Normal view

Received before yesterdayநுட்பம்

நடிகர் ராஜேஷ்!

நடிகர் ராஜேஷ்! நடிகராக நான் முதன் முதலில் இவர் நடித்துப் பார்த்த திரைப்படம் ‘அந்த 7 நாட்கள்’. அப்போது ராஜேஷ் என்ற நடிகர் குறித்த எந்த அபிர்ப்பிராயமும் கிடையாது. அதன் பிறகு சில வருடங்களாக குறிப்பாக கொரோனா காலத்தில் இருந்து அவர் நேர்காணல்கள் செய்து வந்த வீடியோக்கள் (இவர் பிறரை செய்த நேர்காணல்கள்) நிறைய கண்களில்...

#USA: ஐஸ்கிரீம் சுவையும், கல்லூரி மதிப்பெண்களும்!

ஐஸ்கிரீம் சுவையும், கல்லூரி மதிப்பெண்களும்! #usatrip2025_ckb-9 டெட் ட்ரூஸ்! அமெரிக்காவில் இந்த நிறுவனத்தின் ஐஸ்க்ரீமின் சுவை நம்மை கட்டிப் போடுகிறது என்றால், அங்கு பணி புரியும் இளைஞர்களின் நினைவாற்றல் என்னை வியக்க வைக்கிறது. ஆம். ஒரு வீட்டில் இருந்து பத்து பேர் வந்து பத்துவிதமான ஐஸ்க்ரீம் மற்றும் டாப்பிங் சொன்னாலும் இந்த நிறுவனத்தில் பணிபுரியும் இளைஞர்கள்...

#Ai: விருது வாங்கும் வயதான சிறுவன்!

விருது வாங்கும் வயதான சிறுவன்! சென்ற பதிவில் என் புகைப்படம் எதையுமே நான் கொடுக்காமல் என்னை வரைந்து கொடுக்க சொன்னதற்கு ஏஐ புரிந்து கொண்டு மிக சரியாக (சென்ற பதிவை பார்க்கவும். Link in comment) வரைந்து தந்தது அல்லவா? இன்று ஒரு சிறுவன் ஒரு புத்தகம் எழுதி இருப்பதாக வரையச் சொன்னேன். ஏஐயும் சிரமேற்கொண்டு...

#Readers Ride: விவேகானந்தர் நூலும், திருவல்லிக்கேணி பார்த்த சாரதி பெருமாளும்!

நூலகத்திலிருந்து புத்தகத்தை எடுத்து வாசித்த அன்பரது நூல் அனுபவம்! ‘இப்படிக்கு அன்புடன் மனசு!’ – விவேகானந்தரின் வாழ்க்கை சம்பவங்களுடன் என் வாழ்வில் எதேச்சையாக நடந்த சில நிகழ்வுகளை குறிப்பிட்டு எழுதிய நூல். இதனை உளவியல் நூலாகவே உணர்ந்து குறிபிட்ட அன்பருக்கு நன்றி! நேற்று இமெயிலிலும், வாட்ஸ் அப்பிலும் வந்திருந்த கடிதத்தை அனுமதியுடன் பகிர்கிறேன். —- வணக்கம்...

#Ai: மே(லா)ஜிக் செய்யும் ஏஐ!

மே(லா)ஜிக் செய்யும் ஏஐ! ‘காம்கேர் புவனேஸ்வரி எழுதிக் கொண்டிருப்பதைப் போல் படம் வரைந்து தா’ என ஏஐயிடம் கேட்டதற்கு, ஏஐ  வரைந்து கொடுத்த படத்தைப் பாருங்கள் (இடப்பக்கம்). என் புகைப்படம் எதையும் மாடலுக்காக ஏஐக்குக் கொடுக்கவில்லை. ஆனால் அது எப்படி என் உருவத்தை வரைந்து கொடுக்க முடியும், அதற்கு எப்படி என்  உருவம் தெரியும் என...

#USA: இராணுவப் பயிற்சி! (மே 18, 2025)

இராணுவப் பயிற்சி! #usatrip2025_ckb-8 பாஸ்டனில், தங்கள் மகளுடைய பட்டமளிப்பு விழாவிற்காக சிங்கப்பூரில் இருந்து வந்திருந்த ஒரு குடும்பத்தினரை சந்தித்தேன். அவருடைய மகன் +2 முடித்திருந்தார். பால் வடியும் முகத்துடன் சமர்த்தாக அப்பா அம்மாவுடன் நின்று கொண்டிருந்தவனிடம் நானாகத்தான் பேச்சு கொடுத்தேன். தமிழ் அழகாக பேசினான். தேவையான இடத்தில் மட்டும் ஆங்கிலம். அவன் முகம் ஏதோ ஒரு...

#USA: பல்கலைக்கழக பாஸ்டன்! (மே 10, 2025)

பல்கலைக்கழக பாஸ்டன்! #usatrip2025_ckb-7 அமெரிக்காவில் பாஸ்டன் நகரத்துக்கு வேறு பெயர் கொடுக்கலாம் என்றால் பல்கலைக்கழக நகரம் அல்லது கல்லூரி நகரம் என்று கொடுக்கலாம். ஏனெனில், நகரமே புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களாலும், கல்லூரிகளாலும் நிரம்பி வழிந்தது. பாஸ்டன் பல்கலைக்கழகம், பெர்க்லி காலேஜ் ஆஃப் மியூசிக், ஹார்வேர்ட் பல்கலைக்கழகம், எம்.ஐ.டி, நார்த் ஈஸ்டர்ன் பல்கலைக்கழகம் என பிரமாண்டமான பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும்...

மொழி ஒலிம்பிக்ஸ்

15 May 2025 at 13:30
polyglot

மொழி மீது ஆர்வமுள்ளவர்களுக்காக பன்மொழி ஒலிம்பிக்ஸ் என்ற போட்டி நடத்தப்படுகிறது. அமெரிக்க ராணுவத்தில் பன்மொழியாளர்களுக்கு தனிப்பட்ட பயிற்சியும் அதிக ஊதியமும் வழங்கப்படுகிறது.  

polyglot

ஆங்கிலத்தில் பாலிகிளாட் (Polyglot) என்ற ஒரு சொல் உண்டு.  பன்மொழிகளை அறிந்தவர்கள் பாலிகிளாட் என அழைக்கப்படுகிறார்கள். பன்மொழி என்றால் பல மொழிகளைச் சரளமாகப் பேசவும், எழுதவும், புரிந்துகொள்ளவும் திறன் உடையவர்களாக இருந்தால் மட்டுமே அவர்கள் பன்மொழியாளர்களாக அறியப்படுகிறார்கள். இது ஒருவரின் மொழிக் கற்றல் திறன் மற்றும் மொழிப் புலமை ஆகியவற்றைக் குறிக்கிறது. எத்தனை மொழிகளை அறிந்தவரை பன்மொழியாளர் என்பது என்ற வரையறை ஏதும் இல்லை, பொதுவாக நான்கைந்து மொழிகளாவது தெரிந்திருக்க வேண்டும். 

அமெரிக்க ராணுவத்தில் பன்மொழியாளர்கள்

அமெரிக்க ராணுவத்தில் பன்மொழியாளர் என்பது மிக முக்கியமான பொறுப்பாகக் கருதப்படுகிறது. எதிரி அல்லது வெளிநாட்டு மக்கள் பேசும் மொழிகளைப் புரிந்து மொழிபெயர்த்தல், வெளிநாட்டுத் தகவல்கள் அடங்கிய ஆவணங்கள், பேச்சுகள், செய்திகளைப் புரிந்து கொள்வது மற்றும் போரிலோ அல்லது அமைதி நடவடிக்கைகளிலோ பொதுமக்கள் பேசும் மொழியில் பேசி அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்துவதற்காக இந்த பன்மொழியாளர்கள்  பயன்படுத்தப்படுகிறார்கள்.

ராணுவத்தால் நடத்தப்படும் பாதுகாப்பு மொழி நிறுவனம் என்னும் இடத்தில் பல்லாயிரம் ராணுவ வீரர்கள் வெளிநாட்டு மொழிகளில் பயிற்சி பெறுகிறார்கள். உலகிலேயே மிகப்பெரும் மொழிப் பயிற்சி மையமாக இது செயல்படுகிறது. அரபி, பாஷ்தோ, உருது, ரஷ்யம், சீனம், கொரியன், பிரெஞ்சு, ஸ்பானிஷ் ஆகிய மொழிகளுக்கு அமெரிக்க ராணுவத்தில் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இது தவிரப் பிற மொழிகளைக் கற்பது, கற்பவரின் விருப்பம். 

மொழி ஒலிம்பிக்ஸ்

பன்மொழியாளருக்கான ஒலிம்பிக்ஸ்ல் பங்கேற்பவர்கள் பல மொழிகளில் உள்ள பணிகளைச் செய்ய வேண்டும். எடுத்துக்காட்டாக மொழிபெயர்ப்பு, கேட்பது, புரிந்துகொள்வது, வாசித்து விளக்கம் தருவது அல்லது உரையாடல் போன்றவற்றைச் செய்ய வேண்டும். பங்கேற்பாளர்களின் பன்மொழி திறமையைச் சோதிப்பதே இந்த போட்டியின் நோக்கம். 

இந்த போட்டியில் என்ன நடக்கும்?

ஒரு மொழியில் கொடுக்கப்பட்ட உரையை மற்றொரு மொழிக்கு மொழிபெயர்க்க வேண்டும்.  ஒரு மொழியில் பேசும் ஒலி அமைவைக் கேட்டு அதைப் புரிந்து எழுத வேண்டும். பல மொழிகளில் உரையாடல் நடத்தும் திறன் சோதிக்கப்படும். பல மொழிகளில் உள்ள உரைகளை வாசித்து அதன் பொருளை விவரிக்க வேண்டும். 

பன்மொழி ஒலிம்பிக்ஸ் என்பது மொழி ஆர்வலர்கள், மொழியியல் மாணவர்கள், மொழி கற்க விருப்பமுள்ளவர்கள் இடையே புகழ் வாய்ந்தது. இதில் ராணுவ வீரர்கள் உள்பட ஆயிரக்கணக்கான பொதுமக்களும் பங்கேற்பார்கள். 

வணிகத்திலும், கல்வியிலும், கலாச்சார பரிமாற்றத்திலும், பாதுகாப்பு அமைப்பிலும் மொழித் திறமையின் முக்கியத்துவம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இந்த மாதிரியான போட்டிகள் மாணவர்களுக்கும் ஆர்வலர்களுக்கும் நல்ல வாய்ப்புகளை அளிக்கின்றன.

The post மொழி ஒலிம்பிக்ஸ் appeared first on செல்லினம்.

ஆபரேஷன் சிந்தூரை முன்னெடுத்த பெண் சிங்கங்கள்!

ஆபரேஷன் சிந்தூரை முன்னெடுத்த பெண் சிங்கங்கள்! கர்னல் ஷோபியா குரேஷி மற்றும் விங் கமாண்டர் வியோம்கா சிங் – ஆபரேஷன் சிந்தூரை முன்னெடுத்து சென்ற இரண்டு பெண் சிங்கங்கள்… இராணுவ அதிகாரிகள். ராணுவத்தில் ஆண் மற்றும் பெண் அதிகாரிகள் இடையே எந்த வேறுபாடும் இல்லை. இவர்கள் பெண்கள் என்பதற்காக அந்தப் பொறுப்பில் தேர்ந்தெடுக்கப்படவில்லை, மாறாக அந்தப்...

அனுப்பினால் போகாத பணம்

14 May 2025 at 13:30
UPI

இந்தியாவின் ஒருங்கிணைந்த பணப்பரிவர்த்தனை இடைமுகம் (UPI) கடந்த சில வாரங்களாக அவ்வப்போது செயல்படாமல் போகிறது. இதனால் நாடு முழுவதும் நிதிப் பரிவர்த்தனைகள் பாதிக்கப்படுகின்றன. குறிப்பாக ஏப்ரல் 12-ம் தேதி ஏற்பட்ட செயலிழப்பு கடந்த மூன்று ஆண்டுகளில் பணப்பரிவர்த்தனை இடைமுகத்தில் நடந்த மிக நீண்ட நேரச் செயலிழப்பாகக் கருதப்படுகிறது. அன்று சுமார் ஐந்து மணி நேரம் வரை பாதிக்கப்பட்டிருந்தது. 

UPI

இதன் காரணமாக, இந்தியாவின் மென்பொருள் நிதி சூழலுக்கு ஏற்ப உருவாக்கப்பட்டுள்ள பணப்பரிவர்த்தனை இடைமுகம் அடிக்கடி ஏன் செயலிழக்கிறது என்ற கேள்வி எழுகிறது. இந்த குழப்பங்களுக்குப் பின்னணியில் உள்ள காரணங்களைப் பற்றி அறிந்து கொள்வோம். 

எப்படிச் செயல்படுகிறது?

இந்தியத் தேசிய கொடுப்பனவு கழகம் (National Payments Corporation of India – NPCI) உருவாக்கிய பணப்பரிவர்த்தனை இடைமுகம், எளிய இரண்டு கட்ட அங்கீகார செயல்முறையின் மூலம், ஒரு நபருக்கும், வங்கிகளுக்கும் இடையே பணப் பரிமாற்றம் செய்ய உதவுகிறது. இந்த அமைப்பு செயல்பட முதலில் வங்கிகள் ஒருங்கிணைந்த பணப்பரிவர்த்தனை இடைமுகத்துடன் இணைக்கப்பட வேண்டும். அதேபோல் வாடிக்கையாளர்களும் தங்கள் வங்கிக் கணக்குகளை ஒரு பதிவு செய்யப்பட்ட திறன்பேசி எண்ணுடன் பரிவர்த்தனை சேவை வழங்கும் செயலி (PSP) உடன் இணைக்க வேண்டும். 

ஒவ்வொரு ஒருங்கிணைந்த பணப்பரிவர்த்தனை இடைமுகமும் தேசிய கொடுப்பனவு கழகத்தால் வழிநடத்தப்படுகிறது. இது கடவுச்சொற்கள் போன்ற முக்கியமான வங்கி தகவல்களைக் குறியாக்கம் செய்து பாதுகாப்பாகப் பரிவர்த்தனை விவரங்களை வாடிக்கையாளரின் வங்கிக்கு அனுப்புகிறது. எனவே தேசிய கொடுப்பனவு கழகத்திடம் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் அந்த குறியாக்கத் தகவல்களை வங்கிகள் பெற முடியாது இதனால் பரிவர்த்தனைகள் தோல்வியடைகின்றன. 

நீண்ட நேரச் செயலிழப்புக்கான காரணம்

பொதுவாக ஒரு பரிவர்த்தனைக்குப் பின் பயனாளியின் வங்கியிலிருந்து உறுதிப்படுத்தல் வராதபட்சத்தில் வங்கிகள் பரிவர்த்தனை சரிபார்ப்புக் கோரிக்கையை அனுப்புகின்றன. இது பெரும்பாலும் பயனாளி வங்கியின் சேவையகம் செயல்படவில்லை என்றால் மட்டுமே ஏற்படும். தேசிய கொடுப்பனவு கழகத்தின் வழிகாட்டுதலின் படி, ஒவ்வொரு 90 விநாடிகளுக்கு ஒரு முறை மட்டுமே இந்த உறுதிப்படுத்தல் கோரிக்கையை அனுப்ப வேண்டும். 

ஆனால் ஒருங்கிணைந்த பணப்பரிவர்த்தனை இடைமுகம் நீண்ட நேரம் செயல்படாமல் இருந்ததற்கு இந்த உறுதிப்படுத்தல் கோரிக்கைகள் மிக அதிக அளவில் அனுப்பப்பட்டதே காரணமாகக் கூறப்படுகிறது. எடுத்துக்காட்டாக, பரிவர்த்தனை சேவை வழங்கும் செயலி வங்கியின் பதில்கள் வருமுன் பலமுறை இந்த உறுதிப்படுத்தல் கோரிக்கைகளை அனுப்பி தேசிய கொடுப்பனவு கழகத்தின் சேவையகத்தில் அதிகமாய் சுமை ஏற்க வைத்தன. இந்த பெரிய அளவிலான சிக்கலே நீண்ட நேரச் செயலிழப்புக்கு வழிவகுத்தது. 

தேசிய கொடுப்பனவு கழகம் இந்த பிரச்சனையை கண்டறிந்து சம்பந்தப்பட்ட பரிவர்த்தனை சேவை வழங்கும் செயலியின் உறுதிப்படுத்தல் அம்சத்தை உடனடியாக நிறுத்தச் சொல்லியது. அதைத்தொடர்ந்து பணப்பரிவர்த்தனை இடைமுகத்தில் ஏற்பட்ட சிக்கலுக்குத் தற்காலிகத் தீர்வு கொண்டுவரப்பட்டது. இந்த நடவடிக்கைகள் விரைவாகச் செய்யப்பட்டிருந்தாலும் அதற்குள் நாடு முழுவதும் கோடிக்கணக்கான பயனாளிகள் பாதிக்கப்பட்டிருந்தனர். 

இந்தியாவின் ஒருங்கிணைந்த பணப்பரிவர்த்தனை இடைமுகம், உலகிலேயே மிக வலுவான மென்பொருள் பரிவர்த்தனை அமைப்பாக இருந்தாலும் சமீபத்திய செயலிழப்புகள்,  சேவை வழங்கும் வங்கிகள் விதிகளைக் கடைப்பிடிக்காததில் உள்ள பிழைகளை வெளிக்கொண்டு வந்துள்ளன. வங்கிகள், சேவை வழங்கும் செயலிகள் மற்றும் தேசிய கொடுப்பனவு கழகம் இடையே சிறந்த ஒத்துழைப்பு மற்றும் நேரடி கண்காணிப்பு அம்சங்களை உறுதி செய்தால்தான் ஒருங்கிணைந்த பணப்பரிவர்த்தனை இடைமுக அமைப்பின் நம்பகத்தன்மையை நிலைநிறுத்த முடியும்.

  • சத்யா கோபாலன்

The post அனுப்பினால் போகாத பணம் appeared first on செல்லினம்.

முதலீட்டு முதல்வன் வாரன் பஃபெட்

Tim-Cook-and-Warren-Buffett

வாரன் பஃபெட் பெர்க்ஷைர் ஹத்தவே நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்து, பங்குதாரர்களையும் பொருளாதார உலகத்தையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். இந்த முக்கியமான அறிவிப்பு, ஒமாஹாவில் நடந்த வருடாந்திர பங்குதாரர் கூட்டத்தில் வெளியிடப்பட்டது. கடந்த அறுபது ஆண்டுகளாக பெர்க்ஷைர் ஹத்தவே நிறுவனத்தின் வளர்ச்சியை வழிநடத்தி வந்த பஃபெட், தனது வாரிசுக்காக இப்பதவியை விட்டுவிலக்கினார்.

Tim-Cook-and-Warren-Buffett

2026 முதல், துணைத் தலைவர் கிரெக் ஏபல் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக பதவியேற்கிறார். 94வது வயதிலும் பஃபெட் நிறுவனத்தின் தலைவர் பதவியில் தொடர, ஏபல் நிர்வாகத் திறமையால் பஃபெட்டின் நம்பிக்கையையும், டிம் குக்கின் பாராட்டையும் பெற்றுள்ளார்.

பஃபெட் ஒரு காங்கிரஸ் மன்ற உறுப்பினரின் மகனாக 1930-இல் பிறந்தவர். ‘ஓமாஹாவின் தீர்க்கதரிசி’ என அழைக்கப்படும் இவர், பெஞ்சமின் கிராஹாமின் வழிகாட்டலில் முதலீட்டு கொள்கைகளைப் படித்து, ஒரு நிதி நெருக்கடியில் இருந்த ஆடை நிறுவனத்தை மிகப்பெரிய முதலீட்டு வல்லரசாக மாற்றினார்.

பஃபெட் தொழில்நுட்ப பங்குகளில் முதலீட்டை தவிர்த்து வந்தாலும், 2016-இல் ஆப்பிளில் முதலீடு செய்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். ஆப்பிளை ஒரு வாடிக்கையாளர் நம்பிக்கையுடன் கூடிய நுகர்வோர் நிறுவனமாகக் கண்டு முதலீடு செய்த பஃபெட், பெர்க்ஷைருக்கே மிகப்பெரிய லாபத்தை பெற்றுத்தந்தார். ஆனால் 2023-24 காலப்பகுதியில் 515 மில்லியன் பங்குகளை விற்றது பலரிடத்தில் கேள்விகளை எழுப்பியது. இதை அவர் வரி திட்டமிடல் மற்றும் எதிர்கால சந்தை குழப்பங்களை எதிர்நோக்கிய நடவடிக்கையாக விளக்கியுள்ளார்.

நன்றாக நிர்வாகிக்கப்படும், மதிப்பை விட குறைவான விலையில் உள்ள பங்குகளை நீண்டகாலத்திற்கு வாங்கி வைத்திருப்பதே பஃபெட்டின் முதலீட்டு தத்துவம். கோகா-கோலா, அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் போன்ற நிறுவனங்கள், அவரது கோட்பாடுகளுக்கு ஏற்ப, பெர்க்ஷைர் போர்ட்ஃபோலியோவில் நீண்ட காலமாக உள்ளன. ஸீஸ் காம்பனி, ஃப்ரூட் ஆஃப் த லூம், டெய்ரி க்வீன் போன்ற நிறுவனங்களை முழுமையாக வாங்கினாலும், அவற்றின் நிர்வாகத்தை தொடர அனுமதித்துள்ளார்

பஃபெட் முதலீட்டாளராக மட்டுமல்ல, மாபெரும் நன்கொடை வழங்குபவராகவும் உலகத்தை ஈர்த்தவர். 2006 ஜூனில், தனது பெரும்பாலான செல்வத்தை பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளைக்கு வழங்கப்போவதாக அறிவித்தது உலகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த அறக்கட்டளை உலக சுகாதாரம், நூலகங்கள் மற்றும் பள்ளிகள் உள்ளிட்ட சமூக நலப்பணிகளில் கவனம் செலுத்துகிறது. இது உலகின் மிகப்பெரிய வெளிப்படையான நன்கொடையாளர்களில் ஒன்றாக மாறியுள்ளது. பதவியில் இருந்து விலகினார் என்றாலும், பஃபெட்டின் சிந்தனையும் செயல்முறையும் உலகின் மிக முக்கிய முதலீட்டுத் துறையிலேயே தொடர்ந்து ஒளிவீசும்.

  • நவீனா

The post முதலீட்டு முதல்வன் வாரன் பஃபெட் appeared first on செல்லினம்.

செய்தியைச் சுருக்கித் தரும் வாட்சாப்

whatsapp

வாட்சாப்பில் நிரம்பி வழியும் செய்திகளால் அவதிப்பட்டது உண்டா? முக்கியமான தகவல்களைப் பெற பல மணி நேர உரையாடல்களில் தேடி அலைய வேண்டிய அவசியம் இனி இல்லை என்கிறது வாட்ஸ்ஆப்பின் இந்த புதிய அம்சம்.

whatsapp

நம்மில் பலரிடம் வீட்டு ஜன்னல்களைக் காட்டிலும் அதிக அளவில் வாட்ஸ்ஆப் குழுக்கள் இருக்கும். முக்கியத் தகவல் பரிமாற்றம், அரட்டை, செய்திப் பகிர்வு, சமூக நல்லிணக்கம் என அனைத்தையும் நாம் அதன் மூலம் செய்து கொண்டிருக்கிறோம். அதனால்தான் சில குழுக்களை நாம் முதன்மையாக (Pinned) வைத்திருக்கிறோம், சிலவற்றை நிரந்தரமாக அமைதி (Mute) ஆக்குகிறோம். ஆனால் அவற்றிலிருந்து முக்கியத் தகவல்களை நாம் தேட நேர்ந்தால், பல செய்திகளைத் தொட்டு நகர்த்தித் துழாவ வேண்டியிருக்கும். இந்தச் சவாலை எதிர்கொள்ள வாட்சாப் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது. 

வாட்சாப்பின் செய்திச் சுருக்கம் 

பலநாள் திறக்கப்படாத உரையாடல்கள், குழுக்களில் ஒளிந்திருக்கும் முக்கியமான தகவல்களை இனி எளிதில் கண்டுபிடித்து விடலாம். செயற்கை நுண்ணறிவை அதற்காக மெட்டா நிறுவனம் பணியமர்த்தி இருக்கிறது. தேவையான தகவல் இருக்கும் என நினைக்கும் (அல்லது) படித்தறிந்து கொள்ள வேண்டிய குழுவின் செய்திகளை செயற்கை நுண்ணறிவு முற்றிலுமாகப் படித்துவிட்டு, ஒரே செய்திச் சுருக்கமாக (summary) கொடுக்கும் அம்சம் வாட்சாப்பில் கொண்டு வரப்பட்டுள்ளது. ஏற்கெனவே வாட்சாப்பில் செயல்பாட்டில் இருக்கும் மெட்டா செயற்கை நுண்ணறிவுதான் இந்த வேலையை நமக்காகச் செய்து தருகிறது. இந்தப் புதிய அறிமுகம், அதிக செய்திகளைப் படித்தறிய நேரமில்லாதவர்களுக்குப் பயனளிக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 

எப்படி இயக்குவது? 

செய்திகளைச் சுருக்கும் அம்சம் இப்போதைக்கு ஆண்டிராய்டு வாட்சாப் முன்னோட்டப் (Android Whatsapp Beta) பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. ஒவ்வொரு உரையாடலின் அடிப்பகுதியிலும் சிலருக்கு “மெட்டா உதவியுடன் சுருக்கவும்” (Summarize using Meta AI) என்ற அமைப்பு காட்டும். அதைச் சொடுக்கினால் நொடியில் நம் தகவல்களைச் செயற்கை நுண்ணறிவு சுருக்கிக் கொடுத்துவிடும். இது மேம்பட்ட தனியுரிமை (Advanced Privacy) அம்சத்தை வைத்திருக்கும் உரையாடல்களில் வேலை செய்யாது. இதை பயனர்களின் விருப்பப்படி இயக்கவோ முடக்கவோ முடியும்.

செய்திகளை மெட்டா படிக்குமா? 

மெட்டா நிறுவனம் இந்த அம்சத்தை அறிமுகப்படுத்தியதும், நமது செய்திகளை செயற்கை நுண்ணறிவு படிக்க ஏன் அனுமதிக்க வேண்டும் என்ற கேள்வி பயனர்களிடையே எழுந்தது.  இது பயனர்களின் தனியுரிமையைப் பாதிக்கும் வகையில் இருப்பதாகவும் கருதுகின்றனர். ஆனால், செய்திகள் அப்படி வாசிக்கப்படாது என்று மெட்டா நிறுவனம் உறுதி அளிக்கிறது. செயற்கை நுண்ணறிவில் தனிப்பட்ட செயலாக்க முறைப்படி இந்த அம்சம் செயல்படுத்தப்படுகிறது. அது அனுப்புநர் மற்றும் பெறுநருக்கு முற்றிலும் குறியாக்கம் (Encrypted) செய்யப்பட்ட வகையில்தான் பரிமாறப்படும் என்றும், அதை யாராலும் வாசிக்க முடியாது என்றும் கூறப்படுகிறது. செயற்கை நுண்ணறிவு சுருக்கம் செய்யும் தகவல்களும் பாதுகாப்பான இடைமுகத்தில் செயல்படுகிறது என்று மெட்டா உறுதி அளிக்கிறது. 

எங்கும் செயற்கை நுண்னறிவு

இந்த அம்சத்தை மெட்டா நிறுவனம் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மெசெஞ்சர் போன்ற செயலிகளிலும் அறிமுகப்படுத்த உள்ளது. இந்தச் சுருக்க அம்சம் மூலம் தகவல்களை விரைவில் புரிந்து கொள்ள முடியும். பயனர்களின் நேரத்தை மிச்சப்படுத்தி, பயன்பாடு அனுபவத்தை உயர்த்த முடியும். ஆக்கப்பூர்வமான பணிகளை விரைவில் முடிக்க முடியும். தொழில்நுட்ப உலகின் புதிய தாரகச் சொல்லான “எங்கும் செயற்கை நுண்ணறிவு” என்ற நோக்கத்திற்கு இம்முயற்சி வலு சேர்க்கும் என்று தொழில்நுட்ப வல்லுநர்கள் கருதுகின்றனர். 

  • விவேக்பாரதி

வாட்ஸ்ஆப் செய்திச் சுருக்கம் குறித்த செய்தி

The post செய்தியைச் சுருக்கித் தரும் வாட்சாப் appeared first on செல்லினம்.

பயணம் எளிதாகும்

Google maps

பயணத் திட்டமிடலுக்காக எடுத்துவைக்கப்படும் திரைபிடிப்புப் (screenshot) படங்களை ஆய்வு செய்யும் அம்சம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது கூகுள் வரைபடங்கள் செயலி.

Google maps

கோடைக்காலம் வேறு ஆரம்பித்துவிட்டது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு, விடுமுறையைக் கழிக்க பல்வேறு சுற்றுலாத்தலங்களைத் தேடிக்கொண்டிருக்கிறோம். இந்த தேடல் பயணக்கட்டுரைகள், யூடியூப் காணொளிகள், இன்ஸ்ட்டாகிராம் குறுங்காணொளிகள் எனப் பல வகைகளில் நீள்கிறது. ஒவ்வொருமுறையும் நாம் பார்க்கும் இடங்களை ஞாபகம் வைத்துக்கொள்வது கொஞ்சம் கடினம்தான். ஒருவேளை அவற்றை திரைபிடிப்பு செய்துவைத்துக்கொண்டால் இந்த வேலை எளிதாகும் வாய்ப்புள்ளது.

ஆனால் அதிகமான இடங்களை திரைபிடிப்பு செய்துவைத்தால் குழப்பம்தான் ஏற்படும். இந்த குழப்பத்தையெல்லாம் தீர்த்து நமது பயணத் திட்டமிடலை எளிமைப்படுத்த புதிய அம்சம் ஒன்றைக் கொண்டுவந்திருக்கிறது கூகுள் வரைபட செயலி. இந்த அம்சத்தின் மூலம் நீங்கள் எடுத்த திரைபிடிப்பு படங்களை ஆராய்ந்து அதில் உள்ள இடத்தை குறித்துவைத்துக்கொள்ள முடியும்.

இதனைப் பயன்படுத்தக் கூகுள் வரைபட செயலிக்குள் சென்று, அதில் உள்ள “நீங்கள்” பக்கத்தைத் தொடவேண்டும். அதில் திரைப்பிடிப்புகள் என்ற பக்கம் காணப்படும். அதனைத் தொட்டால் இந்த அம்சம் செயல்படும் விதம் தொடர்பான காணொளி ஒன்று ஒளிபரப்பப்படும். அதனைப் பார்க்கும்பொழுது இந்த அம்சத்தைப் பற்றிய எளிமையான புரிதல் உங்களுக்குக் கிடைக்கும்.

காணொளியைப் பார்த்தபிறகு கூகுள் வரைபட செயலி உங்கள் புகைப்படங்களைப் பயன்படுத்துவதற்கான அனுமதியைக் கேட்கும். நீங்கள் அனுமதியளித்துவிட்டால் போதும். அடுத்த முறை நீங்கள் செய்யும் பயணம் தொடர்பாக திரைபிடிப்பு செய்தால் அந்த படத்தைக் கூகுள் வரைபடங்கள் ஆராயத் தொடங்கிவிடும். அந்த படமானது நீங்கள் செல்ல விரும்பும் இடத்தைப் பற்றிய குறைந்தபட்சத் தகவல்களையாவது கொண்டிருக்க வேண்டும்.

படம் ஆராய்ந்து முடிக்கப்பட்ட பிறகு மறுபார்வை (Review) என உங்களுக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பப்படும். அதைத் தொட்டால் நீங்கள் விரும்பிய இடத்தைப் பற்றிய தகவல்கள் தோன்றும். உங்களுக்குப் பிடித்திருந்தால் அதனைப் பதிவு செய்துவைத்துக்கொள்ளலாம். இவை அனைத்துமே தானாகவே நடக்கும். ஒருவேளை உங்கள் திரைபிடிப்பு படங்களைக் கூகுள் ஆராய்வதை நீங்கள் விரும்பாவிட்டால் அதற்கும் வழி இருக்கிறது. நீங்கள் உங்களுக்குத் தேவைப்படும் திரைப்பிடிப்புகளை மட்டும் கூகுள் வரைபட செயலியில் பதிவு செய்துவைத்துக்கொள்ளலாம்.

இது பற்றிய மேலதிகத் தகவல்களைக் கூகுள் வெளியிட்டுள்ள வலைப்பதிவைப் படித்துத் தெரிந்துகொள்ளலாம்.

  • மு. இசக்கிமுத்து.

கூகுள் வலைப்பக்கம்

The post பயணம் எளிதாகும் appeared first on செல்லினம்.

அன்னையர் நாள் பரிசுப் பரிந்துரைகள்

10 May 2025 at 13:30
Mothers day

அன்னையர் நாளுக்கு, வீட்டு உபயோகப் பொருள்களை பரிசளிக்கும் வழக்கம் குறைந்திருக்கிறது. குடும்பத்துக்குத் தேவையானவற்றைக் கொடுக்காமல், புடைவை, ஆபரணங்கள் என்று அம்மா தனிப்பட்ட முறையில் பயன்படுத்தும் பரிசுகள் வழங்குவது நல்லதுதான். அதோடு காலத்துக்கு ஏற்ற வேறு சில பரிசுகளையும் தர முயற்சி செய்யலாம். அப்பரிசுகளால் உங்கள் இருவருடைய மகிழ்ச்சி, இரட்டிப்பாகும்தானே.

அன்றாட வாழ்வில் பயன்படும் வகையில் பல விலை வரம்புகளில் இருக்கும் சில சுவாரஸ்யமான தொழில்நுட்பக் கருவிகளை இங்கே பட்டியலிட்டுள்ளோம். பரிசு கொடுக்க இந்தப் பரிந்துரைகளையும் கருத்தில் கொள்ளுங்கள்.

Mothers day
  • தொலைக்காட்சித் திரையைவிடச் சிறியது, திறன்பேசித் திரையைவிடப் பெரியதுமான அமேசான் எகோ ஷோ 8, கூகுள் நெஸ்ட் ஹப் போன்றவை நல்ல தேர்வு. இச்சிறிய தொலைக்காட்சிகளை பல்வேறு விதமாகப் பயன்படுத்தலாம். தானியக்க தொழில்நுட்பக் கருவிகளை குரல் கட்டளைகள் மூலம் கட்டுப்படுத்தலாம். செய்ய வேண்டிய வேலைகளைப் பட்டியலிட்டு வைத்துக்கொள்ளப் பயன்படும். வலைபரப்பு, பிடித்த நிகழ்ச்சிகளை வீட்டுக் கூடத்தில் இருக்கும் தொலைக்காட்சியில்தான் பார்க்கவேண்டும் என்கிற அவசியமின்றி எங்குவேண்டுமானாலும் பார்க்க இக்கருவி உதவும். இரு கைகளும் வேலையாக இருக்கும்போது, தொடுதல் இல்லாமல் திறன்பேசி அழைப்புகளைப் பெறப் பயன்படுத்தலாம். இதன் மூலம் வானிலை முன்னறிவிப்புகளைக் கூடப் பார்க்க முடியும்.
  • உடல் நலனைப் பேணிக்காக்க உதவும் திறன்கடிகாரங்களைப் பரிசாகக் கொடுப்பதன் மூலம் அம்மாவின் ஆரோக்கியத்தைப் பராமரிக்க வலியுறுத்தலாம். கார்மின் வெனு 3S, ஆப்பிள் கைக்கடிகாரம் 9 ஆகியவை பல புதிய பாணிகளில், பல வண்ணங்களில் கிடைக்கின்றன. இதில் பல்வேறு உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கிய உணர்திறன்கள் உள்ளன. எடுத்துக்காட்டாக இவற்றின் மூலம் இரத்த ஆக்சிஜன் அளவையும், இதயத் துடிப்பு வீதத்தையும் கண்காணிக்கலாம். 10 நாள்கள் வரை மின்னேற்றம் செய்ய அவசியமின்றிப் பயன்படுத்த முடியும். மேலும் மிகுந்த பாதுகாப்பான கண்ணாடிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • உடல்நலத்துடன் மன மகிழ்ச்சியும் முக்கியம். வாசிப்பு ஆர்வமுள்ள அம்மாக்களுக்கு அமேசான் கிண்டில், கோபோ மின்படிப்பான் சிறந்த பரிசுகளாக இருக்கும். இதில் வரம்பற்ற சந்தா மூலம் பல நூல்களை வாசிக்கலாம். அதன் 6 அங்குல திரை, வாசிப்பை மேலும் எளிமைக்கும். மேலும் மின்கல அடுக்கு 6 வாரங்கள் வரை நீடிக்கும். ஒலிப் புத்தகங்களாகக் கேட்கும் வாய்ப்பும் இருக்கிறது.
  • சாம்சங் கேலக்ஸி A55 5G, கூகுள் பிக்சல் 9a ஆகிய திறன்பேசிகள் சிறந்த திரையுடன் வருகின்றன. டென்சர் G4 மின்னணு கூறுகள், 8GB அளவு தரவு சேமிப்பு கொண்டது. இதன் மின்கலன் 2 நாள்கள் வரை நீடிக்கும். சிறந்த புகைப்படகருவி மூலம் வாழ்வில் முக்கியமான தருணங்களை சேமிக்கலாம். கூகுள் பிக்சல் 7 ஆண்டுகள் வரை மென்பொருள் புதுப்பிப்புகளை வழங்குகிறது. 

இந்த பரிசுகள் உங்கள் அம்மாவின் அன்றாட வாழ்க்கையைக் கொண்டாட்டமானதாக்கக் கூடும். அன்னையர் நாள் வாழ்த்துகள்.

  • சத்யா கோபாலன்

The post அன்னையர் நாள் பரிசுப் பரிந்துரைகள் appeared first on செல்லினம்.

வீட்டை இயக்கும் கூகுள் ஹோம் செயலி

Google home

மனிதர்களின் வேலைகளை எளிதாக்கப் பல கருவிகள் வந்துவிட்டன. ஆனால் அதற்கும் நேரமில்லாத மனிதர்களுக்காக அவர்களின் வேலையை இன்னும் எளிதாக்கியுள்ளது கூகுள். வீடு, அலுவலகம் என அனைத்து இடங்களையும் நிர்வகிக்கவும் தானியக்கமாக்கவும் கூகுள் ஹோம் உதவும். வீட்டில் பயன்படுத்தும் பொருள்கள் பலவற்றை இச்செயலி மூலம் கட்டுப்படுத்தலாம். சாவி தேவைப்படாத எண்ணிமப்பூட்டு, கூகுள் தொலைக்காட்சி, குளிர்சாதனப்பெட்டி, வீட்டின் பாதுகாப்புக்காக வைக்கப்படும் படக்கருவி (CCTV) போன்ற பல திறன்கருவிகள் இதில் அடங்கும். இணையத்துடன் இணைந்து இயங்கும் திறனுள்ள எல்லா பொருள்களையும் இச்செயலி மூலம் கட்டுப்படுத்த இயலும்.

Google home

எப்படியெல்லாம் இச்செயலியைப் பயன்படுத்துகிறார்கள் எனத் தங்கள் நிறுவனத்தில் வேலைசெய்பவர்களிடமே கருத்து கேட்டுள்ளது கூகுள். அதைத் தங்கள் வலைப்பக்கத்திலும் வெளியிட்டுள்ளார்கள். 

1. அன்பான வரவேற்பு

பயனர் அனுபவத்தை மேம்படுத்தும் பணியைத் தலைமையேற்று நடத்துபவர் ஸ்பரதரா. அவர் வீட்டில் விருந்தினர்களை வரவேற்க கூகுள் ஹோம் செயலியைப் பயன்படுத்துவது தனக்கு விருப்பமானது என்கிறார். பொழுது விடிவதற்கு முன்போ, மாலை நேரத்தில் இருள் கவிந்த பிறகோ யாராவது அவர் வீட்டுக்கு வந்து அழைப்பு மணியை அடித்தால் உள் முற்றத்தில் உள்ள விளக்குகள் ஒளிரத் தொடங்கும். இதன் மூலம் விருந்தினர்கள் இருண்ட நடைபாதையில் தட்டுத்தடுமாறாமல் நடக்க முடியும்.

2. உடற்பயிற்சி நேரம் 

தயாரிப்பு மேலாளராக இருக்கிறார் கேத்ரின் மெக்கின்லி. திங்கட்கிழமைகளில் மாலை 6 மணிக்குத் தன் வீட்டு அலுவலகத்தில் உள்ள ஒலிபெருக்கியின் உதவியால் ‘இது உடற்பயிற்சி நேரம்’ என்ற நினைவூட்டலைப் பெறுகிறார். அதுமட்டுமல்ல, இந்த நேரத்தில் தன் வீட்டு அலுவலகத்தில் உள்ள விளக்குகளை அணைத்துவிட்டு, வீட்டு உடற்பயிற்சிக் கூடத்தில் உள்ள விளக்குகள் தானாகவே எரியத் தொடங்கும்படி செயலி மூலம் கட்டுப்படுத்துகிறார். வேலையை நிறுத்திவிட்டுப் போய் உடற்பயிற்சி செய் என்பதை வலியுறுத்தும் இந்த விளக்கு மாற்றத்தால், தான் தவறாமல் உடற்பயிற்சி செய்வதாகத் தெரிவிக்கிறார். 

3. தாகமுள்ள தாவரங்கள்

மென்பொருள் பொறியாளர் கிறிஸ்டினா காங்கின், இச்செயலி மூலம் தான் செய்யும் பணியில் விருப்பமானது, வீட்டுச் செடிகளுக்குத் தண்ணீர் தெளிப்பதுதான் என்கிறார். நாள்தோறும் மாலை நேரத்தில் தானாகவே செடிகளுக்குத் தண்ணீர் தெளிக்கும் திறன்மிக்கத் தெளிப்பான்களை வைத்திருக்கிறார் இவர். கூகுள் ஹோம் செயலி மூலம் இவர் குறிப்பிடும் நேரத்துக்குத் தாவரங்களுக்குத் தண்ணீர் கிடைத்து அவற்றை நன்கு வளர்க்க உதவுவதாகக் குறிப்பிட்டுள்ளார். 

4. பாதுகாப்பான வீடு

மென்பொருள் பொறியாளர் ஜிம் லியின் குழந்தைகள் அவ்வப்போது அவரது வீட்டின் பின் கதவுகளைத் திறந்துவிட்டு மூடாமல் வருவதை வழக்கமாகக் கொண்டிருந்துள்ளனர். இதை கண்டுபிடித்த ஜிம், தானியக்கம் மூலம் இரவு 11 மணிக்கு மேல் அவரது வீட்டில் ஏதேனும் கதவு, ஜன்னல்கள் திறந்திருந்தால் அவரது திறன்பேசிக்குத் தகவல் வரும்படி செய்துள்ளார். அதிலிருந்து அவர் கதவுகளைப் பூட்டத் தவறவிட்டதே இல்லையாம்.

5. குழந்தைகளின் கண்காணிப்பு

பொறியியல் மேலாளர் காயத்ரி சுப்பிரமணியனின் குழந்தைகள் அவருக்கு முன்னதாகவே வீட்டிற்கு வந்துவிடுகிறார்கள். அந்த நேரத்தில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய நினைத்த அவர், குழந்தைகள் வீட்டில் இருக்கும் நேரத்தில் அறிமுகமில்லாத நபர்கள் அவரது வீட்டு அழைப்பு மணியை ஒலித்தால் உடனடியாக அந்தத் தகவல் தனக்குக் கிடைக்கும்படி செய்துள்ளார். இதனால் குழந்தைகள் பாதுகாப்பாக இருப்பதாக அவர் கூறுகிறார். 

6. படுக்கைக்குச் செல்லுங்கள்

மென்பொருள் பொறியாளர் ஜேம்ஸ் வுட், இரவு 11:55 மணிக்கு வீட்டில் உள்ள அனைத்து விளக்குகளையும் தொலைக்காட்சியையும் உடனடியாக அணைக்கும்படி செய்துள்ளார். இது அவருக்கு உறங்கும் நேரத்தை நினைவூட்டி அதிக நேரம் கணினித் திரையையோ, தொலைக்காட்சித் திரையையோ பார்ப்பதைத் தடுத்து தன்னை படுக்கைக்குச் செல்லக் கட்டாயப்படுத்துவதாகத் தெரிவிக்கிறார். 

  • சத்யா கோபாலன்

The post வீட்டை இயக்கும் கூகுள் ஹோம் செயலி appeared first on செல்லினம்.

பொன்மாலைப் பொழுது

Muthu Nedumaran talk

(இந்நிகழ்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளது) முரசு அஞ்சல், செல்லினம் நிறுவனர் முத்து நெடுமாறன், மே 17ஆம் தேதி சனிக்கிழமை மாலை 6 மணிக்கு, சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உரையாற்ற இருக்கிறார்.

Muthu Nedumaran talk

ஒன்பது தளங்களில் லட்சக்கணக்காக நூல்களுடன் சென்னையில் அமைந்துள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம், ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய நூலகம் என்ற பெருமையுடன் செயல்படுகிறது. தமிழ் நூல்கள், குழந்தைகள் நூல்கள், ஆங்கில நூல்கள் என அனைத்தும் தனித்தனிப் பிரிவுகளாக உள்ளன. சொந்தமாகத் தங்களுடைய நூல்களை எடுத்துவந்து படிப்பதற்கென்றும் இங்கே இடம் உள்ளது. பார்வைச் சவால் கொண்டோருக்கான பிரிவு இந்நூலகத்தின் சிறப்பம்சங்களில் ஒன்று. இவர்கள் பயன்படுத்தத்தக்க வகையில் பிரெய்லி நூல்களும், குறுந்தட்டுகளும் இப்பிரிவில் உள்ளன. மேலும் இந்நூலகம் யுனெஸ்கோவின் உலக இணைய மின் நூலகத்துடனும் (World Digital Library) இணைக்கப்பட்டுள்ளது.

நூலகத்துக்கு வரும் பொதுமக்கள் பயன்பெறும்பொருட்டு பல்வேறு நிகழ்ச்சிகளை நூலகம் நடத்துகிறது. வார இறுதி நாள்களில் நடத்தப்படும் பொன் மாலைப் பொழுது நிகழ்ச்சி அதில் ஒன்று. துறைசார் வல்லுநர்கள், கலைஞர்கள் ஒரு தலைப்பில் உரையாற்றுவார்கள். மே 17 ஆம் தேதி, முரசு அஞ்சல், செல்லினம் நிறுவனர் முத்து நெடுமாறன் பொன் மாலைப் பொழுது நிகழ்ச்சியில் உரையாற்றவுள்ளார்.

எழுத்துலா, எழுத்துருப் பயிலரங்கம், கருத்தரங்கம் போன்றவற்றின் வழியாக முத்து நெடுமாறன், இளம் தலைமுறையினர் எழுத்துருத் துறையில் அதிகம் பங்கெடுக்க ஊக்கமளித்து வருகிறார். எழுத்துருத் துறை பற்றிய விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தவும் தொடர்ந்து முயற்சி மேற்கொள்கிறார். அதன் தொடர்ச்சியாக எழுத்துருவின் முக்கியத்துவம் என்ன என்பதைப் பற்றி அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் “எழுத்துருவும் கதை சொல்லும்” என்கிற தலைப்பில் உரையாற்றப் போகிறார்.

மே 17ஆம் தேதி மாலை 6 மணிக்கு அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் கருத்தரங்கில் இந்நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

The post பொன்மாலைப் பொழுது appeared first on செல்லினம்.

யாழ் வடிவில் உணர்ச்சிக்குறி

Apple Emoji

ஆப்பிளின் ஐஓஎஸ் 18.4 இயங்கு தளத்தில், தெறிக்கும் ஊதா வண்ணம், யாழ், காய்ந்த மரம் என எட்டு புதிய உணர்ச்சிக்குறி வடிவங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

Apple Emoji

உணர்ச்சிக்குறி என்பவை மின்னணு தகவல் தொடர்பில் உணர்வுகளை, கருத்துக்களை அல்லது பொருள்களை வெளிப்படுத்தப் பயன்படும் சிறிய சின்னங்கள் ஆகும். இவை உரை அடிப்படையிலான செய்திகளை மேம்படுத்தக்கூடிய காட்சி வழித் தகவல் தொடர்பு முறையாகும். ஆரம்பக்காலத்தில் எளிமையான உணர்வுகளை வெளிப்படுத்துவதற்காகத் தோன்றி, தற்போது பல்வேறு கருத்துக்களை அடையாளப்படுத்தும் வகையில் பரிணமித்துள்ளன. இன்றைய தொழில்நுட்ப உலகில் நமது உணர்வுகளுக்கு வண்ணம் பூசும் தூரிகைகள்தாம் உணர்ச்சிக்குறிகள்.

இப்போது ஐஓஎஸ்18.4 இயங்குதளத்தில் புதிதாக எட்டு உணர்ச்சிக்குறிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. கண்களுக்குக் கீழே பைகள் கொண்ட முகம், கைரேகை, தெறிக்கும் ஊதா வண்ணம், வேர் காய்கறி, இலையற்ற மரம், யாழ், மண்வெட்டி, சார்க் கொடி என நீள்கிறது இந்த வரிசை. முதல் உணர்ச்சிக்குறி உங்கள் சோகத்தையும், சோர்வையும் உங்கள் நண்பர்களுக்குப் பகிர நிச்சயம் உதவும்.

பட்டியலில், இறுதியாக உள்ள உணர்ச்சிக்குறி சார்க் நாட்டின் தேசியக்கொடியாகும். சார்க் என்பது ஒரு தீவு நாடு. இது பிரான்ஸிற்கு அருகே அமைந்துள்ளது. வெறும் ஐந்நூறு மக்கள் மட்டுமே வசிக்கும் இந்நாட்டில் பல்வேறு வித்தியாசமான விதிகள் இருக்கின்றனவாம்.‌ இன்றுவரை இந்நாட்டில் மகிழுந்து ஓட்டுவதற்கு அனுமதி இல்லையாம். மாறாக இந்நாட்டு மக்கள் மிதிவண்டி, குதிரை வண்டியையே போக்குவரத்திற்காகப் பயன்படுத்துகிறார்கள்.

இந்த புதிய உணர்ச்சிக்குறிகள் யூனிகோடின் செப்டம்பர் 2024 பரிந்துரைகளின் பட்டியலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளன. இதைத் தவிர சில உணர்ச்சிக்குறிகளில் திருத்தங்களும் செய்யப்பட்டுள்ளன. சிரியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது நாம் அறிந்ததுதான். புதிய அரசாங்கம் பழைய தேசியக்கொடியில் சில மாற்றங்களைச் செய்துள்ளது. அதைப் பின்பற்றிய ஆப்பிளும் புதிய அரசாங்கம் வெளியிட்டுள்ள கொடியைக் கொண்டுவந்துள்ளது.

பழைய கொடியில் மூன்று நிறப்பட்டைகள் இருந்தன. அவை முறையே சிவப்பு, வெள்ளை, கருப்பு ஆகும். நடுவிலிருந்த வெள்ளை நிறப் பட்டையில் இரண்டு நட்சத்திரங்கள் இருந்தன. இப்போது உள்ள புதிய கொடியில் சிவப்பு நிறம் பச்சை நிறமாக மாற்றப்பட்டுள்ளது. அதோடு நட்சத்திரங்களின் எண்ணிக்கையும் மூன்றாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

தற்போது அறிமுகமாகியுள்ள புதிய உணர்ச்சிக்குறிகள் பயனர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.

  • மு.‌இசக்கிமுத்து

The post யாழ் வடிவில் உணர்ச்சிக்குறி appeared first on செல்லினம்.

கடவுச்சொல், நினைவில்கொள்

Microsoft Authenticator

கணினி, திறன்பேசிகளில் கடவுச்சொல்லைத் தானாக உள்ளிட்டுக் கொள்ளும்படி சேமித்து வைப்பது நம்மில் பலருக்கு வழக்கம். அதற்கு உதவும் மைகோசாப்ட் ஆதன்டிகேட்டர் செயலியில் இருந்து கடவுச்சொல் சேமிக்கும் வசதி, தானியங்கு நிரப்பு வசதியை நீக்கப் போவதாக மைக்ரோசாப்ட் அறிவித்திருக்கிறது.

Microsoft Authenticator

உலகில் கிட்டத்தட்ட அனைத்தும் கணினி மயமாகிவிட்ட நிலையில், வலுவான கடவுச்சொல் மிக முக்கியமானது. இணையத்தில் பாதுகாப்பான பயன்பாடு அனுபவத்தைப் பெறக், கடினமான கடவுச்சொல்லை அமைத்தல், அடிக்கடி கடவுச் சொல்லை மாற்றுதல் போன்ற பரிந்துரைகள் வழங்கப்படுகின்றன. அவற்றைப் பின்பற்றி நாம் என்னதான் வலுவான கடவுச்சொல்லை வைத்திருந்தாலும், நம்மில் பலருக்கு இணையத்தில் தானியங்கு நிரப்பு (Autofill) அம்சத்தில் கடவுச்சொற்களைச் சேமிக்கும் வழக்கம் உண்டு. அதன்மூலம் ஒரே சொடுக்கில் நம் கணக்குகளுக்குள் நுழைய முடியும். பயன்பாட்டை எளிமையாக்கும் இந்த அம்சம் ஆபத்தானது என்று வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர். இந்நிலையில் தன் கடவுச்சொல் சேமிப்பு அம்சத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனம் புதிய மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. 

இரட்டை நிலை அங்கீகாரம் 

நமது கடவுச்சொற்களை நாம் இணைய உலவிகளில் சேமித்து வைக்கிறோம். அதிலுள்ள தானியங்கு நிரப்பு அம்சம் மூலமாக ஒவ்வொரு முறையும் கடவுச்சொல் உள்ளிட வேண்டிய அவசியமின்றி நேரடியாக கணக்குகளுக்குள் நுழைகிறோம். ஆனால் இதே எளிமையான வழியைப் பயன்படுத்தி, மோசடிக்காரர்களும் நமது தகவல்களைத் திருடிவிட முடியும். கடவுச்சொற்கள் கசிவதால் ஏற்படும் இந்த சவால்களை இரட்டை நிலை அங்கீகாரம் (Two Fator Verification) மிகச் சிறந்த வழியில் தடுக்கிறது. புதிய கணிப்பொறியில் நமது கணக்குக்குள் கடவுச்சொல்லை உள்ளிட்டு நுழைந்தால், ஒரு முறை பயன்படுத்தும் குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்படும் ரகசியக் குறியீட்டுச் சொல் கேட்கப்படும். இதை வரைமுறைப்படுத்தும் புதிய செயலியாக மைக்ரோசாப்ட், ஆதன்டிகேட்டர் (Authenticator) என்ற செயலியைக் கொண்டு வந்தது. உயர் பாதுகாப்பு கோரும் தகவல்கள் அடங்கிய பயனர்களுக்கு இந்தச் செயலி பயனுள்ளதாக அமைந்தது. ஆனால் இதிலும் கடவுச்சொல் சேமிக்கும் வசதி அமைக்கப்பட்டிருந்தது. 

தற்போது ஆதன்டிகேட்டரில் இருந்து கடவுச்சொல் சேமிக்கும் வசதி, தானியங்கு நிரப்பு வசதியை நீக்கப் போவதாக மைக்ரோசாப்ட் அறிவித்திருக்கிறது. 2025 ஜூலை மாதத்துடன் இந்த அம்சங்கள் முற்றிலுமாக நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மைக்ரோசாப்ட்டின் அறிவிப்புப்படி ஜூன் மாதம் முதல் புதிய கடவுச்சொற்களை ஆதண்டிகேட்டர் செயலியில் சேமிக்க முடியாது. ஜூலை மாதம் தானியங்கு நிரப்பு அம்சம் நிறுத்தப்படும். ஆகஸ்ட் மாதம் முதல் சேமிக்கப்பட்ட கடவுச்சொற்கள் அனைத்தும் நீக்கப்படும் என்று தெரிய வருகிறது.

ஏன் இந்த மாற்றம்?

கடவுச்சொல் இல்லாத எதிர்காலத்தை உருவாக்கும் நோக்குடன் மைக்ரோசாப்ட் இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. கடவுச்சொல்லுக்கு பதிலாக ஒரு முறை பயன்படுத்தும் குறுஞ்செய்தி (OTP), நுழைவுக்குறி (Passkeys), முக அடையாளம், விரல்ரேகை உள்ளிட்ட உயிரளவியல் அம்சங்கள் (biometric) பயன்படுத்தப்படும். இதன் மூலம் கடவுச்சொல் இல்லாத பாதுகாப்பான இணைய அனுபவத்தை வழங்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதனால் கடவுச்சொல் திருட்டு தவிர்க்கப்படும் என்றும் சொல்லப்படுகிறது. 

செய்ய வேண்டியது என்ன? 

நீங்கள் ஆதன்டிகேட்டர் செயலியைப் பயன்படுத்துவராக இருந்தால், விரைவில் அதில் சேமித்து வைத்திருக்கும் கடவுச்சொற்களை உங்கள் கணினிக்கு தரவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். ஆதன்டிகேட்டர் செயலிக்கு நிகரான கடவுச்சொல் நினைவுச் சேவையை, மைக்ரோசாப்ட் எட்ஜ் வழங்குகிறது. தரவிறக்கி வைத்திருக்கும் தகவல்களை எட்ஜுக்குள் தரவேற்றலாம். இதனால் எட்ஜ் வழங்கும் தடையற்ற கடவுச்சொல் மேலாண்மை வசதியைப் பெறலாம். அதேபோல் இணையத்தில் கடவுச்சொல் மேலாண்மைக்கு தனியார் செயலிகளும், மென்பொறிகளும் கிடைக்கின்றன. அவற்றையும் பயன்படுத்தலாம். ஆனால் பொதுவாக கடவுச்சொற்களைப் பொருத்தளவில் தானியங்கு சேமிப்பு வசதிகள் எதனிலும் சேமிக்காமல் இருப்பதே நல்லது என்கின்றனர் வல்லுநர்கள். 

ஆதன்டிகேட்டர் என்ன ஆகும்? 

கடவுச்சொற்களைச் சேமிக்கும் வசதி மட்டும்தான் ஆதன்டிகேட்டர் செயலியை விட்டு நீக்கப்பட்டிருக்கிறது. இதன்மூலம் ஆதன்டிகேட்டர், இரட்டை நிலை அங்கீகாரம் (Two Factor Verification), நுழைவுக் குறிகள் (Pass Key), ஒற்றைத்தொடுதல் அங்கீகாரம் (One – Tap Verification) உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களை முழுமையாக வழங்கும். இதனால் அந்தச் செயலியை நீக்க வேண்டிய அவசியம் கிடையாது. மைக்ரோசாப்ட் அறிவித்துள்ள இம்மாற்றம், கடவுச்சொல் சேமிப்பு வசதியைப் பயன்படுத்தும் பெரும்பாலானோருக்கு சிரமம் ஏற்படுத்தும்போதிலும், இணையத் தரவுகளின் அடுத்தகட்ட பாதுகாப்பு நோக்கம் அவசியமானது. உங்கள் கடவுச்சொற்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றால் அன்றாடம் பயன்படுத்தும் இணைய உலவி உட்பட எந்த இடத்திலும் அதைச் சேமிக்காமல் இருப்பதும், அடிக்கடி மாற்றிக் கொண்டே இருப்பதும் பயனளிக்கும். 

  • விவேக்பாரதி

ஆதன்டிகேட்டர் செயலியில் நீக்கம் குறித்த செய்தி

The post கடவுச்சொல், நினைவில்கொள் appeared first on செல்லினம்.

#USA: அப்பிடைசர் வார்த்தைகள்! (மே 4, 2025)

அப்பிடைசர் வார்த்தைகள்! #usatrip2025_ckb-6 சென்னையில் வசிக்கும் எங்கள் உறவினர் ஒருவர் தம்பதி சமேதராக அமெரிக்காவில் வசிக்கும் தங்கள் மகள்களை பார்க்க வந்திருந்ததால் அவர்களை எங்கள் இருப்பிடத்துக்கு அழைத்து சிறிய விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தோம். எங்கள் உறவினரை அடிக்கடி குடும்ப நிகழ்ச்சிகளில் சந்தித்திருக்கிறேன். ஆனால் அவருடைய மகள்களை பார்க்கும் சந்தர்ப்பம் மிகக் குறைவு. அவர்கள் சிறு குழந்தைகளாக...
❌