும் […]

The post ச.விஜயலட்சுமி கவிதைகள் appeared first on Nutpam.

வேணிவெயிலு கவிதைகள்

1. அவர்களின் கடைசி இரவு புயல் காற்றும் அடை மழையுமான பின்னிரவில்… தொழுவத்தின் மண் சுவர் சன்னமான கீறலோடு அரித்துக் கொண்டது. இருபத்தி மூன்று வெள்ளாடுகளையும் மீட்டு விடும் பொருட்டு மளமளவென அவிழ்க்க தொடங்கினார் அப்பா! மூத்த செவலையையும் கையில் இரண்டு குட்டிகளோடும் வெளியில் பாய்ந்து நொடி கண் முன்னே மண் சுவர் தின்றது ஆடுகளை! மிஞ்சியது மூத்த செவலையும் இரண்டு குட்டிகளும் அப்பாவும் சுடலை மாடனுக்கு நேந்து விட்ட கருப்பன் பின்னங்கால்களிலும் கழுத்திலும் சதை பிரிந்த […]

The post வேணிவெயிலு கவிதைகள் appeared first on Nutpam.

பசந்தி – கவிதைத் தொகுப்பு நூல் – ஒரு பார்வை

சொற்களுக்குள் இருக்கும் வானிலிருந்து பொழியும் மழை கடலைச் சேரும்வரை தாகத்துடன் கவனித்தல் நிகழ்கிறது. “உயரே வெளியின் கீதம் அந்தரத்தில் நீலத்தின் மந்திரம் தூர இருட்டில் மினுங்கும் கருப்புநெருப்பு நாமேவெனப் பறக்கும் குருட்டுப்பறவை ஓசையின்றி போகும் அதன் புதிர்சாலை வளராவெளியில் நகரும் இருட்டு ஓவியம் பள்ளத்தாக்கில் இருந்து வீசும் புதிய காற்று சொட்டச் சொட்ட நிறையும் கருப்புமை யாவும் இருட்டு மயம் கண்களுக்கு வெளியே விசேஷ இருட்டு அடி ஆழத்திலோ விபரீத நெருப்பு” ‘தாமே’ என்று தலைப்பிடப்பட்ட மேற்கண்ட […]

The post பசந்தி – கவிதைத் தொகுப்பு நூல் – ஒரு பார்வை appeared first on Nutpam.

❌