Normal view

Received before yesterdayநீலி

வரலாறு என்பது கடந்தகாலம் மட்டுமல்ல – R.உமாமகேஸ்வரி

30 April 2025 at 18:44
R.உமாமகேஸ்வரி குறிப்பிடத்தக்க வரலாற்றாசிரியர்; பத்திரிக்கையாளர். தமிழ்ப் பகுதியின் அரசியல் சமூகம் பண்பாடு சார்ந்த ஆய்வுகள் நிறைய ஆங்கிலத்திலேயே வெளியாகியிருக்கின்றன. அவர்களிலும் பெரும்பாலானவர்கள் வெளிநாட்டுக்காரர்கள். இந்த வரிசையில் தமிழ்ப் பகுதி குறித்த கலாச்சார ஆய்வாளர்களுள் ஒருவராக திகழ்பவர் தான் உமாமகேஸ்வரி. ஆனால் இவர் தமிழ் பின்புலத்தில் பிறந்தவர். தமிழ்நாட்டுக்கு வெளியே தமிழகம் பற்றி எழுதியிருக்கும் ஆய்வுகளுள் சமகால அரசியல் அடையாளங்கள் பற்றியதே அதிகமாக இருக்கிறது. இப்பின்னணியில் விதிவிலக்காக கலாச்சார ஆய்வில் ஈடுபட்டவர் உமாமகேஸ்வரி. எனினும் இவர் பெயர் தமிழ்நாட்டு […]

நாட்டார் இசை ஆன்மிகமானது – தேஜாஸ்ரீ இங்கவ்லெ

30 April 2025 at 18:43
நாட்டார் இசை என்று சொன்ன உடனே நமக்கு மெல்லிய இசை நினைவுக்கு வருவது இல்லை. கட்டுப்படுத்தப்படாத நிலையில் வெளிப்படும் மனித உணர்வுகள் என்றவுடனும் நமக்கு முதலில் உக்கிரமான வன்மையான இசை கொண்ட பாடல்கள் மட்டுமே நினைவுக்கு வரும். நாட்டுப்புற இசை (கிராமம்), கானா பாடல்கள்(நகரம்) என இரு பிரிவு பாடல்களிலும் இத்தகைய தன்மையான பாடல்களே இன்று மக்கள் மத்தியில் பரவலாக கவனத்தில் உள்ளது. இந்திய நாட்டார் இசை மரபு, பக்தி இசை மரபு ஆகிய இரண்டையும் நோக்கினால் […]

💾

💾

💾

கணிதத் தர்க்கங்களின் கவிதாயினி -வெங்கட்ரமணன்

“தூய கணிதம், தனக்கேயான வழிகளில், தர்க்கபூர்வமான கருத்துகளால் ஆன கவிதை” -ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்(எம்மி நூர்த்தெரின் இரங்கல் கடிதத்தில்) கணிதம் தர்க்கங்களினால் யாக்கப்பட்ட கவிதை என்றால் அதன் முதன்மை கவிதாயினி எம்மி நூர்த்தெர்-ஆகத்தான் இருக்கமுடியும்.  நூர்த்தெர் ஒரு முறை, “ஒருவர் முதலில் a ≤ b என்றும் பின்னர் b ≤ a என்றும் காட்டி a, b எனும் இரண்டு எண்களின் சமத்துவத்தை நிரூபித்தால், அவர் அவற்றின் சமத்துவத்தை நிரூபித்திருக்கவில்லை;  உண்மையில் சமத்துவம் என்பதற்கான ஒரு வரையறையை […]

ஆத்துக்குரி மொல்லா – எம். கோபாலகிருஷ்ணன்

(இராமயணத்தை தெலுங்கில் பாடிய முதல் பெண் கவி) ‘ராமாயணம் பல முறை எழுதப்பட்டுள்ளது. ஒவ்வொரு வேளையும் சாப்பிடுகிறோம் என்பதால் அதைப் பற்றி பேசாமல் இருக்கிறோமா? ராமனின் கதையும் அவ்வாறனதுதான். ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் அதைக் குறித்து எழுதலாம், வாசிக்கலாம், நேசிக்கலாம்.’ * தெலுங்கில் புகழ்பெற்ற இராமாயண காவியங்கள் இரண்டு. முதலாவது, கவி அரங்கநாதா எழுதியது. இரண்டாவது, பாஸ்கரா என்பவரால் எழுதப்பட்டது. இவ்விரண்டுக்கும் அடுத்ததாக போற்றப்படுவது மொல்லா இராமாயணமே. தெலுங்கில் இன்று பரவலாகவும் குறைந்த விலையிலும் அதிகம் […]

தோற்கடிக்கப்பட்ட அன்னை – ஜெயமோகன்

30 April 2025 at 18:40
சங்க இலக்கியங்களைப் படிக்கும்போது ஒரு ஐயம் இன்றைய வாசகனைக் குடையும். அன்றைய பாலியல் ஒழுக்கம் எத்தகையது: அன்று ஆண்பெண் உறவு மிக இறுக்கமற்று இருந்ததாகவே சங்கப்பாடல்கள் காட்டுகின்றன. களவு, உடன்போக்கு, பரத்தைமை என்ற மூன்று கருக்கள் இன்றைய தமிழ் ஒழுக்கச்சூழலில் வைத்துப் புரிந்துகொள்ள மிகவும் சிரமமானவை. சங்க காலகட்டம் இருமுறை மறுகண்டுபிடிப்புச் செய்யப்பட்டது. பத்தாம் நூற்றாண்டில் சோழர்கால கட்டத்தில் ஒரு முறை. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் மறுமுறை. இரு தருணங்களிலும் அது விரிவான உரைகள் மூலம் மறுவாசிப்புக்கு […]

வசந்தத்தின் இரவில்மலரும் நிலா – பா.ரேவதி

30 April 2025 at 18:39
(இஷூமி ஷிகிபு கவிதைகள் குறித்து…) நம் பழந்தமிழ் இலக்கியங்களில் மிக தொன்மையானது சங்க  இலக்கியம். சங்க காலம் என்று வரையறுக்கப்படும் பொ.மு. 1ம் நூற்றாண்டிலிருந்து பொ.யு. 4 ஆம் நூற்றாண்டு வரையிலான 400 ஆண்டு கால கட்டத்தில் கிட்டத்தட்ட 475 கவிஞர்கள்  சங்கப் பாடல்களைப்  பாடியுள்ளனர். அதில் நாற்பதுக்கும் மேறபட்டவர்கள் பெண்பாற் புலவர்கள். வாழ்வியல் குறித்தும், கலை வெளிப்பாடு குறித்தும், பெண் கவிதை மொழி குறித்தும் அப்போது நிலவிய மதிப்பீடுகளை இவை நமக்கு அடையாளம் காட்டுகின்றன. நம் சங்ககால […]

முனித்துறை முதல்வியர் – வீர. ராஜமாணிக்கம்

தை நீராடல் குறித்து நல்லந்துவனார் எழுதிய பரிபாடலில் வரும் பாடல் ஒன்று… கனைக்கு மதிர்குரல் கார்வானம் நீங்கப்பனிப்படு பைதல் விடுதலைப் பருவத்துஞாயிறு காயா நளிமாரிப் பிற்குளத்துமாயிருந் திங்கள் மறுநிரை ஆதிரைவிரிநூல் அந்தணர் விழவு தொடங்கப்புரிநூல் அந்தணர் பொலங்கலம் ஏற்பவெம்பா தாக வியனில வரைப்பெனஅம்பா ஆடலின் ஆய்தொடிக் கன்னியர்முனித்துறை முதல்வியர் முறைமை காட்டப்பனிப்புலர் பாடிப் பருமண் வருவியன்ஊதையூர் தர வுறைசிறை வேதியர்நெறிநிமிர் நுடங்கழல் பேணிய சிறப்பிற்றையன் மகளிர் ஈரணி புலர்த் தரவையை நினக்கு மடைவாய்த்தன்று.மையாடல் ஆடல் மழ புலவர் […]

பீலிபெய் சாகாடும்…? – சக்திவேல்

30 April 2025 at 18:37
(அனுராதா ஆனந்த் – மயிற்பீலி சிறுகதைத்தொகுப்பை முன்வைத்து) 1 கடைசியாக ஒரு கூழாங்கல்லை எடுத்து பார்த்து எவ்வளவு காலம் ஆகியிருக்கும்? அதன் உறுதியும் மென்மையும் எடைமிக்கதுமான தன்மையை கைகளால் வருடி வியப்படைந்த தருணத்தை நினைவு கூர்கிறீர்களா? குழந்தைமை மாறாத சிறு வயதில் அப்படியான கூழாங்கற்களை ஆற்றங்கரையில் இருந்து பொறுக்கி வந்து சேர்த்து வைக்கும் பழக்கம் பல பிள்ளைகளுக்கு உண்டு. கூழாங்கற்கள் வியப்பில் ஆழ்த்துவது ஏன்? கற்கள் என்று நாமறிந்த வரையறைக்கப்பால் இருப்பதால். கூழாங்கற்களை முதல் முறை எடுக்கும் […]

வீதிகளில் பாடுபவர்கள் – மதுமிதா

30 April 2025 at 18:36
(குர்அதுல்ஐன் ஹைதரின் ‘லக்னோ வீதிகளில் பாடுபவர்கள் மற்றும் பிற கதைகள்’ என்ற தொகுப்பை முன்வைத்து) குர்அதுல்ஐன் ஹைதர் உருது மொழியின் தலை சிறந்த இலக்கியவாதி. அவருடைய பல ஆக்கங்களைத் தானே ஆங்கிலத்திற்கு மொழிப்பெயர்த்தவர். “River of Fire” (தமிழில் அக்னி நதி, ஆக் கா தரியா – உருது மூலம்) என்ற அவரது நாவல் சர்வதேச அங்கீகாரம் பெற்றது. கலாச்சார மாற்றங்களையும், கால மாற்றங்களையும், அவை மனித வாழ்வின் மீது செலுத்தும் தாக்கத்தையும், அதையும் தாண்டி மாறாமல் […]

மூடுண்ட சமூகங்கள் அடைக்கப்பட்ட கண்ணாடிப் பெட்டிகள் – வயலட்

30 April 2025 at 18:35
பத்மபாரதியின் திருநங்கையர் சமூக வரைவியல் என்ற நூல் முதல் பதிப்பாக 2013இல் வெளியாகியிருக்கிறது. 2005இல் எழுதிய சிறிய ஆய்வேட்டின் விரிவாக்கப்பட்ட வடிவம் இது என்கிறார். 2007ஆம் ஆண்டு லிவிங் ஸ்மைல் வித்யாவின் ‘நான் வித்யா’ என்ற சுயசரிதை நூல் வெளியானது. தமிழ் இலக்கிய/சமூக பரப்பில் ஸ்மைலியின் இந்த நூல் பெருமளவு முக்கியமானது. அடையாளம் சார்ந்த பிரச்சினைகள், அனுபவங்கள் என்பதைக் கடந்து தமிழில் முதல்முறையாக ஒரு திருநங்கையின் குரல் தனிநபராக ஒலித்தது ஸ்மைலியின் நூலில் என்றே சொல்லலாம். எனவே […]

தாரா பரேக் – ஓர் அறிபுனைவு கலந்துரையாடல் – ஸ்வர்ண மஞ்சரி

(தாரா பரேக்-ன் “Take a seat at the Cosmic Campfire” என்ற சிறுகதை தொகுப்பை முன்வைத்து) * மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஓர் அறிவியல் புனைவு சிறுகதையை எழுத ஆரம்பித்தேன். அன்று எனக்கு தீவிர இலக்கிய வாசிப்பு இல்லை. ஆனால் அறிவியலிலும் அதை சார்ந்த அபுனைவு புத்தகங்களிலும் மிகுந்த ஈர்ப்பு இருந்தது. வணிக இலக்கியம் மற்றும் சில ஃபாண்ட்டஸி வகை எழுத்தும் சிறு வயதில் படித்திருந்ததை வைத்து என் மனதில் இருந்த உருவப்படத்தை எழுத்தாக மாற்ற […]

💾

விழாப் பந்தல் – எலிஃப் ஷஃபாக்

(தமிழில் – விக்னேஷ் ஹரிஹரன்) சிமோன் தி பொவாவின் மரணத்திற்குப் பிறகு ஐம்பது ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனால் இன்றளவும் அவர் பெண்ணிய இயக்கத்தின் வரலாற்று நாயகியாகவே போற்றப்படுகிறார். 1956இல் அவரது இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட ஆயிரக் கணக்கான அபிமானிகளின் நெஞ்சங்களில் ஒலித்துக் கொண்டிருந்த “இங்குள்ள அனைத்துமே பெண்களுக்கு கடன்பட்டவையே” எனும் அவரது வாக்கியமே அவரது ஆளுமையையும் அவர் முன்வைத்த பெரும் பாரம்பரியத்தையும் பரைசாற்றும். அவரது எல்லா கருத்துக்களோடும் நீங்கள் உடன்படாமல் போகலாம். அவரது ஆளுமை கூட உங்களுக்கு […]

நானும் என் எழுத்தும் – ஹெப்ஸிபா ஜேசுதாசன்

30 April 2025 at 18:32
ஹெப்ஸிபா ஜேசுதாசன் (1925-2012) தமிழ் நாவல் முன்னோடிகளில் ஒருவர். அவரது ‘புத்தம் வீடு’ தமிழிலக்கிய வரலாற்றில் தவிர்க்கமுடியாததொரு படைப்பு. அந்நாவல் வெளியான காலத்தில் ‘எழுத்து’ பத்திரிகையில் நடந்த விவாதக் கட்டுரைகள் ‘நீலி’ பிப்ரவரி 2024 இதழில் மறுபிரசுரம் செய்யப்பட்டன. 2025இல் ஹெப்சிபா ஜேசுதாசனின் நூற்றாண்டுக் கொண்டாட்டத்தை முன்னிட்டு ‘தீபம்’ இதழில் அவர் எழுதிய கட்டுரையொன்று மறுபிரசுரமாகிறது. இக்கட்டுரையைக் கண்டெடுத்து அனுப்பிய கவிஞர் ராணிதிலக் அவர்களுக்கும் கும்பகோணம் சிவகுருநாதன் செந்தமிழ் நூல்நிலையத்திற்கும் நன்றி. -ஸ்ரீநிவாச கோபாலன் * பத்திராதிபர் […]

நீலி பதிப்பகம் – முதல் நூல்

30 April 2025 at 18:31
நீலி பதிப்பகத்தின் முதல் நூலாக “விந்தியா எனும் தீற்றல்” என்ற எழுத்தாளர் விந்தியாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு வர உள்ளது. இந்த நூலுக்கு விந்தியாவின் சகோதரர் ரங்கன் எழுதிய கட்டுரையும், ரம்யா எழுதிய முன்னுரையும் நீலி மின்னிதழில் பிரசுரிக்கப்படுகிறது. -நீலி (1) எங்கள் மூத்த சகோதரி எங்கள் மூத்த சகோதரி இந்திய தேவி, விந்தியா என்ற புனை பெயரில், ஏறத்தாழ எழுபது வருடங்களுக்கு முன்பு எழுதிய சிறுகதைகள் இவை. நீலி பதிப்பகம் இவற்றை இன்றைய தலைமுறைக்காக […]

பெண்ணெழுத்து – க.நா.சு.வின் மதிப்புரைகள்

31 January 2025 at 18:41
தமிழில் இலக்கிய விமர்சன முன்னோடிகளில் ஒருவர் க.நா. சுப்ரமண்யம். அவர் வெவ்வேறு காலத்தில் பெண்ணெழுத்து குறித்து எழுதியவற்றின் தொகுப்பு இது. யதுகிரி அம்மாள், அநுத்தமா, கிருத்திகா, ஹெப்ஸிபா ஜேசுதாசன், ஆர். சூடாமணி ஆகியோரைப் பற்றி எழுதியவை இத்தொகுப்பில் உள்ளன. இப்போதைக்குக் கிடைப்பவை இவை. க.நா.சு.வின் தொகுக்கப்படாத எழுத்துகளைத் தேடினால் இன்னும் கிடைக்கலாம். இங்கே குறிப்பிடவேண்டிய மற்றொரு எழுத்தளார் அம்பை. க.நா.சு. தொகுத்து 1978ஆம் ஆண்டு வெளியான தமிழ்ச் சிறுகதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூலில் ஒரேயொரு பெண் எழுத்தாளரின் […]

ஹன்னா ஆரெண்ட் – சர்வாதிகாரத்தின் வேர் – சைதன்யா

31 January 2025 at 18:40
1941இல் நாசி ஜெர்மனியிலிருந்து தப்பி போர்ச்சுகல் வழியாக அமெரிக்கா சென்றடைந்த ஹன்னா ஆரெண்ட் இரு கேள்விகளை எதிர்கொண்டார். ஒன்று: நாசி வரலாற்றை, அதன் வளர்ச்சியை புரிந்துக்கொள்ள முயற்சிப்பதா? அல்லது அதை முழுவதுமாக தவிர்ப்பதா? இரண்டு: ஒரு தத்துவவாதியாக சிந்தனை (contemplation) என்னும் தளத்திற்குள் ஒடுங்கிவிடுவதா? அல்லது தொடர்ந்து பேரழிவுகள், படுகொலைகள் என்று தன்னை வெளிப்படுத்திக்கொண்டிருந்த அக்காலகட்டத்துடன் உரையாட முயல்வதா?  பத்து வருடங்களுக்குப் பின் அவர் எழுதி வெளிவந்த Origin of totalitarianism (1951) என்னும் நூலின் முன்னுரையில் […]

எண்டபள்ளி பாரதி கதைகள்

(தமிழில்: அவினேனி பாஸ்கர்) எண்டப்பள்ளி பாரதி தெலுங்கு மொழி எழுத்தாளர். மார்ச் 22,1981 ஆம் ஆண்டு ஆந்திர மாநிலம் மதனப்பள்ளி அருகே நிம்மனப்பள்ளி வட்டம், திகுவபுருஜு என்ற கிராமத்தில் ஒரு ஏழை தலித் குடும்பத்தில் பிறந்தார். ஆறாம் வகுப்பு வரை படித்தார். சிறு வயதிலேயே தாயார் இறந்துவிட, பாட்டியால் வளர்க்கப்பட்டார். பதினைந்து வயதிலேயே திருமணம் நடந்துவிட்டது. அடுத்தடுத்து மூன்று குழந்தைகள். 25 ஆண்டுகளாக, மகளிர் சுய உதவிக் குழுக்களுக்காக நடத்தப்படும் ‘நவோதயம்’ என்ற பத்திரிகைக்கு  நிருபராகவும், இணையாசிரியராகவும் […]

பெண்மை எனும் முடிவுறாக் கதையாடல் – எலிஃப் ஷஃபாக்

(தமிழில்: விக்னேஷ் ஹரிஹரன்) எலிஃப் ஷஃபாக் துருக்கியின் “முதன்மையான பெண் நாவலாசிரியர்” (உபயம்: Financial Times) ஆக அறியப்படுபவர். சொற்பமான பெண் படைப்பாளிகளே உலகளவில் அடையாளம் காணப்பட்டிருக்கும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து வந்த தனித்துவமான குரல் அவர். மத்திய கிழக்கு நாடுகளில் துருக்கியே மிகவும் தாராளமயமானது என்றாலும் அங்கும் பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகள் மிகுந்தே இருக்கின்றன. ஓரான் பாமுக்கும், அகமத் ஹம்தி தன்பினாரும் உலகை ஆட்கொண்ட பிறகே ஷஃபாக் ஆங்கில இலக்கிய உலகத்தால் அடையாளம் காணப்பட்டார். […]

விதையின் சிறகுகள் – கமலதேவி

31 January 2025 at 18:37
(மமங் தாய்-ன் கருங்குன்றம் நாவலை முன்வைத்து) காட்டுவாசிகளாக இருந்த நாம் இடம்பெயர்ந்து நகர்ந்து நகர்ந்து ஆற்றங்கரைகளோரம் குடியிருப்புகளை அமைத்து அவை ஊர்கள்  நகரங்களாகி, நாடுகளாகி, அரசுகள் உருவாகி வந்தது என்பது மானுட வரலாற்றின் அடிப்படையான சித்திரம். இதில் அதிகம் இடம்பெயராமல் நின்று போன சமூகங்கள் பழங்குடிகளாகவே இன்றும் கூட இருக்கிறார்கள். அதற்கு அடிப்படையான காரணம் இடபெயர்ச்சிக்கான வாய்ப்புகள். வெளியேறி செல்லமுடியாத நில அமைப்பும் மற்றவர்கள் ஊடுருவ முடியாத தன்மையும் எண்ணிக்கையில் குறைவான மக்களும், அவர்களின் மனநிலையும் இதற்கு […]

அஷிதாவின் பொய்கள் – சுசித்ரா

31 January 2025 at 18:36
[1] மறைந்த மலையாள எழுத்தாளர் அஷிதாவின் சிறுகதைகளை ஒரு தலைப்பில் தொகுக்க வேண்டுமென்றால் அவற்றை ‘பொய்க்கதைகள்’ என்று சொல்லலாம். எல்லா கதைகளும் பொய் தானே, அது என்ன பொய்க்கதைகள் என்றால், அவரது சிறுகதைகள் பொய்களையே பேசுபொருளாகக் கொண்டவை. பல கதைகளின் தலைப்பே ‘நுணகள்’ – பொய்கள் என்று உள்ளன. கதைசொல்லி சொல்லும் பொய்கள், கதைசொல்லியிடம் சொல்லப்படும் பொய்கள், கதைசொல்லி தன்னைச் சுற்றி அவதானிக்கும் பொய்கள், கதைசொல்லி தன்னிடமே சொல்லிக்கொள்ளும் பொய்கள் என்று பலவிதமான பொய்கள் அவர் கதைகளில் […]
❌