Normal view

Received before yesterdayசொல்வனம்

பெட்டைப் புலம்பல்

ஆனால் உருகி இறைஞ்சி இரந்து நின்ற ஒரு மகாகவிக்கு, அவன் கேட்ட எதுவும் தரவில்லை பராசக்தி. அஃதோர் வரலாற்றுச் சோகம். குறைந்தபட்சம் மேலும் சில பத்தாண்டுகள் ஆயுள் தந்திருக்கலாம் பராசக்தி. துஷ்ட நிக்ரகம், இஷ்ட பரிபாலனம் என்பர் பண்டு. இன்று இஷ்ட நிக்ரகம், துஷ்ட பரிபாலனம் ஆகிப்போயிற்று

தனித்துவமான எழுத்தும் தளராத உழைப்பும்

‘மனைமாட்சி’ அவருடைய மற்றொரு பெரிய நாவல். அதன் முதல் வரைவில்  ஆயிரத்து நானூறு பக்கத்திற்கும் மேல் இருந்தது. அதை எனக்குத் தெரிந்து மூன்று நான்கு தடவை திரும்பத் திரும்ப மாற்றி எழுதினார். கணினியில்தான் என்றாலும்  இதுவெல்லாம் என்னால் கற்பனை கூட செய்ய முடியாத உழைப்பு. சமீபத்திய காணொளி வாயிலான நேர்காணல் ஒன்றில் தனது அலுவலகப் பணி நெருக்கடிகளுக்கப்பாலும் தன்னால் எப்படி இவ்வளவு அதிகமாகவும் தீவிரமாகவும் எழுத முடிகிறது என்பதைப் பற்றி விரிவாக விளக்கினார்.

அங்கமாலி ஜோஸ்: தில்ருபாவில் கர்நாடக இசை

கச்சேரி தொடங்கிய சில நிமிடங்களுக்குள்ளாகவே என் முன்முடிவுகள் எல்லாம் தகர்ந்து விழுந்தன. இத்தனைக்கும் சிம்மேந்திரமத்யமத்தை அத்தனை ‘கர்நாடக’ ராகமென்று வகைப்படுத்த முடியாது. ஆரோகண/அவரோகண ஸ்வரங்களைப் பிரதானமாகக் கொண்டு வாசிக்கக்கூடிய ராகம்தான். இருப்பினும் ஜோஸ் வாசித்த ஆலாபனையின் ஒவ்வொரு பிடியிலும் கர்நாடகத்தன்மை தன்னிச்சையாய் சொட்டியது.

செல்வம் அருளானந்தம்- நேர்காணல்

 குறிப்பாகக் கவிதைகளை எழுதும்போது அறிவு பூர்வமானதைப் பின்தள்ளி உணர்வே சொற்களைத் தருகிறது. தர்க்கம் என்பது பிரிக்கமுடியாத உணர்வுகளின் படிமுறை ஒழுங்கும்  நியாயமும். அதை உணர்வின் வழி சொல்லும்போது தர்க்க சிந்தனையில்லாவிடில் கவிதை நிற்காது; நிராகரிக்கப்பட்டுவிடும். அறிவையும், தர்க்க அணுகுமுறையையும் மனித உணர்வுகளின் வழியாக எளிமைப்படுத்தலாம் அப்போது அந்தக் கவிதையோ சிறுகதையோ வாசகர்களின் அதிகரித்த கவனவீச்சைப் பெறுகின்றன.

நித்தியம்

"டாக்டர் ஜெனிஃபர், இந்த அளவீடுகள் சரியானவை என்று உறுதியா?" கிரேடி துணிச்சலாகக் கேட்டிருந்தான் தன் முனைவர் பட்ட மாணவன். பளபளக்கும் டாஷ்போர்டில் அவள் அடுக்கிய டேட்டாக்களை எல்லோரும் உற்றுப் பார்த்திருந்தனர். அவளது ஐந்து ஆண்டுகால உழைப்பில் கண்டுபிடித்த புற்றுநோய் செல்களின் பிழை பற்றி விளக்கிக்கொண்டிருந்தாள்.

பொற்பாதை

ரோமானியர்களுடன் நம் வர்த்தகம் செழிப்பாக இருந்த காலம். அவர்கள், நம் மிளகை, மசாலாப் பொருட்களை, தந்தங்களை, பருத்தியை, நவரத்தினங்களை, தேக்கை, சந்தனக் கட்டைகளை பெருமளவில் தங்கம் கொடுத்து வாங்கினார்கள். நமது வணிகம் பொருள் மிகுதி நிலையை நமக்குத் தந்தது. ரோமில், ப்ளினி,மூத்தவர்  கோபத்துடன் புலம்பினார் “ இந்தியாவுடனான நம் வர்த்தகத்தில், ஒவ்வொரு ஆண்டும் நம் அரசு 55 மில்லியன் செஸ்டர்கள் இழந்து வருகிறது.”

விளைவு

லாமு தீவில், இந்திய பெருங்கடலின் கரையோரம் சிமோன் கோமுவின் பிரம்மாண்டமான வீடு அமைந்திருந்தது. பழைய அரபுப் பாணியிலான வீட்டின் வெள்ளைச் சுவர்களும், செதுக்கப்பட்ட மர ஜன்னல்களும், பச்சை நிறக் கதவுகளும் சூரிய ஒளியில் ஜொலித்தன. மூன்று நூற்றாண்டுகளுக்கும் மேலான வரலாறு கொண்ட லாமுவின் குறுகலான தெருக்களில் கழுதைகள் மட்டுமே பயணிகளைச் சுமந்து சென்றன. மோட்டார் வாகனங்கள் அனுமதிக்கப்படாத இந்த பழங்கால நகரத்தில், சிமோனின் வீடு கடலை நோக்கியபடி பனை மரங்களால் சூழப்பட்டிருந்தது.

அல்காரிதம்-ஒரு மனித வாழ்க்கை

நம்முடைய தினசரி வாழ்க்கையில் algorithm-களின் பயன்பாடு, மற்றும் நாளாக நாளாக உருமாறிக்கொண்டேயிருக்கின்றது. இந்த automated system-த்தின் எல்லைகளற்ற அதன் தன்மையானது மனித குலத்திற்கு எவ்வகையில் உதவுகின்றன என கூறும் புத்தகமே Code Dependent. இதில் கூறப்படும் உண்மை சம்பவங்கள் யாவும் Silicon Valley-யிலிருந்து கூறப்படுபவை அல்ல.

செஞ்சீலை

காட்சி அவன் தர்க்கத்திற்குள் சிக்க மறுத்துக் கொண்டிருந்தது போலும். கதிரவன் தியானத்தில் திளைப்பவன் போல அசையாது இருந்தான். புளியமரத்தடியில் இருவரும் பூசைக்கான ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தனர். சாமிக்குப் போட்டு கழிந்த மாலைகள், திருநீறு, குங்குமம், சூடகம், ஊதுபத்தி, தீப்பெட்டி, பன்னீர் குப்பி, உடைந்த சிறு மண்பானை ஓடு, வேப்பிலை கொத்து, சிவப்பு பட்டு சால்வை என எல்லாமே சம்பாதித்து வந்திருந்தனர் எப்படியோ. நீள் வாக்கில் கிடந்த சிதைந்த சிறிய வேலி கருங்கல்லைப் பிரதிஷ்டை செய்து அலங்கார பணிவிடை நடந்து கொண்டிருந்தது. 

இந்திய வரலாற்றைப் புரட்டிப்போட்ட மாமனிதர்  ஜே .பி.

ஜூன் 5 1978 ல் ஜேபி   ஜனதா அரசாங்கமும் முந்தைய காங்கிரஸ் அரசாங்கத்தைத்தான்  பின்பற்றுகிறது. மக்கள் நம்பிக்கை இழந்து விட்டார்கள். மக்கள் எதிர்பார்த்ததை ஜனதா அரசு கொண்டு தரவில்லை’ என்று அறிவிப்பு செய்கிறார். யார் தன்னை பிரதமர் ஆக்கினாரோ அவரையே மொரார்ஜி தேசாய் ‘ Out sider’  என இழிவாக அழைத்தார். ஜேபி நொறுங்கித்தான் போனார்.

பலி

“அதெல்லாம் வைச்சிருப்பான். நீ ஒண்ணும் கவலப்படாதே. மாரியம்மா தைரியமான பொண்ணு. அவ அக்காவ கொடுமப் பண்ணுன மாதிரி இதுகிட்ட நடக்காது. எல்லாம் சரியா வந்துடும்.” அம்மாவின் ஆறுதலுக்காக சொல்லிவைத்தேனேத் தவிர, என் பேச்சில் அவ்வளவு உறுதி இல்லை. இந்த மக்களிடம் ஆணின் அதிகாரம் என்பது கல்லில் செதுக்கிய கட்டளையைப்போல. ஆம்பளைக்குச் சளைக்காமல் காட்டிலும் மேட்டிலும் உடம்பு உழைத்தாலும், பொம்பளை கொஞ்சம் அனுசரிச்சுத்தான் போகவேண்டியிருந்தது.

இசைவைத் தேடும் வாழ்க்கை

மற்ற புலிகள் அனைத்தும் கற்பனையில் உருவாக்கப்பட்ட பாத்திரங்கள், ஆனால் வேங்கை வனம் நாவலின் மச்சிலி  உண்மையில் வாழ்ந்த புலி. அதுவும் நாம் வாழ்ந்த காலகட்டத்திலேயே வாழ்ந்த புலி என்பது குறிப்பிடத்தக்கது. வேங்கைவனம் நாவல் வெறும் புலியைப் பற்றிய கதை தானா என்ற கேள்வியை முன்வைத்தால், ஆம்/இல்லை என்று இருபதில்களும் சொல்லலாம். புலிகள் மூலமாக வரலாறு, வரலாற்று புனைவு, போர், அதிகாரம், படிநிலை, காலனித்துவம், சூழியல், காதல், அறம், துரோகம், மனித-விலங்கு உறவு, இயற்கையின் வலிமை, இயற்கை மீதான ஆதிக்கம் போன்ற பல பரிமாணங்களை இந்நாவல் ஆராய்கிறது.

வேங்கை வனம் நாவல்: ஒரு சூழலியல் ஆவணம்

துவக்கத்திலிருந்தே கோட்டையில் இருப்பவர்கள் அனைவருக்கும் ஒரு பெருமைக்குரிய விஷயமாக இருக்கிறது புலிவேட்டை. புலிவேட்டைகள் மிகக் கொடூரமாக நடந்திருக்கின்றன. நேரடியாகப் புலியின் வாயிலேயே ஈட்டியை சொருகுவது, ஒரே சமயத்தில் வாளால் வெட்டியும் ஈட்டியால் குத்தியும் புலிகளைக் கொல்வது தொடர்ச்சியாகச் சொல்லப்படுகிறது. பல புலிகள் இதில் இருக்கின்றன. பாஹினி, மோஹினி, கிருஷ்ணவேணி என்னும் கிருஷ்ணா, சுல்தான் புரி , சுல்தான் புரியின் குட்டியான மற்றோரு  சுல்தான் புரி, பிறகு மச்சிலி

கொன்றைப் பூக்களும் மரவட்டைகளும்

ராகவனுக்கும் சவத்துடைய காதல் கதையைப் பற்றிக் கேட்க ஆசை. நடந்து வீடு இருக்கும் திருப்பத்தை அடைந்த போது ராகவன் அதனிடம் ”   நீ எப்படி ஒரு மதராசி தமிழ்ப் பெண்ணை காதலித்தாய் ? என்று கேட்டதை அது தனது சொந்த விஷயத்தில் இவன் ஏன் மூக்கை நுழைக்கிறான் என்றெல்லாம் நினைக்காமல்  புன்னகைத்தவாறே கண்டிப்பாக வீட்டிற்கு சென்றதும் சொல்கிறேன் என்று சொன்ன பதிலின் நாகரீகம் அவனுக்கு ரொம்பவே பிடித்தது. 

பழையவரால் என்ன பயன்?

கவிதை குறித்துப் பிளேடோவில் தொடங்கி, ஆடன் வரை ஏறத்தாழ எழுபது கவிஞர்கள், விமர்சகர்களின் கருத்துகளைச் சிறிய கட்டுரைகளாக இந்த இரண்டு புத்தகங்களிலும் அளித்திருக்கிறார் பேராசிரியர். இது ஒரு பெரிய பிரயாணம் தான்.(சமஸ்கிருதத்திலுள்ள கவிதைக் கோட்பாடுகளையும் இது போல் ஒரு நூலாகக் கொண்டுவர வேண்டுமென்ற தன் விருப்பத்தையும் முன்னுரையில் தெரிவித்திருக்கிறார். அதற்குள் அவரது மறைவு நிகழ்ந்து விட்டிருக்கிறது.)

வாகை மனம்

வாவ மரத்தின் அடியில் புகைவதன் அடையாளமாக காற்றில் கருகல் வாடை வந்தது.  வெளியே வந்து பார்த்தாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை.  பிரார்த்தனைக்கு வந்தவர்களின் வாகனங்கள் மரத்தின் நிழலில் நிறுத்தப்பட்டு இருந்தது.  தேவாலயத்தில் பிரார்த்தனைப் பாடல்கள் வேத வசனங்களுக்கு இடையில் ஒலித்துக் கொண்டு இருந்தது.  கோல்டன் பாய்  வந்த ஆட்களை வைத்து முட்டுக்கொடுத்ததை சரி செய்து கொண்டு இருந்தார்.  அவர்  அவர்களை திட்டுவது புரியாமல் சத்தமாக மட்டும் கேட்டது.  இந்தப் பக்கம் அவர்  திரும்பினால் பேச வேண்டுமென நான் கடைக்குள் வந்துவிட்டேன்.

6. ஞானங்களின் விளைநிலம்

இந்திய தொன்மத்தில்  சூரியக்கடவுளின் மகன்களான அஸ்வினி தேவர்கள் மருத்துவக்கடவுளாக குறிக்கப்படுகின்றனர். ஆயுர்வேதம் விஷ்ணுவிடமிருந்து பிரம்மனுக்கு, பிரம்மனிடமிருந்து தட்ச பிரஜாபதிக்கும், அவரிடமிருந்து அஸ்வினி தேவர்களுக்கும் வழங்கபட்டதாக கூறப்படுகிறது.  அஸ்வினி தேவர்களிடமிருந்து இந்திரனுக்கு கற்பிக்கப்படுகிறது.

பசுமையின் மனம் பாடும் ரகசியம்

இந்த தொட்டாற் சுருங்கி (Mimosa pudica) இலைகளை பாருங்கள். அதைத் தொட்டால், அதன் இலைகள் உடனே மூடிக்கொள்கிறது. நீங்கள் மீண்டும் மீண்டும் தொட்டால், அதன் எதிர்வினை குறைகிறது. ஏனெனில் அது தொடுதல் ஆபத்து இல்லை என்று புரிந்துகொள்கிறது. தொடும்போது, மிமோசா செல்கள் கால்சியம் அயனிகளை, ஒரு இரசாயன அலாரம் போல வெளியிடுவதால், இது இலைகளை மூடச் செய்கிறது. மீண்டும் மீண்டும் தொடும்போது, தாவரம் தன் ஆற்றலைச் சேமிக்க அதன் பதிலை மாற்றுகிறது.

தெய்வ நிமித்தம்

 “உங்களுக்குத் தெரியாததா சார்? கடன மறுசீரமைப்பு செய்வோம், வட்டி விகிதத்தை மாற்றி, கால அவகாசம் ஆறு மாசமோ ஒரு வருஷமோ நீட்டிச்சி கொடுப்போம். எப்படியாவது கடனை அடைத்துவிடுவோம்னு  பெரியவரும் அவர் மகனும் வந்து கெஞ்சுறாங்க. கொஞ்சம் விட்டுப் பிடிப்போமே,’’ என்ற அரவிந்தனிடம், 

சிக்கிக் கொண்ட இராஜகுமாரன்

சத்ர சாமரங்கள் இன்றி, இந்த அறிவிப்பு முடியும் முன்னேயே தனியாக உள்ளே வந்து விட்ட சகோதரனைக் கண்ட ஹர்ஷன் திகைத்தான்.  பல நாட்களாக பராமரிப்பின்றி விட்ட கேசமும்,  நீளமான உடையும்,  எந்த விதமான அலங்காரமோ, ஆசமனம் என்பதை விட்டவனாக,(தினசரி செயல்கள் எதுவுமே செய்யாமல் இருந்தான் என்பது சொல்லப் படுகிறது.) பல நாட்களாக நீராடலோ, சரியான உணவோ, நல்ல தூக்கமோ இல்லாமல் சிவந்த கண்களும், தன் அந்தரங்க சேவகர்கள் மட்டுமே உடன் இருக்க சாதாரண பிரஜை போல உடல் முழுவதும் பிரயாண களைப்பும் தூசி படிந்த உடலுமாக, வசுந்தரா- பூமி, ராஜ்யம்,  அதற்கு பொறுப்பான மூத்தவன், ஹூணர்களை வெற்றி கொண்டு வந்திருக்கிறான்.
❌