திக்குவிஜயம் : கார்த்திக் ராமச்சந்திரன்
May 09, 2025
நேரமாக ஆக ஆக விதவிதமாக ஊர்வலங்கள் சென்றுக் கொண்டிருக்கின்றன. ஓதுவார்கள் இசைவாத்தியங்கள் முழங்க சென்றதை முருகேசன் புளியோதரையை திண்றவாறு பார்த்துக் கொண்டிருந்தான். பக்கத்தில் நின்றவரிடம் ‘இன்னைக்கு என்ன வாகனத்துல சாமி வரும்’ என்றான். அவர், ‘இன்னைக்கு திக்குவிஜயம்.’ என்றார். ‘அப்ப திருக்கல்யாணம் முடிஞ்சுருச்சா’ என்றான். ‘திக்குவிஜயத்துக்கு முன்னாடி திருக்கல்யாணம் நடக்குமா நாளைக்கு தான் திருக்கல்யாணம்’ என்றான் சலிப்புடன்.