Reading view

புகையும் நிஜங்கள்

வீட்டிலிருக்கும் பெண்டுகள் சவத்துடன் சுடுகாடு செல்கிற வழக்கம் அவனது குடும்பத்திலும் இல்லை. வீதி வரை உறவு.  அதனாலேயே அவர்களுக்கு எரியும் நாற்றம் பரிச்சயமில்லை. ஆனால், இந்த வீட்டிற்கு வந்தபிறகு அதுவே  ஒரு வித ஒவ்வாமை போல் அம்மாவிற்கு ஆகிவிட்டதோ என்று அவனுக்குத் தோன்றியது. மனைவிக்கும், குழந்தைகளுக்கு பழகிப் போன நாற்றம் அவனது அம்மாவிற்கு மட்டும் அப்படியென்ன வினோதமாய்? கேள்விகள் அவனது மண்டையைக் குடைந்த வண்ணம் இருந்தன. 
  •