ஜா: தீபா – வாஞ்சிநாதனைப் பற்றிய சிறுகதை
மறைமுகம் சுவாரசியமான சிறுகதை. வாஞ்சிநாதனைப் பற்றி அவரது மனைவி எப்படி உணர்ந்திருப்பார்? இந்தச் சிறுகதையில் அவர் பதின்ம வயதினராக, அப்போதுதான் தாயானவராக சித்தரிக்கப்படுகிறார். உண்மையிலேயே அப்படித்தானா என்று எனக்குத் தெரியாது, ஆனால் உண்மையாக இருக்க நிறைய வாய்ப்பிருக்கிறது. பதின்ம வயதுப் அக்ரஹாரத்துப் பெண், நூறாண்டுகளுக்கு முன் என்ன நினைத்திருப்பார்? பாரதமாதா என்று உயிரையே தியாகம் செய்யலாம் என்று வாஞ்சி தீவிரமாக இருந்தால் எதற்கு திருமணம் செய்துகொண்டார்?
வாஞ்சி குழந்தையைப் பார்க்க வரவில்லை, என்ன செய்கிறார் என்று குடும்பத்தினருக்கு சரியாகப் புரியவில்லை. மனைவி வருவார் வருவார் என்று காத்திருக்கிறார், குழந்தையின் உயிருக்கு அபாயம். இந்தச் சூழலை சிறப்பாக கொண்டு வந்திருப்பதால் இந்தச் சிறுகதையைப் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.
தீபாவின் எழுத்தில் நான் படித்தது இந்த ஒரு சிறுகதையைத்தான். இனி மேல் தேட வேண்டும்…
தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் சிறுகதைகள்
தொடர்புடைய சுட்டிகள்: