Normal view

Received before yesterdayசத்யராஜ் குமார்

உன்ன விட..

ஏற்கெனவே பயணங்களில் எடுத்த பல வீடியோக்களின் அடிப்படையில் ஒரு திரைக்கதை உருவாக்கி எடுத்த குறும்படம்.

கதை-இயக்கம்: சத்யராஜ்குமார்

குரல்: கவிதா

Sorry! (வருந்துகிறோம்!)

Sorry! (வருந்துகிறோம்!) சத்யராஜ்குமார் எழுதி இயக்கிய தமிழ்க் குறும்படம்.

அமெரிக்காவில் காணாமல் போகிறாள் ஓர் இளம்பெண். அதை தமிழகத்தில் உள்ள ஒரு தொலைக்காட்சி ஊடகம் எப்படி செய்தியாக்குகிறது?

This film was made during COVID-19 times while the actors and crew members were observing social distancing without leaving their homes.

OFFICIAL SELECTION Global Indie Film Festival 2021

OFFICIAL SELECTION Toronto International Tamil Film Festival 2021

Jury Award Best Social Message Short Film Director Toronto International Tamil Film Festival 2021

உள்காயம்

நாக்கில் நரநரவென்று உறுத்தல். பூஞ்சோலை சுவரோரமாய் இருந்த தொட்டியில் உமிழ்ந்தாள். எச்சில் கறுப்பாய் ரசாயன மண் கலந்து வந்தது.

சற்று தள்ளி ஜோல்ட்டிங் இயந்திரத்தின் அருகே நிற்கிற பதினெட்டு வயது இளைஞ னுக்குக் குரல் கொடுத்தாள்.

''ரத்தினம். கடைசி பேட்ச் பெட்டிங்க வருது பாரு. மெஷின்ல ஏத்து.''

காலையிலிருந்து இந்த நிமிஷம் வரை பூஞ்சோலையை அதிஅதிசயமாய்ப் பார்த்துக் கொண்டிருந்த அந்த ரத்தினம் சுதாரித்து தன் னருகே ஓடும் தண்டவாளத்தில் பார்வையைப்போட்டான்.

கனத்த மோல்டிங் பெட்டிகள் வேக மாய் ஓடி வந்தன. இயந்திரத்தின் அருகே வந்த பெட்டியைத் தடுத்து நிறுத்தினான். பெட்டியின் கனமும், அதன் உலோக உடம்பில் ஒட்டியிருந்த மண் துகள்கள் உண்டாக்கிய சிராய்ப்பும் அவன் கையைச் சிவக்க வைத்தன.

அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று புரியாமல் நிற்கிறபோது, அவள் அருகில் வந்து விட்டாள்.

''காலைலேர்ந்து நான் வேலை செய் யறதை எத்தனை வாட்டி பார்த்திருப்பே. செயின் புல்லி பிளாக்கைத் தட்டி விடு. ''

பச்சையாய் இருந்த பொத்தானை அழுத்த.. இரும்புச்சங்கிலி சலசலவென கீழிறங்கியது. சங்கிலியின் நுனியில் இருந்த கொக்கியை மோல்டிங் பெட்டியில் மாட்ட முயற்சித்துத் தோற்றான் ரத்தினம்.

''தள்ளிக்க. இன்னும் உனக்கு பழக்கமாகலை.''

''இன்னொரு தடவை முயற்சி பண்ணிப் பார்க்கிறேன்க்கா.''

''அதுக்குள்ளே மெட்டல் வந்துடும். மோல்டிங் ரெடி ஆகலைன்னா சூப்பர்வைசர் கத்துவாரு.''

கொக்கியைப் பெட்டியோடு இணைத்தாள். புல்லி பிளாக் கில் மாட்டிக்கொண்ட பிணமாய்க் கனக்கும் அந்தப் பெட்டியைப் படுலாவகமாய் ஒரு சுழற்று சுழற்றி, இயந்திரத்தின் படுக்கையில் உட்கார வைத்தாள்.

மேலிருந்த திறப்பை விடுவிக்க கறுத்த சிலிகான் மண் மழையாய்க் கொட்டியது. மோல்டிங் பெட்டிக்குள் விழுந்ததுபோக ஏராளமாய் சுற்றிலும் துகள்களாய்ப் பரவியது.

மூக்கைப் பொத்திக் கொள்ள முயலும் ரத்தினத்தைப் பார்த்துச் சிரித்தாள்.

''மூக்கைப் பொத்திக்கிட்டெல்லாம் ஃபவுண்டரிக்குள்ளே வேலை பார்க்க முடியாது தம்பி. உள்ளே வந்தாலே நீ மண்ணைத் தான் சுவாசிச்சாகணும்.''

அவள் சிரிப்புக்குப் பயந்து மூக்கருகே கொண்டுபோன கையை விலக்கிக் கொண்டான்.

பூஞ்சோலை சுவிட்சைத் தட்ட ஜோல்ட்டிங் இயந்திரம் தடதடவென அதிர்ந்தது. பேட்ச் பேட்டனின் வடிவத்தை மண்ணில் அச்சாய்ப் பதிந்து அடைத்தது. அதே பழைய லாவகத்தோடு மோல்டிங் பெட்டியை ட்ராலியில் திரும்ப வைத்து அதன் மேல் ரைசர் பெட்டியைக் கவிழ்த்தாள். அசுர வேகத்தில் பத்துப் பெட்டி கள். மெல்ட்டிங் செக்ஷனை நோக்கி அவைகளைத் தள்ளி விட்டு விட்டு வழியும் வியர்வைக் கோடுகளைத் துடைத்தபடி ரத்தினத்தைப் பார்த்தாள்.

''இந்த வேகம் வேணும் ரத்தினம். இல்லைன்னா வீட்டுக்கு அனுப்பிருவாங்க. ஃபர்னஸ்ல மெட்டல் ரெடியாகறப்போ மோல்டிங் தரலைன்னா அத்தனை மேலதிகாரிகளும் நம்ம மேல புலிப்பாய்ச்சல் பாய்ஞ்சிருவாங்க.''

அவள் சொன்னபோது பெரிய சைரன் ஒலி கேட்டது.

''ஷிப்ட் முடிஞ்சது. வா கையைக் கழுவலாம்.''

ரத்தினம் அவள்  பின்னே நடந்தான். இரும்பை உருக்கும் மின்சார உலையின் அனல் வெப்பத்திலிருந்தும் ஷாப் ப்ளோரின் மண் புழுதியிலிருந்தும் மீண்டபோது விடுதலை சந்தோஷம் கிடைத்தது.

குழாயடியில் தண்ணீரில் கையை நனைத்துக் கொண்டே சொன்னான் ரத்தினம்.

''இங்க ஒரு பொம்பளையை எதிர்பார்க்கலைக்கா நான்.''

சோடியம் சிலிக்கேட்டால் கை அழுக்கைச் சுத்திகரித்த படியே அவனைப் பார்த்தாள்.

''ஏன்?''

''ரொம்ப கஷ்டமான வேலை. ஆம்பளைங்க செய்யற வேலை.''

''ஆம்பளைங்க செய்யற வேலைதானே உன்னாலே ஏன் முடியலை?''

''இன்னிக்கு மொத நாள்.போகப்போக சரியாயிடும்.''

''அதான். பழக்கம்தான். இந்தக் கஷ்டமான வேலையைச் செய்ய நான் பழகிட்டேன். இங்க வேலை பார்க்கிற ஆம்பளைங் களை விட அதிகமா ப்ரொடக்ஷன் தர்றேன் தெரியுமா?''

''இங்கே எப்படிக்கா சேர்ந்திங்க?''

''குடும்ப சூழ்நிலை. சம்பாதிக்க வேண்டிய நிர்பந்தம். நான் வேலை தேடினப்போ இந்த கம்பெனி விளம்பரம் வந்தது. மோல்டர் அசிஸ்டண்ட் தேவை. தகுதி ப்ளஸ்டூ. முன் அனுபவம் தேவை யில்லை. ஒரு வருட பயிற்சிக்குப் பின் பணி நிரந்தரம்ன்னுபோட் டிருந்தாங்க. சம்பளம் ஆயிரம் ரூபான்னுபோட்டிருந்ததுதான் என்னைத் தூண்டிச்சு. ஏதாவது துணிக்கடையில அலுங்காம துணி கிழிச்கிட்டிருக்கலாம்தான். ஆனா சம்பளம் எவ்வளவு குடுத்துடப்போறாங்க? கொஞ்சம் கஷ்டப்பட்டு உழைச்சா ஆம்பளைக்குச் சமமா சம்பாதிக்கலாமே? முயற்சி பண்ணினேன். மானேஜர் ரொம்ப யோசிச்சாரு. நீ இப்ப சொன்ன மாதிரி இது ஆம்பளைங்க செய்யற வேலைம்மா. ஆபீசுக்குள்ளே  வேலை காலி ஆச்சுன்னா உனக்கு தபால்போடறேன்னு தட்டிக் கழிக்கப் பார்த்தார். நான் விடலை. ஆபீஸ் வேலைக்கு இதே சம்பளம் தருவீங்களா? மாட்டீங்க. ஏன் சார் ஆம்பளை, பொம்பளைன்னு பிரிச்சுப் பார்க்கிறீங்க. எனக்கு வேலை குடுங்க. எந்த விதத்திலாவது நான் குறைச்சலா இருந் தேன்னா அந்த நிமிஷமே என்னை வீட்டுக்கு அனுப்சிருங்கன்னு சொன்னேன். என் தைரியத்தை மதிச்சு பாதி நம்பிக்கையோடதான் வேலை கொடுத்தார். இன்னிக்கு ஒரு பெட்டி கூட உன்னால தனியா அடிக்க முடியலை. ஆனா நான் வெறியோட இல்ல வேலைக்குச் சேர்ந்தேன். மொத நாளே  தன்னந்தனியா இருபத் தஞ்சு பெட்டி அடிச்சுக் காட்டினேன்.''

''ஆயிரம்தான் சொல்லுங்க. காலையிலேர்ந்து நீங்க படற கஷ்டத்தைக் கண்ணாலே பார்த்தவன் நான். காலைல கோத்த மல்லிகைச் சரம் மாதிரி லட்சுமிகரமா வந்திங்க. இந்த முரட்டு வேலைல ஃபர்னஸ் வெப்பத்தில் வாடிப்போய் இப்போ கசங்கின சருகு மாதிரி தெரியறீங்க.''

சிரித்தாள்.

''மறுபடி காலைல மல்லிகைச் சரமாத் திரும்பி வருவேன்.''

''அக்கா சிரிச்சு மழுப்பாதிங்க. உங்க மனசைத் தொட்டுச் சொல்லுங்க. ஒரு நாள் ரெண்டு நாள் இல்லை. தினந்தோறும் இந்த வேலையைச் செய்யறது கஷ்டம் இல்லையா?''

டைம் ஆபிசுக்குள் நுழைந்தார்கள்.

''பூஞ்சோலை. ஸ்டாம்ப் மேலே கையெழுத்தைப்போடு.''

அக்கவுன்ட்டன்ட் தடிமனான கவரை நீட்டினார்.

''பிடித்தம்போக ஆயிரத்து ஐநூறு ரூபா. எண்ணிப் பார்த் துக்க. இந்தப் பையன் யாரு? ஓ புதுசா சேர்ந்த அஸிஸ்டண்டா?''

வெளியே வந்தவள் ரத்தினத்திடம் புன்னகைத்தாள்.

''கஷ்டமான்னு கேட்டியே. கஷ்டம்தான். ஆனா இப்படி ஒண்ணாந்தேதி கத்தையா வாங்கறப்போ அத்தனை கஷ்டமும் இலவம் பஞ்சு மாதிரி காத்துல பறந்துடுது.''

கைப்பைக்குள் பணக்கவரைத் திணித்தாள். சாலையைக் கடந்து எதிர்சாரி பஸ் ஸ்டாப்புக்கு வந்தார்கள். கேள்விகளே இல்லாமல் வாயடைத்துப்போயிருந்தான் ரத்தினம்.

''நீ எங்கேபோகணும்?''

''காந்தி பார்க்.''

''நான்போக வேண்டிய பஸ் வந்துடுச்சு. நாளைக்கு பார்க்கலாம் ரத்தினம்.''

பூஞ்சோலை ஜனக்கூட்டத்தால் பிதுங்கி வழியும் அந்த டவுன் பஸ்ஸை வேகமாய் நெருங்கினாள். முண்டியடித்து உள்ளேபோனாள். கால் வைக்க இடமில்லை. மேல் கம்பியைப் பிடிப்பதற் குள் திணறிப்போனாள். சுற்றிலும் முளைத்த அக்குள்களின் வியர்வை நாற்றம் குடலைப் புரட்டியது. அரவை இயந்திரமாய் அரைத்துப்போடும் இந்த டவுன் பஸ் பிரயாணத்தை விடவா ஃபாக்டரி வேலை கஷ்டமானது?

ஃபாக்டரி ஞாபகம் வந்ததும் வாங்கிய சம்பளத்தின் மேல் நினைப்பு சென்றது. பக்கவாதம் வந்து படுத்த படுக்கையாய்க் கிடக்கும் அப்பா ஞாபகம் நெஞ்சை உறுத்தியது. அண்ணா அவரைக் கவனிப்பதே இல்லை. பணம் இல்லை என்று சாக்குபோக்கு சொல்லி, ஒழுங்காய் சிகிச்சை செய்யாமல் தட்டிக் கழிக் கிறான். டவுன் பஸ் தொகைபோக இந்த மாதத்து சம்பளம் மொத்தமும் அப்பாவின் மருத்துவ செலவுக்குதான்.

சட்டென இடுப்பில் ஏதோ ஊர்கிற மாதிரி உணர்வு ஏற்பட்டு யோசனைகளிலிருந்து கலைந்தாள். கூட்ட நெருக்கத்தை சாதகமாக்கிக் கொண்டு, எந்த ராஸ்கலோ  இடுப்பில் சில்மிஷம் செய்கிறான்.

விருட்டென்று திரும்பினாள்.

அருவருப்பான முள்தாடி முகத்தோடு ஓர் ஆசாமி அவளுக்கு நேர் பின்னே நின்றிருந்தான். சாராய நாற்றம் குப்பென்று நாசியில் அறைந்தது. பூஞ்சோலை உஷ்ணப் பார்வையில் அவனை முறைத்ததும், கை பின்வாங்கியது. சாராய நெடியைத் தாங்க முடி யாமல் உடனடியாய்த் திரும்பிக் கொண்டாள். விலகிச் செல்ல வழி யில்லாமல் கூட்ட நெரிசல்.

சற்று நேரத்தில் மீண்டும் அவன் கைவரிசை துவங்கியது. இந்தமுறை கைப்பை இழுபடத் துவங்க, அவனுடைய நோக்கம் புரிந்தது.

ஆனால் யோசிப்பதற்குள் கைப்பையின் வார் அறுபட்டு - பை அவன் வசம்போயிற்று. பூஞ்சோலைக்கு உடம்பெல்லாம் நிமி ஷத்தில் பதறிப்போனது.

ஒரு மாச கடும் உழைப்பு.

''திருடன்... திருடன்...''

அவளுடைய திடீர்க் கத்தலில் கூட்டம் ஸ்தம்பித்தது. பின் சுதாரிப்பதற்குள் பை கை மாறப்போனது.

''டேய் திருட்டு நாய்களா'' ஆவேசம் வந்தவளாய்க் கத்தின படி நெரிசலில் திமிறிக் கொண்டு பையைப் பறிக்க முயற்சிப்ப வனின் சர்ட் காலரை எட்டிப் பிடித்து விட்டாள்.

''விடுடி பையை. கீசிடுவேன்.''

ப்ளேடை நீட்டியவனின் மிரட்டலுக்கு அசராமல் போராடினாள். அவன் ப்ளேடினால் அவள் உடம்பைப் பதம் பார்க்க முயல்கிறபோது, பஸ்ஸுக்குள் இருந்த சில துணிச்சல் இளைஞர் கள் உதவிக்கு வந்தார்கள். ஜேப்படி ஆசாமியின் சக ஆட்கள் நழுவி ஓடினார்கள். பூஞ்சோலை ஒரு கையில் கைப்பையும் மறு கையில் அவன் சர்ட் காலரையும் விடாமல் பற்றியிருக்கவே அவன் மட்டும்  அகப்பட்டான். வினாடிக்குள் துவைத்தெடுக்கப்பட்டான்.

''வண்டியை ஸ்டேஷனுக்கு விடுங்கண்ணே...''

கைப்பை கிடைத்த பின்னும் பூஞ்சோலைக்கு வெகுநேரம் உடல் நடுக்கம் அடங்கவில்லை.

 

குளிர்ந்த நீரை களைப்புத் தீர முகத்தில் வாரியிறைத்தாள் பூஞ்சோலை.

கொடியில் உலர்ந்த ஈரிழத் துண்டால் முக ஈரத்தை ஒற்றிக் கொண்டு உள்ளே வந்தாள்.

முன்னறையில் பேச்சுக் குரல் கேட்டது. கணவன் வேலு அதற்குள் வந்து விட்டானா? யாருடனோ பேசிக் கொண்டிருந்தான்.

பூஞ்சோலை இன்லான்ட் லெட்டரை மேஜை மேல் எடுத்து வைத்தாள். அப்பாவுக்கு எழுத வேண்டிய விஷயங்களை மனசுக்குள் ஒரு தரம் ஓட விட்டாள்.

''பணம் இல்லை என்பதற்காக சிகிச்சையைத் தள்ளிப்போட வேண்டாம். உங்கள் மருத்துவச் செலவுக்காக இத்துடன் ரூபாய் ஆயிரத்துக்கான டிராஃப்ட் அனுப்பியுள்ளேன். மேலும்...''

யோசித்தபடியே பார்வை மர செல்ஃபில் வைத்திருந்த கைப் பையின் மேல் விழுந்தபோது திடுக்கிட்டுப்போனாள்.

கைப்பை ஜிப் திறந்திருந்தது.

அவசரமாய் அதை எடுத்து உள்ளே பார்க்க, சம்பளக் கவர் சருகாய் இளைத்திருந்தது.

திகைப்பும், கோபமும் உக்கிரமாய்த் தாக்கியது. வேகமாய் முன்னறைக்குப்போனாள். வேலு அந்த ஆளிடம் சொல்லிக் கொண்டிருந்தான்.

''இந்தா உன் பிச்சைக் காசு ஆயிரம் ரூபா. நான் சம்பாதிக் கிறேனோ இல்லையோ. கணக்கை கரெக்டா பைசல் பண்ணிட் டேன். பொண்டாட்டியோட சம்பளப் பணத்தை எடுத்து ரொக்கமா உன் கையில் கொடுத்திருக்கேன். நான் மானஸ்தன்டா. இந்த தடவை எங்க கட்சி ஜெயிக்காமப்போனா என்ன? அடுத்த எலக்ஷன்ல கண்டிப்பா நாங்கதான் வருவோம் பாரு. ரெண்டாயிரம் ரூவா பந்தயம்.''

பூஞ்சோலை அதிர்ச்சியோடு. ''அடப்பாவி மனுஷா'' என வீறிட்டபோது, அந்த கரை வேட்டி ஆசாமி பணத்தோடு தலைமறைந்திருந்தான்.◼︎

அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப்போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற கதை, கல்கி 07 ஆகஸ்ட் 1996
இக்கதையையும், பிற கதைகளையும் 'ஒரு விநாடியும் ஒரு யுகமும்' சிறுகதைத் தொகுப்பில் படிக்கலாம்.

 

அந்நிய துக்கம்

ச்சனாரி ரயில்வே கேட் சாத்தியிருந்தால். பஸ்ஸில் வருபவர்கள் சலிப்புத் தட்டுவார்கள். அழகுவின் முகத்தில் சந்தோஷம் வந்து குதிக்கும். கிழிந்த அரை டவுசரை அரைஞாண் கயிற்றால் இறுக்கிக் கொண்டு, வட்டமான தட்டைக் கூடையைத் தோளில் தூக்கிக் கொள் ளுவான். கேட் சாத்தியதால் தங்கி விட்ட பஸ் ஸில் ஒரு வீரனைப்போலப் பாய்வான்.

"கல்லே... கல்லே... வேர்க்கல்லே."

"உச்சி வெய்யிலுக்கு எப்படி வேர்த்து வடியுது. வேர்க்கல்லேங்கறியே தம்பி!" - சில பேர் ஜோக் மட்டும் அடிப்பார்கள். வேர்க் கடலை வாங்கமாட்டார்கள். பாலிதீன் பைகளில் அடைத்த சின்ன சின்ன வேர்க் கடலைப் பாக் கெட்டுகள். சின்தடிக் சர்ட் ஜேபியில் நூறு ரூபாய் நோட்டுகள் கண்ணாடிபோலத் தெரி கின்றன. ஐம்பது பைசாவுக்கு என்னமாய் யோசிக்கிறார்கள்.

அந்த லெவல் க்ராசிங்கிற்கு அப்பா லிருக்கும் சேரிதான் அழகுவின் சாக்கடைகளும், சகதிகளும் நிரம்பிய அன்னை பூமி. அவன் பெயருக்கும் உருவத்துக்கும் மயிரிழை சம்பந்தமு மில்லை. நாலாங்கிளாஸ் வரை பள்ளிக்கூட வாசனை. ஸ்கூலில் தமிழ் வாத்தியார் மட்டும் தான் அவனை அழுத்தந்திருத்தமாய் உச்சரிப் பார். மற்றவர்கள் எல்லாருமே, 'அளகு.. அளகு...' சமயத்தில், 'அலகு'.

போன வாரம் அவன் அப்பா வாயில் நுரை தள்ளி செத்துப்போனார். அழகுக்கு அதில் சொற்பமும் துக்கமில்லை. அவர் என்ன வேலை பார்த்தார் என்று இன்றைய தேதி வரை அவனுக்குத் தெரியாது. அவனைப் பொறுத்தவரை அநேக நேரங் களில் கள்ளச் சாராயபோதையுடன் வாய் குழறுபவர். பல சமயம் மொக்கைக் காயங்களுடனும், சில சமயம் ரத்தக் காயங்களுடனும் வீடு திரும்புபவர். நள்ளிரவில் அம்மாவின் கூந்தலைக் கொத்தாகப் பற்றி உலுக்குபவர். அவளை அடித்து, உதைத்து, வயிற்றில் மிதித்து துவம்சம் செய்பவர். பின்னிரவுகளில் அவர் அம்மாவிடம் கொஞ் சலாகவும், கெஞ்சலாகவும் பேசுகிற மாதிரி குரல் கேட்கும். கனவு என்று நினைத்து தூக்கத்தில் கரைந்துபோவான் அழகு.

அம்மா கறுப்பாயிருந்தாலும் அவனுடைய மிகச் சின்ன வயதுகளில் விக்கிரகம் மாதிரி அழகாய் இருந்ததாய் ஞாபகம். இப்போது நோஞ்சான் விக்கிரகம். இருமல் சத்தம் அப்பாவிட மிருந்து தொற்றிய குடும்ப கீதம். அடிவயிற்றை எக்கிக் கொண்டு கிளம்பும் அதே பாணி இருமல் குளிர் காற்றடித்தால் அழகுக்கும் வரும்.

அம்மாதான் பாதி கிளாஸ் நடக்கையில் ஒரு நாள் பள்ளிக் கூடத்திலிருந்து கூட்டிப்போனாள். "இனிமே இஸ்கூல் வேணாம் அளகு.."

ஏன் எதற்கு என்று கேட்கவில்லை. அவனுக்கு விடுதலை... சந்தோஷம்.... அண்ணாச்சி கடையில் கொண்டுபோய் விட்டாள்.

"அண்ணாச்சி (இருமல்) எனக்கும் இப்பல்லாம் ஆவற தில்லை. இவங்கப்பன் வெவகாரந்தான் ஒங்களுக்குத் தெரியுமே. ஒரு செல்லாக்காசு சம்பாதிச்சுப்போடத் துப்பில்லாத ஆளு. இனிமே அளகு கொண்டாந்தாத்தான் அடுப்புல பொங்கிப்போட முடியும்."

அண்ணாச்சி இரண்டு நாள் அவனைக் கடையில் வைத் திருந்தார். அன்பாக, பொறுமையாக, தெளிவாக, நிதானமாக கடைசி யில் பொறுமை இழந்து ஒரு குட்டுக்குட்டி சொல்லிக் கொடுத்தும் அழகுக்குப் பொட்டலம் கட்டும் கலை சுலபத்தில் கை வரவில்லை.

"சும்மா வெச்சு காசு தரமுடியுமா? கூட்டிட்டுப்போயி ரம்மா. இங்க இவனுக்கு வேலையில்லை."

"அண்ணாச்சி... அண்ணாச்சி..." அழுது அரற்றினாள் அம்மா. என்ன இது இழவாகப்போயிற்று என்று யோசித்த அண்ணாச்சிக்கு நிர்ப்பந்தத்தில் அந்த யோசனை பிறந்தது. தட்டைக் கூடையை எடுத்து அழகுவின் கையில் கொடுத்தார். பாட்டிலின் தகரமூடியை சுழற்றிக் கழற்றி கடலைப் பாக்கெட்டுகளைத் தட்டைக் கூடையில் கொட்டிப் பரப்பினார்.

"ரயில்வே கேட்டுக்குப்போ. ஒரு பாக்கெட் வித்தீன்னா உனக்குப் பத்துக்காசு."

கட்டிப்போட்ட மாதிரி கடைக்குள் கிடப்பதை விட அழகுக்கு இது பிடித்தது.

தட்டைக்கூடையைத் தலைக்கு மேல் தூக்கிக் கொண்டு ஈச்சனாரி ரயில்வே கேட்டுக்கு ஓடினான். கோவை-கொச்சின் எக்ஸ் பிரஸ் ரயில்கள், சரக்கு ரயில்கள் குறைந்தது ஒரு மணி நேரத்துக் கொரு தரமாவது அந்த வழியாகச்செல்லும். முணுக்கென்றால் கேட்டை சாத்திவிடுவார்கள். கேட் சாத்தினால் அந்தப்பக்கமும், இந்தப்பக்கமும் சில லாரிகள், பத்துப் பதினைந்து பஸ்களாவது தேங்கிப்போகும்.

"கல்லே... கல்லே... வேர்க்கல்லே..."

அழகுவின் சத்தம் கேட்டால் சில குழந்தைகள் அடம் பண்ணி வாங்கும். பெரும்பாலான வெள்ளுடுப்பு ஆசாமிகள் இவனைப் பார்ப்பதே பாவம் என்கிற மாதிரி விறைப்பாய் முகத் தைத் திருப்பிக் கொள்வார்கள். பஸ்ஸில் வரும் கிராமத்து ஜனங்கள் தான் கல்மிஷமில்லாமல் பேசி அவனிடம் கடலைப் பாக்கெட்டுகள் வாங்குவார்கள்.

சில சிடுமூஞ்சிக் கண்டக்டர்கள் அவன் படிக்கட்டில் காலை வைத்தாலே நாயை விரட்டுகிற மாதிரி விரட்டித்தள்ளுவார்கள். வேறு சில கண்டக்டர்கள் தயவான்கள்போல் அவனை பஸ்சுக்குள் அனுமதித்து விட்டு, இறங்கிப்போகையில் ஒரு வேர்க்கடலைப் பாக்கெட்டை முழுசாய் லவட்டிக்கொள்வார்கள். ஐந்து பாக்கெட்டு கள் விற்றால் அழகுக்குக் கிடைக்கக் கூடிய ஐம்பது பைசா அநியா யமாய்ப் பறிபோகும்.

"அண்ணே... அண்ணே..." என்று கண்டக்டரிடம் கெஞ்சு வான். குழைவான்.

"பஸ்சுக்குள்ளே எவ்வளவு பாக்கெட் விக்கறே? ஒண்ணு தந்தா கொறஞ்சாபோய்டுவே? அப்றம் நாளைலேர்ந்து இந்த கேட்ல ஒரு பஸ்ல காலை வைக்க முடியாது... ஜாக்ரதை. அங்க பாரு எஸ்ஸார்ட்டி வந்து நிக்குது. ஓடு."

அந்த நிமிஷம்தான் காத்திருப்பு வரிசையில் கோத்துக் கொண்ட அந்த பஸ்சுக்கு ஓடுவான். தினமும் அடித்துப் பிடித்து எழுபத்தைந்திலிருந்து நூறு பாக்கெட்டுகள் வரை விற்று விடுவான்.

அதற்கப்புறம் பாத்திரம் தேய்க்கவும் துணி துவைக்கவும் வீடுகளுக்குப்போவதை அம்மா நிறுத்திவிட்டாள். அந்த எலும்பை உருக்கும் இருமலால் நிறுத்தப்பட்டு விட்டாள் என்றுதான் சொல்ல வேண்டும். அவளால் உடம்புக்கு முடியவில்லை என்பது ஒருபுறம். எச்சில் தெறிக்க அவள் இருமுவதை மற்றவர்கள் அசூசையாய்ப் பார்த்தார்கள் என்பது இன்னோர்புறம்.

அழகுவின் வியாபார நிம்மதி ஒரு மாதம் கூட நீடிக்க வில்லை. அன்றைக்கு கேட் சாத்தி பஸ் ஒன்று வந்து நின்றதும் -

"கல்லே... கல்லே... வேர்க்கல்லே..."

பஸ்சுக்கு அந்தப்பக்கம் அசரீரி மாதிரி புதிய குரல். அழகு திடுக்கிட்டு பஸ்ஸை சுற்றிக்கொண்டு அந்தப்பக்கம்போய்ப் பார்த் தான். அவனை மாதிரியே இன்னொரு பொடியன், அவனிடம் ஐம்பது காசு கொடுத்து ஜன்னல் வழியாக ஒருவர் வேர்க்கடலைப் பாக்கெட்டை வாங்கிக் கொண்டிருந்தார்.

அழகுக்குள் ஆத்திரப்புயல். தன்னுடைய காசை இன்னொ ருவன் தட்டிப் பறிக்கிற உணர்வு. அவன் தோளைத் தொட்டுத் திருப்பினான்.

"யார்ரா நீ?"

"ராக்கப்பன்."

"இங்க எதுக்கு கடலை விக்கறே?" 

"வித்தா உனக்கென்ன?"

"நாந்தான் மொதமொதல்லே இங்கே வந்தது. ஒரு மாசமா விக்கறேன் தெரியுமா?" 

"செட்டியார் கேட்டாண்டபோய் என்னைக் கடலை விக்கச்சொன்னார். அவ்வளவுதான் எனக்குத் தெரியும். கல்லே... கல்லே... வேர்க்கல்லே...." 

"டேய் மரியாதையா வேற எங்கயாச்சும்போய்டு."

"போவலைன்னா?"

"கை வெச்சா கன்னம் பிஞ்சுரும்." 

"இந்த மிரட்டலெல்லாம் இளிச்சவாயன் எவன்கிட்டயாச்சும் வெச்சுக்க. என்கிட்ட வாணாம். கல்லே... கல்லே... வேர்க்கல்லே..."  

"தம்பி, இங்க ஒரு பாக்கெட் குடு."

ராக்கப்பன் வேர்க்கடலைப் பாக்கெட்டை எடுத்துக் கொடுக்க, அழகு உட்சபட்ச கோபத்தைத் தொட்டான். அந்தப் பாக்கெட்டைத் தட்டி விட்டான். ராக்கப்பன் அழகுவின் கூடை யைத் தள்ளினான். பாக்கெட்டுகள் சிதறின. அழகு அவன் சட்டைக் காலரைப் பற்றி உலுப்பி, அவன் இவன் கன்னத்தில் அறைந்து, காலை இடறி, இருவரும் தரையில் புரண்டு, புழுதியில் குளித்து... 

ரயில் இரைச்சலுடன் கடந்து, கேட் திறந்தது. பஸ்கள் ஒவ்வொன்றாய்க் கரைந்தன. ஒரு பாக்கெட் கூட விற்கவில்லை.

அதற்கப்புறம் ஒரு ஒப்பந்தம் பண்ணிக் கொண்டார்கள். கேட்டுக்கு இந்தப் பக்கம் அழகு விற்பது. அந்தப் பக்கம் ராக்கப்பன். நிலைமை சரியானது. விரோதம் கலைந்து ஸ்நேகம் தழைத்தது. ராக்கப்பனை ராக்கு என்று செல்லமாய்க் கூப்பிட்டான் அழகு. கேட் திறந்திருக்கும் சமயங்களில் மர நிழலில் உட்கார்ந்து இருவரும் ரஜினி படம் பற்றி அரட்டை அடிப்பார்கள்.

அம்மாவின் உடம்பு சற்று மோசமாயிற்று. இருமல் சூரணம் வாங்க ஒன்றோ, இரண்டோ பணம் பத்தலை என்றால் சில சமயம் ராக்கு இரக்கப்பட்டுக் கைமாற்றுத் தருவான்.

இந்தக் கூட்டணி விற்பனைக்கும் விரைவில் இடிவிழுந்தது. புற்றீசல் மாதிரி மேலும் சில வேர்க்கடலை விற்கும் பையன்கள் அங்கே தோன்றினார்கள். அங்கு கேட் சாத்தும்போது வியாபாரம் ஆவது புரிந்து சுந்தராபுரத்துக் கடைக்காரர்கள் எல்லாரும் ஆளுக் கொரு அன்றாடங்காய்ச்சிப் பையனை அனுப்பி வைத்தார்கள்.

இந்த ஜனங்களுக்கு ஒரு பழக்கம். செடி சத்தையை அகற்றி, முள் புதர்களை விலக்கிப்போடும் வரை வேடிக்கை பார்ப்பார்கள். பாதை கிடைத்து விட்டால் மந்தை மந்தையாய்ப் புகுந்து பாதைபோட்டவனையே மிதித்துக் கொண்டு முன்னால்போவார்கள்.

அதற்கப்புறம் கேட்டுக்கு இங்குமங்கும் பஸ்கள் வந்து நின்றால் -

"கல்லே... கல்லே... வேர்க்கல்லே..."

"கல்லே... கல்லே... வேர்க்கல்லே..."

"கல்லே... கல்லே... வேர்க்கல்லே..."

ஏகப்பட்ட குரல்கள்.

ஒரு பாக்கெட் விற்பது கூட ஜாக்பாட் விழும் மாதிரி, லாட்டரி அதிர்ஷ்டம் மாதிரி ஆகிப்போனது. அதற்கும் எத்தனை சர்க்கஸ்கள், மாரத்தான்கள்.

அண்ணாச்சி பாக்கெட்டுக்குப் பதினைந்து பைசா என்று கமிஷனை உயர்த்திய பின்னும் அழகு திணறினான். ஒரு நாளைக் கெல்லாம் நாற்பது பாக்கெட் விற்றால் அது பாக்ஸ் ஆபீஸ் ஹிட்.! ஒரு பஸ் வந்து நின்றால் எல்லோரும் பறந்தடித்துக் கொண்டு ஓடி னார்கள். கடலை வாங்கும் ஆசாமிக்கு எந்த மூஞ்சி பிடிக்கிறதோ அவனுக்கு ஒரு பாக்கெட் விற்கும். ஐம்பது பைசாவுக்கு என்னமாய் அடிதடி!

அஞ்சுக்கும் பத்துக்கும்போராட்ட நாட்கள் நகர்ந்தன.

அன்றைக்கு அழகு ரொம்ப படபடப்பாயிருந்தான். எந்த வண்டி வந்தாலும் பேய்த்தனமாக ஓடிப்போய், கல்லே... கல்லே... என்று வெறி பிடித்த மாதிரி கத்தினான். அவன் சத்தத்தையும், வேகத்தையும் பார்க்க ராக்குவுக்கே பயமாய் இருந்தது.

"அளகு, ஏன் ஒரு மாதிரி இருக்கே? வெறி பிடிச்ச மாதிரி அலையறே?"

"இன்னிக்கு ஒண்ணல்ல... ரெண்டல்ல... நூத்தம்பது பாக் கெட்டை நா வித்தாகணும் ராக்கு!" 

"விளையாடறியா? அம்பது வித்தா அதிசயம். தட்டைக் கூடையைத் தூக்கிக்கிட்டு பத்துப் பேராச்சும் சுத்தறோம். வாங்கற வனை விட விக்கறவன் அதிகமா இருப்பான்போலிருக்கு. யாரைக் குத்தஞ் சொல்றது! எல்லாரும் வயத்துப் பசிக்காகப் பறக்கறாங்க." 

அழகுவின் கண்ணில் கண்ணீர் சுரந்து மின்னியது.

"நா இன்னிக்கு வயத்துப் பசிக்காக விக்கலை ராக்கு. அம்மா இருமல் முத்திப்போய் தர்மாஸ்பத்திரில கிடக்கறாங்க. மருந்து வாங்கணும். ஊசி மருந்து இருவத்தஞ்சு ரூபா. ஆஸ்பத்திரில ஸ்டாக்கு இல்லியாம். அதைப்போட்டாத்தான் அம்மா பிழைக்கும்."

கேட் சாத்தினார்கள்.

ஒரு பஸ் கேட் அருகே வந்து ஓய பாய்ந்தான் அழகு.  

"தம்பி, சாயந்திரத்துக்குள்ள ஊசி மருந்து வாங்கிட்டு வா."

"கல்லே... கல்லே... வேர்க்கல்லே..."

அந்த பஸ்சில் அவ்வளவாய்க் கூட்டமில்லை. வேகமாய் ஒரு ரவுண்ட் அடித்தான். 'அம்மா அழாதம்மா. அண்ணாச்சி கிட்ட ஒரு கூடை நிறைய பாக்கெட்போடச் சொல்லியிருக்கேன். அத்தனையும் வித்துப்புட்டு சாயந்திரம் மருந்தோட வரேன்.' மன்னார்சாமி குறுக்கே வந்து இரண்டுபோணியைக் கெடுத்தான்.

ரயில்வே கேட்டுக்கு அந்தப் பக்கம் ஜனமூட்டையை அடைத்துக் கொண்டு இன்னொரு பஸ் விர்ரென வந்து நின்றது.. இன்று ஒரு பஸ்சை விடக்கூடாது.

'பஸ்சுக்கு நாலு பாக்கெட்.'

'சிஸ்டர், ஏழாம் நம்பர் பெட் சனியன் எப்ப இருமலை நிறுத்தும்?' 

சில பையன்கள் அந்த பஸ்சை நோக்கி ஓடினார்கள். 'முந்து அழகு. விற்பனைக்கு முந்து அழகு. ஊசி மருந்து!'

அழகு சுதாரித்து ரயில் கேட்டின் சுழலும் விக்கட் நுழைவில் புகுந்தான்.

மனசு ஆஸ்பத்திரியிலும், உடல் பஸ்சை நோக்கியும் நிலைத்தன. வேறு சிந்தனை இன்றி அந்த பஸ்சையே குறி வைத்து தண்டவாளத்துக்குக் குறுக்கே படுவேகமாய் ஓடினான்.

தட்!

ஒரு துரதிர்ஷ்ட விநாடி அழகுவின் காலை தண்டவாளத் தில் இடறிவிட்டது.

"அம்மாஆ..."

தண்டவாளத்தின் நடுவே கடலைப்பாக்கெட்டுகள் சிதற குப்புற விழுந்தான் அழகு.

ரயில் வருவதைக் கூட கவனிக்காமல் குறுக்கே பாய்கிறானே இந்த அழகு! விரைந்து வரும் ரயிலைப் பார்த்து ராக்குவின் கண்கள் பயத்தில் விரிந்தன.

"அளகு... அளகு..." - கத்தினான் ராக்கு.

என்ஜின் டிரைவர் விழுந்து கிடக்கும் அழகுவைப் பார்த்து விட்டார். பிரேக்கைப் பிரயோகித்தார். உடனே நிற்குமா அந்த ராட்சத வாகனம். எழ முயலும் அழகுவை ஆவேசமாய் சக்கரங்கள் விழுங்கின. சிவப்புத் தெறிக்க அவனை அரைத்து, அரை கிலோ மீட்டர் தூரம் இழுத்துக் கொண்டுபோய் நின்றது நீளமான அந்த எக்ஸ்பிரஸ் ரயில்.

ரத்தத் துகள்களாய்க் கிடக்கும் அழகுவைச் சுற்றி, நிமிஷத் தில் கும்பல் கூடியது. ராக்கு சதைத் துணுக்குகளைப் பார்த்து தலை தலையாய் அடித்துக் கொண்டு அழுதான்.

றக்குறைய அதே விநாடி -

ரயிலின் கடைசி கம்பார்ட்மென்ட்களில் குரல்கள்.

  "கல்லே... கல்லே... வேர்க்கல்லே." 

"என்னாச்சு தம்பி? ஏன் ரயில் நின்னுருச்சு?" 

"ஆக்ஸிடெண்ட்டு. ஒரு பையன் ரயில்ல அடிபட்டு செத்துட்டான். கல்லே... கல்லே... வேர்க்கல்லே."◼︎

அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப்போட்டியில் முதல் பரிசு பெற்ற கதை, கல்கி - 07 ஆகஸ்ட் 1994
❌