துகள் வாழ்வுக்குள் மாய உச்சி
மிகப் பெரிய எழுத்தாளர்கள் கூட, பல சமயம் இசையைக் களமாகக் கொண்டு எழுதும் போது அடிப்படை புரிதல் கூட இல்லாமல், தங்கள் கற்பனைகளை மட்டுமே முதலாகக் கொண்டு கதைகள் புனைவதை நிறையவே பார்க்கலாம். அந்தக் கற்பனைகளை இசை தெரிந்தவர்கள் படித்தால் நகைப்பே மிஞ்சும். இன்னும் சில கதைகளில் எதற்கு வம்பென்று இசை நுணுக்கங்கள் பக்கமே செல்லாமல் கதை நகரும். சுரேஷின் ஆழ்ந்த இசை ஈடுபாட்டால், இத்தகு குறைகள் இல்லாமல் நாவலொன்றைப் படிப்பதே பெரும் ஆசுவாசத்தைக் கொடுத்தது.