அடர்க்கருமை இருள் போர்த்தியபடி
ராத்திரி விளக்கின் ஊதா நிறம் குடித்து
அது அந்த அறையெங்கும்
மின்மினியாய் மினுக்கி அலைந்தது
அவனோ அந்தக் கொடும் இருட்டைப் போர்த்தியபடியே
பஞ்சு பறக்கும் படுக்கையில்
நாளான எண்ணெய்ச் சிடுக்கின் நாற்றம் பழக்கியவனாய்
அவன் உயிரை வளர்த்தியபடி
அறைக்குள் கிடந்தான்