Reading view

வ.உ.சி. எழுதிய புத்தகம் – திலக மகரிஷி

திலகரைப் பற்றி வ.உ.சிதம்பரம் பிள்ளை 1933-34 -ஆம் வருஷங்களில் ஒரு பத்திரிகையில் “திலக மகரிஷி” என்ற பெயரில் தொடராக எழுதி இருக்கிறார்.  பத்திரிகையின் பெயர் வீரகேசரி, இலங்கைப் பத்திரிகை. பல ஆண்டுகளுக்கு முன் இந்தப் புத்தகத்தைப் பற்றி கேள்விப்பட்டேன், படிக்க வேண்டும் என்று ஆசை. இப்போது இந்தப் புத்தகம் தமிழ் இணைய நூலகத்தில் கிடைக்கிறது.

புத்தகத்தைப் பதித்தவர் மா.ரா. அரசு. அரசு வரலாற்று ஆய்வாளர் மா. ராஜமாணிக்கத்தின் மகன். பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணி புரிந்தவர். பல வருஷங்களாக அவரும் வீரகேசரி பிரதிகளைத் தேடி இருக்கிறார். முக்கால்வாசி இதழ்கள்தான் கிடைத்திருக்கின்றன. கிடைத்தவற்றைத் தொகுத்து புத்தகமாக (2010) வெளியிட்டிருக்கிறார்.

வ.உ.சி. திலகரின் அத்யந்த சீடர் என்பதால் புதிய தகவல்கள் எதுவும் கிடைக்குமோ என்று ஒரு நப்பாசை இருந்தது. ஆனால் அப்படி எதுவும் இல்லை. ஒரு வேளை கிடைக்காத வீரகேசரி இதழ்களில் இருந்திருக்கலாம். புத்தகத்தில் தெளிவாகத் தெரிவது வ்.உ.சி.க்கு திலகர் மேல் இருந்த பெரும் அபிமானம்.

காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்ட புத்தகம் என்றும் கிழக்கு பதிப்பத்தில் கிடைக்கிறது என்றும் நண்பர்கள் சந்திரமௌலீஸ்வரன் மற்றும் ஸ்ரீனிவாஸ் தகவல் தருகின்றனர். அன்றைய விலை நூறு ரூபாயாம்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் அபுனைவுகள்

தொடர்புடைய சுட்டிகள்:

  •